தொடரும் இனவழிப்பு மூலமே, நாட்டை முழுமையாக பாசிசமயமாக்க முனைகின்றது அரசு. இதற்காக தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் மற்றும் சிந்தனை அரங்கை கைப்பற்ற முனைகின்றது. இந்த வகையில் முன்னாள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு எடுபிடிக் கும்பலை பயன்படுத்துகின்றது. சமூகத்தின் அனைத்து துறையையும் தன் மயப்படுத்துகின்றதன் மூலமான பாசிசமயமாக்களை தொடங்கி இருக்கின்றது. புலிகள் கடந்த காலத்தில் எதை எப்படி செய்தனரோ அதை அரசு செய்கின்றது. அதற்கு பழக்கப்பட்ட, அதையே பிழைப்பாக கொண்டு வாழ்ந்த முன்னாள் புலிகளையே இதற்காக அரசு பயன்படுத்துகின்றது. வசதி வாய்புகளுடன் கூடிய சுதந்திரமான செயல்தளத்தை தன் எடுபிடிகளுக்கு வழங்குவதன் மூலம், இதை செயல்படுத்துகின்றது.
இலங்கை அரசுக்கு பின் இயங்கும் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை இனம் காணல் - பகுதி 02
- 17 July 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
Last Updated on Tuesday, 17 July 2012 09:54
இலங்கை அரசுக்கு பின் இயங்கும் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை இனம் காணல் - பகுதி 01
- 15 July 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
அரசின் புனர்வாழ்வுக்கு கூட உள்ளாகாத, அரசின் அதே அரசியல் அடித்தளத்தைக் கொண்ட கருணாகரன் மூலம், அரசு தமிழ் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலில் தளத்தை கைப்பற்ற முனைகின்றது. அரச பாசிசம் மண்ணிலும் - புலத்திலும், இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலில் முயற்சிகளை முடுக்கிவிட்டு இருக்கின்றது.
இந்த அரசியல் பின்புலத்தில் கருணாகரன் புலி "தவறு"கள் பற்றி கூறிக் கொண்டு, இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலில் இறங்கியுள்ளார். இந்த அரசு சார்பு அரசியல் பின்புலத்தை அரசியல் ரீதியாக இனம் காண்பது இன்று அவசரமானதும் அவசியமானதுமாகி இருக்கின்றது.
Last Updated on Sunday, 15 July 2012 10:50
புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 65
- 14 July 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- நேசன்
காத்தான்குடி, ஏறாவூர் முஸ்லீம்கள் படுகொலை: தமிழர்கள் வெட்கித் தலைகுனிய வேண்டிய நாள்
தென்னிலங்கையில் JVP இயக்கத்தைச் சேர்ந்தவர்களைக் கொன்றொழித்து நிலைமைகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டிருந்த பிரேமதாச தலைமயிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசு வடக்குக்-கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் முழு இராணுவப் பலத்தையும் பிரயோகிக்கத் தொடங்கியிருந்தது. இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஆரம்பித்து விட்டிருந்த போர், நாமறிந்த அனைத்துப் போர்களையும் போலவே நிராயுதபாணிகளான அப்பாவி மக்களை காவு கொள்ளத் தொடங்கிவிட்டிருந்தது.
Last Updated on Saturday, 14 July 2012 05:17
தேசியம் புறநிலை சாராத அகநிலை சார்ந்த, வர்க்கம் சாராத நடுநிலை கற்பனைப் பெருளாம்! -இது ஓர் உயிர்ப்பின் வாதம்
- 13 July 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- சமர் - 20 : 01 -1997
உயிர்ப்பு-6 வெளிவந்துள்ளது. வழமைபோல மார்க்சிசத்தின் மீது இம்முறையும் சேறடிப்புத்தான். இம்முறை ஆசிரியர்தலையங்கங்கள், டிசம்பர் 1994 வெளியாகிய அ.மார்க்சின் "தேசியம் ஒரு கற்பிதம்" என்ற பகுதிக்குள் உள்ளடங்கியுள்ளது. தேசம் என்பது ஒரு கற்பிதம் என்ற வரையறையில் தொடங்கி அ.மர்க்ஸ் அதில் குறிப்பிட்ட சிவத்தம்பியின் சைவ வேளாளர் சித்தாந்தமே தேசியம் என்ற எல்லையைத் தாண்டிவிடவில்லை.
Last Updated on Friday, 13 July 2012 20:04
என்னடா,இந்த மதுரைக்கு வந்த மயிர் சோதனை
- 13 July 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- விஜயகுமாரன்
வாடிய பயிரை கண்ட போது மனம் வாடினேன்- வள்ளலார் ராமலிங்கனார்.வடிவான பிகரை கண்டபோதெல்லாம் வழிஞ்சு போய் நின்றேன்- ஆசாமி நித்தியானந்தா
Last Updated on Friday, 13 July 2012 13:04
ஒடுக்கப்பட்ட மக்களின் சுயம்சார்ந்த முன் நகர்வுகள்! - சாதியமும் தமிழ் தேசியமும்--பகுதி-5
- 13 July 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- அகிலன்
உலகில் அடக்கி - ஒடுக்கலின் இடுகல்களுக்குள்ளான எச்சமூகமும், தொடராய் அவ்வினையாற்றலின் இசைவுகளுக்கு இசைந்து சென்றதாக வரலாறு இல்லை. இந்நிலையில் தமிழர் சமுதாயத்தில் சாதி - அமைப்பின் தீண்டாமைக்கொடுமைகளுக்கு உட்பட்ட மக்கள் மத்தியிலும், இந்நிலையைக் காண முடியும்.
1920-ல் ஆரம்பிக்கப்பட்ட வாலிபர் காங்கிரஸின் பத்தாண்டு தீவிரச் செயற்பாடுகளில், தமிழ் மக்கள் மத்தியிலுள்ள, சாதி-தீண்டாமைக்கு எதிரான வினையாற்றல்கள் மிகப்பெரியதாகும். இது வாலிபர் காங்கிரஸிற்குள் மாத்திரமல்ல, தமிழர் சமுதாயத்திற்குள்ளும் சமத்துவத்தைப் பேணப் போராடியது.
Last Updated on Friday, 13 July 2012 05:54
தங்கள் "துன்பவியல்" காலம் பற்றி ஈ.பி.ஆர்.எல்.எவ். பேசுவதும், அதை சுயவிமர்சனமாக காட்டுவதும் மோசடியாகும்
- 12 July 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
அண்மைக் காலமாக சில சம்பவங்கள் மீது, சில காலகட்டங்கள் மீது.., விமர்சனம் செய்வதன் மூலம், அதை மட்டும் தவறாக காட்டுகின்ற பம்மாத்தான "சுயவிமர்சன" "விமர்சன" அரசியலை அரங்கேற்றுகின்றனர். அம்பலப்பட்டுபோன புலிகள் முதல் ஈ.பி.ஆர்.எல்.எவ். வரை, இந்த உத்தி மூலம், மீண்டும் மக்களை எமாற்ற முனைகின்றனர். இப்படி செய்வதன் மூலம், அவர்கள் தங்கள் அரசியல் சரியாக இருந்ததாக காட்டிக் கொண்டு, மீண்டும் அதை முன்னிறுத்துகின்றனர். இவர்கள் கூறும் "தவறான" சம்பவங்கள், "தவறான" காலகட்டத்துக்கான பொறுப்பை தனிநபர்கள் மீதும், குறித்த சூழல் மீதும், மற்றவர்கள் மீதும் சுமத்தும் இவர்கள், இது தாங்கள் கொண்டிருந்த அந்த அரசியலின் தவறல்ல என்கின்றனர். இதன் மூலம் மற்றவர்கள் மீது இலகுவாக குற்றம் சாட்டுவதன் மூலம், அதை தங்கள் சரியான அரசியலின் ஒரு "தவறாக" இட்டுக்கட்டி காட்ட முற்படுகின்றனர். இது தவறு அல்ல, மாறாக அந்தந்த அரசியலின் பண்பு ரீதியான அளவு ரீதியான அரசியல் வெளிப்பாடாகும். இங்கு "தவறு" குறித்த இவர்களின் விமர்சனம், சுயவிமர்சனம் என்பது, கடைந்தெடுத்த பொறுக்கித்தனத்துடன் கூடிய அரசியல் மோசடியாகும்.
Last Updated on Saturday, 14 July 2012 12:24
அ.மார்க்ஸ் தன் தத்துவத்தையே மறுக்கும் ஒரு சந்தர்ப்பவாதி என்கின்றார் சோபாசக்தி
- 11 July 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
“கூட்டத்தில் பேச முனனர், பேசியது என்ன என்று தெரிய முன்னர் எப்படிக் குற்றம்சாட்ட முடியும்?” என்று கேட்டு அ.மாhஸ்சை காப்பாற்ற முனையும் சோபாசக்தி, அவர் என்ன பேசினார் என்று தெரிந்து கொண்டு இந்த கேள்வியினை எழுப்பவில்லை. அ.மார்க்ஸ்சை காப்பாற்றும் அவரின் தர்க்கத்தின் அரசியல் முரணே இதுதான். அ.மார்க்ஸ்சின் தத்துவம், மகிந்தாவின் நடைமுறையுடன் பொருந்தியதன் அடிப்படையிலான அரசியல் அம்பலப்படுத்தல் இது. இது தவறானது என்று சோபாசக்தியால் கூறமுடியாது என்பதால், "வர்க்க அணித்திரட்சியை ஊடுருவித் தாக்கி அழிப்பதே இரகசிய ஏஜண்ட் அ.மார்க்ஸ் 007னின் திட்டம்" என்று கதை சொல்லி புலம்ப முடிகின்றது. அ.மார்க்ஸின் அரசியல் பாட்டாளி வர்க்கம் சார்ந்த அரசியலா? அல்லது பாட்டாளி வர்க்க அரசியலை மறுத்து, பிளக்கும் அரசியலா? கடந்த 30 வருடங்களாக அவர் எதனை முன்னெடுத்துச் செல்கின்றார்?
Last Updated on Wednesday, 11 July 2012 10:20
அ.மார்க்சின் அரசியல் நோக்கம், இலங்கை அரசின் அரசியல் நோக்கத்தில் இருந்து வேறுபட்டதா!?
- 09 July 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
பிரமுகராக இருப்பதையும், கொசிப்பதையும் இலக்கிய அரசியல் வாழ்க்கையாக கொண்டவர்களுக்கு இது அக்கறையற்றதாக இருக்காலம். தண்ணி அடிப்பதையே உயர்ந்தபட்ட அரசியல் ஒருங்கிணைவாக கொண்டு வாழ்பவர்களுக்கு, இதுவொரு அரசியல் விடையமே அல்ல. தங்கள் கூட்டாளிகள் பற்றி இப்படி கூறுவது, அதற்கு நாம் அரசியல் ரீதியாக வேட்டு வைப்பது கண்டு, அரசுக்கு எதிரான நடைமுறையை மறுக்கும் இவர்கள் "அரசு எதிர்ப்பு" வேசம் மட்டும் போட்டுக் காட்ட முடியும். இந்த வேசம் கூட தங்கள் சுய இருப்புக்கானதே ஒழிய, மக்களை அரசுக்கு எதிராக அணிதிரட்டுதைக் கோருவதுமல்ல, அதற்காக தாமைத் தாம் அணிதிரட்டுவதுக்குமல்ல. பிரமுகராக இருப்பதற்கான, கொசிப்பதற்கான அடையாள அரசியல். இந்த வகையில் அ.மார்க்ஸ் இவர்களின் பங்காளியாக இருக்கின்றார்.
Last Updated on Monday, 09 July 2012 06:50
புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 64
- 07 July 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- நேசன்
முடிவுக்கு வந்த பிரேமதாச - பிரபாகரன் "தேனிலவு" : இரண்டாவது ஈழப் போரின் ஆரம்பம்
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பை வந்தடைந்திருந்த வேளையில் இலங்கை அரசின் இன ஒடுக்குமுறைக்கெதிராக வடக்குக்-கிழக்கில் போராடிய நூற்றுக்கணக்கான இளைஞர்கள் விடுதலை இயக்கங்களின் திசைவிலகல்களால் விடுதலை இயக்கங்களிருந்து ஒதுங்கியும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலை மிரட்டல்களுக்கு அஞ்சியும் கொழும்பை வந்தடைந்திருப்பதைக் காண முடிந்தது.
Last Updated on Saturday, 07 July 2012 06:27
புலிகள் சுயவிமர்சனம் செய்துள்ளனராம் விமர்சனம் செய்ய கருத்துச் சுதந்திரம் வழங்கியுள்ளனராம் , பச்சோந்தி சிவத்தம்பி கூறுகிறார் கேட்டுப்பாருங்கள்
- 07 July 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- சமர் - 23 : 07 -1998
சரிநகர் 131 இல் காலம் பத்திரிகையில் இருந்து மறுபிரசுரம் செய்யப்பட்ட பேராசிரியர் சிவத்தம்பியின் 'மேலிருந்து திணிக்கப்படுகின்ற அரசு அதிகாரமே தமிழ் பிரக்ஞைக்கு ஓர் அரசியல் வடிவத்தைக் கொடுக்கின்றது ' என்று தலைப்பிட்டு வழங்கிய பேட்டியில் -
Last Updated on Saturday, 07 July 2012 19:31
அரச பயங்கரவாதம் உலகறிய மீண்டும் சிறையில் அரங்கேற்றிய கொலை
- 06 July 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
தமிழன் என்றால் எப்படியும் கொல்லலாம், எப்படியும் நடத்தலாம். இதுதான் இலங்கையின் அதிகார வர்க்கத்தின் நடைமுறை. இன அடையாளம் மட்டும் போதும், அவர்களைத் தண்டிப்பதற்கான உரிமையை வழங்குகின்றது. நாட்டின் சட்டம் நீதி எல்லாம் தமிழனுக்கு கிடையாது என்பது, பொது நடைமுறை. தாம் அடித்தே கொன்ற பிணத்தைக் கூட, கொடுக்க மறுக்கும் அளவுக்கு தங்கள் இனவாதக் கொடூரங்கள் மூடி மறைக்கின்றது அரசும் நீதித்துறையும். நாட்டின் அமைதிக்கும், இன ஐக்கியத்துக்கும் வேட்டுவைக்கும் இந்த அரசு தான், தாம் கொன்ற பிணம் கூட நாட்டின் அமைதியைக் கெடுக்கும் என்று கூறுகின்றது. இந்த நிலையில் காணமல் போன 15 ஆயிரம் பேரின் விபரத்தை, சர்வதேச மனிதவுரிமை அமைப்பு இலங்கையிடம் கோருகின்றது.
Last Updated on Friday, 06 July 2012 10:41
தங்கள் உறவுகளை பறிகொடுத்தவர்கள், இன்று தங்கள் நிலங்களை பறிகொடுக்கின்றனர்
- 03 July 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
இதுதான் தமிழ் மக்களின் இன்றைய நிலை. பறிகொடுத்த தங்கள் உறவுகளுக்காக போராடும் மக்கள், தங்கள் சொந்த சட்டபூர்வமான நிலங்களுக்காக போராடுகின்ற அவலம். தமிழ்மக்கள் தங்கள் பூர்வீக பிரதேசத்துக்காக போராடிய மக்கள், இன்று தங்கள் வாழ்விட உரிமைக்காக போராட நிற்பந்திக்கப்படுகின்றனர். இந்த ஒடுக்கு முறைக்கு எதிராக வடக்கில் வெளிப்படும் உணர்வுகள், கிழக்கில் வெளிப்படவில்லை. ஒடுக்குமுறையும், விழிப்புர்ணவும், சோரம் போதலும் பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபடுகின்ற பின்னணியில், வடக்குகிழக்கில் இனவழிப்பு புதிய வடிவம் பெற்று இருக்கின்றது. யுத்தகாலத்தில் யுத்த வன்முறை மூலம் எதையெல்லம் செய்ய முடிந்ததோ, அதை யுத்ததின் பின்னலான கொள்கையாக நடைமுறையாகக் கொண்டு அரசு செயல்படுகின்றது.
Last Updated on Tuesday, 03 July 2012 12:14
தமிழின அழிப்புக்கு உதவும் அ.மார்க்ஸ்சின் யாழ்பாண வருகையும் , தமிழினியின் புனர்வாழ்வும் - நாகலிங்கம் சற்குணன்
- 02 July 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- விருந்தினர்
புலிகளின் அழிவின் பின், புலம்பெயர் தேசங்களின் பல திடீர் அரசியல்வாதிகளும், திடீர் மார்சிசவாதிகளும் தோன்றினார்கள்.புலிப்பினாமிகளை விட இப்போ குறுந்தேசியத்தின் ஒட்டு மொத்த விற்பனையாளர்களாக இவர்கள் தான் இயங்குகிறார்கள்.
Last Updated on Monday, 02 July 2012 13:50
"பொருளாதார மறுசீரமைப்பைக் கோரும்" அ.மார்க்ஸ்
- 03 July 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- சமர் - 24 : 10 -1998
"தலித் ஆணாதிக்கத்தை எதிர்க்காத பெண்ணியம் "
பழைய சரக்குகள் அம்பலமாகிப் போக புதிய சரக்குகளை தேடிச் செல்லும் வியாபாரிகளைப் போல புதிதாக அந்தோனிசாமி மார்க்ஸ் "தலித் பெண்ணியம் ஒரு விவாதத்தின் முன்னுரை" என்ற கட்டுரையை "இருள்வெளி" என்ற இருண்ட மக்கள் விரோத, மார்க்சிய விரோத பாரீஸ் மலரில் எழுதியுள்ளார். அக்கட்டுரையில் சாந்தால் மொஃபேயின் மேற்கோள்களை தலைப்புக்குக் கீழ் தடித்த எழுத்தில் போட்டே தனது ஆணாதிக்கக் கட்டுரையைத் தொடங்குகின்றார்.
Last Updated on Tuesday, 03 July 2012 19:20
வெள்ளைத்திமிர் என்ற பெயரில் கற்பிக்கும் அந்தோனிசாமி மார்க்சின் கறுப்புத்திமிர்
- 02 July 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- சமர் - 25 : 08 - 1999
ஐரோப்பியப் பயணக் கட்டுரை எனக்குறிப்பிட்டு அ.மார்க்ஸ் வெள்ளைத்திமிர் என்ற நூல் ஒன்றை வழமைபோல் விடியல் பதிப்பகமே வெளியிட்டுள்ளது. அ.மார்க்ஸ் ஐரோப்பா வந்து சென்றதை ஒட்டி தொகுக்கப்பட்ட நூலில் ஐரோப்பிய வாழ்வின் எம்மவர்களின் (புலம்பெயர் தமிழரின்) கருப்புத்திமிர் பக்கத்தை மறைத்தும் தனது குருட்டு அரசியலுக்கு எது பொருந்துமோ அல்லது எதை பொருத்த முடியுமோ அதை பொருத்தி வெளியிட்ட நூலே "வெள்ளைதிமிர்" என்ற கருப்புதிமிர் நூல்.
Last Updated on Monday, 02 July 2012 20:05
அ.மார்க்ஸ் எந்த வர்க்கத்தின் பிரதிநிதி அவரை அழைத்துக் கூடிக் கூத்தடிப்போர் எந்த வர்க்கத்தின் பிரதிநிதிகள்
- 02 July 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- சமர் - 26 : 09 - 2000
தமிழ் மக்களின் போராட்டம் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு எதிராக வளர்ச்சி பெற்ற போது, அது அம்மக்களின் போராட்டத்தை துப்பாக்கி முனையில் அடக்கி ஒடுக்கியது. இந்த அடக்கமுறைக்கு எதிரான சக்திகளின் அரசியல் தவறுகள் அவர்களையே அவர்களின் மண்ணில் இருந்து ஓட வைத்தது. ஓடிவந்தவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள் மீதான அக்கறையை தமது புதிய பூர்சுவா வாழ்க்கையுடன் தொலைக்கத் தொடங்கி சீரழிந்தவர்கள், அந்த மக்களின் நியாயமான குரல்களையே பின்னால் மறுப்பவர்களாக தம்மை மாற்றிக் கொண்டனர்.
Last Updated on Monday, 02 July 2012 19:37
புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 63
- 30 June 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- நேசன்
வடக்கில் புலிகளின் ஆதிக்கமும் "தீப்பொறி"க் குழுவைக் குறிவைத்த செயற்பாடுகளும்
வடக்குக் கிழக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் நிறுவப்பட்டு முற்போக்கு ஜனநாயக கருத்துக்களைக் கொண்டிருந்த அனைவர் மீதும் தமது கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியிருந்த போதிலும் என்னுடன் பேசுவதற்கு செல்வி எனது வீட்டுக்கு வந்திருந்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் என்னை வழிமறித்து பேச அழைத்தபோது நான் பேசுவதை எதற்காகத் தவிர்த்துக் கொண்டேன் என்பதை செல்விக்குத் தெளிவுபடுத்தியதுடன் செல்வி தனது பேச்சை ஆரம்பித்தார். நான் எதிர் பார்த்தது போலவே செல்வியினுடைய பேச்சு நீண்டு சென்று கொண்டிருந்தது. புளொட்டில் இணைந்து நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புக்களுடனும் செயற்பட்ட காலங்கள், புளொட்டின் தலைமையின் அராஜகப் போக்கால் ஆயிரக்கணக்கான இளைஞர்களினதும் யுவதிகளினதும் உழைப்பு, தியாகம் என்பன விரயமாய்ப் போனமை, ஈழ விடுதலைப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசிசப் போக்கு ஈழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்டிருந்த பல நூற்றுக்கணக்கான போராளிகளையும் புத்திஜீவிகளையும் அப்பாவித் தமிழ், சிங்கள மக்களையும் பலி கொண்டுவிட்டிருந்ததையும் எடுத்துக் கூறிக் கொண்டிருந்தார்.
Last Updated on Saturday, 30 June 2012 07:31
தங்கள் மனிதவிரோத குற்றங்களை மூடிமறைக்க இலக்கியம், இலக்கியமும் அரசியலும்
- 29 June 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
30 வருடமாக புலி அரசியலையும், அதன் மனிதவிரோத குற்றங்களையும் எதிர்த்து போராடியதை எற்காது, முள்ளிவாய்க்காலுக்கு பின்னான புலிகள் பற்றி விமர்சனமும் அதன் அரசியலும் எதுவாக இருக்கின்றது? அதன் நோக்கம் என்னவாக இருக்கின்றது? முள்ளிவாய்க்காலுக்கு முன் இவர்களுக்கு புலிகளுடன் முரண்பாடு இருந்து இருப்பின், எந்த அரசியலின் அடிப்படையில் இவர்கள் முரண்பட்டு இருப்பார்கள்? அதை இன்று என்னவாக, எப்படி அவர்கள் வெளிப்படுத்துகின்றனர்? இதை எல்லாம் மூடிமறைக்க, இலக்கியம் என்ற தகுதி போதுமா? இப்படிப்பட்ட இவர்கள வேறுயாருமல்ல, புலிகளின் அரசியல் தவறுகள் எல்லாம் தெரிந்தவர்களாக இவர்கள் இருந்ததுடன், புலிகளின் குற்றங்களுக்கும் தவறுகளுக்கும் உடந்தையாகவும் இருந்துள்ளனர்.
Last Updated on Friday, 29 June 2012 19:22
நேபாள புரட்சி: வெற்றிக்கான பாதை......! ஆய்வறிக்கை.
- 28 June 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- சூறாவளி
இந்த நூற்றாண்டின்,உலக உழைக்கும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய நேபாள புரட்சி,நேபாள மாவோயிச கட்சித் தலைமையின் துரோகத்தால் காட்டிக்கொடுக்கப்பட்டு பின்னடைவை சந்தித்துள்ளது.அரசியல் நிர்ணய சபை கலைக்கப்பட்டு விட்டது.செம்படையை நேபாள ராணுவத்தைக் கொண்டு பிரசந்தா,பாபுராம் கும்பலின் உத்தரவின் பேரில் நேபாள ராணுவத்தின் மூலம் நயவஞ்சகமாக சுற்றி வளைத்து களைக்கப்பட்டுவிட்டது.
Last Updated on Thursday, 28 June 2012 09:22
படிப்பகத்தை நடத்துவது தவறா!? தவறை மூடிமறைக்கவா விமர்சிக்கின்றோம்!?
- 27 June 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
கலையரசனின் பிரமுகர்த்தன "மார்க்சியத்தின்" கண்டுபிடிப்பு தான் இது. "தவறை நியாயப்படுத்தி ஏதாவது காரணம் சொல்லத் தானே வேண்டும்" என்று, யோ.கர்ணனின் நூல் மேலான எமது விமர்சனத்துக்கு விளக்கம் கொடுக்கின்றார் கலையரசன். பிரமுகர் என்ற வகையில் மற்றொரு பிரமுகரை உருவாக்கவும், அவரை பாதுகாக்கவும் குறுக்குவழியில் முனைகின்றார் கலையரசன். இதற்காக "தவறு" ஒன்றை, அவர் திடீரெனக் கண்டு பிடிக்கின்றார். வேடிக்கை என்னவென்றால் இவர் "தவறாக" கண்டுபிடித்த விடையம், படிப்பகத்தில் மின்நூலாக்கப்பட்டுள்ள 10000 பிரதிகளுக்கும் பொருந்தும். இவர் சொல்லும் அதே "தவறு"டன் தான் அவையும் இணையத்தில் "உரிமை" மீறி ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றது. இப்படி இவர் "தவறு" என்று கூறுவது, மின் நூலாக்கப்பட்டவற்றுக்கு அனுமதியை நாம் பெறவில்லை என்பதுதான். ஆக உங்கள் படிப்பகத்தை மூடக் கோருகின்றார்.
Last Updated on Wednesday, 27 June 2012 09:07
சிவரஞ்சித் ஏன் தெல்லிப்பளை வாறவன்? - (வதைமுகாமில் நான் : பாகம் - 51)
- 26 June 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
குறிப்பு : சிவரஞ்சித் ஏன் தெல்லிப்பளை வாறவன்? என்று மாத்தையா என்னிடம் கேட்டான்.
விளக்கம் : புலிகள் இயக்கத்தை கட்டியவரில் ஒருவரே சிவரஞ்சித். பல்கலைக்கழக மாணவராக செயல்பட்ட இவரும், இவரின் குழுவும் பலரை புலிக்கு இணைத்தனர். 1985க்கு பிந்திய காலத்தில் புலியுடன் இக்குழு முரண்பட்ட நிலையில், புலியில் இருந்து விலகிய போதும் அரசியலில் ஈடுபட்டனர். இவருடன் இருந்த முக்கிய நபரை யாழ் கச்சேரியடியில் இராணுவம் சுட்டுக்கொன்ற நிலையிலும், இவர் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது தனியாக ஒரு சிறு இலக்கிய சஞ்சிகையை கொண்டு வந்து பின் நிறுத்தியவர். புலிகளுடன் நெருங்கிய தொடர்பை பேணியபடி, முரண்பாட்டுடன் விலகியும் இருந்தார். ஆனால் புலிகளுக்கு தொடர்ந்து உதவி என்ற பெயரில், அதன் பினாமியாகவே இயங்கினார். இவர் நோர்வே வந்த பின்பும் சரி, பின் லண்டனில் புலியின் ஒளிபரப்பில் முக்கிய பணியை செய்த போதும் சரி, புலியின் பினாமியாக செயல்படுவதையே எப்போதும் தனது அரசியலாக கொண்டவர்.
Last Updated on Tuesday, 26 June 2012 09:12
பிள்ளையின் கதை (மட்டுமல்ல)
- 24 June 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- கனகமணி
பிள்ளை (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) சுவரில் சாய்ந்து ஒரு காலை நீட்டிக் கொண்டு மற்றக்காலின் முழங்காலில் ஒரு கையை வைத்து முகட்டை வெறித்துப்பார்த்துக் கொண்ண்டிருந்தான். இன்று நேற்றல்ல 17 வருடமாக அவனிருக்கும் அந்த செல்லும், அந்த முகடும்தான் அவனது உலகம்.
Last Updated on Sunday, 24 June 2012 22:18
More Articles...
- புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 62
- யோ.கர்ணனின் "சேகுவேரா இருந்த வீடு" என்ற சிறுகதைத் தொகுப்பின் ஊடான "புனர்வாழ்வு" அரசியலை இனம் காணல்
- எம்மினத்தை இனவாதத்துக்கு எதிராக அணிதிரட்டாது புரட்சியை நடத்தமுடியுமா? - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 12
- ஊடக தர்மங்கள் !
- தமிழ் மக்களுக்காக சிங்கள மக்கள் போராட முடியுமா? இல்லை. - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 11
- இனங்கள் இணங்கி ஐக்கியத்துடன் வாழ்வதற்கான தடைகளை இனம் காணல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 10
- "வழக்கு எண் 18/9" என்ற சினிமா ஏற்படுத்தும் அதிர்வும் அதன் உணர்ச்சி குறித்தும்
- புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 61
- "தேசத் துரோகிக்கு இதுதான் தண்டனை" என்று கூறித் தண்டிப்பவர்கள் யார்? அவர்களின் பின்புலம் என்ன?
- நேபாள புரட்சியின் பின்னடைவு:தலைமையின் துரோகத்திற்கு எதிராக தோழர் கிரண் அழைப்பு....