Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

290 க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்று, இலங்கையில் இஸ்லாமிய மதவெறியாட்டத்தை நடத்தியிருக்கின்றது இப் பயங்கரவாதம். இது தனிப்பட்ட மனிதனின் மதச் சுதந்திரத்திற்கு அப்பாற்பட்ட, மனித வெறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு, ஒருங்கிணைக்கப்பட்ட மதப் பயங்கரவாதமாகும். பெரும்பான்மை இஸ்லாம் மக்களின் மதவழிபாட்டுக்கு முரணானதும் கூட. இருந்த போதும் பயங்கரவாத வழிமுறை, இஸ்லாம் மார்க்கம் என்று கூறிக்கொள்ளும் ஒரு பிரச்சாரத்தின் பின்னணியில் வைத்து அணுகவேண்டியது அவசியமாக இருக்கின்றது.

இந்த தற்கொலை தாக்குதலானது இஸ்லாமிய பயங்கரவாதத்தின் பின்னணியில், இலங்கை மற்றும் அன்னிய நாட்டைச் சேர்ந்த மதவெறிக் கும்பலொன்றினால் திட்டமிட்டு நடத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த தாக்குதலானது இலங்கையில் பொதுவான பல்வேறு மதம் சார்ந்த மதவாதங்களில் இருந்தும், தனித்துவமானவை. சர்வதேசரீதியான இஸ்லாமிய பயங்கரவாத பின்னணியைக் கொண்ட, ஓருங்கிணைந்த ஒரு தாக்குதலாகும். உலகெங்கும் நடந்து வரும் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் ஒரு நீட்சியும் கூட.

இந்த இஸ்லாமிய பயங்கரவாத மதவெறி சக்திகள் இலங்கையில் காலூன்றியதென்பது, இலங்கையில் புரையோடி வரும் இஸ்லாமிய பழமைவாத கண்ணோட்டத்துடன் தொடர்புபட்டது.

இஸ்லாமிய அடிப்படைவாதமென்பது இலங்கையில், முஸ்லிம் - இஸ்லாமிய பின்னணியில் உருவான பல்வேறு கட்சிகளின் வருகைகளுடன் தொடர்புபட்டது. இன்று இலங்கையிலுள்ள முஸ்லிம் - இஸ்லாமிய பின்னணியைக் கொண்ட அரசியல் கட்சிகள் அனைத்துமே, இஸ்லாமிய மதவெறியை அடிப்படையாகக் கொண்டவையே. இலங்கையில் தேர்தல் கட்சிகள் இனவாத அடிப்படையைக் கொண்ட கட்சிகளாக இருக்கும் சூழலில், முஸ்லிம் சமூகம் விதிவிலக்காக இருக்கின்றது. அதாவது இனம் சார்ந்த கட்சியாக அல்லாமல் இஸ்லாம் சார்ந்த, மதவாதக் கட்சிகளாகவே இருக்கின்றது.

பகுத்தறிவுவாதிகள், பெரியாரிஸ்ட்டுகள், ஜனநாயகவாதிகள்.., தேர்தல் மூலம் மோடியைத் தோற்கடிக்குமாறு கோருகின்றனர். இந்த வழியைத் தவிர வேறு வழியில் மோடி பாசிசத்தை தோற்கடிக்க முடியாது என்பதே, இத்தகைய முதலாளித்துவ புத்திஐPவிகளின் பொதுக் கண்ணோட்டமாகும். இவாகள் கூறுவது போல் இந்த தேர்தல் மூலம் மோடி பாசிசத்தை தோற்கடிக்க முடியாது போனால், இவர்கள் என்ன சொல்வார்கள்? என்ன செய்வார்கள்? அடுத்த தேர்தல் வரை காத்து இருக்கக் கோருவார்களா!? இவர்கள் கூறுவது போல் வேறு மாற்று கிடையாதல்லவா!

இல்லை, நாங்கள் பாசிசத்தை எதிர்த்து மக்களின் அதிகாரத்துக்காக போராடுவோம் என்று கூறுவார்களெனின், அதைத்தான் இந்த தேர்தலில் மக்களுக்கு சொல்லி இருக்க வேண்டும். அது மட்டுமே பகுத்தறிவாகும். காவிமயமாகியுள்ள பார்ப்பனியத்துக்கு எதிரான உலகக் கண்ணோட்டம். பாசிசத்துக்கு எதிரான மக்களின் ஜனநாயகத்துக்கான குரலாகும். இதற்கு மாறாக முதலாளித்துவ புத்திஜீவிகளின் செயற்பாடுகள் தான், காவி காப்பரேட் பாசிச சிந்தனைமுறையாக, சமூகத்தில் ஊற்றெடுக்கின்றது.

மறுபக்கத்தில் சமூக மாற்றம் மூலம் மக்கள் அதிகாரம் என்பது மக்களின் சிந்தனையாக, நடைமுறையாக உருவாகும் வரை, தேர்தல் முறை இருந்து கொண்டே இருக்கும். மக்கள் வாக்களித்துக் கொண்டு இருப்பார்கள். தேர்தல் மூலம் எந்த சமூக மாற்றமும் நடக்கப்போவதில்லை, வெறும் முகமாற்றம் மட்டுமே சாத்தியம். இப்படி இருக்க தேர்தலை விட்டால் வேறு என்ன தீர்வு என்று கேட்பது பகுத்தறிவல்ல. அறிவுத்துறைக்குரிய நேர்மையுமல்ல. இதுதான் முதலாளித்துவ அறிவுத்துறைக்கேயுரிய வர்க்க நிலைப்பாடாகுமே ஒழிய ஒடுக்கப்பட்ட மக்களின் நிலைப்பாடல்ல. சினிமாவில் மக்களின் விருப்புக்கும், ரசனைக்கும் படம் எடுக்கின்றோம் என்று கூறி, பெண்ணை பாலியல் உடலாகக் காட்டுகின்ற அதே தர்க்கவாதம் தான்.

மக்களை அரசியல்ரீதியாக விழிப்பூட்டுவதுதான், தேர்தல் குறித்த பகுத்தறிவுவாதமாகும். ஒடுக்கப்பட்ட வர்க்கம் தன் வேட்பாளரை தேர்தலில் நிறுத்தி தன் வர்க்கப் போராட்டத்தின் கூறாக தேர்தலைப் பயன்படுத்தாத போது, தான் அல்;லாத ஒடுக்கும் வர்க்கத்திற்கு வாக்களிக்க கோருவதல்ல. பார்ப்பனியமாக இருக்கக்கூடிய ஆணாதிக்கம், மதவாதம், சாதியவாதம்.. போன்ற ஒடுக்குமுறைகளை தங்கள் கட்சிக் கொள்கையாகக் கொண்டுள்ள, ஒப்பீட்டளவில் ஒடுக்குமுறை குறைந்த ஒன்றை தெரிவு செய்யுமாறு கோருவதே, முதலாளித்துவம் கூறும் மாற்றாக இருக்கின்றது. இங்கு மாற்று என்பது போலியானது, மக்களை தவறாக வழிகாட்டி ஏமாற்றுவதுதான் முதலாளித்துவ மாற்று.

தேர்தல்முறை ஆட்சி வடிவமாக இருப்பதும், வாக்களிப்பது என்பது எதார்த்தமாக இருக்கின்றது. யாருக்கு வாக்களிப்பது என்பதை மக்கள் சொந்த அனுபவத்தில் இருந்து எடுக்கின்றனர். இல்லையென்றால் இனம், மதம், சாதி, பால், பணம்.. சார்ந்த தூண்டுதல்கள், மூலம் வாக்கைப் போடுகின்றனர். மறுபக்கத்தில் கட்சிகள் அறிவிக்கும் சலுகைகள், சீர்திருத்தங்கள் … மூலம், தங்கள் வாழ்க்கை மாறும் என்று நம்பி வாக்களிக்கின்றனர். இங்கு முதலாளித்துவ அறிவுத்துறை முன்வைக்கும் பாசிச எதிர்ப்புக் கொள்கை அடிப்படையில், மக்கள் வாக்கு போடுவதில்லை.

1980 களில் புலிகள் தொடங்கி இன்றைய கூட்டமைப்பு வரை, தென்னிந்திய திருச்சபையின் அனுசரணை பெற்ற அரசியல் தலையீடு, தமிழ் அரசியல் திசைவழியைத் தீர்மானித்து வந்திருக்கின்;றது. இயக்கங்களின் ஜனநாயக மறுப்புக்கு எதிரான ஜனநாயக அரசியல் திசைவழியை தீர்மானிப்பதிலும் கூட, தீர்க்கமாக தலையிட்டு வந்திருக்கின்றது. இவை அனைத்தும் மேற்கு சார்பு அரசியலை முன்னிறுத்தியதுடன், மேற்கு தலையீடுகள் மூலம் அரசியல் தீர்வு என்னும் நம்பிக்கையை வழிகாட்டியது, வழிகாட்டுகின்றது,

இந்த வகையில் வலது முதல் இடது வரையான, தமிழ் மொழி அரசியலில், தென்னிந்திய திருச்சபையின் அனுசரணை பெற்ற தலையீடுகளும் - வழி நடத்தலும் சமூகத்தை பின்நோக்கி நகர்த்தி வந்திருக்கின்றது. இன்று இலங்கை தமிழ் இடதுசாரியத்துக்குள் புகுந்துள்ளனர்.

தமிழ் மொழியிலான இலங்கை இடதுசாரியமானது, வர்க்கப் புரட்சியை முன்வைக்கும் வர்க்கக் கட்சியாக இல்லாத அதன் வர்க்க அரசியல் வறுமையை பயன்படுத்தி, அதற்குள் ஊடுருவி வருகின்றது. அதாவது புரட்சிகரக் கட்சிக் கொள்கை, புரட்சிகரமான வர்க்க நடைமுறை, புரட்சிகரமான அமைப்பு வடிவத்தைக் கொண்டு இருக்காத தமிழ் சூழலை, தென்னிந்திய திருச்சபையின் பின்னணி கொண்ட தனிநபர்களின் ஆதிக்கத்துக்குள்ளாகி வருகின்றது. கட்சி முதல் கட்சி அல்லாத உதிரிகள் வரை, அதன் செல்வாக்கில் சிக்கி வருகின்றனர். இடதுசாரியம் பேசுவதன் மூலமும், தன்னார்வ நிறுவனங்கள் மூலமான ஆய்வுகள் முதல் தங்களிடத்தில் உள்ள நடைமுறை வளங்களைக் கொண்டும், பொருளாதார பலம் மற்றும் பௌதிக வளங்களை கொண்டும், இடதுசாரியத்தை தன்வசப்படுத்தி வருகின்றது.

இந்த தென்னிந்திய திருச்சபையின் பின்னணியென்பது, அமெரிக்காவின் நலனைப் பேணிப் பாதுகாக்கும் அரசியல் பின்னணியையும், அதற்கான பலத்தையும் கொண்டது.

தென்னிந்திய திருச்சபையானது 1947 ஆண்டில் தொடங்கப்பட்டது. தென்னிந்தியாவில் இயங்கிக் கொண்டிருந்த லண்டன் மிசனெரி சங்கம், மதுரை அமெரிக்கன் மிசன், மற்றும் யாழ்ப்பாணம் அமெரிக்கன் மிசன் சபை… ஒன்றுசேர்ந்து உருவாக்கியது. அதாவது தென்னிந்திய ஆங்கிலிக்கம், மெதடிஸ்ட், பிரெஸ்பிட்டேரியன் மற்றும் புரட்டஸ்தாந்து ஆகிய திருச்சபைக் குழுக்களை இணைத்து உருவாக்கப்பட்டது. இது இலங்கையில் இரண்டாவது மிகப்பெரிய கிறிஸ்தவ குழுவாகும். பாரிய பணபலப் பின்னணியைக் கொண்டுள்ளதுடன், இலங்கையில் 187 பாடசாலைகளை தன் கட்டுப்பாட்டில் கொண்டிருக்கின்றது.

அண்மையில் ஜீ.சி.ஈ (சாதாரண) பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, வடகிழக்கு கல்வித்தரம் குறித்து பலர் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக பிற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது, மிகக் குறைந்த கல்விப் பெறுபேறுகளை கொண்ட மாவட்டங்களாக, வடகிழக்கு இருப்பதே இதற்கு காரணம். ஓப்பீட்டு அடிப்படையில் காரணங்களை முன்வைப்பதும், தீர்வுகள் முன்வைக்கப்பட்டதையும் காணமுடிகின்றது. ஒட்டுமொத்த கல்வி மற்றும் சமூகம் குறித்த பொது உள்ளடக்கத்தை விட்டுவிட்டு, இவை வெளிப்புறத்தைப் பற்றி பேசுகின்றனவாக இருக்கின்றன.


இப்படி கல்வியின் வீழ்ச்சி குறித்து அடிப்படைக் கண்ணோட்டமே, தவறான புள்ளியில் இருந்து ஆரம்பிக்கின்றது.


1.கல்வியின் வீழ்ச்சிக்கு சமூகத்தின் பங்கு என்ன என்பதை ஆராய்வது பொதுவாக மறுதளிக்கப்படுகின்றது. மாறாக சமூகத்தைச் சுற்றி இயங்கும் உதிரிச் சம்பவங்களை காரணமாகக் காட்ட முனைகின்றனர்.


2.கல்வியை மாவட்டரீதியாக பகுத்தாய்வு செய்வதென்பது, சொந்த இனவாதக் கண்ணோட்டத்தில் இருந்துதான். இது கல்வி வீழ்ச்சி குறித்த புரிதலில், குறைபாட்டைக் கொண்டது. இதன் மூலம் கல்வி சுயநலம் சார்ந்தாக, பணம் சம்பாதிப்பதற்கானதாகிவிட்டதை மூடிமறைக்க முனைகின்றது.


3.மாவட்டரீதியான ஒப்பீடுகள் மூலம் கல்வித்தரத்தை அணுகுவது என்பது, கல்வி குறித்த பொது அடிப்படை நோக்கங்கள் சரியானதாக இருக்கின்றது, சம்பவங்களும், தனி மனிதர்களுமே காரணம் என்று நிறுவ முனைகின்றனர்.


4.ஒருசில துறையில் வெற்றி பெறும் கல்விமுறைமையும் - கற்றல் முறையும், விரல்விட்டு எண்ணக் கூடியவரை உருவாக்குவதை இலக்காகக் கொண்டதே கல்விமுறையாக இருக்கின்றது. இதை அடையும் போட்டிக் கல்வியும் - மனப்பாடமாக்கும் கல்விமுறையையும் அங்கீகரிக்கும் வண்ணமே, ஓப்பீட்டு ரீதியாக அணுகுமுறைகளும் - தீர்வுகளும் முன்வைக்கப்படுகின்றது.


இப்படி இங்கு கல்வி வீழ்ச்சி குறித்து ஆராயும் சிந்தனை முறையே தவறாக இருக்கும் போது, கல்வி பொது வீழ்ச்சியையும், அதன் காரணத்தையும் ஆராய முடியாது. வெறுமனே பிறரைக் குற்றம் சாட்டி, மாணவர்கள் மீதான அதிகாரத்தைக் கோருவதாகவே இருக்கின்றது.

குற்றங்கள் குறித்து பேசும் போது தனிமனிதனின் சமூகப் பொறுப்பு எவ்வளவுக்கு முக்கியமானதோ, அதேயளவுக்கு சமூகமும் அதற்கு பொறுப்பாகும். குற்றங்களுக்கு சமூகம்; பொறுப்பேற்காது, தனிமனிதனை மட்டும் குற்றவாளியாக காணும் சிந்தனைமுறைமை முதலாளித்துவக் கண்ணோட்டமாகும. தனிமனிதனை குற்றவாளியாக வரையறுக்கும் இந்த முதலாளித்துவ சிந்தனைமுறைமைதான், பெண்கள் மீதான பாலியல் ரீதியான கருத்தியல் வன்முறைகளின் போதான எதிர்வினையாக இருக்கின்றது.


இதனால் குற்றங்கள் குறித்த கண்டனங்கள், குற்றங்களை ஒழிப்பதில்லை. தனியுடமை சிந்தனைமுறையாக இருக்கின்றது. இனம், மதம், சாதி, பால்.. என்று குறுகிய கண்ணோட்டத்தில் சிந்தித்துக் கொண்டும், வாக்குகளைப் போட்டுக் கொண்டும், சமூகத்திற்கு கேடான ஒரு விடையத்துக்கு எதிர்வினையாற்றுவது என்பது, ஒடுக்குமுறைகளுக்கு எதிரான பொதுவான மனிதப் பண்பிலிருந்து எழுவதல்ல.


இந்த வகையில் பாலியல் குற்றங்கள் முதல் பாலியல்ரீதியான கருத்தியல் நிந்தனைகளுக்கு எதிரான குரல்கள் எல்லாம் ஆணாதிக்கத்துக்கு எதிரானதாக கருதுவது கூட, ஆணாதிக்கம் தான். ஆணாதிக்க சமூக அமைப்புமுறை என்பது, கட்டற்ற பாலியல் வன்முறையை அனுமதிப்பதில்லை. இந்த ஆணாதிக்க தனியுடமை சமூக அமைப்பு, தனக்கான சட்ட வரைமுறைகளைக் கொண்டு இருக்கின்றது. இதனால் கண்டனங்கள் பெண்ணியல் நோக்கில் இருக்க வேண்டியதில்லை, ஆணாதிக்க நோக்கிலும் கண்டிக்க முடியும். இந்த வகையில் ஆணாதிக்க சட்ட வரம்பு முறைமைகளில் இருந்து வருவது தான், பெரும்பாலான கண்டனங்கள்.


ஆணாதிக்கமானது பெண்ணை பாலியல் "ஒழுக்கத்தின்" அடிப்படையில் "புனித பண்டமாகவோ" அல்லது சந்தைக்கேற்ற "கவர்ச்சி பண்டமாகவோ" முன்னிறுத்திப் பூசிக்கின்றது. இதற்கு தனிமனித வக்கிரங்கள் மூலம் கேடுவரும் போது, ஆணாதிக்கம் கண்டிக்கின்றது. இங்கு இந்த ஆணாதிக்க சிந்தனை கூட, பாலியல் வன்முறையை, மொழிரீதியான பாலியல் வன்முறையை கண்டிக்கின்றது.

இனவாதமென்பது இனவொடுக்குமுறையின் விளைவல்ல. மாறாக சுரண்டும் வர்க்கத்தின் நிகழ்ச்சிநிரல். இனவாதம் கொப்பளிக்கும் உணர்ச்சிகளும், கருத்துக்களும், நலன்களும்.., மனிதத் தன்மைக்கு முரணானது. மனித வளர்ச்சியை சிதைத்து சின்னாபின்னமாக்கி விடுகின்றது.


இந்த வகையில் பார்ப்பனியம், இனவாதம், மதவாதம், நிறவாதம், ஆண்வாதம்.. என இவை அனைத்தும் ஒடுக்கும் சிந்தனைமுறையே ஒழிய, ஒடுக்கப்பட்ட மக்களின் சிந்தனைமுறையல்ல. பார்ப்பனியப் பாசிசமும், சீமானின் இனவாதப் பாசிசமும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும். ஒன்றுக்கொன்று எதிராக தோன்றினாலும், ஒன்றாகவே இருக்கின்றது. மறுபக்கத்தில் கார்ப்பரேட் மயமான உலகத்தின் அச்சாணிகளாக இயங்குகின்றது.


உலகமயமாதல், நவதாராளவாதம்… என்ற உலகம் தளுவிய கார்ப்பரேட்டின் மூலதனக் கொள்கைக்கு வெளியில், எந்த சிந்தனைமுறையும் சுயாதீனமானதல்ல. கட்சிகள் முதல் சிந்தனைமுறைகள் வரையான அனைத்தும், உலகமயமாதல், நவதாராளவாதம்… கடந்து சுயாதீனமானதாக இருப்பதில்லை.


நவதாராளவாதம் என்பது நாட்டின் செல்வத்தை, கார்ப்பரேட்டுக்கு கொடுக்கும் மூலதனக் கொள்கை. செல்வம் சிலரிடம் குவிவதை உறுதி செய்வதும், குவிந்த செல்வத்தை பாதுகாப்பதுமே அரசுகளின் கடமை. அரசு என்பது செல்வத்தை மீள மக்களுக்கு பகிர்தல் அல்ல, மாறாக பறித்தல் தான். இதை மூடிமறைக்கவே இனம், மதம், சாதி, நிறம்.. போன்ற ஒடுக்குமுறைகளை தூண்டி விடுவதன் மூலம்தான், மக்களிடமிருந்து அரசைப் பாதுகாக்கும் கொள்கையே இன்றைய தேர்தல் ஜனநாயகமாக இருக்கின்றது.

பொதுவெளியில் செயற்படும் பெண்களுக்கு எதிரான, பாலியல் தாக்குதல்களைச் செய்பவர்கள் யார்? இந்தப் பாலியல் தாக்குதலுக்கு முகம் கொடுக்கும் பெண்களும், அவர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுப்போரும், ஏன் பாலியல் தாக்குதலை நடத்துபவர்களின் அரசியல் என்ன என்று ஏன் அடையாளப்படுத்துவதில்லை.? மாறாக தோழர் நியூட்டன் "பெண்ணிய - மார்க்சிச - இடதுசாரிய போராளிகளும் உளவியல் குறைபாடுகளும்" என்ற கட்டுரையில் கூறியது போல், கூறுவது ஏன்? இங்கு இதன் பின்னாலும் அரசியலிருக்கின்றது.


பொது வெளியில் கலை, இலக்கியம் தொடங்கி பெண்ணியத்தையும், அரசியலையும் வெளிப்படையாக முன்வைக்கக் கூடிய பெண்களுடனான முரண்பாடுகளின் போது, பாலியல்ரீதியாக குறிவைத்து தாக்குகின்றனர். இலங்கையைச் சேர்ந்த பெண்கள் அண்மையில் இதை எதிர்கொண்டனர். இதேபோன்றே தமிழகத்திலும் அரங்கேறுகின்றது. இப்படி நிலப்பிரபுத்துவ பண்பாட்டுக் கூறுகளைச் சுமந்து கொண்டிருக்கும் சமூகங்கள் எங்குமாக, பொது வெளியியில் இயங்குகின்ற பெண்களின் நிலையிதுவாகும். இந்தத் தாக்குதலானது, ஆணாதிக்க சமூக அரசியல் அடிப்படைகளைக் கொண்டதாக இருக்கின்றது.


இப்படி பெண்ணை பாலியல்ரீதியாக அடையாளப்படுத்தி தனிமைப்படுத்தும் ஆணாதிக்க ஒடுக்குமுறையானது, சமூகத்தின் பொதுவான ஆணாதிக்க ஒடுக்குமுறைப் பண்பில் இருந்தே வேறுபட்டது. இந்த ஆணாதிக்கமென்பது சமூகத்தில் முனைப்புப்பெற்றுள்ள பிற்போக்கான ஒடுக்குமுறைக் கூறுகளை முன்னிறுத்தியே இயங்குகின்றது. அதாவது மதவாத, இனவாத, சாதியவாத, தனியுடமைவாதங்களையே தங்கள் அரசியலாகவும், கொள்கையாகவும் கொண்டியங்கும் கூட்டத்தின், தனிச் சிறப்பான முனைப்புப்பெற்ற அரசியல் கூறாகும். அதாவது பெண்ணை பாலியல் சார்ந்து தாக்கும் நபர்களின், அரசியல் உள்ளடக்கம் இதுவாகவே இருக்கும். இது மனிதவிரோத தன்மையை அடிப்படையாகக் கொண்டதும், அரசியல் செயலூக்கமுள்ள ஒன்றாக இயங்குகின்றது. இந்த அரசியலானது மதவாதமாக, சாதியவாதமாக, தனியுடமைவாதமாக, இனவாதமாக, ஆணாதிக்கவாதமாக .., அதாவது சமூகத்தில் முனைப்புப்பெற்ற ஒடுக்குமுறைகளில் எந்தக் கூறாகவும் தன்னை வெளிப்படுத்தலாம்.

கீழ்வரும் பதிவை சில நாட்களாக எழுதவேண்டுமென நினைத்தேன். ஒரு பயம். "கும்பல்ல கோவிந்தா" என, எல்லோரும் முகப்புத்தகத்தில் பெண்களுக்காக குரல்கொடுக்கின்றனர். இது இப்போ "ட்ரெண்ட்" ஆக இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் போராட்டமாக முன்னெடுக்கப்படுகிறது. இப்போராட்டத்தில் உள்ள "சிறு" தவறொன்றை சுட்டுவதென்பது, போராளிகள் என்னை ஆணாதிக்கவாதிகளுக்கு சார்பாக குரல் கொடுப்பவனாக- தமது போராட்டத்தை திசைதிருப்புபவனாக என்னை முத்திரைகுத்த வசதியாக போய்விடுமே என்ற பயம்.  ஆனாலும் இதை பதிவுசெய்தே ஆகவேண்டும்:
1.
தற்போது நம்மில் பலர் பெண்களுக்கு எதிரான மொழிசார்ந்த வன்முறையை முகப்புத்தகத்தில் நிகழ்த்துவோருக்கு எதிராக போராடி வருகிறோம். வெற்றியும் அடைந்துள்ளோம் என்ற அறிவிப்புகள் வருகின்றன. சந்தோசம் அல்லது மகிழ்ச்சி.


எனது ஆதங்கம் என்னவென்றால்: இந்த பெண்களுக்கு எதிராக மொழியியல் -மற்றும் பலவகை தாக்குதல்களை நிகழ்த்தும் ஒடுக்குறையாளர்களுக்கு எதிராகப் போராடும் நாம் சரளமாக "மண்டை கழண்டவர்கள்", "மனநோயாளிகள்", "விசரர்கள்", "வருத்தம் முத்தினவங்கள்", "ஓரினசேர்க்கையாளர்கள்", "சைக்கோக்கள்", "அருவருப்பான மனப்பிறழ்வு கொண்டவர்கள்" போன்ற சொற்களை போராடும் "உற்சாகத்தில்" போராட்டக்களத்தில் - விதைக்கிறோம்.


பெண்கள் மீதோ அல்லது சிறுபான்மைத் தேசியஇன மக்கள் மீதோ அல்லது ஒடுக்கப்பட்ட சாதி மக்கள் மீதோ யாராவது - அவர்களுக்கு சம்பந்தமில்லாத குற்றச்சாட்டை முன்வைத்தால் நாம் ஏற்றுக்கொள்கிறோமா??? இல்லையே.
"அந்த சாதிய சேர்ந்தவர்கள் தான் கொலைகள் செய்கிறார்கள்" .... "இந்த மதத்தை சேர்ந்தவர்கள் தான் பொய் சொல்லுகிறார்கள்", "ஆண்களை விட பெண்கள் இந்த இந்த விடயத்தில் வீக்" ....இப்படி யாராவது குற்றம் சாட்டினால், முற்போக்காளர்களான நாம் அதைக் கண்டும் காணாமல் விட்டுவிட்டா போகிறோம்??? இல்லையே.

 

தமிழகத்தின் இனவாதியான சீமான், பகுத்தறிவுக்கு புறம்பாக பாசிசத்தை உணர்ச்சிகரமாக  பிரச்சாரம் செய்யும் ஒரு சந்தர்ப்பவாதி. தேர்தல் அரசியலில் நக்கிப் பிழைக்கும், ஒரு பிழைப்புவாதி. ஈழத்து ("ஆமைக்") கதைகளைச் சொல்லி காசாக்கும் வியாபாரி. தேர்தல் அரசியலை நிராகரித்த, ஆயுதங்கள் மூலம் பாசிசத்தை நடைமுறைப்படுத்திய பிரபாகரன் போல், எதார்த்தவாதியுமல்ல, நடைமுறைவாதியுமல்ல.

இலங்கையில் சிங்கள -  தமிழ் இனவாதிகள் நடத்திய யுத்தத்தின் அவலங்களை காசாக்கும் கூட்டத்தில், சீமான் முதன்மையான வியாபாரி. ஆமைக்கறி கதைகள்  மூலம் தன்னைப் பற்றிய கற்பனைக் கதைகளை சொல்லிப் பிழைக்கும் அளவுக்கு, மனிதவிரோதி. ஈழத்தைப் பற்றிய தமிழகத்தின் கற்பனைகளை உண்மையானதென்று ஊதிப்பெருக்கியும் காசாக்கியும் கொள்ளும் சீமான், பார்ப்பனிய சிந்தனையிலான இனவாதத்தைக் கொண்டு தேர்தல் அரசியல் செய்கின்ற பச்சோந்தி.

இந்த எமப் பயல் சீமான் பெரும் எண்ணிக்கையில் பெண் வேட்பாளரை நிறுத்தி இருப்பது குறித்து, பெரியாரிஸ்ட்டும் பெண்ணியவாதியுமான சாலினி, "இவ்வளோ பொம்புளை புள்ளைங்களை ஆமைக்கறி கதை சொல்லி ஏமாத்தியிருக்கான் யா. எமப் பய" என்று, மிகச் சரியாகவே கூறி இருந்தார். உடனே பகுத்தறிவற்று உணர்ச்சிக்கு பின் எடுபிடிகளாக இருப்பதைத் தங்கள் தகுதியாக கொண்ட உலகெங்குமான இனவாத தமிழ் பாசிட்டுகள், சாலினியை ஆணாதிக்க இனவாத மொழியில் திட்டி வருகின்றனர். தாம் அல்லாதவர்களை பாசிச பா.ஜ.க வின் பார்ப்பனிய வாரிசுகள் எந்த காவி மொழியில் வன்முறைக்கு உள்ளாக்குகின்றனரோ, அதே ஆணாதிக்க பார்ப்பனிய மொழியில் தமிழ் இனவாத பாசிச மொழியைக் கொண்டு திட்டித் தீர்க்கின்றனர்.இப்படி சாலினிக்கு எதிராக சீமானின் உணர்ச்சிக்கு ஊளையிடும் வாரிசுகள், தங்கள்  ஆணாதிக்க வசைகளாலும், ஆணாதிக்கத் தூசணங்களாலும் வாயை மூடு என்கின்றனர். ஈழத்தில் வெள்ளாளியச் சிநதனையிலான இனவாதத்தை முன்வைத்து உருவான புலிப் பாசிட்டுக்களின் வாரிசுகளும், சாலினிக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். சாலினியின் தொலைபேசியைக் கூட,  புலிப்பாசிட்டுகளின் வாரிசுகள் விட்டு வைக்கவில்லை. சாலினி அது குறித்து கூறும் போது "தேர்தல் நடப்பதென்னவோ தமிழ்நாட்டில் தான். ஆனால் ஸ்விட்சர்லாண்ட், ஸ்வீடன், யூ.எஸ்.ஏ, கனடா மாதிரியான நாடுகளிலிருந்து எல்லாம் எனக்கு போன் செய்கிறார்கள். பிகு: எனக்கு தமிழில் எல்லா கெட்ட வார்த்தைகளும் ஏற்கனவே தெரியும்! ஓஸி டியூசன் (இலவச வகுப்பு) தேவையில்லை" என்று, புலிப் பாசிசத்தை முன்னிறுத்தும், சீமானின் ஈழத்து எடுபிடிகளுக்கு பதிலளித்திருக்கின்றார்.

1.

2009-இற்கு பின் வாசித்த இலங்கைப்பின்னணி கொண்ட எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட இலக்கிய படைப்புக்குகளில் , என்னை மிகவும் சந்தோசப்பட, பெருமைப்பட, சிந்திக்க, தலைமைப் பாத்திரத்துடன் நெருக்கமாக உணரவைத்த நாவல், ஜீவமுரளி எழுதிய லெனின் சின்னத்தம்பி.

இஸ்கண்டிநேவிய இலக்கியம் மற்றும் ஓரளவுக்கு ஐரோப்பிய இலக்கிய வாசனை உள்ள எனக்கு -எனது வாசிப்பு அனுபவத்தில் நான் வாசித்திருந்த ஐரோப்பிய - இஸ்கண்டிநேவிய நாவல்களுக்கு இணையாக - அவைக்கு நெருக்கமாக இருந்தது லெனின் சின்னத்தம்பி. 

இதற்கான மிக முக்கிய காரணம் : லெனின் சின்னத்தம்பியின் " உலகளாவிய தன்மை " /the universal character of literature . லெனின் சின்னத்தம்பியை ஐரோப்பிய மொழிகளில் எந்த மொழிக்கு நீங்கள் மொழிபெயர்த்தால் , அந்த புத்தகத்தின் உள்ளடக்கத்தை , பாத்திரங்களை, கதை சொல்லப்படும் வெளியை, பிரதிபலிக்கும் உணர்வுகளை, உளவியல் போக்குகளை , அந்தந்த மொழியை சேர்ந்தவர்கள் எந்த தடையுமின்றி தமது சொந்த வாழ்வின் - வாழ்கை சூழலின்- அதன் உள்ளடக்கத்தின் கதையாக உணர்ந்து கொள்வர். 

அடுத்தது : இக் கதையானது , உலக இலக்கிய வரலாற்றில் மிகவும் பிரபலமான தொழிலாளர் உலகம் சார் இலக்கியம் / Proletarian literature univers என்ற பாரம்பரியத்துக்குள் நுழைய முயல்கிறது. இப் பாரம்பரியத்தின் தலைமக்களாக: எல்லோருக்கும் தெரிந்த கோர்கி, அமெரிக்க /இஸ்கண்டினேவிய பெண்ணிய எழுத்தாளர் தில்லேர் ஊல்சென், ஆங்கிலேயர்களான ஜாக் லண்டன், ஜோன் ப்ரெய்ன் , ஐரோப்பாவுக்கு வெளியில் ,பிரேசில் நாட்டை சேர்ந்த ஜோர்ஜ் அமாடோ போன்ற பல நூறு எழுத்தாளர்கள் உள்ளனர். இன்று இந்த பாரம்பரியமென்பது 80.களில் ஏற்பட்ட "வீட்சிக்கு " பிறகு மறுபடியும் தன்னை வளர்த்துக்கொண்டு செல்கிறது. பெண்ணிய இலக்கியம், "கருப்பு " இலக்கியம், "பாலியல்" சிறுபான்மை இலக்கியம் போன்றவையும் இது போட்ட குட்டிகள் அல்லது இதிலிருந்து பிரிந்து போன கிளைகள் எனலாம்.

"இழிவானது - தீட்டுக்குரியது" என்பது, யாழ் மையவாத வெள்ளாளிய சிந்தனை முறையே ஓழிய, தனிப்பட்ட விக்னேஸ்வரனுக்குரிய தனித்;த சிந்தனையல்ல. இங்கு முன்னாள் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வெள்ளாளிய சிந்தனையிலான சமூகத்தின் பிரதிநிதியாக முன்னிலைப்படுத்தவே "வெளிநாட்டில் மலசலகூடம் கழுவுவதிலும் பார்க்க உள்நாட்டில் தலைநிமிர்ந்து வாழலாம்" என்கின்றார்.

விக்னேஸ்வரனின் இந்த வெள்ளாளியக் கண்ணோட்டம் என்பது, சாதிய இழிவையும் - தீண்டாமையையும் அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டு கலாச்சாரக் கூறுகளைக் கொண்டது. கக்கூஸ் கழுவுதல் என்பது வெள்ளாளியச் சிந்தனையில் இழிவானது, தீட்டுக்குரியது. சாதியரீதியில் ஓடுக்கப்பட்டவர்களின், சாதிக்குரிய தொழில். புலம்பெயர்ந்த வெள்ளாளிய சிந்தனையிலான சமூகத்தின் கோபம், நாங்கள் ஓடுக்கும் சாதி என்ற அகங்காரத்துடன் விக்னேஸ்வரனின் கூற்றை எதிர்கொள்கின்றனர்.

உடனே விக்னேஸ்வரனுக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழர்கள், எங்களை எப்படி கூறலாம் என்றே கொந்தளிக்கின்றனர். நாங்களும் உங்களைப் போல் ஓடுக்கும் வெள்ளாளிய சிந்தனையிலான சாதி சமூகத்தின் பிரதிநிதிகள் தானே என்ற, எதிர்மறையான கோபம்.

ஓடுக்கும் எங்கள் சாதியப் பிரதிநிதி என்றுதானே உங்களுக்கு வாக்குப் போட வைத்தோம், பணத்தை எல்லாம் தந்தோம். எங்களை எப்படி "இழி" சாதியாக கூறமுடியும். இந்த வெள்ளாளிய சிந்தனையிலான சாதியப் பின்னணியில் நின்று

1.புலத்தில் கக்கூசைக் கழுவாத எங்களை எல்லாம் எப்படி பொதுமைப்படுத்தலாம் என்ற பெரும்பான்மையினரது கோபம் 

2. வெள்ளாளிய சிந்தனையே வாழ்க்கைமுறையாகக் கொண்ட, கக்கூஸ் கழுவும் ஓடுக்கும்  தமிழர்களுக்கு, எங்களை எப்படி இப்படிச் சொல்லலாம் என்ற கோபம்.

விக்னேஸ்வரனின் ஓடுக்கும் வெள்ளாளிய சிந்தனை மீது கோபம் வரவில்லை. மக்களைச் சாதிரீதியாக பிரித்து, ஒடுக்கும் சாதிகளின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்தும் சாதிய வெறிக்கு எதிராக கோபம் வரவில்லை.

மாறாக தங்களின் காசைப் பெற்றுக் கொண்டு, வாக்கைப் பெற தங்கள் ஆதரவைப் பெற்றுக்கொண்டு, தங்கள் மேல் சாதிய “இழி” வைப் புகுத்துவது தான் கோபமாக கொப்பளிக்கின்றது. புலம்பெயர்ந்த தமிழன் வெள்ளாளிய சிந்தனையிலான சமூகப் பண்பாட்டை பாதுகாக்கும், சாதிப் பன்னாடைகள் தான் என்று, விக்னேஸ்வரனுக்கு விளக்க முற்படுகின்றனர். பணத்தைக் கொடுக்க கூடாது என்கின்றனர்.

புலம்பெயர்ந்த தமிழன் சாதிக்குரிய "இழிதொழிலை" செய்வதை விட, அதைச் செய்யாத உள்நாட்டவராகி நீங்கள் சாதிரீதியாக உயர்ந்தவர்கள் என்று கூறுவதன் மூலம், ஒடுக்கும் "உயர்" சாதிக்கு முன் தன்னை மிகச் சிறந்த சாதியப் பிரதிநிதியாக காட்ட முன்னிறுத்துகின்றார். அடுத்த தேர்தலில் ஒடுக்கும் சாதிய வாக்குகளைப் பெறுவதை இலக்காகக் கொண்டு, புலம்பெயர்ந்த தமிழனின் தொழில் சார்ந்து இழிந்த "சாதிக்குரிய" ஓன்றாகப் பிரகடனம் செய்து, தன்னை ஒடுக்கும் சாதியின் பிரதிநிதியாக பிரகடனப்படுத்தியுள்ளார். முன்பு புலிகள் காலத்தில் புதுவை இரத்தினதுரை புலம்பெயர்ந்த தமிழரை "நாய்ச் சாதியினர் – நாயிலும் கீழானவர் - வீரமில்லாதவர் - கோழைகள்" என்று கூறி, புலம்பெயராத தமிழர்கள் அஞ்சா நெஞ்சமுள்ள வீரர்கள் என்று கூறி, புலிக்கு ஆள்பிடித்த அதே உத்தியையே விக்னேஸ்வரன் மீளக் கையாளுகின்றார்.

இலங்கையில் தமிழ்ச் சமூகமானது சமூகத்தன்மையற்ற உதிரி வர்க்க லும்பன் சமூகமாக மாறியிருப்பது போல், யுத்தத்தின் முன்னும் பின்னுமான தமிழ் இலக்கியமும் - அரசியலும் கூட சமூகத் தன்மையற்று கிடக்கின்றது.

யுத்தத்திற்கு முன்பும் பின்புமாக, அரசியல் - இலக்கியம் பேசும் இன்றைய தலைமுறையானது, ஒன்றில் இயக்கப் பாசிசத்தை நியாயப்படுத்தியோ அல்லது புலிக்கு எதிரான புலியெதிர்ப்பு ஜனநாயகத்தை முன்வைத்ததே ஒழிய, ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்தியவர்களல்ல. ஒரு நாணயத்தில் இருபக்கம் இருப்பது போல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக எதிர்ப்புரட்சிகர அரசியலின் இருபக்கங்களே இவை.

"ஜனநாயகம்" என்பது ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்குவதற்கான தமக்கான அதிகாரமே என்று, ஒடுக்கும் வர்க்கம் கருதுகின்றது. நாம் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கும், மக்களின்  அதிகாரத்துக்கானதே ஜனநாயகம் என்று கூறுவதுடன், ஜனநாயகம் என்பது சுய தம்பட்டங்களுக்கோ, பிரமுகர்தனங்களுக்கோ, சுயபிழைப்புக்கானதோ அல்ல என்று கூறுகின்றோம். இப்படி இருக்க 1990 க்குப் பிந்தைய, 2009 க்கு முந்தைய புலம்பெயர் இலக்கியம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகவே பயணித்தது. 2009 பின் ஒடுக்கப்பட்ட மக்களுடன் தன்னை இணைத்துக் கொள்ளவில்லை. யுத்தத்தின் முன்பும் பின்புமான யாழ் மையவாத இலக்கியமும், அரசியலும், ஒடுக்கப்பட்ட மக்களுடன் தன்னை ஒருங்கிணைத்துக் கொண்டதில்லை. மாறாக இலங்கையில் (மலையகம், முஸ்லிம், வடகிழக்கு தமிழ் மக்கள் மத்தியில்) இருந்த மற்றும் தோன்றிய இலக்கியங்களையும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக ஒருங்கிணைத்திருக்கின்றது.

தமிழ் தேர்தல் அரசியல் கட்சிகள் மக்களுக்காக போராடாது, தன்னெழுச்சியான போராட்டங்களில் புகுந்து சுயவிளம்பரத்திற்கான படத்தை எடுத்து எப்படி பிரச்சாரம் செய்கின்றனரோ, அதேபோல் யாழ் மையவாத இலக்கியமும் அரசியலும் இயங்குகின்றது. எழுத்தாற்றல் மூலம் தங்களை அறிவாளியாகவும், பிரமுகராகவும் முன்னிறுத்த, ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்களை தங்கள் படைப்புகளின் ஊறுகாயாகிக் கொள்கின்றனர்.

ஜனநாயகம் என்ன என்பது குறித்த பிரச்சனை. ஜனநாயகம் என்பது கருத்தைச் சொல்வது தானே ஒழிய, அதுவொரு சமூக இயக்கமல்ல என்கின்ற நவதாராளவாத கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கள் இருப்பை முன்னிறுத்துகின்றனர். கடந்தகால ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வரலாற்று திரிபுகளில் இருந்து, இந்த சிந்தனைமுறையை   உருவாகியுள்ளனர்.

இலக்கியம் பேசும் இந்த தலைமுறையானது, ஜனநாயகத்தை இயக்கங்களிடமும், புலிகளிடமும் கோரிய அடிப்படைகள் முதல் அதன் வரலாறு அனைத்தும் திரிக்கப்பட்ட, காயடிக்கப்பட்ட நவதாராளவாத எழுத்துலகையே, இன்றைய தமிழ் சமூகம் எதிர்கொண்டிருக்கின்றது. எமது தலைமுறைக்குள்ளேயே நடந்ததை திரித்தும், புரட்டியும் விடுகின்றனர். இன்றைய இலக்கியம், தொடங்கி இலக்கிய அரசியல் பேசுவோர் யார்?, ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து தங்கள் கருத்துக்களையோ, படைப்புகளையோ யார் முன்வைக்கின்றனர்? இதற்கு ஒவ்வொருவரும் பதிலளித்தாக வேண்டும்.

இன்று நடப்பது என்ன? புலிப் பாசிசத்துடன் சேர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களை ஒடுக்கிய கலை இலக்கிய சுய தற்பெருமைகளையும், புலிக்கு நிகராக புலிக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்களை "ஜனநாயகத்தின்" பெயரில் தம் பங்கிற்;கு ஒடுக்கிய விதம் குறித்து, பெருமையாக பீற்றுகின்ற இலக்கிய அரசியல் நிகழ்வுகளே, இன்று புலத்திலும் - இலங்கையிலும் அரங்கேறுவதைக் காணமுடிகின்றது.

எங்கேயோ தொடக்கி வேறு எங்கேயோ முடித்த நினைவுக்கு குறிப்பொன்று 

 

"இலக்கியத்தை அடிப்படையில் சமூக விளைபொருளாகக் கொண்டு, அதனை உரிய வரலாற்றுச் சூழலில் வைத்து நோக்கி, அதன் உயிராற்றல் காலத்துக்குக் கட்டுப்பட்டும்- காலத்தை வென்றும் நிற்கும் தன்மையை விளக்குவதே சமூகவியல் அணுகுமுறையின் பிரதான அம்சங்களாகும்"  

- கலாநிதி க. கைலாசபதி (1958)

-"  ஐயா, சுவாமி அம்பது ரூபா வாங்கிட்டு வரட்டாம்"

-"  ஏன், .... எதுக்கடா " ?

- " இல்ல, போன கிழமை நடந்த பவுணட புத்தகவிழாவுக்கு கோயில் ஸ்பீக்கர் பூட்டின காசாம் "

- "அது கோயில் செலவில செய்கிறது என்றுதானே முடிவெடுத்தனாங்கள்?."

- "இல்லையாம், நீங்க தானாம் முடிவெடுத்ததாம். கோயில் கமிட்டி பெரும்பான்மைக்கு உடன்பாடு இல்லையாம். மற்றது, சக்கர மாமா சொல்கிறார், பவுணோட புத்தகத்திற்கு தேசியம் காணாதாம் எண்டு.  அதனால, அந்த புத்தகம் EPRLF இயக்கப்பிரச்சாரம் புத்தகம் எண்டு சொல்லுறார்." 

-"அவன் சர்க்கரை, என்னட்ட அடி வேண்ட போறான். அவன் வால் புடிக்கிற இயக்கத்தட  செத்தவீட்டுக்கு ஸ்பீக்கர் கொண்டு போனா பிரச்சினை இல்லை. ஊர் பிறந்தவன்ர  புத்தகவெளியீட்டுக்கு ஸ்பீக்கர் போட்டாதானா அவனுக்கு பிரச்சனை.? சரி நீ போ..."  

- "அப்பா காசு அம்பது ரூபா?"

- "நீ போ, நான் சாமியோட கதைக்கிறன் "

இந்த சம்பாசனை கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன், எனக்கும் என் தந்தைக்கும் இடையில்; ஒரு   ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுதில் நடந்ததாக ஞாபகம்.

எனது சிற்றூர் பாட்டுக்கும் கூத்துக்கும் பிரபலமானது. ஆனால், நவீனத்துவ இலக்கியங்கள் என கூறப்படும் கவிதை, புனைகதைகள், நாவல்கள், சிறுகதைகள் எழுதும் எவரும் எனது ஊரில்  இருக்கவில்லை. ஆனாலும், அன்று எட்டாம் வகுப்பில் கல்வி கற்ற நான் உட்பட கைவிட்டு எண்ணக் கூடிய சிலர் வாசிப்பதில் ஈடுபாடு கொண்டவர்களாகவிருந்தோம். ஊர்காவற்துறை பிரதேசசபை நூல்நிலையத்தில் எமக்கு புத்தகம் இரவல் தர மறுத்துவிட்டார், எமது அயல் கிராமத்தைச் சேர்ந்த   சாதியவெறி பிடித்த நூலகர். அவரைப் பொறுத்தளவில் கல்வியறிவற்ற மீன்பிடித்து சீவியம்    நடத்துகிற எமக்கு எதற்கு இலக்கிய அறிவு என்று நினைத்தார். அதை பகிரங்கமாவே கூறினார். "உங்களுக்கு எதுக்கடா புத்தகம். நீங்கள் போய் கூத்து பழகுங்கடா. அது தானடா உங்களுக்கு சரிவரும்.....". 

ஜெயமோகன் என்ற இந்திய சனாதன எழுத்தாளனும் அவரின் சீடர்பிள்ளைகள் என கூறிக்கொள்ளும் சில இலங்கை எழுத்தாளர்களும், இலங்கையின் தமிழ் இலக்கிய பாரம்பரியத்தை -குறிப்பாக இடதுசாரிய இலக்கிய வரலாறை முற்றுமுழுதாக மறுத்து - இடதுசாரிய இலக்கியம் என்று ஒன்று இல்லை என்ற வகையில் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

ஜெயமோகன் மற்றும் இந்தியர்களின் நிழலில் நின்று ஈழத்து இலக்கிய பாரம்பரியத்தை- வரலாற்றை  நிராகரிப்பதென்பது, அவர்களின் இலக்கிய கோட்பாட்டின் அடிப்படையில் சரியானதே. அவர்களின் கோட்பாடென்பது சைவ சனாதன – சமூகமறுப்பு சார் - தனிமனித பார்வை கொண்டது. அவர்கள், மார்க்சிச பாரம்பரியத்தை- உழைப்புக்கும் மூலதனத்துக்கும் இடையிலான முரண்பாட்டின் உற்பத்திப்பொருளாக உருவாகும் "அந்நியமாதலை" அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் இலக்கியத்தை இலக்கியம் இல்லை என மறுப்பது சரியானதே. ஒரு வலதுசாரி சனாதன எழுத்தாளார்களிடம் வேறு எதை எதிர் பார்க்க முடியும்

இங்குள்ள பிழை என்னவென்றால், இந்த வலதுசாரி சனாதன சக்திகளையும், "எல்லாவகை பாரம்பரியங்களையும்" ஈழத்து முற்போக்கு இலக்கியமென்று- கும்பலில் கோவிந்தா என தலையில் வைத்துக் கொண்டாடிவிட்டு இப்போ, அவர்கள் அங்கீகாரத்தை மறுக்கும்போது, குத்துது, குடையுது என்று கூப்பாடு போடுவதில் எந்தவொரு பிரயோசனமுமில்லை. முதலில், இந்த வலதுசாரிய - சனாதன இலக்கியவாதிகளை இலக்கிய -அரசியல் கோட்பாட்டு ரீதியில் எதிர்க்க வேண்டுமானால்- அவர்களுக்கு  எதிரான மாற்று கருத்துள்ளவர்கள் இணைத்து இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். இதை விடுத்தது, அவர்கள் ஏதோ தவறு செய்து விட்டதாக கூறுவது நல்லதல்ல.

ஆணாதிக்க இந்தியப் பார்ப்பனிய சமூக அமைப்பில் பெண்களின் சுதந்திரமற்ற வாழ்க்கை முறைமை தான், பெண்கள் குற்றவாளிகளை இனம் காண முடியாமைக்கான காரணமாக இருக்கின்றது. பணம், அதிகாரம், கவர்ச்சி.. போன்றவற்றை சமூக அந்தஸ்தாகவும், அதையே தனது இலக்காகவும் கொண்ட மனிதன், அதிலும் ஒரு பெண் சமூகத்தில் அப்படிப்பட்ட ஆணாக ஒருவனை தெரிவு செய்வது அவளின் குற்றமல்ல. இதைத்தான் இந்திய சமூகம் வழிகாட்டுகின்றது.

பகுத்தறிவுக்கு முரணான ஆணாதிக்க சாதிய சமூக அமைப்பு பற்றிய புரிதலை பெண்ணுக்கு கற்றுக் கொடுப்பது மறுக்கப்படுகின்றது. சாதிக்குள் தேர்ந்தெடுக்கும் வரையறையைக் கொண்டு, பெண்ணை வழிகாட்டுகின்றது. சாதிய சமூகமானது பொதுவான மனிதத்தன்மையைக் கண்டுகொள்ளமுடியாத வண்ணம் பெண் வளர்க்கப்படுவதால், குற்றவாளிகளைப் பகுத்தறியும் தன்மையை சாதியப் பெண்கள் இழந்து விடுகின்றனர். இதைத்தான் பாலியல் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கின்றனர்.

பெண் உடல் என்பது ஆணின் உடைமை. ஆணின் சுகத்துக்கான நுகர்வுப் பண்டம். நவதாராளவாதத்தில் பெண் உடலென்பது சந்தைப் பொருள். பெண் உடல் என்பது ஆணின் பாலியல் தேவைக்கான (சரக்கு) பொருள். அதை வாங்கவும், விற்கவும், பலாத்காரமாக அடையும் உரிமையையும் ஆணுக்கு, ஆணாதிக்க சமூகம் கொடுக்கின்றது. இதுதான் ஆணாதிக்க சமூகத்தின் பொதுக் கண்ணோட்டம்.

இந்த சமூகப் பின்னணியில் பெண் நுகர்வுக்குரிய பாலியல் பண்டமாகவும், நிலப்பிரபுத்துவ அடிமைப் பொருளாகவும் கட்டமைக்கப்பட்ட இந்திய பார்ப்பனிய சமூக அமைப்பில், பெண்ணின் சுதந்திரம் என்பது சிறைதான். இந்தப் பின்புலத்தில் காமவெறி பிடித்த நுகர்வாக ஆணின் வக்கிரத்தின் சூதுவாதை பெண் இனம்கண்டு கொள்ள முடியாதளவுக்கு, பெண் பகு;தறி முடியாதவளாக வளர்க்கப்படுகின்றாள்.

2019 ஆண்டின், அனைத்து ஒடுக்கப்படும் பெண்கள் மற்றும் உழைக்கும் பெண்கள் தினம் முடிந்து விட்டது. உலக நாடுகள் அனைத்திலும் சர்வதேச ஒடுக்கப்படும் பெண்கள் மற்றும் உழைக்கும் பெண்கள்தின ஆர்ப்பாட்ட பேரணிகள் மற்றும் நிகழ்வுகளில் - 1970-களின் பின் இவ்வருடம் பெருமளவில் மக்கள் பங்கெடுத்துள்ளனர். குறிப்பாக வளர்ந்துவரும் புதிய தலைமுறைப் பெண்கள் அதிகளவில் பங்குகொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

 

பெர்லின் மாநகரில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்ட பேரணியில் நேற்று ஈடுபட்டனர்.  அத்துடன், பெர்லின் உள்ளூராட்சி அரசு சர்வதேச பெண்கள் தினத்தை விடுமுறை நாளாக  அறிவித்துள்ளது. இஸ்தான்புல் நகரில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், ஆர்ப்பாட்டம் பொலிசாரினால் தடுக்கப்பட்டபோது அங்கு வன்முறை அரச  ராணுவத்தினால் அரங்கேற்றப்பட்டது. இஸ்தான்புல் பேரணியில் பங்குகொண்ட சில ஆயிரம் பெண்கள்  காயமடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முதலாளித்துவ கட்டமைப்புக்குள், பெண்கள்   பெறக்கூடிய உரிமைகள் அனைத்தும் பெற்றதாக குறிப்பிடப்படும் ஸ்கண்டிநேவிய நாடுகளிலும் பாரிய  ஆர்ப்பாட்ட பேரணிகள் நடைபெற்றன. தற்போதுள்ள வலதுசாரிய- கிறிஸ்தவ ஜனநாயக அரசு,   சுயமுடிவிலான கருக்கலைப்பு செய்யும் உரிமையை தடைசெய்ய முயன்று வருகிறது. இதற்கு எதிராக  நோர்வேயின் தலைநகரில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவின் பல மாநிலங்களில் இடதுசாரிகளால் முன்னெடுக்கப்பட்ட் சர்வதேச  உழைக்கும் பெண்கள் தினத்தில், வரலாறுகாணாத அளவில் பெண்கள் பங்குபற்றியுள்ளனர். தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலும் கூட தொடர்ச்சியாக சர்வதேச பெண்கள் தினம் சார்ந்த நிகழ்வுகள்  நடைபெற்று வருகின்றன.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE