Language Selection

புதிய கலாச்சாரம்

காங்கிரசும், காந்தியும் ஏகாதிபத்தியத்திற்கு மட்டும் விசுவாசிகள் அல்லர், நிலப்பிரபுக்களுக்கும் சேவகர்களே. "மன்னர் வாழ்கவே'' என்ற பாட்டை நான் எத்தனையோ தடவை ராகம் போட்டு, வெகு அழகாகப் பாடியிருக்கிறேன்; என்னுடைய நண்பர்களில் பலரையும் பாடச் செய்திருக்கிறேன்'' எனப் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் புளகாங்கிதமடைந்து கூறிய காந்தி, தனது ஒத்துழையாமை இயக்கம் பிரிட்டிஷ் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதைக் குறிக்கோளாகக் கொண்டது அல்ல; அதேசமயம் நிலப்பிரபுத்துவ வர்க்கத்துக்கு எதிரானது அல்ல என்றும் கூறியுள்ளார். பர்தோலியில் கூடிய காங்கிரசு செயற்குழுவின் தீர்மானங்கள் இதுபற்றிய முக்கிய விவரங்களை கொண்டுள்ளன:

வரி கொடா இயக்கம் என்பது காந்தியின் வார்த்தைகளில் அரசுக்கு வரி கொடுக்காமல் இருப்பதாகும். ஆனால் விவசாயிகளோ தங்களைச் சுரண்டிக் கொழுக்கும் பண்ணையார்களுக்கும் வரி கொடுக்க மறுத்தனர். இதைக் கேட்டவுடன் காந்தி துடிதுடித்து "எல்லா வரிகளும் ஜனவரி 22க்குள் கட்டப்பட்டுவிட்டன என்ற செய்தியைக் கேட்டு மகிழ்ச்சி அடைவேன்'' என்று ஆந்திரப் பிரதேசக் காங்கிரசுக் கமிட்டித் தலைவருக்கு எழுதினார்.

1921ஆம் ஆண்டு வைசிராயாக வந்த ரீடிங்கைச் சந்தித்து காந்தி வாழ்த்துக் கூறியபோது, "காங்கிரசு இயக்கம் வன்முறையைக் கையாளாதவரை ஆங்கிலேய அரசாங்கம் காங்கிரசின் விவகாரங்களில் தலையிடாது'' என்று உறுதி மொழியளித்தான். காந்தியும் அவ்வாறே நடந்து கொள்வதாக உறுதியளித்தார். இப்படித்தான் காங்கிரசும் காந்தியும் ஒத்துழையாமை நாடகத்தை நடத்தினர். மக்களின் முதுகிலே குத்தும் பச்சைத் துரோகம் என்பதன்றி வேறென்னவென்று இதைக் கூறுவது?

ஏகாதிபத்தியமும் அதன் கைக்கூலி காங்கிரசும் எவ்வளவுதான் கபடத்தனமாகச் செயல்பட்ட போதும் மக்களின் உணர்வுகள் போராட்டங்களிலேயே கிளர்ந்தெழுந்தன. புரட்சிகரமான மக்கள் போராட்டங்கள் நாடு முழுதும் பேரலையாய் எழுந்தன. பம்பாய், சென்னை, அகமதாபாத் போன்ற நகரங்களில் தொழிலாளர் போராட்டங்களும், பஞ்சாப், உ.பி., பீகார் போன்ற மாநிலங்களில் படித்த அறிவுஜீவிகள் மற்றும் மாணவர்கள் அடங்கிய புரட்சிகரக் குழுக்களும் தோன்றின. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் "கேதார்' கட்சி என்ற வன்முறைப் பாதையில் நம்பிக்கைக் கொண்ட ஒரு புரட்சிகரக் கட்சியை அமைத்து விடுதலையை நோக்கமாகக் கொண்டனர். 1913ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ என்ற அமெரிக்க நகரில் அமைக்கப்பட்ட கேதார் கட்சி, "கேதார்' (புரட்சி) என்ற உருதுப் பத்திரிக்கையை அச்சடித்துப் புரட்சிக் கருத்துக்களைப் பரப்பியது. அப்பத்திரிக்கையின் இதழ் ஒன்று ஒருமுறை இவ்வாறு விளம்பரப்படுத்தியது:

1917இல் உலகையே குலுக்கிய மாபெரும் அக்டோபர் புரட்சியின் வீச்சு கீழ்த்திசை நாடுகளை வந்தடையும் வரை, காங்கிரசு முழுக்க முழுக்க ஏகாதிபத்தியங்களின் விசுவாச ஊழியனாகவே செயல்பட்டுள்ளது. முதல் உலகப் போரின் போது தான் ஒரு அடிமைச் சேவகன் என்பதைப் பிறந்த மேனியாக வெளிக்காட்டியது. காங்கிரசார் பிரிட்டிஷாரின் யுத்தக் கொள்கையை வெளிப்படையாகவே ஆதரித்தனர். "பேரரசின் விரைவான வெற்றிக்காக எல்லா வகையிலும் இந்திய மன்னர்களும் மக்களும் ஒத்துழைப்பார்கள்'' என ஜின்னா, லஜபதிராய் உட்பட அப்போது லண்டனிலிருந்த காங்கிரசுப் பிரதிநிதிக்குழு இந்தியாவில் இருக்கும் பிரிட்டிஷ் அரசுச் செயலருக்குக் கடிதம் எழுதியது.

மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை பிராந்திய, சாதி, மத அடிப்படையில் பிரித்து வைக்கப்பட்டிருக்கும் தன்னுடைய இராணுவ பலம் ஒன்றை மட்டுமே கொண்டு நசுக்குவது இயலாத ஒன்றாக மாறி வந்தது. வீழ்ந்து வரும் மக்களின் வாழ்நிலை, எதிர்ப்புணர்வின் பேரலைகளாய்ச் சீற்றம் கொண்டன. சீர்திருத்தங்களை வழங்கி எதிர்ப்புணர்வினை மழுங்கடிக்கும் உபாயம் கூட அதிக நாள் அரசுக்குக் கை கொடுக்கவில்லை.

"உலகில் நாகரிகமடைந்த நாடுகள் அளவுக்குப் பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சியை நாம் அடைவதற்கு பிரிட்டிஷாருடைய தொடர்பு நமக்கு நீண்ட காலத்துக்குத் தேவையாகும்.'' (1893ல் தாதாபாய் நவ்ரோஜி)

இந்தியாவைக் கிராம ராஜ்ஜியமாகவும், இராம ராஜ்ஜியமாகவும் மாற்றுவது தான் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் கனவாகவும், இலட்சியமாகவும் இருந்தது! இப்போது இந்த நாட்டை ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. இராம பக்தர்கள் ஆளுகிறார்கள். இவர்களும் முழுமையான இராம இராஜ்ஜியத்தை உருவாக்குவதற்குத்தான் பாடுபடுகிறார்கள். இராம இராஜ்ஜியத்தைப் படைப்பதற்கான சோதனைக் களமாக காந்தி பிறந்த குஜராத்தை இந்த இராம பக்தர்கள் மாற்றியிருக்கிறார்கள்.

1895ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதியன்று பிரெடெரிக் எங்கெல்ஸ் லண்டன் மாநகரில் காலமானார். (1883ஆம் ஆண்டில் மறைந்த) அவருடைய நண்பர் கார்ல் மார்க்சுக்கு அடுத்தபடி நாகரிக உலகெங்கும் நவீன கால பாட்டாளி வர்க்கத்தின் தலைசிறந்த அறிஞராகவும் ஆசானாகவும் விளங்கியவர் எங்கெல்ஸ் ஆவார். கார்ல் மார்க்சையும் பிரெடெரிக் எங்கெல்சையும் சமூகவிதி ஒன்று சேர்த்து வைத்த காலத்திலிருந்து அவ்விரு நண்பர்களும் தமது வாழ்வை இருவருக்கும் பொதுவான இலட்சியத்துக்குப் பணித்துக் கொண்டனர்.

வார்த்தைகளை மடக்கி நீட்டி, உணர்ச்சிகளை பசப்பிக் காட்டி வித்தகம் செய்வதா கவிதை? விளங்காத சமூகத்தின் புதிர்களுக்கு விடைகாணும் முயற்சியே கவிதை. மனிதகுலம் வெறுங்கையால் இயற்கையை எதிர்த்துப் போராடத் தொடங்கிய காலம் முதல் தாம் வாழ்வதற்கான புதியவகை சாதனங்களை மட்டுமல்ல, புதியவகை உணர்ச்சிகளையும் படைத்தே வந்திருக்கிறது. படைப்புரீதியான இவ்வகை உழைப்புப் போக்கின் மூலம் சமுதாயத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியதே அறிவியல், கலைக்கான ஆளுமைமிக்க வரலாற்றுப் பாத்திரமாகும்.

வாயும் வயிறும் வளர்த்து நிதம்
வலியப் புகழ் தேடித் திரியும் சிலர் முற்றத்திலோ
போயும் போயும் பொழிந்தோம், என
காயும் நிலவின் வான்பழி மட்டுமல்ல?
வெறும் வித்தகக் கவிஞன் என்ற வீண்பழியும்
வாரா வண்ணம்,
விளங்கட்டும் கவிமுற்றம்

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE