நடைமுறையுடன் இணையாத கருத்துகளில் தொங்கிக்கொண்டு இருக்க முடியாது. அத்துடன் கருத்துக்களை மற்றவர்களுடன் இணைந்து அமைப்பாக்காக முனையாத வெற்றுக் கருத்துகளை நாம் போற்ற முடியாது. இந்தக் கருத்துக்கள் எதுவும் சமூகத்துடன் தன்னை இணைத்துக் கொண்டு பயணிப்பதில்லை. கருத்துகள் மனித வாழ்வியல் சார்ந்து பிறக்கும் போது, அதை நடைமுறையுடன் மீளப் பொருத்தாத வரை, கருத்துக்கள் சமூக இயக்கத்தில் இருந்து விலகிவிடுகின்றது. இந்த வகையில் வர்க்கப் போராட்டம் என்பது வெறும் கருத்துகளல்ல, அது நடைமுறைத் தத்துவமாகும். அதுபோல் வெறும் வரட்டுவாதமல்ல, மாறாக நடைமுறைக்குரிய தத்துவம். இது உலகை மாற்றியமைக்கும் கோட்பாடாகும். கருத்துக்களை வெறும் விவாதத்துக்குரிய எல்லைக்குள் முடக்குவது, அதை வாழும் சூழலுக்கும் தனக்கு ஏற்ப தகமைத்துக் கொண்டு, கருத்தை வெறும் கருத்தாக நடைமுறையில் இருந்து பிரிப்பது புரட்சியாளனின் அரசியலல்ல.
கருத்துக்கள் அனைத்தும் நடைமுறைக்கே ஒழிய கருத்துக்காகவல்ல
- 30 August 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
Last Updated on Thursday, 30 August 2012 19:39
சமூக அசைவியக்கம் எதுகொண்டு நிகழ்கின்றது
- 29 August 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- அகிலன்
பன்நெடுங்காலத்திற்கு முந்தைய மக்கள் உலகத்தின் தோற்றுவாய்கள், அதன் கட்டமைப்பு, அந்த உலகத்தில் மனிதன் வகித்த இடம் ஆகியவற்றைப்பற்றிச் சிந்தித்தபொழுது, அதன் சிந்தனைப் பரிணாமமாக தத்துவஞானம் தோன்றியது.
தத்துவஞானத்தின் அடிப்படையான கேள்வி இரண்டு அம்சங்களில் இருந்து ஆராயப்பட்டது. உலகில் முதலில் தோன்றியது பருப்பொருளா, உணர்வா என்ற கேள்வி இதில் ஓர் அடிப்படை அம்சமாகும். உலகம் அறியப்படக் கூடியதா? மனிதன் இயற்கையின் ரகசியங்களுக்குள் ஊடுருவிச்சென்று அதன் விதிகளைக் கண்டுபிடிக்க முடியுமா என்ற கேள்விக்கு,… "உலகம் அறியப்படக் கூடியதே" என தத்துவஞானிகள் வலியுறுத்தினார்கள். ஆனால் இவ்வுலகு அறியப்படக்கூடிய ஒன்றல்ல என வாதிட்டவர்களும் இருந்தனர். இவர்களை இருவகை கொண்டு அன்றைய மக்களின் தத்துவஞானம் அதை உலகிற்கு சாட்சியமாக்கிற்று.
Last Updated on Wednesday, 29 August 2012 10:34
புலியை மட்டும் மையப்படுத்திய அனைத்து அரசியலும் தவறானது
- 27 August 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
பொதுவாக புலியெதிர்ப்பு அரசியல் குறித்து மட்டும் தான், இந்தத் தவறான புரிதல் இன்று பொதுவானதாகக் காணப்படுகின்றது. அரசு - புலி இரண்டையும் எதிர்க்கின்ற பிரிவிலும் கூட, இதே தவறான அரசியல் போக்கு தான் காணப்படுகின்றது. புலியெதிர்ப்பின் அரசியல் சாரம் எப்படி ஜனநாயகத்தை மட்டும் கொண்டு இயங்குகின்றதோ, அதே ஜனநாயகத்தைக் கொண்டு அரசு – புலி எதிர்ப்பு அரசியலும் இயங்குகின்றது. இரண்டுக்கும் வேறுபாடு ஒன்று புலியை மட்டும் எதிர்க்கின்றது, மற்றது அரசு – புலி இரண்டையும் எதிர்க்கின்றது. இதற்கு அப்பால், இவர்களுக்கிடையிலான அரசியல்ரீதியாக வேறுபாடு தெளிவாக வெளிப்படுவதில்லை.
Last Updated on Monday, 27 August 2012 13:52
இன ஜக்கியம் என்பது இன நல்லுறவா! அல்லது வர்க்கப் போராட்டமா!! - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 14
- 26 August 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
இதில் உள்ள அரசியல் மற்றும் நடைமுறை வேறுபாட்டை தெளிவாக பிரித்துப் புரிந்து கொள்ளவேண்டும்;. இன நல்லுறவு ஊடாக வர்க்கப் போராட்டமா அல்லது வர்க்கப் போராட்டம் ஊடாக இன இனநல்லுறவா என்பதை அரசியல்ரீதியாக தெளிவுபடுத்தி வேறுபடுத்திக் கொள்ளவேண்டும். சுயநிர்ணயம் முன்வைக்கும் இன ஐக்கியம் என்பது, இனங்களுக்கு இடையில் நல்வுறவுகளை ஏற்படுத்துவதல்ல. மாறாக வர்க்கப் போராட்டத்தின் ஊடான வர்க்க ரீதியான ஐக்கியத்தையும், அது சார்ந்த இன நல்லுறவையும் ஏற்படுத்துவதுதான்.
Last Updated on Monday, 27 August 2012 07:24
நினைவு கூருகின்ற இந்த மூன்றுபேர்கள் ஒரு முன்னுதாரணமே
- 26 August 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- சபேசன் - கனடா
கருமையம் அமைப்பு சார்பாக அனைவருக்கும் எமது தோழமை கலந்த வணக்கங்கள்
நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் சந்திக்கிறோம். கருமையம் ஒரு நாடகம் சார்ந்த அமைப்பாக வெளியில் தெரிந்த போதிலும் உண்மையில் நாம் அரசியல் சார்ந்த கலை இலக்கியம் அமைப்பு, சமுக ஒடுக்குமுறைகளுக்கு எதிர்க்குரலாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். எமக்கு ஏற்கனவே நாடகத்துறையுடன் இருந்த அனுபவம் காரணமாக நாடகத்துறைக்கூடக சற்றுகூடுதலாக செயற்பட முனைந்தமை தான் இந்தப் பெயர் வருவதற்குக் காரணம்.
இன்று இதற்கான அதாவது இந்த கூட்டத்திற்கான அவசியம் என்ன?
Last Updated on Sunday, 26 August 2012 16:14
வர்க்கப் போராட்டம் சாத்தியமில்லையாம்!, இன ஐக்கியமும் சாத்தியமில்லையாம்!!
- 25 August 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
"போராட்டத்தின்" பெயரில், "இடதுசாரியத்தின்" பெயரில், "முற்போக்கின்" பெயரில் இன ஜக்கியம் சாத்தியமில்லை என்கின்றனர். வர்க்கப் போராட்டம் சாத்தியமில்லை என்கின்றனர். இன்று வர்க்க ஐக்கியத்தை உயர்த்தி, இன ஜக்கியத்தைக கோரும் எமது தனித்துவமான முரணற்ற அரசியல் நிலையும், இதில் சமரசம் செய்யாத எமது போராட்டமும், சமூக அக்கறை உள்ளவர்களை இதன் பால் வழிநடத்தத் தொடங்கி இருக்கின்றது. தமிழ்-சிங்கள சமூக முன்னோடிகள் மத்தியில், இதுவொரு அரசியல் முன்னோக்காக மேலெழுந்து வருகின்றது. இதனால் இதற்கு எதிரான எதிர் தாக்குதல்கள், பலமுனையில் கூர்மையடைகின்றது. அதுவே சில எதிர்நிலைக் கோட்பாடாக உருவாக்கம் பெறுகின்றது.
இந்த வகையில் இலங்கையில் இன முரண்பாடு தோன்ற, வர்க்கப் போராட்டம் தான் காரணம் என்ற குற்றச்சாட்டைக் கூட எமக்கு எதிராக முன்வைக்கின்றனர். இலங்கையில் வர்க்க முரண்பாட்டை முறியடிக்க, ஆளும் வர்க்கங்கள் இனமுரண்பாட்டை முன்தள்ளியது என்ற பாட்டாளி வர்க்க அரசியலை மறுக்கும் எதிர்நிலை வாதம் தான் இது. வர்க்கப் போராட்டத்தை கைவிடுங்கள், இனவாதத்தை கைவிடுகின்றோம் என்ற எதிர்நிலை அரசியல் தர்க்கம். வர்க்கப் போராட்டத்தைக் கைவிட்டு வர்க்க அமைப்பை அனுசரித்தால், மற்றைய முரண்பாடுகள் தானாக இல்லாமல் போய்விடும் என்று கூறுகின்ற ஆளும் வர்க்க கோட்பாடுகளை இன்று முன்வைக்கின்றனர்.
Last Updated on Saturday, 25 August 2012 19:30
புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 71
- 25 August 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- நேசன்
"தீப்பொறி"க் குழுவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வெளியேறினேன்.
இலங்கைக் கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத்தாக்குதலையடுத்து தென்னிலங்கையில் நிலைமைகள் மிகவும் மோசமடையத் தொடங்கியிருந்தன. அரசபடையினரும் பொலிசாரும் கொழும்பில் என்றுமில்லாதவாறு தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர். ஒருவித பதட்ட நிலை கொழும்பில் நிலவிக்கொண்டிருந்தது.
கொழும்பில் அமைந்திருந்த சோவியத் கலாச்சார நிலையத்துக்கு சென்றிருந்த நான் நிலைமைகள் மேலும் மோசமடையலாம் என்பதால் நுகேகொட என்னுமிடத்தில் நான் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று அறைக்குள் இருந்து கொண்டேன். சிறிது நேரத்துக்குள்ளாகவே எனது பெயரை அழைத்தவாறு வீட்டின் உரிமையாளர் அறைக்கதவைத் தட்டினார்.
Last Updated on Saturday, 25 August 2012 13:00
புலி வீழ்ந்தாலும் புதுயுகத்தை திறந்துவிட்டிருக்கிறது
- 24 August 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- சுஜீவன்
எழுக தலைமுறையே
நீங்கள் கொலைக்களத்தை கடந்துவந்தவர்கள்
நித்தம் வலியைச் சுமப்பவர்கள்
வதையோடு வாழ்பவர்கள்
Last Updated on Friday, 24 August 2012 15:31
சினிமா விமரிசனம்: ‘காதலில் சொதப்புவது எப்படி?‘
- 15 August 2012
- தமிழரங்கம்
- Section: புதிய கலாச்சாரம் -
- 2012
உண்மையான காதலென்பது ஆவிகளைப் போல; அதைப் பற்றி அனைவரும் பேசுவார்கள் என்றாலும் பார்த்தவர்கள் சிலர்தான்.
- & François de La Rochefoucauld (17 ஆம் நூற்றாண்டு பிரெஞ்சு எழுத்தாளர்)
எண்பதுகளில் வெளிவந்த அலைகள் ஓய்வதில்லை முதல் தற்போது படையெடுக்கும் காதல் சார் திரைப்படங்கள் வரை இடம், காலம் மட்டும்தான் மாறியிருக்கின்றன; பொருள் மாறவில்லை. அன்று கிராமம், கடற்கரை, ஏழ்மை, சைக்கிள், பேருந்து, ஊரக விளையாட்டு என்றிருந்தவை இன்று காஃபி ஷாப், ஷாப்பிங் மால், மல்டி பிளக்ஸ், ஸ்கூட்டி, ஃபேஸ்புக், நடுத்தர வர்க்கம் என்று ’வளர்ந்தி’ருந்தாலும் காதலின் சித்தரிப்பு என்னவோ அதேதான்.
Last Updated on Thursday, 23 August 2012 10:09
ஜநாவின் அவமானப்பட்டியல்
- 22 August 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- சுஜீவன்
உலக சமாதான சட்டப்புத்தகத்தில்
சிறிலங்கா வெற்றி கொண்டு விட்டது
கோத்தபாயவின் யுத்தவெறி
அவமானப்பட்டியலில்
வெற்றியைத் தேடிக்கொடுத்திருக்கிறது
Last Updated on Wednesday, 22 August 2012 11:28
டீனேஜ் பெண்ணின் கர்ப்பம் முதலில் கடைக்காரனுக்கு தெரிந்ததெப்படி?
- 15 August 2012
- தமிழரங்கம்
- Section: புதிய கலாச்சாரம் -
- 2012
தனியார் துப்பறியும் நிறுவனங்களைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இந்தியாவில் இருக்கும் மேட்டுக்குடியினர் தமது வாரிசுகளின் மண உறவு, கள்ள உறவு குறித்த உண்மைகளைக் கண்டுபிடிப்பதற்கு இவர்களைப் பயன்படுத்துகிறார்கள். அமெரிக்காவில் அதற்கும் மேலே போய் ’ஒரு மனிதன் என்ன பொருள் வாங்குகிறான்’ என்று கண்டுபிடிப்பதற்குக் கூட ஆள் வைத்து அறிந்து கொள்கிறார்கள். அதாவது எல்லா பேரங்காடிகளையும் நடத்தும் நிறுவனங்களுக்கு இத்தகைய புலனாய்வுப் புலிகள்தான் முக்கியமானவர்கள்.
Last Updated on Tuesday, 21 August 2012 09:44
புரட்சிகர சக்திகளுக்கு பகிரங்க வேண்டுகோள்
- 19 August 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
இன்று புரட்சிகர சக்திகள் யார்? இன்று புரட்சிகர சக்திகளை வேறுபடுத்துவது எது? இதற்கு அனைவரும் இன்று விடை காணவேண்டும். இதில் நான் யார் என்பதற்கு நடைமுறையில் பதிலளிக்கவேண்டும். இந்த வகையில் எம்மை மட்டுமல்ல, எம்மைச் சுற்றிய அனைத்தையும் மீள் பரிசோதனைக்கு உள்ளாக்கவேண்டும். இதுவல்லாத அனைத்தையும் அம்பலப்படுத்தவேண்டும்.
இன்று யார் சுரண்டப்படும் மக்களைச் (வர்க்கத்தை) சார்ந்து நிற்கவில்லையோ, யார் மக்களின் அன்றாட வாழ்வியல் நடைமுறைப் போராட்டத்துடன் இணைந்து போராடவில்லையோ, அவர்கள் அனைவரும் மக்களின் எதிரிகள்!
யார் இன்று வர்க்க அரசியலை ஏற்கவில்லையோ, யார் வர்க்க நடைமுறையை சார்ந்த செயற்பாட்டை மறுக்கின்றனரோ, அவர்கள் தான் மக்களை ஏமாற்றுகின்ற முதல்தரமான எதிரிகள். அரசு போன்று, மக்களை தம் அறிவு மேலாண்மை மூலம் ஏமாற்றி வாழ்கின்ற பொறுக்கிகள். ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்தப்பபட வேண்டியவர்கள்.
Last Updated on Sunday, 19 August 2012 15:37
புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 70
- 18 August 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- நேசன்
புலிகளால் கைது செய்யப்பட செல்வி, மனோகரன், தில்லை , மணியண்ணை
இலங்கையின் இடதுசாரி இயக்க வரலாற்றில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைத் (சீன சார்பு) தலைமை தாங்கி வழிநடத்தியதுமல்லாமல் தொழிற்சங்கப் போராட்டங்களையும் இலங்கையில் இனங்களுக்கிடையில் சம உரிமைக்காகவும், தமிழ் மக்களிடையே - குறிப்பாக யாழ்ப்பாண மக்களிடையே - புரையோடிப்போய்விட்டிருந்த சாதீய ஒடுக்குமுறைக்கெதிராகவும் நாகலிங்கம் சண்முகதாசன் உட்பட பல இடதுசாரிகள் போராடியிருந்தனர். ஆனால் இலங்கையின் இனப்பிரச்சனை குறித்து இவர்கள் கடைப்பிடித்த தவறான போக்கு தமிழ் மக்களின் இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்தில் குறுந்தேசிய இனவாதிகளின் பலம் ஓங்குவதற்கும், பிற்காலகட்டத்தில் குறுந்தேசிய இனவாதம் பாசிச வடிவம் பெறுவதற்கும் ஒரு காரணமாக அமைந்திருந்தது. நவலங்கா சமசமாஜக் கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்கார போன்ற சிங்கள இடதுசாரிகளும், தொழிற்சங்கவாதியான எச். என். பெர்னாண்டோ உட்பட பல சிங்கள முற்போக்கு ஜனநாயகவாதிகளும் கூட தமிழ் மக்களின் உரிமைகளுக்காக பகிரங்கமாகப் போராடிக் கொண்டிருந்தனர். ஆனால் இத்தகைய போராட்டங்கள் அனைத்தையும் பின்தள்ளுமளவுக்கு சிங்களப் பெரும்தேசிய இனவாதமும், தமிழ்க் குறும்தேசிய இனவாதமும் கோர முகத்துடன் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.
Last Updated on Saturday, 18 August 2012 08:11
தங்கம் தின்று, கடலைக் குடித்து, அடிமைகளின் உழைப்பில்….துபாய்!
- 15 August 2012
- தமிழரங்கம்
- Section: புதிய கலாச்சாரம் -
- 2012
அவளால் பேசமுடியவில்லை. தன் கதையைச் சொல்வதற்கு வாய் திறக்கும் போதெல்லாம் அவள் அழுகிறாள். வாழ்ந்து கெட்டவர்களுக்கே உரிய மங்கிப்போன பொலிவு கரேனின் முகத்தில் தெரிகிறது. துபாயின் மிகச்சிறந்த சர்வதேச நட்சத்திர விடுதி ஒன்றின் கார் நிறுத்துமிடத்தில் அவளைப் பார்த்தேன். அங்கிருக்கும் ஒரு கார்தான் பல மாதங்களாக அவளுடைய வீடு. இது சட்டவிரோதம்தான் என்றாலும் அங்கு வேலை செய்யும் வங்கதேசத்தைச் சேர்ந்த பணியாளர்களுக்கு அவளை விரட்டுவதற்கு மனம் வரவில்லை. தன்னுடைய துபாய் கனவு இங்கே வந்து முடியும் என்று அவளும் நினைத்துப் பார்க்கவில்லை.
Last Updated on Friday, 17 August 2012 14:11
சிங்கள தேசியத்தை எதிர்க்காத சிங்கள சர்வதேசியம் மார்க்சியமல்ல - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல்-13
- 14 August 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
தமிழ் தேசியத்தின் ஊடாக, இனமுரண்பாட்டையும், சிங்கள தேசியத்தையும் பார்த்தல் மார்க்சியமல்ல. மாறாக ஆளும் வர்க்கத்தின் பெரும் தேசிய வர்க்க உணர்வுகளின் மூலமும், சிங்கள தேசிய இன உணர்வுகளின் மூலமும் உருவானதே இனமுரண்பாடு. இப்படித்தான் இதை இனம் காணவேண்டும். இப்படி இனங்கண்டு போராடுவதே சர்வதேசிய உணர்வாகும்.
தமிழ் தேசியத்தின் ஊடாக இனமுரண்பாட்டை புரிந்து, அதற்கு ஏற்ப அரசியல் ஓட்டுப்போட முடியாது. மாறாக சிங்களப் பாட்டாளி வர்க்கம் தன்னை அரசியல் மயப்படுத்துவது என்பது, சிங்கள தேசியத்துக்கு எதிரான சர்வதேசியத்தை உருவாக்குவதன் மூலம தன் சொந்த வர்க்கப் போராட்டத்தை அது நடத்த வேண்டும். சிங்கள தேசியத்துக்கு பதில் சர்வதேசியத்தை உயர்த்துவதைத் தவிர, வேறு எந்தத் தேசியமும் இருக்க முடியாது. இங்கு தமிழ் தேசியம் பற்றிய விடையம், இங்கு இரண்டாம் பட்சமானவை. சிங்கள தேசியம் பற்றிய விடையமே முதன்மையானது. அதனூடாகவே இன முரண்பாட்டைப் புரிந்து கொள்ளவேண்டும்.
Last Updated on Thursday, 16 August 2012 13:48
அடுத்த கொலை
- 14 August 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- கனகமணி
"நான் வந்து உழைச்சு உங்களை காப்பாத்துவன் என்று சொன்னான், இப்ப எல்லாமே போச்சே"..... மரியதாஸ் நேவிஸின் அழுகுரலால் ராகம வைத்தியசாலையின் பிரேத அறை வாசலை ஏககாலத்தில் ஓராயிரம் கண்கள் நிலைகுத்தி நின்றன. அவர்கள் எல்லோருக்கும் ஆச்சரியம் என்னடா திடீரென இங்கு தமிழ் குரல் கேட்குதே என்று. அவ்வளவுதான். அடுத்தகணம் ஏதும் வாகன விபத்தில் ஆரும் தமிழர்கள் செத்திருக்கலாம் என்று ஒவ்வொருத்தரும் தங்களுக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டு போயிருக்கலாம். அவர்கள் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை, தங்களின் உறவுகளால் அடித்துக் கொல்லப்பட்ட டில்ருக்ஷனின் தந்தையின் அழுகுரல்தான் அது என்று.
Last Updated on Tuesday, 14 August 2012 18:53
மரணங்களின் நினைவு கூர்தல்- கருமையம்
- 13 August 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- விருந்தினர்
மரணங்களின் நினைவு கூர்தல்
Scarborough Village Recreation Centre
3600 Kingston Road
Scarborough ON
MIM IR9
August 19,2012
2:00 PM
கருமையம்
Last Updated on Monday, 13 August 2012 10:09
யுத்தத்தின் பின்பும், இனவாதமே அரசின் கொள்கை..!
- 13 August 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
யுத்தம் தான் இனப் பிரச்சினையின் தீர்வுக்குத்தடை என்றவர்கள், இன்று இனப் பிரச்சனையே இல்லை என்கின்றனர். இப்படி தீர்வை மறுப்பவர்கள் தான், தமிழ் மக்களை இலங்கையில் இருந்து இன நீக்கம் செய்கின்றனர். பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் எதைச் செய்கின்றதோ, அதைத்தான் சிங்கள அரச பேரினவாதம் இன்றும் செய்கின்றது. ஆக, யுத்த அழிவின் பின்னான இனவாதம், இலங்கையில் இரண்டு இனங்கள் சேர்ந்து வாழக்கூடாது என்பதான அரசின் இன்றைய கொள்கையாகிவிட்டது.
Last Updated on Monday, 13 August 2012 09:34
அவனும் என்னை மாதிரி ஒரு கெட்டிக்காரன் தான்
- 12 August 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- விஜயகுமாரன்
பிறந்த ஊர், சுற்றியுள்ள மனிதர்களை நேசிப்பதில் இருந்து பெருகும் மனிதநேயம், அன்பு, தோழமை என்பனவே யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்னும் சர்வதேசியம் சார்ந்த சிந்தனைகளாக விரிவடைகின்றன. அந்த மண்ணையும், மனிதர்களையும் விட்டு வெகுதூரம், நீண்டகாலம் பிரிந்து வந்தாலும் பன்னிரண்டு வருசத்திற்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூவைப் போல அல்லாமல் தினமும் மலரும் மல்லிகையைப் போல் மனதின் ஒவ்வொரு மூலையிலும் அந்த நாட்களின் இன்பங்களும், துன்பங்களும் வாசமாய் வீசுகின்றன.
Last Updated on Sunday, 12 August 2012 05:25
புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 69
- 11 August 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- நேசன்
யாழ்ப்பாணத்தில் புலிகளால் கைது செய்யப்பட டொமினிக்
"தீப்பொறி"ச் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவின்படி "போல்" என்பவருடன் யாழ்ப்பாணம் சென்றிருந்த டொமினிக் கொக்குவில் பொற்பதி வீதியிலமைந்திருந்த தீப்பொறி"க்குழு உறுப்பினரான காசி (ரகு) யின் வீட்டில் தங்கியிருந்து தீப்பொறி"க்குழு உறுப்பினர்களை சந்திக்கத் தொடங்கியிருந்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் ஏற்கனவே "தீப்பொறி"க்குழு உறுப்பினரின் வீடு என அடையாளப்படுத்தப்பட்டிருந்த காசியின் வீடு தமிழீழ விடுதலைப் புலிகளின் கண்காணிப்புக்கு உள்ளாகியிருந்ததுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றும் கூட காசியின் வீட்டுக்கருகில் அமைந்திருந்தது.
Last Updated on Saturday, 11 August 2012 15:57
மாருதி: கார்ப்பரேட் பயங்கரவாதத்துக்குத் தொழிலாளி வர்க்கத்தின் பதிலடி!
- 10 August 2012
- தமிழரங்கம்
- Section: புதிய ஜனநாயகம் -
- 2012
மாருதி எரிந்து கொண்டிருக்கிறது. மாருதி சுசுகியின் மானேசர் ஆலையின் மனித வளத்துறை (எச்.ஆர்.) பொதுமேலாளர் அவனிஷ் குமார் தேவின் சடலம் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. 90 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் கிடப்பதாகவும், அவர்களில் 35 பேர் பல்வேறு துறைகளைச் சேர்ந்த மேலாளர்கள் என்றும் கூறுகிறது நிர்வாகம். இரண்டு ஜப்பானிய உயர் அதிகாரிகளும் இவர்களில் அடக்கம். பங்குச் சந்தையில் மாருதி சுசுகியின் பங்குகள் மட்டுமின்றி, ஜப்பானில் சுசுகி நிறுவனத்தின் பங்குகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. ஆலை இயங்காததால் மாருதிக்கு ஏற்படும் இழப்பு நாளொன்றுக்கு 70 கோடி ரூபாயாம்.
Last Updated on Friday, 10 August 2012 10:41
வலியோடு வாழும் கலையரசி
- 09 August 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- சுஜீவன்
துடிப்பும் மிடுக்குமாய்
புழுதிபறக்க
சிறுமியாய் ஓடிவிளையாடித்திரிந்தவள்
அண்ணாவெனத்தோளில்
தாவியேறி கூடவந்தவள்
திரண்டெளும் அலைகளிலும்
கையைப்பிடித்தவாறு எதிர்த்து நின்றவள்
Last Updated on Thursday, 09 August 2012 16:47
கருத்து முதல் வாதம் என்றால் என்ன? - மார்க்சியத்தை புரிதல், கற்றல், நிறுவுதல் பகுதி - 03
- 08 August 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
"கருத்து என்பது மனித மனத்தில் பிரதிபலித்துச் சிந்தனையின் வடிவங்களாக உருவம் பெறும் பொருளாயத உலகமே தவிர வேறு எதுவுமில்லை" என்றார் மார்க்ஸ். இந்த வகையில் மார்க்சியம் முன்வைக்கும் பொருள் முதல்வாதம், ஒருமைப் பொருள் முதல்வாதமாகும்.
ஒருமைப் பொருள் முதல்வாதம் கருத்தியல் ரீதியிலான அம்சத்திற்கும் பொருளாய ரீதியிலான அம்சத்துக்கும் இடையிலான உட்தொடர்பை விஞ்ஞானபூர்வமாக அணுகுகின்றது. இது இயற்கை அல்லது வாழ்க்கை தொடர்பான ஓரே கோட்பாட்டில் இருந்து எழுகின்றது. இது பொருள் மற்றும் கருத்தியல் வடிவத்தைக் கொண்டு இருக்கின்றது. கருத்தியல் மற்றும் பொருளாயதம் என்ற இரு நிகழ்ச்சி போக்குகள், இயற்கை அல்லது சமுதாயத்தின் இருவேறு வடிவங்களே ஒழிய வேறல்ல என்பதே ஒருமைப் பொருள் முதல்வாதத்தின் உள்ளடக்கமாகும். இங்கு கருத்தியல் மற்றும் பொருளாயதம் இரண்டில் ஒன்று இன்றி மற்றொன்றை நினைத்துப் பார்க்க முடியாது. இரண்டும் சேர்ந்தே நிலவுகின்றது, சேர்ந்தே வளருகின்றது. ஒன்றை ஒன்று பிரிக்க முடியாத இயற்கையாகவும், அதே நேரம் கருத்தியல் மற்றும் பொருளாதாய என்ற இரு வேறுபட்ட வடிவங்களில் இது தன்னை வெளிப்படுகின்றது. சமூக வாழ்க்கையில் கூட பிரிக்க முடியாத, அதே நேரம் இரண்டு வேறுபட்ட வடிவங்களில் வெளிப்படுகின்றது. அதாவது பிரிக்க முடியாத நாணயத்தின், இரு வேறுபட்ட பக்கங்கள் இருப்பது போன்றது.
Last Updated on Wednesday, 08 August 2012 16:55
More Articles...
- கிளிநொச்சி விவசாயிகளின் 3000 ஏக்கர் நெற்பயிர்களை அழித்த இராணுவம்
- மனித சிந்தனைகள் எங்கிருந்து எப்படித் தோன்றுகின்றன? - மார்க்சியத்தை புரிதல்;, கற்றல், நிறுவுதல் பகுதி - 02
- புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 68
- மார்க்சியம் என்பது என்ன? - மார்க்சியத்தை புரிதல், கற்றல், நிறுவுதல் பகுதி - 01
- ஆபத்தான அணு உலை வேண்டாம்- கவிதை -தோழர் துரை சண்முகம்
- இலங்கை அரசுக்கு பின் இயங்கும் இலக்கிய மற்றும் இலக்கிய – அரசியலை இனம் காணல் - பகுதி 06
- மரணங்களின் நினைவு கூர்தல்
- ஆபத்தான அணு உலை வேண்டாம்-கலை நிகழ்ச்சி -பு.மா.இ.மு
- பாசிச ஜெயா அரசு போலீசின் ரவுடி ராஜ்ஜியத்தின் சாட்சிப் பதிவுகள்- பு.மா.இ.மு
- முஸ்லிம் மக்களே! இன ஐக்கியத்தை கோருங்கள்!!, இனவாதத்தை நிராகரியுங்கள்!!