Thursday, 07 October 2010
Written by தமிழரங்கம்
|
Thursday, 07 October 2010 19:06
அரசியல்_சமூகம்
/ மா.நீனா
|
எங்கட ஊரில் ஒரு மனிதம் தனது செயல்பாடு ஒன்றை நிகழ்த்தும் போது, அச் செயலை பாவித்து தன்னை மற்றவர் மத்தியில் பிரபலமாக்குவதற்கு முயற்சிப்பதை, "போட்டாராம் காத்திகேசு கூத்து, இடுப்பில சலங்கை கட்டி" என்ற சொற்பதம் மூலம் விமர்சிப்பர். கூத்து ஆடும்போது காலில் சலங்கை, கட்டுவது தான் வழமை. அப்போது தான் ஆட்டத்தின் லயதிற்கேற்ப சலங்கை ஒலி எழுப்பும். அதற்கு மாறாக இடிப்பில் சலங்கை கட்டினால் சலங்கையின் ஒலி ஆட்டத்திற்கேற்ற ஒலி எழுப்பாது. லயமும் தாளமும் முரண்படும் போது கூத்து சிறக்காது. ஆனால் அதை ஆடுபவர் இதை திட்டமிட்ட முறையில் வழமைக்கு மாறாக லயமும் தாளமும் முரண்படும் வகையில் இடிப்பில சதங்கை கட்டினால், கூத்து பார்ப்பவர் கவனம் கூத்தில் இருக்காது, அதை நடிப்பவன் மீது திரும்பும். இதன் மூலம் தன்னை எவ்வழியிலாவது சமூகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்ட முனைபவர், அதை நிறைவேற்றிக் கொள்கிறான். இங்கு கூத்து ஆடுவது என்ற செயல் ஒரு மனிதம் தன் மீது பார்வையாளரின் கவனத்தை, மேலதிகமாக ஈர்க்க பாவிக்கும் கருவியாக பயன்படுகிறது.
Read more...
|
Last Updated ( Thursday, 07 October 2010 21:35 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Thursday, 07 October 2010 11:47
பி.இரயாகரன் - சமர்
/ 2010
|
சரத்பொன்சேகாவை தன் அதிகாரங்கள் மூலம் தண்டித்து ஒடுக்க முனைந்தவர்கள், அதனாலும் மூக்குடைபடுகின்றனர். இது செயல்பூர்வமான, எதிர்ப்பு அரசியலை உருவாக்குகின்றது. இதற்கு அடிப்படையாக இருப்பது, விட்டுக் கொடுக்காத உறுதியுடன் மகிந்தாவை எதிர்கொள்ளும் சரத்பொன்சேகாவின் உறுதியான நிலை. கைது, அவமானப்படுத்தல், உரிமைகளைப் பறித்தல், சிறை என்று தொடரும் அரச அடக்குமுறைகளை ஆளும் பாசிச வர்க்கம் அவர் மேல் ஏவுவதுடன், அதை வன்மம் கொண்டு திணித்தும் வருகின்றது. அது பாசிசத்தின் தன்மையையும், அதன் அரசியல் குணாம்சத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. இதற்கு எதிரான சரத்பொன்சேகாவின் விட்டுக்கொடுக்காத போராட்டம் அரசை தனிமைப்படுத்தி, அவர்களையே அதிரவைக்கின்றது.
Read more...
|
Last Updated ( Thursday, 07 October 2010 11:48 )
|
|
|