Language Selection

சமூகவியலாளர்கள்

நாங்கள் சாதி ஒழிய வேண்டும் என்று போராடுகின்றோம். சாதி ஒழிப்புக்காகவே 3000 – 4000 பேர்கள் சிறைக்குச் சென்று பல கஷ்ட நஷ்டங்களை எல்லாம் ஏற்று வெளி வந்து இருக்கிறோம். அதன் காரணமாகவே நாட்டு மக்களிடம் மட்டுமல்ல, எங்களைக் கேலி செய்த அரசாங்கத்தாரிடையே கூட மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் நீ இப்படிப்பட்ட நல்ல சூழ்நிலையில் உருவாகியுள்ளதை ஒழிக்க வேண்டும் என்று பாடுபடும் ஆச்சாரியாருக்குத் துணை போகிறாய் என்றால் என்ன அர்த்தம்? சாதியைப் பாதுகாக்க இழி தன்மையை ஒழிய விடாமல் கட்டிக் காக்க உதவுகின்றாய் என்பது தானே பொருள்?

நீங்கள் உங்கள் 5 - ஆண்டு காலச் சட்டசபை வாழ்வில் தான் ஆகட்டும், வெளியில் தான் ஆகட்டும், என்றேனும் சாதி ஒழிய வேண்டும் என்று மறந்தும் பேசியிருக்கின்றீர்களா? எங்களது சட்ட எரிப்புச் சிறைவாசத்துக்குப் பிறகு இந்த நாட்டு முதல் அமைச்சர் காமராசர் சாதி ஒழியாத சுயராஜ்ஜியம் என்ன சுயராஜ்ஜியம்? மக்களுக்கு எல்லாம் படிப்பு கொடுப்பதன் மூலம் சாதியை ஒழிக்கப் போகிறேன் என்கிறார்.

இந்தியப் பிரதமர் நேருவும் சாதி ஒழியாவிட்டால் வந்த சுதந்திரத்தினால் என்ன பலன்? வெளிநாட்டில் தலை நீட்டவே முடியவில்லையே! எப்படியும் இந்தச் சாதியை ஒழித்தாக வேண்டும் என்றார்.நீங்கள் என்றாவது சாதி ஒழிப்புப் பற்றி ஒரு வார்த்தை பேசியதுண்டா? சாதியை ஒழிக்கக் கூடாது, கட்டிக் காக்க வேண்டும் என்று கூறும் இராஜாஜிக்குத் துணை போவது தானே (கண்ணீர்த்துளிகளின்) வேலையாக உள்ளது. சாதி ஒழிய வேண்டும் என்பதில் எங்களை விட இந்தக் கண்ணீர்த்துளிகளுக்குத் தானே நியாயமாக அக்கறை இருக்க வேண்டும். சாதி ஒழிந்தால் பலன் பெறுபவர்கள் அவர்கள் தானே! அதை விட்டு விட்டு சாதி ஒழிப்பு உணர்ச்சி பெருகிக் கொண்டு இருக்கும் இந்தப் பொற்காலத்தை ஒழிக்க பார்ப்பானுக்குத் துணை போகிறாய் என்றால் உன்னை என்ன என்று அழைப்பது?வாக்காளப் பெருமக்களுக்கு நான் பணிவுடன் கூறிக் கொள்ளுகின்றேன்.

நீங்கள் யாருக்கு ஓட்டுப் போட்டாலும் சரி பார்ப்பானுக்குப் போட்டாலுங் கூடப் பரவாயில்லை. இந்தப் பாவிகளுக்கு (கண்ணீர்த்துளிகளுக்கு) ஒரு போதும் ஓட்டுப் போடாதீர்கள். இந்தக் கண்ணீர்த் துளிகள் இன்று நமது சமூதாயம் வரலாறு கண்டிராத முன்னேற்றம் அடைந்து வருவதை அரித்து ஒழிக்கின்ற தொழுநோய் போல் உள்ளார்கள். இவர்கள் கையில் ஆட்சிப் பொறுப்பு வந்தால் எவ்வளவு மோசமாகப் போகும் என்பதற்கு உதாரணம் சென்னை கார்ப்ரேஷனே போதுமே!

சர்வமும் லஞ்சம், ஊழல்- இதுதானே தாண்டவமாடுகின்றது? "மதராஸ் கார்ப்பரேஷன்" சங்கதி கண்டு நாடே சிரிக்கின்றதே. நான் மதராஸ் (சென்னை) மக்களுக்கு கூட்டங்களிலே கூறினேன். நீங்கள் மதராஸ் கார்ப்பரேஷன் ஊழலாக உள்ளது என்று அதிருப்தி அடைந்து இந்தக் கண்ணீர்த்துளிகளுக்கு ஒட்டுப் போட்டீர்களே பலன் என்ன? சாணியிலே கால் வைத்து விட்டோமே! என்று அஞ்சி எட்டிக் குதிக்கப் போய் மலத்தில் அல்லவா கால் வைத்து விட்டீர்கள் என்று குறிப்பிட்டேன். அது போலவே இந்தக் காஞ்சிபுரம் வாசிகளுக்கு நான் கூறுகின்றேன்.

நீங்கள் சென்ற தேர்தலில் காங்கிரசுக்கு ஓட்டளிக்காமல் கண்ணீர்த்துளிகளை வெற்றி பெறச் செய்தீர்கள். இப்படி நீங்கள் செய்ததன் மூலம் நீங்கள் அடைந்த பலன் என்ன?உங்கள் தொகுதியில் குறைப்பாட்டை எடுத்துச் சொன்னார்களா?அல்லது நாட்டுக்காவது நலன் பயக்கும் பல திட்டங்களைப் பற்றி விவாதித்தார்களா? நான் தான் முதலில் சொன்னேன். இவர்களின் சட்டசபை யோக்கியதைப் பற்றி. இப்படிப்பட்டவர்களையா மீண்டும் தேர்தலில் வெற்றி அடையச் செய்யப் போகிறீர்கள்?

எனவே காஞ்சிபுரத்துக்கு இருக்கக் கூடிய பழியைத் தீர்க்க சமூதாய நலனிலும் சாதி ஒழிப்பிலும் அக்கரையுள்ள காங்கிரசுக்கே நீங்கள் வேலை பண்ண வேண்டும் காங்கிரசை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதற்காக ஆங்காங்கு கமிட்டிகள் அமைத்துக் கொண்டு காமராசர் தலைமையில் இயங்கி வரும் இந்தக் காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகளை எல்லாம் எடுத்து மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதுபோலவே ஆச்சாரியார் காலத்தில் அவர் செய்த கொடுமைகள் பற்றியும் மீண்டும் அவர் பதவிக்கு வருவரானால் ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் முதலியவைகள் பற்றியும் விளக்க வேண்டும்.

(26-11-1961 அன்று காஞ்சிபுரம் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை"- 04-12-1961)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/08/blog-post_10.html

குறிப்பாகவும், சிறப்பாகவும் கடவுள் என்பது என்ன என்பதைப்பற்றியும், மதம் என்பது என்ன என்பதைப்பற்றியும், தர்மம் என்பது என்ன என்பதைப்பற்றியும், பரிபாலனம் என்பது என்ன என்பதைப் பற்றியும் இந்துக்கள் என்போர்களின் ஆயிரத்திற்கொருவருக்குக்கூடக் குறைந்த அளவு ஞானமும் இல்லாமலே இருக்கிறது. இதைப்போல ஒரு பெரிய ஜனசமூகத்திற்குக் கேடான காரியம் வேறெதுவும் இல்லை. நம்மில் அநேகர் கடவுள் என்றால் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?

 

கடவுள் நம்மைப்போல் மனித உருவத்தோடு இருப்பதாயும், அதற்குப் பெண்டாட்டி, பிள்ளை, தாய், தகப்பன், வீடு, வாசல், சொத்து, சுகம் உண்டென்றும், அதற்கும் கல்யாணம், ருது, சாந்தி, படுக்கை, வீடு, சீமந்தம், பிள்ளைப்பேறு உண்டென்றும் இப்படி ஆயிரக்கணக்கான கடவுள் - ஆயிரக்கணக்கான பெயரினால் இருக்கிறதாகவும், அதற்கு அபிஷேகமோ, பூஜையோ, உற்சவமோ செய்வதுதான் பக்தி என்பதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

அதுபோலவே மதம் என்பதையும், நெற்றியில் நாமமோ, விபூதியோ, கோபியோ, சந்தனமோ பூசுவது தான் இந்து மதம் என்றும், ஒருவரை ஒருவர் தாழ்ந்த ஜாதி என்று சொல்லுவதைத்தான் இந்துமதம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரி சுவாமிகளுக்குக் கோயில் கட்டுவதையும், உற்சவம் நடத்துவிப்பதையும், இந்த உற்சவத்திற்கு வரும் ஜனங்களுக்கு மடம் கட்டுவதும், சத்திரம் கட்டுவதும், சாப்பாடு போடுவதும், தர்மம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்விதக் காரியத்தைப் பிரசாரம் செய்வதையும், இவ்விதக் காரியங்களை நிர்வகிப்பதையும், இதற்காகப் பொது ஜனங்கள் பொருளைச் செலவு செய்வதையும் பரிபாலனம் என்று நினைக்கிறார்கள்.


இந்து சமூகத்திற்கு அடிப்படையான குற்றம் - அதாவது அஸ்திவாரத்திலேயே பலவீனம் - நாம் கடவுளையும், மதத்தையும் அறிந்திருக்கும் பான்மையேதான். இந்தப்பான்மையுள்ள சமூகம் உருப்படியாவதற்கு மார்க்கமேயில்லை. தொட்டதற்கெல்லாம் கடவுள் செயல் என்பதும், நமது தேவைகளையெல்லாம் நமது பிரயத்தனமில்லாமல் கடவுளை ஏமாற்றி அடைந்துவிடலாம் என்கிற பேராசைப் பைத்தியமும் நம்மைவிட்டு நீங்க வேண்டும். கடவுள் கை, கால், கண், மூக்குடன் மனிதனைப்போல் எங்கேயோ ஓரிடத்தில் இருக்கிறார். அவரை நினைத்தாலோ, பணிந்தாலோ, தேங்காய்பழம் உடைத்துப் பொங்கல் வைத்து பூஜை செய்தாலோ, பூசாரிக்குப் பணம் கொடுத்தாலோ மனிதனாய்ப் பிறந்ததற்குச் செய்ய வேண்டிய கடன் தீர்ந்துவிட்டது. மனிதன் செய்யும் தப்பிதம் எல்லாம் தீர்ந்து விட்டது என்று எண்ணுகிற எண்ணத்தைப் போல் ஒரு முட்டாள்தனமான எண்ணம் வேறொன்றுமே இல்லை.

