Fri05032024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Saturday, 02 June 2012
"சிங்கள தேசத்துடன் ஐக்கியம் பற்றிப் பேசுவ"தாக எம்மைப் பற்றிக் கூறுவது கடைந்தெடுத்த பொய் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 02 June 2012 17:59
பி.இரயாகரன் - சமர் / 2012

இப்படி எம்மைப் பற்றி இல்லாத பொல்லாததை எல்லாம் சொல்லித் திரித்துப் புரட்டுகின்றனர், தம்மை "முன்னேறிய பிரிவினர்" என்று கூறிக்கொள்வோர். அதேநேரம் அவர்கள் கூறுகின்றனர் "ஜக்கியம்" என்பது "அடிமைத்தனமாம்"! "அயோக்கியத்தனமாம்"!! மக்கள் தங்கள் மத்தியில் ஐக்கியப்படுவதை விரும்பாதவர்கள், அதற்காகப் போராடாதவர்கள், தங்களைத் தாங்கள் "மார்க்சியவாதிகள்" என்கின்றனர். "முன்னேறிய பிரிவுகள்" என்கின்றனர். “முற்போக்கு-ஜனநாயகவாதிகள்” என்கின்றனர். சிலர் தம்மை "சுதந்திர ஊடகவியலாளர்கள்" என்கின்றனர். ஆளும் வர்க்கங்களோ, மக்களைப் பிளந்து அதில் குளிர்காய்கின்றது. அதை எதிர்த்துப் போராட, மக்களின் ஐக்கியத்தை வலியுறுத்தாத கருத்துகள், பிரச்சாரங்கள் அனைத்தும் இனவாதம் சார்ந்தவை தான். இந்த வகையில் திடீர் "மார்க்சியம்" பேசுகின்றவர்கள், அரசு சார்பானவர்கள், புலி ஆதரவாளர்கள் எல்லாம் ஒன்றிணைந்து, தங்கள் இணையங்கள் மூலம் எமக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கின்றனர். இந்தவகையில் "இனியொரு" இணையத்திலும், "தேசம் நெற்" இணையத்தி;லும், "குளோபல் தமிழ்"நியூஸ்" இணையத்திலும் "ஐக்கியம்" "அடிமைத்தனமாகவோ அல்லது அயோக்கியத்தனமாக" வோ இருக்கும் என்கின்றனர்.

Read more...
Last Updated ( Saturday, 02 June 2012 18:10 )

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 59 PDF Print Write e-mail
Written by தமிழரங்கம்
Saturday, 02 June 2012 07:39
அரசியல்_சமூகம் / நேசன்

பிரேமதாச-தமிழீழ விடுதலைப் புலிகள் "தேனிலவு" ஆரம்பம்

ரணசிங்க பிரேமதாச இலங்கையின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து நடைபெற்ற பாராளுமன்றத்துக்கான தேர்தலுடன் வடக்குக்-கிழக்குப் பகுதிகள் உட்பட இலங்கையின் அரசியல் களத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி ஜக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்றிருந்ததுடன், தமிழீழ விடுதலைப் புலிகளால் "துரோக"க் குழுவாக முத்திரை குத்தப்படாததால் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இரண்டறக் கலந்து விட்ட ஈரோஸ் (EROS) இயக்கம் ஈழவர் ஜனநாயக முன்னணி என்ற பெயரில் பாராளுமன்றத் தேர்தலில் பங்கேற்றதன் மூலம் இலங்கைப் பாராளுமன்றத்துக்கு ஈழவர் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த 13 பேர் தெரிவாகியிருந்தனர்.

Read more...
Last Updated ( Saturday, 02 June 2012 08:39 )