Fri05032024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Saturday, 30 June 2012
புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 63 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Saturday, 30 June 2012 07:18
அரசியல்_சமூகம் / நேசன்

வடக்கில் புலிகளின் ஆதிக்கமும் "தீப்பொறி"க் குழுவைக் குறிவைத்த செயற்பாடுகளும்

வடக்குக் கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் நிறுவப்பட்டு முற்போக்கு ஜனநாயக கருத்துக்களைக் கொண்டிருந்த அனைவர் மீதும் தமது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருந்த போதிலும் என்னுடன் பேசுவதற்கு செல்வி எனது வீட்டுக்கு வந்திருந்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் என்னை வழிமறித்து பேச அழைத்தபோது நான் பேசுவதை எதற்காகத் தவிர்த்துக் கொண்டேன் என்பதை செல்விக்குத் தெளிவுபடுத்தியதுடன் செல்வி தனது பேச்சை ஆரம்பித்தார். நான் எதிர் பார்த்தது போலவே செல்வியினுடைய பேச்சு நீண்டு சென்று கொண்டிருந்தது. புளொட்டில் இணைந்து நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் செயற்பட்ட காலங்கள், புளொட்டின் தலைமையின் அராஜகப் போக்கால் ஆயிரக்கணக்கான இளைஞர்களினதும் யுவதிகளினதும் உழைப்பு, தியாகம் என்பன விரயமாய்ப் போனமை, ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசிசப் போக்கு ஈழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்டிருந்த பல நூற்றுக்கணக்கான போராளிகளையும் புத்திஜீவிகளையும் அப்பாவித் தமிழ், சிங்கள மக்களையும் பலி கொண்டுவிட்டிருந்ததையும் எடுத்துக் கூறிக் கொண்டிருந்தார்.

Read more...
Last Updated ( Saturday, 30 June 2012 07:31 )