யுத்தத்தின் பெயரில் இனத்தைக் கொன்று குவித்தவர்கள், யுத்தத்தின் பின் அதை நிறுத்திவிடவில்லை. வடிவத்தை மாற்றியுள்ளனர். 1940 களில் எல்லையோரத்தில் திட்டமிட்டு நடத்திய இனவழிப்பு குடியேற்றம், யுத்தத்தின் பின் தமிழர் செறிந்து வாழும் பகுதிகளில் தொடங்கியுள்ளது. அந்த வகையில் பேரினவாதம் தன் இனவழிப்புக்கு, இன்று பௌத்த மதத்தை முதன்மைப்படுத்தி முன்னிறுத்துகின்றது. அரசு தன்னை மதத்தின் ஊடாக அடையாளப்படுத்தி, பேரினவாதத்தை முன்தள்ளுகின்றது. ஆயுதம் மூலமான இனவழிப்பு புலிகளின் அழிவுடன் முடிந்த நிலையில், பௌத்த மதத்தைக் கொண்டு அதைச் செய்கின்றது. யுத்தத்தின் பின்னான இனவழிப்பில் இன்று மதம் பயன்படுத்தப்படுகின்றது.