கன்னித்தீவு என்று சொன்னால் தமிழகத்தில் சற்றேறக்குறைய அனைவருக்கும் அது ஒரு நாளிதழில் வரும் படக்கதை எனத் தெரியும். அந்த கன்னித்தீவு எங்கே இருக்கிறது என்று அனேகமா யாரும் தேடிப் பார்த்திருக்க மாட்டார்கள். கதையில் வரும் இடம்தானேப்பா, அதையாச்சும் தேடுவாங்களோ? கதை என்று சொல்லும்போது எனக்கு இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, மாமா, அத்தை என்று நம் உறவுகளில் யாராவது ஒருவரிடம் நாம் கதை சொல்லிக் கேட்டிருப்போம் அல்லவா. கதை சொல்பவர்கள் எல்லோருமே பொதுவாக இப்படித்தான் ஆரம்பிப்பார்கள் " ஒரு ஊர்ல"...!!
Read more...
|