தம்புள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதலைக் கண்டித்து ரொறன்ரோவில் (கனடா) மே 6, 2012 நடைபெற்ற கூட்டத்தில் ரகுமான் ஜான் ஆற்றிய உரையெனக் கூறி "தம்புள்ள விவகாரமும் அதன் பின்னுள்ள அரசியலும்" என்ற தலைப்பில் "தேசம் நெற்" இணையத்தளம் உட்பட பல இணையத்தளங்களில் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. இக்கட்டுரையை எழுத்து வடிவத்திற்கமையவும் நண்பர்களது (?) கோரிக்கைகளுக்கு இணங்கவும் சில அம்சங்களை உள்ளடக்கும் விதத்தில் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இக்கட்டுரையின் மூலம் "தம்புள்ள விவகாரமும் அதன் பின்னுள்ள அரசியலும்" இனங்காணக் கூடியதாக உள்ளதோ இல்லையோ ரகுமான் ஜானையும் அவர் பின்னுள்ள அரசியலையும் இனங்காண முடிகிறது.
Read more...
|