நாம் ஏன் தோற்றோம் என்பதை அரசியல்ரீதியாக சுயவிமர்சனம் செய்யாது இருக்கும் வலதுசாரியம், அதை திசைதிருப்ப முனைகின்றது. தோல்விக்கான காரணத்தை எதிரி மீது கூறி, மக்களை தொடர்ந்தும் தனக்கு கீழாக தோற்கடிக்க முனைகின்றது. தீபச்செல்வன் அதை மிக நுட்பமாகவே முன்வைக்கின்றார். "தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற போராட்ட அமைப்புமீது உலகில் வல்லமையுள்ள யுத்தவெறி கொண்ட பொருளாதார, அரசியல் நோக்கம் கொண்ட எத்தனையோ நாடுகள் தாக்குதல் நடத்தின. அரசாங்கம் புலிகளை அழிப்போம், யுத்தத்தை முடிப்போம், இடங்களைக் கைப்பற்றுவோம் என்று சில தேதிகளை குறிப்பிட்டது. அந்த அவகாசங்களைப் புலிகள் முறியடித்தார்கள். உலகமே சேர்ந்து தொடுத்த யுத்தத்திற்கு அவர்கள் முகம் கொடுத்தார்கள்." என்கின்றார். இதனால் தான் புலிகள் தோற்றனர் என்பது, ஒரு அரசியல் உண்மையல்ல. ஒரு உண்மைக்கு எதிராக மற்றொரு உண்மையை முன் நிறுத்துகின்றனர்.
Read more...
|