சில விடையங்கள் தமிழரங்கம் பிரசுரித்தால் ஆதாரம் எங்கே, விசாரணைக்கு வா இங்கே என கட்டளையிடும் நிலையில் இன்று புலத்தில் நடைபெறும் அரசியல் கூத்துகள் பற்றி சில தகவல்களையும், அது சம்பந்தமான என் கேள்விகளையும், கருத்தையும் இங்கு முன்வைக்க, சொல்ல விழைகிறேன்.
யார் ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தனர்...?
"லண்டனில் இன்று (19-10-2010) செவ்வாய்க் கிழமை மதியம் 12:30 மணிமுதல் மாலை 3:30 மணிவரை ஜி.எல்.பீரிஸின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் கலந்துகொள்ளும் மாநாட்டைக் கண்டித்தும் நூற்றுக்கணக்கான லண்டன் வாழ் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ........." பிரித்தானிய தமிழர் பேரவையால் குறுகியகால அவகாசத்தில் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், வேலை நாளாக இருந்தும் கொட்டும் மழையிலும் கூட நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.." இது புலிகளின் புலம்பெயர் இணையங்களில் ஒன்றான பதிவு இணையத்தில் வந்த செய்தி.
Read more...
|