Language Selection

உணரச் செய்தான் உன்னை - அவன்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும்
உணரச் செய்தான்...

தணலைத் தொழுவோன் உயர்வென் கின்றான் - உனைத்
தணலில் தள்ள வழிபார்க் கின்றான்.
உணரச் செய்தான்...

முணுமுணு வென்றே மறைவிற் சென்றே
முட்டாள் முட்டாள் திராவிடன் என்றே
பணிமனை ஆட்சி பட்டம் யாவும்
பார்ப்பா னுக்கே என்றுபு கன்றே.
உணரச் செய்தான்...

நானிலம் ஆண்டான் திராவிடன் அந்நாள்
நான்மேல் என்றான் பார்ப்பான் இந்நாள்
ஏனவன் காலில் வீழ்தல் வேண்டும்?
எண்ணில் கோடி மக்கட் குறவே.
உணரச் செய்தான்...

அடியை நத்திப் பிழைத்த பார்ப்பான்
ஆளப் பிறந்த தாய்ச்சொல் கின்றான்
துடியாய்த் துடித்தான் உன்றன் ஆட்சி
தூளாய்ச் செய்துனை ஆளாக் கிடவே.
உணரச் செய்தான்...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt234