நேசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புரட்சிகர அமைப்பு என்று கூறப்பட்ட புளொட் எதிர்ப்புரட்சிகர வடிவில்

(ஜே.ஆர் ஜெயவர்த்தனா)

அநுராதபுரநகரில் நிராயுதபாணிகளான நூற்றுக்கு மேற்பட்ட அப்பாவிச் சிங்களப் பொதுமக்களை தமிழீழ விடுதலைப் புலிகள் கோரத்தனமாக சுட்டுக் கொன்ற சம்பவமானது " போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்" என்ற சுலோகத்துடன் சிறுபான்மை இனங்கள் மீது வெளிப்படையாகவே இனவாதத்தைக் கக்கியபடி பதவிக்கு வந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா தலைமையிலான ஜக்கிய தேசியக்கட்சிக்கு விழுந்த பெரும் அடியாக இருந்தது. இந்திய அரசின் முயற்சியால் ஒழுங்கு செய்யப்பட்டுக் கொண்டிருந்த பேச்சுவார்த்தைக்கான அழைப்பை அலட்சியம் செய்துவந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, அனுராதபுரம் நகர் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலானது தனது போர் அறைகூவலுக்கான பதிலாக தனது வாசல்படிக்கே வந்திருப்பதை கண்டுகொண்டிருந்தார். இதனால் சிறுபான்மை இனங்கள் மீது போர் தொடுப்பதையே தனது அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா தற்காலிக "சமாதானம்" வேண்டி திம்புப் பேச்சுவார்த்தைக்கு செல்லவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார். அனுராதபுரத்தில் அப்பாவிச் சிங்கள மக்களைப் பலியெடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளும், குமுதினிப் படகிலும் நற்பிட்டிமுனையிலும் அப்பாவித் தமிழ்மக்களைப் பலியெடுத்த இலங்கை அரசும் தமது இரத்தக்கறை படிந்த கரங்களுடன் "சமாதானம்" வேண்டி திம்புப் பேச்சுவார்த்தைக்கு தயாராகினர்.

(திம்புப் பேச்சுவார்த்தை)


இந்தியாவில் தங்கியிருந்த விசுவானந்ததேவனின் வேண்டுகோளுக்கிணங்க தமிழீழ தேசிய விடுதலை முன்னணி (NLFT)அமைப்பைச் சேர்ந்தவர்கள் தளத்தில் எம்மைத் தொடர்பு கொண்டு பேசியதோடு எமது தற்பாதுகாப்புக்கென கைக்குண்டுகள் தருவதற்கும் முன்வந்தனர். நாம் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே செல்லவேண்டியேற்படின் கைக்குண்டுகள் குறைந்தபட்சமாவது எமது பாதுகாப்புக்கு அவசியமானதெனக் கருதி தமிழீழ தேசிய விடுதலை முன்னணியினர் (NLFT) எமக்குத் தர முன்வந்த கைக்குண்டுகளைப் பெற்றுக் கொண்டோம்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் கைக்குண்டுகளை எடுத்துச்செல்ல முடியாததால் அவற்றை எம்முடன் புளொட்டிலிருந்து வெளியேறியிருந்தவர்களின் வீடுகளில் வைத்துவிட்டு தொடர்ந்தும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள்ளேயே எமது நேரத்தை செலவிட்டு வந்தோம்.

தமிழீழ விடுதலை இயக்கத்தினர்(TELO) தமது வட்டுக்கோட்டை முகாமில் எமக்குப் பாதுகாப்புத் தந்தபோது தமிழீழ விடுதலை இயக்க (TELO) அரசியல் பொறுப்பாளர் தயாசேகரமும், சிவமும் நாம் எழுதி வைத்திருந்த "போலி முகத்திரையை கிழித்தெறிவோம்" என்ற துண்டுப்பிரசுரத்தை அச்சிட்டுத் தருவதாக கூறி எடுத்துச் சென்றிருந்தனர். அத்துண்டுப்பிரசுரங்கள் அச்சகத்திலிருந்து எடுத்து வரப்பட்டு கல்வியங்காட்டில் உள்ள வீடொன்றில் வைக்கப்பட்டுள்ளதாக தயாசேகரம் எமக்குத் தெரிவித்திருந்தார். அத்துண்டுப்பிரசுரங்களை எடுத்துவந்து நாம் அதில் ஒருபகுதியை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்குள் விநியோகித்தோம்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திற்குள் துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பதால் மட்டும் புளொட்டை அம்பலப்படுத்திவிட முடியாது என்பதை உணர்ந்த நாம் அத்துண்டுப்பிரசுரங்களை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு வெளியில் மக்கள் மத்தியில் விநியோகிக்க விரும்பினோம். ஆனால் இப்பொழுதோ எம்முடன் புளொட்டிலிருந்து வெளியேறியவர்கள் பலர் எம்முடன் இருக்கவில்லை. உமாமகேஸ்வரனால் இந்தியாவுக்கு அனுப்பிவைக்குப்படி கேட்டிருந்த ஜீவன், விபுல், சிவானந்தி ஆகியோர் தமக்கு உமாமகேஸ்வரனால் ஏற்பட இருக்கும் உயிராபத்தைக் கருதி யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி விட்டிருந்தனர். இந்தியாவில் இராணுவப் பயிற்சியும் தொலைத்தொடர்பு பயிற்சியும் பெற்று தளம் வந்து உமாமகேஸ்வரனின் அராஜகச் செயல்களை தளத்தில் வெளிச்சத்துக்கு கொண்டுவந்தவர்களில் ஒருவரும், எம்முடன் புளொட்டிலிருந்து வெளியேறியவருமான பாண்டியும் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியிருந்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே சென்று துண்டுப்பிரசுரம் விநியோகிப்பதற்கு விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே எம்மில் இருந்தோம். இருந்தபோதும் தமிழீழ தேசிய விடுதலை முன்னணியினர்(NLFT) எமக்குப் பாதுகாப்புக்குத் தந்துதவிய கைக்குண்டுகளின் துணையுடன்"போலி முகத்திரையைக் கிழித்தெறிவோம்" என்ற துண்டுப்பிரசுரத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே மக்கள் மத்தியில் விநியோகிக்கத் தொடங்கினோம்.

தர்மலிங்கம், பாலா, விஜயன், சுரேன், இடிஅமீன்(ஞானம்), செல்வன், ரஞ்சன் ஆகியோருடன் நானும் இணைந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றியுள்ள இடங்கள் உட்பட, யாழப்பாணம்-பலாலி வீதிவழியாக புன்னாலைக்கட்டுவன் வரை சென்று துண்டுப்பிரசுரத்தை விநியோகித்தோம். புன்னாலைக்கட்டுவன் சந்தியில் எம்மை எதிர்கொண்ட புளொட் அராஜகவாதிகள் சிலர் எம்மிடமிருந்த துண்டுப்பிரசுரங்கள் மக்கள் மத்தியில் சென்றடையாது தடுக்கும் முகமாக அவற்றை பறித்தெடுப்பதற்கும், எம்மைக் கைது செய்வதற்கும் முயன்றனர். புளொட்டின் அராஜகங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவருவதெற்கென வீதியில் இறங்கிவிட்ட எமக்கு புளொட் அராஜகவாதிகளுடன் போராடி முன்னேறுவதைத்தவிர வேறுவழியெதுவும் இருந்திருக்கவில்லை.

"போலி முகத்திரையைக் கிழித்தெறிவோம்" என்ற துண்டுப்பிரசுரத்துடன் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே சென்றுவந்த நாம் படிப்படியாக எமது வீடுகளுக்கும் சென்றுவர முற்பட்டோம். தர்மலிங்கம், பாலா, விஜயன் ஆகியோர் தமது வீடுகளுக்கு சென்றுவர ஆரம்பித்திருந்தனர். நானும் எனது வீட்டுக்குச் சென்றுவர விரும்பியதால் கொக்குவில் ஆனந்தனை (கொக்குவில் இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டபோது பார்த்தனுடன் தப்பிவெளியேறியவர்) வரவழைத்து நானும் ஆனந்தனும் எனது வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தோம். நாம் கொக்குவில் கேணியடி சனசமூக நிலையத்துக்கு முன்னால் சென்றுகொண்டிருக்கும் பொழுது கேணியடி சனசமூக நிலையத்துக்கு முன்னால் அமைந்திருந்த கொத்துரொட்டிக் கடையில் (இக் கடைக்கு "புலிகளின் கடை" என இலங்கை இராணுவத்தினர் பெயர் சூட்டியிருந்தனர்) குவிந்திருந்த புளொட் இராணுவப் பிரிவினர் (கொக்குவில் ரவிமூர்த்தி, காண்டீபன், மது, கதிர், ராஜ் ஆகியோரும் அடங்கியிருந்தனர்) ஏ.கே.47 மற்றும் இயந்திரத் துப்பாக்கிகள் சகிதம் எம்மை வழிமறித்தனர்.

இலங்கை அரசின் இனவொடுக்குமுறைக்கெதிராக போராடியதால் இலங்கை இராணுவம் கொக்குவிலைச் சுற்றிவளைத்து என்னைக் கைது செய்யமுயன்ற அதே இடத்தில் இப்பொழுது புளொட்டினுடைய அராஜகங்களுக்கும் கொலைவெறிக்கும் எதிராகப் போராடியதால் புளொட் இராணுவப்பிரிவினரால் வழிமறிக்கப்பட்டு சுற்றிவளைக்கப்பட்டோம். நிலைமை மோசமாகிவிட்டதை உணர்ந்த நான் சைக்கிளிலிருந்து இறங்கி தற்பாதுகாப்புக்காக என்னிடமிருந்த கைக்குண்டின் கிளிப்பை கழற்றி எடுத்துவிட்டு "முடிந்தால் எம்மைக் கைது செய்யவும்" என கூறியபடி புளொட் இராணுவப் பிரிவினரை முகம் கொடுத்தோம். புளொட் இராணுவப் பிரிவினருக்கும் எமக்குமிடையில் வாக்குவாதம் ஆரம்பமாகியது. தகாத வார்த்தைப் பிரயோகங்களை புளொட் இராணுவப்பிரிவினர் எம்மீது உதிர்த்தனர். எமக்கிடையில் நடைபெற்ற வாக்குவாதத்தை அவதானித்த ஊர்மக்கள் எம்மைச் சூழ்ந்து கொண்டனர். ஊர்மக்களின் தலையீட்டால் புளொட் இராணுவத்தினரின் பிடியிலிருந்து எம்மால் தப்பிக்க முடிந்தது. (பல வருடங்களின் பின் என்னைச் சந்தித்த காண்டீபன், மது, கதிர் ஆகியோர் தமது தவறுகளுக்காக வருந்துவதாகத் தெரிவித்தனர்).

"புதியதோர் உலகம்" நாவலுடன் தளம் வந்த கண்ணாடிச்சந்திரன்

இந்தியாவில் "புதியதோர் உலகம்" நாவல் அச்சிடும் பணிகள் முடிவுற்றதும் "புதியதோர் உலகம்"நாவலுடன் கண்ணாடிச்சந்திரன் தமிழீழ தேசிய விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் விசுவானந்ததேவனுடன் தளம் வந்திருந்தார். தளம் வந்திருந்த கண்ணாடிச் சந்திரனை குருநகரிலுள்ள நண்பர் தாசனின் வீட்டில் சந்தித்துப்பேசிய நாம், இந்தியாவில் நடைபெற்ற புளொட்டின் மத்தியகுழுக் கூட்டத்தில் நடந்தவற்றைப் பற்றியும், புளொட்டிலிருந்து வெளியேறிய பின் நடந்தவை பற்றியும் கேட்டறிந்து கொண்டதோடு தொடர்ந்து நாம் என்ன செய்வது என்பது குறித்தும் பேசினோம். இந்தியாவில் புளொட்டிலிருந்து வெளியேறியவர்களான சந்ததியார், டொமினிக்(கேசவன்), காந்தன் (ரகுமான் ஜான்), காசி(ரகு), அமீன், நிசாகரன் போன்றோர் விரைவில் தளம் வந்து அரசியலில் ஈடுபட தயாராக உள்ளனர் என்றும், நாம் புளொட்டினுடைய அராஜகத்தையும் மக்கள்விரோத அரசியலையும் அம்பலப்படுத்தும் அதேவேளை ஒரு அமைப்பை உருவாக்க முடியும் என்றும், இதற்காகவேண்டி ஒரு பத்திரிகையை வெளிக்கொணர வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துக் கூறினார்.

கண்ணாடிச் சந்திரன் பேசியவற்றை மிகுந்த ஆவலுடனும் பொறுமையோடும் செவிமடுத்த எமக்கு அராஜகவாதிகளை முகம் கொடுத்து தொடர்ச்சியாக அரசியல் செய்வதில் ஒரு நம்பிக்கை எழுந்தது. அத்துடன் இலங்கை அரசின் அநீதிகளுக்கெதிராகப் போராடிய நாம், எம்மால் வளர்த்துவிடப்பட்டிருந்த அமைப்பின் அநீதிகளுக்காகப் போராடிவேண்டிய கடப்பாட்டையும் கூட கொண்டவர்களாய் இருந்தோம். அராஜகத்துக்கெதிரான போராட்டம், புளொட்டை அம்பலப்படுத்துதல், புதியதொரு அமைப்பை உருவாக்குதல் என்பனவவெல்லாம் மிகவும் கடினமான பணியாகவே இருக்கும் என்பதை நாம் அறிந்திருந்தோம். இருந்தபோதும் இவை அனைத்தும் எம்மால் செய்யக்கூடியவை தான் என நம்பிக்கை கொண்டோம். ஆனால் இதற்கு முன் பல கேள்விகளுக்கு நாம் விடை காணவேண்டியிருந்தது.

புரட்சிகர கருத்துக்களையும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான பல்வேறு அமைப்பு வடிவங்களையும் வேலைத்திட்டங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த புளொட்டுக்குள் அராஜகம் வளர்ச்சியடைந்து கோலோச்சியதெப்படி? புரட்சிகரகருத்துக்களிலிருந்தும் அதன் நடைமுறையிலிருந்தும் புளொட் தடம் விலகிச் சென்றதெப்படி? பயிற்சி முகாம்கள் வதைமுகாம்களாக மாற்றம் பெற்றதெப்படி? இவை அனைத்திலும் எமது பக்கத் தவறென்ன? இவற்றின் ஊற்றுமூலம் எது?

நான் புளொட்டில் இணைந்து கொண்ட ஆரம்ப காலங்களில் சத்தியமூர்த்தி, பெரியமுரளி, தோழர் தங்கராஜா, கேதீஸ்வரன் போன்றோர் புளொட்டைப் பற்றிக் கூறிய கருத்துக்களுக்கும் பிற்பட்ட காலங்களில் புளொட்டின் நடைமுறைக்கும் இடையில் எந்தவித ஒற்றுமையையும் காணமுடியவில்லை. புளொட்டில் தனிமனிதனுக்கு அதிகாரமில்லை, தனிமனிதன் முடிவுகள் எடுப்பதில்லை மாறாக, அனைத்து முடிவுகளும் குழுமுடிவுகளே, கூட்டுமுடிவுகளே என்று கூறியிருந்தனர்.இதற்காகவே மத்தியகுழு, கட்டுப்பாட்டுகுழு என இரண்டு குழுக்கள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். ஆனால் மத்தியகுழு, கட்டுப்பாட்டுகுழு என இரண்டு குழுக்கள் இருந்திருந்த போதும் உமாமகேஸ்வரனே அனைத்து முடிவுகளையும் எடுக்கும் ஒருவராகவும் அனைத்து அதிகாரங்களையும் கொண்ட ஒருவராகவும் விளங்கியிருந்தார்

புளொட்டின் அங்கத்தவர்கள் அனைவருக்கும் கருத்துசுதந்திரம், விமர்சன சுதந்திரம் உள்ளது என கூறியிருந்தனர். ஆனால் புளொட்டுக்குள் தமது கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்தவர்களை வதைமுகாமிற்கு கொண்டு சென்று சித்திரவதைகளின் பின் கொன்று புதைத்தார் உமாமகேஸ்வரன்.

இப்படியாக புரட்சிகர அமைப்பு என்று கூறப்பட்ட புளொட் எதிர்ப்புரட்சிகர வடிவில் எம்முன் எழுந்து நின்றது. புளொட்டில் இந்த நிலை தற்செயலானதோ அல்லது திடீரென தோற்றம் பெற்ற ஒன்றோ அல்ல. உமாமகேஸ்வரனினால் கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகத்துக்கும், எதிர்ப்புரட்சிகர அரசியலுக்குமான அடித்தளம் மிகவும் பலமானது என்பதே உண்மை. அதன் ஆணிவேரைக் கண்டறிந்தால் மட்டுமே உமாமகேஸ்வரனையும், புளொட்டில் அவரது பாத்திரத்தையும் இனம் கண்டுகொள்ள முடியும் என்பதோடு ஈழ விடுதலைப் போராட்ட அரங்கிலிருந்து புளொட் ஓரங்கட்டப்பட்ட நிகழ்வையும் எம்மால் புரிந்து கொள்ள முடியும்.

தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் கருவறையில் தோன்றி, தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் கருத்தியல் ஆதிக்கத்திற்குட்பட்ட மத்தியதரவர்க்க சிந்தனையுடைய இளைஞர்களைக் கொண்டதொரு குழுவாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம் பெற்றிருந்தது. வெறுமனவே ஆயுதங்களிலும் இராணுவ நடவடிக்கைகளிலுமே நம்பிக்கை கொண்டிருந்த தனிநபர் பயங்கரவாத இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவையடுத்து அதிலிருந்து தோற்றம் பெற்றதே புளொட் என்ற அமைப்பாகும். "புதிய பாதை" ஆசிரியர் சுந்தரம் (சிவசண்முகமூர்த்தி) புளொட் என்ற அமைப்பை உருவாக்குவதற்கு காரணமாக விளங்கியிருந்தார்.

சுந்தரத்தின் முயற்சியில் புளொட்டை உருவாக்கியபோது அதில் சந்ததியாரும் இணைந்து கொண்டதன் மூலம் புளொட்டின் முதல் மத்தியகுழுவில் சுந்தரம், உமாமகேஸ்வரன், சந்ததியார், ஜயர், சாந்தன் ஆகியோர் அங்கம் வகித்திருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவின் பின் புளொட்டை உருவாக்குவதில் முன்னணி வகித்த சுந்தரம் இடதுசாரி அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்டவராகவும், இடதுசாரிகளுடன் நெருக்கமான தொடர்புகளை பேணிக் கொண்டிருந்தவராகவும் மார்க்சிய நூல்களை தேடிக் கற்கும் ஒருவராகவும் திகழ்ந்தார். புளொட்டின் மத்தியகுழுவில் இடம்பெற்ற சந்ததியார் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் இளைஞர் பேரவை போன்றவற்றில் தீவிர செயற்பாட்டாளராக இருந்திருந்தபோதும், யாழ்ப்பாண நகர மேயர் அல்பிரட் துரையப்பா கொலைவழக்கில் சந்தேகநபராக கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து விடுதலையான பின்னாட்களில் தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் அரசியலிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு "காந்தீயம்" அமைப்பில் செயற்பட்டுக் கொண்டிருந்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக் கிளைத் தலைவரும், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகாலங்களில் அதன் தலைவராகச் செயற்பட்டவரும், ஜயர் தனது தொடரில் குறிப்பிட்டது போல் இடதுசாரி அரசியலில் எந்தவித ஆர்வமும் கொண்டிராத, ஓய்வு கிடைக்கும் நேரங்களில் கல்கியின் "பொன்னியின் செல்வன்" போன்ற நூல்களை படிப்பவராக உமாமகேஸ்வரன் காணப்பட்டதன் மூலம் இடதுசாரி அரசியலுடன் எந்தவித ஆர்வமும் அற்றவராக காணப்பட்டிருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆரம்பகால உறுப்பினர்களாக விளங்கிய ஐயர், சாந்தன் போன்றோர் தமிழீழ விடுதலிப் புலிகளுடன் செயற்பட்டபோது பெற்ற அனுபவங்களுக்கூடாக சுத்த இராணுவக் கண்ணோட்டத்திலிருந்து முற்றுமுழுதாக துண்டித்துக் கொள்வதை நோக்கியவர்களாக காணப்பட்டனர்.  இத்தகைய வெவ்வேறு அரசியல் பின்னணியை, அரசியல் பார்வைகளை கொண்டவர்களால் உருவான புளொட்டின் மத்தியகுழுவில் இடம் பெற்ற விவாதங்கள் இரண்டு விதமான போக்குகளை வெளிப்படுத்தியிருந்தது. சுந்தரம், உமாமகேஸ்வரன், சந்தியார் போன்றோர் இராணுவ ந்டவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கிய அதேவேளை ஐயர், சாந்தன் ஆகியோர்  மக்கள் அமைப்புக்களை உருவாக்கி அதன் பலத்தில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கருத்தை முன் வைத்திருந்தனர். இத்தகைய கருத்து முரண்பாடுகளால் புளொட்டின் முதலாவது மத்தியகுழுவில் அங்கம் வகித்த ஐயர் சாந்தன் ஆகியோர் புளொட் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கிக் கொண்டனர்.

(தொடரும்)

1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1

2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2

3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3

4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4

5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5

6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6

7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7

8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8

9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9

10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10

11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11

12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12

13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13

14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14

15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15

16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16

17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17

18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18

19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19

20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20

21. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21

22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22

23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23

24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24

25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25

26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26

27.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27

28.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28

29. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 29

30 .புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 30

31.  புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 31

32. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 32

33. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 33

34. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 34

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது