உனதன்னையைத் தங்கையை
காமவெறியினில் குதறியும் புணர்வாயோ?
உடலத்தைத் தின்றபின உயிரென மதியாய்
யோனி கிழித்துக் கொலைவெறி கொண்டவனே!
நீயோர் அன்னையின் வயிற்றினில் பிறந்தனை தான்
உன்னை வளர்த்தது நிச்சயம் அவள் இலை தான்!
யாரோ யாரெவரோ?
Thu05022024
Last update11:47:46 am
2020 தேர்தல் குறித்து, யாழ் மையவாத சிந்தனையானது முட்டுச் சந்தியில் வந்து நிற்கின்றது. எது பாதை என்று குழம்புகின்றது, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முனைகின்றது.
தமிழ் இனவாதமும், பிரதேசவாதமும், மதவாதமும், சாதியமும் பேசுகின்ற தங்கள் மனித விரோத வக்கிரத்துக்கு வாக்களிக்கக் கோருகின்றனர். மறுபுறம் ஒடுக்குபவனுடன் சேர்ந்து அபிவிருத்தி – வேலைவாய்ப்பு என்று கூறி, ஒடுக்கப்பட்டவன் மற்றொருவனுக்கு அடிமையாக இருக்க வாக்களிக்குமாறு கோருகின்றது. இன்று தேர்தல் வெற்றிக் கனவுகளுடன் பயணிக்கின்றவர்களின் அரசியல் சார...
அளவிலும்; பண்பிலும் ஒடுக்குமுறைகள் வேறுபட்டாலும், ...
அமெரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கு எதிராக, மக்கள் போர...
கொரோனா வைரஸ் தொற்றும் - மரணங்களும், கொரோனாவின் இயற...
செல்வந்தர்கள் தொடர்ந்து செல்வத்தைக் குவிப்பதையே, ம...
உனதன்னையைத் தங்கையை
காமவெறியினில் குதறியும் புணர்வாயோ?
உடலத்தைத் தின்றபின உயிரென மதியாய்
யோனி கிழித்துக் கொலைவெறி கொண்டவனே!
நீயோர் அன்னையின் வயிற்றினில் பிறந்தனை தான்
உன்னை வளர்த்தது நிச்சயம் அவள் இலை தான்!
யாரோ யாரெவரோ?
Last Updated on Sunday, 13 January 2013 14:15
பொருத்தமான மிகச் சரியான தீர்ப்பு. ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட நீதியை பறைசாற்றிய நீதிமன்றங்களின் போலித்தனத்தை துகிலுரிந்து, இறுதியில் அதைத் தூக்கில் ஏற்றி இருக்கின்றனர். இனி நாங்கள் மட்டும் தான், இடையில் நீதிமன்றம் போன்ற இடைத் தரகுக்கு இடமில்லை என்று பாசிட்டுகள் எந்தப் பாசங்குமின்றி சொந்தப் பிரகடனத்தை பாராளுமன்றம் மூலம் செய்து இருக்கின்றனர். யாராவது இதை எதிர்த்து மக்களை அணிதிரட்டினால் போட்டுத்தள்ளுவோம், எங்களோடு இருப்பவர்கள் இதை எதிர்த்தால் தலை உருளும். இது தான் நடைமுறையில் உள்ள எழுதப்படாத சட்டமும், தீர்ப்பும். நீதிமன்றங்கள் இதற்கு கொள்கை விளக்கம் வழங்குவதைத் தவிர, இதை மீறி விளக்கம் கொடுக்கக் கூடாது.
Last Updated on Saturday, 12 January 2013 10:22
ரிசானாவை ஷரியா சட்டம் மூலம் கொன்றதால் அதைப் போற்றும் மதக் காட்டுமிராண்டிகள். சட்டம் என்பது உள்நாட்டு விவகாரம் என்று கூறி, கொன்றதை நியாயப்படுத்தும் அரச பயங்கரவாத பாசிட்டுகள். ரிசானா கொல்லப்பட மத அடிப்படை வாதமும், அரச பாசிசமும் ஒன்றுக்கு ஒன்று துணையாக தூணாக இருந்தது. ஒரு ஏழை, ஒரு தொழிலாளி, ஒரு அபலைப் பெண், ஒரு குழந்தை, அன்னிய நாட்டு கூலி உழைப்பாளி … என்று சமூகத்தில் அடிநிலையில் எந்த சமூக ஆதாரமுமற்றவர்களைக் குற்றவாளியாக்கி கொன்றிருக்கின்றது ஷரியா சட்டமும், அரச பாசிசமும்
Last Updated on Friday, 11 January 2013 08:43
ரிசானாக்களின் வியர்வையும்
இரத்தமும் தசைகளும் பிழியப்பட்டு
மன்னர்களும்,
ஆளும்அரசதிகாரமும் கொலுவீற்றிருக்கும்
யமன்களின் தர்ப்பாரில்
வறுமையின் கதறலுக்கு சிரச்சேதம் செய்து
தீர்ப்பெழுதியிருக்கிறார்கள
சென்றுவா ரிசானா,
Last Updated on Thursday, 10 January 2013 11:14
இலங்கையினைப் பொறுத்த வரையில் பத்திரிகைத்துறையினைத் தவிர எந்தத்துறையிலும் தங்களது தொழிலைச் சரியாகச் செய்தவர்கள் எவரும் அவர்களது உயிரினை விலையாகக் கொடுக்கவில்லை.
கடந்த சில வருடங்களாக நாட்டினது சுதந்திர ஊடகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன. இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன, குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டிருக்கின்றன, சீல் வைக்கப்பட்டிருக்கின்றன மற்றும் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றன.
Last Updated on Wednesday, 09 January 2013 08:39
இது ஒருசுனாமியல்ல
சூழ்ச்சிகள் திரண்டழித்த வரலாறு
நீதியும் மனிதநேயக் குரல்களும்
படைகளை சூழவிட்டு
பரிதவித்த உயிர்களை பலியிட்ட அழிப்பு
பொறிக்குள் வீழென
காவுகொடுக்கப்பட்ட காட்டிக்கொடுப்பு
கோலாலம்பூர் சேதிகள்
Last Updated on Tuesday, 08 January 2013 17:49
இது சொந்த இன ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து நிற்கும் இனவாதமாகும். இப்படி தன்னை மூடிமறைத்த சுயநிர்ணயம், நேரடியான இனவாதத்தை விட ஆபத்தானதும், அபாயாகரமானதுமாகும். தனக்கான நேரம் வரும் வரை அது தன்னை வெளிப்படுத்துவதில்லை. தன்னை ஒடுக்கப்பட்ட வர்க்கப் பிரதிநிதியாகக் காட்டிக் கொண்டு, அதிகம் நாசம் செய்கின்ற இனவாதமாகும். இதை அரசியல்ரீதியாக, கோட்பாட்டுரீதியாக இனம் கண்டு கொள்வது இன்று அவசியமாகின்றது. சுயநிர்ணயத்தின் பின் ஒளித்துப் பிடித்து விளையாடுவதை நாம் அனுமதிக்க முடியாது.
Last Updated on Saturday, 05 January 2013 20:12
தமிழ், சிங்கள மொழி பேசும் மக்கள் இணைந்ததான புதிய வரவு தான் "போராட்டம்"பத்திரிகை. ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக, இனவாதிகளுக்கு எதிராக, எல்லாவகையான சமூக ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக “போராட்டம்” போராடும்.
இலங்கையிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் இது வெளியாகின்றது. மக்களை வழிகாட்டக் கூடிய முற்போக்கான தமிழ் பத்திரிகை இல்லாமையை இது நிவர்த்தி செய்யும். இந்த வகையில் "போராட்டம்" பத்திரிகை இலங்கையில் இருந்து பல்வேறு தடைகளைக் கடந்து வெளிவருகின்றது.
Last Updated on Saturday, 05 January 2013 17:23
இராணுவத்துக்குத் தாம் இணைக்கப்படுகின்றோம் என்று தெரியாது எப்படி அந்தப் பெண்கள் இணைக்கப்பட்டனரோ, அதேபோல் தமிழினவாதிகள் பாலியல்ரீதியாக அந்தப் பெண்களுக்கு தெரியாமலே அவர்களை ஊடகம் மூலம் வன்புணர்ந்துவிட்டனர். இந்தப் பெண்கள் அவர்களுக்கு தெரியாமலே இராணுவத்தில் இணைக்கப்பட்டனர் என்ற உண்மையை ஒத்துக்கொள்ள இராணுவம் எப்படித் தயாரில்லையோ, அப்படி தமிழினவாதிகளும் தாங்கள் இந்தப் பெண்களை பாலியல்ரீதியாக ஊடகம் மூலம் வன்முறைக்கு உள்ளாக்கியதை ஒத்துக்கொள்ளத் தயாரில்லை. இந்த உண்மையை மூடிமறைக்க மனநல மருத்துவரைப் பற்றிய விவகாரமாக, அவரின் நடத்தை பற்றிய ஒன்றாக இதை மாற்றிவிட முனைகின்றனர். இந்தப் பெண்கள் "பாலியல் வன்முறைக்கு" உள்ளானதாக கூறி முன்னெடுத்த இனவாத அவதூறுப் பிரச்சாரத்தை, மனநல மருத்துவருக்கு முன்னமே முதலில் நாம் அம்பலப்படுத்தினோம். நாம் இதை முதலில் அம்பலப்படுத்திய பின்னர் தான், மனநல மருத்துவரின் இதை ஒத்த கருத்துகள் வெளியாகியது.
Last Updated on Thursday, 03 January 2013 21:15
இலங்கை முழு மக்களையும் அடக்கியாள, அரசு தொடர்ந்தும் இனவாதத்தையே முன்தள்ளுகின்றது. சிறுபான்மை இனங்களை ஒடுக்குவதன் மூலம், பெரும்பான்மை மக்களை தங்களுடன் இணைந்து இனவாதியாக இருக்குமாறு கோருகின்றது. இலங்கை மக்களை அடக்கியாள, அரசு கையாளும் இனவாதக் கொள்கை இதுதான்.
மக்களுக்காக வேறு எந்த தேசிய சமூக பொருளாதாரக் கொள்கையும் அரசிடம் கிடையாது. இன்று இலங்கையில் அபிவிருத்தி என்ற பெயரில் நடந்தேறுவது, இலங்கையில் தங்கள் மூலதனத்தை பெருக்க வரும் வெளிநாட்டு மூலதனம் தான். அது உற்பத்தி மூலதனமாக, தரகுவர்த்தகமாக, கடன் சார்ந்த நிதிமூலதனமாக வருவதும், அது தன்னை பெருக்கிக் கொள்ள முனைவதைக் காட்டி, அதையே தான் நாட்டின் அபிவிருத்தி என்கின்றது அரசு. இதுவே அரசின் கொள்கையாகிவிட்டது. இதற்கு வெளியில் வேறு கொள்கை எதுவும் அரசுக்குக் கிடையாது. நாட்டையும், நாட்டு மக்களின் உழைப்பையும் அன்னிய மூலதனம் திருடிச் செல்வது தான் அபிவிருத்தி என்று அரசு காட்டுகின்றது. இதை மூடிமறைத்துப் பாதுகாக்க, இனவாதத்தை தூண்டிவிடுவதை அரசு தன் கொள்கையாகக் கொண்டு செயற்படுகின்றது.
Last Updated on Tuesday, 01 January 2013 22:51
இந்தப் புத்தாண்டில் புதிதாகச் சிந்திப்போம். புதிய மனிதனாக வாழ முனைவோம். எம்மைச் சுற்றிய குறுகிய வட்டங்கள், சிந்தனைகள் இந்தப் புத்தாண்டில் தகரட்டும். எமது அறிவு வளரட்டும். வாழ்க்கை நடைமுறைகள் மனிதத்தன்மை கொண்ட ஒன்றாக வளரட்டும்.
என்னைப் போன்று ஒடுக்கப்பட்ட சக மனிதனை எதிரியாகப் பார்க்கும் எம் குறுகிய மனபாங்கையும், அது சார்ந்த நடத்தையை இந்தப் புத்தாண்டில் கைவிடுவதன் மூலம், மனித தன்மையை மீட்டு எடுப்போம். சக மனிதன் எம்மை எதிரியாகப் பார்த்தால், நாம் எதிரியல்ல என்பதை அவனுக்கு புரியவைப்போம். இது தான் புத்தாண்டு செய்தியாகட்டும்.
Last Updated on Tuesday, 01 January 2013 01:23
அமைப்புக் குறித்தும், அதில் உள்ள தனிநபர்கள் குறித்துமான, அவதூறுகள் அடிக்கடி வெளிவருகின்றது. அரசியல் அடிப்படையும், ஆதாரமுமற்ற இந்த அவதூறுகள், கடந்தகால இயக்கப் பாணியிலானது. "துரோகி", "தியாகி" என்று எப்படி மொட்டையாக முத்திரை குத்தி அரசியலை நடத்தினரோ, அதையே மீள இன்று தொடர்ந்து செய்கின்றனர். எம்மை "மாபியாக் கும்பல்" "லும்பன்கள்" "ஏகாதிபத்திய ஏஜண்டுகள்" "அரசு சார்புக் கும்பல்;" "புலி சார்புக் கும்பல்" "கும்பல்" … என்று தொடங்கி தனிநபர்கள் பற்றி தங்கள் கற்பனைக்கு ஏற்ப இட்டுக்கட்டிய அவதூறுகளை தங்கள் அரசியலாக்கி முன்னெடுக்கின்றனர்.
Last Updated on Monday, 31 December 2012 20:44
'பொது" என்று சொல்லிக் கொள்ளும் ஏதோ ஒரு'சேனா" சுற்றித் திரிவதாக நாங்கள் சொன்னோம். அது மட்டுமல்ல பைத்திய நாய்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறும் நாங்கள் சொன்னோம். அப்படி சொன்ன பிறகு, 'ஜனரல" அலுவலகத்துக்கு ஓய்வே இல்லை.
Last Updated on Wednesday, 26 December 2012 08:25
புலம்பெயர் ஊடகங்களின் ஆணாதிக்க வக்கிரம்
புலம்பெயர் ஊடக வட்டாரத்தில், BBC தமிழ்சேவை தொடக்கம், தமிழினவாத புலிகளின் ஊடகங்கள் ஈறாக, அதிதீவிர மாவோயிசம் கதைக்கும் "இடதுசாரி" இணயங்கள் வரை, நேரடியாகவும், மறைமுகமாகவும் ராணுவத்தில் இணைக்கப்பட்ட பெண் பிள்ளைகள், இலங்கை ராணுவத்தால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகப்பட்டதாக செய்திகள் வெளியிட்டன. அச் செய்தியை தமக்கு நம்பிக்கையான தகவலாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்டதாக மேற்படி ஊடகங்கள் கூறின. எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற் போல், மற்ற ஊடகங்களுக்கு ஒருபடி மேலே போய், ஐரோப்பாவில் அதிதீவிர மாவோயிசம் கதைக்கும் "இடதுசாரி" தமிழ் இணயமொன்று, "16 பெண்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் மனநோய் இராணுவத்தினருக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டனர்?" எனச் செய்தி வெளியிட்டது. அத்துடன் "மனநோய் இராணுவத்தினருக்கு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டனர்?" என்ற தகவல், இலங்கையிலிருந்து சிங்களம் பேசும் தகவலாளர்களிடமிருந்து கிடைத்த தகவல் எனக் கூறியது.
Last Updated on Friday, 21 December 2012 06:29
சக மனிதர்கள் இன்னொரு மொழியை பேசுகிறார்கள் என்பதனாலேயே அவர்களை கொல்லப்பட வேண்டியவர்கள். அவர்கள் வேறொரு பண்பாட்டை கொண்டிருக்கிறார்கள் என்பதால் கீழ்ப்பட்டவர்கள். பிறிதொரு மதத்தை பின்பற்றுவதால் கேலி செய்யப்பட வேண்டியவர்கள். நாங்கள் கத்தரிக்காயை சாப்பிடுபதால் உயர்ந்தசாதியினர், அவர்கள் கணவாய் உண்பவர்கள் தாழ்ந்த சாதியினர், மூடச்சிங்களவன், பறத்தமிழன், கள்ளத்தோணி இந்தியத்தமிழன், தொப்பிபிரட்டி முஸ்லீம்கள் என்று பட்டங்கள். இப்படியான மண்டை கழண்ட சிந்தனைகள் மூலம் மக்களை பிரித்து ஒருத்தரை ஒருவர் வெறுக்கச் செய்து அதன் மூலம் மக்களின் உண்மையான பிரச்சனையான பொருளாதாரப் பிரச்சனைகளிற்கு மற்றவர்கள் தான் காரணம் என்று மனங்களை மதிமயங்க வைத்து இலங்கைத்தீவு எங்கும் இரத்த வெள்ளம் ஓட வைத்தார்கள்.
Last Updated on Wednesday, 19 December 2012 21:25
இரு இணையச் செய்திகள்
"பாலியல் ரீதியாக துன்புறுத்தி பின்னர் மனநோயாளி என்றுஅனுமதித்துள்ளார்கள்!
