Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


பாசிச கொலைவெறி பிடித்த வெங்கல்ராவ், அஞ்சையா ஆட்சிகள் போர்க்குணமிக்க விவசாயிகளின் போராட்டத்தை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தன. நூற்றுக்கணக்கான இளம்புரட்சியாளர்களும் விவசாயிகளும் "போலீசுடன் மோதல்' என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆட்சிகள் மாறின. ஆனாலும் அடக்குமுறை ஓயவில்லை. பாசிச சன்னியாசி என்.டி.ஆர். ஆட்சியிலும் புரட்சியாளர்களும் போராடும் விவசாயிகளும் நரவேட்டையாடப்பட்டனர். இந்தக் கோழைகள் எவ்வளவுதான் அடக்குமுறைகளை ஏவிவிட்டாலும் புரட்சித் தீயை அவர்களால் ஒருபோதும் அணைக்க முடியவில்லை. அது நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டுதான் இருக்கிறது. ஆயிரமாயிரம் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி புரட்சிப் பாதையில் தன்னம்பிக்கையோடு நாம் தொடர்ந்து முன்னேறுவோம்!

 

இறுதி வெற்றி உழைக்கும் மக்களுக்கே!


மாபெரும் தெலுங்கானா இயக்கம் நீடூழி வாழ்க!


விவசாயிகளின் விவசாயப் புரட்சி ஓங்குக!