 

மனிதர்கள் இவ்வளவு அக்கிரமங்கள் செய்யக் காரணமே கடவுளைச் சரியானபடி உணராததும், உணர்ந்திருப்பதாய் நினைக்கும் பலர் கடவுளை வணங்கி மன்னிப்புக் கேட்டால் மன்னித்து விடுவார் என்கிற நம்பிக்கையும் தான். கடவுள் ஒருவர் இருக்கிறார்! அவர் எல்லாவற்றையும் அறிந்து கொண்டு இருக்கிறார் என்று எண்ணுகிற மக்களிலேயே ஆயிரத்தில் ஒருவன் கூட கடவுள் கட்டளைக்குப் பயந்து நடப்பது அருமையாய்த்தான் இருக்கிறது. இவற்றிற்குக் காரணம் இயற்கைக்கு விரோதமான கட்டளைகளையும், உண்மையான கடவுள் தன்மையையும் அறியாததேதான்.

 

கடவுள் கட்டளை என்று சொல்வது ஒவ்வொரு தேசத்திற்கும், ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொருவிதமாக இருந்துவருவதை நாம் காண்கிறோம். இவை எப்படிக் கடவுள் - கட்டளையாக மதிக்கப்படும்? அதுபோலவே பாவ- புண்ணியம் என்பது தேசத்திற்கொருவிதமாகவும், மதத்திற்கொருவிதமாகவும், ஜாதிக்கொருவிதமாகவும் தான் கருதப்படுகிறது. நமது கல்யாணங்களிலேயே மதத்திற்கு மதம் வித்தியாசம், ஜாதிக்கு ஜாதி வித்தியாசம், சிலர் தனது சிறிய தகப்பனார் பெரிய தகப்பனார் புத்திரியை மணக்கிறார்கள். சிலர் அத்தை மாமன் புத்திரியை மணக்கிறார்கள்.

 

ஆகார விஷயத்திலோ சிலர் பசுவை உண்ணுவது பாவம் என்கிறார்கள். சிலர் பன்றியை உண்பது பாவம் என்கிறார்கள். சிலர் கோழியை உண்பது பாவம் என்கிறார்கள். ஜந்துக்களிலேயே சிலர் பசுவை அடித்துத் துன்புறுத்தி வேலை வாங்கலாம். ஆனால் பாம்பை அடிப்பது பாவம் என்கிறார்கள். சிலர் எந்த ஜீவனையும் வதைக்கக்கூடாது என்கிறார்கள். சிலர் எல்லா ஜீவனும் மனிதன் தன் இஷ்டம் போல் அனுபவிப்பதற்குத் தான் படைக்கப்பட்டது என்கிறார்கள். இந்த நிலையில் எது உண்மை? எது கடவுள் கட்டளை? எது பாவம்? என்று எப்படி உணர முடியும். இவற்றைப்பற்றி எவராவது ஆராய்ச்சி செய்யப் புகுந்தால் உடனே அவரை நாஸ்திகர் என்று சொல்லுவதும் இதெல்லாம் உனக்கு எதற்காக வேண்டும்? பெரியவர்கள் சொன்னபடியும் நடந்தபடியும் நடக்க வேண்டியதுதானே என்றும் சொல்லிவிடுவார்கள்.

 

பெரியவர்கள் யார் என்று யோசிக்கப்போனால் அதிலிருக்கும் கஷ்டத்திற்கு அளவேயில்லை. அன்றியும் அவர்கள் சொன்னதையும், நடந்ததையும் கவனிக்கப்போனால் அதிலுள்ள கஷ்டத்திற்கும் விவகாரத்திற்கும் முடிவேயில்லை. உதாரணமாகச் சிலர் "வேதம்" என்று ஒன்றைச் சொல்லி அதன்படி எல்லாரும் நடக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். அதில் என்ன சொல்லியிருக்கிறது நான் பார்க்கலாமா? என்றால் அது கடவுளால் சொல்லப்பட்டது அதை நீ பார்ப்பது பாவம் நான் சொல்வதைத் தான் நம்பவேண்டும் என்பார்கள்.

 

உலகத்தில் எத்தனைக் கடவுள் இருப்பார்கள்! ஒரு கடவுள் தானே! அவர் சொல்லியிருப்பாரானால் அது உலகத்திற்கெல்லாம் ஒப்புக் கொள்ளப்பட்டதாயிருக்க வேண்டாமா? அப்படியானால் கிறிஸ்து மகம்மது முதலிய மதங்கள் இந்தியா தவிர மற்ற தேசங்களும் இதை ஒப்புக்கொள்ளும்படி கடவுள் ஏன் செய்யவில்லை? ஆனதனால் இது கடவுள் சொன்னார் உடனே அவனை வேதப்பிரஷ்டன் என்று சொல்லிவிடுவார்கள். இம்மாதிரி மூடுமந்திரமானதும், இயற்கைக்கும், அனுபவத்திற்கும், நாணயத்திற்கும் விரோதமானதுமான கொள்கைகள் நமது நாட்டில் இந்து மதத்தின் பெயரால் இருந்து கொண்டு ஒரு பெருஞ் சமூகத்தையே தேய்ந்து போகும்படிச் செய்வதோடு, இதன் பரிபாலனம் என்னும் பெயரால் தேசத்தின் நேரமும், அறிவும், பொருளும் அளவற்று அனாவசியமாய் செலவாகியும் வருகின்றன.

 

மதத்திற்கொரு கடவுளா? ஜாதிக்கொரு கடவுளா? மதத்திற்கொரு வேதமா? மதத்திற்கொரு புண்ணிய பாவமா? கடவுளுக்கும் மோட்சத்திற்கும் நரகத்திற்கும் வேறு ஒரு உலகமிருக்கிறதா? ஒருக்காலும் இருக்கவே முடியாது.

 

பெரியவர்கள் கோயிலில் சுவாமி கும்பிடும் போது கட்கத்திலிருக்கும் குழந்தை எப்படி ஒன்றும் அறியாமலும், மனதில் ஒன்றும் நினைக்காமலும் தானும் கைக்கூப்பிக் கும்பிடுகிறதோ அதுபோலவே நமக்குத் தெய்வம் - மதம் - தர்மம் என்கிற சொற்கள். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு அர்த்தமில்லாமல் நமக்குள் பதிந்து விட்டன. இதுபோலவே பக்தி – தொண்டு அகிம்சை என்னும் பதங்களும் அர்த்தமில்லாமலே வழங்கப்படுகின்றன. யோசித்துப் பார்ப்போமேயானால் நம்மிடையில் உள்ள பக்தி செய்யத்தக்க கடவுள் அவர்களுக்குச் செய்யும் தொண்டதான் கடவுள் தொண்டு. அம்மக்களின் விடுதலை தான் மோட்சம் ஜீவன்களிடம் கருணை காட்டுவதும் அவை வேதனைப்படாமலிருப்பதும் தான் அகிம்சை.

 

மாமிசம் சாப்பிடுவதில்லை என்பது மாத்திரமே அகிம்சையதகாது. பகுத்தறிவுள்ள மக்களைக் கஷ்டப்படுத்தாமல் அவர்கள் மனவேதனை அடையச் செய்யாமல் இருப்பதும், அவர்களுடைய கஷ்டத்தையும், அடிமைத்தனத்தையும் நீக்க உழைப்பதும் தான் அகிம்சையாகும். "மாட்டு மாமிசம் சாப்பிடாமலிருந்து விட்டு மாட்டை வண்டியில் கட்டி சுமக்கமாட்டாத பாரம் வைத்துத் தினம் கஷ்டப்படுத்துவது ஒருக்காலும் அகிம்சையாகாது."

இப்படியே ஒவ்வொரு விஷயத்திலும் மற்றொரு ஜீவனுக்கு உபத்திரவமும் கொடுமையும் செய்யாமலிருப்பது தான் அகிம்சை. மனிதனுக்கு மனிதன் பார்ப்பது பாவம்! தெருவில் நடப்பது பாவம்! என்று சொல்லிக் கொண்டு பட்டை நாமம் போட்டுக்கொண்டும், பஞ்சகச்சம் வைத்து வேட்டி கட்டிக் கொண்டும், வாயால் ராம்.. ராம்.. என்று ஜபித்துக் கொண்டும் இருந்தால் அது ஆசாரமும் பக்தியுமாய்விடுமா?

 

நம்மைச் சுற்றிக் கோடிக்கணக்கான மக்கள் குடியிருக்க நிழல் இல்லாமலும் இரண்டு நாளைக்கு ஒரு வேளைகூட சாப்பிடச் சக்தியில்லாமல் தரித்திரத்தால் வாடிக் கொண்டிருக்கும் போது சோம்பேறிகளும், விபசாரிகளும் தங்கும்படி மடங்களும், சத்திரங்களும் கட்டுவதும் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு பாயசத்திற்குப் குங்குமப்பூ போடவில்லை, பொங்கலுக்கு பாதாம் பருப்பு போடவில்லை என்று சொல்லிவிட்டுப் போகும் தடியர்களுக்குப் பொங்கிப்போடுவதும் சமாராதனை செய்வதும் தர்மமாகுமா?

 

இவற்றை உணராமல் சுயநலக்காரர்கள் தங்கள் நன்மைக்கு எழுதி வைத்திருக்கும் ஆபாசக் களஞ்சியங்களை நம்பிக் கொண்டு நமது பொருள், நேரம், அறிவு முதலியவற்றை வீணே பாழாக்குகிறோம். இந்துக்கள் என்போர்களோ, இந்து மத ஆச்சார்யர்கள் என்போர்களோ சற்றும் கவலையற்று தங்களது வாழ்வுக்குச் சிலதைத் தொழிலாய் வைத்துக் கொண்டு காலங் கழித்து வருகிறார்கள்.

 

இப்படி நடந்து வருவதால் தனிப்பட்ட நபர்களுக்கும் சில தனிப்பட்ட வகுப்புகளுக்கும் அனுகூலமாயிருப்பதால் இவ்வா பாசங்களை வெளியார் அறியாமலிருப்பதற்கு இவ்வகுப்பாரின் கட்டுப்பாடான சூழ்ச்சியும், மற்ற வகுப்பாரின் அறியாமையும் உதவி செய்து வருகின்றன. நமது சென்னை மாகாணத்தில் மாத்திரம் இந்து மத சம்பந்தமான சடங்குகள் பெயராலும், மதப் பெயராலும் தெய்வங்கள் பெயராலும் வருடம் ஒன்றுக்கு 10 - கோடி ருபாய்க்கு அதிகமாகச் செலவாகி வருகிறது என்று சொல்வது அதிகமாகாது.

அதாவது எவ்வளவு யாத்திரை, ஸ்தலம், எவ்வளவு வேண்டுதல், ஸ்தலம் எவ்வளவு, உற்சவ ஸ்தலம், எவ்வளவு மதச் சடங்குகள் இவற்றுக்கேற்படும் செலவு மௌனக்கேடு இவற்றைக் கணக்குப் பார்த்தால் எவ்வளவு 10 - கோடி ருபாயாகும்? இதனால் என்ன பலனை அடைகிறார்கள்? மனதில் ஏற்படும் ஒரு குருட்டு நம்பிக்கையாலும், இதனால் லாபமடையும் வகுப்பார்களால் ஏமாற்றப்படுவதாலும் தானே நம் மக்கள் இவ்விதக் கஷ்ட நஷ்டமெனக் கேடுகளுக்குக் கட்டுப்பட வேண்டியிருக்கிறது? அல்லாமலும் இதனால் எவ்வளவு அடிமைப் புத்தி வளர்கிறது? இவ்விஷயங்களையெல்லாம் ஒழுங்குபடுத்தவும், இம்மாதிரிக் கஷ்ட நஷ்ட மௌனக்கேடுகள் ஏற்படாமலும் அவை உண்மையில் பலனளிக்ககத்தக்க வழியில் உபயோகப்படவும் வேண்டிய முயற்சிகள் எடுத்துக் கொள்வதுதான் மத தர்ம பரிபாலனங்களை ஒழுங்காக நடைப்பெறச் செய்தல் என்பது.

 

இவற்றை உத்தேசித்தே இந்து மத பரிபாலனைச் சட்டம் என்று சென்னை சட்டசபையில் ஒரு சட்டம்கூட நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனாலும் அச்சட்டம் பண சம்பந்தமான வரவு – செலவுகளைத் தணிக்கைப் பார்க்கக்கூடியதாய் இருக்கிறதே தவிர நான் மேலே சொல்லியுள்ள குற்றங்களை நிவர்த்தி செய்யத்தக்கது என்று சொல்ல முடியாது. ஆனாலும் இவ்வளவாவது எவ்வளவோ சூழ்ச்சிக்கிடையில் நிறைவேற்றி முடித்தவர்களின் வீரத்தைப் போற்றாமலிருக்க முடியாது. ஆனாலும் இன்னமும் அச்சட்டத்தை ஒழிப்பதற்கு அதனால் இப்போது கொள்ளையடிக்க முடியாத ஒரு வகுப்பாரால் எவ்வளவோ காரியங்கள் நடைபெற்று வருகின்றன.

 

ஸ்ரீமான்கள் எஸ். சீனிவாசய்யங்கார் சி.இராஜகோபாலாச்சாரியார் முதலியவர்கள் சுயராஜ்யக் கட்சி பெயரைச் சொல்லிக் கொண்டும் கள்ளு நிறுத்துவதென்பதைச் சொல்லிக் கொண்டும் சட்டசபைக்கு ஆள் பிடிப்பதும் அவர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுப்பதும் இதே கருத்தைக் கொண்டுதான் நமது மதத்தின் பெயரால் நம் மக்களிடமிருந்து கோடிக்கணக்காய் வசூலாகும் பணத்திற்குக் கணக்குக் கேட்பதுகூட நமது அய்யங்கார் - ஆச்சாரியார் கூட்டங்களுக்குக் கஷ்டமாய் இருப்பதன் காரணம் என்னவென்பதை ஊன்றிக் கவனித்தால் யாவருக்கும் அதன் இரகசியம் விளங்கும்.

 

ஆதலால் தர்ம பரிபாலனமென்பது ஒவ்வொரு மனிதனும் கவலையெடுத்துக் கொண்டு அது பிரயோஜனப்படத்தக்க வழியில் உழைக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் முக்கியமான கடமை. அப்பேர்ப்பட்ட கடமையை நீங்கள் அய்ந்தாவது கொள்கையாக வைத்திருப்பதைப் பற்றி நான் மிகுதியும் போற்றுகிறேன். ஆகவே உங்கள் சங்கம் நீடுழி வாழ்ந்து அதன் கொள்கைகள் பூராவும் நிறைவேறித் தங்கள் சமூகத்திற்கும் நாட்டிற்கும் தக்க பலனையளிக்க எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகிறேன்.

 

(23.05.1926 ஏழாயிரம் பண்ணையில் நடந்த ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்களின் தலைமையுரை. குடிஅரசு 30.05.1926)

http://thamizachi.blogspot.com/

ஏதோ சில சந்தர்ப்பங்களில் மணமான இந்துப் பெண்கள் கணவனிடமிருந்து வாழத் தனி இடமும், ஜீவனாம்சமும் பெற உரிமை தரும் சட்டம் ஒன்று 04-02-1946- இல் மத்திய சட்டசபையில் நிறைவேறியுள்ளது. இது உதவாக்கரைச் சட்டம் என்பதைக் கீழே விளக்கியுள்ளோம். இந்த உரிமைக் கூட பெண்களுக்குத் தரக்கூடாதென இந்து மகா சபைக்காரரும் சனாதனிகளும் எதிர்த்து ஆர்பாட்டம் செய்தார்களாம். இந்த சட்டத்தைச் சட்டசபை நிராகரித்து விட வேண்டுமெனத் தேசபக்த மாளவியாவும் கேட்டுக் கொண்டாராம்.

பெண்களுக்குக் கலியாணம் விடுதலைக்கு அனுமதியில்லாமலும், ஒரு கணவன் இருக்கும் போது மற்றொரு கணவனை மணந்து கொண்டு வாழ உரிமையில்லாத பொழுது கணவனுக்கு மாத்திரம் மற்றொரு மனைவி கட்டிக் கொள்ள அனுமதியிருப்பதுமான சட்டம் எவ்வளவு புரச்சிதரமான மாறுதலானது என்று பேசப்பட்டாலும் அது உண்மையில் பயனற்றது என்பதே நமது கருத்து. இந்தச் சட்டமானது இதுவரையிலும் காந்தியாரும், காங்கிரசுக்காரர்களும் இந்து சீர்திருத்தக்காரரும்- தீண்டாமையைப் பற்றிப் பேசி வந்த சூழ்ச்சியைப் போலும், சூழ்ச்சி இல்லாவிட்டால் அறியாமையைப் போலும் ஒரு வீண் வேலையைப் போல் தான் ஆயிற்றே ஒழிய வேறொன்றுமில்லை. நிறைவேறியிருக்கும் புதிய சட்டத்தில் பெண் தனித்திருக்கலாம் என்றிருக்கிறது. இதனால் பெண்ணுக்கு இலாபமென்ன? தனியே இருந்து வேதனைப் பட வேண்டியது தவிர அல்லது புருஷனால் கருதப்படும் கெட்டகாரிமென்னும் விபச்சாரமென்று சொல்லப்படும் குற்றத்திற்குப் பெண்களை ஆளாக்கக் கணவன் உள்பட மற்றவர்கள் ஆதாரங்கள் கவனிப்பதைத் தவிரவேறென்ன முடியும்?

ஜீவனாம்சம் என்று சொல்லுவதும், இதற்கு முன் இருந்து வருகிற ஜீவனாம்சம் ஒன்றும் இல்லை. ஜீவ சுபாவங்களின் இயற்கை உணர்ச்சியாகிய இன்ப நுகர்ச்சி திருப்திக்கு வசதியில்லாத கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் வைத்துக் கொண்டு எந்தவிதமான மாறுதல் செய்தாலும் வருணாசிரமத்திற்குப் புதிய பாதுகாப்பு வியாக்கியானமும் ஏற்படுவது போலும் புராணங்களுக்குத் தத்துவார்த்தம் சொல்வது போலுந்தான முடியுமே தவிர வேறில்லை. ஆகவே பெண்கள் தங்கள் ஜீவ சுபாவத்துக்காகத் தாங்கள் முயற்சியெடுத்துக் கட்டுப்பாடுகள் என்னும் விலங்குகளைத் தகர்த்தெறிய முற்பட்டாலொழிய தங்களை வாசனைத் திரவியங்கள் போலவும்- உடையணிகள் போலவும் மதித்து அனுபவித்துக் கொண்டு வரும். ஆண்களாலும் எப்படிப்பட்ட சமதர்ம ஆட்சியாலும் பொதுவுடமைக்காரருடைய புரச்சியாலும் விடுதலை ஏற்படாது என்பது எமது கருத்து.

(06-04-1946- "குடிஅரசு" இதழில் தந்தை பெரியார் அவர்கள் எமுதிய துணைத் தலையங்கம்)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/08/blog-post_12.html

நான் சொல்வதற்கு முன்பு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வது என்ன வென்றால், நான் சொல்வதை நம்பாதீர்கள்; அதன் படி நடக்க வேண்டுமென்று உடனே இறங்கிவிடாதீர்கள்; என்ன செய்ய வேண்டுமென்றால் சொல்லுவதைச் சிந்திக்க வேண்டும். சரியா, தப்பா என்று ஆராய வேண்டும். உங்களுக்கு எது சரி என்று பட்டதோ அதை ஒத்துக் கொள்ள வேண்டும் மற்றும் எந்தக் காரியம் செய்ய வேண்டும் என்று தோன்று கிறதோ அதைச் செய்ய வேண்டும். நாங்கள் சொன்னோம். நான் சொன்னேன் என்பதற்காக ஒன்றையும், எதையும் ஏற்றுக்கொள்ளக்கூடாது.

ஏன் சிந்திக்க வேண்டும்?

ஏன் என்பதை வலியுறுத்தி முதலில் சொல்லுகிறேன். நாங்கள் பகுத்தறிவுப் பிரசாரம் செய்து மக்களையெல்லாம் பகுத்தறிவுடையவர்களாக ஆக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்கள். நாங்கள் சொல்லுவதைக் கேளுங்கள் என்றால் என்ன அர்த்தம்? நாங்கள் ஒன்றும் மூட நம்பிக்கைப் பிரசாரகர்கள் அல்ல; கடவுளைப் பற்றியோ, மதத்தைப் பற்றியோ, சாஸ்திரம் சம்பிராதாயங்களைப் பற்றியோ, கடவுளுடைய பிள்ளை, அவதாரம், குமாரர், தூதர் என்று சொல்லுகிறவர்கள் சொல்லுவதைப் போல் நாங்கள் ஒன்றும் சொல்லுவது இல்லை. நாங்கள் சொல்லுகிறோம்.

எங்கள் புத்திக்கு எட்டியதைச் சொல்லுகிறோம். எங்களைப் போலவே உங்களுக்கும் புத்தி இருக்கிறது. உங்கள் புத்திக்கு அது படுகிறதா? சரி என்று தோன்றுகிறதா? என்று சிந்தியுங்கள். இந்த உணர்ச்சி வந்து இருந்தால் மக்களுக்கு வேறு ஒன்றுமே தேவையில்லை. உணர்ந்திருப்பார்கள்.

சொந்தப் புத்தி!

இதே மாதிரி உணர்ச்சி மக்களுக்கு ஏற்பட இடமில்லாமலும் ஏற்பட விடாமலும் நாங்கள் சொல்லுவதைக் கேளுங்கள். எனக்குக் கடவுள் சொன்னார்; நான் கடவுள் அவதாரம்; நான் கடவுளாக இருக்க வேண்டும்’’ என்று இப்படி எல்லாம் சொல்லி மக்களை ஏமாற்றி அவர்கள் அவரவர்களின் கருத்தைப் புகுத்திய தன் பயனால் உங்களுக்குச் சொந்தப் புத்தியைப் பயன்படுத்த வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. இன்றைக்கல்ல நேற்றைக்கல்ல; 2000, 3000 வருஷங்களாக இப்படி, மனிதன் என்பவன் அருமையான அறிவைப் படைத்தவன்; அப்படிப்பட்டவன் இன்றைக்குத்தான் பகுத் தறிவைப் பயன்படுத்து என்று கேட்டுக் கொள்ள வேண்டியவனாக ஆகி இருக்கிறான். பகுத்தறிவாளர் கழகம் இன்றைக்கு ஆரம்பமாகிறது. பகுத்தறிவாளர் கழகம் ஆரம்பமாகிறது என்று சொன்னால் மனிதர்களுடைய கழகம் இன்று ஆரம்பமாகிறது என்று அர்த்தம். மனிதர்கள் என்பவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என் பதைப் பற்றி இன்றைக்குப் பேசப்படுகிறது.

மனிதனும் மிருகமும்!

பகுத்தறிவு சிந்தனையே இல்லாதவர்களுக்கு மிருகம் என்றுதான் பெயர். ஏன்? அறிவிலே பகுத்தறிவு இல்லாத ஜீவன் மிருகம், பகுத்தறிவுடையவன் மனிதன். அறிவிலே பிரிவுபட்டிருக்கிறபடி ஓரறிவு, ஈரறிவு, மூன்றறிவு, நாலறிவு, அய்ந்தறிவு, ஆறறிவு என்பது புல்பூண்டுகளையெல்லாம் ஓரறிவு என்று சொல்லலாம். அதற்கு ஒன்றும் தெரியாது. உண்ண வேண்டியது தான். பூச்சிப் புழுக்கள் அப்புறம் மூன்றறிவு என்பார்கள். குணம் கொஞ்சம் கொஞ்சம் மாறும். சிலதுக்கு நாலு அறிவு இருக்கும். சிலதுக்கு அஞ்சு அறிவு இருக்கும்.

ஆனால் சிந்தித்துச் செயல்படுவது என்பது ஆறாவது அறிவு. அது மனிதனுக்குத்தான் அதிசயமான காரியங்கள் செய்யக்கூடிய ஜீவன்கள் உண்டு. நம்மால் செய்ய முடியாத காரியங்கள் எல்லாம் சில ஜீவன்கள் செய்யும். ஒரு எறும்பை எடுத்துக் கொண்டால், நமக்குத் தெரியாத வாசனை அதற்குத் தெரியும். ஒரு குருவியை எடுத்துக் கொண்டால், நம்மால் பறக்க முடியாமல் இருக்கும்போது அது பறக்கும். ஒரு குரங்கை எடுத்துக்கொண்டால் நாம் தாவமுடியாத அளவுக்குத் தாவும். யானையை அடிக்கும் சிங்கம். இப்படி இந்த மாதிரி மனிதனுக்கு மேற்பட்ட, மனிதனால் முடியாத சில விஷயங்கள் மற்ற அறிவுள்ளவைகளுக்கு உண்டு. சிந்தித்து, வளர்ச்சிக்கேற்ற வண்ணம் தன்னுடைய வாழ்வு நிறைவு பெறும் வண்ணம் பயன்படுத்துகிற அளவு மனித னுக்குத்தான் உண்டு. வேறு யாருக்குமே இல்லை.

மதியை இழந்த மனிதன்!

அப்படிப்பட்ட மனிதன் மதியை இழந்துவிட்டான். அதைப் பயன்படுத்தாமல் போய்விட்டான். பல காலங்களில், அதனால் மனிதன் வளர்ச்சியடையவில்லை. ஆனால் மனிதன் நம் நாட்டைப் பொறுத்தவரையிலும் மான உணர்ச்சியைப்பற்றிக்கூட லட்சியம் பண்ண முடியவில்லை. சாதாரணமாக நாம் பகுத்தறிவுடையவர்கள். உலகத்தை எல்லாம் கூட தெரிந்திருக்கிறோம். பார்க்கிறோம். செய்தி எல்லாம் வருகிறது. நாம் மாறவில்லை.

நாம் சூத்திரர்களா?

நமக்குப் பெயர் சூத்திரன், நாம் என்றால் - சூத்திரன் என்றால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன்; எப்படி என்றால், சாத்திரப்படி! யாரோ சொன்னாங்கன்னா என்றால், கடவுள் சொன்னார். இதை எல்லாம் நம்புவதன் மூலம் மானம் ஈனம் எல்லாம் இழந்துவிட்டு நம்முடைய வளர்ச்சியைப் பாழாக்கிவிட்டோம்; வயிற்றுப் பிழைப்பைத்தான் பிரமாதமாக எண்ணி விட்டோம். அது மிருகங்களுக்குத் தான் உண்டு. நாம் அதைத் தான் பின்பற்றி வந்திருக்கிறோம். இது வரைக்கும் முன்னால் பேசிய நண்பர் கூட சொன்னார்.

சிந்தனையும் பகுத்தறிவும்!

இந்த நாட்டில் எவனுமே பகுத்தறிவைப் பற்றிப் பேசவே இல்லை. இன்றைய தினம் வரைக்கும். யாராவது பேசினார்களென்றால் 3000, 2000 வருடங்களுக்கு முன்னே அதுவும் அந்தக் காலத்துப் பகுத்தறிவுதான். அதுவும் இன்றைக்குச் சரியானபடி பின்பற்றுவது இல்லை. வேறு யாரும் இவைகளைப்பற்றிச் சிந்திக்கவும் இல்லை. ஏன் அப்படி ஆகிவிட்டது என்றால் அவைகள் பகுத்தறிவுக்கு விரோதமான கொள்கைகள், செயல்கள், கடவுள்! அவர் உண்டாக்கினார்; அவர்தான் சக்தி உடையவர்; அவர் இப்படிச் சொன்னார்; அப்படிப் பண்ணினார்! அவருடைய மகன் இப்படிச் சொன்னார்; அவருடைய தூதன் இப்படிச் சொன்னார்.

அவருடைய அவதாரம் அப்படிச் சொன்னது! இந்த மாதிரி புத்திகளைக் கொண்டு வந்து மக்களுக்கிடையே புகுத்தியதால் இவனுடைய அறிவுக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது. அவர்களே எல்லாம் சொல்லிவிட்டார். அந்தப்படியே நடந்தால் போதும்; அதனாலே மனி தன் வளர்வதற்கு வாய்ப்பில்லை. எப்படி வாய்ப்பில்லை என்று கேட்பீர்கள். பகுத் றிவைப் பயன்படுத்த முன் வந்தவர்கள் எந்த அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக் றார்கள்! மற்ற நாட்டார் இன்றைய தினம் ஆகாயத்தில் 2 லட்சத்து 30,000 மைல் தாண்டி சந்திர மண்டலம் என்ற ஒரு உலகத்திலே உலாவிவிட்டு வருகிறார்கள். மணிக்கு 5000 மைல் 6000 மைல் பறக்கிறார்கள். இதில் எதைப் பண்றான் நம்மவன்?

ரிஷிகள், முல்லாக்கள், பாதிரிகள்

நமக்கு நண்பர்கள், கட்டுப்பட்டு நடக்கவேண்டியவர்கள், அறிவைச் சொல்பவர்கள் என்று ஆயிரக்கணக்கான தலைவர்கள், ஆயிரக்கணக்கான ரிஷிகள்; ஆயிரக்கணக்கான முல்லாக்கள்; ஆயிரக்கணக்கான பாதிரிகள்; ஆயிரக்கணக்கான பண்டார சன்னிதிகள் இருக்கிறார்கள். இவர்களைத் தவிர மதங்கள் இருந்தும் நாம் அடைந்த பயன் என்ன? ஒன்றும் முடியவில்லையே! காரணம் மனுஷன் தோன்றி எத்தனை வருஷங்கள் இருக்கும்! நம்மாலே கணக்கு எடுக்க முடியவில்லை. எவனோ ஆராய்ச்சிக்காரன் கணக்கெடுக்கிறான்; ஒருத் ன் லட்சம் வருஷங்கள் என்கிறான். ஒருத்தன் 18 லட்சம் வருஷங்கள் என்கிறான்.

அதற்கு முன்னே “உலகம் என்றைக்குத் தோன்றியதோ அன்றே மனிதன் தோன்றி னான்’’ என்கிறான். கடவுள் உண்டாக்கினான் என்கி றான். அன்று முதல் இன்று வரைக்கும் கண்ட பலன் என்ன? சாதாரணமாக ஒரு 100, 105 வருஷத்திலே உலகம் எவ்வளவு மாறியிருக்கிறது. நம் நாட்டிலேயே எவ்வளவு வளர்ச்சிக்கான சாதனங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 100, 105 வருஷத்திலேயே இவ்வளவு வளர்ச்சியிருந்தால் மனுஷன் தோன்றிய லட்சக்கணக்கான வருஷத்திலே அல்லது 3000, 4000 வருஷத்திலே எவ்வளவு வளர்ந்திருக்க வேண்டும்? ஏன் வளரவில்லை? நம்ம நாட்டில் என்ன கடவுள் இல்லை? பல்லாயிரக்கணக்கான கடவுள்கள் இருக்கின்றன. மகான்கள் இல்லையா?

மூடநம்பிக்கை!

ஏராளமான மகான்கள், நினைச்சவனெல்லாம் சாமியார்; நினைச்சவன் எல்லாம் மகாத்மா; நினைச்சவனெல்லாம் அந்த பக்தன்; இந்தப் பக்தன். இத்தனை பேர் இருந்தும் ஒரு சாதனை கூட நம்மால் ஏற்பட்டது என்று சொல்ல முடியவில்லையே! அவதாரங்களும், அதிசயங்களும் நாம் இன்றைக்கு அனுபவிக்கின்ற அதிசயமான பொருளெல்லாம் மற்றவன் செய்து நாம் அனுபவிக்கிறோம். உங்க கடவுள் மகனும் பொறந்தான்; கடவுள் தூதன் பொறந்தான்; கடவுள் அவதாரங்கள் ஒரு வண்டி பொறந்தார்கள்; தினமும் மாட்டு ரிஷி களென்றும், முனிவர்கள் என்றும் நினைச்சா சாபம் கொடுக்கிறவனும் நினைச்சா மலையைத் தூக்கி மலை மேல் போடறவனும், எவ்வளவு அற்புதமான மனிதர்களெல்லாம் தோன்றினார்கள்! அப்பொழுதும் ஒரு அற்புதம் கூட இன்னும் நடக்கவில்லையே.

அறிவின் மேன்மை!

நெருப்புக் குச்சிகூட வெள்ளைக்காரன் வாரதிருந்தால் நமக்கு வந்திருக்குமா? இருட்டில்தான் உட்கார்ந்திருப்போம். சிக்கிமுக்கிக் கல்லில்தானே நம்ம வாழ்வு இருக்கும். பூமியில் எருமையில் ஏறி சவாரி செய்து வந்தவனுக்கு ஆகாசக் கப்பல் வந்தாச்சு. இதெல்லாம் எப்படி வந்தது? தொழுதா வருமா? ஜபம் பண்ணினா வருமா? இல்லை. யாகம் பண்ணினா வருமா? இல்லை, கடவுளே என்று சொன்னா வருமா? ஆகவே மனிதன் மனிதனாக இருந்து அதனாலே அடைய வேண்டிய காரியங்களைச் செய்து, கொள்ள முடியாமல், கடவுள், மதம், சா° திரம், வேதம், தர்மம், பெரிய வர்கள், மகான்கள், இந்த மாதிரியான முட்டாள்தனமான பேச்சுகளுக்கெல்லாம் நாம் காது கொடுத்து இன்றைய தினம் நாம் மிருகமாக இருக்கிறோம் எப்படீன்னு கேட்பீங்க!

மூட நம்பிக்கையும், முட்டுக்கட்டையும்!

எனக்கு முன்னால் பேசிய தோழர்கள் எல்லாம் சொன்னார்கள் - “நமக்கு எங்கே அய்யா அறிவு இருக்கிறது?’’ எதை எடுத்தாலும் சாஸ்திரம், சம்பிரதாயம், முன்னோர்கள் சொன்னது, வேதத்தில் சொன்னது என்று அது எவன் சொன்னானோ என்பதைப்பற்றியெல்லாம் கவலையே இல்லை! நண்பர்கள் சொன்னார்கள், பூனை குறுக்கே போனால் உட்கார்ந்துக்குவான், அப்புறம் போகலாமென்று ஏன்டான்னா, சகுனம் சரியா இல்லை என்பான். காக்கா கத்துதுன்னா வெளியே போகக்கூடாதுன்னு உட்கார்ந்துக்குவான். குளிச்சிப் போட்டு வெளியே போகலாம் என்பான். முன்னெச்சரிக்கையாக ஒருத்தனையும் தொடமாட்டான். கட்டின வேட்டியோட குளிப்பான்.

மனுஷன்தான், மாடல்ல இதெல்லாம் செய்கிறவன்? என்ன இருக்கிறது! மற்றும் இந்தக் கிழமையாகாது. அந்தக் கிழமையாகாது; இந்த நேரம் தப்பு; இது நல்ல நேரம் என்பதெல்லாம் எதுல சேர்ந்தது? அறிவைப் பற்றிப் பேசறதுக்கே ஆள் இல்லை. அறிவின் பயனை, அதன் பலனைப்பற்றி எடுத்துச் சொல்ல துணிவு எவனுக்கும் வரவில்லை. இது பெரிய காட்டுமிராண்டி நாடு, நாம் அப்படியே இருக்கிறோம். இதுதான் சொல்ல முடியும்.

அன்னியராட்சி!

இப்பத்தான் நல்ல வாய்ப்பா நம்ம நாட்டுக்கு அன்னியன் வந்தான். சில மாறுதலைப் பண்ணினான். அவனை நம்ம மதத்துக்கு விரோதி என்று விரட்டி அடிச்சிட்டாங்க. அப்புறம் வெள்ளைக்காரன் வந்தான்; அவன் பல மாறுதல்களை உண்டு பண்ணினான். அவனையும், மதத்திலே பிரவேசித்தான். சாத்திரத்திலே பிரவேசித்தான். அதுலே அப்படி இப்படின்னு அவனை ரகளை பண்ணினாங்க; அதோட நின்னு போச்சே தவிர அதுக்கு மேலே ஏறலே; நம்ம நாட்டில் இதுவரைக்கும் அவன் இல்லாதிருந்தால் ரொம்பப் பின்னேறி இருப்போம்.

அதிலே ஒன்றும் ஆட்சேபனை இல்லை. அவனாலே அமைப்பு கெட்டுப் போகுதுன்னு மக்களை ஏமாற்றிப் பிழைக்கிற அயோக்கியர்கள். அவன் இருந்தால் நாம், வாழ முடியாதென்று அவனுக்கு மோசமெல்லாம் பண்ணினாங்க. அப்புறம் எவனுமே தோணல்ல! துணிஞ்சு நாங்கதான் தோன்றினோம். துணிஞ்சு தோன்றினோம். இருக்கிற கொடுமையைப் பார்த்து அரசியலின் பெயராலே மதத்தின் பெயராலே மக்களுக்குச் செய்யும் கொடுமையைப்பார்த்து நம்ம மக்களுக்குப் புத்தி இல்லாமல் அவர்கள் மடையர்களாக இருக்கிறதைப் பார்த்து, இதற்கு ஒரு பரிகாரம் பண்ண வேண்டும். இந்த முயற்சியைப் பண்றவன் தான் மனுஷன். மத்த முயற்சி பண்றவனெல்லாம் வயிற்றுப் பிழைப்புக்காரன் அப்படீன்னு முடிவு பண்ணி நாங்கள்தான் ஆரம்பிச்சோம்.

சுயமரியாதை இயக்கம்!

என்ன ஆரம்பிச்சோம்? சுயமரியாதை இயக்கம் என்றுதான். மனுஷனுக்கு மானம் என்கிற உணர்ச்சி ஊட்ட வேண்டுமென்று! எத்தனையோ பேர் எல்லாம் எங்களோட சண்டை போட்டாங்க; சுயமரியாதை இயக்கம் ஆரம்பித்தபோது ஒரு பெரிய மந்திரியே என்னிடம் வந்து, “என்னையா சுயமரியாதைன்னா நமக்கெல்லாம் மானமில்லை, மரியாதை இல்லை என்றா அர்த்தம்? இந்தப் பேரே வெட்கக்கேடா இருக்குது! எவனாவது கேட்டா கேலி செய்யமாட்டானா?’’ அப்படி என்று என்னை வந்து கேட்டார். அப்புறம் திருப்பிச் சொன்னேன்; “வருத்தமாக இருக்குது எங்களுக்கு, தயவு செய்து சொல்லுங்க. நீங்க யாரு? எனக்குத் தெரியணும்’’ “என்னத்துக்காகக் கேட்கிறீர்’’ என்றார். கேட்கிறேன்,

சமுதாயத்திலே நீங்க யாரு? எத்தனாவது? உங்க அந்தஸ்து என்ன? உங்க தொழில் என்ன? ‘ரெட்டியாருன்’’னாரு, “மந்திரியா இருந்தா என்ன? நீங்க யாரு? ரெட்டியாருங்கறது. சும்மா நாம் வெச்ச பேரு. நாம் ஏற்படுத்திக்கிட்ட பேரு. சும்மா கவுண்டன், செட்டியார் இந்த மாதிரியெல்லாம். பொதுவாக சாஸ்திரப்படி, சம்பிரதாயப்படி, மதப்படி, சமயத்துப்படி, நீங்க யாரு? எத்தனையாவது ஜாதி?’’

அவர் ஒன்றும் பேச முடியவில்லை. சிரிச்சிட்டாரு. “சிரிக்காதீங்க! நீங்க எத்தனாவது ஜாதி?’’ 4-ஆவது ஜாதிதானே; அது சாத்திரப்படி நீண்ட நாளாக இருக்குது.’’ நாமெல்லாம் அந்த நீண்ட நாளாக இருக்கறதைத்தான் ஒழிக்கணும்னுதான், உங்களுக்கு மானம் வரவேண்டுமென்று தான் இதை நாங்க ஆரம்பித்தோம்.

மேல்ஜாதியும், கீழ்ச் ஜாதியும்!

“அப்படீன்னா உங்க ஜாதி என்ன?’’ “சூத்திரன்’’, சூத்திரன்னா என்ன? “பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகன்.’’ எத்தனாவது ஜாதி, 4-ஆவது ஜாதி உங்களுடையது! நீங்க பி.ஏ., பி.எல்., படிச்சீங்க. நீங்க மூன்று வருஷம் மந்திரியாப் பார்த்துட்டீங்க! இப்ப மறுபடியும் மந்திரியா இருக்கீங்க! நீங்க மந்திரிப் பதவியில் இருந்தும் இப்ப சூத்திரன், தேவடியா மகன்! ஆனா, உங்ககிட்டே பிச்சை எடுக்கிறவன், உங்களுக்கு வேணும்னாலும் கூட்டிக் கொடுக்கத் தயாராக இருக்கிறவன், அவன் தன்னை மேல் ஜாதிங்கறான். நீங்களும் அவனை மேல் ஜாதின்னு ஒத்துக்கறீங்க! நீங்க அவன் காலில் விழுகறீங்க! அவன் காலைக் கழுவித் தண்ணீரைக் குடிக்கிறீங்க?’’ இதற்குப் பதில் இதைத்தான் சொன்னார்.

அதனால்தான் இவ்வளவு கடுமையான முயற்சி நாம் செய்யவேண்டி இருக்கிறது. இன்று ஏற்பட்ட புண்ணா இருந்தா ஒரு கட்டுப்போட்டால் போதும், வெகு நாளா ஏற்பட்ட புண்ணு! நாத்தமும் எடுத்து புழுத்தும் போயிருக்கிறது! அந்தப் புண்ணை அறுத்துத்தானே ஆகணும். அதனால்தான் ரொம்ப நாளாச்சுங்கறதுனால இப்ப அறுக்க ஆரம்பிச்சிருக்கோம்’’, அப்படின்னு சொல்லி அந்த மாநாட்டை நடத்தினோம்.

சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகள்

அப்ப அதுக்கு என்ன கொள்கை? சுயமரியாதை இயக்கம் - அது என்ன? மனிதனுடைய வாழ்வு இழிவாப் போனது எந்தக் காரணத்தினால், கடவுளால் ஏற்பட் டது. எந்தக் கடவுளால்? அந்தக் கடவுளை ஒழிக்கணும். மதத்தினால் ஏற்பட்டது; அதனால் மதத்தை ஒழி! காங்கிரசினால் ஏற்பட்டது; அதனால் காங்கிரசை ஒழி! காந்தியினாலே; காந்தியை ஒழி! பார்ப்பானாலே பார்ப்பானை ஒழி!

இந்த அய்ந்தையும் ஒழிக்கிறதுதான் சுயமரியாதைச் இயக்கத்தின் கொள்கை. சுயமரியாதை இயக்கத்தின் கொள்கை - கடவுள், மதம், காங்கிரசு, காந்தி, பார்ப்பான் இவங்களை ஒழிக்கிறது. இவங்கள்ளாம் சுயமரியாதை இயக்கத்துக்குக் கேடான கொள்கைப் பிரச்சாரம் பண்ணி மக்களுக்குள்ளே புகுத்தி, மக்களுடைய ரத்தத்திலே புகுத்தி வச்சுட்டாங்க! ரத்தத்தோட கலக்கி வச்சுட்டாங்க!

அதை ஒழிக்கணும்னா இந்த அய்ந்தையும் ஒழிச்சாலொழிய முடியாது. இதிலொன்றறும் அரசியலைப் பத்தி பேசணும்னு அல்ல. அரசியலே இங்கே வரக் கூடாதுதான். ஆனால், அது இந்தக் காரியத்திற்குத் தேவைங்கறதுனாலே அதைப்பற்றி நான் எடுத்துச் சொல்கிறேன். காங்கிரசினுடைய கொள்கை காந்தியைக் காப்பாத்ணும், மதத் தைக் காப்பாத்தணும், ஜாதியைக் காப்பாத்தணும், அந்தஸ்தைக் காப்பாத்தணும், இன்றைக்கு அதனுடைய கொள்கை அதுதான். அதுக்கு முந்திப் பிடிச்சுவச்சாங்க காந்தியை!

அந்த ஆளு ஒரு களிமண் மூளைக்காரன்! அவன் என்னமோ சாமி, பூதம், பக்தி, அது, இது என்று பேசினதுனாலே பிடிச்சுவச்சுட்டாங்க. அவனை மகாத்மான்’னு! அவனும் பயித்தியக்காரனுக்குக்கள் ஊத்துனாப்போல என்னேரம் பார்த்தாலும் கடவுள், கடவுள்’’ என்று, “இராமன், சா°திரம், வர்ணாசிரமம், இந்துமதம்’’ அப்படின்னு பிரச்சாரம் பண்ண ஆரம்பிச்சான்.

அவன் பிரச்சாரத்துக்கு நல்ல பலம் இருந்தது. பார்ப்பான்கிட்டதான் எல்லாப் பத்திரிகையும் நம்மாள்கிட்டே ஒன்றும் இல்லை. அவங்க பேரைச் சொன்னாலே ஜனங்களெல்லாம் கும்பிடற அளவுக்குப் பிரச்சாரமாயிருக்கு! அதனாலே அவனை ஒழிக்கணும்னு ஆரம்பிச்சோம். கடவுள், மதம் ஒழிக்கணும், வர்ணாசிரமத்தைப் பிரச் சாரம் பண்ணின காந்தியை ஒழிக்கணும். இதை எல்லாம் காப்பாத்தறதுக்காக அடிப் படைச் சட்டம் வச்சுக்கிட்டிருக்கிற ஆட்சி செய்கிற அரசாங்கத்தை ஒழிக்கணும்; இதுக்கெல்லாம் கர்த்தாவாக இருக்கிற பார்ப்பானை ஒழிக்கணும், அதன்படிதான் நடந்து வருகின்றது.

நாளுக்கு நாள். காரணம், அதையே எடுத்துக்காட்றேன். நான் சொல்றேன் கேளுன்னு அல்ல! அந்தப் புத்தகத்திலே இருக்கு. இந்த வேதத்திலே இருக்கு. அந்த சாஸ்திரத்திலே இருக்குன்னு அல்ல, எனக்குத் தோணுது என் அறிவுக்குத் தோணுது. அது மாதிரி உன் அறிவுக்குத் தோன்றினா ஒத்துக்க; இல்லாட்டி வேண்டாம். நான் ஒண்ணும் உங்களைக் கட்டாயப்படுத்துவதாக நினைக்கவேண்டாம்! உங்களை ஏய்க்கறதாக நினைக்கவேண்டாம்! உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன்! உங்களுக்கு இவ்வளவு சக்தியுண்டு! உங்களால் இந்தக் காரியம் செய்ய முடியும்! இந்தப் பாவிக் கடவுள், மதம், சா°திரங்களாலோ, மற்ற உபதேசம் செய்யறதாலோ பார்ப்பான்களினாலோ நம்ம சக்தி இந்த மாதிரி அடிமையாச்சு!

இதைத்தான் சொல்றோம். மாத்தியாகணும் என்று; மாறாது இருக்கிற ஆளுக உலகத்திலே நாம் தான்! மற்றவன் எல்லாம் மாறிவிட்டான். நாம்தான் இன்னும் மாறவில்லை.

பகுத்தறிவுக் கழகம்

நம்ம நாட்டுக்கு இப்ப வேண்டியிருக்குத் தீவிரமான கொள்கைகள்! பகுத்தறிவுவைப்பற்றிய கொள்கைகள்! அந்தக் கொள்கைகளைப் பிரச்சாரப்படுத்த முயற்சி பண்றோம். ஆகவேதான் பகுத்தறிவுக் கழகம் வைக்கிறோம். இது இதுக்கு விரோதமோ, அதுக்கு விரோதமோ அப்படியாகுமோ, இப்படியாகுமோ? என்று யாராவது சொல்லக் கூடும்! எதுக்கு விரோதமாக இருந்தாலும் நியாயத்துக்கு விரோதமல்ல!

நாம் பகுத்தறிவுக் கழகம் என்று ஏன் சொல்கிறோம்! உன் அறிவைக் கொண்டு சிந்தனை பண்ணிப்பாரு! அதுதான் பொருத்தம் என்று சொல்கிறோம்! மிருகத்தோடு சேர்ந்த மத்த பசங்க என்ன பண்ணுறாங்க? வர்ணாசிரம தர்ம சபைன்னு வைக்கிறாங்க! சாதியைக் காப்பாத்தற சபையென்றும் வைக்கிறாங்க! சனாதன தர்மசபையென்கிறான். சாதியைக் காப்பாத்த வேண்டும். முன்னோர்கள் சொன்னதைக் காப்பாத்த வேணு மென்கிறான்.

கடவுள் கதை என்கிறானே! ராமன் இப்படிப் பண்ணினான்; கிருஷ்ணன் இப்படிப் பண்ணினான் என்று இதையெல்லாம் சொல்ல அவனுக்கு உரிமை இருக்கிறது! எதைப் பார்த்துச் சொல்றேன்னா ஆதாரத்தைப் பார்த்துச் சொல்றேன். உன் புத்தி என்னடான்னா? புத்தியை உபயோகப்படுத்தக் கூடாது; மதம், கடவுள், சாஸ்திரம் முன்னோர்கள், பெரியோர்கள், மதத் தலைவர்கள் இவர்கள் சொன்ன காரியத்துக்குப் புத்தியை உபயோகப்படுத்தக் கூடாது - படுத்தினா அவர்களுக்கு விரோதம்; மதத்துக்கு விரோதம் என் மனம் புண்ணாகுது என்பானுக.

இவனும் இவன் மதமும் இவன் மதத்தலைவனோ, வெங்காயமோ மனம் புண்ணாகுமோ? நாசமாகப் போகட்டும்! என் கதி என்னாகிறது? நான் எத்தனை நாளைக்குச் சூத்திரனாக இருக்கிறது? நான் எத்தனை நாளைக்கு அறிவை இழந்து, கண்டவன் சொன்னதைக் கேட்டுவிட்டுத் தலை வணங்கி, கும்பிட்டுக்கிட்டு இருக்கிறது? மத்தவன் ஆகாயத்தில் பறக்கிறான்; நாம் இங்கே பார்ப்பான் காலைக் கழுவித் தண்ணியைக் குடிக்கணுமா? அதனாலே உன் புண்ணில் புழுக்கட்டும், எங்கதி எனக்கல்ல; என்னை விடவா உன் மனசு பெரிசு? என் மானத்தைவிடவா உன் மனசு பெரிசு? ஆனதனாலே நம்ம கடமையை நாம் செய்யவேணும். ஆபத்து வரும்; பயப்படாதீங்க. வந்தா என்ன?

நாளைக்குச் சாகிறவன் இன்றைக்கே சாகிறான். கஷ்டம் வரும். இந்த மாதிரி தான் இந்த நாட்டிலேயே மாறுதலே ஏற்படாமல் இருக்கும்படியாகச் செய்ததுக்குக் காரணம் எல்லாம் பலாத்காரம்; படிச்சவன் எல்லாம் அயோக்கியப் பயலாக இருந்தது; காலிப்பசங்கள் எல்லாம் சேர்ந்து மதத்தைக் காப்பாத்தணும்னு பலாத்காரம் பண்ணியது தான் காரணம். இல்லாட்டி, இதெல்லாம் மாறி இருக்குமோ! ஏதாவது ஒண்ணு சொன்னால் கிருத்துவன் வந்தர்றான் சண்டைக்கு. ஏன் என் மதத்தைத் தாக்கு கிறேன்னு? நாசமா போன்னு விட்டுட்டா? இன்னொன்று சொன்னா முஸ்லிம் வந்துடுறான் சண்டைக்கு; ஏன் எங்க மதத்தை இந்த மாதிரி சொல்றேன்னு. இரண்டு பேரும் தொலைஞ்சு, நாசமாகுன்னு விட்டுவிட்டு நம் மதத்தைப்பற்றிப் பேச ஆரம்பிச்சா பார்ப்பான் மட்டும் ரகளை பண்ண மாட்டான்.

அவனோட வைப்பாட்டி மகன்னு நினைச்சுக்கிட்டு, சாம்பலை அடிச்சிக்கிட்டு நாமம் போட்டுக்கிட்டு “சிவசிவ ராமா ராமா’’ னுட்டு உளறுகிறானே. அந்தப் பயல்தான் நம்ம கிட்டே சண்டைக்கு வருவான். இப்பக்கூட கேசைப் பத்தி ஒண்ணும் சொல்லலே நடப்புப்பத்தி சொல்றேன். சேலத்திலே இராமனைச் செருப்பாலே அடிச்சுட்டேன்னு பார்ப்பான் எவனும் பிராது போடல்ல. நம்மவன்தான் பிராது போட்டிருக்கிறான். “அவன் இராமனைச் செருப்பாலே அடிச்சான்! அந்த மாதிரி பண்ணுனா என் மனசு புண்ணாகுது!’’ அப்படிப் போட்டு இருக்கிறான்.

இப்ப சம்மன் வந்திருக்கிறது. பேப்பரிலே பார்த்திருக்கலாம். பெலமா அறுத்தாதானே அது அறும்; அது சொத்தை வச்சிட்டுதே, புழுத்துகிட்டே போகுதே; அதனாலேதான் அடியில் இருந்து ஆரம்பிக்கிறான். அந்த மாதிரி சொன்னால் ஒழிய மாறாது! ஆகவேதான் இந்த இயக்கம் ஆரம்பித்ததற்குக் காரணமும் இன்னும் சில தன்மைகளும், கொள்கைகளும் இதுதான். மதத்தை ஒத்துக்கிட்டா நான் மேல் சாதி, கீழ்ச் சாதின்னு ஏத்துக்கத்தானே வேணும்!

நான் ஒரு இந்துன்னு ஒத்துக்கிட்டேன்னா நான் சூத்திரன்னு ஒத்துக்கத் தானே வேணும்! அது மாத்திரமல்ல, மற்ற சாஸ்திர சம்பிரதாயங்களை ஒத்துக்கிட்டா, கடவுளை ஒத்துக்கிட்டா கடவுள் சொன்னார் என்பதற்கெல்லாம் நாம் கட்டுப்பட்டுத்தானே ஆக ணும்! சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதற்கு நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்! யாரடா சொன்னா, உன்னைத் தேவடியா மகன்னு, சூத்திரன்னு சொன்னா? கிருஷ்ணன் சொன்னான்! எங்கடா சொன்னான்? கீதையிலே சொன்னான்! கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ!

 

http://karuppupaiyan.blogspot.com/2008/01/119.html

திருவாரூர் மகாநாட்டைப் பற்றியும் என்னைப் பற்றியும் டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்கள் பேரால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையை பல பத்திரிகைகளில் பார்க்க நேர்ந்தது. அதை முழு விரிவாக பொது மக்களும் அநேகமாய் பார்த்திருக்கக் கூடும். அதன் முக்கியமான சாரம் எனக்குப்பட்ட வரையில்,

1. இந்தியாவையும், இந்து, பார்ப்பனர்கள் ஆகியவர்களையும் நான் தாக்கி பேசுவதாயும் அதற்காக ஹிந்துக்கள் என்று சொல்லப்படும் ஒரு கூட்டம் என்னை எதிர்க்க வேண்டுமென்றும் பிரிட்டிஷ் சர்க்கார் என் மீது நடவடிக்கை எடுத்து என்னை அடக்க வேண்டுமென்றும் இக்காரியங்கள் செய்யப்பட அவர் தன்னாலான எல்லாக் காரியங்களையும் செய்ய முனைந்து நிற்பதாயும் கூறுவது.

2. திராவிட மக்களுக்கு ஆகவும் திராவிட நாட்டுக்கு ஆகவும் நான் செய்து வரும் தொண்டிற்கு எப்படியாவது கேடு ஏற்படும் படியாகச் செய்து திராவிட நாடும் திராவிட மக்களும் என்றென்றும் ஆரிய நாட்டிற்கும் ஆரியர்களுக்கும் அடிமையாகவே இருக்கும்படி செய்ய வேண்டுமென்ற கருத்தாய் இருக்க வேண்டுமென்பது.
இவைகளுக்கு நான் சமாதானம் சொல்ல கடமைப்பட்டவனாய் இருக்கிறேன். ஏனெனில் திராவிட மக்கள் நலனுக்கு ஏற்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்திற்குத் தலைவனாயிருப்பதாலும் விவாத விஷயங்கள் அந்த ஸ்தாபனத்தின் மாநாட்டு விஷயங்களைப் பற்றியிருப்பதாலும் தோழர் நாயுடுவின் அறிக்கையால் பொது மக்களுக்குத் தப்பப்பிராயம் ஏற்படாமல் இருகக்ச் செய்ய வேண்டியவனாய் இருக்கிறேன்.

டாக்டர் நாயுடு காட்டும் காரணங்கள்

டாக்டர் நாயுடு அவர்கள் மேற்கண்ட சாரம் பொருந்திய தனது அறிக்கைக்குக் காரணமாக என் திருவாரூர் மாநாட்டுத் தலைமைச் சொற்பொழிவில் சில குறிப்புகளும் கருத்துகளும் எடுத்துக் காட்டியிருக்கிறார்.

அவையாவன:-

1. ஆதி திராவிடர்களுக்குத் தனி தொகுதி வேண்டும்.
2. பார்ப்பனரல்லாதாருக்குத் தனித் தொகுதி வேண்டும்.
3. முஸ்லீம்களும், பார்ப்பனரல்லாதாரும் ஒரே ஜாதி (திராவிடர்கள்) அவர்கள் சமயத்துறையிலும் அதிக வித்தியாசமில்லை.
4. திராவிட நாட்டுக் கிறிஸ்தவர்களும் திராவிடர்களே. ஆதலால் இந்நால்வரும் ஒற்றுமையாய் இருக்க வேண்டும் என்பதாக நான் பேசியிருப்பவைகளை எடுத்துக் காட்டுகிறார்.

மற்றும் அவர் அடுத்தாற்போல் காட்டும் காரணங்கள்:

அ. திராவிடர்கள் இந்துக்களல்ல.
ஆ. இந்து மதம் ஆரியர் மதம்.
இ. திராவிடர் - ஆதி திராவிடர், திராவிட நாட்டிலுள்ள முஸ்லீம்கள், கிறி°தவர்கள் ஆகிய 4 கூட்டத்தினரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள். ஆதலால் இந் நால்வரும் ஒற்றுமையாய் இருந்து ஆரியத்தை எதிர்த்து நிற்க வேண்டும்.
ஈ. இந்திய தேசியம் என்பது திராவிடர்களுக்குக் கேடானது.
உ. திராவிட நாட்டில் இந்து மகாசபைக்கு வேலை இல்லை என்கின்றவைகளான இவைகள் எனது தலைமை உரையில் காணப்படுவது மற்றொரு காரணமாகும்.

ஆம்; சென்ற வருஷத்திய சென்னை மாநாட்டு தலைமை உரையிலும் இவ்வருஷத்திய மாநாட்டு தலைமை உரையிலும் இக்கருத்து கொண்ட வாசகங்கள் இருக்கின்றன என்பதை நான் ஒப்புக் கொள்ளுகின்றேன்.

இதற்கு பதினாயிரக்கணக்கான மக்களைக் கொண்ட அம்மாநாட்டில் ஏகமனதான பல தீர்மானங்களும் செய்யப் பட்டிருக்கின்றன. அவையாவன:-

வரப்போகும் சென்சசில் திராவிடர்கள் தங்களை இந்தியர்கள் என்றோ இந்துக்கள் என்றோ சொல்லக் கூடாது. திராவிடர் என்றே சொல்ல வேண்டும். மதம் என்ன என்று கேட்டால் திராவிட மதம் என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் இந்து மதம் என்று சொல்லக் கூடாது. - என்பதாக ஒரு தீர்மானம் ஏகமனதாய் நிறைவேறி இருக்கிறது.

மற்றும் - “இப்போது உள்ள இந்துலா என்னும் உரிமை சட்டமானது திராவிடர்களுக்கு ஏற்றதல்ல. அதை திராவிடர்களுக்குப் பயன்படுத்தக்கூடாது. திராவிட சமுதாயத்திற்கு ஏற்றதான திராவிட உரிமைச் (திராவிட லா) சட்டம் என்பதாக ஒன்று திருத்தி அமைக்கப்பட வேண்டும்” என்றும், “திராவிடர்களுக்கு மரியாதையாக ஸ்ரீ என்கின்ற ஆரிய வார்த்தையை ஏற்படுத்தி இருப்பதை எடுத்துவிட்டு திரு என்று போட வேண்டும் என்று சர்க்கார் உத்திரவு பிறப்பிக்கப்பட வேண்டும்” என்றும், “சமய ஒற்றுமை விஷயத்தில் இந்து முஸ்லீம் ஒற்றுமை என்கின்ற வார்த்தை நம் நாட்டுக்கு பொருத்தமற்றதாதலால் இனி மேல் திராவிடர் முஸ்லீம் ஒற்றுமை என்கின்ற பெயராலேயே சொல்லப்பட வேண்டும்” என்றும், “திராவிட மக்களுக்குள் இனி இந்து மகாசபை பிரசாரத்திற்கு இடம் கொடுக்காமலும் செவி சாய்க்காமலும் இருக்க வேண்டும்” என்றும், “ஆதி திராவிடர்களுக்கு ஆரிய மதப் பெயரான ஹரிஜனம் என்கின்ற பெயர் கூடாது, ஆதி திராவிடர்கள் என்றே அழைக்கப்பட வேண்டும்” என்றும், “ஆரிய சூழ்ச்சியாலும், ஆரிய சமய ஆதாரங்களாலும் திராவிட சமூகத்திடையே நுழைக்கப்பட்டுள்ள சமுதாய உயர்வு தாழ்வு வேற்றுமைகள் வேரோடு களைத்தெறியப்பட வேண்டும்.” “திராவிடர்களுக்குள்ளாகவே இன்று காணப்படும் உயர்வு தாழ்வுகளும் நீக்கப்பட வேண்டும்.”

“இவைகள் காரியத்தில் நடைபெறுவதற்கு அவசியமான வழிகளை வகுத்து கையாளுவதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.”
என்றும் ஆரிய திராவிட தேச சமய சமூக கலப்பினால் ஏற்பட்ட துன்பங்கள் ஒழிவதற்கு ஆக “திராவிடர்களின் கலை, நாகரிகம், பொருளாதாரம், அரசியல் ஆகியவைகள் காப்பாற்றப்படவும், முன்னேற்றமடைவதற்கும் ஆக திராவிட நாடாகிய சென்னை மாகாணத்தை நேரே பிரிட்டிஷ் சென்னை சம்மந்தம் இருக்கும்படியான ஒரு தனி நிர்வாக நாடாக பிரிக்கப்பட வேண்டும்” - என்றும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேறி இருக்கின்றன.

ஆதலால் எனது கொள்கையும் எனது கட்சியின் கொள்கையும் டாக்டர் வரதராஜலு வாதங்கள் செய்தார்கள். இதற்கு காந்தியார் ஒவ்வொரு இடத்திற்கு ஒரு மாதிரி பதில் சொன்னார். திருப்பூரில் வருணாச்சிரம தர்மம் தான் தனது இந்துமத கொள்கையென்றும், வருணப்படிதான் அவனவன் வேலை செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார். அப்போது ஒருவர், “அப்படியானால் நான் எந்தக் காலத்திற்குத்தான் இந்த சூத்திர இழிவிலிருந்து நீங்குவது” என்று கேட்டு விட்டார். அதற்கு காந்தியார், “ஏழு தலைமுறை பிராமண சம்பந்தமாகவே பிறந்தால் பிராமணனாகலாம்” என்று பதில் சொன்னார். அதனால் கோயமுத்தூரிலும் சிறிது கிளர்ச்சி ஏற்பட்டது.
அங்கு காந்தியார், சர்.ஆர்.கே. ஷண்முகம் வீட்டில் இறங்கி இருந்தார். இந்த கிளர்ச்சியைப் பற்றி தோழர்கள் காந்தியாரும், சி. ராஜ கோபாலாச்சாரியாரும் பேசும்போது ஆச்சாரியார், “சண்முகம் செட்டியாரும் அந்தக் கொள்கைக்காரர்தான்” (இந்து மத விரோதிதான்) என்று சொன்னார். அதற்குக் காந்தியார் “என்ன சண்முகம் நீங்களும் அப்படியா?” என்று கேட்டார். அதற்கு ஆர்.கே. சண்முகம், ”ஆம்” என்றார். அப்படியானால் உங்களுக்கு யார் குரு என்றார். அதற்கு உடனே அவர், “ஈ.வெ.ராமசாமி தான்” என்றார். காந்தியாருக்கு தூக்கிப் போட்டதுபோல் ஆகி, “நம்ம ராமசாமி நேற்றல்்ல அவரை எனக்கு தெரிந்த காலம் முதலே அதாவது 1915 ஆம் வருஷம் முதலே அவர் லோகாயுதவாதி” (மெட்டீரியலிஸ்ட்) என்று சொன்னார். “அப்படியானால் அவரைக் கண்டு இது விஷயமாக பேச வேண்டும்” என்றார் காந்தியார். தோழர் எஸ். ராமநாதன் அவர்கள் காந்தியார் கூப்பிடுவதாக சொல்லி என்னை பெங்களூருக்கு அழைத்துப்போய் இதைப் பற்றி காந்தியாருடன் பேசவும் வைத்தார்.

மற்றொரு சம்பவம் சுமார் 20 வருஷத்திற்கு முன்பு தோழர் வரதராஜுலு நாயுடு அவர்கள் தலைமையில் பேசும் போது “நான் சாவதற்கு முன் சடங்குகளை ஒழிப்பேன். ஒழிக்க முடியாவிட்டால் சாகும்போது இந்துவாக சாக மாட்டேன்; சடங்கில்லாத மதக்காரனாகத்தான் சாவேன்” என்றும் சொல்லி இருக்கிறேன். ஆதலால் இந்துமத எதிர்ப்புக்கோ இந்துஸ்தான் எதிர்ப்புக்கோ ஆரியர் திராவிடர் என்கின்ற உணர்ச்சிக்கோ பார்ப்பன துவேஷம் காரணமல்ல என்பதையும் மக்கள் மீது உள்ள பரிதாபமே காரணம் என்பதையும் இவற்றிலிருந்தாவது மக்கள் உணர்வார்கள் என்று கருதுகிறேன்.

நாயுடு அவர்கள் “நாயக்கர் இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களுடன் சேர்ந்து கொண்டிருக்கிறார்” என்று சொல்லுகிறார். என்றுமே “இந்துக்களுக்கு எதிரான அபிப்பிராயங்களையே கொண்டு இருக்கிறவன்” ஆன “நான் முஸ்லிம்களோடு சேர்ந்திருக்கிறேன்” என்று நாயுடுகார் சொல்லும் வார்த்தைக்கு ஒன்றும் அர்த்தம் இருப்பதாய் எனக்கு விளங்கவில்லை. ஏனெனில் அவுரங்கசீப்பை சேர்ந்த ஜின்னாக்கள் வெகு நூற்றாண்டுகளாகவே இந்துக்களுக்கு விரோதியாகவும் இருந்தார்கள் என்றால் ராவணனைச் சேர்ந்த ராமசாமிகள் அதற்கு முன்பு இருந்தே இந்துக்களுக்கு விரோதிகளாய் இருக்க வேண்டியவர்களல்லவா?

இந்நிலையில் இருவருக்கும் இந்துக்களுக்கு விரோதமான ஒரு இடம்தான் இருக்க முடியுமே தவிர வேறு வேறு இடம் எப்படி இருக்க முடியும்? இது மாத்திரமா? ஆதி திராவிடருக்கும், கிறஸ்தவர் களுக்கும் எனக்கும்கூட ஒரு இடம் தானே இருக்க முடியும்? நான் எதற்காக முஸ்லிம்களையோ கிறிஸ்தவர்களையோ, ஆதி திராவிடர்களையோ விட்டு விலகி இருக்க வேண்டும் என்பது எனக்கு விளங்கவில்லை. அரேபியாவிலும் ஆப்கானிஸ்தானத்திலும் ஈஜிப்டிலும் இருக்கும் முஸ்லிம்களுடன் நான் சேர்ந்து கொண்டு அவர்களை இந்நாட்டுக்கு வந்து கொடி போடும்படி நான் கூப்பிட்டால் அது தவறாகலாம்.

திராவிட நாட்டிலே இருக்கும் திராவிட இனத்தில் இருக்கும் முஸ்லீம்களுடன் நான் ஆரிய வர்த்தத்திலே இருக்கும் ஆரிய சமயத்தவரான இந்துவுக்காக சண்டை போட வேண்டுமென்று நாயுடு கருதுகிறாரா என்பது எனக்கு விளங்கவில்லை.
மற்றும் “இந்து மகாசபையை நாயக்கர் எதிர்க்கிறார்” என்கிறார். இங்கு சில வரிகளுக்குக் கீழாகவே நாயுடுகார்,

“இந்து மகாசபை மாநாடுகள் கூட்டி ஜஸ்டிஸ் கட்சியினுடையவும் லீக்கினுடையவும் கோரிக்கைகளை எல்லா வகையாலும் எதிர்த்து நிராகரிக்க வேண்டும்” என்கிறார். ஆகவே இப்படிப்பட்ட காரியத்திற்காக நிறுவப் போகும் இந்து மகாசபையை எதிர்க்காமல் அதற்கு நான் இடம் கொடுக்க வேண்டியது அவசியந்தானா? இதற்காக கூட்டப்படும் மாநாடு ஒழுங்கான மாநாடு ஆகுமா? என்று பொது மக்களைக் கேட்கிறேன்.
மற்றும் நாயுடு அவர்கள், “பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற தர்க்கம் திராவிடர் ஆரியர் என்கின்ற யுத்தமாக மாற்றப்படுகிறது. சரித்திரத்திலேயே இந்தக் கொள்கைக்கு ஆதாரம் இல்லை” என்று தனது அறிக்கையில் எழுதுகிறார்.
இது நாயுடு ஏதாவது தேச ஜாதி (தேசிய) சரித்திரங்களைப் பார்த்து இப்படி எழுதுகிறாரா அல்லது “பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடிக்கிறது” என்று பழமொழி போல் உலக மக்களை மூடர்கள் என்று கருதிக் கொண்டு இப்படி எழுதுகிறாரா என்பது நமக்கு விளங்கவில்லை.

ராவணன் கதையையும், காலத்தையும் ஞாபகப்படுத்திக் கொண்டு தனது வாதத்திற்காக பயன்படுத்திக் கொண்ட நாயுடுகாருக்கு ஆரியர் - திராவிடர் என்பதற்குச் சரித்திரத்திலேயே இடம் காணப்படவில்லை என்றால் அவர் எப்படிப்பட்டவர் என்பதை பற்றி பொது மக்கள் தான் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

ராமேஸ் சந்திரதத் எழுதிய “புராதன இந்தியா”, “பண்டைய இந்தியாவின் நாகரீகம்”,
ராமேஸ் சந்திர மசும்தார் எழுதிய “பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரீகமும்”, சுவாமி விவேகானந்தர் “ராமாயணம்” என்னும் தலைப்பில் பேசிய பேச்சு, 1922 கேம்பிரிட்ஜ் பிரசுரித்த ‘பழைய இந்தியாவின் சரித்திரம்’, ராஜகுமார் முக்கர்ஜி எழுதிய ‘இந்து நாகரீகம்’, ஜேம்ஸ்மர்ரே எழுதிய அகராதி, பண்டர்கார் கட்டுரைகள், டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார் எழுதிய “தென்னிந்தியாவும் இந்திய கலையும்”,
பி.டி. ஸ்ரீனிவாசய்யங்கார் எழுதிய “இந்திய சரித்திரம்”, ஜெகதீச சந்தர்டட் எழுதிய “இந்தியா அன்றும் இன்றும்”, ஏ.சி. தாஸ் எழுதிய “வேத காலம்”, சி.எஸ். சீனிவாசாச்சாரியார் எழுதிய “இந்திய சரித்திரம்”, “இந்து இந்தியா”, எச்.ஜீ. வெலஸ் எழுதிய “உலக சரித்திரம்”,

மேலும் சகல கலா பொக்கிஷம் என்னும்் “நியு ஏஜ் என்சைக்ளோ பீடியோ”,
சி.ஜெ. வர்க்கி (மாஜி மந்திரி) எழுதிய “இந்திய சரித்திர பாகுபாடு”, ஹென்றி பெரிஜ் 1865-ல் எழுதிய “விரிவான இந்திய சரித்திரம்”, இ.பி. ஹாவெலஸ் எழுதிய “இந்தியாவில் ஆரிய ஆட்சி.” ஜி.எச். ராலின்சன் எழுதிய “இந்தியா”.
நாகேந்திர நாத் கோஷ்் எழுதிய “இந்திய ஆரியரின் இலக்கியமும் கலையும்”,
வின்சென்ட் ஏ. ஸ்மித் எழுதிய “ஆகஸ்போர்ட் இந்திய சரித்திரம்”, “இம்பிரியல் இந்தியன் கெஜட்”, சர் வில்லியம் வில்சன் “இந்திய மக்களின் சரித்திரம்”,
ராகோசின் எழுதின “வேத கால இந்தியா”, பால்மாகின் கவர்செல் எழுதிய “புராதன இந்தியா நாகரீகம்”, சர். என்றி ஜான்ஸ்டன் எழுதிய “இந்தியாவில் அன்னியர்”,

இவைகள்அறிவு, ஆராய்ச்சி திறம், கல்விப் பட்டம் பெற்ற ஆங்கிலேயராலும் வங்காளிகளாலும் பல ஆரியர் (பார்ப்பனர்)களாலும் எழுதப்பட்டவைகளாகும். திராவிடர்களால் எழுதிய எதையும் இங்கு குறிப்பிடவில்லை. இதுபோல் இன்னமும் நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி நிபுணர்கள் எழுதிய புத்தகங்கள் ஆதாரங்கள் கன்னிமேரா லைபெரரியில் மாத்திரம் இருக்கின்றன. சாவகாசப்பட்டால் நாயுடுகார் தயவு செய்து போய்ப் பார்த்துக் கொள்ளலாம்.

மற்றும் “பல யுகங்களாகத் திரண்ட ஞானத்தின் அஸ்திவாரத்தைக் கொண்டது இந்துக் கலாச்சாரம்” என்று நாயுடு எழுதுகிறார். பல யுகம் என்பதே ஒரு புரட்டான வார்த்தையாகும். ஏனெனில் இந்து கலாச்சாரக் கதைகள் அல்லது இந்து சரித்திரங்களிலுள்ள விஷயங்களைப் பார்த்தால் அவை ஒரு யுகத்தில் நடந்த விஷயம் பல யுகங்களாக நடந்தவைகள் என்று காணப்படும். ரிஷியோ முனியோ ஆகிய ஒரு மனிதன் பல யுகங்களில் நடந்த பல சம்பவங்களில் இருந்தனவாக இருப்பான்.
அகஸ்தியர், நாரதர், விசுவாமித்திரர், பராசாரர், வசிஷ்டர், யக்கியவல்கியர் முதலிய நபர்கள் தான் கருதி, °மிருதி ஆகியவைகளுக்கு ஆதார புருஷர்களாக இருக்கிறார்கள். இவர்களில் எவருடையதும் பகுத்தறிவுக்குச் சம்பந்தப்பட்டது அல்ல. ‘அராபியன் நைட்ஸ்’ போன்ற கதையாகவே ஒவ்வொரு விஷயமும் காணப்படும்.
மற்றும் இந்து மதம், இதிகாசம் ஆகியவைகளும் பகுத்தறிவுக்கு பொருத்தமற்றதாகவே இருக்கும். ‘இந்து’ இந்து கலாச்சாரம், இந்து சமயம், இந்தியா என்கின்ற வார்த்தைகள் எந்த இந்து ஆதாரங்களிலாவது இருப்பதாகக் காட்ட முடியுமா என்று கேட்கிறேன்.

இந்து என்கின்ற வார்த்தை ஒரு நாட்டான் என்பதைக் குறிக்கிறதா? ஒரு மதத்தான் என்கின்றதைக் குறிக்கின்றதா? என்று கேட்கின்றேன்.

 

http://karuppupaiyan.blogspot.com/2008/01/118.html

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE