Language Selection

சமூகவியலாளர்கள்

 




“இந்தக் காலத்து இளைஞர்கள் மனம்
என்மீது வெறுப்புக் கொள்ளாது;
வெறுப்புக் கொண்டு விடுமானாலும்கூட,
நான் அதற்கு அஞ்சவில்லை.
இனி வருங்கால இளைஞர்கள் பாராட்டுவார்கள்;
பாராட்டாவிட்டாலும்,
இன்று நான் சொன்னதைப் பின்பற்றி
வீரத்தோடு, மானவாழ்வு
வாழும் வழியில் இருப்பார்கள்.
சரியாகவோ, தப்பாகவோ,
நான் அதில் உறுதி கொண்டிருப்பதால்
எனக்கு எக்கேடு வருவதானாலும்,
மனக் குறையின்றி, நிறை மனதுடன்
அனுபவிப்பேன்-சாவேன்
என்பதை உண்மையாய் வெளியிடுகிறேன்.”

(தந்தை பெரியார் தமிழர் தலைவர் - நூல், பக்கம்: 15)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_8961.html

வைத்தியத்திலேயே இரண்டு முறை சொல்வார்கள்:
1- Physicians Cure.
2- Surgeons Cure.

அதாவது மருந்து கொடுத்து வியாதியை சொஸ்தப்படுத்துவது ஒருமுறை. கத்தியைப் போட்டு அறுத்து ஆபரேஷன் செய்து நோயாளியைப் பிழைக்க வைப்பது இன்னொரு முறை. என்னைப் பொறுத்தவரையில் நான் நோயாளி செத்துப் போனாலும் பரவாயில்லை, நோய்க்குக் கஷ்டமில்லாமல் மருந்து மட்டுமே கொடுத்து சொஸ்தப்படுத்தலாம் என்று கருதுபவன் அல்ல.


நோயாளிக்குக் கஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, அவன் சாகக்கூடாது என்று கருதி அறுத்து ஆபரேஷன் செய்யும் இரண்டாவது முறையில் நம்பிக்கை உள்ளவன்.

எனது இலட்சியமெல்லாம் கஷ்டமாக இருந்தாலும் ஆள் பிழைக்க வேண்டுமே என்பது தான். நம்முடைய தோல் அப்படி லேசான தோல் அல்ல. 2000- 3,000 வருஷங்களாக தடித்துப்போன கெட்டியான தோல். அதில் உறைக்க வேண்டுமென்றால் சிறிது கடினமாகத்தான் சொல்லியாக வேண்டும். உங்கள் நாட்டு மக்களைப் பாருங்கள்! உலகத்தையும் பாருங்கள்! சிந்தியுங்கள்! பரிகாரம் தேடுங்கள்!

("குடிஅரசு"- 1947)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008_05_01_archive.html


'பறையர்' என்கிற ஒரு சாதிப்பெயர் நம் நாட்டில் இருப்பதால் தான் 'சூத்திரர்' என்கிற ஒரு சாதிப் பெயர் நம் நாட்டில் இருக்கிறது. 'பறையர்' என்கிற சாதிப் பெயரைவிட 'சூத்திரர்' என்கிற சாதிப்பெயர் மிக்க இழிவானது. இந்து சாஸ்திரப்படி, பறைய ஸ்திரிகளில் பதிவிரதைகளுக்கும் - சரியான ஒரு தாய்க்கும், தகப்பனுக்கும்-பிறந்தவர்களும் இருக்கலாம். 'சூத்திரர்களில் அப்படி இருக்க இடமில்லை. ஏனென்றால், சூத்திரச்சி என்றால் தாசி, வேசி மகள் என்பதுதான் பொருள். இதை ஒப்புக்கொள்ளாதவன் இந்து ஆகமாட்டான் என்பது சாஸ்திர சம்மதம். ஆகையால், என் போன்ற 'சூத்திரன்' என்று சொல்லப்படுபவன், 'பறையர்கள்' என்று சொல்லப்படுவோருக்கு உழைப்பதாக சொல்லுவதெல்லாம், 'சூத்திரர்கள்' என்று தம்மை யாரும் கருதக்கூடாது என்பதற்காகத்தானேயல்லாமல், வேறல்ல. ஆகையால் எனக்காக நான் பாடுபடுவதென்பது உங்கள் கண்ணுக்கு உங்களுக்காக பாடுபடுவதாய்த் தோன்றுகிறது. உங்களைத் தாழ்மையாகக் கருதும் பெண்களும், ஆண்களும், தாங்கள் பிறரால் உங்களை விடக் கேவலமாய்-தாழ்மையாய்க் கருதப்படுவதை அறிவதில்லை.

 

(சிராவயலில் 07.04.1926 அன்று பெரியார் நிகழ்த்திய சொற்பொழிவில் சில வரிகள்)

 http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_04.html

வாழ்க்கை இன்பத் துன்பங்களிலும் போக போக்கியங்களிலும் இருவருக்கும் சம உரிமை உண்டு என்றும் குறிப்பிட்ட சமத்துவச் சுபாவம் மிளிரும் மாறுதல் அவசியமா? இல்லையா? என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள். உங்கள் மனைவிமார்களை நினைத்துக் கொண்டே யோசிக்காதிர்கள். உங்களுடைய செல்வப்பெண் குழந்தைகளையும், அன்புச் சகோதரிகளையும் மனத்தில் கொண்டு யோசித்துப் பாருங்கள். உங்கள் தாய்மார் சுதந்திரவாதிகளாயிருந்தால் நீங்கள் எப்படி இருந்திருப்பீர்கள் என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

 

இன்று உலகில் கீழ்ச்சாதியார் என்பவர்களுக்குச் சம சுதந்திரம் வேண்டும் என்று போராடுகிறோம். அரசாங்கத்தினிடமிருந்து விடுதலைப் பெற்றுச் சுதந்திரமாய் வாழ வேண்டும் என்று போராடுகிறோம். அதே போராட்டத்தை நமது தாய்மார்கள் விஷயத்திலும் நமது சகோதரிகள் விஷயத்திலும் கவனிக்க வேண்டாமா?அப்படி கவனிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் ஓப்புக்கொள்வீர்களேயானால் அதற்கு இந்தச் சந்தர்ப்பத்தை விட வேறு சந்தர்ப்பம் எது என்று கேட்கின்றேன்?

 

புரோகிதம் இல்லாததாலேயே நாஸ்திகம் என்றும், பெண்ணுக்குச் சம சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதாலேயே சுயமரியாதைத் திருமணம் என்றும் சொல்லப்படுகிறது. அந்தப்படிச் சொல்லப்படுவதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. திருமணங்களில் ஆஸ்திக- நாஸ்திகத்துக்கு இடமே இல்லை. நாஸ்திகம் அவரவர்கள் மனஉணர்ச்சி- ஆராய்ச்சித்திறன் ஆகியவைகளைக் கொண்டதே தவிர அது ஒரு குணமன்று, ஒரு கட்சியன்று, ஒரு மதமன்று. ஆகையால் இத்திருமண முறை மாறுதல்களில் நாஸ்திகத்துக்கு இடமில்லை.

 

கடவுள் நம்பிக்கைக்காரர்கள் இந்த இடத்தில் கடவுள் இல்லை என்று சொல்லிவிட முடியுமா? என் போன்றவர்கள் அப்படிச் சொல்வதனால் எந்தக் கடவுள் நம்பிக்கைக்காரராவது அதை நம்ப முடியுமா? ஆதலால் இதில் நாஸ்திகம் என்றால் அவன் இல்லாமல் செய்யும் மற்ற அநேக காரியங்கள் நாஸ்திகம் என்று தான் அர்த்தம். ஆதலால் அதையும் நாம் லட்சியம் செய்ய வேண்டியரில்லை.

 

மற்றொரு விஷயமான ஆண் பெண் சமத்துவம் என்கிற சுயமரியாதை சிலருக்குப் பிடிக்கவில்லையானால் நாம் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. எதற்காக ஆணுக்குப் பெண் அடிமையாக இருக்க வேண்டும்? இஷ்டப்பட்டால் என்ன செய்ய முடியும்?அதற்கு என்ன நிர்ப்பந்தம் செய்ய யாருக்குப் பாத்தியமுண்டு?

 

ஆகையால் வேறு எந்தக் காரியங்களில் மாறுதல் இல்லாவிட்டாலும் இந்த வாழ்க்கைச் சுதந்திரத்தில் சமச் சுதந்திரம் ஏற்பட்டுத் தான் ஆக வேண்டும்.சுயமரியாதை இயக்கத்தின் முதல் லட்சியமே அதுவாகும். ஆதலால் அது விஷயத்தில் உள்ள - ஏற்படப்போகும் மாறுதலை மக்கள் வரவேற்றுத் தான் ஆகவேண்டும்.

 

தந்தை பெரியார்

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_7163.html

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE