யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக, முன்னிலை சோஷலிச கட்சியின் மாணவர் அமைப்பும், வேறு சில ஜனநாயக சக்திகளும் இணைந்து கண்டி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தை மாணவர்கள் இன்று மேற்கொண்டனர். இதனால் கண்டி பேராதனைப் பல்கலைக்கழகம் இஸ்தம்பிதம் அடைந்தது .
யாழ். பல்கலைக்கழக மாணவர்களிற்கு ஆதரவாக பேராதனை பல்கலைக்கழகத்தில் போராட்டம்! (படங்கள்)
- 29 November 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- விருந்தினர்
Last Updated on Thursday, 29 November 2012 17:50
யாழ்-பல்கலைக்கழகம் மீதான இனவொடுக்குமுறைக்கு எதிராக, அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரளுமாறு கோருகின்றோம்!
- 29 November 2012
- தமிழரங்கம்
- Section: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -
- புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
கடந்த இரு நாட்களாக வட-கிழக்கில், அரச படைகளின் அத்துமீறிய அராஜகம் மீண்டும் உச்சத்தை எட்டியிருக்கின்றது. தாம் நம்பியதோர் இலட்சியத்திற்காகப் போராடி மடிந்த தியாகிகளை நினைவு கூருவதை, சிங்களப் பேரினவாதம் ஒடுக்கும் வண்ணம் அரச பயங்கரவாதத்தை ஒரு இனத்தின் மீது ஏவியிருக்கின்றது.
Last Updated on Thursday, 29 November 2012 12:10
வடகிழக்கில் இராணுவ கெடுபிடிக்கு சவால் விட்ட "மாவீரர் தின" தீபங்கள்
- 28 November 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
புலிகளின் "மாவீரர்" தினமன்று, வடக்கு கிழக்கில் இராணுவ கெடுபிடிகளும், கண்காணிப்புகளும் தீவிரமாகியது. இதற்கு சவால் விடும் வண்ணம் தீபம் ஏற்றுதல், சுவரொட்டி ஒட்டுதல் ஆங்காங்கே நடந்தேறியுள்ளது. இதற்கு எதிரான அரச வன்முறையை, ஆங்காங்கே அரங்கேற்றியும் இருக்கின்றது.
அரசுக்கு எதிரான இந்த உதிரியான எதிர்ப்பு நிகழ்வுகள் வெறும் இனத் "தேசியமாக" புலி சார்பு நிகழ்வுகளாக குறுக்கிக் காட்டி விட முடியாது. இப்படி இதை குறுந்தேசிய அரசியலாகக் காட்டி பிழைப்பவர்களுக்கும், அரச பாசிச நிழலில் ஒதுங்கி பிழைப்பவர்களுக்கும் இது எதிரானது. அதுபோல் மக்கள் அரசியலை முன்னெடுக்கத் தயாரற்றவர்களை, கேலி செய்தும் இருக்கின்றது.
Last Updated on Wednesday, 28 November 2012 15:35
ஏகாதிபத்தியமும் - அரச பாசிசமும் எதிரெதிராக, மக்களுக்கு எதிராக அணிதிரளுகின்றது
- 27 November 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
மேற்கு ஏகாதிபத்தியங்கள் இலங்கை அரசை திட்டமிட்ட வகையில் தனிமைப்படுத்தத் தொடங்கியிருக்கின்றது. இலங்கை அரசோ தேர்தல் "ஜனநாயக" வடிவங்கள் மூலமும், சட்ட வடிவங்கள் மூலமும், பாசிச சர்வாதிகாரத்தை நிறுவி வருகின்றது. மக்களுக்கு எதிரான இந்த இரண்டு எதிர்ப்புரட்சிச் சக்திகளும், உள்நாட்டு அளவிலும் சர்வதேச அளவிலும் தங்களை அணிதிரட்டி வருகின்றது. ஏகாதிபத்தியத்துக்குள்ளான சர்வதேச முரண்பாட்டுக்குள், இலங்கை மக்கள் ஒடுக்கப்படுவதும், பிளவுபடுத்தப்படுவதும் தீவிரமாகி இருக்கின்றது. இதற்குள் முரண்பாடுகள் கையாளப்படுவதும்;, மக்கள் ஒடுக்கப்படுவதும் நடந்தேறுகின்றது.
Last Updated on Wednesday, 28 November 2012 10:31
இனவொடுக்குமுறைக்கு எதிராக நாம் என்ன செய்ய முடியும்?
- 27 November 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
60 வருடத்துக்கு மேலாக தொடரும் இனவொடுக்குமுறைக்கு எதிராக, பாரளுமன்றம் - யுத்தம் - பாரளுமன்றம் என்று எல்லைக்குள் வாழ்ந்து இருகின்றோம், வாழ்ந்துகொண்டு இருகின்றோம். இந்த எல்லைக்குள்அரசுடன் பேச்சு வார்த்தைகளை, ஒப்பந்தங்களைசெய்திருகின்றோம், செய்ய முனைகின்றோம். ஆனாலும் பிரச்சனைகள் தீர்க்கப்படமல், இனவொடுக்குமுறை தொடருகின்றது.
Last Updated on Tuesday, 27 November 2012 07:36
உயிர் வெந்து சாகும்
- 24 November 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- விஜயகுமாரன்
சிறுநண்டு மணல் மீது
படம் ஒன்று கீறும்
சிலவேளை இதை வந்து
கடல் கொண்டு போகும்.
கறிசோறு பொதியோடு
தருகின்ற போதும்
கடல் மீதில் இவள் கொண்ட
பயம் ஒன்று காணும்.
Last Updated on Saturday, 24 November 2012 20:10
பு.மா.இ.மு. வின் போராட்டப் பெண்கள்! அனுபவமும் – அரசியலும்!!
- 23 November 2012
- தமிழரங்கம்
- Section: புதிய கலாச்சாரம் -
- 2012
சமச்சீர் கல்விக்கான போராட்டத்தின் வழி ஜெயாவின் ஆணவத்திற்கு பு.மா.இ.மு.(புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி) வைத்த ஆப்பு, தொடர்ந்து தனியார் பள்ளிகளின் கல்விக் கொள்ளையை எதிர்த்த போராட்டங்கள், கல்லூரி மாணவர் போராட்டங்கள், சென்னை கல்வி இயக்குநரகத்தில் நடைபெற்ற மறியல் என அடுத்தடுத்து நடைபெற்ற போராட்டங்களால், சென்னை மாநகர போலீசின் ரத்தம் கொதிநிலைக்கு சென்றிருந்தது.
இத்தகைய சூழலில், மதுரவாயல் ஏரிக்கரைப் பகுதியில் நடந்த ஒரு கொலையில் தவறாக கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரை விடுவிக்குமாறு நியாயம் கேட்டு போலீசு ஸ்டேசனுக்குப் போன தோழர்கள் மற்றும் பகுதி மக்கள் மீது, இரண்டு லோடு அதிரடிப்படையை இறக்கி தாக்குதல் நடத்தியது. பு.மா.இ.மு. வின் பறையிசைக் கலைஞன் தோழர் கிருஷ்ணாவைக் குறிவைத்துத் தாக்கி, அவரையும் தோழர் விவேக்கையும் கை, கால் எலும்புகளை முறித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கிடத்திய போலீசு, எதிர்ப் படுக்கையிலேயே படுத்துக் கொண்டு பழைய எக்ஸ்ரே பிலிம்களை பொறுக்கி வந்து தாங்களும் தாக்கப்பட்டு விட்டதாக பிலிம் காட்டியது. அடிபட்ட பிற 64 தோழர்கள் போலீசை ‘பணி’ செய்ய விடாமல் தடுத்ததற்காக சிறை வைக்கப்பட்டனர்.
தாக்குதலுக்குள்ளாகி சிறை சென்ற பு.மா.இ.மு வின் மாணவிகள் மற்றும் இளம் பெண்களைச் சந்தித்தபோது, அவர்கள் போலீசு கொட்டடியில் பெற்ற அனுபவங்களை இயல்பாக விவரித்தனர். தெருவில் தாக்கப்பட்டு வேனில் ஏற்றப்பட்ட நிமிடம் தொடங்கி, சிறைக்கு அனுப்பப்படும் வரையிலும் அவர்கள் போலீசுடன் பெற்ற அனுபவம், அத்தோழர்களின் வலிமைக்கு சான்று கூறுவது மட்டுமின்றி, போலீசுடைய பலவீனத்தின் எல்லாப் பரிமாணங்களையும் நமக்கு காட்டுகிறது. பாருங்கள்.
Last Updated on Friday, 23 November 2012 19:55
இனத் தேசியத்துக்கு எதிராக, முதலாளித்துவ தேசியத்தை அரசியலாக்கல் - சிங்கள மக்களுடன் பகிரங்க உரையாடல் : 16
- 23 November 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
தமிழ்தேசியம் எப்படி இனவாதமோ, அப்படித்தான் சிங்களத் தேசியமும் இனவாதமாகும். இதில் ஒடுக்கும் ஒடுக்கப்பட்ட இனம் என்ற அடிப்படையில், அதனுள்ளான இனவாதம் இல்லாமல் போய்விடாது. இனத்தை முன்னிறுத்திய தேசியம் எங்கும் எப்போதும் இனவாதம் தான். முதலாளித்துவ ஜனநாயகத்தை முன்னிறுத்தும் தேசியத்துடன் போட்டுக் குழப்பக் கூடாது. இதனடிப்டையில் இனவாதம் சார்ந்த தேசியத்திற்கு எதிராக, இன வரையறை கடந்த தேசியத்தை முன்னிறுத்தவேண்டும். ஏனென்றால் முதலாளித்துவ தேசியத்தின் முரணற்ற கூறுகள், ஜனநாயகக் கோரிக்கையாக இருக்கின்றது. இனம் சார்ந்த தேசியவாதம், ஜனநாயகக் கோரிக்கைகளை மறுத்து தன்னை அணிதிரட்டுகிறது. அதனால் பாட்டாளி வர்க்கம் இனவாதத்தை மறுக்கும் போது, ஜனநாயகக் கோரிக்கைகளை உயர்த்தவேண்டும்.
Last Updated on Friday, 23 November 2012 13:03
ஒருகளம் கண்டுகொண்டால் மறுகணம் பாசிசம் நடுங்கும்.
- 21 November 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- சிறி
என்னையும் நின்னையும்
பகைமூழவைத்து உயிர்
பறித்தவர் சரித்திரம்
இலங்கையில் உறங்கும்.
உழைக்கும் எம்கரங்கள்
இணைந்தே வீறுகொண்டோங்கும்.
Last Updated on Wednesday, 21 November 2012 16:40
ஓ….என் யாழ்ப்பாணமே…... (சிறுகதை)
- 20 November 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- நிலாதரன்
ஏதோ கனவிலே கேட்பது போலே கிடக்கிறது. ஆனால் சரியாக விளங்கிக் கொள்ள முடியாமலும் இருக்கு. கொஞ்சம் கண்ணை விழித்து காதைக் கூர்மையாக்கி கேட்கிறேன். உண்மையிலே அது ரெலிபோன் அடிக்கிற சத்தம் தான். வெள்ளிக்கிழமையெண்டபடியாலே லேற்றாக வந்து தான் படுத்தனான் கண் திறக்க எரிந்து வலித்தது. முழிக்க முயன்றேன் முடியவில்லை. ரெலிபோன் தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தது.
ஒரு மாதிரி முழிச்சு பக்கத்திலிருந்த மணிக்கூட்டைப் பார்க்கிறேன், அதிகாலை நாலு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த நேரம் ஒரு நாளும் எடுக்கக் கூடாது எண்டு அம்மாவுக் பல முறை சொல்லியிருந்தால் அவ ஒரு நாளும் இப்ப எடுக்க மாட்டா…
அப்ப இப்ப இந்த நேரம் ஆர் எடுப்பினம்..
Last Updated on Tuesday, 20 November 2012 08:48
பசித்த வயிறுகளின் கொதிப்பறியா ஈனச்சமூகமே பாலியல் தொழிலாயிது?
- 18 November 2012
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- கங்கா
ஈழமெழுமெனப்
போரிட்ட வீரப்பெண் சேனையை
தூக்கித் தெருவில் வீசிய ஈழச்சனமே
மாவீரர் நினைவேந்தக்
கார்த்திகைக்கு
மலர்தூவப் போவீரோ..
Last Updated on Monday, 19 November 2012 20:05
படுகொலை மூலம் ஒற்றுமையையோ, விடுதலையையோ காணமுடியாது.
- 16 November 2012
- தமிழரங்கம்
- Section: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -
- புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
கடந்த ஒரு வருடத்துக்கு முன் வாள் கொண்டு வெட்டப்பட்ட பரிதி, 08.11.2012 சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார். இதை இலங்கை அரசு செய்ததாக புலிகளின் அறிக்கைகளும், அஞ்சலிகளும் குற்றம் சாட்டுகின்றன. அதேநேரம் இலங்கை அரசு இதை மறுக்கின்றது. அதே நேரம் முரண்பட்ட புலிக் குழுக்களின் வேறுபட்ட பார்வைகள் முதல் எச்சரிக்கை வரை வெளிவருந்திருக்கின்றது. மக்கள் இந்தக் கொலை புலிக் குழுக்களுக்கு இடையிலான கொலையாக நம்புகின்றனர். ஏன் இந்த முரண்பாடு?
கடந்த பத்தாண்டுகளில் அரசு, புலிகளும் இது போன்ற படுகொலைகள் மூலம், பல நூறு கொலைகளை நடத்தி முடித்திருக்கின்றார்கள். இது போன்று பல்வேறு இயக்கங்களும் கூட செய்திருக்கின்றன. இது தான் முரண்பாடுகளை தீர்க்கும் அரசியல் வழிமுறையாக இருந்திருக்கின்றது. இந்த நிலையில் இந்தக் கொலையைக் கூட யார் கொலையாளி என்று தெரியாத வண்ணம் மூடிமறைக்கின்ற, மூடிமறைத்த அரசியல் பின்புலத்தில் தான் இவை நடந்து வந்திருக்கின்றது. இதை யார் செய்து இருப்பார்கள் என்பதை காரணகாரியத்துடன் தொடர்புபடுத்தி தெரிந்துகொள்ள வேண்டியளவுக்கு வரைமுறையின்றி நடந்து வந்திருக்கின்றது. துயரம் என்னவென்றால், இந்த வழிமுறையை எதிரி பயன்படுத்தி விடுவதுதான். இந்த அரசியல் பின்புலத்தில் இது போன்ற கொலைகள், யார் செய்தது என்ற விடை காண முடியாத சந்தேகங்களும் ஏற்பட்டுவிடுகின்றது.
Last Updated on Friday, 16 November 2012 11:49
தேசியம் என்பது எப்படி முதலாளித்துவமோ, அப்படி தமிழ் தேசியம் என்பது இனவாதமாகும்
- 14 November 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
தேசியத்தை இனரீதியானதாக பிரித்து சமூகரீதியாக முரண்படும் போது அது இனவாதமாகிவிடுகின்றது. இதில் ஒடுக்கும் இனம் , ஒடுக்கப்படும் இனம் என்ற வித்தியாசம் கிடையாது. ஆனால் இனம் கடந்த தேசியம் சர்வதேசியமல்ல என்ற போதும், அது இனரீதியாக தன்னைப் பிரிக்காத வரை முதலாளித்துவ ஜனநாயகக் கூறைக்கொண்டு இயங்கும் வரை இதற்குள் முரண்பாடுகளை இனங்களுக்கு இடையில் உருவாக்காத தன்மை காணப்படும்.
Last Updated on Sunday, 18 November 2012 21:10
அமைப்பாகும் போது அதிகரிக்கும் தனிநபர் தாக்குதலின் பின்னான அரசியலைப் புரிந்து கொள்ளல்
- 12 November 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
"அரசியல் பொருளாதாரத் துறையில் சுதந்திர விஞ்ஞான ஆராய்ச்சி சந்திப்பது, மற்றெல்லாத் துறைகளிலும் சந்திக்கிற எதிரிகளை மட்டுமன்று. அது ஆராய்கிற பொருளின் விசேடத் தன்மையானது மானுட நெஞ்சத்தின் உக்கிரமான, இழிவான, குரோதமான உணர்ச்சிகளை, தனி நலனின் ஆவேசங்களை யுத்தகளத்துக்குள் எதிரிகளாக வரவழைக்கிறது." என்று மிக அழகாகவே மார்க்ஸ் தனது மூலதன முன்னுரையில் குறிப்பிடுகின்றார். ஆம் நாம் இன்று சந்திப்பது இதுதான்.
நாங்கள் தனிநபர் செயற்பாட்டை கடந்து அமைப்பாகியதும், வெறும் விவாதங்கள் கடந்து நடைமுறையுடன் கூடிய செயற்பாட்டுக்கு வந்தடைந்து இருப்பதும், இனவாதத்தை பொது அரசியல் உணர்வாக கொண்ட சமூக அமைப்பை எதிர்க்கும் ஒரு அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்கும் நிலைக்கு நாம் வந்திருப்பதும், எமக்கு எதிரான எதிரிகளை வரவழைக்கிறது. "உக்கிரமான, இழிவான, குரோதமான உணர்ச்சிகளை, தனிநலனின் ஆவேசங்களை" எம்மீது காறி உமிழ வைக்கின்றது. வரலாற்றைத் திரிக்கின்றனர். தனிநபர்களை பற்றி இட்டுக்கட்டி அவதூறு பொழிகின்றனர்.
Last Updated on Monday, 12 November 2012 22:21
வடக்கு – கிழக்கில் பெண்கள் உடலை விற்று வாழவில்லையா!? பெண் உடலைத் தேடி ஆண்கள் செல்லவில்லையா?
- 09 November 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
இந்த உண்மையை அனைவரும் மூடிமறைக்கவே விரும்புகின்றனர். வடக்கு – கிழக்கில் பெண்கள் உடலை விற்கின்றனர், விற்பது அதிகரித்து வருகின்றது. அவள் ஏன் உடலை விற்கின்றாள்? இதை இந்த சமூகம் ஆராய மறுக்கின்றது. தனது குற்றமாக இதை உணர மறுக்கின்றது. "நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி!" என்ற பேட்டியை ஒரு கற்பனை கதை என்று சொல்பவர்களும், இது ஒரு வியாபாரக் கதை என்ற சொல்பவர்களும் (ஆனந்தவிகடனும் ஈழப் போராட்ட வியாபாரமும் : கோசலன்) வடக்கு கிழக்கில் பெண் ஏன் உடலை விற்கின்றாள் என்பதற்கு பதில் சொல்லவேண்டும். ஒரு உண்மையை வியாபாரமாக்குபவர்கள், அரசியல்ரீதியாக இழிவுபடுத்துபவர்களைக் கொண்டு, இந்த எதார்த்தத்தை யாரும் புதைத்து விடமுடியாது. இதுவொரு கற்பனை என்றால் கூட, உண்மையான எதார்த்தத்தில் இருந்து தான் புனையப்பட்டது. கற்பனையாளனின் நோக்கத்தை மறுப்பதன் பெயரால், உண்மைகளை புதைப்பதை நாம் அனுமதிக்க முடியாது. முரண்பாடான எதிர்முனை அரசியல் தளத்தில் இருப்பவர்கள், தங்கள் குறுகிய அரசியலில் இருந்து இதை மறுக்கின்றனர். உண்மையை வியாபாரமாக விளக்கி, இதை புதைக்க முனைகின்றனர். இதுவொரு சமூகத்தின் பொது அவலம். ஒடுங்கிச் சிதைந்து போகும் பல நூறு பெண்களின், உண்மையான சொந்தக் கதை.
Last Updated on Friday, 09 November 2012 15:08
சமவுரிமை மூலம் இனவாதத்தை எதிர்த்து, இனவொடுக்குமுறைக்கு எதிராகப் போராட முன்வாருங்கள்
- 08 November 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
சமவுரிமை இயக்கத்திற்கான செயற்திட்டத்தின் நோக்கம் மிகத் தெளிவானது. இனவாதத்தை மக்கள் மத்தியில் இல்லாது ஒழித்தலும். இனவொடுக்குமுறைக்கு எதிராகப் போராடுதலுமாகும். இந்த வகையில் அனைவரையும் போராடுமாறும், போராட முன்வருமாறும் கோருகின்றோம். இதன் அர்த்தம் எம்முடன் இணையுமாறு கோரவில்லை. மாறாக இதை நீங்கள் சுயாதீனமாக முன்னெடுக்குமாறு கோருகின்றோம்.
Last Updated on Thursday, 08 November 2012 22:13
வாழ்வுக்காக மக்கள் போராடுகின்றனர், போராட வேண்டியவர்கள் போராடுவதற்கே அஞ்சுகின்றனர்
- 07 November 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
நாம் கொண்டிருக்கக் கூடிய கருத்துக்கள், கட்சிகள் எதற்காக!? அதிலும் பாசிசத்தைக் கண்டு அஞ்சுபர்களுக்கு, கருத்துக்களும் கட்சிகளும் எதற்கு!? பாசிசத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டிப் போராடாத வரை, கருத்துக்களுக்கும் கட்சிகளுக்கும் என்ன தான் பயன்? பாசிசத்தைக் கண்டு அஞ்சுபவர்கள், மக்களை ஒரு நாளும் அணிதிரட்ட முடியாது. ஒரு வர்க்கத்தின் கட்சி இலங்கையில் இன்னும் உருவாகாமல் இருப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்று. பாசிசத்தை பகைக்காத வண்ணம் அரசியலை முன்னிறுத்திக் கொள்ளுகின்ற கட்சிகள் முதல் தனிநபர்கள் வரை, மக்களை பாசிசத்துக்கு அடிபணிய வைக்கின்றனர். அதைத்தான் தங்கள் கருத்துகளாலும் கட்சிகள் மூலமாயும் செய்கின்றனர்.
Last Updated on Wednesday, 07 November 2012 17:29
சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இனவாதிகளா!?
- 04 November 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
"சுயநிர்ணய உரிமையை மறுப்பது தான் இனவாதம்." என்ற "முன்நிபந்தனை" யுடன் கூடிய அரசியல் அளவுகோல் வரட்டுத்தனமானது, இது சாராம்சத்தில் பிரிவினைவாதம் கூட. சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் அனைவரும் இனவாதிகள் என்ற அரசியல் அடிப்படை மார்க்சியத்தை ஏற்றுக்கொள்ளாத அனைவரையும் இனவாதியாக்கி விடுகின்றனர். இனமுரண்பாட்டுக்கு எதிராக வர்க்கப்போராட்டத்தை நடத்தும் யுத்ததந்திரம் தான் சுயநிர்ணயம் என்பதையே மறுத்துவிடுகின்றனர். மாறாக பிரிவினையை மூடிமறைக்கும் யுத்ததந்திரமாக, சுயநிர்ணயத்தை குறுக்கிவிடுகின்றனர். சுயநிர்ணயத்தை "முன்நிபந்தனை"யாகக் கொண்ட அணுகுமுறையால், வர்க்கப் போராட்டத்தை சிதைத்து விடுகின்றனர். லெனின் சுயநிர்ணயத்தை முன்வைத்தது வர்க்கப்போராட்டத்தை நடத்தவே ஒழிய, அதை "முன்நிபந்தனை"யாகக் கொண்டு வர்க்கப் போராட்டத்தை சிதைக்கவல்ல.
Last Updated on Sunday, 04 November 2012 22:49
ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்? இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் பகுதி 08
- 03 November 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
குருச்சேவ் முதலாளித்துவ மீட்சி நடத்தவே ஸ்டாலினை தூற்றினான்
முதலாளித்துவ மீட்சியை பலப்படுத்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தூற்றும் போது “ஸ்டாலின் ஒரு கோடாரியைக் கொண்டு தனது அதிகாரத்தை நிலைநிறுத்தினார்” என்றான். அவன் பாட்டாளி வர்க்க ஆட்சியைப்பற்றி குறிப்பிடும் போது, “பயங்கர” ஆட்சி என்றான். மேலும் கூறும் போது “அந்தக் காலத்தில் வேலைக்குச் செல்லும் ஒரு மனிதன் அடிக்கடி, மீண்டும் வீட்டுக்குத் திரும்புவோமா, தனது மனைவியையும் குழந்தையையும் மீண்டும் காண்போமா என்பதைப் பற்றி நிச்சயமற்றிருந்தான்” என்றான். இப்படி பாட்டாளி வர்க்க சர்வாதிகரத்தை தூற்றியவ அதே குருசேவ் தான், 1937 இல் “நமது கட்சி, துரோகிகளையும் காட்டிக்கொடுக்கும் கும்பலையும் ஈவு இரக்கமின்றி நசுக்கும். டிராட்ஸ்கிய வலது கழிச்சடைகள் அனைத்தையும் துடைத்தெறியும்.. இதற்கான உத்தரவாதம் நமது மத்திய கமிட்டியின் அசைக்க முடியாத தலைமையாகும். நமது தலைவர் தோழர் ஸ்டாலின் அவர்களின் அசைக்க முடியாத தலைமையாகும். நாம் எதிரிகளை முழுவதுமாக கடைசி மனிதன் வரை அழித்தொழித்து அவர்களுடைய சாம்பலை காற்றில் தூவிவிடுவோம்” என்று பிரகடனம் செய்தான், ஆனால் ஸ்டாலின் மறைவுக்கு பின் தூற்றினான். அனைத்தையும் ஸ்டாலின் மேல் சுமத்தினான். டிராட்ஸ்கிகள் குருச்சேவை ஆதரித்தனர். ஸ்டாலின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றி குறிப்பிடும் போது “உட்புறத்திலிருந்து கோட்டையைக் கைப்பற்றவது மிகவும் எளிது” என்றார். அது தான் நடந்தது. உள்ளிருந்த மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம் தான், முதலாளித்துவ மீட்சியை உள்ளிருந்து நடத்தியது.
Last Updated on Saturday, 03 November 2012 09:09
சுயநிர்ணயத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களுடன் சேர்ந்து வேலை செய்ய முடியுமா?
- 30 October 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
சுயநிர்ணயத்தை ஏற்காதவர்களுடன் ஒரேயொரு அடிப்படையான நிபந்தனையுடன் இணைந்து போராட முடியும். இனவொடுக்குமுறைக்கு எதிராக அவர்கள் போராடுபவர்களாக இருந்தால், அவர்கள் அப் போராட்டத்தை நடைமுறையில் முன்னெடுப்பவர்களாக இருந்தால், முதலில் நாம் ஆதரிக்க வேண்டும். வர்க்கக் கண்ணோட்டத்தில் இதை அவர்கள் முன்வைத்து செயல்படுத்துபவர்களாயின், இணைந்து போராடமுடியும். இதை நிராகரிப்பதற்கு என முன்வைக்கப்படும் எந்த அரசியல் தர்க்கமும் அடிப்படையற்றவை.
Last Updated on Tuesday, 30 October 2012 10:54
"சுயநிர்ணயம்" பேசும் சந்தர்ப்பவாதிகளை அரசியல்ரீதியாக இனம்காணல்
- 29 October 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
கொள்கையளவில் "சுயநிர்ணயத்தை" ஏற்றுக்கொள்வதன் மூலம் தாங்கள் சரியான அரசியலைக் கொண்டிருப்பதாகக் காட்டும் சந்தர்ப்பவாதிகளின் கோட்பாட்டு அடித்தளம், அரசியல்ரீதியாக எப்படிப்பட்டது? ஒடுக்குமுறையாளன் முதல் பிரிவினைவாதி வரை "சுயநிர்ணயத்தை" தனக்குச் சார்பாக விளக்கி, செயல்படுவதைக் காண்கின்றோம். "சுயநிர்ணயத்தை" முன்னிறுத்தி அரசியலை குறுக்கிவிடுகின்ற செயல்பாடுகள், அரசியல் அரங்கில் அரங்கேறுகின்றது. "சுயநிர்ணயத்தை" ஏற்றுக்கொள்ளாதவர்களின் அரசியல் செயற்பாடு தவறானது என்று குறுக்கிக் காட்டிக்கொள்வதன் மூலம், தங்களைச் சரியான கோட்பாட்டை கொண்டு செயல்படுபவர்களாக நிறுவ முனையும் அரசியல் போக்கு இன்று முனைப்புப் பெற்றிருக்கின்றது.
Last Updated on Monday, 29 October 2012 19:15
தொடரும் இனவாத, மதவாத தாக்குதல் முறியடிக்க, ஒரு அணியில் அணிதிரள்வோம்
- 29 October 2012
- தமிழரங்கம்
- Section: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -
- புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
அனுராதபுரத்தில் உள்ள மல்வத்து ஓய சிங்க கனுவ பள்ளிவாசலும், மதரஸா மதக்கல்வி நிறுவனமும் 26.10.2012 இரவு 10 மணியளவில் இன-மதவாத வெறிக்கும்பலால் தீ வைக்கப்பட்டுள்ளன. சிறுபான்மை இனங்கள், சிறுபான்மை மதங்கள் மீது வன்முறை சார்ந்த பேரினவாதிகளின் தாக்குதல்கள், ஒடுக்குமுறைகள் மகிந்த பாசிச அரசின் ஆசியுடன் தொடர்கின்றன. சிறுபான்மை இனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் மீதான தொடர்ச்சியான அடக்குமுறை மற்றும் தாக்குதல்கள் மூலம் இனங்களிற்கு இடையிலும், மதங்களுக்கு இடையிலும் பிளவை ஏற்படுத்தும், அரசினது தொடர்ச்சியான செயற்பாடாகவே இது உள்ளது.
Last Updated on Tuesday, 30 October 2012 10:53
சோவியத்யூனியனில் குருச்சேவ் நடத்திய முதலாளித்துவ மீட்சி - இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் - 7
- 27 October 2012
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2012
ஸ்டாலின் அவதூறுகளை பொழிவோர் அனைவரும், குருச்சேவ் நடத்தியதை முதலாளித்துவ மீட்சியாக ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக குருச்சேவ் சோசலித்தின் பாதையை ஸ்டாலினிடம் இருந்து மீட்டு எடுத்தார் என்பதே, அவர்களின் அடிப்படையான கோட்பாடாகும். இதையே ஏகாதிபத்தியம் முதல் டிராட்ஸ்கியவாதிகள் வரை கைக்கொள்ளும் அடிப்படையான அரசியல் வரையறையாகும். ஆனால் உள்ளிருந்து முதலாளித்துவ மீட்சிகான அபாயத்தை லெனின் தீர்க்க தரிசனமாக விளக்கும் போது, “சிறு உடமையாளர்கள் நமது கட்சிக்குள் மேலாதிக்கம் பெறுவதற்கு, அதுவும் மிக விரைவாகப் பெறுவதற்கு எதிராக நமது கட்சிக்குள்ள பாட்டாளி வர்க்கத்தன்மை என்பது தன்னைச் சிறிதும் பாதுகாத்துக் கொள்ளாது என்று, சாதுர்யமுள்ள வெண்படையினர் அனைவரும் நிச்சயமாக நம்புகின்றனர்” என்றார். மீட்சிக்கான வர்க்க கூறுகள் தொடர்ச்சியாக உருவாவது, வர்க்க அமைப்பில் தவிர்க்க முடியாத அரசியல் நிகழ்ச்சி நிரலாகவே உள்ளது.
Last Updated on Saturday, 27 October 2012 17:05
More Articles...
- 13வது திருத்தச் சட்டத்தை நீக்க முனைவதன் மூலம், இனவக்கியத்தை மேலும் சிதைக்க முனைகின்றனர்
- முன்னிலை சோசலிசக் கட்சியும் புதிய திசைகளும்
- தேவனின் திருச்சபை! மாஃபியாக்களின் கருப்பை!!
- மக்கள் போராட்டத்தை நடத்த நாம் தயாராகிவிட்டோமா?
- சிங்கள மக்களுடன் சேர்ந்து போராட நாங்கள் தயாராக இருக்கின்றோமா?
- இன்று வரை தொடரும் ஸ்டாலின் அவதூறின் அரசியல் எது? - இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 6
- யாருக்காய் இந்த உயிர்போகிறது
- அப்போலோ11ம் அடிமைப்பட்டுக்கிடக்கும் மக்களும்
- மீண்டும் அப்பாவாகிறேன்....
- சிங்கள மக்களுடன் இணைந்து போராடக் கூடாது என்று கூறும் குறுந்தேசியவாதிகள்