குறிப்பு : மாத்தையா கூறினான், நாம் யார் ஆயுதம் வைத்திருந்தாலும் பிடிப்பம் என்றார்.
விளக்கம் : ஆயுதம் யார் வைத்திருந்தாலும் பிடித்துக் கொல்வோம் என்றான். இதன் மூலம் மக்கள் ஆயுதம் ஏந்தும் உரிமையை, அழித்தொழிப்போம் என்றான். போராடும் உரிமையை மறுத்து, தங்கள் பாசிச சர்வாதிகார வழியில் அழிப்போம் என்றான். தாம் மட்டும் ஆயுதம் வைத்திருக்கவும், ஆயுதமுனையில் மக்களை சுரண்டி வாழ்வதே தேசிய போராட்டம் என்றான். மக்கள் தமது சொந்த விடுதலைக்கு அணிதிரள்வதையும், ஆயுதம் ஏந்துவதையும் படுகொலைகள் மூலம் அடக்கி ஒடுக்குவோம் என்றான். தமது பாசிசத்துக்கு அடிபணிந்து கைகட்டி வாய் பொத்தி ஆண்டை அடிமை வாழ்வை வாழ்வதே, தமிழ் மக்களின் விடுதலை என்றான்.
Read more...
|