13வது திருத்தச்சட்டம் இனப்பிரச்சனைக்குரிய தீர்வல்ல. அதேநேரம் தீர்வல்லாத இந்த சட்டத்தை நீக்குவதையும் நாம் எதிர்க்கின்றோம். இதை நீக்குவதன் மூலம் இனங்களுக்கு இடையிலான இனநல்லுறவை சிதைப்பதுடன், இனவொடுக்குமுறையை தீவிரமாக்கவே அரசு முனைகின்றது. இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லுறவு ஏற்படுவதை தடுப்பதன் மூலம், மக்களை இன முரண்பாட்டுக்குள் தள்ளி அவர்கள் முரண்பட்டுக்கொண்டு வாழ்வதையே அரசு விரும்புகின்றது. அதையே அரசு மக்களுக்கு தொடர்ந்தும் திணிக்க முனைகின்றது. யுத்தத்தின் பின் தொடர்ந்து மக்களை பிரித்தாள்வதை அடிப்படையாகக் கொண்டு, தீர்வு காண மறுக்கின்றது. இந்த அடிப்படையில் இனங்கள் கொண்டிருந்த உரிமைகளையும் பறிக்கின்றது.
13வது திருத்தச் சட்டத்தை நீக்க முனைவதன் மூலம், இனவக்கியத்தை மேலும் சிதைக்க முனைகின்றனர்
- 25 October 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
Last Updated on Thursday, 25 October 2012 14:07
முன்னிலை சோசலிசக் கட்சியும் புதிய திசைகளும்
- 23 October 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- விருந்தினர்
சம உரிமை இயக்கம் என்கின்ற ஒரு முன்னணி அமைப்பினூடாக, இலங்கையில்இனஒடுக்குமுறைக்கும், இனவாதத்திற்கும் எதிராக போராடுவது, இனங்களுக்கிடையில் ஓர் ஐக்கியத்தை உருவாக்குவதுடன், சமத்துவமின்மையை உருவாக்கிய சமூக அமைப்பு முறையை தூக்கி எறிந்து புதியசமூக அமைப்புமுறையை உருவாக்குவதன் மூலம் ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் உரிமைகளைஉண்மையில் வென்றெடுப்பது என்னும் செயல் திட்டத்தினை முன்னிலை சோசலிச கட்சி முன்வைத்துள்ளது.
Last Updated on Tuesday, 23 October 2012 05:46
தேவனின் திருச்சபை! மாஃபியாக்களின் கருப்பை!!
- 22 October 2012
- தமிழரங்கம்
- Section: புதிய கலாச்சாரம் -
- 2012
"மூடப்பட்ட அந்தக் கழிவறையிலிருந்து ஒரு குழந்தையின் அழுகுரலும், அதனுடன் ஒரு பெண்ணின் விசும்பலும் கேட்டது. நாங்கள் அந்த அறையின் கதவை உடைத்துத் திறந்த போது கண்ட காட்சி இதயத்தை நொறுக்குவதாய் இருந்தது. ஒரு கன்னியாஸ்திரி தனக்கு அப்போது தான் பிறந்திருந்த பச்சைக் குழந்தையை கழிவறையின் பீங்கான் கோப்பைக்குள்ளே திணித்துக் கொண்டிருந்தாள். குழந்தையின் கால்களிரண்டும் கோப்பையின் வெளியே துடித்துக் கொண்டிருந்தன.
Last Updated on Monday, 22 October 2012 15:03
மக்கள் போராட்டத்தை நடத்த நாம் தயாராகிவிட்டோமா?
- 21 October 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
எந்த வகையில்? எம்மையும், எம் நடத்தையையும் மாற்றினோமா? எம் எழுத்தை, எம் எழுத்துமுறையை மாற்றினோமா? எந்த வகையில், நாம் எம்மில் மாறி இருக்கின்றோம். மக்கள் போராட்ட அனுபவம் தான் உண்டா? இல்லை. எம்மில் இருந்து நாங்கள் மாற்றத்தை தொடங்காமல், மக்களை அணிதிரட்ட முடியாது. இதைப்பற்றி பேசுவது, எழுதுவது முதல் தங்களை இதற்குள் அடையாளம் காட்டுவது வரையான வரையறைக்குள், இதை முடக்கி பார்க்கின்ற, காட்டுகின்ற எல்லைக்குள் இது பேசப்படும் பொருளாகவே மக்கள் போராட்டம் இருக்கின்றது.
Last Updated on Sunday, 21 October 2012 13:30
சிங்கள மக்களுடன் சேர்ந்து போராட நாங்கள் தயாராக இருக்கின்றோமா?
- 20 October 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
சிங்கள மக்களுடன் இணைந்து போராடுவதையும், அவர்கள் தமிழ் மக்களுக்காக போராட முற்படுவதையும், பலரும் தங்கள் தங்கள் நிலை அவர்களால் அங்கீகரிக்கப்படுதல் என்ற குறுகிய பார்வையூடாக அணுகுகின்றனர். நாங்கள் சரியாக தான் இருந்தோம், இருக்கின்றோம், அவர்கள் தான் தவறாக இருந்ததாக கருதிக்கொண்டு, காட்டிக்கொண்டு அணுக முற்படுகின்றனர்.
Last Updated on Saturday, 20 October 2012 08:49
இன்று வரை தொடரும் ஸ்டாலின் அவதூறின் அரசியல் எது? - இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 6
- 18 October 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
டிராட்ஸ்கிகள் தமது சொந்த அரசியலையே, ஸ்டாலினின் அவதூறுகளில் இருந்துதான் கட்டியமைக்கின்றனர். அவர்களுக்கு இதைவிட வேறு வழியிருப்பதில்லை. இதை மூடிமறைக்க சொற்களில் “ஸ்டாலினை வரலாற்றுப் போக்குகள், அதிகார அமைப்பின் இயக்கத்துக்குள் வைத்து புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, தனித்தனித் சம்பவங்களைப் பிரித்தெடுத்து நோக்குவதும் அதனடிப்படையில் விளக்கவதும் மார்க்சியமல்ல” என்ற கூறியே, அவதூறுகளை தொகுத்து வெளியிடுகின்றனர். இந்த தொகுப்பு என்பது அரசியலற்ற வெற்று வேட்டுகளின், எதிர்புரட்சியில் கொல்லப்பட்டவர்களின் பட்டியலைக் கொண்டு தூற்றப்படுகிறது. இங்கு தனிதனிச் சம்பவங்களை அல்ல என்ற கூறிய போதும், தனி தனி சம்பவங்களையே அவதூறின் தொகுப்பாக முன்வைக்கிறார்கள். அதிகாரம் என்றால் என்ன என்ற அடிப்படை அரசியலைக் கூட விவாதிக்க வக்கற்றவர்கள், அவதூறுகளின் தொகுப்பே மார்க்சியம் என்கின்றனர். எந்தவிதமான அரசியல் அடிப்படையுமற்ற பட்டியலைக் கொண்டு ஏகாதிபத்தியம் எதைச் செய்கின்றதோ, அதை அப்படியே டிராட்ஸ்கிகளும் காவடி எடுக்கின்றனர். இதைத் தான் நாம் மேலே டிட்டோவின் முதலாளித்துவ மீட்சி சார்ந்த போக்குக்கு எதிரான ஸ்டாலின் நிலையையும், முதலாளித்துவ மீட்சிக்கு சார்பான டிராட்ஸ்கிகள் நிலையையும் ஓப்பிட்டு ஆராய்ந்தோம். “ஸ்டாலினை வரலாற்றுப் போக்குகள், அதிகார அமைப்பின் இயக்கத்துக்குள் வைத்து புரிந்து கொள்ளவேண்டுமே தவிர” என்று கூறி, தனிச் தனி சம்பவகளால் தொகுக்கப்பட்டு, அவை அவதூற்றல் நிரப்பபட்டுள்ளது. ஈராக் ஆக்கிரமிப்பை அமெரிக்கா நியாயப்படுத்த எதை எல்லாம் செய்ததோ, அதுபோன்றே டிராட்ஸ்கிகள் சமகாலம் வரை செய்கின்றனர்.
Last Updated on Thursday, 18 October 2012 12:07
யாருக்காய் இந்த உயிர்போகிறது
- 17 October 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- கங்கா
ஈழப்படுகொலைக் கோரம்
காணொளிகளாய் பரவியபோது
கண்கள் குளமாகி பெருக்கெடுத்தோடியதாம்
கருணாநிதி முதல்வரம்மா
அன்னை சோனியாவுக்கும் தானாம்
எல்லாம்
ஆசிய அணையுடைத்து
மகிந்தகுடும்பத்தை
வாரியள்ளிப்போகப்போகிறதாம்
பாருங்கள்
Last Updated on Wednesday, 17 October 2012 18:37
அப்போலோ11ம் அடிமைப்பட்டுக்கிடக்கும் மக்களும்
- 16 October 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- சுஜீவன்
விஞ்ஞான ஆராட்சியில்
ஆசான்கள் பெரு விண்ணர்கள்
கண்முன்னே நித்தமும் செத்துமடியும் உயிர்கள்
பசியால்
படுத்துறங்க இடமற்று விறைத்துக் குளிரால்
கொட்டும் சுடுகலக் குண்டால்
சிறைப்பட்டு ஆட்சியாளர் வதையால்
கத்தும் குழந்தைக்கு பாலூட்ட நாதியற்று
Last Updated on Tuesday, 16 October 2012 11:10
மீண்டும் அப்பாவாகிறேன்....
- 15 October 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- நிலாதரன்
தாய் தகப்பனுடன் இருக்க முடியாத காரணங்களினாலும், தாய் தகப்பன் இருந்தும் சில சமூகப்பழக்க வழக்க நடைமுறைகளை சரிவரச் செய்யத் தெரியாத ஒரு வகை உளவியல் வருத்தங்களைக் கொண்ட பிள்ளைகளை பராமரிக்கின்ற இடம் தான் நான் வேலை செய்யும் இடம். மெசின்களுடன் வேலை செய்வதை விட இந்த மனிதர்களுடன் வேலை செய்வதென்பது மிகவும் கஸ்ரமான ஒன்று. அதிலும் குழந்தைகளுடன் அதுவும் கொஞ்சம் மனம் சரியில்லா உளவியல் குறைபாடுள்ள பிள்ளைகள் என்றால். அதை அனுபவிச்சவர்களுக்குத் தான் தெரியும்.
Last Updated on Monday, 15 October 2012 14:02
சிங்கள மக்களுடன் இணைந்து போராடக் கூடாது என்று கூறும் குறுந்தேசியவாதிகள்
- 14 October 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
தீபச்செல்வன் குளோபல் தமிழ்நியூஸ் இணையத்தில் தமிழ்-சிங்கள மக்கள் இணைந்து போராடுவதை எதிர்த்து "எங்கள் துயரம் தெற்கு மக்களுக்கு தெரியாததா?" என்று கேட்டு எழுதுகின்றார். இதில் அவர் "நம்மில் சிலர் தெற்கு மக்களையும் இணைத்துக்கொண்டே போராட வேண்டும்" என்று கூறுவதை எதிர்த்து குறுந்தேசிய இனவாத தர்க்கத்தை முன்வைக்கின்றார். இங்கு "நம்மில் சிலர்", என்று கூறுவது, எம்மைக் குறித்தது கூட. அத்துடன் "தெற்கு மக்களையும் இணைத்து" போராடக் கூடாது என்கின்றார். இது வெறும் தீபச்செல்வனின் கருத்துமட்டுமல்ல, சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து போராட தயாரற்ற அனைவரினதும் நிலையும் இதுதான். இந்தநிலையில் "எங்கள் துயரம் தெற்கு மக்களுக்கு தெரியாததா?" என்று வேறு கேட்கின்றார்! சரி இணைந்து போராடுவது தவறா? இது தமிழ் மக்களின் பிரச்சனை மறுத்து விடுமா? இணைந்து போராடாமல் தீர்வு காணத்தான் முடியுமா? சொல்லுங்கள் எப்படி என்று? "நம்மில் சிலரான" நாங்களும் வருகிறோம். அரசுடன் பேசுவதும், இந்தியாவுடன் சேர்ந்து கூத்தாடுவதும், ஏகாதிபத்தியத்துடன் கூடுவதும் தான் உங்கள் வழி. நாங்கள் இதை மறுத்து, மிகத் தெளிவாக கூறுகின்றோம், தமிழ்-சிங்கள மக்கள் இணைந்து போராடாது, தமிழ்மக்கள் மேலான இனவொடுக்குமுறையை வேறு எந்தவழியிலும் தீர்க்க முடியாது. அவை அனைத்தும் தமிழ் மக்களுக்கு எதிரானது தான். தமிழ் மக்கள் தமக்காக தாம் போராடுவார்களாக இருந்தால், அவர்கள் சிங்கள முஸ்லீம் மலையக மக்களுடன் இணைந்து தான் போராடுவார்கள். இதற்கு வெளியில் வேறு உண்மை மாற்று கிடையாது.
Last Updated on Sunday, 14 October 2012 19:13
பருவ வயதை அடைந்த குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையிலான முரண்பாடுகள்
- 13 October 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
பருவ வயதை அடைந்தவர்கள், தங்கள் சுய முடிவுகளை எடுக்கின்ற பருவம். இதை அனுமதிப்பதா இல்லையா என்பதுதான், பெற்றோரின் சங்கடங்களும், முரண்பாடுகளும். குழந்தை முடிவை எடுப்பதை மறுப்பதும், நாங்கள் எடுத்த முடிவின் அடிப்படையில் தான் குழந்தைகள் செயல்படவேண்டும் என்பது, பெற்றொரின் அதிகாரம் சார்ந்த குரலாக இருக்கின்றது. இப்படி பெற்றோர் முடிவு எடுத்து வந்த போக்கும், குழந்தையானது தான் முடிவு எடுப்பதற்குமான அடிப்படை முரண்பாடு தான் இது. பெற்றோர் தாம் கண்ட அனுபவத்தை, தங்கள் அச்சங்களை, தங்கள் விருப்பங்களை, தங்கள் தெரிவுகளை, தங்கள் அதிகாரம் சார்ந்து இதில் ஒன்றோ அல்லது பலதோ சார்ந்து திணிக்க முனைகின்றனர். குழந்தைகள் தங்கள் அனுபவமின்மை சார்ந்து, அச்சமின்மை சார்ந்து, தங்கள் விருப்பங்கள் சார்ந்து, தங்கள் தெரிவுகள் சார்ந்து, தங்கள் சுதந்திர உணர்வு சார்ந்து, இதில் ஒன்று அல்லது பல சார்ந்து போராட முனைகின்றனர். இதில் உள்ள இணக்கமின்மைதான், பரஸ்பரம் குற்றச்சாட்டுகளுக்கும், விலகிப் பிரிதல் வரை விரிந்து செல்லுகின்றது. இந்தப் போக்கு சமூகத்தில் எங்கும் புரையோடிக் காணப்படுகின்றது.
Last Updated on Saturday, 13 October 2012 09:48
புலிகள் முன்கூட்டியே சரணடைந்து இருந்தால், உயிரிழப்பு தவிர்க்கப்பட்டு இருக்குமாம்!?
- 11 October 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
எரிக் சொல்ஹேம் இன்றைய அருள்வாக்கையும், புலிப் பினாமிகளின் காவடியாட்டத்தையும் மீறிய உண்மைகள் பல உண்டு. இனப்பிரச்சனை தீர்க்கப்பட்டிருந்தால் இந்த யுத்தமே நடந்திருக்காது அல்லவா! எரிக் சொல்ஹேம் தங்கள் முடிவை நடைமுறைப்படுத்த முன்னிறுத்திய "சர்வதேச சமூகம்" இதை செய்யமுடிவில்லையே ஏன்? யுத்தத்தின் பின் இதை ஏன் செய்ய முடியவில்லை? இப்படி இருக்க எரிக் சொல்ஹேம் கண்காணிப்பில் சரணைடைந்து இருந்தால் மட்டும் சரியாக நடந்திருக்கும் என்பது மோசடி. ஏன் புலிகள் சரணடையவில்லை. நீங்கள் சொன்னமாதிரி வெள்ளைக்கொடியுடன் புலிகள் சரணடையவில்லையா? அவர்களுக்கு என்ன நடந்தது? காலம் யுத்தசூழல் சார்ந்த படுகொலைகளை இல்லாதாகி இருக்கலாம். ஆனால் அரசின் திட்டமிட்ட இனவொடுக்குமுறை தொடங்கி இனப்படுகொலை இன்றுவரை தொடருகின்றது. இதுதான் உண்மை எதார்த்தம்.
Last Updated on Sunday, 14 October 2012 19:12
மார்க்சியத்தை தூற்றிய யூகோஸ்லாவியா எகாதிபத்தியத்தைப் போற்றியது - ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி 5
- 10 October 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
யூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்சியை சோசலிசமாகவும், முதலாளித்துவமல்லாத புரட்சியாகவும் காட்டப்பட்டது. இதனடிப்படையில் ஸ்டாலின் தூற்றப்பட்டார். ஸ்டாலினால் முன்னெடுக்கப்பட்டு உருவாக்கபட்ட சோசலிச சமூக கட்டுமானங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு நொருக்கப்பட்டன. இந்த முதலாளித்துவ மீட்சியை சர்வதேசிய டிராட்ஸ்கிகள் ஆதாரித்து நின்றனர். குருச்சேவ் பதவிக்கு வந்தவுடன் ஸ்டாலின் மறுக்கப்பட்ட நிலையில், சோவியத்யூனியனும், உலக கம்யூனிச இயக்கமும் படிப்படியாக யூகோஸ்லாவியா நிலைக்கு தம்மை மாற்றிக் கொண்டது. உலகம் எங்கும் புரட்சிகர போக்குகள் சிதைக்கப்பட்டன. எதிரியை நண்பனாக காட்டுவதும், போற்றுவதும் புதிய விடையமாகியது. குருச்சேவ், டிட்டோ இடையில் ஏகாதிபத்தியத்துடன் யார் அதிகம் கூடிக்கூலாவுவது என்பதில் கடுமையான போட்டி நிலவியது. அதேநேரம் தமது முதலாளித்துவ மீட்சிக்கான தங்கள் நோக்கத்தில், தமக்குள் ஒன்றுபட்டு கைகோர்த்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டனர். முதலாளித்துவத்தை மீட்பது எப்படி என்பதில், குருச்சேவ் டிட்டோவின் சீடனானான். டிட்டோ கும்பல் உலகம் தழுவிய வகையில், மக்களின் புரட்சிகர போராட்டங்ககளிலும், ஏகாதிபத்திய நாடுகளின் ஒடுக்குமுறைக்கு உள்ளான உலக நிகழ்ச்சிகளிலும், அமெரிக்காவின் சார்பாக அப்பட்டமாக செயல்பட்டது. இதன் போது ஏகாதிபத்திய தலைவர்களுக்கு வெண்சாமரம் வீசி, செங்கம்பளம் விரித்து வரவேற்று அவர்களைப் போற்றினர்.
Last Updated on Wednesday, 10 October 2012 18:55
கூடங் குளத்து “பொலிசுகாரர்களே”!
- 10 October 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- திலக்
அணு உடைவுச் சிதறல்கள்
அண்மையிலா அதிககாலங்களா?
எப்போதும் நிகழாம்
தெருவிபத்து.
பொங்கித்தள்ளும் தீமலைகள்
உலுக்கி சிதைத்தப்போடும்
நிலநடுக்கம்
Last Updated on Wednesday, 10 October 2012 09:12
ரி.பி.சி. வானொலி முன்னிலை சோசலிசக்கட்சியைச் சேர்ந்த குமார் குணரத்தினத்திடம் கண்ட பேட்டி தொடர்பாக – பகுதி 3
- 09 October 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
வர்க்கப்புரட்சி மூலம் சமுதாயப் பிரச்சனைகளுக்குத் தீர்வு என்பது தான் பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் நிலை. இது எங்கள் சொந்த அரசியல் வழிமுறை. இப்படி இருக்க இதை வர்க்கப்புரட்சிக்குப் பிந்தைய தீர்வாகக் காட்டி திரிப்பதன் மூலம், மற்றைய வர்க்கங்கள் தங்கள் பின் அணிதிரட்ட முனைகின்றனர். சமுதாய முரண்பாடுகளை முரணற்ற வகையில் விளக்கும் மார்க்சியம், முரணற்ற தீர்வுகளைக் கொண்டிருக்கின்றது. இதை எதிர்கொண்டு அரசியல் நடத்த முடியாதவர்கள், இதை வர்க்கப் புரட்சிக்குப் பிந்தைய தீர்வாக காட்டிவிடுவதன் மூலம் தான் தங்கள் அரசியலை நடத்த முனைகின்றனர். இதற்கு அமைவாகவே வர்க்கப் போராட்டத்தை கைவிட்டவர்கள், இதற்கு செங்கம்பளம் விரித்து தங்கள் வர்க்கப் போராட்டமற்ற அரசியலை முன்னிறுத்தி இதை விரிவாக்கினர்.
Last Updated on Saturday, 20 October 2012 07:44
முன்னிலை சோசலிசக் கட்சிக்கு எதிரான தமிழினவாதப் பிரச்சாரங்கள் குறித்து
- 08 October 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
இந்தப் பிரச்சாரத்தில் இரண்டு குறிப்பான விடையங்கள் குறித்து தற்போதைக்கு சுருக்கமாகப் பார்ப்போம்.
1.சுயநிர்ணயத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளாதது குறித்து
சுயநிர்ணயத்தை அவர்கள் ஏற்க மறுத்தது குறித்து பேசுகின்றனர். சரி இவர்கள் யார்? இவர்கள் வைக்கும் தீர்வு என்ன? இப்படி பல கேள்விகள் மூலமும், இவர்களைப் புரிந்து கொள்ள முடியும். கடந்த 30 வருடத்தில் எங்கே எப்படி இருந்தனர் என்பது தொடங்கி இன்று என்ன செய்கின்றனர் என்பது வரை, இவர்களை தெரிந்து கொள்வதன் மூலம் இவர்களின் "சுயநிர்ணயம்" என்ன என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும்.
Last Updated on Monday, 08 October 2012 07:47
ரி.பி.சி. வானொலி முன்னிலை சோசலிசக்கட்சியைச் சேர்ந்த குமார் குணரத்தினத்திடம் கண்ட பேட்டி தொடர்பாக – பகுதி 2
- 07 October 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
முன்னிலை சோசலிசக்கட்சியைச் சேர்ந்த குமார் குணரத்தினத்திடம் சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்கின்றீர்களா, உங்கள் தீர்வுத் திட்டம் என்ன என்ற கேள்வியைத்தான் மாற்றி மாற்றி பலரும் எழுப்பினர். வர்க்கப்போராட்டம் மூலமான அவர்களின் தீர்வை மறுக்கின்றவர்கள், அதை சாத்தியமில்லை என்று கருதுகின்றவர்களின், தர்க்கங்களும் வாதங்களும் தான் இவை. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மாறாக இந்த வர்க்க அமைப்பில் தீர்வுகளைக் காணமுடியும் என்று கருதுகின்றவர்களின் கேள்விகள் தான் இவை. சுயநிர்ணயம் பற்றிய இவர்களின் அரசியல் வரையறை கூட, பிரிவினையாக அல்லது தமிழனின் அதிகாரத்தைக் கோருவதாகத்தான் இருந்தது. இந்த வகையில் சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளும் நாமும் சரி, சுயநிர்ணயத்தை முன்மொழியாத அவர்களும் சரி, மேற்சொன்னவர்களின் அடிப்படையிலான இவர்களின் சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்வதில்லை.
Last Updated on Sunday, 14 October 2012 19:06
ரி.பி.சி. வானொலியில் முன்னிலை சோசலிசக்கட்சியைச் சேர்ந்த பிரேம்குமார் குணரத்தினத்திடம் கண்ட பேட்டி தொடர்பாக – பகுதி 1
- 05 October 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
இந்தப் பேட்டி பற்றி திறந்த விவாதம் இன்று அவசியமாகின்றது. தங்கள் சொந்த இனவாதம் மூலம், மற்றவற்றை எதிர் இனவாதமாக நிறுவமுனையும் போக்கில் இந்த நிகழ்ச்சியின் கேள்விகள் இழுபட்டுச் சென்றது. கேள்விகள் அனைத்தும் சுற்றிச் சுற்றி இனவாதம் சார்ந்ததாக இருந்ததால், இந்த விடையத்தைச் சுற்றிய விரிவான அரசியல் பார்வையை குறுக்கிவிட்டது. இங்கு தம்மை "மார்க்சியவாதியாக" "இடதுசாரியாக" காட்டிக் கொண்டு, சுயநிர்ணயம் தொடர்பாக குமார் குணரத்தினத்திடம் எழுப்பிய தர்க்கம் அனைத்தும் இனவாதம் சார்ந்த தேசியவாதம் தான். லெனினின் சுயநிர்ணயம் என்பது, தேசியத்தையும் இனவாதத்தையும் எதிர்த்த வர்க்கப்போராட்டம் மூலம் தீர்வு காணவே வழிகாட்டுகின்றது. இந்த வர்க்க அமைப்பில் அல்ல. இந்த வகையில் இந்தப் பேட்டியையும், இதைச் சுற்றிய நிகழ்வுகளையும் புரிந்து கொள்வதன் மூலம் தான், முன்னிலை சோசலிசக்கட்சியின் செயற்பாட்டுத் தளத்தை நாம் சரியாக இனம் காணமுடியும்.
Last Updated on Saturday, 06 October 2012 15:08
எந்த இடைக்கட்டமுமின்றி கம்யூனிச சமூகத்தைப் படைக்க முடியும் என்பது தவறானது - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 15
- 04 October 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
இலங்கை மார்க்சிய லெனினியக் கட்சிகளில் இந்தத் தவறான போக்கு காணப்படுகின்றது. இலங்கையில் 80 வருட காலமாக ஊடுருவிய திரோஸ்கியவாதத்தின் விளைவு இது. இது எந்த இடைக்கட்டமுமின்றி கம்யூனிச சமூகத்தைப் படைக்க முடியும் என்ற கோட்பாட்டுத் தவறை பல்வேறு மட்டத்தில் வெளிப்படுத்துகின்றது. முதலாளித்துவ நாடுகளுக்கும், முதலாளித்துவப் புரட்சி நடைபெறாத நவகாலனிய நாடுகளுக்கும் இடையில் உள்ள வர்க்க ரீதியான வேறுபாட்டை மறுப்பதுடன், புரட்சியின் வேறுபட்ட கட்டங்களையும் வேறுபட்ட வர்க்க அணிச்சேர்க்கைகளையும் மறுக்கின்ற போக்கு பொதுவாகக் காணப்படுகின்றது. இது தவறான அரசியல் யுத்த தந்திரத்தை உருவாக்குகின்றது.
Last Updated on Thursday, 04 October 2012 14:18
வர்க்கக் கட்சிகள் ஐக்கியத்தை மறுத்து, கோட்பாட்டுரீதியாக இன ஐக்கியம் பேசுவது! - இன ஜக்கியத்துக்கு தடைகள் எது? - பகுதி 03
- 02 October 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
மார்க்சிய லெனினியவாதிகள் ஐக்கியப்படாமல், மக்களின் ஐக்கியத்தைப் பற்றி பேசுவது என்பது நடைமுறையற்ற கோட்பாடாகும். இந்த வகையில் இன்று இனவாதத்துக்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைக்காத எவரும், மார்க்சிய லெனினியவாதிகள் அல்ல. இதற்கு நிபந்தனை விதிக்க முடியாது. கோட்பாட்டு வேறுபாட்டைக் கொண்டு இதில் இருந்து விலகி நிற்க முடியாது. இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் சக்திகளை, போராட்ட நடைமுறையில் வைத்துத்தான் பரிசோதிக்க முடியும். இதுவின்றி யாரும் ஆரூடம் கூற முடியாது. இந்த போராட்டத்தை எவரும் தட்டிக் கழிக்கவும் முடியாது. அனைவரும் இனவாதத்துக்கு எதிரான களத்தில் இறங்கியாக வேண்டும். இதற்குத் தடையாக மார்க்சிய லெனினியவாதிகள் எவரும் செயற்பட முடியாது. உண்மையில் இனரீதியான பிளவு பாட்டாளி வர்க்க சக்திகளையும் கூட பிளந்து இருக்கின்றது. மார்க்சிய லெனினியவாதிகளைக் கூட இது விட்டுவைக்கவில்லை. குறுகிய இன உணர்வுகளுக்;குள்ளும், சந்தேகங்களுக்குள்ளும், தயக்கங்களுக்குள்ளும், தடுமாற்றங்களுக்குள்ளும் நின்றபடி அணுகுகின்ற பொதுப் போக்கு, இன ஐக்கியத்தை நோக்கி பயணிப்பதைத் தடுத்து நிறுத்துகின்றது.
Last Updated on Tuesday, 02 October 2012 11:16
சுயநிர்ணயம் பற்றி இனவாதிகளின் திரிபு - இன ஜக்கியத்துக்கு தடைகள் எது? - பகுதி 02
- 29 September 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
சுயநிர்ணயம் பற்றி இனவாதிகளின் கண்ணோட்டம், சுயநிர்ணயம் மூலமான இன ஜக்கியத்துக்கு தடையாக இருக்கின்றது. சுயநிர்ணயம் என்பது "பிரிவினை" தான் என்று இனவாதிகளின் பிரச்சாரம், பிரிந்து செல்லும் உரிமை தான் சுயநிர்ணயம் என்பதை மறுக்கின்றது. கடந்த 30 வருடமாக சுயநிர்ணயத்தை திரித்து புரட்டிய குறுந்தேசியவாதிகளும் பெரும்தேசியவாதிகளும், சுயநிர்ணயம் சமன் "பிரிவினை" என்ற இனவாத கண்ணோட்டத்தைப் புகுத்தியுள்ளனர். சுயநிர்ணயத்தை முன்வைத்து பிரிவினைக்கு எதிராகவும், பலாத்காரமான ஐக்கியத்துக்கும் எதிராகவும், பிரச்சாரத்தையும் கிளர்ச்சியையும் பாட்டாளிவர்க்கம் முன்னனெடுக்கத் தவறிய நிலையில் தான் இனவாதிகள் அதை "பிரிவினை"யாகக் காட்டி பாட்டாளி வர்க்க யுத்ததந்திரத்தை செயலற்றதாக்கியுள்ளனர். இந்த வகையில் சுயநிர்ணயத்தை முன்வைத்து இன ஐக்கியத்தை உருவாக்குதல் என்பது, குறிப்பாக பெரும்பான்மை இனம் மத்தியில் சவால் மிக்க அரசியலாக மாறியுள்ளது.
Last Updated on Saturday, 29 September 2012 10:47
முஸ்லீம் கட்சித் தலைவர்கள் சொத்துச் சேர்க்கவே அரசுடன் கூட்டுச் சேருகின்றனர்
- 29 September 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
தமிழ் மக்கள் முஸ்லீம் மக்கள் மேலான அதிருப்தியுணர்வை வளர்ப்பதற்கு பதில், இந்த உண்மையை நாம் புரிந்து கொண்டு அணுகவேண்டும். இது முஸ்லீம் மக்களின் சொந்த தெரிவல்ல. முஸ்லீம் மக்களைப் புரிந்து கொள்வதும், எப்படி இதற்கு எதிராக ஐக்கியப்பட்டு போராடுவது என்பதில் இருந்து நாம் அவர்களுடன் ஒன்றிணைய வேண்டும். இனம், மதம், பிரதேசவாதம் மூலம் பார்க்கின்ற எம் பார்வையைக் கடந்து, அப்படி சிந்திக்கின்ற எம் குறுகிய உணர்வைக் கடந்து, மனிதனாக ஒன்றிணைவதன் மூலம் மக்களுக்கு எதிரான இந்தச் சொத்து அரசியலை முறியடிக்க முடியும். இனம் மதம் கடந்து நாம் மக்களைச் சார்ந்து எம்மை அரசியல்படுத்துவதன் மூலம்தான், அந்த மக்களுடன் நாமும் அணிதிரள முடியும்.
Last Updated on Saturday, 29 September 2012 07:50
இனவாதத்துக்கு எதிரான மக்கள் போராட்டத்துக்கான, முன்னணியின் பகிரங்க அழைப்பு
- 28 September 2012
- தமிழரங்கம்
- Section: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -
- புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
இந்தப் பகிரங்க அழைப்பு என்பது, மக்களை இனவாதத்துக்கு எதிராக அணிதிரட்டுதல். பரஸ்பரம் எதிர்த்தரப்பு இனவாதத்தைக் காட்டி அரசியல் செய்வதற்கு முரணாக, சொந்த இனத்தின் இனவாதத்தை முறியடிக்கும் போராட்டம். 1948 க்குப் பின், முதன்முதலாக இனவாதத்தை முறியடிக்கும் அறைகூவல் விடப்பட்டு இருக்கின்றது. பிரதான முரண்பாடு சார்ந்து புரட்சிகரமான அரசியல் வரலாற்றுக்கு, முதல் காலடி எடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றது. முன்னிலை சோஷலிசக் கட்சியின் இந்த முயற்சியுடன், புதிய ஜனநாயக மக்கள் முன்னணியாகிய நாமும் இந்த சவால்மிக்க பாதையில் இணைந்து கொண்டுள்ளோம். அரச இனவாதத்தை மட்டுமல்ல சிறுபான்மை இனம் சார்ந்த இனவாதத்தை முறியடிக்கும் இந்த சவால்மிக்க பணியில், அனைவரையும் ஒன்று திரளுமாறு புதிய ஜனநாயக மக்கள் முன்னணி இதன் மூலம் பகிரங்க அழைப்பை விடுகின்றது.
Last Updated on Friday, 28 September 2012 08:54
More Articles...
- அனைத்து தேசிய பிரஜைகளுக்கும் சம உரிமையை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம்
- சமவுரிமை இயக்கத்தின் ஆரம்ப நிகழ்வை முன்னிட்டு புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் வாழ்த்துச் செய்தி
- நீ ஒரு இனவாதியா! சொல்லு? - இன ஜக்கியத்துக்கு தடைகள் எது? - பகுதி 01
- யூகோஸ்லாவிய பொருளாதாரத்தில் முதலாளித்துவ மீட்சி -ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 4
- யூகோஸ்லாவியா பற்றி ஸ்டாலினின் மார்க்சிய நிலைப்பாடும்; டிராட்ஸ்க்கிய மற்றும் குருச்சேவின் நிலைப்பாடும் - - ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? : பகுதி – 3
- மாணவர் தலைவன் சஞ்ஜீவ பண்டாரவை உடன் விடுதலை செய்
- கடலோடி வாழும் கைகள் இணைந்தால் இடிமுழங்கும்!
- புளொட்டிலிருந்து தீப்பொறி நேசனின் அனுபவத்தொடர் பற்றிய சில கேள்விகளும் விமர்சனங்களும்
- மொழிக்கு கவிதையா? கவிதைக்கு மொழியா? : நனவெரிந்த சாம்பலில் நூல் மீதான விமர்சனம்
- "ஜனநாயக மறுப்பு" பற்றி கனடா தேடகமும், தமிழ் தேசியவாதிகளும்