புத்தாண்டை புத்துணர்வு பெற அழைத்துச்செல்வோம்!பெத்தலேகம்பெற்றெடுத்த மைந்தனே!இவ்வுலகம் -தன்வரலாற்றைஉனக்குமுன்உனக்குப்பின்னெனபதிவு செய்கின்றதுஇருந்தும் – உன்சிந்தனையை – தன்மனதில்பதித்ததில்லை.பொன்சே பிளேத் – உன்மாற்றுக்கருத்தால்வெகுண்டெழுந்தான்மக்கள் தனக்கெதிராய்கிளர்வதைக் கணணுற்று – உனைசிலுவையிலும் அறைந்தான்மக்களுக்காய் – அவர்தம்விடிவுக்காய் – வீதிகளில்;சிலுவையும் சுமந்தாய் ஆனால்மக்கள் தம்வாழ்வு; விடியவேயில்லை !ஆளவோர்pன் ஆதிக்கமேவரலாற்றின்வரலாறாய் தொடர்கின்றதுஇன்றைய உலகமயமாதல்பூமியின் ஆயுளைமனிதனின் ஆயுளைஅற்பமாக்குகின்றது.அரசியலில் – பொருளியலில்அடிமை விலங்கிடுகினறதுஇன – மத – மொழியில்நாடுகள் – தேசங்களில்மக்களை மோதவிட்டு – உலகைபிளவுற வைக்கின்றது.தன்னனாதிகத்தைதொடராய் தனதாக்கஎண்ணுகின்றது. ஆனால்இவ்வவலம் – இவ்வடக்குமுறைதொடராய் தொடராது.மானிட விடிவுக்காய் – உன்வழி வந்தஆசான்களும் – மாமேதைகளும்விட்டுச்சென்ற“உன்போல் உன் அயலானை நேசியெனும்”சமவுலக சிந்தனைச்செயற்பாடுபுத்துலகை; காணவைக்கும்!புத்தாண்டேஉலகம் புதிய சிந்தனைமயப்படஉனையங்கே -அழைத்துச்செல்கின்றோம்!பெத்தலேகம்
பெற்றெடுத்த மைந்தனே!
இவ்வுலகம் -
தன்வரலாற்றை
உனக்குமுன்
உனக்குப்பின்னென
பதிவு செய்கின்றது
இருந்தும் – உன்
சிந்தனையை – தன்மனதில்
பதித்ததில்லை.
பொன்சே பிளேத் – உன்
மாற்றுக்கருத்தால்
வெகுண்டெழுந்தான்
மக்கள் தனக்கெதிராய்
கிளர்வதைக் கணணுற்று – உனை
சிலுவையிலும் அறைந்தான்
மக்களுக்காய் – அவர்தம்
விடிவுக்காய் – வீதிகளில்;
சிலுவையும் சுமந்தாய் ஆனால்
மக்கள் தம்வாழ்வு; விடியவேயில்லை !
ஆளவோர்pன் ஆதிக்கமே
வரலாற்றின்
வரலாறாய் தொடர்கின்றது
இன்றைய உலகமயமாதல்
பூமியின் ஆயுளை
மனிதனின் ஆயுளை
அற்பமாக்குகின்றது.
அரசியலில் – பொருளியலில்
அடிமை விலங்கிடுகினறது
இன – மத – மொழியில்
நாடுகள் – தேசங்களில்
மக்களை மோதவிட்டு – உலகை
பிளவுற வைக்கின்றது.
தன்னனாதிகத்தை
தொடராய் தனதாக்க
எண்ணுகின்றது. ஆனால்
இவ்வவலம் – இவ்வடக்குமுறை
தொடராய் தொடராது.
மானிட விடிவுக்காய் – உன்வழி வந்த
ஆசான்களும் – மாமேதைகளும்
விட்டுச்சென்ற
“உன்போல் உன் அயலானை நேசியெனும்”
சமவுலக சிந்தனைச்செயற்பாடு
புத்துலகை; காணவைக்கும்!
புத்தாண்டே
உலகம் புதிய சிந்தனைமயப்பட
உனையங்கே -
அழைத்துச்செல்கின்றோம்!