பலவந்தமாக இராணுவத்தில் இணைக்கப்பட்ட 100பெண்களில் 21பெண்களுக்கு என்ன நடந்தது? 30 பெண்களை கிளிநொச்சிவைத்தியசாலையில் அனுமதித்தோம் என்று இராணுவம் கூறியது பொய்!
அப்படி என்றால் 9 பெண்களுக்கு என்னநடந்தது? பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் தந்தை... அதிர்வு இணையத்துக்கு வழங்கிய இரகசியத்தகவல்"
Last Updated on Wednesday, 19 December 2012 21:24
பொலீசாரின் விசாரணைப் பிரிவிலிருந்து கொழும்பு நீதவான் நீதி மன்றத்துக்கு கொண்டு வரப்படுகின்றேன். இவ்வளவு காலமும் விசாரணை கைதியாக இருந்த நான் அந்த நிமிடத்திலிருந்து நீதி மன்ற பொறுப்புக்கு மாற்றப்படுகின்றேன். நீதிமன்றத்திலிருந்து சிறைச்சாலை நிருவாகம் என்னை பொறுபெடுக்கும் வரை நீதிமன்ற வளாகத்திலுள்ள செல்லில் அடைத்து வைக்கப்படுகின்றேன்.
சிறைச்சாலையிலிருந்தோ அல்லது பொலிஸ் விசாரணையின் நிமித்தம் சிறைச்சாலைக்கு கொண்டுவரப்படும் கைதிகளை, நீதிமன்றில் அவர்களது பெயர் அழைக்கப்படும்வரை நீதிமன்ற வளாகத்திலுள்ள சிறைக் கூண்டில் அடைத்து வைப்பது வழக்கம்.
Last Updated on Friday, 14 December 2012 10:33
கடந்த 27-28-29-30 ம் திகதிகளில் யாழ்ப்பாண பழ்கலைக்கழகத்தில் பாரிய அத்து மீறல்கள் இடம்பெற்றிருக்கின்றன.மாணவ தலைவர்கள் செயலாளர்கள் என பலர் கைது செய்யப்பட்டுள்ளர் இன்று வரைக்கும் எதுவித விசாரனையும் நடத்தப்படவில்லை.இறந்த தங்களது உறவினர்களுக்காக தீபம் ஏற்றிய யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீது இராணுவத்தரால் காடைத்தனமான அடக்கு முறை பிரயோகிக்கப்பட்டுள்ளது.போலி அபிவிருத்தியைக் காட்டி இளைஞர்களை அவர்களது வலையில் சிக்க வைக்க இந்த அரசு எத்தனிக்கிறது.
Last Updated on Friday, 07 December 2012 16:58
மாவீரச் செல்வங்களை
மடியிருத்திக் காக்கின்ற ஈழமண்ணே
நீ வருந்தி
வெடிக்கும் விம்மல்
பாரொலிக்கக் கேட்கிறது
யார் வந்தார் எமைக் காக்க..?
எமை மீட்க..?
Last Updated on Thursday, 06 December 2012 13:08
அடக்குமுறைக்கெதிராக போராடும் தமிழ் தேசிய இனத்தின் துடிப்பான மாணவர் மற்றும் இளையோர் அணிகளை கலாச்சார சீரழிவுகள் மூலம் திசை திருப்பி, அல்லது அச்சுறுத்தி, அடக்கி ஒடுக்குகின்றது ஸ்ரீ லங்கா பேரினவாத பாசிச அரசு. இதன் மூலம் தமிழ் தேசிய இனம், தனது அடிப்படை உரிமைகளை கூட ஸ்ரீ லங்கா பேரினவாத பாசிச அரசிடமிருந்து போராடாமல் பெறமுடியாது என்று மீண்டும் மீண்டும் அடித்துக்கூறுகிறது.
Last Updated on Tuesday, 04 December 2012 15:51
வெறும் கண்டனங்களைக் கடந்து, இதை நாம் கூட்டாக எதிர்கொள்வது எப்படி என்பதே எமது அக்கறை. இந்த சம்பவத்தை குறுகிய அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்துவதைக் கடந்து, எமது சமூகத்தின் மீதான அரசியல் பிரச்சனையாக கருதியே இதை அணுகுகின்றோம்.
இந்த வன்முறை மூலம் அரச பயங்கரவாதம் எமக்குக் கூறுவது என்ன? பேரினவாதத்துக்கு அடங்கிப் போ என்கின்றது. மறுதளத்தில் இதற்கு எதிரான போராட்டம், வரலாற்றுப் பொறுப்புடன் இதை வழிகாட்டக் கோருகின்றது. இந்த வன்முறை தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவ தலைவர்களுடனான எமது உரையாடல் மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள் சார்ந்து இதை விவாதிக்கின்றோம்;. தொடரும் அரச பயங்கரவாதத்தை எதிர்காலத்தில் எப்படி எதிர்கொள்வது என்பதே, எம் முன்னுள்ள சவால். இது பற்றியதே எமது விவாதம்.
Last Updated on Sunday, 02 December 2012 09:32
ஒரு பேப்பர் என்ற பத்திரிகையின் ஆசிரியர் நீங்களுமா நுஃமான் என்ற கட்டுரையை காலச்சுவட்டிலும்,அனேக கவிஞர்கள் அடிமை வியாபாரிகளாக மாறினர் என்ற கட்டுரையை தனது ஒரு பேப்பர் பத்திரிகையிலும் எழுதுகிறார். இரண்டுமே பேராசிரியர் நுஃமான்,காலச்சுவட்டிற்கு எழுதிய புலிகள் மக்களை நடுக்கடலில் விட்டுவிட்டு நந்திக்கடலில் குதித்துவிட்டனர் என்ற கட்டுரை குறித்த எதிர்வினைகள் தான். காலச்சுவட்டில் அவர் புலிகளைப் பற்றி பின்வரும் விமர்சனங்களை வைக்கிறார்.
1. நம் தேசியத் தலைவர் காலத்தைச் சரிவரக் கணிக்கவில்லையோ எனும் சம்சயம் எனக்குண்டு.
2.அவர் இழைத்த தவறுகளில் மகாத்தவறு என்று யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதைத்தான் கூறுவேன்.
Last Updated on Saturday, 01 December 2012 10:26
மாக்சிய லெனினியக் கட்சி எனும் போது நாம் புரட்சிகர அரசியற் பாதையை முன்னெடுக்கும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியையே கருத்திற் கொள்கிறோம். இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டபோது அது புரட்சிகர அரசியலை மனதிற்கொண்டே உருவானது. அதன் செயற்பாடுகளிற் போதாமைகள் இருந்திருப்பினும், அதை ஒரு மாக்சிய லெனினியக் கட்சியாகக் கருதுவது தவறல்ல. அன்றைய சர்வதேசக் கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் மாக்சிய லெனினிய இயக்கமாகவே நாம் கருத இயலும். கம்யூனிச இலட்சியத்தையும் நிலைப்பாட்டையும் புரட்சிகர அரசியலையும் போராட்ட அணுகுமுறையையும் கொச்சைப்படுத்தும் முயற்சிகள் எப்போதுமே முன்னெடுக்கப்பட்டுள்ளன. முதலாளியத்துடனும் ஏகாதிபத்தியத்துடனும் சமரசம் காணுகிற போக்கை நாம் ஐரோப்பியக் கம்யூனிஸ்ற் கட்சிகள் பலவற்றினுட் –குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு– காண முடிந்தது. எனினும், உலகின் முதலாவது சோஷலிச அரசான சோவியத் யூனியனில் நவீன திரிபுவாதம் அதிகாரத்திற்கு வந்த பின்பே, உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகளில் திரிபுவாதம –அதாவது மாக்சிய லெனினிச மறுப்பு– வெளிப்படையாகத் தலையெடுத்தது. அதற்குச் சோவியத் ஒன்றியக் கம்யூனிஸ்ட் கட்சியும் சோவியத் ஒன்றிய அரசும் ஆதரவாயிருந்தன. கட்சிகளுள் இருந்த மாக்சிய லெனினியர்கள் தமது கட்சிகள் மாக்சிய லெனினியத்திலிருந்து திசை விலகுவதை எதிர்த்து உட்கட்சிப் போராட்டங்களை நடத்தினர். அதன் பயனாகப் பல கட்சிகள் பிளவுண்டன. சில கட்சிகள் உடைவின்றி மாக்சிய லெனினியப் பாதையைப் பின்பற்றின. அரசுகளின் மீது சோவியத் ஆதிக்கம் வலுவாக இருந்த இடத்து, மாக்சிய லெனினியர்கள் கட்சிகளிலிருந்து ஒதுக்கப்பட்டுச் சிறுகுழுக்களாகவே இயங்க முடிந்தது.
Last Updated on Friday, 30 November 2012 12:06