எழுத்தாளர் சுந்தரராமசாமி மறைந்து விட்டார். தன் மரணத்தைப் பற்றி அவர் எழுதிய கவிதை ""என் நினைவுச் சின்னம்''. அவருக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக பலரும் அந்தக் கவிதையை வெளியிட்டிருக்கும் இச்சமயத்தில் அதன் மறைபொருளை, குமுறலை, ஏக்கத்தை, அக்கவிஞனின் உண்மை யான உணர்ச்சியை வெளியிடுகிறோம்.
புதிய கலாச்சாரம்
கோடிகளில் சூதாடும் முதலாளிகளின் தீபாவளி!
தீபாவளியின் கவலைகளும் மகிழ்ச்சியும் பலவிதம். தமிழகத்தில் விடாது பெய்த அடை மழையால் சிறு வியாபாரிகளுக்கும் பாதையோர வியாபாரிகளுக்கும் இந்த ஆண்டு தீபாவளி இல்லை! ஆர்.எம்.கே.வி., போத்தீசு நிறுவனங்களின் கவலை, யார் அதிக விலையில் புதிய பட்டுப் புடவைகளை வெளியிடுகிறார்கள் என்பது! இது போக, ராணி, தேவி குடும்ப வார இதழ்களில் தீபாவளி கொண்டாட இயலாத ஏழைக் குழந்தைகளுக்கு பணக்காரக் குழந்தைகள் உதவிய சிறு கதைகளும் வெளிவந்திருக்கும். இது நாம் அறிந்த தீபாவளி. நாம் அறியாத தீபாவளி ஒன்றும் உண்டு.
தீபாவளி, ரம்ஜான் : உங்கள் கைராசி ஸ்தாபனம் "மார்க்சிஸ்டு"
திட்டத்திட்ட திண்டுக்கல், வைய வைய வைரக்கல்னு இப்படி இருக்கானே என்று மக்கள் சிலரைப் பார்த்து மலைப்பதுண்டு. அப்படி நம்மை மலைக்க வைக்கிறது மார்க்சிஸ்டுகளின் (இகஆ) தீக்கதிர் நாளேடு. தீபாவளி சிறப்பு மலர், ரம்ஜான் சிறப்பு மலர் என இரண்டு மலரை வெளியிட்டு தனது மார்க்சிய திருத்தல்வழி பாரம்பரியத்திற்குச் சிறப்பு சேர்த்துள்ளது. வருடா வருடம் சங்கராச்சாரியே மறந்து போனாலும், தீக்கதிர் பீடாதிபதிகள் மறக்காமல் பட்டாசுடன் புதுப்புது கதைகளையும்
தண்ணீர் தனியார்மயம் வெள்ளம் மக்கள் மயம்
மழை. எங்கும் மழை. மழை தரும் கவித்துவ உணர்வை சோகம் கவ்விக் கொண்ட பேய் மழை. தமிழகத்தின் கொடை என்றழைக்கப்படும் வடகிழக்குப் பருவமழை ஏறக்குறைய பாதி தமிழகத்தை வெள்ளக்காடாக்கி விட்டது. மழை தந்த இந்தப் பெருவெள்ளத்தின் சோதனையோடு தண்ணீர் தனியார்மயம் குறித்த பிரச்சினையை இணைத்துப் பரிசீலிப்பது அவசியமாக இருக்கிறது. முன்பு குடிநீருக்காகச் சாலை மறியல் செய்த மக்கள் தற்போது வெள்ள நிவாரணத்திற்காக அன்றாடம் மறியல் செய்த வண்ணம் போராடுகின்றனர்.
கற்பு, கருத்துச் சுதந்திரம்: மாயையும் உண்மையும்
வியட்நாம், ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரில் அமெரிக்கச் சதிகள்
வெள்ளப் பகுதிகளில் நிவாரணப் பணிகள் போராட்டங்கள்!
மழையில் சில துளிகள்..
வெள்ளம்: தீராத துயரம்
ஒரு அரை நூற்றாண்டுகாலக் "குடியரசு ஆட்சி' மிகப் பெரும் தோல்வியை அவமானத்தை அடைந்து விட்டது, கடந்த நவம்பர் மாதம் தமிழகத்தைத் தாக்கிய பெருமழை பெருவெள்ளம். வெற்றி கொள்ளும் படை பகைவெறி அடங்காத ஆவேசத்துடன் ஆக்கிரமிப்பு நாட்டில் அனைத்தும் தழுவிய பேரழிவு விளைவிப்பது போலச் செய்துவிட்டது. பத்து மாதங்களுக்கு முன்பு தமிழகக் கடற்கரையைத் தாக்கிய ஆழிப்பேரலை (சுனாமி) ஆயிரக்கணக்கான உயிர்களையும், நூற்றுக்கணக்கான கடலோரக் கிராமங்களையும் காவு கொண்ட துயரத்தை நினைவுபடுத்துகிறது.
உலகைக் குலுக்கிய ரசியப் புரட்சி
1917 நவம்பர். பிரம்மாண்டமான ரசியா கரைந்து உருமாறிக் கொண்டிருந்தது. 1917 பிப்ரவரி முதலாளித்துவ புரட்சி பழைய ஆட்சியின் செல்லரித்துப் போன அமைப்பை நீடிக்க வைத்ததற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாமல் முடிவுற்றது. ஆனால் இப்போது போல்ஷ்விக்கு புரட்சியாளர்கள் இந்த அமைப்பைச் சிதறச் செய்துவிட்டனர்.
கடல் தனியார்மயம்: ஏகாதிபத்தியங்களின் கவந்தப் பசி
தனது சிறு படகில் கொச்சின் கடற்கரைக்குத் திரும்பும் மீனவர் பெர்னாண்டஸ் கண்களில் சோகம் தேங்கியிருக்க அனேகமாகக் காலியாக இருக்கும் தன் மீன் கூடையைக் காட்டுகிறார். பலமணி நேரம் போராடிய பிறகு அவருக்குக் கிடைத்திருக்கின்ற உழைப்பின் பரிசு அவ்வளவுதான்.