பி.இரயாகரன் -2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

1983 இனக்கலவரம் தான், இந்தியாவின் திட்டமிட்ட இனவழிப்பாக மாறியது. உடனடியாக பேரினவாதத்தால் இனம் சூறையாடப்பட்டது ஒருபுறம், நீண்டகால அடிப்படையில் இந்தியாவால் திட்டமிட்டு சூறையாடப்பட்டது மற்றது.

1983 யூலை இனப்படுகொலை என்பது, 1983ம் ஆண்டு மீண்டும் நடந்த ஒரு இனக்கலவரம். 1977, 1981 க்கு பின், பேரினவாதம் அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவிக்கும் இனக்கலவரத்தை, மீண்டும் தமிழ் மக்கள் மேல் அரசு ஏவியது. சிறைக்கைதிகள் முதல் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்ந்த தமிழ் மக்களை, தமிழன் என்ற ஓரே காரணத்தினால் பல தளத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர். ஆம் ஒரு படுகொலை. எந்த நீதி விசாரணைக்கும் உள்ளாகாத படுகொலை.

ஒரு இனத்தின் மேல் நடந்த கொடுமையான, கொடூரமான இனவழிப்புக்காக, எந்தச் சட்டமும் யாரையும் தண்டிக்கவில்லை. குற்றவாளிக் கூண்டில், அவர்கள் யாரையும் முன்னிறுத்தவில்லை. இப்படி குற்றவாளிகள், கொலைகாரர்கள் நடத்தும் இனவாத ஆட்சிதான், இன்று வரை நாட்டின் ஜனநாயக ஆட்சியாக தொடருகின்றது. 2009 இல் முள்ளிவாய்க்காலில் நடத்திய இனப் படுகொலை கூடத்தான், சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்ட நீதி விசாரணைக்கு உள்ளாகவில்லை. இதன் பின்பும் இரகசியமான சட்டவிரோதமான அமைப்புமுறை மூலம், தமிழ்மக்களை பல வடிவத்தில் ஒடுக்குகின்றனர். தமிழ் மக்கள் இன்று இலங்கையின் சட்ட ஆட்சிக்குள் ஒரு நீதியை கோரவோ, பெறவோ முடியாது. இதுதான் நாட்டின் நிலைமை.

இனப் படுகொலைகள், கொள்ளைகள், பாலியல் வல்லுறவுகள், பொருளாதார அழிப்புகள், நிலச் சூறையாடல், இனவழிப்புகள்… என்பது தமிழ் மக்களின் கடந்தகால வாழ்வு என்றால், அதுதான் இன்றுவரையான அழிக்க முடியாத சொத்தாகும். இப்படி தமிழனுக்கு எதிரான  குற்றத்தில் பத்தாயிரத்தில் ஒன்று கூட, சட்டத்தின் முன் விசாரணைக்கு வந்தது கிடையாது. இதை வரவிடாது பாதுகாப்பது தான், இலங்கைப் பேரினவாத சட்ட ஆட்சி முறையாகும். இதைத்தான் அவர்கள் ஜனநாயகத்தின் ஆட்சி என்கின்றனர். குற்றவாளிகளைப் பாதுகாத்து, அவர்களின் ஆட்சியை நிலைநிறுத்துவதே, "பயங்கரவாதத்துக்கு" எதிரான ஜனநாயகம் என்றனர்.

1983 நடந்த இனக்கலவரத்தையும், இனப்படுகொலையையும் அடுத்து இந்தியா அதில் வெளிப்படையாக தலையிட்டதன் மூலம், இது இனத்தை சிறுகச்சிறுக அழித்தது. இந்தியா தன் நலனை இலங்கையில் அடையவும், தமிழ் மக்களின் சுயமான மக்கள் போராட்டம் வளர்ந்துவிடாது தடுக்கவும் இதில் தீவிரமாக தலையிட்டது. பயிற்சியையும், ஆயுதத்தையும், பணத்தையும் கொடுத்து கூலிப்பட்டாளத்தை உருவாக்கியதன் மூலம், ஒரு பின்தளத்தை உருவாக்கியது. மக்களை வெறுப்பது, மக்களை ஒடுக்குவது, அதிகாரத்தை மக்கள் மேல் நிறுவுவது, மக்களை நேசிப்பவர்களைக் கொல்வதையே, இந்தியா தன் கூலிப்படைகளின் அரசியலாக்கியது. இதை இந்தியா கற்றுக்கொடுத்தது. பேரினவாதத்துக்கு நிகராக தமிழ் மக்களை ஒடுக்கவும், அவர்களை அடிமைப்படுத்தவும், இந்தியா வழிகாட்டியது. பல குழுக்களை சீராட்டி வளர்த்த இந்தியா, அவர்களை மோதவும் வைத்தது. புலிகளுக்கு பணம் கொடுத்து அனுராதபுர அப்பாவி சிங்கள மக்கள் மேலான படுகொலைகளைக் கூட நடத்துமளவுக்கு, தன் கூலிப்பட்டாளங்கள் கொண்ட போராட்டத்தையே தமிழர் போராட்டமாக்கியது. சீக்கிய போராட்டம், வங்கதேச போராட்டங்களை இப்படித்;தான் இந்தியா தலையிட்டு சிதைத்து அழித்தது.

இதன் பின்னணியில் குழுக்களுக்கு இடையிலான மோதல்களை பயன்படுத்தி, அமெரிக்கா தலையிட்டது. ஆயுதத்தையும் பணத்தையும், புலிக்கு அமெரிக்கா வாரி வழங்கியது. எம்.ஐp.ஆர். ஒரு அமெரிக்க ஏஜண்டாகவே செயல்பட்டான். இதனால் மற்றவர்களை விட, புலி வீங்கத் தொடங்கியது. அமெரிக்காவின் உலக ஆதிக்கம் போல், புலியின் ஆதிக்கமும் இப்படித்தான் எம்மண்ணில் வித்திடப்பட்டது. உலகம் தளுவிய அமெரிக்காவின் கொடுமைகளும் கொடூரங்களும் போல், புலிகளின் கொடுமைகளும் கொடூரங்களும் உருவானது. அமெரிக்காவின் உள்ளுர் ரவுடிகளாக ஏஜண்டாக மாறிய புலிகள், இந்திய சார்பு குழுக்களை அழித்தது. அது மட்டுமின்றி, சொந்த மக்களையும் அமெரிக்கா போல் ஒடுக்கத் தொடங்கியது.

போராட்டம் சீரழிந்து. அன்னியர் தயவில் வீங்கி வெம்பிய அதிகாரங்கள் மூலம், ஒடுக்கப்பட்ட தமிழ் இனம் புதிய ஒடுக்குமுறையையே சந்தித்தனர். மக்கள் பேரினவாதத்துக்கு எதிராக போராடும் உரிமைகள் அனைத்தையும், இந்த புலிக் கூலிப்பட்டாளத்திடம் இழந்தனர். புலிகள் அமெரிக்க நலனை கொண்ட கூலிப்படையாக இயங்கிய நிலையில் தான், இந்தியத் தலையீடு புலியுடனான யுத்தமாக வெடித்தது. இப்படி புலி - இந்திய யுத்தம், அமெரிக்கா பிரேமதாசவின் ஊடாக எடுத்த இந்தியாவுக்கு எதிரான அதன் நிலைப்பாட்டுடன் முடிவுக்கு வந்தது.

1983ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்தில் இந்திய தலையீடு, 1985-1991 களில் இந்தியா-அமெரிக்கா நலன் சார்ந்த அரசியல் நகர்வாகியது. இதன் பின்னணியில் புலிகள், அமெரிக்க கூலிப்படையாகவே இயங்கியது. எந்த மக்கள் நலன் சார்ந்த அரசியலையும், அது மக்களுடன் சேர்ந்து முன்னெடுக்கவில்லை.

ஆயுதம், பணம், அதிகாரம் மூலம் மாபியாத்தனத்தை முன்தள்ளிய புலிகள், மக்களை அடக்கியொடுக்கி அவர்களை தமக்கு அடிபணிய வைக்கும் வண்ணம் பாசிசத்தை அவர்கள் மேல் ஏவினர். அவர்கள் இதையே பேரினவாதத்துக்கு எதிரான போராட்டத்தின் ஒரு அம்சம் என்றனர். பேரினவாதத்துடன் மோதிக் கொண்டு, மக்களை நாயிலும் கீழாக ஒடுக்கினர். மக்களை ஒடுக்குவதற்காகவே, அவர்களை சுரண்டுவதற்காக, அவர்கள் உரிமைகளை பறிப்பதற்காக, பேரினவாதத்துடன் புலிகள் போராட வேண்டியிருந்தது. இதன் மூலம் தான்,  தங்கள் சுயரூபத்தை மூடிமறைக்க முடிந்தது.

ஆம் இப்படி 1983ம் ஆண்டு இந்தியா மக்களுக்கு எதிராக விதைத்த விதை மரமாகியது. இது மக்களையும், மண்ணையும் சார்ந்து வளரவில்லை. அவர்களுக்கு எதிராக வளர்ந்தது. சர்வதேச நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட மாற்றங்கள், அமெரிக்கா இந்திய உறவு, சர்வதேச ரீதியாக "பயங்கரவாதம்" பற்றிய புதிய வரையறைகள், புலியை கூலிப்பட்டாளமாக வைத்து அரசியல் செய்யும் அத்தியாயத்தை முடித்துவைத்தது.

இப்படி எஜமானர்களால் கைவிடப்பட்ட புலிகள் தம்பின்னால் குவித்து வைத்திருந்த ஆயுதங்கள், மாபியாத்தனங்கள் மூலம் திரட்டிய பணம் எவையும், அவர்களை காப்பாற்றவில்லை. அதாவது இதன் பின் மக்கள் இருக்கவில்லை. மக்கள் மௌனமாகவே போராட்டத்தில் இருந்து ஒதுங்கி, புலிகளை முற்றாக தோற்கடித்து இருந்தனர்.

புலிகளிடம் இருந்த துப்பாக்கியோ உணர்ச்சியற்ற இரும்பு. புலிகளின் பணமோ வெறும் காகிதம். புலிகளின் அதிகாரமோ, அவர்கள் மேலான அச்சத்தின் பிரதிபலிப்பு. இந்த நிலையில் புலிகள் வெறும் கோதுதான். இங்கு எந்த போராட்ட உணர்வும் கிடையாது. மாபியாதனமும், கூலிக்கு கொலை செய்யும் கொலைக்காரத்தனமும் தான், மக்களை கிலிகொள்ள வைத்து, அவர்களை அச்சத்தில் உறையவைத்திருந்தது. அச்சம், மந்தைத்தனத்தில் பிரதிபலித்தது.

1983ம் ஆண்டு இனக்கலவரம் இதைத்தான் வித்திட்டது. இந்தியா அதற்கு நீர் ஊற்றி வளர்த்தது. போராட்டத்தை, கூலிக்கும்பல்களின் அடாவடித்தனமான கொலைகாரர்களின் போராட்டமாக்கியது.

இப்படி இதை உருவாக்கியவர்கள், மக்களிடமிருந்து அன்னியமாகி வெற்றுக் கோதாகினர். இதன்பின் தான், இந்தியா அதை ஊதிப் பெருப்பித்து அழித்துவிட்டனர். 1983 இனக்கலவரம் ஏற்படுத்திய நீண்டகால விளைவு இதுதான். ஒரு இனம், அந்த இனத்தைக் கொண்டு அழிக்கப்பட்டது. இதைத்தான் இந்தியா செய்து முடித்துள்ளது.

சொந்த இனத்தின் மேலான புலிகளின் கொடுமைகளும் கொடூரங்களின் மேல்தான், முள்ளிவாய்க்காலில் பேரினவாதம் இனப்படுகொலைகளையும் இனவழிப்பையும் நடத்தி முடித்துள்ளது. இங்கு இப்படி இரண்டு பக்கத்திலும் இந்தியாவே இருந்ததுடன், இனப்படுகொலை செய்து முடித்துள்ளது. இவை எவையும் எந்த சட்டத்துக்கும், நீதி விசாரணைக்கும் உள்ளளாகவில்லை. குற்றங்கள் மனித குலத்தின் நீதியாக, அதுவே பேரினவாத சட்ட ஒழுங்காகவும், ஜனநாயகத்தின் மகுடமாகவும் மாறிவிட்டது. இலங்கை இப்படித்தான் காட்சியளிக்கின்றது. பேரினவாத ஆட்சி பாசிசமயமாகி, மக்கள் மேலான காட்டுத்தர்பாரை நடத்துகின்றது.

பி.இரயாகரன்
24.07.2010

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது