தம் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதாக கூறுகின்றவர்கள், தமக்குள்ளான அனைத்து ஒடுக்குமுறையையும் எதிர்த்துப் போராட வேண்டும். அதேநேரம் தமக்கு வெளியில் உள்ள ஒடுக்குமுறைகளையும் கூட, எதிர்த்துப் போராட வேண்டும். இவ்விரண்டையும் செய்யாத போராட்டம், ("தலித்திய") அடையாளம் போலியானது புரட்டுத்தனமானது. ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்களை ஏய்த்துப் பிழைக்கும் குறுகிய அரசியலாகும். இதுபோல் பிறப்பு சார்ந்த ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் போது, பிறப்புக் கடந்த மனிதனாக தன்னை மையப்படுத்திப் போராடாத பிறப்பு சார்ந்த குறுகிய அரசியல் படுபிற்போக்கானது.
Read more...
|