Language Selection

சமூகவியலாளர்கள்

மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?
வஞ்சிஎன் றழைத்தான் ஏனென்றேன் மாலை!--
மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?

பாடொரு பாட்டென்றேன் பாடி இருந்தான்
பைந்தமிழ் கேட்டுநான் ஆடி யிருந்தேன்--
மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?

"ஓடையில் தாமரை வாடிடும்" என்றான்
உள்ளங்கை விரித்தும் கூப்பியும் நின்றேன்
"வாடாத தாமரை உன்முகம்" என்றான்
மலர்காட்டி முகங்காட்டி வாய்பார்த்து நின்றேன்
"கூடியிருக்க" என்றான் கைகோத்து நின்றேன்
காடும் கமழ்ந்தது நான்விட் டகன்றேன்--
மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?

காளைசொற் படிமறு நாளைக்குச் சென்றேன்
"கனிபோன்ற தென்பாங்கு பாடாயோ?" என்றான்
வேளை யாகிவிடும் என்று நவின்றேன்
விரும்பிப் பசுக்கறந்து "குடி" என்று நின்றான்
ஆளன் கொடுத்தபா லாழாக்குப் பால் என்றேன்
"அல்லடி காதற் கலப்பால் தான்" என்றான்--
மாடுமேய்ப் பவனிடம் எனக்கென்ன வேலை?

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp093.htm#dt102

[திராவிடர் புரட்சித் திருமணம் இந்நாளில் முன்னாளிற்
போலின்றிப் பெருமக்களால் மிகுதியும் மெற்கொள்ளப்
பட்டுவருகிறது. ஆங்காங்கு - அன்றன்று, திராவிடர்
புரட்சித் திருமணங்கள். சில அல்ல, மிகப் பல!
மணம் நடத்துவோர் சிற்றூராயினும் - தம் ஊரில் உள்ள
வர்களைக் கொண்டே நடத்திக் கொள்வதால் செலவு
குறையும். தலைவர்கட்கும் தொல்லை இராது.]

1. அழைப்பிதழால் அல்லது வேண்டுகோளால் மண வீட்டில்
குழுமியோர் அவையத்தார் ஆவார்.

2. இசை: திராவிட நாட்டுப் பண்.**
** திராவிட நாட்டுப் பண் பாரதிதாசன் கவிதைகள் இரண்டாம்
தொகுதியில் உளது

3. மணமக்கள் அவைக்கு வருதல்.

4. முன்மொழிவோர் அவையில் எழுந்து, புஅவைத் தலைமை
தாங்கி, இத்திருமணத்தை முடித்துத்தரும்படி இன்னாரை
வேண்டிக்கொள்கிறேன்மு என்று முன் மொழிதல்.

5. அவையத்தாரின் சார்பில் ஒருவர் அதை, புநாங்கள்
ஆதரிக்கிறோம்மு என்று வழிமொழிதல்.

6. முன் மொழிந்தார், வழி மொழிந்தார் அவைத் தலைவரை
அழைத்துவந்து சிறப்புறுத்தி இருக்கை காட்டுதல்.

7. அவைத் தலைவர் முன்னுரை.

8. திருமணம் நடத்துதல்: மணப்பெண், புஇன்னாரை நான்
என் வாழ்க்கைத் துணைவராகக் கொண்டு வாழ்க்கை
நடத்த ஒப்புகிறேன்மு என்று சொல்லல். மணமகனும்
அவ்வாறு சொல்லல். அதன்மேல் இருவரும் மாலை
மாற்றுதல்; கணையாழி மாற்றுதல். புவாழ்கமு என முழங்குதல்.

9. தலைவர் மற்றும் அறிஞர் மணமக்களை வாழ்த்துதல்.

10.வரிசை: அவையத்தார்க்கு வெற்றிலை, பாக்கு முதலிய வழங்குதல்.
இந்த நடைமுறைக்கு முதல்நாளே நீதிமன்றத்தில்
மணமகன் மணமகள் மணப்பதிவு செய்து கொள்வ
துண்டு. பிறகும் பதிவு அறிவிப்புச் செய்து கொள்ளலாம்.

இக்கருத்தை வைத்தே சுருக்கமாகக் கவிதை நடையில்
ஈண்டு எழுதியுள்ளேன். இங்கு காட்டிய திட்டம் பெரும்
பாலும் நடைபெறுகின்றது என்பது தவிர, இப்படித்தான்
நடத்தப்பட வேண்டும் என்று கட்டுப்படுத்தியதாகாது.
இதனிலும் சுருக்கமான முறையில் நடத்திக் கொள்ளலாம்.
ஆதலினால்தானே இது புரட்சித் திருமணம்?
----- பாரதிதாசன்

1
அவையத்தார்
அகவல்
வருக வருகென மலர்க்கை கூப்பித்
திருமண மக்கட்கு உரியோர் எதிர்கொளத்
திராவிட நாட்டுப் பெருங்குடி மக்கள்
அரிவைய ரோடுவந் தமர்ந்தனர் நிறையவே!
குழலும் முழவும் பொழிந்த இன்னிசை
மழையை நிறுத்திஓர் மறவன் எழுந்து,தேன்
மழைபொழி வான்போல் மாத்தமிழ் சிறக்கத்
திராவிட நாட்டுப்பண் பாடினான்;
ஒருபெரு மகிழ்ச்சி நிலவிற்று அவையத்தே.
மணமக்கள் வருகை
மணமகள் தோழிமார் சூழவும், மணமகன்
தோழர் சூழவும் தோன்றி அவைதொழுது
யுஇருக்கரு என்று தோழர் இயம்ப
இருக்கையில் இருவர் அமர்ந்தி ருந்தனர்.
2
முன் மொழிதல்
மன்னுசீர் மணப்பெண், மணமகன் சார்பில்
முன்மொழிந் தார்ஓர் முத்தமிழ் அறிஞர்:
புதிராவிடநாட்டுப் பெருங்குடி மக்களே,
அருமைத் தோழியீர் தோழரே அறிஞரே,
என்றன் வணக்கம் ஏற்றருள் வீர்கள்.
இன்று நடைபெற இருக்கும்இத் திராவிடர்
புரட்சித் திருமணப் பெருங்கூட் டத்திற்குத்
தலைமை தாங்கவும் நிலைமை உயர
மணமகள் மணமகன் வாழ்க்கை ஒப்பந்தம்
நிறைவேற் றவும்பெரி யாரை
முறையில் வேண்டினேன் முன்னுற வணங்கியே.மு
வழி மொழிதல்
அவையத் தாரின் சார்பிலோர் அறிஞர்,
புமுன்மொழிந் தாரின் பொன்மொழி
நன்றொப்பு கின்றோம்மு என்றார் இனிதே.
வேண்டுகோள்
முன்மொழிந் தாரும், வழிமொழிந் தாரும்
பின்னர்அப் பெரியார் இருப்பிடம் நாடி,
புஎழுந்தருள்மு கென்றே இருகை கூப்பி
மொழிந்து சீர்செய்து முன்னுற அமைந்த
இருக்கை காட்டத் தமிழ்ச்சொற்
பெருக்கைப் பெரியார் தொடங்கினர் நன்றே:
3
அவைத்தலைவர்
சேர சோழ பாண்டியர் வழிவரு
திராவிட நாட்டுப் பெருங்குடி மக்களே,
அருமைத் தோழியீர் தோழரே அறிஞரே,
தாங்கள் இட்ட பணியைத் தலைக்கணிந்து
ஈங்குச் சிலசொல் இயம்பு கின்றேன்.
ஆரியர் மிலேச்சர் ஆதலால், ஆரியத்து
வேரினர் பார்ப்பனர் வேறி னத்தவர்
ஆதலால், அவரின் வேத மந்திரம்
தீது பயப்பன ஆதலால், திராவிடர்
வாழு மாறு மனங்கொளார் என்பதும்,
தாழ இன்னலே சூழுவார் என்பதும்,
அன்றாட வாழ்வில் அறிந்தோம் ஆதலால்,
நம்மொழி, நம்கலை, நம் ஒழுக்கம்
நம்பேர் ஒட்பம் நடைமுறை மாய்க்கவே
தம்மொழி தீயதம் தகையிலா முறைகளை
மணமுதல், திராவிடர்வாழ்க்கை முறைகளில்
இணைக்க அவர்கள் எண்ணினர் ஆதலால்
ஆரியர் பார்ப்பனர் அடாமண முறையை
வேரொடு சாய்க்க வேண்டும் அன்றோ?
அமிழ்தைத் தமிழென்று பேசும் அழகிய
தமிழ்மண வீட்டில் உமிழத் தக்க
வடமொழிக் கூச்சலா? இன்ப வாழ்வு
தொடங்கையில் நடுவிற் சுடு நெருப்பா?
தாய்தந் தைமார் தவஞ்செய்து பெற்றனர்
தூய்பெருங் கிளைஞர் சூழ்ந்திருக் கின்றனர்
ஒருமனப் பட்ட திருமண மக்களைப்
பெரிதின்பம் பெறுக பெறுக என்று
வாய்க்கு மகிழ்வாய் வாழ்த்த இருக்கையில்
ஏய்த்திங்கு வாழுமோர் நாய்க்கென்ன வேலை?
ஊழி தொடங்கையில் ஒளிதொடங்கு மூவேந்து
வாழையடி வாழையாய் வந்த திராவிடர்
சூழ்ந்திங் கிருக்கையில் சூழ்ச்சி யன்றி
ஏதுங்கெட்ட பார்ப்புக் கிங்கென்ன வேலை?
நல்லறம் நாடும் நம்மண மக்கட்குக்
கல்லான் கைப்படும் புல்லென் செய்யும்?
மிஞ்சும் காதலர் மெய்யன் பிருக்கையில்
கெஞ்சிப் பிழைப்போன் பஞ்சாங்க மேனோ?
தீதிலா மிகப்பல திராவிட மறவர்
ஆதர விருக்கையில், அறிவிலான் படைத்த
சாணிமுண் டங்கள் சாய்ப்ப தென்ன?
கீழ்நெறிச் சடங்குகள் கிழிப்ப தென்ன?
மணத்தின் மறுநாள் மணப்பெண் ணாளைத்
தண்கதிர்ச் செல்வன் புணரத் தருவதாம்!
இரண்டாம் நாளில் இன்பச் செல்வியைக்
கந்தரு வர்பால் கலப்புறச் செய்வதாம்!
தீஎனும் தெய்வம் மூன்றாம் நாளில்
தூயள்பால் இன்பம் துய்க்கச் செய்வதாம்!
நாலாம் நாள்தான் மணமகன் புணர்வதாம்!
திராவிட மக்களின் செவிஏற்கு மோஇதை?
வைதிக மணத்தை மெய்என ஒப்பிடில்
தமிழர் பண்பு தலைசா யாதோ?
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழைஎனப் பேசும்
திருவள் ளுவனார் திருநெறி மாய்ப்பதோ?
திராவிடர் புரட்சித் திருமணம்
புரிந்தின் புறுக திருமண மக்களே!
வாழ்க்கை ஒப்பந்தம்
ப·றொடை வெண்பா
திராவிட நாட்டுப் பெருங்குடி மக்கள்
இருவர்தம் வாழ்க்கைஒப் பந்தம் இனிதாக -
நீவிர் சான்றாக - நிகழ்த்துவிக் கின்றேன்நான்.
"பாவையீரே!* உங்கள் பாங்கில் அமர்ந்துள்ள
* பாவையீரே - மணமகளாரே.
ஆடவர் தம்மை அறிவீரோ? அன்னாரைக்
கூடிஉம் வாழ்க்கைத் துணையாகக் கொள்ள
உறுதி உரைப்பீரோ?" என்று வினவ,
உறுதி அவ்வாறே உரைத்தார் மகளாரும்.
"தோழரே!* பாங்கிலுள்ள தோழியரைத் தேர்ந்தீரோ?
* தோழரே - மணமகனாரே
வாழுநாள் வாழ்க்கைத் துணையாகக் கொண்டீரோ?
ஆயின் உறுதி அறிவிக்க!மு என்னவே,
தூயர் அவ்வாறே உறுதியும் சொல்லிட
வாழிய நீவிர்எனப் பெரியார் வாழ்த்தினார்!
வாழிய என்றவையுள் மக்களெலாம் வாழ்த்தினார்!
தாரொன்றைத் தாங்கித்தம் கொழுநர்க்கே சூட்ட
நேரிழை யார்க்கும் நெடுந்தா ரவர்சூட்டக்
கையிற் கணையாழி கட்டழகியார் கழற்றித்
துய்யமண வாளரைத் தொட்டணிய, அன்னவரும்
தம்ஆழி, மங்கையர்க்குத் தந்து மகிழ்ந்தமர்ந்தார்!
செம்மைப் பெரியார் அறமொழிகள் செப்புகின்றார்:

அற மொழிகள்
"அன்பும் அறனும்
உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும்
அது" என்றார் வள்ளுவனார்.
இல்வாழ்வில் அன்பும்
அறமும் இருக்குமெனில்
நல்லதன்மை நல்லபயன்
நாளும் அடையுமன்றோ?
"மனைத்தக்க மாண்புடையாள்
ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத்
துணை" என்றார் வள்ளுவனார்!
வாழ்க்கைத் துணைவி
மனைக்குரிய மாண்புகொண்டு
வாழ்வில் அவனின்
வருவாய் அறிந்து
செலவு செயல்வேண்டும்
என்பது மன்றியும்,
"தற்காத்துத் தற்கொண்டான்
பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள்
பெண்" என்று சொல்கின்றார்.
தன்னையும் தக்கபடி
காத்துக் கொளல்வேண்டும்
தன்கொழுநன் தன்னையும்
காத்திடல் வேண்டும்
சீர்சால் திராவிடர்
பண்பு சிதையாமல்
நிற்பவளே பெண்ணாவாள்.
"மங்கலம் என்ப
மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட்
பேறு" பெறுக.
"வழங்குவ துள்வீழ்ந்தக்
கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல்
இல்"மற வாதீர்.
"இளிவரின் வாழாத
மானம் உடையார்
ஒளிதொழு தேத்தும்
உலகு" தெளிக.
மணமகளாரே, மணமகனாரே
இணைந்தின் புற்றுநன்
மக்களை ஈன்று
பெரும்புகழ் பெற்றுநீடூழி
இருநிலத்து வாழ்கஇனிது.

நன்றி கூறல்
அறுசீர் விருத்தம்
மணமக்கட் குரியார் ஆங்கு
வாழ்த்தொலிக் கிடை எழுந்தே,
"மணவிழாச் சிறக்க ஈண்டு
வந்தார்க்கு நன்றி! இந்த
மணஅவைத் தலைமை தாங்கி
மணமுடித் தருள் புரிந்த
உணர்வுடைப் பெரியார்க் கெங்கள்
உளமார்ந்த நன்றி" என்றே
கைகூப்பி, அங்கெ வர்க்கும்
அடைகாயும் கடிது நல்கி
வைகலின் இனிதின் உண்ண
வருகென அழைப்பா ரானார்!
பெய்கெனப் பெய்த இன்பப்
பெருமழை இசையே யாக
உய்கவே மணமக்கள் தாம்
எனஎழும் உள்ளார் வாழ்த்தே.

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166b.htm#8._புரட்சித்_திருமணத்_திட்டம்

(குதம்பைச் சித்தர் பாடலின் மெட்டு)
புவியிற் சமுகம்இன்பம்
பூணல் சமத்துவத்தால்;
கவிழ்தல் பேதத்தாலடி! - சகியே
கவிழ்தல் பேதத்தாலடி! 1
புவிவேகம் கொண்டுசெல்லும்
போதில் உடன்செல்லாதார்
அவிவேகம் கொண்டாரடி! - சகியே
அவிவேகம் கொண்டாரடி! 2
தாழ்வென்றும் உயர்வென்றும்
சமுகத்திற் பேதங்கொண்டால்
வாழ்வின்பம் உண்டாகுமோ? - சகியே
வாழ்வின்பம் உண்டாகுமோ? 3
தாழ்ந்தவர் என்றுநீக்கிச்
சமுதாயச் சீர்தேடி
வாழ்ந்தது காணேனடி! - சகியே
வாழ்ந்தது காணேனடி! 4
பிறப்பி லுயர்வுதாழ்வு
பேசும்ச முகம்மண்ணில்
சிறக்குமோ சொல்வாயடி? - சகியே
சிறக்குமோ சொல்வாயடி? 5
பிறந்தமுப் பதுகோடிப்
பேரில்ஐங் கோடிமக்கள்
இறந்தாரோ சொல்வாயடி? - சகியே
இறந்தாரோ சொல்வாயடி? 6
இதந்தரும் சமநோக்கம்
இல்லா நிலத்தில்நல்ல
சுதந்தரம் உண்டாகுமோ? - சகியே
சுதந்தரம் உண்டாகுமோ? 7
பதம்பெறப் பணிசெய்வோர்
பகைகொண்டார் எனில்எந்த
விதம்அ·து கொள்வாரடி? - சகியே
விதம்அ·து கொள்வாரடி? 8
சோதர பாவம்நம்மில்
தோன்றா விடில்தேசத்தில்
தீதினி நீங்காதடி! - சகியே
தீதினி நீங்காதடி! 9
93
பேதம்பா ராட்டிவந்தோம்
பிழைசெய்தோம் பல்லாண்டாக
மீதம் உயிர்தானுண்டு! - சகியே
மீதம் உயிர்தானுண்டு! 10
அற்பத்தீண் டாதார்எண்ணும்
அவரும் பிறரும்ஓர்தாய்
கர்ப்பத்தில் வந்தாரன்றோ? - சகியே
கர்ப்பத்தில் வந்தோரன்றோ? 11
பொற்புடை முல்லைக்கொத்தில்
புளியம்பூ பூத்ததென்றால்
சொற்படி யார்நம்புவார்? - சகியே
சொற்படி யார்நம்புவார்? 12
தீண்டும் மக்களின்அன்னை
தீண்டாரையும் பெற்றாளோ
ஈண்டிதை யார்நம்புவார்? - சகியே
ஈண்டிதை யார்நம்புவார்? 13
தீண்டாமை ஒப்புகின்றார்
தீண்டா ரிடம்உதவி
வேண்டாமல் இல்லையடி! - சகியே
வேண்டாமல் இல்லையடி! 14
அடிமை கொடியதென்போர்
அவர்சோத ரர்க்கிழைக்கும்
மிடிமையை எண்ணாரடி! - சகியே
மிடிமையை எண்ணாரடி! 15
கொடியோர் பஞ்சமர்என்று
கூடப்பிறந் தோர்க்கிவர்
சுடும்பேர்வைத் திட்டாரடி! - சகியே
சுடும்பேர்வைத் திட்டாரடி! 16
தீண்டாதார் பழங்கீர்த்தி
தெரிந்தால் தீண்டாமைப்பட்டம்
வேண்டாதார் இல்லையடி! - சகியே
வேண்டாதார் இல்லையடி! 17
ஆண்டார் தமிழர்இந்நா
டதன்பின் ஆரியர்என்போர்
ஈண்டுக் குடியேறினார்! - சகியே
ஈண்டுக் குடியேறினார்! 18
வெள்ளை யுடம்புகாட்டி
வெறும்வாக்கு நயம்காட்டிக்
கள்ளங்கள் செய்தாரடி! - சகியே
94
கள்ளங்கள் செய்தாரடி! 19
பிள்ளைக்குக் கனிதந்து
பின்காது குத்தல்போல்தம்
கொள்கை பரவச்செய்தார்! - சகியே
கொள்கை பரவச்செய்தார்! 20
கொல்லா விரதம்கொண்டோர்
கொலைசெய்யும் ஆரியர்தம்
சொல்லுக் கிசைந்தாரடி! - சகியே
சொல்லுக் கிசைந்தாரடி! 21
நல்ல தமிழர்சற்றும்
நலமற்ற ஆரியர்தம்
பொல்லாச்சொல் ஏற்றாரடி! - சகியே
பொல்லாச்சொல் ஏற்றாரடி! 22
ஏச்சும் எண்ணார்,மானம்
இல்லாத ஆரியர்
மிலேச்சர்என் றெண்ணப்பட்டார்! - சகியே
மிலேச்சர்என் றெண்ணப்பட்டார்! 23
வாய்ச்சாலத் தால்கெட்ட
வஞ்சத்தால் கலகத்தால்
ஏய்ச்சாள வந்தாரடி! - சகியே
ஏய்ச்சாள வந்தாரடி! 24
மன்னர்க் கிடையில்சண்டை
வளர்த்தார்தம் வசமானால்
பொன்னாடு சேர்வார்என்றார்! - சகியே
பொன்னாடு சேர்வார்என்றார்! 25
பொன்னாட்டு மாதர்போலும்
பூலோகத் தில்லையென்று
மன்னர்பால் பொய்கூறினார்! - சகியே
மன்னர்பால் பொய்கூறினார்! 26
வான்மறை எனத்தங்கள்
வழக்கம் குறித்தநூலைத்
தேன்மழை என்றாரடி! - சகியே
தேன்மழை என்றாரடி! 27
’ஏன்மறை?’ எங்கட்கென்றே
இசைத்தால் ஆரியர்,நீங்கள்
வான்புகத் தான்என்றனர்! - சகியே
வான்புகத் தான்என்றனர்! 28
மேலேழு லோகம்என்றார்
கீழேழு லோகம்என்றார்
95
நூலெல்லாம் பொய்கூறினார்! - சகியே
நூலெல்லாம் பொய்கூறினார்! 29
மேலும்தமை நிந்திப்போர்
மிகுக‰டம் அடைவார்கள்
தோலோதோல் கூடாதென்றார்! - சகியே
தோலோதோல் கூடாதென்றார்! 30
சுவர்க்கத்தில் தேவர்என்போர்
சுகமாய் இருப்பதுண்டாம்
அவர்க்குத்தாம் சொந்தம்என்றார்! - சகியே
அவர்க்குத்தாம் சொந்தம்என்றார்! 31
துவக்கத்தில் ஆரியரைத்
தொழுதால் இறந்தபின்பு
சுவர்க்கம்செல் வார்என்றனர்! - சகியே
சுவர்க்கம்செல் வார்என்றனர்! 32
தம்சிறு வேதம்ஒப்பாத்
தமிழரை ஆரியர்கள்
நஞ்சென்று கொண்டாரடி! - சகியே
நஞ்சென்று கொண்டாரடி! 33
வெஞ்சிறு வேதம்ஒப்பா
வீரரை ஆரியர்கள்
வஞ்சித்துக் கொன்றாரடி! - சகியே
வஞ்சித்துக் கொன்றாரடி! 34
அழிவேதம் ஒப்பாதாரை
அரக்கரென் றேசொல்லிப்
பழிபோட்டுத் தலைவாங்கினார்! - சகியே
பழிபோட்டுத் தலைவாங்கினார்! 35
பழிவேதம் ஒப்போம்என்ற
பண்டைத் தமிழர்தம்மைக்
கழுவேற்றிக் கொன்றாரடி! - சகியே
கழுவேற்றிக் கொன்றாரடி! 36
ஆரியர் தமைஒப்பா
ஆதித் திராவிடரைச்
சேரியில் வைத்தாரடி! - சகியே
சேரியில் வைத்தாரடி! 37
சேரிப் பறையர்என்றும்
தீண்டாதார் என்றும்சொல்லும்
வீரர்நம் உற்றாரடி! - சகியே
வீரர்நம் உற்றாரடி! 38
வெஞ்சமர் வீரர்தம்மை
96
வெல்லாமற் புறந்தள்ளப்
பஞ்சமர் என்றாரடி! - சகியே
பஞ்சமர் என்றாரடி! 39
தஞ்சம் புகாத்தமிழர்
சண்டாளர் எனில்தாழ்ந்து
கெஞ்சுவோர் பேரென்னடி! - சகியே
கெஞ்சுவோர் பேரென்னடி! 40
மாதர் சகிதம்தங்கள்
மதத்தைத் தமிழ்மன்னர்க்குப்
போதனை செய்தாரடி! - சகியே
போதனை செய்தாரடி! 41
சூதற்ற மன்னர்சில்லோர்
சுவர்க்கக் கதையைநம்பித்
தீதுக் கிசைந்தாரடி! - சகியே
தீதுக் கிசைந்தாரடி! 42
உலகம் நமைப்பழிக்க
உட்புகுந் தாரியர்கள்
கலகங்கள் செய்தாரடி! - சகியே
கலகங்கள் செய்தாரடி! 43
கொலைக்கள மாக்கிவிட்டார்
குளிர்நாட்டைத் தம்வாழ்வின்
நிலைக்களம் என்றாரடி! - சகியே
நிலைக்களம் என்றாரடி! 44
சாதிப் பிரிவுசெய்தார்
தம்மை உயர்த்துதற்கே
நீதிகள் சொன்னாரடி! - சகியே
நீதிகள் சொன்னாரடி! 45
ஓதும் உயர்வுதாழ்வை
ஆரியர் உரைத்திட்டால்
ஏதுக்கு நாம்ஏற்பதோ? - சகியே
ஏதுக்கு நாம்ஏற்பதோ? 46
ஊர்இரண் டுபடுங்கால்
உளவுள்ள கூத்தாடிக்குக்
காரியம் கைகூடுமாம்! - சகியே
காரியம் கைகூடுமாம்! 47
நேர்பகை யாளிஎன்னை
நீசனென் றால்என்சுற்றத்
தார்என்னைத் தள்ளாரடி! - சகியே
சுற்றத் தார்என்னைத் தள்ளாரடி! 48
97
வீரமில் ஆரியரின்
வீண்வாக்கை நம்பினால்நம்
காரியம் கைகூடுமோ? - சகியே
காரியம் கைகூடுமோ? 49
ஆரியர் சொன்னவண்ணம்
ஆண்டு பலகழித்தோம்
காரியம் கைகூடிற்றா? - சகியே
காரியம் கைகூடிற்றா? 50
எத்தால்வாழ் வுண்டாகும்?நாம்
ஒத்தால்வாழ் வுண்டாம்!இ·து
சத்தான பேச்சல்லவோ? - சகியே
சத்தான பேச்சல்லவோ? 51
எத்தர்கள் பேச்சைநம்பி
இரத்தக் கலப்பைநீக்கிச்
சத்தின்றி வாழ்வாருண்டோ? - சகியே
சத்தின்றி வாழ்வாருண்டோ? 52
’ஆரியப்’ பேர்மறைந்தும்
அவர்வைத்த ’தீண்டார்’ என்ற
பேர்நிற்றல் ஏதுக்கடி? - சகியே
பேர்நிற்றல் ஏதுக்கடி? 53
ஆரியர் பார்ப்பாரானால்
அவர்சொன்ன தீண்டாதார்கள்
சேரியில் ஏன்தங்கினார்? - சகியே
சேரியில் ஏன்தங்கினார்? 54
ஊர்தட்டிப் பறித்திட
உயர்சாதி என்பார்இ·தை
மார்தட்டிச் சொல்வேனடி! - சகியே
மார்தட்டிச் சொல்வேனடி! 55
ஓர்தட்டில் உயர்ந்தோர்மற்
றொன்றில்தாழ்ந் தோரைஇட்டுச்
சீர்தூக்கிப் பார்ப்போமடி! - சகியே
சீர்தூக்கிப் பார்ப்போமடி! 56
தீண்டாதார் சுத்தமற்றோர்
என்றாலச் சுத்தத்தன்மை
தாண்டாதார் எங்குண்டடி? - சகியே
தாண்டாதார் எங்குண்டடி? 57
தீண்டாதார் ஊனுண்டால்
தீண்டு மனிதர்வாய்க்குள்
மாண்டன பல்கோடியாம்! - சகியே
மாண்டன பல்கோடியாம்! 58
98
பறவை மிருகமுண்டோர்
பறையர் என்றால்மனுநூல்
முறையென்பார் பேரென்னடி? - சகியே
முறையென்பார் பேரென்னடி? 59
வெறிமது உண்போர்நீசர்
என்றால் பிறர்க்கிருட்டில்
நிறைமுக்கா டேதுக்கடி? - சகியே
நிறைமுக்கா டேதுக்கடி? 60
சீலம் குறைந்தோர்என்றால்
சீலமி லாச்சிலரை
ஞாலத்தில் ஏன்தீண்டினார்? - சகியே
ஞாலத்தில் ஏன்தீண்டினார்? 61
மேலை வழக்கங்கொண்டு
மிகுதாழ்ந்தோர் என்றாலந்தக்
காலத்தில் தாழ்ந்தாருண்டோ? - சகியே
காலத்தில் தாழ்ந்தாருண்டோ? 62
சாத்திரம் தள்ளிற்றென்றால்
சாற்றும் அதுதான்எங்கள்
கோத்திரத் தார்செய்ததோ? - சகியே
கோத்திரத் தார்செய்ததோ? 63
வாய்த்திறம் கொண்டமக்கள்
வஞ்சம் யாவையும்நம்பி
நேத்திரம் கெட்டோமடி! - சகியே
நேத்திரம் கெட்டோமடி! 64
மனிதரிற் றாழ்வுயர்வு
வகுக்கும் மடையர்வார்த்தை
இனிச்செல்ல மாட்டாதடி! - சகியே
இனிச்செல்ல மாட்டாதடி! 65
கனிமா மரம்வாழைக்காய்
காய்க்கா தெனில்இரண்டும்
தனித்தனிச் சாதியடி! - சகியே
தனித்தனிச் சாதியடி! 66
எருமையைப் பசுசேர்தல்
இல்லை; இதனாலிவை
ஒருசாதி இல்லையடி! - சகியே
ஒருசாதி இல்லையடி! 67
ஒருதாழ்ந்தோன் உயர்ந்தாளை
ஒப்பக் கருக்கொள்ளுங்கால்
இருசாதி மாந்தர்க்குண்டோ? - சகியே
99
இருசாதி மாந்தர்க்குண்டோ? 68
உழைப்பால் உயர்ந்தவர்கள்
தாழ்ந்தவர்கள் என்றன்னோர்
பிழைப்பைக் கெடுத்தாரடி! - சகியே
பிழைப்பைக் கெடுத்தாரடி! 69
தொழிலின்றிச் சோறுண்ணாச்
சுத்தர் அசுத்தர்என்ப
தெழிலற்ற வார்த்தையடி! - சகியே
எழிலற்ற வார்த்தையடி! 70
உடல்நோய்கள் அற்றபேரை
ஒழுக்கமில் லார்என்பவர்
கடலை உளுந்தென்பரோ? - சகியே
கடலை உளுந்தென்பரோ? 71
தடையற்ற அன்பினரைச்
சண்டாளர் என்றுசொல்லும்
கடையர்க்கு வாழ்வேதடி? - சகியே
கடையர்க்கு வாழ்வேதடி? 72
பழிப்பவர்க் கும்உதவும்
பாங்கர் பறையர்என்பார்
விழித்துத் துயில்வாரடி! - சகியே
விழித்துத் துயில்வாரடி! 73
தழைக்கப் பிள்ளைபெறுவோர்
தாழ்வாம்; பிள்ளைக்கையரை
அழைப்போர்கள் மேலோர்களாம்! - சகியே
அழைப்போர்கள் மேலோர்களாம்! 74
தோள்தான் பொருள்என்போர்கள்
தாழ்வாம்; துரும்பெடுக்கக்
கூடாதோர் மேலென்பதாம்! - சகியே
கூடாதோர் மேலென்பதாம்! 75
மாடா யுழைப்பவர்கள்
வறியர்;இந் நாட்டுத்தொழில்
நாடாதோர் செல்வர்களோ? - சகியே
நாடாதோர் செல்வர்களோ? 76
ஏரிக் கரையினில்வாழ்ந்
திருந்து பிறரைக்காக்கும்
சேரியர் தாழ்ந்தார்களோ? - சகியே
சேரியர் தாழ்ந்தார்களோ? 77
ஊருக் கிழிந்தோர்காவல்;
உயர்ந்தோர் இவர்கள்வாழ்வின்
100
வேருக்கு வெந்நீரடி! - சகியே
வேருக்கு வெந்நீரடி! 78
அங்கம் குறைச்சலுண்டோ
ஆதித் திராவிடர்க்கே?
எங்கேனும் மாற்றமுண்டோ? - சகியே
எங்கேனும் மாற்றமுண்டோ? 79
புங்கவர் நாங்கள்என்பார்
பூசுரர் என்பார்நாட்டில்
தங்கட்கே எல்லாம்என்பார்! - சகியே
தங்கட்கே எல்லாம்என்பார்! 80
ஆதிசை வர்கள்என்பார்;
யுஆதிக்குப் பின்யார்?ருஎன்றால்
காதினில் வாங்காரடி! - சகியே
காதினில் வாங்காரடி! 81
சாதியில் கங்கைபுத்ரர்
என்பார்கள் சாட்சி,பத்ரம்
நீதியில் காட்டாரடி! - சகியே
நீதியில் காட்டாரடி! 82
வேலன்பங் காளியென்பார்
வெறுஞ்சேவ கனைக்கண்டால்
காலன்தான் என்றஞ்சுவார்! - சகியே
காலன்தான் என்றஞ்சுவார்! 83
மேலும் முதலி,செட்டி,
வேளாளப் பிள்ளைமுதல்
நாலாயிரம் சாதியாம்! - சகியே
நாலாயிரம் சாதியாம்! 84
எஞ்சாதிக் கிவர்சாதி
இழிவென்று சண்டையிட்டுப்
பஞ்சாகிப் போனாரடி! - சகியே
பஞ்சாகிப் போனாரடி! 85
நெஞ்சில் உயர்வாய்த்தன்னை
நினைப்பான் ஒருவேளாளன்
கொஞ்சமும் எண்ணாததால்! - சகியே
கொஞ்சமும் எண்ணாததால்! 86
செட்டி உயர்ந்தோன்என்பான்
செங்குந்தன் உயர்வென்பான்
குட்டுக்கள் எண்ணாததால்! - சகியே
குட்டுக்கள் எண்ணாததால்! 87
செட்டிக்கோ முட்டிநாய்க்கன்
101
சேணியன் உயர்வென்றே
கட்டுக் குலைந்தாரடி! - சகியே
கட்டுக் குலைந்தாரடி! 88
சேர்த்துயர் வென்றிவர்கள்
செப்பினும் பார்ப்பனர்க்குச்
சூத்திரர் ஆனாரடி! - சகியே
சூத்திரர் ஆனாரடி! 89
தூற்றிட இவ்வுயர்ந்தோர்
சூத்திரர் என்றுபார்ப்பான்
காற்றினில் விட்டானடி! - சகியே
காற்றினில் விட்டானடி! 90
தம்மை உயர்த்தப்பார்ப்பார்
சமுகப் பிரிவுசெய்தார்
இம்மாயம் காணாரடி! - சகியே
இம்மாயம் காணாரடி! 91
பொய்மை வருணபேதம்
போனால் புனிதத்தன்மை
நம்மில்நாம் காண்போமடி! - சகியே
நம்மில்நாம் காண்போமடி! 92
நான்கு வருணம்என்று
நவிலும் மனுநூல்விட்டு
ஏனைந்து கொண்டாரடி? - சகியே
ஏனைந்து கொண்டாரடி? 93
நான்கு பிரிவும்பொய்மை;
நான்குள்ளும் பேதம்என்றால்
ஊனத்தில் உள்ளூனமாம்! - சகியே
ஊனத்தில் உள்ளூனமாம்! 94
சதுர்வர்ணம் வேதன்பெற்றான்
சாற்றும்பஞ் சமர்தம்மை
எதுபெற்றுப் போட்டதடி? - சகியே
எதுபெற்றுப் போட்டதடி? 95
சதுர்வர்ணம் சொன்னபோது
தடிதூக்கும் தமிழ்மக்கள்
அதில்ஐந்தாம் நிறமாயினர்! - சகியே
அதில்ஐந்தாம் நிறமாயினர்! 96
மனிதரில் தீட்டுமுண்டோ?
மண்ணிற் சிலர்க்கிழைக்கும்
அநீதத்தை என்சொல்வதோ? - சகியே
அநீதத்தை என்சொல்வதோ? 97
102
’புனிதர்என் றேபிறத்தல்’
’புல்லர்என் றேபிறத்தல்’
எனுமி·து விந்தையடி! - சகியே
எனுமி·து விந்தையடி! 98
ஊரிற் புகாதமக்கள்
உண்டென்னும் மூடரிந்தப்
பாருக்குள் நாமேயடி! - சகியே
பாருக்குள் நாமேயடி! 99
நேரிற்பார்க் கத்தகாதோர்
நிழல்பட்டால் தீட்டுண்டென்போர்
பாருக்குள் நாமேயடி! - சகியே
பாருக்குள் நாமேயடி! 100
மலம்போக்கும் குளம்மூழ்கா
வகைமக்க ளைநசுக்கும்
குலமாக்கள் நாமேயடி! - சகியே
குலமாக்கள் நாமேயடி! 101
மலம்பட்ட இடம்தீட்டாம்
மக்கள் சிலரைத்தொட்டால்
தலைவரைக் கும்தீட்டாம்! - சகியே
தலைவரைக் கும்தீட்டாம்! 102
சோமனைத் தொங்கக்கட்டச்
சுதந்தரம் சிலர்க்கீயாத்
தீமக்கள் நாமேயடி! - சகியே
தீமக்கள் நாமேயடி! 103
தாமூழ்கும் குளம்தன்னில்
தலைமூழ்கத் தகாமக்கள்
போமாறு தானென்னடி? - சகியே
போமாறு தானென்னடி? 104
பாதரட்சை யணிந்தாற்
பழித்துச் சிலரைத்தாழ்த்தும்
காதகர் நாமேயடி! - சகியே
காதகர் நாமேயடி! 105
ஓத வசதியின்றி
உலகிற் சிலரைதாழ்த்தும்
சூதர்க்கு வாழ்வேதடி? - சகியே
சூதர்க்கு வாழ்வேதடி? 106
தீராப் பகையுமுண்டோ
திருநாட்டார்க் குள்ளும்நெஞ்சம்
நேராகிப் போனாலடி? - சகியே
நேராகிப் போனாலடி? 107
103
ஓரைந்து கோடிமக்கள்
ஓல மிடுங்கால்மற்றோர்
சீராதல் இல்லையடி! - சகியே
சீராதல் இல்லையடி! 108
தாழ்வில்லை உயர்வில்லை
சமமென்ற நிலைவந்தால்
வாழ்வெல்லை காண்போமடி! - சகியே
வாழ்வெல்லை காண்போமடி! 109
சூழ்கின்ற பேதமெல்லாம்
துடைத்தே சமத்துவத்தில்
வாழ்கின்றார் வாழ்வின்பமாம்! - சகியே
வாழ்கின்றார் வாழ்வின்பமாம்! 110
ஆலய உரிமை
(’ஆறுமுக வடிவேலனே - கலியாணமும் செய்யவில்லை’
என்ற காவடிச் சிந்தின் மெட்டு)
கண்ணிகள்
எவ்வுயிரும் பரன் சந்நிதி யாமென்
றிசைத்திடும் சாத்திரங்கள் - எனில்
அவ்விதம் நோக்க அவிந்தன வோநம்
அழகிய நேத்திரங்கள்? 1
திவ்விய அன்பிற் செகத்தையெல் லாம்ஒன்று
சேர்த்திட லாகும்அன்றோ? - எனில்
அவ்வகை அன்பினிற் கொஞ்சம் இருந்திடில்
அத்தனை பேரும்ஒன்றே. 2
ஏக பரம்பொருள் என்பதை நோக்கஎல்
லாரும் உடன்பிறப்பே - ஒரு
பாகத்தார் தீண்டப் படாதவர் என்பதி
லேஉள்ள தோசிறப்பே? 3
’தேகம் சுமைநமைச் சேர்ந்ததில் லை’ என்று
செப்பிடும் தேசத்திலே - பெரும்
போகம் சுமந்துடற் பேதம்கொண் டோம்;மதி
போயிற்று நீசத்திலே. 4
என்னை அழைக்கின்ற கோயிலின் சாமி
எனக்கிழி வாய்த்தெரியும் - சாதி
தன்னை விலக்கிடு மோஇதை யோசிப்பீர்
சமுக நிலைபுரியும். 5
என்னை அளித்தவர் ஓர்கடவுள் மற்றும்
104
ஏழையர்க் கோர்கடவுள் - எனில்
முன்னம் இரண்டையும் சேர்த்துருக் குங்கள்
முளைக்கும் பொதுக்கடவுள். 6
உயர்ந்தவர் கோயில் உயர்ந்ததென் பீர்மிகத்
தாழ்ந்தது தாழ்ந்ததென்பீர் - இவை
பெயர்ந்து விழுந்தபின் பேதமிலா ததைப்
பேசிடுவீர் அன்பீர். 7
உயர்ந்தவர் கையில் வரத்தினைச் சாமி
ஒளிமறைவில் தரத்தான் - மிகப்
பயந்திழிந் தோர்களைக் கோயில் வராவண்ணம்
பண்ணின தோஅறியேன். 8
சோதிக் கடவுளும் தொண்டரும் கோயிலிற்
சூழ்வது பூசனையோ - ஒரு
சாதியை நீக்கினர்; தலையையும் வாங்கிடச்
சதியா லோசனையோ? 9
ஆதித் திராவிடர் பாரதர்க் கன்னியர்
என்று மதித்ததுவோ? - சாமி
நீதிசெய் வெள்ளையர் வந்ததும் போய்க்கடல்
நீரிற் குதித்ததுவோ? 10
மாலய மாக வணங்கிடச் சாமி
வந்திடு வார்என்றீரே - அந்த
ஆலயம் செல்ல அநேகரை நீக்கி
வழிமறித் தேநின்றீரே. 11
ஆலயம் செல்ல அருகரென்ற சிலர்
அங்கம் சிறந்தாரோ? - சிலர்
நாலினும் கீழென்று நாரி வயிற்றில்
நலிந்து பிறந்தாரோ? 12
தாழ்ந்தவர் தம்மை உயர்ந்தவ ராக்கிடச்
சாமி மலைப்பதுண்டோ? - இங்கு
வாழ்ந்திட எண்ணிய மக்களைச் சாமி
வருத்தித் தொலைப்பதுண்டோ? 13
தாழ்ந்தவர் வந்திடில் தன்னுயிர் போமெனில்
சாமிக்குச் சத்திலையோ? - எனில்
வீழ்ந்த குலத்தினை மேற்குல மாக்கிட
மேலும் சமர்த்திலையோ? 14
தன்னை வணங்கத் தகாதவரை அந்தச்
சாமி விழுங்கட்டுமே - அன்றி
முன்னை யிருந்த கல்லோடு கல்லாகி
உருவம் மழுங்கட்டுமே. 15
105
இன்னலை நீக்கிடும் கோயிலின் சாமி
இனத்தினில் பல்கோடி - மக்கள்
தன்னை வணங்கத் தகாதென்று சொல்லிடிற்
சாவது வோஓடி? 16
குக்கலும் காகமும் கோயிலிற் போவதிற்
கொஞ்சமும் தீட்டிலையோ? - நாட்டு
மக்களிலே சிலர் மாத்திரம் அந்த
வகையிலும் கூட்டிலையோ? 17
திக்கெட்டு மேஒரு கோயிலன்றோ? அதில்
சேரிஅப்பால் இல்லையே - நாளும்
பொய்க்கட் டுரைப்பவர் புன்மையும் பேசுவர்
நம்புவதோ சொல்லையே? 18
தாழ்ந்தவர் என்பவர் கும்பிடு தற்குத்
தனிக்கோயில் காட்டுவதோ? - அவர்
வாழ்ந்திடு தற்கும் தனித்தேசம் காட்டிப்பின்
வம்பினை மூட்டுவதோ? 19
தாழ்த்தப்பட் டார்க்குத் தனிக்கோயில் நன்றெனச்
சாற்றிடும் தேசமக்கள் - அவர்
வாழ்த்தி அழைக்கும் யுசுதந்தரம்ரு தன்னை
மறித்திடும் நாசமக்கள். 20
தாழ்ந்தவ ருக்கும் உயர்ந்தவ ருக்கும்இத்
தாய்நிலம் சொந்தம்அன்றோ? - இதில்
சூழ்ந்திடும் கோயில் உயர்ந்தவர்க்கே என்று
சொல்லிடும் நீதிநன்றோ? 21
’தாழ்ந்தவர்’ என்றொரு சாதிப் பிரிவினைச்
சாமி வகுத்ததுவோ? - எனில்
வாழ்ந்திடு நாட்டினில் சாமி முனைந்திந்த
வம்பு புகுத்தியதோ? 22
முப்பது கோடியர் பாரதத்தார் இவர்
முற்றும் ஒரேசமுகம் - என
ஒப்புந் தலைவர்கள் கோயிலில் மட்டும்
ஒப்பாவிடில் என்னசுகம்? 23
இப்பெரு நாடும் இதன்பெருங் கூட்டமும்
’யாம்’ என்று தற்புகழ்ச்சி - சொல்வர்
இப்புறம் வந்ததும் கோயிலி லும்நம்
இனத்தைச்செய் வார்இகழ்ச்சி. 24
மாடுண்ப வன்திருக் கோயிலின் வாயிலில்
வருவதற் கில்லைசாத்யம் - எனில்
ஆடுண்ணு வானுக்கு மாடுண்ணுவோன் அண்ணன்
அவனே முதற்பாத்யம். 25
106
நீடிய பத்தியில் லாதவர் கோயில்
நெருங்குவதால் தொல்லையே! - எனில்
கூடிஅக் கோயிலில் வேலைசெய் வோருக்கும்
கூறும்பக்தி இல்லையே. 26
’சுத்த மிலாதவர் பஞ்சமர்; கோயிற்
சுவாமியைப் பூசிப்பரோ?’ - எனில்
நித்த முயர்ந்தவர் நீரிற் குளிப்பது
யாதுக்கு யோசிப்பிரே. 27
நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி
நேரில்அக் கோயிலிலே - கண்டும்
ஒத்த பிறப்பின ரைமறுத் தீருங்கள்
கோயிலின் வாயிலிலே. 28
கூறும் ’உயர்ந்தவர்’ ’தாழ்ந்தவர்’ என்பவர்
கோயிலின் செய்திவிட்டுப் - புவி
காறியு மிழ்ந்தது யார்முகத்தே யில்லை?
காட்டுவீர் ஒன்றுபட்டு. 29
வீறும் உயந்தவர் கோயில் புகுந்ததில்
வெற்றிஇந் நாட்டில்உண்டோ? - இனிக்
கூறும் இழிந்தவர் கோயில் புகுந்திடில்
தீதெனல் யாதுகொண்டோ? 30
ஞாயமற்ற மறியல்
நொண்டிச் சிந்து
என்றுதான் சுகப்படு வதோ! - நம்மில்
யாவரும் யுசமானம்ருஎன்ற பாவனைஇல்லை - அந்தோ
ஒன்றுதான்இம் மானிடச் சாதி - இதில்
உயர்பிறப் பிழிபிறப் பென்பதும்உண்டோ? - நம்மில்
அன்றிருந்த பல தொழிலின் - பெயர்
அத்தனையும் யுசாதிகள்ருஎன் றாக்கிவிட்டனர் - இன்று
கொன்றிடுதே யுபேதம்ருஎனும் பேய்! - மிகக்
கூசும்இக் கதைநினைக்கத் தேசமக்களே! - நாம்
என்றுதான் சுகப்படு...
இத்தனை பெரும் புவியிலே - மிக
எண்ணற்ற தேசங்கள் இருப்பதறிவோம் - எனில்
அத்தனைதே சத்து மக்களும் - தாம்
அனைவரும் யுமாந்தர்ருஎன்று நினைவதல்லால் - மண்ணில்
இத்தகைய நாட்டு மக்கள்போல் - பேதம்
எட்டுல‡ம் சொல்லிமிகக் கெட்டலைவாரோ! - இவர்
பித்துமிகக் கொண்ட வர்கள்போல் - தம்
பிறப்பினில் தாழ்வுயர்வு பேசுதல்நன்றோ? - நாம்
என்றுதான் சுகப்படு...
107
தீண்டாமை என்னுமொரு பேய் - இந்தத்
தேசத்தினில் மாத்திரமே திரியக்கண்டோம் - எனில்
ஈண்டுப்பிற நாட்டில் இருப்போர் - செவிக்
கேறியதும் இச்செயலைக் காறியுமிழ்வார் - பல்
ஆண்டாண்டு தோறு மிதனால் - நாம்
அறிவற்ற மாக்கள்என்று கருதப்பட்டோம் - நாம்
கூண்டோடு மாய்வ தறிந்தும் - இந்தக்
கோணலுற்ற செயலுக்கு நாணுவதில்லை - நாம்
என்றுதான் சுகப்படு...
ஞானிகளின் பேரப் பிள்ளைகள் - இந்த
நாற்றிசைக்கும் ஞானப்புனல் ஊற்றிவந்தவர் - மிகு
மேனிலையில் வாழ்ந்து வந்தவர் - இந்த
மேதினியில் மக்களுக்கு மேலுயர்ந்தவர் - என்று
வானமட்டும் புகழ்ந்து கொள்வார் - எனில்
மக்களிடைத் தீட்டுரைக்கும் காரணத்தினை - இங்கு
யானிவரைக் கேட்கப் புகுந்தால் - இவர்
இஞ்சிதின்ற குரங்கென இளித்திடுவார் - நாம்
என்றுதான் சுகப்படு...
உயர் மக்கள் என்றுரைப்பவர் - தாம்
ஊரைஅடித் துலையிலிட் டுண்ணுவதற்கே - அந்தப்
பெயர் வைத்துக் கொள்ளுவதல்லால் - மக்கள்
பேதமில்லை என்னுமிதில் வாதமுள்ளதோ? - தம்
வயிற்றுக்கு விதவித ஊண் - நல்ல
வாகனங்கள் போகப்பொருள் அநுபவிக்க - மிக
முயல்பவர் தம்மிற் சிலரை - மண்ணில்
முட்டித்தள்ள நினைப்பது மூடத்தனமாம் - நாம்
என்றுதான் சுகப்படு...
உண்டி விற்கும் பார்ப்பனனுக்கே - தான்
உயர்ந்தவன் என்றபட்டம் ஒழிந்துவிட்டால் - தான்
கண்டபடி விலை உயர்த்தி - மக்கள்
காசினைப் பறிப்பதற்குக் காரணமுண்டோ? - சிறு
தொண்டு செய்யும் சாதிஎன்பதும் - நல்ல
துரைத்தனச் சாதியென்று சொல்லிக்கொள்வதும் - இவை
பண்டிருந்த தில்லை எனினும் - இன்று
பகர்வது தாங்கள்நலம் நுகர்வதற்கே - நாம்
என்றுதான் சுகப்படு...
வேதமுணர்ந் தவன் அந்தணன் - இந்த
மேதினியை ஆள்பவன் ‡த்திரியனாம் - மிக
நீதமுடன் வர்த்தகம் செய்வோன் - மறை
நியமித்த வைசியனென் றுயர்வுசெய்தார் - மிக
நாதியற்று வேலைகள் செய்தே - முன்பு
நாத்திறம்அற் றிருந்தவன் சூத்திரன்என்றே - சொல்லி
ஆதியினில் மனு வகுத்தான் - இவை
108
அன்றியுமே பஞ்சமர்கள் என்பதும்ஒன்றாம் - நாம்
என்றுதான் சுகப்படு...
அவனவன் செய்யும் தொழிலைக் - குறித்
தவனவன் சாதியென மனுவகுத்தான் - இன்று
கவிழ்ந்தது மனுவின் எண்ணம் - இந்தக்
காலத்தினில் நடைபெறும் கோலமும்கண்டோம் - மிகக்
குவிந்திடும் நால்வரு ணமும் - கீழ்க்
குப்புறக் கவிழ்ந்ததென்று செப்பிடத்தகும் - இன்று
எவன்தொழில் எவன் செய்யினும் - அதை
ஏனென்பவன் இங்கொருவ னேனுமில்லையே - நாம்
என்றுதான் சுகப்படு...
பஞ்சமர்கள் எனப் படுவோர் - மட்டும்
பாங்கடைவ தால்நமக்குத் தீங்குவருமோ? - இனித்
தஞ்சமர்த்தை வெளிப் படுத்தித் - தம்
தலைநிமிர்ந் தாலது குற்றமென்பதோ? - இது
வஞ்சத்தினும் வஞ்ச மல்லவோ - பொது
வாழ்வினுக்கும் இதுமிகத் தாழ்வேயல்லவோ - நம்
நெஞ்சத்தினுள் ஈர மில்லையோ? - அன்றி
நேர்மையுடன் வாழுமதிக் கூர்மையில்லையோ? - நாம்
என்றுதான் சுகப்படு...
கோரும் யுஇமயாசலரு முதல் - தெற்கில்
கொட்டுபுனல் நற்யுகுமரிரு மட்டும்இருப்போர் - இவர்
யாருமொரு சாதி யெனவும் - இதில்
எள்ளளவும் பேதமெனல் இல்லையெனவும் - நம்
பாரதநற் றேவிதனக்கே - நாம்
படைமக்கள் எனவும்நம் மிடைஇக்கணம் - அந்த
ஓருணர்ச்சி தோன்றிய உடன் - அந்த
ஒற்றுமைஅன்றோ நமக்கு வெற்றியளிக்கும்! - நாம்
என்றுதான் சுகப்படு...

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166b.htm#7._சமத்துவப்_பாட்டு

காலைப் பத்து
வெண்டளையான் வந்த தரவிணைக்
கொச்சகக் கலிப்பா
கிழக்கு மலரணையில் தூங்கிக் கிடந்து
விழித்தான்; எழுந்தான். விரிகதிரோன் வாழி!
அழைத்தார்கள் அன்பால் திராவிடர்கள் உம்மை!
மொழிப்போர் விடுதலைப்போர் மூண்டனவே இங்கே!
விழிப்பெய்த மாட்டீரோ? தூங்குவிரோ மேலும்?
அழிப்பார் தமிழை! அடிமையிற் சேர்ப்பார்!
ஒழிப்பீர் பகையை! நொடியில் மறவர்
வழித்தோன்றும் மங்கையீர், காளையரே வாரீரோ! 1
எழுந்தன புட்கள்; சிறகடித்துப் பண்ணே
முழங்கின! ஏருழவர் முன்செல் எருதை
அழிஞ்சிக்கோல் காட்டி அதட்டலும் கேட்டீர்.
எழுந்திருப்பீர் வீட்டினரே, இன்னும் துயிலோ?
பழந்தமிழர் செல்வம் கலையொழுக்கம் பண்பே
ஒழிந்து படவடக்கர் ஒட்டாரம் செய்தார்
அழிந்தோமா வென்றோமா என்ப துணர்த்த
எழில்மடவீர், காளையரே இன்னேநீர் வாரீரோ! 2
காக்கைக் கழுத்துப்போல் வல்லிருளும் கட்டவிழும்!
தாக்கும் மணிமுரசு தன்முழக்கம் கேட்டீரோ?
தூக்கமோ இன்னும்? திராவிடர்கள் சூழ்ந்துநின்றார்.
தூக்கறியார் வாளொன்றும்! போராடும் துப்பில்லார்.
சாய்க்கின்றார் இன்பத் தமிழைக் குறட்கருத்தை!
போக்கேதும் இல்லா வடக்கர் கொடுஞ்செயலும்
வாய்க்கஅவர் வால்பிடிக்கும் இங்குள்ளார் கீழ்ச்செயலும்
போக்க மடவீரே, காளையரே வாரீரோ! 3
தங்கம் உருக்கிப் பெருவான் தடவுகின்றான்
செங்கதிர்ச் செல்வன்! திராவிடர்கள் பல்லோர்கள்
தங்கள் விடுதலைக்கோர் ஆதரவு தாங்கேட்டே
இங்குப் புடைசூழ்ந்தார் இன்னும் துயில்வீரோ?
பொங்கும் வடநாட்டுப் பொய்யும் புனைசுருட்டும்
எங்கும் தலைவிரித்தே இன்னல் விளைத்தனவே
வங்கத்துக் கிப்பால் குடியரசு வாய்ப்படைய
மங்கையீர், காளையீர் வாரீரோ வாரீரோ! 4
தேர்கலி கொள்ள அமர்ந்து செழும்பரிதி
ஆர்கலிமேற் காட்சி அளிக்கின்றான் கீழ்த்திசையில்
ஊர்மலர்ந்தும் உங்கள் விழிமலர ஒண்ணாதோ?
சீர்மலிந்த அன்பின் திராவிடர்கள் பல்லோர்கள்
நேர்மலிந்தார்! பெற்ற நெருக்கடிக்குத் தீர்ப்பளிப்பார்
86
பார்கலந்த கீர்த்திப் பழய திராவிடத்தை
வேர்கலங்கச் செய்ய வடக்கர் விரைகின்றார்
கார்குழலீர், காளையரே வாரீரோ வாரீரோ! 5
செஞ்சூட்டுச் சேவல்கள் கூவின கேட்டீரோ
மிஞ்சும் இருள்மீது பொன்னொளி வீழ்ந்ததுவே!
பஞ்சணை விட்டெழுந்து பாரீர் திராவிடத்தை
நஞ்சுநிகர் இந்தியினை நாட்டித் தமிழமுதை
வெஞ்சேற்றுப் பாழ்ங்கிணற்றில் வீழ்த்த நினைத்தாரே!
நெஞ்சிளைப் போமோ? நெடுந்தோள் தளர்வோமோ?
அஞ்சுவமோ என்று வடக்கர்க் கறிவிக்கக்
கொஞ்சு குயில்களே, காளையரே வாரீரோ! 6
கோவாழும் இல்லொன்றே கோவிலாம் மற்றவை
நாவாலும் மேல்என்னோம்! நல்லறமே நாடுவோம்
தேவர்யாம் என்பவரைத் தெவ்வ ரெனஎதிர்ப்போம்
சாவு தவிர்ந்த மறுமையினை ஒப்புகிலோம்
வாழ்விலறம் தந்து மறுமைப் பயன்வாங்கோம்
மேவும்இக் கொள்கைத் திராவிடத்தை அவ்வடக்கர்
தாவித் தலைகவிழ்க்க வந்தார் தமைஎதிர்க்க
பாவையரே, காளையரே பல்லோரும் வாரீரோ! 7
மன்னிய கீழ்க்கடல்மேல் பொன்னங் கதிர்ச்செல்வன்
துன்னினான் இன்னும்நீர் தூங்கல் இனிதாமோ?
முன்னால் தமிழ்காத்த மூவேந்தர் தம்உலகில்
"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது" என்னும் நன்னாட்டில்
சின்ன வடக்கரும் வால்பிடிக்கும் தீயர்களும்,
இன்னலே சூழ்கின்றார் இன்பத் திராவிடத்துக்
கன்னல்மொழி மங்கையீர், காளையரே வாரீரோ! 8
நீல உடையூடு பொன்னிழை நேர்ந்ததென
ஞால இருளின் நடுவில் கதிர்பரப்பிக்
கோலஞ்செய் கின்றான் இளம்பரிதி! கொண்டதுயில்
ஏலுமோ? உம்மை எதிர்பார்த் திருக்கின்றார்
தோலிருக்க உள்ளே சுளையைப் பறிப்பவரைப்
போல வடக்கர்தம் பொய்ந்நூல் தனைப்புகுத்தி
மேலும்நமை மாய்க்க விரைகின்றார் வீழ்த்தோமோ?
வாலிழையீர், காளையரே வாரீரோ வாரீரோ! 9
அருவி, மலை,மரங்கள் அத்தனையும் பொன்னின்
மெருகு படுத்தி விரிகதிரோன் வந்தான்.
விரியாவோ உங்கள் விழித்தா மரைகள்?
அருகு திராவிடர்கள் பல்லோர்கள் ஆர்ந்தார்
ஒருமகளை ஐவர் உவக்கும் வடக்கர்
திருநாட்டைத் தம்மடிக்கீழ்ச் சேர்க்க நினைத்தார்.
உருவிய வாளின், முரசின்ஒலி கேட்பீர்
வரைத்தோளீர், காளையரே வாரீரோ வாரீரோ! 10
87
விடுதலைப் பாட்டு
மீள்வது நோக்கம் - இந்த
மேன்மைத் திராவிடர் மீளுவ தின்றேல்
மாள்வது நோக்கம் - இதை
வஞ்ச வடக்கர்க்கெம் வாள்முனை கூறும்!
ஆள்வது நோக்கம் - எங்கள்
அன்னை நிலத்தினில் இன்னொரு வன்கால்
நீள்வது காணோம் - இதை
நீண்டஎம் செந்தூக்கு வாள்முனை கூறும்! 1
மீள்வது நோக்கம்...
கனவொன்று கண்டார் - தங்கள்
கையிருப் பிவ்விடம் செல்லுவ துண்டோ?
இனநலம் காண்பார் - எனில்
இங்கென்ன வேலை அடக்குக வாலை!
தினவுண்டு தோளில் - வரத்
திறல்மிக உண்டெனில் வந்து பார்க்கட்டும்!
மனநோய் அடைந்தார் - அந்த
வடக்கர்க்கு நல்விடை வாள்முனை கூறும்! 2
கனவொன்று கண்டார்...
திராவிடர் நாங்கள் - இத்தி
ராவிட நாடெங்கள் செல்வப் பெருக்கம்!
ஒரே இனத்தார்கள் - எமக்
கொன்றே கலைபண் பொழுக்கமும் ஒன்றே!
சரேலென ஓர்சொல் - இங்குத்
தாவுதல் கேட்டெம் ஆவி துடித்தோம்.
வராதவர் வந்தார் - இங்கு
வந்தவர் எம்மிடம் வாளுண்டு காண்பார்! 3
திராவிடர் நாங்கள்...
இராப் பத்து
வெண்டளையான் வந்த இயற்றரவிணைக்
கொச்சகக் கலிப்பா
திருவிளக் கேற்றி இரவு சிறக்க
வருவிருந் தோடு மகிழ்ந்துண வுண்டீர்!
அருகு மடவார் அடைகாய் தரவும்
பருகுபால் காத்திருக்கப் பஞ்சணை மேவித்
தெருவினில் யாம்பாடும் செந்தமிழும் கேட்பீர்!
பெருவாழ்வு வாழ்ந்த திராவிடநா டிந்நாள்
திருகு வடநாட்டார் கையினிற் சிக்கி
உருவழிந்து போகாமே காப்பாற்றல் உங்கடனே. 1
ஆற்றும் பணிகள் பகலெல்லாம் ஆற்றியபின்
சேற்றில் முளைத்திட்ட செந்தா மரைபோலும்
88
தோற்றும் இரவும் சுடர்விளக்கும்! இல்லத்தில்
காற்று நுகர்ந்திடுவீர்; காது கொடுத்தேயாம்
சாற்றுதல் கேளீர்! தமிழை வடநாட்டார்
மாற்றித் தமிழர் கலையொழுக்கம் பண்பெல்லாம்
மாற்றவே இந்திதனை வைத்தார்கட் டாயமென
வேற்றுவரின் எண்ணத்தை வேரறுத்தல் உங்கடனே. 2
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனுமோர்
சிறப்புடைய நம்கொள்கை நானிலத்தின் செல்வம்!
தறுக்கன் வடநாட்டான் தன்னலத்தான் இந்நாள்
நிறப்பாகு பாட்டை நிலைநிறுத்த எண்ணி
வெறுப்புடைய இந்தி விதைக்கின்றான் இங்கே
அறப்போர் தொடுத்திடுவோம் வெல்வோம்நாம் அன்றி
இறப்போம் உறுதி இதுவாகும் என்பீர்
உறக்கம் தவிர்த்துணர்வே உற்றெழுதல் உங்கடனே. 3
தீயில் நிலநீரில் காற்றில் செழுவானில்
ஆயில் குறியில் அறியாப் பெரும்பொருட்குக்
