ஓளடத கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் லால் ஜயகொடி மற்றும் பிரதித் தலைவர் கிரிசாந்த வீரசூரிய ஆகியோர் அரசியல் வற்புறுத்தல் காரணமாக பதவி விலகியதை ‘ஜனரல’ என்ற சிங்களப் பத்திரிகை இரு வாரங்களுக்கு முன்னர் பிரதான தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருந்தது. சில மருந்துகளுக்கு அங்கீகாரம் வழங்குமாறு சுகாதார அமைச்சர் அதிகாரசபைக்கு உத்தரவிட்டதாகவும், அதனை மறுத்த அதிகாரசபை முக்கியஸ்தர்களை பதவி விலகுமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வற்புறுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஜனரல பத்திரிகையின் கடந்தவார ஆசிரியர் தலையங்கமும் இந்த விடயத்திற்கு முக்கியத்துவமளித்திருந்தது. சுகாதார அமைச்சருக்கு அப்படி கோபம் பொத்துக் கொண்டு வந்தது ஏன் என்பது குறித்தே நாங்கள் அலசிப் பார்க்கின்றோம். இது விடயத்தில் அதிகாரசபை நிபுணர்கள் நடவடிக்கை எடுத்ததற்கான காரணத்தை ஆராய்ந்தால் இதனை அறிந்துகொள்ள முடியும்.
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
ஜனநாயகத்திற்கான புதிய அமைப்பு (படங்கள்)
ராஜபக்ச ஆட்சியை தோற்கடிக்க அடிப்படை பொது கொள்கையாக ஜனநாயக உரிமைகளை பாதுகாத்தல் இருந்தது. ராஜபக்ச ஜனநாயக உரிமைகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளார். ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்துவதே தமது பிரதான குறிக்கோள் என்று ஆட்சியை பிடித்த புதிய ஆட்சியாளர்கள் முன்னைய ஆட்சிக்கு மேலாக ஜனநாயக உரிமைகளுக்கு அச்சுறுத்தல்கள் விடுப்பவர்களாக மாறி உள்ளனர். இந்த அரசிடமிருந்து ஜனநாயக உரிமைகளுக்கு விடப்பட்டுள்ள சவால்களுக்கு எதிராக போராடவும், ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்கவும்; இடதுசாரி அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள், கலைஞர்கள் பல்வேறு குழுக்கள் இணைந்து ஜனநாயக்திற்காக போராட புதிய படையினை அமைத்துள்ளனர். இந்த அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (13-06-2016) கொழும்பு தேசிய நூல் நிலையத்தில் உள்ள ஆவணங்கள் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
தொண்டைமானில் தொடங்கி மனோ கணேசன் வரையான மலையக மக்களின் எதிரிகள்-135
ஊரான ஊர் இழந்தேன்
ஒத்தப்பனை தோப்பிழந்தேன்
பேரான கண்டியிலே
பெத்த தாயே நா மறந்தேன்
சி.கே. வேலுப்பிள்ளை அவர்கள் தொகுத்த "மலைநாட்டு மக்கள் பாடல்கள்" என்னும் தொகுப்பில் தமிழ்நாட்டில் இருந்து இலங்கையின் மலைகளிற்கு வயிற்றுப்பசி தீர்க்க வந்து வாழ்விழந்த ஒரு தோட்டத்தொழிலாளியின் துயரம் இவ்வாறு நாட்டார்பாடலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. "இந்தியாவில் அப்போது கடும் பஞ்சமும், வரட்சியும் நிலவியதால் அங்கிருந்த மக்களை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து வரக்கூடியதாக இருந்தது.
தொண்டைமானில் தொடங்கி மனோ கணேசன் வரையான மலையக மக்களின் எதிரிகள்-9
எல்லாளனின் "ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக்குறிப்பு": புத்தக விமர்சனம்
தனது குறுகிய கால (9 மாதங்கள்) இயக்க வாழ்க்கையையும், அக்கால அரசியல் சூழுலையும் நேர்மையான, பக்க சார்பற்ற சுய மீளாய்வுக்குட்படுத்திய ஆசிரியரின் முயற்ச்சி பாராட்டுக்குரியது. தான் சார்ந்த இயக்கத்தையும், ஏனைய இயக்கங்களையும் எவ்வித வேறுபாடுகளுமின்றி நடுநிலை தவறாது விமர்சிப்பது மெச்சத்கது. இப்படியான கண்ணோட்டங்களை இந்நாட்களில் வாசிக்கக் கிடைப்பது அரிது. சமகாலத்தில் வெளியாகும் போராட்டம் தொடர்பான நூல்களில் தவறுகளை நியாயப்படுத்தல் பலவவீன்னங்களை மிகைப்படுத்தல், ஒருசிலரை குறிவைத்து தாக்குதல் போன்னறவை அதிகமாகக்காணப்படும். இந்நூல் அதற்கு விதிவிலக்கு.
வர்க்கமும் - சட்டமும்
அரசின் பொருளாதாரக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்கு, சட்டம், நீதி.. இதை அடிப்படையாகக் கொண்ட அமைதியையே அரசு அமைதியாக முன்வைக்கின்றது. ஆளும் கூட்டம் மக்களால் "தேர்தலில்" தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற வகையில், அவர்களின் கொள்கைகளும் முடிவுகளும் கேள்விக்கு இடமற்றவையாக "ஜனநாயகம்" வரையறுக்கின்றது. இதை கேள்விக்குள்ளாக்கி மக்கள் போராடும் போது அரச பயங்கரவாதத்தை ஏவிவிடுகின்றனர். பிரான்ஸ் முதல் இலங்கை வரை, இதற்கு உலகில் எந்த விதிவிலக்கும் கிடையாது.
நூல்நிலையத்தை எரித்ததை ஒத்துக் கொள்ளாதவர்கள், இனப்படுகொலைக்கு நீதி வழங்குவார்களாம்!!-135
புத்தரின் படுகொலை!
நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது.
இதுதான் ஜனநாயகமா?
ஒவ்வொரு மனிதனும் நீதி நியாயத்தைத்தான் கேட்டு நிற்கின்றான். நாட்டின் அதிகார பீடத்திலுள்ளவர்கள் தான் அதனை நிறைவேற்ற வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்களிடமே நீதி நியாயத்தை கேட்க வேண்டிய நிலையில் இந்நாட்டு மக்கள் இருக்கின்றார்கள். முன்னாள் ஆட்சியாளர்களை விமர்சித்தும் ஜனநாயகத்தை கேட்டு மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தினையும் பயன்படுத்தியே இந்நாள் ஆட்சியாளர்கள் அதிகாரத்திற்கு வந்தார்கள். குறிப்பாக, ஜனநாயகம் சம்பந்தமான பிரச்சினைகள் அன்றைய தேர்தல் மேடைகளில் முழங்கியது எமக்கு நினைவிருக்கின்றது.
பண்டாரவளையில் கையெழுத்து போராட்டம்!
இன்று 02-06-2016, பண்டாரவளை நகரத்தில் புதிய ஆட்சியாளர்கள் தேர்தல் கால மேடைகளில் உறுதி அளித்த ஜனநாயக உரிமைகளை மக்களிற்கு உறுதிப்படுத்துமாறு கோரி கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது. உறுதி அளித்த ஜனநாயக உரிமைகளை உத்தரவாதப்படுத்துவதற்கு மாறாக மைத்திரி - ரணில் அரசு; மகிந்த அரசு போல் ஆட்சியினை தொடர முயற்சிக்கின்றது. மக்கள் தமது ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்த, இந்த அரசிற்கு எதிராக வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைக்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர்.
குமார் குணரத்தினத்தின் குடியுரிமையை ஏற்றுக்கொள்!- கையெழுத்து போராட்டம்
இன்று கொழும்பு மற்றும் களுத்துறையில் பொது மக்களின் கையெழுத்து போராட்டம் இடம்பெற்றது. "குமார் குணரத்தினத்தின் குடியுரிமையை ஏற்றுக்கொள்", "சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்" மற்றும் "அடக்குமுறை சட்டங்களை சுருட்டிக் கொள்" ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்றது.
பிரஞ்சு தொழிலாளர்களின் வீரஞ்செறிந்த போராட்டம்!
உழைப்பை இன்னும் அதிகமாகச் சுரண்டுவதற்கு பிரஞ்சு அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு எதிரான தொழிலாளர்களின் தொடர் போராட்டங்கள், உலகெங்குமான பொதுக்கவனத்தை ஈர்த்திருக்கின்றது. உழைப்பைச் சுரண்டுவதற்கு எதிரான மனித நடத்தையை ஒரு நாளும் அடிமைப்படுத்த முடியாது என்ற உண்மையை இந்தப் போராட்டங்கள் பறைசாற்றி நிற்கின்றது.
பொருளாதார அமைச்சர் மைக்குரான் (Macron) "நல்ல கூலி தான் உழைப்பு" ("La meilleure façon de se payer un costard c'est de travailler" - "The best way to pay for a suit is to work") என்று, தொழிற்சங்க உறுப்பினருடனான நடந்த தர்க்கத்தில் கூறுமளவுக்கு, ஆளும் வர்க்கம் வக்கரித்து நிற்கின்றது. கூலி என்பது உழைப்பில் கிடைக்கின்றதே ஒழிய, கூலி கொடுப்பதால் உழைப்பு வருவதில்லை. முதலாளி தனது பணத்தில் கூலி கொடுப்பதில்லை. உழைப்பைச் சுரண்டி அதில் ஒரு பகுதியை கொடுப்பது தான் கூலி. இந்த அடிப்படை உண்மையை மறுக்கின்ற பிரஞ்சு அரசு உழைக்கும் மக்களுக்கு எதிராக சட்டங்களைக் கொண்டு வந்திருக்கின்றது.
துன்புறும் வாழ்க்கைக்கு பதிலாக மகிழ்வுறும் வாழ்க்கை
இளமைக் காலத்தில் காணும் கனவு போல் வேறு பருவங்கள் எமது வாழ்வில் இருந்தது இல்லை. இளமை பருவத்தில் காணும் அக் கனவை நனவாக்கிப் பார்ப்பதற்காக எமது வாழ்நாள் முழுவதும் முயற்சிக்கும் எம்மில் அநேகம் பேருக்கு அக்கனவு கனவாக மட்டுமே இருக்கின்றது. பல அரசியல்வாதிகள் இளைஞர்களை தங்களது எடு பிடிகளாக வைத்திருப்பது, எமது கனவை எமக்கே விற்பதற்கே. முதலாளித்துவ கம்பனிகள் அவர்களது பண்டங்களை எமக்கு விற்பதும், எமது கனவை அவர்களின் பிரச்சாரத்திற்கு பாவிப்பதன் மூலமே.
விடியலை நோக்கிய ஒரு பயணம்-135
எல்லாளனின் "ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக்குறிப்பு" புத்தகத்தின் முன்னுரை இது.
சுட்டெரிக்கும் சூரியன்; வயல்களிற்கு, தோட்டங்களிற்கு, கடற்கரைகளிற்கு, கட்டிடவேலைகளிற்கு, அலுவலகங்களிற்கு செல்லும் மனிதர்கள்; பள்ளி செல்லும் மாணவர்கள், மாணவிகள்; பின்னேரங்களில் மதில்களில் சாய்ந்து கொண்டு மணிக்கணக்கில் பேசும் இளைஞர்கள்; மின்னல் வந்து போவது போல போய் வரும் பெண்கள் இவை எல்லாம் தான் எல்லோரையும் போல எல்லாளனின் உலகமாக இருந்தது. ஆனால் ஒரு நெருங்கிய சொந்தக்காரனைப் போல மரணம் அடிக்கடி எல்லாளனின் உலகத்திற்கு, தமிழர்களின் உலகத்திற்கு வந்து போனது. முரசுகள் முழங்கிக் கொண்டு போர் வந்தது. காற்றுக் கலைத்த கடற்கரை மணல் போல வாழ்க்கை கலைந்து போனது. முனை முறிந்து போன நட்சத்திரங்கள். மொட்டைப்பனை மரங்களின் மேல் பாதி உடைந்த நிலா என இயல்பு வாழ்க்கை அறுந்து வீழ்ந்தது.
அரசே, நயவஞ்சக அரசியல் ரீதியான கைதுகளை உடன் நிறுத்து!-79
முன்னிலை சோஷலிஸக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும், பிரச்சாரச் செயலரும், செயற்பாட்டாளருமான தோழர் புபுது ஜெயகொடவும் தோழர் சுஜித் குருவித்தவும் இன்று மே 25 ம் திகதி மருதானைப் பொலிசாரினால் அபாண்டமான சதி நோக்கு கொண்ட பொய்க்குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்டு, குற்றமாகச் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பிரச்சார செயலர் புபுது ஜயகொட மற்றும் சுஜித் குருவிட்ட பொலிசாரால் கைது!
முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சார செயலர் புபுது ஜயகொட மற்றும் கட்சி உறுப்பினர் சுஜித் குருவிட்ட ஆகியோர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னிலை சோசலிச கட்சி மீதான அடக்குமுறை தொடர்கின்றது. குடிவரவு, குடியகல்வு சட்டத்தை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு குமார் குணரத்தினம் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், கடந்த ஏப்ரல் முதலாம் திகதி அவருக்கு இந்த நாட்டு குடியுரிமையை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன் போது ஆர்ப்பாட்டகாரர்களிற்கும் அரச படைகளிற்கும் ஏற்ப்பட்ட முறுகல் நிலையில் அலுவலக கண்ணாடிகள் நொருங்கின.
மூன்று முக்கிய தலைவர்களை கைது செய்து போராட்டங்களை முடக்க நல்லாட்சி அரசு திட்டம்
முன்னிலை சோசலிசக்கட்சியின் மூன்று முக்கிய தலைவர்களை கைது செய்து, சிறையில் அடைப்பதன் மூலம் மக்கள், மாணவர் போராட்டங்களை முடக்க மைத்திரி - ரணில் நல்லாட்சி அரசு திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதற்காக போலி குற்றச்சாட்டுக்களை இந்த மூவர் மீதும் சுமத்தும் நடவடிக்கை பொலிஸ் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.