Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

குறுந் தமிழ் தேசியப் போராட்டம் தோல்வி பெற்றுள்ள நிலையில், அதற்கான காரணம் என்ன என்பதை வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்வது அவசியம். நேசனின் கடந்தகால அனுபவம், எதிர்மறையான புதைந்துபோன உண்மைகளையும், படிப்பினைகளையும் கொண்டதாக இன்றைய வரலாற்றுச் சூழலுடன் வெளிவருவது வரலாற்றுக்கு அவசியமானதாக உள்ளது. இந்தப் போராட்டம் தன்னைத்தானே தோல்விக்கு இழுத்துச் சென்று தனக்குத்தானே புதைகுழி தோண்டி தானே தன்னைப் புதைகுழியில் புதைக்க முன், தான் தவிர்ந்த மற்றைய எதனையும் முதலில் அழித்துப் புதைத்தது.

இதில் தப்பிப் பிழைத்தவர்களில் நேசனும் ஒருவர். முதலில் ஈழ மாணவர் பொது மன்றம் என்ற (GUESS) அமைப்பிலும், பின்னர் புளொட் அமைப்பிலும் இணைந்து செயல்பட்டவர். இறுதியில் புளொட்டிலிருந்து பிரிந்து சென்ற தீப்பொறியிலும் அதன் மத்திய குழுவிலும் செயல்பட்டவர்.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி அமைப்பு தனது முதலாவது சஞ்சிகையை வெளியிட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளாக நடத்திய நீடித்த போராட்டத்தை, பரந்துபட்ட மக்களிடம் எடுத்துச் செல்லும் பணியில் முன்னணி தனது முதலாவது காலடியை எடுத்து வைக்கின்றது.

இதை பெற்றுக் கொள்ளவும், இதை விநியோகிக்கவும் முன்வாருங்கள். உங்கள் பங்களிப்பை சமூகப் பொறுப்புடன் வழங்குங்கள். இது உங்கள் முன்னணி. இதை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டிய பொறுப்பு உங்களுடையது. அந்த வகையில் இதனைப் பெற்று, அதை விரிவாக்குங்கள். விமர்சனங்களை முன்வைத்து வளப்படுத்துங்கள். முன்னணிக்கான சந்தாக்களையும், நிதி உதவிகளையும் நீங்களாகவே முன்வந்து செய்யுங்கள். உங்களாலான அனைத்து உதவியையும், முன்னணி வளர்ச்சிக்கு வழங்குங்கள்.

கடுமையான இடைவிடாத போராட்டங்கள் மூலம் தான், முன்னணி உங்கள் கைகளுக்கு வந்தடைகின்றது. கண்மூடித்தனமான அறிவுபூர்வமற்ற வழிபாடும், தாம் அல்லாத அனைத்தையும் அச்சுறுத்தி அடிபணிய வைக்கும் வன்முறை சூழலில் அதை எதிர் கொண்டு போராடிய நாம், இன்று முன்னணி ஊடாகவும் உங்களுக்கு அறிமுகமாகிறோம்.

 

"சிக்கலான ஒன்றின் வளர்ச்சிப் போக்கில் பல முரண்பாடுகளைக் காணலாம். இவற்றில் ஒன்று கட்டாயம் முதன்மை முரண்பாடாகவே உள்ளது. இதன் வாழ்வும் வளர்ச்சியும் இதர முரண்பாடுகளின் வாழ்வையும்; வளர்ச்சியையும் தீர்மானிக்கின்றது அல்லது அவைகளின் மீது செல்வாக்குச் செலுத்துகிற முதன்மை முரண்பாடாகவே உள்ளது." முரண்பாடு பற்றி மாவோவின் கூற்று இது.

இதை மறுப்பது மார்க்சியமல்ல. ஆம், இது சர்வதேசியத்துக்கு எதிரானது. மீனவர் படுகொலையை முன்னிறுத்தி, மற்றைய முரண்பாடுகள் வாழமுற்படுவதையும், தீர்வு காண முற்படுவதையும் மூடிமறைப்பது சந்தர்ப்பவாதமாகும்.

இந்திய மீனவர்கள் படுகொலைக்கு எதிராக போராடுவதை இலங்கை மீனவர்களோ, இலங்கை மார்க்சியவாதிகளோ என்றும் எதிர்த்ததில்லை. அதை ஆதரிக்கின்றனர், தம்மாலான எல்லையில், அதற்காக குரல் கொடுக்கின்றனர், போராடுகின்றனர். மீனவர் படுகொலையில் இலங்கை மீனவர்கள் தான் முதலில் கொல்லப்பட்டனர். இப்படியிருக்க இதை மட்டும் நாம் எப்படி வேறுபடுத்தி அணுகியிருக்கமுடியும்! சொல்லுங்கள். ம.க.இ.க இலங்கை மார்க்சியவாதிகளைக் பார்த்துக் கூறுகின்றது "நடந்த அநீதி, கொடூரம் குறித்து பாராமுகமாக இருப்பதினால் வந்து விடும் என்று நினைத்தால் அது பேதமை, கண்டித்தக்கத்து" என்கின்றனர். இப்படி கூறி இதை திசைதிருப்புவது தான், இங்கு கண்டிக்கத்தக்கது.

இலங்கை மார்க்சியவாதிகள் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை ஆதரிப்பதாக காட்டுகின்ற குறுகிய இட்டுக்கட்டிய தர்க்கத்தைக் கொண்டு, சந்தர்ப்பவாத அரசியல் ம.க.இ.க நடத்த முனைகின்றது. வினவு பின்னோட்டங்களில் இலங்கை மார்க்சியவாதிகள், தாங்கள் இந்தப் படுகொலைகளைக் கண்டிப்பதாக அடிக்கடி கூறிக்கொண்டு தான், அவர்களுக்கு விளக்க முற்படுகின்றனர். இப்படி சர்வதேசிய அரசியலோ, கேவலமாக்கப்பட்டு இருக்கின்றது. ஏதோ ம.க.இ.க மட்டும் தான் இந்தப் படுகொலைகளை எதிர்த்துப் போராடுவதாகவும், இலங்கை மார்க்சியவாதிகள் கொலையை ஆதரிப்பதாகவும் இட்டுக்கட்ட முனைகின்றனர். இது இலங்கை மார்க்சியவாதிகள் மேலான, பேதமையுடன் கூடிய அவதூறாகும்.

 

”மே18” இயக்கம் தம்மை மே 18 ற்கு பிற்பாடான தொடர்ச்சியாக திடீரென மீண்டும் பிரகடனம் செய்துகொண்ட "புரட்சிக்காரன்" தான், ”மே18” யைச் சேர்ந்த ரகுமான் ஜான். அவர் தேசம்நெற்றில் எமது அமைப்பு தோழர்கள் மேல் கல் எறிந்துள்ளார். அது தொடர்பாக பதிலளிக்க முன்னர், அதில் அவர் முன்வைத்த மற்றைய ஓரிரு விடையத்தை பற்றி குறிப்பாக கூறிச் செல்வது அவசியமானதாகின்றது.

1. முன்னாள் புளட் மற்றும் தீப்பொறி அமைப்பின் முக்கிய உறுப்பினர்களும், இவருடன் ஒன்றாக இயங்கியவர்களுமான கண்ணாடிச் சந்திரன் மற்றும் நேசன் தொடர்பாக முன்வைத்த குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் எவையும் அரசியல் நேர்மையின் பாலானதல்ல. இதில் கண்ணாடிச் சந்திரன் தீப்பொறியைவிட்டு வெளியேறிய போது, அவரை போட்டுத்தள்ளக் கோரியவர் தான் இந்த ரகுமான் ஜான். இதை பிரபாகரனோ, உமாமகேஸ்வரனோ கோரியிருந்தால் ஆச்சரியமல்ல. ரகுமான் ஜான் கோரினார். தீப்பொறி ஏன் புலிக்கு ஏற்ற இன்னொரு புலியாகவே ஆனது என்பதற்கு இவைகள்தான் உதாரணம். இதே ரகுமான் ஜான் ”மே 18” ஆனவுடன், பழைய ஆவணங்களைத் தேடி அழிப்பதில் கூட குறிப்பாக கவனம் செலுத்தினார்.

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும்:    22-02-2011

யதார்த்தம் உண்மைகள் குறுகிய இனவாத உணர்வுகளுக்குள் உள்வாங்கப்படுகின்றன!

மகிந்தாவிற்கு புற்றுநோயாம்!

யாழ்ப்பாணத்தில் 70.ம் ஆண்டுக் காலகட்டத்தில் ஓர் வாரப்பத்திரிகை (மக்கள் குரல்) வெளிவந்தது. அது சில அர்த்தமற்ற செய்திகளை வெளியிட்டு, இது "மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகின்றது" என ஒரு போடு போடும். இப்பாங்கில் புலம் பெயர்வில் சில இணைய தளங்கள். மகிந்தா கடைசியாக அமெரிக்கா சென்றபோது பல ஊடகங்களுக்கு பல ஊகங்கள். இதில் சில மகிந்தாவிற்கு "மாற்றமுடியா" வியாதியொன்று அதனாலேயே அமெரிக்கா சென்றார் என்றாக்கின. இது உச்சகட்டமாகி கடந்த வாரம் மகிந்தாவிற்கு (எங்கேயோ)  புற்றுநோய் என ஓர் போடு போட்டது ஓர் இணையதளம். அப்படியில்லையென அவர் 'பூரண சுகதேகிதான்' என மகிந்தா தேகப்பயிற்சி செய்வதைக் கூட படம் போட்டுக் காட்டின சில ஊடகங்ககள். மகிந்தா நோயாளியா? சுகதேகியா? என்பது ஒருபுறமிருக்க,

29- 30.01.2011 ஆகிய இரு தினங்கள் தனது இரண்டாவது மாநாட்டினை ஜரோப்பிய நகரம் ஒன்றில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி நடத்தியிருந்தது. முதல் மாநாட்டின் பின் (18 மாதங்கள் கழிந்த நிலையில்) சில புதிய உறுப்பினர்களை உள்ளடக்கி இந்த மாநாடு நிகழ்ந்தது. இதில் இலங்கை உள்ளிட்ட பல ஜரோப்பிய நாடுகளிலும் இருந்து 19 உறுப்பினர்கள் பங்கு பற்றி இருந்தார்கள்.

 

தோழமையையும் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கைகளையும் கொண்ட உறுதியுடன் மாநாடு தன்னைத்தானே பலப்படுத்திக் கொண்டதுடன் ஒரு அரசியல்திட்டம் மற்றும் வேலைமுறைகள் என்று பல்வேறு விரிந்த தளத்தில் தன்னைத்தான் ஒழுங்கமைத்து கொண்டுள்ளது.

•அரசியல் ரீதியாக உரிமைகள் மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட வர்க்க மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியது இந்த மாநாடு. உலகெங்கும் இருக்கக்கூடிய இலங்கையைச் சார்ந்த மார்க்சிய லெனிய மாவோசிய சிந்தனை கொண்டவர்கள் முதல் புதிய ஜனநாயக புரட்சிகர அரசியலை நேசிக்கின்ற அனைத்து சக்திகளையும்; பிரதிநிதித்துவப்படுத்தியது. அதேவேளையில் இது இலங்கைக்கான ஒரு கட்சி அல்ல என்பதனை மிகவும் திட்டவட்டமாக தெளிவுபடுத்திக் கொண்டது.

இலங்கை வடகடலில் இந்திய மீனவர்களின் கைதுக்கு எதிரான போராட்டங்கள், இலங்கையின் இறையாண்மையை மட்டுமின்றி அங்கு வாழும் மக்களின் உரிமையையும் கூட மறுக்கின்றது.

இந்திய விஸ்தரிப்புவாதிகளும், தமிழக குறுந்தேசியவாதிகளும் இலங்கை மீனவர்களின் வாழ்வையே மறுத்து நிற்கின்றனர். எல்லையும் கடந்து கடல் வளத்தை அழிக்கின்ற அடாவடித்தனத்தை, அது நியாயப்படுத்துகின்றது. தமிழ் தேசியமும், இடது வேஷம் போட்ட தேசியவாதமும், இதற்கு பின்னால் நின்று குடை பிடிக்கின்றன. இந்த நிலையில் இலங்கை மீனவர்கள் அரசியல் அனாதைகளாகி, பேரினவாதத்திடமே தமக்கான நியாயத்தை கோருகின்ற அவலம்.

புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயற்பாட்டாளராகச் செயற்பட்ட கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் அரசியலுக்கு வந்தால், அதனை ஏற்றுக் கொள்ள தாங்கள் தயார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஆயிரம் மலர்கள் மலரட்டும் என்பதே எங்களுடைய சித்தாந்தம். அந்த வகையில் ஆயுதப் போராட்டத்தை விட்டு ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்த கருணாவை கூட நாங்களே முன்னின்று வரவேற்றோம். எனினும் அவர்களுடைய அரசியல் இருப்பை உறுதி செய்வது மக்கள் கைகளிலேயே உள்ளது." என்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயற்பாட்டாளராகச் செயற்பட்ட கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் அரசியலுக்கு வந்தால், அதனை ஏற்றுக் கொள்ள தாங்கள் தயார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஆயிரம் மலர்கள் மலரட்டும் என்பதே எங்களுடைய சித்தாந்தம். அந்த வகையில் ஆயுதப் போராட்டத்தை விட்டு ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்த கருணாவை கூட நாங்களே முன்னின்று வரவேற்றோம். எனினும் அவர்களுடைய அரசியல் இருப்பை உறுதி செய்வது மக்கள் கைகளிலேயே உள்ளது." என்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

யாழ் மாவட்டத்தில்அண்மைக் காலமாக கலாச்சாரச் சீரழிவும், சமூகச் சீரழிவும் நடந்து வருவதாக யாழ் அரச அதிபர் பத்திகைகளுக்கு தெரிவித்துள்ளார். இச்சீரழிவில் பாதிப்படைபவர்கள் இளம் சமூகத்தினரே என்றும் குறிப்பிட்டு அதற்கான விபரங்களையும் வழங்கியுள்ளார். அவரின் தகவலின்படி 54 பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும், 247 முறையற்ற கர்ப்பங்களும்,14 பேர் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியவாதிகள் கூறுகின்றனர் இது “சிங்களவனின்” சுதந்திர தினம் என்று. நாங்கள் கூறுகின்றோம், அதுவுமில்லை என்று. தமிழன், சிங்களவன் என்று எவனுக்கும், இலங்கையில் சுதந்திரம் கிடையாது. ஆம் இலங்கை மக்களுக்கு சுதந்திரமில்லை. இது தானே உண்மை.

புதுக்கட்சி ஆரம்பிக்கப் போகின்றார் கே.பி?

டக்கிளஸின் அரசியலுக்கு ஆயுள் கண்டமோ?

புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பது குறித்து "விடுதலைப்  புலிகளின் முன்னாள் குமாரன்  (கே.பி)"  முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட இருக்கும் அவரது கட்சி நடுநிலையான போக்கைக் கொண்டதாக இருக்கும் என்று இது தொடர்பான செய்தி வெளியிட்டுள்ள அரசியல் ஆருடர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கான ஒத்திக்கைகளை வடபகுதி சென்று நடாத்தி சென்றுள்ளார். இதன் பின் தன் ஒத்திக்கை (வடபகுதியில், மேலும் தன் சர்வாதிகாரத்தை சதிராட்ட மக்களை சாகடிக்க) ஆய்வறிக்கையை  கோத்தபாயவிற்கு சமர்ப்பித்து, ஒப்புதலும் வாங்கியுள்ளார்.

புதுக்கட்சி ஆரம்பிக்கப் போகின்றார் கே.பி?

டக்கிளஸின் அரசியலுக்கு ஆயுள் கண்டமோ?

புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிப்பது குறித்து "விடுதலைப்  புலிகளின் முன்னாள் குமாரன்  (கே.பி)"  முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட இருக்கும் அவரது கட்சி நடுநிலையான போக்கைக் கொண்டதாக இருக்கும் என்று இது தொடர்பான செய்தி வெளியிட்டுள்ள அரசியல் ஆருடர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கான ஒத்திக்கைகளை வடபகுதி சென்று நடாத்தி சென்றுள்ளார். இதன் பின் தன் ஒத்திக்கை (வடபகுதியில், மேலும் தன் சர்வாதிகாரத்தை சதிராட்ட மக்களை சாகடிக்க) ஆய்வறிக்கையை  கோத்தபாயவிற்கு சமர்ப்பித்து, ஒப்புதலும் வாங்கியுள்ளார்.

ராசா கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழகத்தின் மீடியாக்களில் பரபரப்புக்கு இன்னும் ஒரு இரண்டு வாரத்திற்காவது பஞ்சமிருக்காது. ஆனால் கபில் சிபல் வாடிக்கையாளர்களை மிரட்டத் தொடங்கி விட்டார். ஊழல் அது இது என்று பேசினால் இனிமேல் இன்கம்மிங்கிற்கும் பீஸ் வாங்குவேன் என்று அந்தக் காலத்தை நினைவுபடுத்த துவங்கி விட்டார்.
தமிழகத்தின் மீனவர்கள் இலங்கை படையினரால் சுட்டுக் கொல்லப்படுவதை தடுக்க ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பதே தவறு என புத்தகம் போட்ட பத்ரி ஊரைக் கூட்டுகிறார்.

தனியார்மயம் தவறு என்பதை அதிகார வர்க்கத்தின் அங்கமான நீதிமன்றமே ஓரளவு புரிய நேர்ந்திருக்கும் இந்த தருணத்தில் வின்-வின் முறைப்படி எப்படி தண்ணீரை நாசமாக்கியாவது நொய்யலையும் காப்பாற்றி, சாயப்பட்டறையையும் காப்பாற்றுவது என்பதற்கு ஆலோசனை கூறி நடுப்பக்க கட்டுரை வரைகிறது தினமணி.

 

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும்:    09-01-2011

"காவல்துறையினர் உங்களது நின்மதியான நித்திரைக்காகவே, நித்திரையின்றி அர்ப்பணிப்புடன் சேவை செய்கின்றனர்"? –என்கினறார் காவல்துறை அத்தியட்சகர்

யாழ்பாண குடாநாட்டில் இடம்பெறுகின்ற கொலைகள், தனிப்பட்ட ரீதியில் இடம்பெறுகின்ற கொலைகள் என யாழ் மாவட்டத்தின் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகர் நெவில் பத்மதேவ தெரிவித்தார்.  யாழ் விரசிங்கம் மண்டபத்தில் பொது அமைப்புக்கள், வர்த்த சங்கப் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர் சகிதம் இடம்பெற்ற குடாநாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக மகாநாட்டிலேயே நெவில் பத்மதேவ இவ்வாறு தெரிவித்தார்.


செய்தியும் செய்திக்கண்ணோட்டமும்:    26-12-2010

"தேசிய நிகழ்வுகளில் தேசிய கீதம் சிங்களத்தில் இசைக்கப்படுவதில் தவறில்லை":-----டக்ளஸ் தேவானந்தா

இலங்கையின் முதலாவது பிரதமர் யாழ் சென்றபோது தமிழில் தான் தேசிய கீதம் பாடப்பட்டது. வரலாறு தெரியாது, கூலிக்கு மாரடிக்கும் டக்ளஸ்!

"ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கலந்து கொள்ளும் தேசிய நிகழ்வுகளின் போது தேசிய கீதம் சிங்களத்திலேயே இசைக்கப்படுவது வழக்கம் அதில் தவறிருப்பதாக கூறமுடியாது"  என்று டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்துகின்றார்~~.

அடிவருடி பாத பூஜை செய்யும் வடக்கின் "வசந்தத்திற்கு" இலங்கையின் அரசியல் வரலாறு தெரியாது. இலங்கையின் முதற் பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா முதன் முதலில் யாழ் சென்றபோது தமிழில் தான் தேசிய கீதம் பாடப்பட்டது. இது தெரியாது, "யாழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்வும் கூட பிரதமர் கலந்து கொள்ளும் ஒரு தேசிய நிகழ்வு என்ற வகையில் சிங்களத்தில் தேசிய கீதம் இசைக்கப்படுவதில் தவறில்லை என்கின்றது".  இந்நோக்கில் தேசியகீத வரலாற்றையும், தொடர்ந்து வந்த  பேரினவாத அரசுகள் அதை இல்லாதாக்கிய வரலாற்றையும், டக்ளஸ் போன்ற கூலிக்கு மாரடிக்கும் பேரினவாதக் கூட்டத்திற்கும் ஆவணத்தினூடே சமர்ப்பிக்கினறோம்,

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE