Fri05032024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 06 June 2012
"சிவப்புச்சாயக் கட்சியை உருவாக்க" முனைந்ததாக குற்றஞ்சாட்டிய பிரபாகரன் - "ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்" என்ற நூல் மீது - 05 PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 06 June 2012 06:33
பி.இரயாகரன் - சமர் / 2012

ஒரு வலதுசாரிய வர்க்கத்துக்கு "தேவைப்பட்ட போராட்ட"மும், அந்த வர்க்க அரசியலின் "முன்னோடி"களால் இனம் காணப்படுகின்றது. இந்த நிலையில் "எமது திசைவழி தவறானது" என்று கூறி, நடைமுறையில் மாற்று அரசியல் வழிமுறையை முன்னெடுத்துப் போராடியவர் ஐயர். இந்த நிலையில் அவரின் நூலோ, அவரின் இந்தக் கருத்துக்கும் நடைமுறைக்கும் எதிராக வந்திருக்கின்றது. இது எதைக் காட்டுகின்றது? தகவலை ஒவ்வொரு வர்க்கமும் தனக்கு ஏற்ப பயன்படுத்தியதையே, இந்த நூலில் சிறப்பாக நாம் காணமுடியும்.

அன்று "சிவப்புச்சாயக் கட்சியை உருவாக்க" முனைந்ததாகக் கூறி, பிரபாகரன் தன் வர்க்கம் சார்ந்து துண்டுப்பிரசுரம் விட்ட நிலையில், இந்த அரசியலை நியாயப்படுத்துகின்றது இந்த நூல். "பிற்காலப்பகுதியில், புலிகளுடனான நீண்ட நாட்கள் கடந்துபோன பின்னர், அவற்றை எல்லாம் தெரிந்துகொண்ட போது தான் நமது தவறுகள் குறித்தும், புதிய அரசியல் திசைவழி குறித்தும் சிந்திக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது." இங்கு ஐயர் தன்னளவில் தன் அரசியல் வழியிலான "தவறு" குறித்து, "புதிய அரசியல்" வழி சார்ந்து, தன்னைத்தான் சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கி இருக்கின்றார். இப்படி உண்மை இருக்க அரசியல் சாராத "தவறு" குறித்து, எப்படி மூன்றாம் தரப்பாக கூறமுடியும். இந்த அரசியல் வழிமுறையை "தவறாக" காண்பதா அல்லது முற்றாக நிராகரிப்பதா? இரு நேர் எதிர் அரசியல் வழிமுறைக்குள் இந்த நூல் தடுமாறுகின்றது. இரு வேறுபட்ட வர்க்கக் கண்ணோட்டம் கொண்ட நபர்களின் சொந்தக் கண்ணோட்டத்துக்கு ஏற்ப, தகவல்கள் அரசியலாகின்ற போது நூலுக்குள்ளான முரண்பாடுகள் ஆழமாகவே வெளிப்படுகின்றது.

Read more...
Last Updated ( Wednesday, 06 June 2012 06:44 )