கோயில் தனைஒப்புக் கொள்ளோம்! சுமந்தீன்ற
தாயில் பிறிதோர் பொருட்குத் தலைவணங்கோம்!
வாயில் பொறாமைச்சொல் வையோம்! அவாவெகுளி
தீயிற் கொடுஞ்சொற்கள் தீர்த்தோம்! அறப்பயனே
வாயிற் பருகுவோம். நம்கொள்கைப் பற்றறுக்க
நோயில் நுழைஇந்தி வேரறுத்தல் உங்கடனே. 4
ஒழுக்கம் கெடுக்கும்! உணர்வை ஒடுக்கும்!
வழக்கும் பெரும்போரும் மாநிலத்தில் சேர்க்கும்!
இழுக்கும் தருமதங்கள் யாவும் விளக்கிக்
கொழுக்கும் குருமாரின் கொட்டம் அறுத்துத்
தழைக்கத் தழைக்க நறுங்கொள்கை நெஞ்சிற்
பழுக்கும் படிவாழ் திராவிடர் பண்பை
அழிக்க நினைத்திங்கே ஆளவந்தார் இந்தி
புழுக்கும் படிசெய்தார் போக்கிடுதல் உங்கடனே. 5
எட்டுத் திசையும் பதினா றிடைப்பாங்கும்
முட்டித் ததும்பி முளைத்தோங்கு பேரொளிக்கே
எட்டுக் குடப்பசுப்பால் இட்டாட்டு வீரென்னும்
பட்டாடை சாத்தென்னும் பல்பணி பூட்டென்னும்
குட்டி வணங்குமுன்பு பார்ப்பனனைக் கும்பிடென்னும்
மட்டக் கருத்துக்கள் மாளா மடமைஎலாம்
கொட்டி அளக்குமோர் இந்தியினை நம்தலையில்
கட்டுவார் தம்மைஒரு கைபார்த்தல் உங்கடனே. 6
தந்தைமார் பற்பலராய்த் தாயொருத்தி யாய்,மாட்டு
மந்தையுடன் இந்நாட்டில் வந்தவர்கள் நாமல்லோம்!
முந்தைக்கு முந்தை அதன்முந்தை நாளாக
இந்தப் பெருநாடாம் யாழின் இசையாவோம்!
வந்தார்க்கோ நாமடிமை? வந்தார் பொருள்விற்கும்
சந்தையா நம்நாடு? தாயாம் தமிழிருக்க
89
இந்தியோ கட்டாயம்? என்ன பெருங்கூத்தோ?
கொந்துமொரு கொத்தடிமை நீக்கிடுதல் உங்கடனே. 7
புலையொழுக்கம் கொண்டவர்கள் பொல்லா வடக்கர்
தலையெடுத்தார் இன்பத் திராவிடதின் தக்க
கலையொழுக்கம் பண்பனைத்தும் கட்டோ டொழித்து
நிலைபுரட்டி நம்நாட்டை நீளடிமை யாக்க
வலைகட்டி நம்மில் வகையறியா மக்கள்
பலரைப் பிடித்துரா மாயணத்தை மற்றும்
மலிபொய் மனுநூலை வாழ்வித்தார் யாவும்
தொலையப் பெரும்போர் தொடுப்பதும் உங்கடனே. 8
தென்றற் குளிரும், செழுங்கா மலர்மணமும்,
நின்று தலைதாழ்த்தும் வாழையும், நீள்கரும்பும்,
என்றும் எவர்க்குமே போதும்எனும் செந்நெல்
நன்று விளையும் வளமார்ந்த நன்செயும்,
அன்றன் றணுகப் புதிய புதியசுவை
குன்றாத செந்தமிழும், குன்றும் மணியாறும்,
தொன்றுதொட்ட சீரும் உடைய திராவிடத்தை
இன்று விடுதலைச்சீர் எய்துவித்தல் உங்கடனே. 9
"வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அ·தொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்" என்ற வள்ளுவர்சொல்
தாழ்வொன் றடையாது தஞ்செயலை நன்றாற்றும்
ஆழ்கடல் முப்பாங் கமைந்த திராவிடத்தில்
வாழ்கின்றார் ஆன வடுத்தீர் திராவிடர்கள்
வாழ்க! நனிவாழ்க! மாற்றார்கள் வீழ்ந்திடுக!
யாழ்கொள் நரம்பும் இசையும்போல் எந்நாளும்
வாழ்க திராவிடமும் வான்புகழும் சேர்ந்தினிதே. 10
திராவிடர் ஒழுக்கம்
சிந்து கண்ணிகள்
தட்டுப் படாதபெரும் - பொருட்கொரு
சாதியும் உண்டோடா? - படுவாய்
சாதியும் உண்டோடா?
மட்டற்ற செம்பொருட்கே - முரண்படும்
மதங்கள் உண்டோடா? 1
எட்டுத் திசைமுழுதும் - விசும்பு,மண்
எங்கும் நிறைபொருட்கே - படுவாய்
எங்கும் நிறைபொருட்கே
கொட்டு முழக்குண்டோ? - அமர்ந்திடக்
கோயில்கள் உண்டோடா? 2
பிட்டுச் சுமந்ததுண்டோ? - நிறைபொருள்
பெண்டாட்டி கேட்டதுண்டோ? - படுவாய்
பெண்டாட்டி கேட்டதுண்டோ?
கட்டைக் குதிரைகட்டும் - பெருந்தேர்
காட்டெனக் கேட்டதுண்டோ? 3
90
பட்டுடை கேட்டதுண்டோ? - பெரும்பொருள்
பண்ணியம் உண்பதுண்டோ? - படுவாய்
பண்ணியம் உண்பதுண்டோ?
அட்டைப் படத்தினிலும் - திரையிலும்
அப்பொருள் காண்பதுண்டோ? 4
பிரமன் என்பதிலும் - மொட்டைத்தலைப்
பிச்சையன் என்பதிலும் - படுவாய்
பிச்சையன் என்பதிலும்
முருகன் என்பதிலும் - திருமால்
முக்கணன் என்பதிலும் 5
வரும் பெருச்சாளி - அதன்மிசை
வருவன் என்பதிலும் - படுவாய்
வருவன் என்பதிலும்
சரிந்த தொந்தியுள்ளார் - பார்ப்பனர்க்குத்
தரகன் என்பதிலும் 6
பெரும் பொருள்உளதோ? - தொழுவதில்
பேறுகள் பெற்றதுண்டோ? - படுவாய்
பேறுகள் பெற்றதுண்டோ?
கரும் பிருக்குதடா - உன்னிடத்தில்
காணும் கருத்திலையோ! 7
இரும்பு நெஞ்சத்திலே - பயன்ஒன்றும்
இல்லை உணர்ந்திடடா - படுவாய்
இல்லை உணர்ந்திடடா!
திரும்பும் பக்கமெலாம் - பெருமக்கள்
தேவை யுணர்ந்திடடா! 8
தீய பொறாமையையும் - உடைமையிற்
செல்லும் அவாவினையும் - படுவாய்
செல்லும் அவாவினையும்
காயும் சினத்தினையும் - பிறர்உளம்
கன்ற உரைப்பதையும் 9
ஆயின் அகற்றிடுவாய் - உளத்தினில்
அறம் பிறக்குமடா! - படுவாய்
அறம் பிறக்குமடா!
தூய அறவுளத்தால் - செயலினில்
தொண்டு பிறக்குமடா! 10
ஏயும்நற் றொண்டாலே - பெரியதோர்
இன்பம் பிறக்குமடா! - படுவாய்
இன்பம் பிறக்குமடா!
தீயும் குளிருமடா - உனையண்டும்
தீயும் பறக்குமடா! 11
வாயில் திறக்குமடா - புதியதோர்
வழி பிறக்குமடா - படுவாய்
வழி பிறக்குமடா!
ஓயுதல் தீருமடா - புதியதோர்
ஒளி பிறக்குமடா! 12
91
தாயொடு மக்களடா - அனைவரும்
சரிநிகர் உடைமை - படுவாய்
சரிநிகர் உடைமை
தேயும் நிலைவிடுப்பாய் - இவையே
திராவிடர் ஒழுக்கம். 13
அன்னை அறிக்கை
(திராவிடம்)
என்னருமை மக்களே இன்பத் திராவிடரே
இன்னல் வடக்கர்களை எள்ளளவும் நாடாதீர்!
உங்கள் கலைஒழுக்கம் மிக்க உயர்ந்தனவாம்
பொங்கிவரும் ஆரியத்தின் பொய்க்கதைகள் ஒப்பாதீர்!
ஏமாற்றி மற்றவரை, ஏட்டால் அதைமறைத்துத்
தாமட்டும் வாழச் சதைநாணா ஆரியத்தை
நம்புவார் நம்பட்டும் நாளைக் குணர்வார்கள்
அம்பலத்தில் வந்ததின்றே ஆரியரின் சூழ்ச்சியெலாம்.
பிச்சை எடுப்பவர்கள் பேரதிகா ரம்பெற்றால்
அச்சத்தால் நாட்டில் அடக்குமுறை செய்யாரோ?
ஆட்சி யறியாத ஆரியர்கள் ஆளவந்தால்
பாட்டாளி மக்களெல்லாம் பாம்பென்றே அஞ்சாரோ?
மிக்க மதவெறியர் மேல்நிலையை எய்திவிட்டால்
தக்க முŠலீமைத் தாக்கா திருப்பாரோ?
உங்கள் கடமை உணர்வீர்கள்; ஒன்றுபட்டால்
இங்கே எவராலும் இன்னல் வருவதில்லை!
ஏசு மதத்தாரும் முŠலீம்கள் எல்லாரும்
பேசில் திராவிடர்;என் பிள்ளைகளே என்றுணர்க!
சாதிமதம் பேசித் தனித்தனியே நீரிருந்தால்
தோதுதெரிந் தாரியர்கள் உம்மைத் தொலைத்திடுவார்!
ஆரியரின் இந்தி அவிநாசி ஏற்பாடு
போரிட்டுப் போக்கப் புறப்படுங்கள் ஒன்றுபட்டே!
ஆண்டேன் உலகுக்கே ஆட்சிமுறை நான்தந்தேன்
பூண்ட விலங்கைப் பொடியாக்க மாட்டீரோ?
மன்னும் குடியரசின் வான்கொடியை என்கையில்
இன்னே கொடுக்க எழுச்சி யடையீரோ!

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166b.htm#6._திராவிடர்_திருப்பாடல்

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE