இசைப்பிரியா பிணம் தின்னும் கழுகளால் சிதைக்கப்பட்டாள். பலநாள் தூக்கமின்றி பசியாலும், பயத்தாலும் பதைதைத்து வந்தவளை இலங்கையின் இனவெறி இராணுவம் இரத்தம் குடித்து கொலை செய்திருக்கிறது. நிற்பதற்கு கூட முடியாமல் நிலைதடுமாறி வந்தவளை கட்டி வைத்து அந்த கயவர்கள் கதை முடித்திருக்கிறார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் என எத்தனையோ ஆயிரம் தமிழ்மக்கள் புதைந்த அந்த கடற்கரை மண்ணில் கானம் பல இசைத்த அந்த பாட்டுக்குயிலின் கடைசிமூச்சை பறித்திருக்கிறார்கள்.
சென்று வா தாயே, ஒரு நாள் பகை முடிப்போம்!!
- 07 November 2013
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- விஜயகுமாரன்
Last Updated on Thursday, 07 November 2013 20:08
மார்க்சியம் சமூக விஞ்ஞானமானது எதனால்? - மார்க்சியம் - 04
- 06 November 2013
- தமிழரங்கம்
- Section: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -
- போராட்டம் பத்திரிகை 04
மனிதர் வாழ்வதற்கு அவசியமான பொருட்களைப் பெறுவதற்கான மனித உழைப்புக்குள்ளும், நுகர்வுக்குமுள்ளுமான முரண்பாடுகள் பற்றி முரணற்ற வகையில் விளக்குகின்றது மார்க்சியம். உழைப்பு மற்றும் நுகர்வில் இருந்து மனிதனை அந்நியமாக்கும் முரண்பாடுகள், மனித உறவுகளை வர்க்கரீதியான உறவாக்குகின்றது. மனிதனுக்கு எதிரான இந்த தனிவுடமை சமூக அமைப்பை, மார்க்சியம் தலைகீழாகப் புரட்டிக் காட்டுகின்றது. சாராம்சத்தில் மனித வாழ்விற்கான வர்க்கப் போராட்டமாகவே மனித வாழ்வு இருப்பதை மார்க்சியம் எடுத்துக் காட்டுவதால், மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானமாக இருக்கின்றது. மார்க்சியம் ஒரு சமூக விஞ்ஞானமே ஒழிய, வெறும் அறிவு சார்ந்த தத்துவமல்ல. வர்க்கப் போராட்டத்தின் மீதான இயங்கியல் தான் மார்க்சியம். வர்க்கங்களற்ற சமுதாயத்தை படைக்கும் போராட்டமாகவே வாழ்வுக்கான மனிதப்போராட்டம் இருப்பதை, சமூக விஞ்ஞானமான மார்க்சியம் முரணற்ற வகையில் முன்வைத்து அமைப்பாக்கி இருக்கின்றது.
Last Updated on Friday, 29 November 2013 08:31
வட-கிழக்கில் பெண்கள் ஆயுதமேந்தியமை முன்னேற்றமான நிலைமைகளை உருவாக்கியது.
- 05 November 2013
- தமிழரங்கம்
- Section: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -
- போராட்டம் பத்திரிகை 03
வடக்கு-கிழக்கில் பெண்கள் போராளி குழுக்களில் இணைந்து ஆயுதமேந்தி வீரத்துடன் ஆண்களுக்கு நிகராக, ஆண்களுடனே மோதி இருந்தார்கள். இந்நிலைமை சமூகத்தில் பெண்கள் தொடர்பான முன்னேற்றமான நிலைமைகளை உருவாக்கியிருந்தமை குறிப்பிடதக்கது. ஆனால், அவர்கள் மீதும் இன்று அதிகமான அடக்குமுறை பிரயோகிக்கப்படுகின்றது. அவர்கள் யுத்தத்தின் போது கீழ்த்தரமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இன்றும் அவர்கள் மீதான அடக்குமுறைகள் தொடர்கின்றன. அண்மையில் வன்னிப்பிரதேசத்தில் இராணுவத்திற்கு பலவந்தமாக பெண்கள் சேர்த்துக்கொள்ளப்படடதாக செய்திகள் வெளியாகின. வடக்கு-கிழக்கில் நடைபெறுபவற்றில் பெருமளவிளானவை வெளியுலகிற்கு தெரிய வருவதில்லை என சுதந்திரத்திற்கான மகளிர் அமைப்பின் தலைவி திமுது ஆட்டிகல தெரிவித்தார். போராட்டம் பத்திரிக்கைகாக திமுது ஆட்டிகல வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார். அவர் வழங்கிய செவ்வியின் முழுவிபரம் பின்வருகிறது.
Last Updated on Friday, 29 November 2013 08:34
செந்தமிழன் சீமானும் பிறகு இரண்டு கொள்ளைக்காரர்களும்
- 01 November 2013
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- விஜயகுமாரன்
வெற்றுக்கூச்சல்கள், வெறித்தனமான பேச்சுக்கள், நஞ்சைக் கக்கும் இனவெறி இவைகளிற்கு எவ்வளவு முகமூடிகள் போட்டாலும் அவை கழன்று விழ கனநாட்கள் எடுப்பதில்லை. செந்தமிழன், பெரியாரின் பேரன் என்று சிவப்பும், கறுப்பும் கலந்த கலவை நான் என்று எவ்வளவு அரிதாரம் பூசினாலும் சாயம் வெளுக்க வெகுநாட்கள் தேவைப்படவில்லை. பச்சையான இனவாதம் பேசி தமிழனை, தமிழன் ஆண்டால் எல்லாப்பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் என்று பசப்பு வார்த்தைகள் பேசி திரிந்த செந்தமிழன் தமிழ்மண்ணை, தமிழ்மனிதர்களை கொள்ளையடிக்கும் கொள்ளைத்தமிழர்களின் காலில் விழுந்து எழுந்து அந்த தமிழ்தலைமை இது தான் என்று அடையாளம் காட்டுகிறார்.
Last Updated on Friday, 01 November 2013 09:07
வாழ்வதற்க்காக உண்மையைத் தேடும் மனிதன்- மாக்சியம் 03
- 27 October 2013
- தமிழரங்கம்
- Section: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -
- போராட்டம் பத்திரிகை 03
உண்மை தெரிந்து கொள்வதற்காக அல்ல, உண்மையைக் கொண்டு வாழ்வதற்காகவே மனிதன் போராடுகின்றான். மனித வாழ்வை சுற்றிய நிகழ்வுகளையும், காரணங்களையும் தீர்மானிப்பது எது என்று தேடிய மனிதன், எது உண்மை என்று தேடினான்? இந்த வகையில் மார்க்ஸ் கூட இதற்கு விதிவிலக்கல்ல. இப்படித் தேடிய மார்கஸ் 1837 ஆண்டு எழுதினார் "நான் ஆழமான உண்மையைத் தேடுகிறேன். அதைத் தெருவில் கண்டெடுக்கிறேன்" என்றார். இப்படி மார்க்ஸ் தேடிய உண்மையை இறுதியில் தெருவில் (மக்கள் மத்தியில்) இருந்தே கண்டெடுத்தார். இப்படி மார்க்ஸ் கண்டெடுத்தவைதான், சமூக விஞ்ஞானமான மார்க்சியமாகும். இப்படி மக்களின் வாழ்வில், அதன் போராட்டத்தில் இருந்து உருவான தத்துவமே மார்க்சியம் என்பதால், இது இறுக்கிப் போன கோட்பாடு அல்ல. மக்களில் இருந்து அன்னியமான வரட்டுவாதமுமல்ல. மார்க்சியம் மக்களின் வாழ்விலும், அதன் உணர்விலும் இருந்து அன்னியமான தத்துவமல்ல.
Last Updated on Friday, 29 November 2013 08:31
இயற்கை பற்றிய மனித அறிவு, சமூகம் பற்றிய அறிவாகியது எப்படி? - மாக்சியம் 02
- 24 October 2013
- பி.இரயாகரன்
- Section: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -
- போராட்டம் பத்திரிகை 02
மார்க்சியத்தை தெரிந்து கொள்ளாமல், உலகை நாம் முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. மார்க்சியம் மனித சமூகத்தின் நிலவும் சமூக அறியாமையையும், கற்பனைகளையும் மட்டும் போதித்த தத்துவமல்ல. மனித துன்பங்களும் துயரங்களுக்கும் காரணமான சமூக காரணங்களை மட்டும் விளக்குவதுடன் நிற்கவில்லை, அதற்கான தீர்வுகளையும் கூட விஞ்ஞானபூர்வமாக முன்வைக்கின்றது.
Last Updated on Friday, 29 November 2013 08:31
மாற்றத்துக்கு வழி திறக்கிறது - மாக்சியம் 01
- 21 October 2013
- தமிழரங்கம்
- Section: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -
- போராட்டம் பத்திரிகை 01
"நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயற்பாடே, பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாகிறது!" என்றார் கார்ல் மார்க்ஸ். அவர் அப்படி வாழ்ந்தார் என்பதால், உலகமே அவரிடம் இருந்து கற்கின்றது. உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் வழிகாட்டியாகவும், ஆளும் வர்க்கத்தின் எதிரியாகவும் இருக்க முடிகின்றது. அவர் மரணித்து 130 வருடம் கடந்த நிலையில், இதுதான் எதார்த்தம். எந்தத் தத்துவத்தாலும், எந்த நவீனத்துவத்தாலும் அவர் எடுத்துக் காட்டிய உண்மைகளை மறுத்துவிடவோ மாற்றிவிடவோ முடியவில்லை.
Last Updated on Friday, 29 November 2013 08:30
தமிழ் மக்களை தோற்க்கடித்த தேர்தல்!
- 10 October 2013
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- தேவன்
தேர்தல் என்றால் என்ன..? மக்களின் வாக்குக்களை வாங்கி பதவிக்கு வந்து அரசாங்கத்தினை அமைத்து அதிகாரம் செலுத்துவது. அரசியலில் ஒரு தீர்வு.., வாழ்க்கைக்கு ஒரு தீர்வு.., வேலைக்கு ஒரு தீர்வு.., பசி பட்டினி, வதிவிடத்திற்கு ஒரு தீர்வு.., என்ற பலதரப்பட்ட எதிர்பார்ப்புக்களோடு மக்கள் அரசியலில் வாக்களிக்கின்றார்கள். ஆனால் மக்களுடைய எதிர்பார்ப்புக்கள் எதையுமே இந்த அரசியல்வாதிகள் நிறைவேற்றி வைப்பதில்லை.
Last Updated on Thursday, 10 October 2013 06:58
....ஏனென்றால் புரட்சி என்பது வெறும் உணர்வு மட்டுமல்ல- அது நடைமுறை வேலையாகும்!
- 26 September 2013
- பி.இரயாகரன்
- Section: அரசியல்_சமூகம் -
- விருந்தினர்
நோர்வே மார்க்சிய தொழிலாளர் கட்சியை சேர்ந்தவரும், அதன் அரசியல் செயற்பாட்டாளரும், ஐரோப்பா மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாடுகளில் "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி" எனும் அமைப்பில் இயங்கி வரும் இடதுசாரி கொள்கையுடையவருமான தோழர் நியுட்டன் அண்மையில் இலங்கை வந்திருந்த போது, சகோதர மொழியில் வெளிவரும் இடதுசாரி வெகுசன வராந்த பத்திரிக்கை "ஜனரல" (மக்கள் அலை) விற்கு விரிவான நேர்காணல் ஒன்றினை வழங்கியிருந்தார். அதன் மொழிபெயர்ப்பு .
Last Updated on Thursday, 26 September 2013 14:38
லலிதா அன்று ஈழ அகதி, இன்று டென்மார்க்கில் - பிறாண்டா அம்மன்
- 25 September 2013
- பி.இரயாகரன்
- Section: அரசியல்_சமூகம் -
- விஜயகுமாரன்
இவர் 9 வயது சிறுமியாக இருந்தபோது அபிராமி அம்மனால் ஆட்கொள்ளப்பட்டார். மனித உருவில் அவதரித்த அபிராமி அம்பாள் தான் மாதாஜி அபிராமி உபாசகி என்பதில் ஐயமேதுமில்லை. இப்படி இவர் வளர்ந்து வருகையில் ஒன்பதாவது வயதில் இந்த மாதாஜி அவர்களுக்கு கனவில் அபிராமி அம்மன் தோன்றி 'நான் உன்னிடம் வருவேன்' என்றும் 'என்னை ஆதரிக்க வேண்டும்' என்றும் கூறினார். பின்பு திருமண காலத்தில் இவருக்கேற்ற ஒரு வாழ்க்கைத் துணையை அபிராமி அம்மாள் தேர்ந்தெடுத்து மணமுடித்து வைத்தார். இவர்களுக்கு பாலமுருகன் போல ஒரு ஆண் குழந்தையையும் அந்த அபிராமி அம்மாள் கொடுத்தார். அம்மா டென்மார்க் நாட்டில் (1994) இருக்கும் போது, அபிராமி அம்மன் அம்மாவின் கனவில் வந்து தன்னை நீ ஆதரிக்கவேண்டும் என்று அடிக்கடி கேட்டுக் கொண்டார்.
Last Updated on Wednesday, 25 September 2013 14:53
முக் குரங்காக வாழென்று..!?
- 17 September 2013
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- மாணிக்கம்
ஈழம் முதற்கொண்டு
பிற தேசம் வரையெங்கும்
முக் குரங்காக வாழென்று...
போலிகள் சொல்வதை - நாம்
நிஜமொடு பார்த்திடும் போதினிலே
எழும் முதற் கேள்விகள் மூன்றினை
வாருங்கள் பாருங்கள் தோழர்களே..!
Last Updated on Tuesday, 17 September 2013 06:53
நல்லூர் கந்தனின் தேர் உலாவும்… தேவலோக கந்தனின் கோபமும்…
- 15 September 2013
- பி.இரயாகரன்
- Section: அரசியல்_சமூகம் -
- தேவன்
"சும்மா இருந்து ஏன் சிரித்துக் கொண்டிருகிறாய்.., மூளை கோளாறாகிவிட்டதா..? ஒரு முகம் கொண்டு நீ சிரிப்பதையே சகித்துக் கொள்ள முடிவதில்லை. ஆறு முகத்தாலை நீ சிரிக்கிறதை பார்க்க பயமாகவுள்ளது..!" – கணேசன்.
"என்னைப் பார்த்து யாரும் பயப்படுவதில்லை. உன்ரை முகத்தைப் பார்த்துத்தான் எல்லோரும் மிரளுகின்றார்கள்!" – கந்தன்.
"உன்னைப் போல பல வேசங்கள் போட்டு சனத்தை நான் ஏமாத்தவில்லை, யாரும் என்னைப் பார்த்து பயப்பட்டதுமில்லை.., எல்லாருக்கும் என்னை புடிச்சுமிருக்கு. விநாயகனே எங்களுக்கு அறிவைத்தா என்று என்னைத் தான் கேட்கிறார்கள்.., உன்னை யாரும் கேட்பதில்லை." – கணேசன்.
Last Updated on Sunday, 15 September 2013 08:30
வடக்கின் தேர்தல், எதிர்பார்ப்பும் எதார்த்தமும்...
- 12 September 2013
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- விருந்தினர்
இன்னும் சில நாட்களில் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. வரலாற்றில் முதன்முறையாக வட மாகாண சபைக்காக நடக்கும் தேர்தல் இதுவாகும். 1987ல் இந்திய-இலங்கை ஆட்சியாளர்கள் சேர்ந்து, வடபகுதி மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு என்ற வகையில் மாகாண சபை முறையை அறிமுகப்படுத்தினார்கள். ஆனால், கடந்த 25 வருடங்களாக வடக்கில் மாகாண சபையை அமைக்க முடியவில்லை என்பதுதான் நகைப்புப்குறிய விடயம். எப்படியிருந்தாலும் இப்போது வடக்கில் மாகாண சபை தேர்தல் நடக்கப் போகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு வேட்பாளர்கள் பல்வேறு விடயங்களைக் கூறிக் கொண்டு உங்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு வாக்களிக்குமாறு கேட்கிறார்கள். அதற்காக பல காரணங்களைக் கூறுகிறார்கள்.
Last Updated on Thursday, 12 September 2013 16:56
இலவசக் கல்வியையும் கல்விச் சுதந்திரத்தையும் வென்றெடுப்போம்!
- 06 September 2013
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- விருந்தினர்
கல்வி அறிவை பெறும் செயற்பாடாகும். எமக்கு முன் இருந்த அனைத்து தலைமுறைகளும் பெற்றுக்கொண்ட அனுபவங்களே அறிவு எனப்படுகிறது. இந்த அனுபவங்கள் அதாவது அறிவு மாபெரும் கடல் போன்ற களஞ்சியமாகும். இந்த களஞ்சியம் மனிதகுலத்தின் மாபெரும் சொத்து. இதற்குள் தான் எம்முன்னோரின் அனுவங்கள் அனைத்தும் சேமிக்கப்பட்டிருக்கின்றன. நியுட்டன், ஐன்ஸ்டீன், எடிசன், லிங்கன், ஹெகல், பிளேட்டோ, ஒளவையார்,வள்ளுவர், மார்க்ஸ், சித்தார்த்தன், விவேகாநந்தர், சேகுவேரா, பாரதி, கமல், கலாம், பிரபாகரன் ஏன், குப்புசாமி, வீரகத்தி, ரவி, அகிலா, விஜி என எல்லோரினதும் அனுபவங்களும் அடங்கும். இந்த அனுபவங்களே எமக்கு அறிவாக கிடைக்கின்றன. இந்த அறிவை பெறுவதற்காகவே நாம் கற்கின்றோம்.
Last Updated on Friday, 06 September 2013 07:39
தேர்தல் அரசியலை ஒடுக்கப்பட்ட மக்கள் பகிஸ்கரிக்க முடியாது
- 29 August 2013
- தமிழரங்கம்
- Section: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி -
- புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
இலங்கையின் மாகாண சபைத் தேர்தல் தொடர்பான புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் நிலைப்பாடு என்பது, பாட்டாளி வர்க்க நலனில் இருந்து நோக்கப்படுகின்றது. இந்த வகையில் தேர்தல் அரசியலை பகிஸ்கரிக்காது அதில் பங்குகொள்ளும் நாம், எதிர் நடவடிக்கையை மேற்கொள்கின்றோம். அதாவது தேர்தலில் பங்குகொள்வதையும் பங்கெடுப்பதையும் பகிஸ்கரிக்கக் கோரும் அதே நேரம், தேர்தல் அரசியலில் பங்குகொள்ளுமாறு கோருகிறோம். இதன் மூலம் இனவாதத்தையும், ஏகாதிபத்திய நலனையும் முன்னிறுத்தி, மக்களை இனரீதியாக பிளந்து ஒடுக்கும் ஜனநாயக விரோத தேர்தலில் பங்குகொள்ளாது பகிஸ்கரிக்கக் கோரும் அதே நேரம், இந்த தேர்தலில் விவகாரமாக்கப்படும் அரசியலை தேர்ந்தறிந்து முன்னெடுக்கக் கோருகின்றோம்.
Last Updated on Thursday, 29 August 2013 08:29
உன்னைப் போல், உன் கத்தோலிக்க அயலானை மட்டும் நேசி..!
- 25 August 2013
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- விஜயகுமாரன்
அறுவைதாசனிற்கு நீரிழிவு, சலரோகம், சர்க்கரை வியாதி என்று பல பெயர்களில் அழைக்கப்படும் வியாதி வந்து விட்டது. எத்தனையோ மருந்து சாப்பிட்டும் அது கட்டுக்குள் அடங்கவில்லை. வைத்தியரைப் போய்ப் பார்த்தான். இரவு உணவு சாப்பிட்ட உடனே நித்திரை கொள்ளக் கூடாது. கொஞ்ச நேரம் உடற்பயிற்சி செய்து விட்டு பிறகு படும் என்று அவர் ஆலோசனை சொன்னார். அறுவைதாசன் அதைப் போய் மனிசியிடம் சொல்லி விட்டு இரண்டு பேரும் சேர்ந்து படுக்கப் போக முதல் உடற்பயிற்சி செய்வோம், உமக்கும் நல்லது தானே என்று மெதுவாக ஜஸ் வைத்தான். நீர் உடம்பை கொஞ்சம் அசைத்தாலே பெரிதாக சத்தம் போடுவீர், இந்த லட்சணத்திலே உமக்கு சேர்ந்து செய்ய வேணுமோ நீர் மட்டும் தனியாக வெளியிலே நடந்து விட்டு வாரும் என்று ஒரேயடியாக மறுத்து விட்டா. இந்தக் கவலையோடு இருந்த நேரத்திலே அய்யாமுத்து வந்து சேர்ச்சிற்கு போக வேண்டும் என்றான்.
Last Updated on Sunday, 25 August 2013 17:53
கொல்ல வரும் அணு உலைகள்
- 20 August 2013
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- விருந்தினர்
“நவீன உலகில் அணுசக்தி எதிர்ப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை…” இது 30 வருடங்களுக்கு மேலாக தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சிசெய்து வரும் இருவரில் ஒருவரான கருணாநிதியின் மகள் கனிமொழி இந்திய நாடாளுமன்றத்தில் ஆற்றிய கன்னி உரையில் குறிப்பிட்ட விடயம். அதிகரித்த சக்தி தேவையின் இடைவெளி ஏற்படுத்திய தடுமாற்றமாகவே அன்று இக் கூற்று கணக்கிடப்பட்டது.
Last Updated on Tuesday, 20 August 2013 14:05
மனிதரைக் கொல்லும் வெற்றிவாகையில் தேசிய இனங்களின் அவமானம்..!
- 14 August 2013
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- மாணிக்கம்
தெற்காசியப் பிராந்தியத்தில், உலகப் பெருமட்டான யுத்தமாக்கி, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆணிவேரை சிறிலங்காவின் அரசு அறுத்தழித்தது. அந்த அழிவுக்குள் எந்தவித நாதியும் அற்று நின்ற ஒரு தொகை தமிழ் மக்களின் உயிர்கள் தொலைக்கப்பட்டது. இதன் போது, புலிமீதான அழிப்பை மட்டும் வல்லாதிக்கர் தனித்து நடந்தியிருந்தால், அது புலியழிப்பு மட்டுந்தான். ஆனால் இவ்வழிவுக்குள் இலங்கையின் ஒரு தேசிய இனம் தொகை மதிப்பின்றி அழிக்கப்பட்டது. அதில், புலிகள் மக்களை யுத்தப் பகுதிக்குள் முடக்கி வைத்திருந்தார்கள் என்பதாகும். ஆனால், அந்தச் சூழலை அரச யுத்தத் தரப்புகளும் தமது யுத்த தந்திரத்தில் அதனையே விரும்பினர்.
Last Updated on Wednesday, 14 August 2013 19:00
மனமும், மனம் சார்ந்த பெண்களும்
- 12 August 2013
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- விஜயகுமாரன்
அறுவைதாசன் அவனிற்கு மிகவும் விருப்பமான ராஜா-ஜானகியின் காலையும் நீயே, மாலையும் நீயே பாட்டைப் போட்டு விட்டு இசைக்கு ஏற்றபடி தலையை ஆட்டிக்கொண்டு சண்முகம் சிவலிங்கத்தின் நீர்வளையங்கள் கவிதைத்தொகுப்பை எடுத்து ஒரு பிரியாவிடை என்ற கவிதையை வாசிக்கத் தொடங்கினான்.
Last Updated on Monday, 12 August 2013 09:24
யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01
- 11 August 2013
- தமிழரங்கம்
- Section: அரசியல்_சமூகம் -
- விருந்தினர்
இன்று போல் 1980 களில் தொடர்ச்சியான அடக்குமுறைகளை மாணவர்கள் எதிர் கொண்டனர். இதன் போது 1986ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், மனிதனாக வாழ்வதற்காக வீதிகளெங்கும் இறங்கிப் போராடினார்கள். அடக்குமுறையால் அடங்கி, ஒடுங்கி உறைந்து கிடந்த தமிழ் சமூகம், மாணவர் போராட்டத்துடன் தனக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்பியதால், தன்னையும் கூட இணைத்துக் கொண்டது.
Last Updated on Sunday, 11 August 2013 18:34
ஒடுங்கி, ஒதுங்கி வாழ்வதா மாணவர் இயல்பு! - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01
- 10 August 2013
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2013
இன்று போல் 1980 களில் தொடர்ச்சியான அடக்குமுறைகளை மாணவர்கள் எதிர் கொண்டனர். இதன் போது 1986ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள், மனிதனாக வாழ்வதற்காக வீதிகளெங்கும் இறங்கிப் போராடினார்கள். அடக்குமுறையால் அடங்கி, ஒடுங்கி உறைந்து கிடந்த தமிழ் சமூகம், மாணவர் போராட்டத்துடன் தனக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்பியதால், தன்னையும் கூட இணைத்துக் கொண்டது.
Last Updated on Saturday, 10 August 2013 15:13
சிங்கள இராணுவமல்ல, மக்களை ஒடுக்கும் இராணுவம்
- 02 August 2013
- பி.இரயாகரன்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2013
அரச பாசிசப் பயங்கரவாதம் வெலிவேரியவில் நடத்திய துப்பாக்கிச் சூடும் படுகொலையும், அரசு பற்றிய மாயையை அம்பலமாக்கி இருக்கின்றது. இந்த வகையில்
1.இன்று இலங்கையில் இருப்பது பௌத்த சிங்கள அரசும் இராணுவமும் என்ற புனித விம்பங்களையும், அதன் அடிப்படையிலான எதிர்ப்பு அரசியலையும் முழுமையாக அம்பலமாக்கி இருக்கின்றது.
2.மூலதனத்தின் சுரண்டல் செயற்பாட்டை நாட்டின் அபிவிருத்தியாகவும் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் மக்களுக்கான அரசின் அர்ப்பணிப்பு என்ற போலியான மாயையும் கலைத்திருக்கின்றது.
3.சுற்றுச்சூழலில் நச்சுக் கழிவை கலப்பது தேசபக்த செயலா அல்லது இதற்கு எதிரான மக்களின் செயற்பாடு தேசபக்த செயற்பாடா என்ற கேள்வியை எழுப்பி, அரசை அம்பலமாக்கி இருக்கின்றது. அரசின் நிலை இதில் என்ன என்பதையும், அது யாருடன் நிற்கின்றது என்ற உண்மையையும் போட்டுடைத்து இருக்கின்றது.
4.மக்களை மதத்தின் பெயரால், இனத்தில் பெயரால் ... எதிரியாகவும், நண்பனாகவும் சித்தரிக்கின்ற இலங்கையின் அனைத்து அரசியல் பித்தலாட்டங்களையும் கேள்விக்குள்ளாக்கி உள்ளது.
Last Updated on Friday, 02 August 2013 08:33
இலங்கை அரசியலும் புலம்பெயர் சமூகமும்
- 31 July 2013
- தமிழரங்கம்
- Section: பி.இரயாகரன் - சமர் -
- 2013
யூலைப் படுகொலைகள் முடிந்து 30 வருடங்கள் கடந்துவிட்டது. முள்ளிவாய்க்கால் படுகொலை நடத்து 4 வருடங்கள் கடந்துவிட்டது. இதற்குள் இனம் மதம் கடந்த எத்தனையோ படுகொலைகளும், மனித அவலங்களும். நீதி மறுக்கப்பட்ட இனவாத சமூக அமைப்பில், உளவியல் அவலங்களுடன் மனிதன் நடைப்பிணமாகவே வாழ நிர்ப்பந்திக்கப்படுகின்றான். இன்னமும் இன மத மோதல்கள் அரசால் திட்டமிட்டு திணிக்கப்படுகின்றது. இதனால் பேரினவாதத்தால் ஒடுக்கப்படும் இனங்கள் இன ரீதியாக சிந்திப்பதும், செயற்படுவதும் தொடருகின்றது. சிந்தனை செயல் தொடங்கி, வாக்குப் போடுவது வரை, அரசின் இன மத வாதத்திற்கு எதிரான அரசியலாகவே இருக்கின்றது. இதுதான் இன்றைய இலங்கையின் அரசியல் எதார்த்தம்;. புலம்பெயர் சமூகமே, புலிகளின் கனவுலகில் வாழ்ந்தபடி முடிவுகளை இலங்கையில் வாழும் மக்கள் மேல் திணிக்க முனைகின்றது.
Last Updated on Wednesday, 31 July 2013 12:21
More Articles...
- இலங்கை சிறைகளும் தமிழ் அரசியல் கைதிகளும்
- இன மற்றும் மத வெறி நடவடிக்கைகளுக்கு எதிராக ஒன்றுபட்டு அணிதிரள்வோம்!
- சின்னவன்............................
- முழுத்தேசத்தின் கரிநாள்!!!!
- வலுவிழந்தவர்களாக மாறிச் செல்லும் தமிழ் சமூகம்..!
- இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் கொடுங்கள்
- என்.ஜி.ஓ நாச்சியப்பனின் “மனிதஉரிமை” அவதாரமும் புலம்பெயர் ‘தலைவர்களின்’ கோவணத்தை கழட்டிய ‘இந்தி’ய அரசும்!
- தமிழனாவது, மசிராவது சாதி தாண்டா எல்லாம்!!
- சாதிய பயங்கரவாதத்துக்கு பலியானது இளவரசன் மட்டுமல்ல காதலும் தான்
- 13வது திருத்தச்சட்டமும் மாகாண சபைத் தேர்தலும்