எம் மக்கள் இடரிலும் துயரிலும்
இதயம் வெடிக்கவில்லை ஈரமெழவில்லை
இடித்துரைக்கும் ஓர்மம் எழவில்லைகோரமெதிர்த்து கொடும்பகை வீழ்த்தும் போராய் எழுக
கலையும் இலக்கியமும் மக்களிற்கானது…...இல்லையென்பாயெனின்
உன்னிடம் ஈரமெதிர்பார்த்தல் தவறு
எது நடந்ததுவோ அது நன்றாகவே நடந்ததுவோ
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறதா,
எது நடக்கப்போகிறதோ அது நன்றாகவே நடக்குமோ………
படைப்பாளிகளே
மக்கள் வாழ்வோடு ஒன்றிப்போ
நேர்மை நெறியோடு பார்
படைப்பெல்லாம் பகையை வீழ்த்தும்
தட்டியெழுப்பும் சக்தியாய் மாறும்