பி.இரயாகரன் -2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஜனநாயகம் சார்புத் தன்மையானது என்பதை நிறுவும் முயற்சியில், புலியெதிர்ப்பு அணியின் முயற்சிகள் சந்தியில் தலை விரிகோலமாகி வருகின்றது. புலிகளிடம் ஜனநாயகத்தை கோரும் புலியெதிர்ப்பு அணி, தமக்கு அது பொருந்தாது என்பதையே ராம்ராஜ் விடையத்தில் மீண்டும் நிறுவிக் காட்டமுனைகின்றனர்.

 

 

22.2.2006 அன்று ரி.பி.சி ராம்ராஜ்சை சுவிஸ் பொலிசார் கைது செய்துள்ள நிகழ்வும், ரி.பி;.சியும் மற்றும் புலியெதிர்ப்பு கும்பலின் மௌனமும், அவர்களின் சொந்த ஜனநாயக மூகமுடியை நிர்வாணமாக்கி வருகின்றது. ஒரு வானொலி, பல புலியெதிர்ப்பு இணையத்தளங்கள் எல்லாம் வாய் பொத்தி மௌனம் சாதிக்கின்றனர்?. மறுபக்கத்தில் மௌனத்தின் ஊடாகவே மெதுவாக ஆதாரம் எதையும் வைக்காது குசுவிடும் தேனீ "புலிகளின் சதித்திட்டத்தினால் ராமராஜன் கைது" என்று செய்தி போடுகின்றனர். இதற்கு ஆதாரம் தான் என்ன? அப்படியானால் அந்த புலிச் சதி தான் என்ன? அதை மட்டும் மௌனவிரதத்துக்குள் விட்டுவிடுகின்றனர்.


இலங்கையில் கொலை, கொள்ளை, கடத்தல் நடந்தவுடன் அதை யார் செய்தது என்று கண்டுபிடித்து போடும் இவர்கள், ராம்ராஜ் விடையத்தில் மௌனம் சாதிக்கின்றனர். நீடித்த மௌனம். 23.2.2006 அன்று நடந்த அரசியல் அரங்கும் இதைப்பற்றி மௌனம் காக்கின்றது. இதன் பின்னணிச் சாத்தியப்பாட்டைக் கூட விவாதிக்கவில்லை. "புலிகளின் சதித்திட்டத்தினால் ராமராஜன் கைது" என்ற அந்த சதி என்ன என்று கூட, கூறமுடியாத நிலையில் அரசியல் நெருக்கடிக்குள் சிக்கிவிடுகின்றனர். சரி இந்தக் கைது ஏன். இதை அவர்கள் ஆய்வு செய்யவில்லை. புலியைப் பற்றி மட்டும், வீரமாக இவர்கள் ஆய்வு செய்வார்கள். தமக்குள் அதாவது புலியெதிர்ப்பு அணியின் பிரச்சனையை ஆய்வு செய்யமாட்டார்கள்.

 

இது பல கேள்விகளையும், அந்த அரசியலையும் சந்திக்கு கொண்டு வருகின்றது. புலிப் பாசிசம் என்பது எதார்த்தமானது தான். அதைச் சொல்லி புறப்பட்ட புலியெதிர்ப்பு அரசியல், மறுபக்கத்தில் இதைத் தாண்டியவை அல்ல என்பது எமது கடந்தகால விமர்சனமாகும்.

 

இந்தக் கைது புலியணியின் மௌத்தின் பின்னால், தெளிவாக இரண்டு சாத்தியக்கூறை எம்முன் தெளிவாக்கிவிடுகின்றது.

 

1.இக் கைது தெளிவாக ராம்ராஜ்சின் குற்றச் செயலினால் ஏற்பட்ட ஏதாவது ஒன்றாக இருக்கலாம்;.
இது இல்லை என்றால்


2. ஜனநாயகத்தை கோரி போராடியதற்கான கைது என்றால், யாரிடம் ஜனநாயகத்தை பெற்றுத் தரக் கோரினார்களோ அவர்களின் ஏகாதிபத்திய முகத்தையே இது தெளிவாக்கின்றது.

 

இதில் ஒன்று நிச்சயமாக நிகழ்ந்துள்ளது. அதை அவர்கள் தெளிவுபடுத்த மறுக்கின்றனர். இதை ஆய்வு செய்யவும் மறுத்து நிற்கின்றனர். மறுப்பதில் இருந்து குற்ற நடவடிக்கை சார்ந்த கைதுதான் அநேகமானதாக இருக்கும் என்பது உறுதியாகின்றது. பொதுவாக கைதுக்கு பின் விடுதலை செய்யப்படாதது, குற்றத்தின் தன்மையை வெளிப்படுத்துகின்றது. ராம்ராஜ் போன்றவர்களின் அரசியல், புலியைப் போல் எல்லாவற்றையும் செய்வதில் சளைக்காத அதே அரசியல் தான்;. எப்படி செயல்படுவது, எப்படி வாழ்வது என்பது அவர்கள் கொண்டுள்ள அரசியல், அரசியல் வழிதான் தீர்மானிக்கின்றது. தனிமனிதன் தீர்மானிப்பதில்லை. கடந்தகால நிகழ்கால அரசியல் அடிதடி முதல் கொலைகள் வரை செய்வதில் தான் பலம்பெறுகின்றது. இதுவே இவர் இருந்த, இவர் சார்ந்து இருந்த இயக்கத்தின் அரசியலாக இருந்தது. இதில் அவர்கள் சாமபேதம் பார்த்தது கிடையாது. சமூக விரோத அதாவது மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட இயக்கங்களில் இருந்தவர்களின் வாழ்க்கை மர்மமானது. இன்று புலியெதிர்பு என்ற எல்லைக்குள் ஜனநாயகம் என்று கோருவதன் மூலம், மீண்டும் அந்த மக்கள் விரோத வாழ்க்கை முறைக்கு திரும்புவது இவர்களின் அரசியலாகின்றது.

 

சதாம்குசைனிடம் இருந்து ஜனநாயகத்தை மீட்பது என்ற பெயரில் ஈராக்கில் நடப்பது எதுவோ, அதையே இவர்கள் ஏன் செய்யமாட்டார்கள். இவர்களுக்கு என்ன விதிவிலக்குண்டு? இன்று ஈராக்கின் ஆட்சியில் உள்ளவர்கள், முன்பு பிரிட்டன் அரசினால் வளர்க்கப்பட்ட வளர்ப்பு நாய்கள் தான்.

 

இரண்டாவதாக இக் கைது ஜனநாயகத்துக்காக (புலியின் சதியாக இருந்தாலும் கூட) போராடியமைக்கான கைது என்றால், புலியெதிர்ப்பு ஜனநாயக அரசியலே அம்பலமாகிவிடுகின்றது. இக் கைது புலியெதிர்ப்பு ஜனநாயகத்தை மீட்கும் போராட்டத்தில் ஏற்பட்டதாக கூறுவார்களேயானல், அவர்களின் ஜனநாயகமே கேள்விக்குள்ளாகிவிடுகின்றது. யாரை எல்லாம் ஜனநாயக அரசுகள் என்று எடுத்துக் காட்டினார்களோ, அவர்களின் சொந்த ஜனநாயக முகமே அம்பலமாகி நிற்கின்றது.

 

ஜனநாயக நாடுகள், ஜனநாயக அரசுகளின் ஜனநாயக விரோதக் கைது பக்கசார்பானது என்பதையும், அது ஏகாதிபத்திய தன்மை வாய்ந்தவை என்பது மீண்டும் அம்பலமாக்கிவிடுகின்றது. இது தவிர்க்க முடியாமல் புலியெதிர்ப்பு மைய அரசியல் போக்கையை கேள்விக்குள்ளாக்கி மாற்றக் கோருகின்றது.

 

அவரை விடுவிக்க பிரிட்டிஸ் ஆளும் வர்க்கம் முயற்சிப்பதாக வெளிவரும் செய்தி உண்மையானால்;, ஜனநாயகம் வளைந்து கொடுக்கும் தன்மையும் சந்திக்கு வந்துவிடுகின்றது. ஒரு நாட்டின் கைதுக்குள் (தன் நாட்டு பிரஜையாக இருந்தாலும்) பிரிட்டிஸ் ஆளும் வர்க்க தலையீடு, அந்த நாட்டின் ஜனநாயக சட்டங்களையே கேள்விக்குள்ளாக்குவதாக அமைகின்றது. இந்த தலையீடு சட்டத்தின் பிடியில் இருந்து விடுவிக்குமாயின், புலியின் அரசியல் நடத்தைக்கு ஒப்பானதே. புலிகளின் நீதிமன்றம் பொலிசாரின் பிணையை மறுக்கும் போது, புலித்தலைமை தலையிட்டு பொலிசை விடுவிக்கின்றது. இது சட்டம் ஒழுங்கு மீறல் மட்டுமின்றி ஜனநாய விரோதமானதும் கூட.

 

1.இதே உள்ளக்கம் தான் சுவிஸ்சில் ராம்ராஜ்சை விடுவிக்கும் முயற்சிகள். சட்டத்துக்கு உட்படாத நடத்தைகள், நீங்கள் சொல்லும் புலியெதிர்ப்பு ஜனநாயகத்துக்கே விரோதமானவை தான்;. இதில் உண்மையாகவே ஒரு குற்றமிழைக்கப்பட்ட நிலையில், குற்றத்தில் இருந்து விடிவிக்க முயன்றால், உங்கள் ஜனநாயகத்தின் போலித்தனம் அம்பலமாகிவிடுகின்றது. அதன் பக்க சார்பு அம்பலமாகிவிடுகின்றது.


2.இல்லாது போராடியதால் கைது என்றால், போராடும் உரிமையை மறுக்கும் இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தின் போலித்தனம் அம்பலமாகின்றது. அதன் பக்க சார்பு அம்பலமாகின்றது. நீங்கள் இதுவரை காலமும் ஜனநாயகம் என்று எமக்கு எடுத்துக் காட்டிய இந்த மோசடியான ஜனநாயகம் அம்பலமாகின்றது. அதைப் பாதுகாக்கும் உங்கள் ஜனநாயகத்தின் போலித்தனம் அம்பலமாகிவிடுகின்றது.


3.விடுவிக்கும் முயற்சியில் பிரிட்டிஸ் அரசின் அத்துமீறிய தலையீடு இருப்பின், ஜனநாயகத்தின் ஏகாதிபத்திய தன்மையும், ஜனநாயக விரோத வக்கிரத்தின் அரசியலை அம்பலமாக்குகின்றது.
ஜனநாயகம் மக்களுக்கானது. அதை உயாத்திப் பிடிப்போம். ஜனநாயகத்தை சார்புத் தன்மையாக்கி குறுகிய நோக்கங்களுக்கு வளைப்பதை நாம் எதிர்ப்போம். ஜனநாயகத்தின் பெயரில் ஏகாதிபத்தியத்துக்கும், அவர்களின் மக்கள் விரோத நோக்கத்துக்கும் துணைபோவதை நாம் அனுமதிக்க முடியாது. இதை எதிர்த்தே எமது போராட்டத்தை நாம் தொடங்கியுள்ளோம்.

25.02.2006

Most Read

முஸ்லீம் இன-மத வாதமானது, தமிழ் மக்களை ஒடுக்குவது குறித்து!

தன் சொந்த இன மக்களை ஒடுக்குவதை மூடிமறைக்க, பிற இனமத மக்களை ஒடுக்குவது நடக்கின்றது. இதன் மூலம் தன்இன-மத மக்களின் நலனுக்காக உழைப்பதாக காட்டிக் கொள்வதே, சுரண்டும் வர்க்கத்தின் அரசியல். இந்த வகையில் ஒடுக்கப்பட்ட முஸ்லீம் மக்களை ஒடுக்கும் முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள், தங்கள் அரச அதிகாரங்கள் மூலம் தமிழ் மக்களை ஒடுக்கி வருகின்றனர். இதன் மூலம் பேரினவாதத்தால் ஒடுக்கப்படுகின்ற ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் மேல் ஏறி, முஸ்லீம் இன-மதவாதத் தலைமைகள் சவாரி செய்கின்றனர்.

வெள்ளாளியம் குறிப்பது எதை?

வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்களைக் குறிப்பதல்ல வெள்ளாளியம். ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர்களை வெள்ளாளியம் குறிக்காது என்பதுமல்ல. தனி மனிதர்களையோ, பிறப்பையோ அடிப்படையாகக் கொண்டு, வெள்ளாளியத்தை வரையறுப்பதுமல்ல.

மாறாக வெள்ளாளியம் என்பது வெள்ளாளச் சாதியில் பிறந்தவர்கள் அல்லது பிறக்காதவர்கள்… என்று யாராக இருந்தாலும், சாதிய சமூக அமைப்பை யார் பாதுகாக்கின்றனரோ, அதை யார் முன்னிறுத்துகின்றனரோ, அவர்கள் வெள்ளாளியத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

மாற்றுத் தலைமை குறித்து பகுத்தறிவற்ற சிந்தனைகளும் - பிரச்சாரங்களும்

வடக்குத் தமிழர்களின் இனப் பிரச்சனைகளைத் தீர்க்க, மாற்றுத் தமிழ்த் தலைமை "தமிழருக்கு" தேவை என்கின்றனர். தமிழ் அறிவுத்துறை தொடங்கி, சாதாரண மக்கள் வரை, ஒரேவிதமாக சிந்திக்கின்றனர். "இடதுசாரிகள்" என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்கள் முதல் இடதுசாரியமே பிரச்சனைக்களுக்கு சரியான தீர்வுகளைக் கொண்டு இருக்கின்றது என்று கூறுகின்ற "முற்போக்குவாதிகள்" வரை, விதிவிலக்கின்றி ஒரேவிதமாக முன்வைக்கின்றனர்.

வர்க்கம், சாதி, பால், இனம்.. கடந்து சிந்திக்கின்ற தமிழ்ச் சிந்தனை முறை, "சுற்றிச் சுற்றி சுப்பற்றைக் கொல்லைக்குள்" தமிழ் தலைமையைத் தேடுகின்றது. அதையே தமிழர்க்கு தீர்வாகக் காட்ட முற்படுகின்றனர்.

தமிழ் சமூகத்தில் காணப்படும் தலைமையென்பது, தமிழர்களின் அக ஒடுக்குமுறையான வர்க்கம், சாதி, பால், பிரதேசம், இனம் .. சார்ந்து காணப்படுகின்றது. தமிழ் மக்களை அக முரண்பாடுகளால் ஒடுககு;கின்ற தலைமையையே, மாற்றுத் தலைமையாக மீண்டும் மீண்டும் முன்வைக்கின்றனர். தமிழ் மக்கள் மத்தியிலான அக முரண்பாடுளைக் களையும், அதாவது   அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்குமான விடுதலையை முன்வைக்கும், ஒரு ஒடுக்கப்பட்டவர்களின் வர்க்கத் தலைமையை யாரும்கோ ருவதில்லை.

மீள் குடியேற்றம் - சாதிக் கிராமங்கள் வெள்ளாளச் சிந்தனையைத் தோற்றுவிக்கின்றன.

மனித சிந்தனை எங்கிருந்து, ஏன் தோன்றுகின்றது என்பது மிக அடிப்படையான கேள்வியாகும். இந்த வகையில் யாழ்ப்பாணச் சிந்தனை முறையென்பது, சாதிய வாழ்க்கைமுறையில் இருந்து தோன்றுகின்றது. யாழ்ப்பாணச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் சாதியத்தில் இருந்து தான் தொடங்குகின்றது. பொதுவான இந்த சாதிச் சமூகப் பின்னணியில், சாதியும் அதனுடன் ஒன்று கலந்த மதமும் முதன்மையான சமூக இயக்கமாக மாறுவது ஏன்? இதற்கான இன்றைய சமூக அடிப்படை என்ன என்பதை பார்ப்போம்.

1. இனவாத யுத்தத்திற்கு முன்பாக இன முரண்பாடுகளை கடந்து சாதாரண சிங்கள தமிழ் மொழி பேசுகின்ற மக்கள் மத்தியிலான ஒன்று கலப்பானது இயல்பானதாகவும் அவை  எங்குமிருந்தது. வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் கலப்புகள் நடைபெற்றது. ஆனால் யுத்த காலத்தில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லிம்கள், மலையகத்தவர்கள் பரஸ்பரம் எதிரிகளாக கட்டமைக்கப்பட்ட இனவாதச் சிந்தனை முறையும், வன்முறையும் இலங்கை சமூகங்களுக்கு இடையில் நடந்து வந்த ஒன்றுகலப்பைத் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் தேசிய இனம் வளர்வதை இஸ்லாம் தடுக்கின்றது

தனிமனித வழிபாட்டு உரிமையைக் கடந்து மதம் செயற்படும் போது, மக்களை ஒடுக்கும் கருவியாக மதம் மாறி விடுகின்றது. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும். நிலவுகின்ற சமூக அமைப்பு என்பது, மனிதனை மனிதன் சுரண்டுகின்ற, மனிதனை மனிதன் பிளவுபடுத்தி ஒடுக்குகின்றதாக இருக்கின்றது. இந்த ஒடுக்குமுறையை நியாயப்படுத்துகின்ற சித்தாந்தமாக மதக் கோட்பாடுகள் செயற்படுகின்றது. அதேநேரம் மக்களை மதங்களின் பெயரில் பிளவுபடுத்தி, வன்முறையைத் தூண்டுகின்றது. இதன் மூலம் தன் மத மக்களை சுரண்டும் வர்க்கத்துக்கு உதவுகின்றது.

இந்த வகையில் இலங்கையில் பௌத்தம், இந்துமதம், இஸ்லாம், கிறிஸ்துவம்.. வரையான அனைத்து மதங்களும், சமூகத்தைக் கூறு போட்டு ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் பிரிவினைவாதக்  கருவியாகவும், மக்களை ஒடுக்கும் சமூகக் கூறாகவும் இருக்கின்றது.

தனியார் கல்விமுறையை ஆதரிக்கும் அறியாமையையும் - தர்க்கங்களையும் குறித்து

பாடசாலைக்கான "உதவிகள்" குறித்து பாரிஸ் மகாஜன பழைய மாணவர் சங்கம் நடத்திய கருத்தரங்கு மற்றும் வானொலி விவாதமானது, தனியார் கல்விமுறை குறித்த புரிதலுக்கு வழிகாட்டி இருக்கின்றது. பழைய மாணவ சங்கங்களின் உதவிகள், தனியார் கல்விமுறைக்கு உதவக் கூடாது என்ற கருத்து, இந்த விவாதத்தின் கருப் பொருளாகியது. "தமிழ் தேசியம்" குறித்து சுய கற்பனையில் வாழ்கின்ற தமிழ் சமூகம், தன்னைச் சுற்றிய கல்விமுறையில் நடந்து வரும் தனியார்மயமாக்கத்தை கண்டுகொள்ள முடிவதில்லை அல்லது கண்டுகொள்ள விரும்புவதில்லை. மாறாக தனியார் கல்விமுறை குறித்த புரிதலின்றி ஊக்குவிக்கின்றதும், ஆதரிக்கின்றதுமான போக்குகளும், இதற்கு அப்பால் தர்க்;கரீதியாக தனியார் கல்வியை நியாயப்படுத்துகின்ற கண்ணோட்டமுமே, பொதுவான சிந்தனைமுறையாக இருக்கின்றது.

பழைய மாணவர் சங்கங்களின் கோடிக்கணக்கான பணம், சமச்சீரான பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தி வருகின்றது. இதே போன்று மாணவர்களுக்கு இடையில் கல்விரீதியான ஏற்றத் தாழ்வை அதிகமாக்கவுமே பயன்படுத்தப்படுகின்றது. அனைவருக்கும் சம வாய்ப்பும், சம கல்வியும் என்ற அடிப்படையிலான பழைய மாணவர்களின் சமுதாய பொதுக் கொள்கையை மெதுவாக அரித்து இல்லாதாக்குகின்றது.

 

சுயவிமர்சனம் மூலம் சர்வதேசியத்தையும் - தேசியத்தையும் விளங்கிக் கொள்ளுதல்

சுயவிமர்சனம் என்பதை வெறும் வாய்ப்பாடமாக ஒப்புவிக்காமல்,  தவறான அரசியல் வழிமுறையைகளைக் கைவிட்டு உழைக்கும் வர்க்க அரசியல் நடைமுறைக்கு வருதலே சரியான சுயவிமர்சனம் செய்வதாகும். எல்லாம் மாறிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருக்கும் நிலையில் -இயற்கையில், எமது கருத்துகளும் நடைமுறைகளும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்பது விதிவிலக்கல்ல. நாம் கற்றுக்கொண்டும், நம்மை நாமே மாற்றத்துக்கு உட்படுத்திக் கொண்டும்   இருக்க வேண்டும். சமூகம் குறித்து சிந்திக்கின்றவர்கள் பழைய கருத்தில் தொங்கிக் கொண்டும் அதை ஒப்புவித்துக் கொண்டும் வாழ்வதால், சமுதாயத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக, சமூக மாற்றத்துக்கு வழிவகுக்காமல், பின்னிழுத்து வீழ்த்துவதாகும். இந்த வகையில் தமிழ் அரசியற்பரப்பில் 80 வருட கால, தேசியம் -  சர்வதேசியம் குறித்து ஆராயப்படல்  வேண்டும்.

மக்களை அனாதையாக்கி பிழைக்கும் தமிழ் அரசியல்

சிங்கள - தமிழ் இனவாத யுத்தமானது, தமிழ்மக்களை அடக்கியொடுக்கி மனித அவலங்களையே விதைத்துவிட்டுச் சென்றுள்ளது. இவை இன்று வாழ்வதற்கான போராட்டங்களாக மாறி இருக்கின்றது. தங்கள் சொந்த நிலத்தை விடுவிக்கக் கோரும் போராட்டங்கள்;, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே என்று கேட்டு நடக்கும் போராட்டங்கள், அரசியற்கைதிகளை விடுவிக்கக் கோரும் போராட்டங்களானது,.. இன்று 100 நாட்களையும் கடந்த தொடர் போராட்டமாக பண்புமாற்றம் பெற்று வருகின்றது.

இதை விட அன்றாட வாழ்க்கை சார்ந்து, போராட்டங்கள் வெடித்துக் கிளம்புகின்றது.  உதாரணமாக பட்டதாரிகள் வேலை கோரும் போராட்டங்கள், தொடர் போராட்டமாக மாறி நிற்கின்றது