2009 மே மாதத்தில் அரசாங்க ஆயுதப் படைகளினால் எல்.டீ.டீ.ஈ.யின் தலைமை, அதன் உறுப்பினர்கள் உட்பட பெருவாரியான சாதாரண தமிழ் மக்களின் மரண ஓலத்தோடும், படுகொலையோடும் பல தசாப்தங்களாக நீடித்த வந்த யுத்தம் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. கடந்தகால கட்டத்தில் சிங்கள மற்றும் தமிழ் இனவாதத்தையும் ஒவ்வொரு இன மக்கள் மத்தியிலும் போர்க்குணத்தையும் புகுத்தி அதன் தீவிர யுத்தச் செயற்பாட்டின் மூலம் இந்த வெற்றி வெளியிடப்பட்டது. யுத்தத்தின் முடிவு வீரதீரமிக்க சிங்கள இனவாதத்தின் வெற்றியாக சிங்கள இனவாதிகளால் கொண்டாடப்பட்டது. ராஜபக்ஷ அரசாங்கம் அந்த யுத்த வெற்றிக்கான உரிமையை தன் கையில் எடுத்து அதனை தனது அரசியல் தேவைகளுக்கு ஏற்றவாறு போஷனை செய்து, தனது இருப்பிற்கான முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது.
அனைத்து தேசிய பிரஜைகளுக்கும் சம உரிமையை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம்
- 27 September 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- சம உரிமை இயக்கம்
Last Updated on Thursday, 27 September 2012 19:25
சமவுரிமை இயக்கத்தின் ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் வாழ்த்துச் செய்தி
- 27 September 2012
- தமிழரங்கம்
- Section: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -
- புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
எமது தோழமை அமைப்பான முன்னிலை சோசலிசக் கட்சி மக்கள் போராட்டத்தை முன்னிறுத்தி, உழைக்கும் மக்களின் விடுதலைக்கான தயாரிப்பை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையில் இனங்களுக்கு இடையிலான உறவை வளரக்க, பிளவுகளை நீக்கும் முகமாக, உழைக்கும் மக்களை இனப் பாகுபாட்டிற்கு எதிராக போராடும் முகமாக சமஉரிமை இயக்கத்தை ஆரம்பிக்கின்றனர்.
இனவாதிகள் எவரும் இனப்பிளவை முன்வைத்து, இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண முடியவில்லை. அதுபோல் இன ஐக்கியத்தை முன்வைத்து தீர்வு காணவும் முனையவில்லை. உண்மையில் இன ஐக்கியம் என்ற அடிப்படை அரசியலை முன்வைத்து, மக்களை எவரும் அணுகவில்லை.
இன ஐக்கியத்தை முன்வைத்து தீர்வு காண்பதென்பது சாத்தியமற்றது என்று கூறுகின்ற இனவாதமும், இனவாத சிந்தனையும் தான் இன்று சமூகத்தில் புரையோடி நிற்கின்றது. இனவாதிக்கு எதிராக மக்களை ஐக்கியப்படுத்தும், பரீட்சிக்கப்படாத நடைமுறை இன்னமும் எம்முன் இருக்கின்றது.
Last Updated on Thursday, 27 September 2012 11:36
நீ ஒரு இனவாதியா! சொல்லு? - இன ஜக்கியத்துக்கு தடைகள் எது? - பகுதி 01
- 26 September 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
நீ இனவாதியாக இருக்கும் வரை, இன ஐக்கியத்தை தடுக்கின்றாய். நீ இனவாதியாக இருக்கும் வரை, நீ மக்களை நேசிப்பவனாக, மக்கள் முன் உண்மையானவனாக நேர்மையானவனாக இருக்க முடியாது. உனது வஞ்சகமற்ற அர்ப்பணிப்புகளும் தியாகங்களும், உன்னை இனவாதியாக்கியவனின் குறுகிய நலனுக்குதான் பயன்படுகின்றது.
Last Updated on Wednesday, 26 September 2012 18:35
யூகோஸ்லாவிய பொருளாதாரத்தில் முதலாளித்துவ மீட்சி -ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 4
- 26 September 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
யூகோஸ்லாவியாவில் உள்நாட்டு பொருளாதார உற்பத்தியில், முதலாளித்துவ மீட்சி பொருளாதார ரீதியாக எப்படி நிறைவேற்றப்பட்டது எனப்பார்ப்போம். 1951 இல் யூகோஸ்லாவியா கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரை, வெறும் கம்யூனிச கழகமாக மாற்றி அனைத்து மக்கள் கட்சியாக சிதைக்கப்பட்டது. அதற்குமுன்பே கட்சியின் அரைவாசி உறுப்பினர்களை கட்சியில் இருந்து வெளியேற்றியதுடன், சிறையிலும் தள்ளியது. பாட்டாளி வர்க்கத்தின் வர்க்ககட்சி என்பது மறுக்கப்பட்டது. “பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சர்வாதிகாரம் என்ற கருவி, அதாவது சோசலிச அரசமைப்பு மேலும் மேலும் அவசியமற்றதாகிவிட்டது” என்று அறிவித்ததுடன் புதிய அரசியல் சட்டத்தை அழுல்படுத்தினர். மாறாக அனைத்து மக்களின் கட்சி என்ற பெயரில், ஜனநாயகம் என்ற சுரண்டும் உள்ளடகத்தை கம்யூனிச கழகமாக உட்புகுத்தியதன் மூலம், முதலாளித்துவ கட்சிக்கான வர்க்க முகத்தை மறைத்தனர்.
Last Updated on Thursday, 04 October 2012 07:21
யூகோஸ்லாவியா பற்றி ஸ்டாலினின் மார்க்சிய நிலைப்பாடும்; டிராட்ஸ்க்கிய மற்றும் குருச்சேவின் நிலைப்பாடும் - - ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 3
- 18 September 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
யூகோஸ்லாவியா முதலாளித்துவத்தை நோக்கி தன்னை வளைத்தபோது, சர்வதேச கம்யூனிச இயக்கமே அதற்கு எதிராக போராடியது. குறிப்பாக ஸ்டாலின் இந்த முதலாளித்துவ பாதைக்கு எதிராக கடுமையான அரசியல் போராட்டத்தை நடத்தினார். ஆனால் டிராட்ஸ்கிகள் யூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்பை ஆதாரித்ததுடன், அதையே மார்க்சியமாகவே பிரகடனம் செய்தனர். இதன் போது டிராட்ஸ்கிகள் ஸ்டாலின் அவதூற்றிலும், ஸ்டாலின் எதிர்ப்பிலும் தம்மைத் தாம் புடம் போட்டவராக இருந்தாலும், தமக்கிடையில் ஒத்த அரசியல் நிலைப்பாடுகள் இருந்ததால், உலகளவில் இந்த பிரச்சனை மீது மார்க்சியத்தை எதிர்த்து டிட்டோ மற்றும் குருச்சேவுடன் ஜக்கியப்பட்டு நின்றனர்.
Last Updated on Thursday, 04 October 2012 07:17
மாணவர் தலைவன் சஞ்ஜீவ பண்டாரவை உடன் விடுதலை செய்
- 23 September 2012
- பி.இரயாகரன்
- Section: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -
- புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
மாணவர்கள் தம் உரிமைக்காக போராடுவது தவறா?
பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டத்தை பலமுகம் கொண்டு தொடர்ந்து ஒடுக்கும் அரசு, தனது ஜனநாயகமும் தீர்வும் பன்னாட்டு மூலதனத்துக்கே என்பதை உலகறியப் பறைசாற்றி வருகின்றது.
Last Updated on Sunday, 23 September 2012 21:11
கடலோடி வாழும் கைகள் இணைந்தால் இடிமுழங்கும்!
- 21 September 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- கங்கா
வாழவிடுவென
மானுடம் போரிடுகிறது
உழைக்கும் வர்க்கமே ஓரணிசேரென
கூடங்குளத்தில்
அறைகூவல் கேட்கிறது!
நாளை உனக்கும் எனக்கும்
ஓடாகிப்போன நமக்காகவேதான்
இடிந்தகரையில் எதிர்த்து நிற்கிறார்கள்
Last Updated on Friday, 21 September 2012 06:31
புளொட்டிலிருந்து தீப்பொறி நேசனின் அனுபவத்தொடர் பற்றிய சில கேள்விகளும் விமர்சனங்களும்
- 16 September 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- விருந்தினர்
"புளொட்டிலிருந்து தீப்பொறி வரையிலான எனது அனுபவப் பகிர்வுகள்" எனும் நேசனால் எழுதி முடிக்கப்பட்ட தொடரை முழுமையாக வாசித்திருந்தேன். நேசன் போன்றவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் குறிப்பாக புளொட் மற்றும் தீப்பொறியில் பணியாற்றியபோது இழைத்த தவறுகளை வெளிக்கொண்டுவரும் இத்தகைய முயற்சி இக்காலச் சூழலில் மிகவும் வரவேற்கப்பட வேண்டியதொன்றாகும். எனது பதிவின் நோக்கம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கங்களான "புளொட்", "தீப்பொறி" உட்பட அனைத்து இயக்கங்களையும் அவற்றின் தவறான போக்குகளையும் விமர்சிப்பதே தவிர எந்தத் தனி நபரையும் தாக்குவதோ அல்லது புண்படுத்துவதோ அல்ல. எமது போராட்ட வரலாற்றில் மாபெரும் தவறுகளைச் செய்தவர்களையும் சம்பவ ரீதியான விடயங்களையும் சுட்டிக்காட்டுகின்ற போது தீப்பொறியிலும் எமது பாத்திரங்கள் விமர்சிக்கப்படுவது தவிர்க்க முடியாதவை என்பதை நண்பர்கள் அனைவரும் புரிந்து கொள்வார்கள் என நினைக்கின்றேன்.
Last Updated on Sunday, 16 September 2012 17:20
மொழிக்கு கவிதையா? கவிதைக்கு மொழியா? : நனவெரிந்த சாம்பலில் நூல் மீதான விமர்சனம்
- 15 September 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
நம் தோழரின் கவிதை நூலுக்கு விமர்சனம். முன்கூட்டியே அவருடன் உரையாடி வந்த விடையம் தான், நூல் மீதான தர்க்கரீதியான விமர்சனமாகின்றது. செம்மையான மொழியைக்கொண்டு, "நனவெரிந்த சாம்பலில்" என்ற கவிதை நூல். மொழியை முதன்மைப்படுத்தியதால், கவிதையின் உள்ளடக்கம் முதன்மை பெறத் தவறிவிட்டது. சொந்த மண்ணின் நினைவுகள் முதல் புலம்பெயர் வாழ்வு வரையான பல்வேறு பரிணாமங்கள் முதல், வாழ்வின் முரண்கள் மீதான கவிதைகள் தான் இவை. மனித நம்பிக்கைகள் முதற் கொண்டு மனித வாழ்வின் சீரழிவு வரையான பவ்வேறு விடையங்கள் கவிதைப் பொருளாக உள்ளது. மதத்தைச் சாடவும், ஆடம்பரமான வாழ்வை சாடவும் தயங்காத கவிதைகள், மனிதனை சுட்டுக் கொன்றுவிட்டு நியாயம் பேசும் தர்க்கம் வரை இக் கவிதை கேள்வி எழுப்புகின்றது. ஆனால் இவை அனைத்தையும் மொழியால் பேசுவதற்கு பதில், மொழிக்குள் அடங்கிப்போகுமாறு கவிதையின் உள்ளடகத்தை அடக்கிவிடுகின்றார்.
Last Updated on Saturday, 15 September 2012 21:33
"ஜனநாயக மறுப்பு" பற்றி கனடா தேடகமும், தமிழ் தேசியவாதிகளும்
- 12 September 2012
- தமிழரங்கம்
- Section: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -
- புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
ஜனநாயகத்தை மறுத்தவர்கள், "ஜனநாயக மறுப்பு" என்ற பெயரில் தொடர்ந்தும் ஜனநாயகத்தை மறுக்கின்றனர்.
ஜனநாயகம் மறுக்கப்பட்டவருக்கு எதிராக, மீண்டும் தேடகம் ஜனநாயக மறுப்புக் குற்றச்சாட்டை வைத்துள்ளது.
நேசனுக்கு கருத்து சொல்லும் உரிமையை மறுத்தவர்கள் அதை தவறு என்று சொல்லவில்லை. மாறாக தங்கள் ஆட்கள் "தலைவரின் கோரிக்கைகளை மதிக்காமல் நடந்து கொண்டனர். அதனால் கூட்ட ஒழுங்கை மீறியிருந்ததாக" கூறி, அதைத்தான் தவறு என விளக்கம் கொடுத்துள்ளனர். இப்படி தம் ஜனநாயக மீறலை நியாயப்படுத்திக் கொள்ளுகின்றனர்.
Last Updated on Thursday, 13 September 2012 06:30
ஸ்டாலின் ஏன் மறுக்கப்பட்டார்? ஏன் தூற்றப்பட்டார்? இன்னும் ஏன் தூற்றப்படுகின்றார்? - ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 2
- 11 September 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
ரஷ்ய ஆய்வுமையம் 2003ம் ஆண்டு லெனின் பற்றி ஆய்வு ஒன்றைச் செய்தது. அதன்போது, 65 சதவீதமான மக்கள் லெனின் அடிப்படை நோக்கத்தை அங்கிகரித்ததுடன், அவை சரியானவை என்று எற்றுக்கொண்டதை 17.4.2003 பாரிஸ் லிபரேசன் பத்திரிகை தன் செய்தியாக வெளியிட்டு இருந்தது. 5.3.2003 லிபரேசன் பத்திரிகை ருசியாவில் 42 சதவீதமானோர் ஸ்டாலினை ஏற்று ஆதாரிக்கின்றனர் என்ற செய்தியை வெளியிட்டது. மீதமுள்ளவர்களில் 36 சதவீதம் பேர் ஸ்டாலின் நன்மையே கூடுதலாக செய்தார் என்பதை அங்கிகரித்து ஆதாரவாக இருப்பதை வெளியிட்டபடியே தான், அவரைத் தூற்றியது. அதே பத்திரிகை 1937-1938 இல் 40 ஆயிரம் பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக புதிய புள்ளிவிபரத்தையும் வெளியிட்டது.
Last Updated on Thursday, 04 October 2012 07:23
சண்முகதாசன் என்ற துரோகி கொல்லப்பட்டார்
- 10 September 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- விஜயகுமாரன்
புலி பாய்ந்த காலத்தில் தோழர் சண்முகதாசன் இருந்திருந்தால் இப்படி ஒரு செய்தி ஈழமுரசிலோ அல்லது உறுமலிலோ, இருமலிலோ வந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு. ஏனென்றால் அவர் தனிமனித பயங்கரவாத.சாகச விளையாட்டுக்களை எதித்தவர். மக்களை அணி திரட்டாமல் போராட்டங்கள் இல்லை என்பதில் உறுதியாக நின்றவர்.(இதன் காரணமாகவே ரோகண விஜயவீரா போன்றவர்கள் அவருடன் முரண்பட்டு கட்சியை விட்டு விலகினர்). இப்படிப்பட்ட மனிதர் மக்களை பணயக்கைதிகளாக வைத்திருந்தவர்களை, தம்மை தவிர்ந்த மற்றவரை எல்லாம் கொன்று குவித்தவர்களை எப்படி எதிர்க்காமல் இருந்திருப்பார். எதிர்ப்பவன், கேள்வி கேட்பவன் துரோகி. துரோகிகளிற்கு தலைவரின் தண்டனை மரணம். இக்கொலைகள் கட்டம் கட்டி சிறப்புசெய்திகளாக,அரசியல் ஆய்வுகளாக ஈழமுரசில் வெளிவரும். துரோகி ஒழிந்தான், இன்னும் கொஞ்சப்பேர் தான் அவங்களையும் போட்டுத் தள்ளினால் தமிழீழத்திற்கு நாங்கள் எல்லைக்கதியால் போட்டு விடுவோம் என்று அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூட்டிக் கழித்துப் பார்த்து சாத்திரம் சொல்லுவார்.
Last Updated on Monday, 10 September 2012 06:09
கொடிகட்டிப் பறந்த பிரதேசவாதமும், பேரினவாதத்தை எதிர்த்த குறுந்தேசியவாதமும், தேர்தல் முடிவுகளும் பற்றி
- 09 September 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
யாழ்ப்பாணத்தானுக்கு எதிரான பிரதேசவாதமும், தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான பேரினவாதத்துடன் கூடிக் கூத்தாடிய "ஜனநாயகத்" தேர்தல். இந்த அரசியல் அடித்தளத்தை கொண்டு, அரச இயந்திரத்தின் முழுப் பலத்துடன், பாரிய நிதியாதாரங்களுடன், வன்முறையைத் தூண்டி, மக்களை மிரட்டியதன் மூலம், ஒரு முறைகேடான சட்டவிரோத தேர்தலை நடத்தினர். மறுதளத்தில் தமிழ், முஸ்லிம் என்ற குறுகிய குறுந்தேசிய வாதத்தை முன்னிறுத்தி, இந்தத் தேர்தலை எதிர்த்தரப்பாக எதிர்கொண்டனர்.
Last Updated on Sunday, 09 September 2012 13:07
தூற்றுவதாலோ, திரிப்பதாலோ, திருத்துவதாலோ வர்க்கப் போராட்டங்கள் நின்றுவிடுவதில்லை - ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 1
- 07 September 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
வரலாற்றின் உண்மைகளைக் கண்டுகொள்ளமறுப்பது, அதைத்திரிப்பது, மார்க்சியத்தை மறுப்பதில் போய்முடிகின்றது. மனிதகுலம்அடிமைப்படுத்தப்பட்டு, தன் விடுதலைக்கான குரல்களையே இழந்துநிற்கின்றது. இதைத்தான் இன்று ஜனநாயகம் என்கின்றனர். மனிதனை அடிமைப்படுத்துவதையும், அவர்கள் அடிமையாக இருத்தலும்தான், மனிதன் ஜனநாயக உரிமையாக காட்டப்படுக்கிறது.
Last Updated on Sunday, 09 September 2012 12:21
இரண்டு ஆணுறைகளும், ஒரு கறுப்பு டோக்கனும்
- 07 September 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- விஜயகுமாரன்
பெண்களை விளங்கிக் கொள்ள முடியாது என்பார்கள். எனக்கு சின்ன விடயங்களையே விளங்கிக் கொள்ள முடிவதில்லை, இந்த லட்சணத்தில் பெண்களை எப்படி புரிந்து கொள்ள முடியும். பள்ளிக்கூடத்தில் வாத்திமார்கள் உனக்கு படிப்பை தவிர மிச்சம் எல்லாம் ஏறும் என்று அடிக்கடி அன்பாக ஆசிர்வாதங்களை வாரி வழங்குவார்கள்.
Last Updated on Friday, 07 September 2012 10:53
THE RED MARKET: மனித உடல் உறுப்புகளின் சந்தை!
- 15 August 2012
- தமிழரங்கம்
- Section: புதிய கலாச்சாரம் -
- 2012
நல்ல உடல் வளத்துடன் இருக்கும் நான் ஒரு கோடி ரூபாய்க்கு விலை போவேன் என்கிறார் “The Red Market” புத்தகத்தின் ஆசிரியர் ஸ்கார்ட் கார்னி. அவர் அமெரிக்கக் குடிமகனாக இருப்பதால் தன் உடல் பாகங்களுக்கான உண்மையான சந்தை விலையைச் சொல்கிறார் போலும். ஒருவேளை அவரே இந்தியா மாதிரியான ஏழை நாடுகளில் வாழ்ந்தால் இதில் 100ல் ஒரு பங்கு விலைக்குக் கூட அவரது உடல் பாகங்கள் விற்காது என்ற உண்மையை அவர் எழுதியுள்ள புத்தகமான “The Red Market” ஐ படித்தால் எவராலும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
Last Updated on Wednesday, 05 September 2012 11:53
சிங்கள மக்கள் மேலான, தமிழக இனவாதிகளின் இன வெறியாட்டங்கள்
- 04 September 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
தமிழக இனவாதிகளின் இனவெறியாட்டத்தைத்தான், சிங்கள பேரினவாதமும் காலகாலமாக செய்து வருகின்றது. சுரண்டும் வர்க்கம் சார்ந்த இந்த இனவெறிக் கண்ணோட்டம், இங்கு அரசியல்ரீதியாக வேறுபடுவதில்லை. இலங்கையில் நடந்த இனவழிப்பு யுத்தத்துக்கு காரணம் சிங்கள மக்களா!? ஆளும் சுரண்டும் வர்க்கமா? கூறுங்கள்.
சிங்கள மக்களைக் குற்றவாளியாக்குகின்ற அரசியல், தமிழகத்தில் நாசிய இனவெறி அரசியலாக வெளிப்படுகின்றது. தமிழகத்துக்கு வருகை தந்த இலங்கை அரச ஆளும் வர்க்கப் பிரதிநிதிகளுக்கும் மற்றும் இராணுவத்துக்கும் எதிரான போராட்டங்கள், இன்று அப்பாவி சிங்கள மக்களுக்கும் எதிரானதாக மாறியிருக்கின்றது. பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் மீதான, தமிழினவெறியாக மாறி இருக்கின்றது. இது மக்களை இனம் சார்ந்த எதிரியாகக் காட்டுகின்றது. இது நாசிய பாசிச கொள்கையும் நடைமுறையுமாகும்.
Last Updated on Tuesday, 04 September 2012 14:46
அடிக்கின்ற சுத்தியல்
- 03 September 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- சிறி
உருண்டோடின கணங்கள்
புறத்திலிருந்து
அகத்துக்குள்
குளிர் அருவியாய்
பாய்ந்தோடின சொற்கள்
Last Updated on Monday, 03 September 2012 06:20
பெரும்பான்மையின் வழிபாட்டுரிமையை முன்னிறுத்தி, சிறுபான்மையின் வழிபாட்டுரிமை மறுப்பு
- 02 September 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
இலங்கையை மத மோதலுக்குள் கொண்டுவருவதன் மூலம், மதப் பெரும்பான்மை சார்ந்து மக்களை பிளந்துவிட முனைகின்றனர் பாசிட்டுகள். இன்று இன, மதப் பெரும்பான்மை சார்ந்து, மூலதனத்தின் ஆட்சியை இலங்கையில் தக்கவைக்கவும் விரிவுபடுத்தவும் முனைகின்றனர். இந்த வகையில் மூலதனத்தின் ஆட்சி வடிவங்கள், பாசிசம் மற்றும் ஜனநாயகம் என்ற இருவேறு ஆட்சி வடிவங்களைக் கொண்டது. முரணற்ற ஜனநாயகத்தை பற்றிய அதன் இரு வேறு அணுகுமுறை தான், இதை வேறுபடுத்துகின்றது. சமூகத்தை வர்க்கரீதியாக பிளந்து ஆளுவது முதலாளித்துவ ஜனநாயகம். பாசிசம் இதை மட்டும் கொண்டு ஆளுவதில்லை, மாறாக சமூகத்தை இனம் மதம், நிறம் .. என்ற வேறுபாட்டைக் கொண்டு, அவர்களுக்கு இடையில் மோதலை தூண்டி ஆளுகின்றது.
Last Updated on Sunday, 02 September 2012 19:20
சமூகத்துடன் இணைக்காத கருத்துக்கள், செயல்பாடுகள் பற்றி…
- 31 August 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
அண்மையில் "விடியல் சிவா" மரணம் பற்றி எமது அஞ்சலியில், நாம் அரசியல்ரீதியான தவறொன்றை இழைத்திருந்தோம். "சமூக விடுதலைக்கு உரமூட்டிய விடியல் சிவா மரணித்து விட்டார்." என்ற எமது அஞ்சலிக் குறிப்பு, மக்களை அணிதிரட்டும் நடைமுறையை நிராகரித்த ஒருவருக்கு பொருத்தமற்றது. சமூகத்துடன், அதன் வர்க்கப் போராட்ட நடைமுறையுடன் இணைத்துக் கொள்ளாத கருத்துக்கள் தொடங்கி, சமூகத்துடன் இணையாத தனிநபர் செயல்பாடுகள் வரை, புரட்சிகரமான சமூக நடைமுறையை அவை கொண்டிருப்பதில்லை.
மார்க்சிய நூல்களை அச்சிடுவதால் மட்டும், ஒருவர் சமூக விடுதலைப் போராளியாகி விட முடியாது. ஒருவர் மார்க்சிய கருத்தைக் கொண்டு இருப்பதால், தனக்கென்று கொள்கைகளைக் கொண்டு இருப்பதால், அவர் மார்க்சியவாதியாகி விடுவதில்லை. இப்படி கருத்தை கொண்டு இருப்பதால், கருத்தை அச்சிடுவதால், ஒருவர் புரட்சியாளன் ஆகிவிடுவதில்லை.
Last Updated on Friday, 31 August 2012 10:05
சிறுபான்மை மதங்களுக்கு எதிராக பௌத்த அடிப்படைவாதத்துடன் கைகோர்க்கும் பேரினவாதம்
- 30 October 2011
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2011
சிறுபான்மை இனங்களை ஒடுக்கியதன் மூலம் தனிமைப்பட்டு வரும் பேரினவாதம், பௌத்த அடிப்படைவாதத்துடன் கூட்டுச்சேர்ந்து சிறுபான்மை மதங்களை ஒடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பெரும்பான்மை மதம், இனம் சார்ந்து தன்னை தக்கவைக்க முனைகின்றது. இலங்கை அரசு வேகமாகவே சர்வதேச அளவில் தனிமைப்பட்டு வரும் இன்றைய நிலையில், இதை எதிர்கொள்ள மத இன அடிப்படைவாதத்தை முன்னிறுத்தி சிறுபான்மையினரை மேலும் கூர்மையாக ஒடுக்கத் தொடங்கியுள்ளது. எல்லா மக்கள்விரோத சர்வாதிகார அரசுகள் போல் தான், இன்று மகிந்த குடும்ப சர்வாதிகாரமும் இதைத் தேர்ந்தெடுத்திருக்கின்றது. இனம் சார்ந்த பிளவுகளும் மோதல்களும் நாட்டின் பிரதான முரண்பாடாக இருக்கின்ற நிலையில், மேலதிகமாக மதம் சார்ந்த மோதல்களையும் பிளவுகளையும் திட்டமிட்டு விதைத்து வருகின்றது.
இந்த வகையில் இலங்கை அரச இனரீதியாக மட்டுமல்ல, மதரீதியாகவும் தன்னை குறுக்கிச் செல்லுகின்றது. இந்த வகையில் அண்மையில் பேரினவாத அரசின் ஆதரவுடன் குறிப்பிடத்தக்க இரு சம்பவங்கள் அரங்கேறியது.
1.முனீஸ்வரம் கோயிலில் மிருகபலி சடங்கு நடைபெற்ற நாள், அமைச்சர் ஒருவர் பௌத்தத்தை முன்னிறுத்தியபடி, மற்றயை மதங்களை நிந்தனை செய்தபடி காடைத்தனத்தைப் புரிந்துள்ளார்.
2. அனுராதபுரத்தில் மிகப் பழைமை வாய்ந்த தர்கா ஒன்றை, அரசின் துணையுடன் பௌத்த அடிப்படைவாதிகள் தகர்த்துள்ளனர்.
Last Updated on Saturday, 01 September 2012 07:06
மிருகபலி மூட நம்பிக்கையாம், சரி உனது வழிபாடு என்ன? அறிவு பூர்வமானதா!? சரி எப்படி!?
- 27 August 2010
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2010
மிருகபலி "மூடநம்பிக்கை" என்று சொன்னது ஆறுமுகநாவலர் வழிவந்த, யாழ் பார்ப்பனிய வெள்ளாள இந்துக்கள். மாட்டு இறைச்சியை தின்னாத, மூடநம்பிக்கையை கொண்ட இந்துக் கூட்டம். இன்று யாழ் மக்களில் பெரும்பான்மையானவர்கள், மாட்டு இறைச்சியை உண்ணுகின்றனர். இதற்கு வெளியில் சாதியம் பேசி, மத கலாச்சாரம் பேசிய ஆறுமுகநாவலரின் வாரிசுகள் தான், மிருக வழிபாட்டு உரிமையை தடுக்க முனைகின்றது. சிலாபம் முன்னேஸ்வர கோயியில் நடந்த மிருக பலியிலான வழிபாட்டு உரிமையை தடுக்க முனைந்த கூட்டம், இதை மூட நம்பிக்கை என்றனர். மிருக வதை சட்டத்தையும் கையில் எடுக்க முனைந்தனர்.
Last Updated on Saturday, 01 September 2012 07:03
கொக்கிளாயில் குடியேறவரும் உறவே…
- 30 October 2011
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- கங்கா
உங்களைப் போல் ஓர் ஏழை
உழைத்து வாழ்ந்த மண் இது
சின்னஞ்சிறுசுகள் பாதத்து மிதிப்பில்
சொந்தமண் சிரித்து எத்தனை தசாப்தங்கள்
Last Updated on Saturday, 01 September 2012 07:02
More Articles...
- கருத்துக்கள் அனைத்தும் நடைமுறைக்கே ஒழிய கருத்துக்காகவல்ல
- சமூக அசைவியக்கம் எதுகொண்டு நிகழ்கின்றது
- புலியை மட்டும் மையப்படுத்திய அனைத்து அரசியலும் தவறானது
- இன ஜக்கியம் என்பது இன நல்லுறவா! அல்லது வர்க்கப் போராட்டமா!! - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 14
- நினைவு கூருகின்ற இந்த மூன்றுபேர்கள் ஒரு முன்னுதாரணமே
- வர்க்கப் போராட்டம் சாத்தியமில்லையாம்!, இன ஐக்கியமும் சாத்தியமில்லையாம்!!
- புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 71
- புலி வீழ்ந்தாலும் புதுயுகத்தை திறந்துவிட்டிருக்கிறது
- சினிமா விமரிசனம்: ‘காதலில் சொதப்புவது எப்படி?‘
- ஜநாவின் அவமானப்பட்டியல்