முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் புபுது ஜாகொடவை கைது செய்வதற்கு குடிபோதையில் பொலிஸ்குழுவொன்று இன்று முயற்சித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
முன்னிலை சோஷலிசக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான சுஜித் கரவிடகே என்பவரது வீடு ராஜகிரிய, கலபளுவாவ பிரதேசத்தில் அமைந்துள்ளது. இன்று மாலை அந்த வீட்டுக்கு மருதானை பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகள் குழுவொன்று குடிபோதையில் சென்றுள்ளது.