குறிப்பு : சிவரஞ்சித் ஏன் தெல்லிப்பளை வாறவன்? என்று மாத்தையா என்னிடம் கேட்டான்.
விளக்கம் : புலிகள் இயக்கத்தை கட்டியவரில் ஒருவரே சிவரஞ்சித். பல்கலைக்கழக மாணவராக செயல்பட்ட இவரும், இவரின் குழுவும் பலரை புலிக்கு இணைத்தனர். 1985க்கு பிந்திய காலத்தில் புலியுடன் இக்குழு முரண்பட்ட நிலையில், புலியில் இருந்து விலகிய போதும் அரசியலில் ஈடுபட்டனர். இவருடன் இருந்த முக்கிய நபரை யாழ் கச்சேரியடியில் இராணுவம் சுட்டுக்கொன்ற நிலையிலும், இவர் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது தனியாக ஒரு சிறு இலக்கிய சஞ்சிகையை கொண்டு வந்து பின் நிறுத்தியவர். புலிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணியபடி, முரண்பாட்டுடன் விலகியும் இருந்தார். ஆனால் புலிகளுக்கு தொடர்ந்து உதவி என்ற பெயரில், அதன் பினாமியாகவே இயங்கினார். இவர் நோர்வே வந்த பின்பும் சரி, பின் லண்டனில் புலியின் ஒளிபரப்பில் முக்கிய பணியை செய்த போதும் சரி, புலியின் பினாமியாக செயல்படுவதையே எப்போதும் தனது அரசியலாக கொண்டவர்.
Read more...
|