அண்ணளவாக கிளிநொச்சி இரணைமடுக் குளம் சார்ந்த நெற்பயிர்ச்செய்கையில் மூன்றில் ஒன்று நீர் இன்றி அழிந்திருக்கின்றது. மிகுதி முழுமையான பலனின்றி அரையும்குறையுமாக சுடுகாடாகி இருக்கின்றது. யுத்தம் அனைத்தையும் அழிக்க, மீண்டும் இராணுவம் விவசாயிகளை சூறையாடியிருக்கின்றது.
இதன் பின்னால் வரட்சியையும், பயிரிட அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் விதைத்ததுமே காரணம் என்று அரசும் அரசு ஊதுகுழல்களும் ஊளையிடுகின்றது. இதன் மூலம் இவைகளே தான் இதற்கு காரணம் என்று தங்கள் குற்றத்தை மூடிமறைக்க அதிகார வர்க்கம் முதல் இராணுவம் வரை முனைகின்றனர். கிளிநொச்சி விவசாயிகளுக்கு பிரதான நீர் விநியோகக் குளமான இரணைமடுக் குளமும், குளத்தைச் சுற்றியும் நடக்கும் பாரிய இராணுவ விஸ்தரிப்புத் தான், 3000 ஏக்கர் நெற்பயிரை கருக்கி இருக்கின்றது.