Saturday, 09 October 2010
Written by தமிழரங்கம்
|
Saturday, 09 October 2010 12:09
அரசியல்_சமூகம்
/ சுதேகு
|
புலம்பெயர் நாடுகளில் இன்று இயங்கும் இணையங்கள் இன்றோ நேற்றோ தோன்றியவை அல்ல. புலம்பெயர் நாட்டில் சஞ்சிகைகள் ('வீடியோ'ச் சஞ்சிகை உட்பட), பத்திரிகைகள், அமைப்பாகி வெளியிடப்பட்ட துண்டறிக்கைகள், வானொலிச் செய்திகள்... என்று ஒரு மாற்றுத் தளத்தை உருவாக்கும் பணி தொடர்ந்தது. பலரின் இந்த நெடும்பணியின் தொடர்ச்சியிலே, இன்றும் தொடர்ந்து இயங்கி வருபவைதான் இன்றைய பல இணையத்தளங்கள்.
இவைகள் வெளியிட்ட செய்திகள், பதிவுகள், பதித்த தடங்கள் ஏராளம். யேகேவாவுக்காக தனது பிஞ்சுக்குழந்தையையே 'ஸ்திரிக்கை பெட்டி'யால் எரித்த கொடுமைகள் உட்பட, இன்று வன்னிமக்களின் வேதனைக் கண்ணீர்வரை இவைகள் சொல்லிவைத்த செய்திகளும் மிகமிக ஏராளம்.
Read more...
|
Last Updated ( Saturday, 09 October 2010 12:25 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Saturday, 09 October 2010 06:11
பி.இரயாகரன் - சமர்
/ 2010
|
புலிகளின் "தமிழீழத்தாகம்" உண்மையானது என்றால், அந்த இலட்சியத்தின் பெயரில் அணிந்த சயனைட்டை குடித்து மரணித்திருக்கவேண்டும். மாறாக அதன் தலைவர்கள் சரணடைந்தார்கள். புலிகளின் மொழியில் இது துரோகம். இப்படிப்பட்ட இவர்கள் வழிநடத்திய போராட்டம் உண்மையானதா!? நேர்மையானதா!? சொல்லுங்கள். இங்கு நாம் புலிகளின் கீழ் இருந்தவர்கள் குறித்துப் பேசவில்லை. புலித் தலைவர்கள் குறித்து தான் இங்கு பேசுகின்றோம். தங்கள் இலட்சியத்தின் பெயரில் அணிந்த சயனைட்டை குடித்து மரணிக்காது சரணடைந்த கூட்டம் தான், இந்தப் போராட்டத்தையும் அழித்தது. "பல்லாயிரம் போராளி" களின் "உயிர்களைத் தியாகம்" செய்ய வைத்ததன் மூலம் தங்களைக் காப்பாற்றியது. தங்களைப் பாதுகாக்க, மக்களை பலியிட்டது. இந்தக் கூட்டமா "போராடும் குரலை உன்னதமாகக் காட்டிய"து? இவர்கள் பின் கட்டமைத்த அனைத்தும் பொய்யானது. தன்னை தியாகம் செய்யத் தயாரற்ற கூட்டம், மற்றவன் தியாகத்தை காட்டி நக்கிய கூட்டம், தன் உயிரை பாதுகாக்க சரணடைந்தது. இது நடத்திய போராட்டம், எப்படித்தான் வெற்றிபெறும்.
Read more...
|
Last Updated ( Saturday, 09 October 2010 06:15 )
|
|
|