Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

பேரினவாத இனவெறிக் கொண்டாட்டங்கள்!

பௌத்த-சிங்கள அரசியலே இலங்கையின் எதிர்கால நிகழ்ச்சிநிரல்!

“பழைய காயங்களை பெருப்பித்து மக்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்த இனிமேல் ஒரு போதும் இடமில்லை”  என்பதை அரசியல் கட்சிகளுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என கொழும்பு-காலிமுகத்திடலில் நடைபெற்ற “யுத்த இன வெறிக் கொண்டாட்ட” நிகழ்வில் மகிந்த ராஐபக்ச கூறியுள்ளார்.

சில சினிமாப் படங்கள் திரையரங்குகளில் திரையிடப்பட்டவுடன், ஓரிரு வாரங்கள் அமளி—துமளியாகத் தான் ஓடும். இது போன்று ஜெயலலிதாவின் “பொருளாதாரத்தடை”—“கச்சதீவை மீட்பேன்” அரசியல் சினிமா படங்கள் தமிழக சட்டசபையில் விசிலடிப்புடன் அமளி—துமளியாகத்தான் ஓடுகிறது.

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 03/07/2011

பான்கீமூன் அறிக்கை சனல் 4-ன் காணொளி போன்றவற்றால் மகிந்த-சகோதரப் பேய்கள் ஊர் உலகம் முழுவதும் அபயக்குரலுடன் வெருண்டடித்து ஓடித்திரிகின்றன. தருமஸ்தன் அறிக்கை பொய். சனல் 4-ன் படங்கள் போலியென சம்பந்த — சம்பந்தமில்லாமல் உளறுகின்றன.

“தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்று 70-ம் ஆண்டு பொதுத் தேர்தல் இறுதி முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த வேளையில் (யாழ் கச்சேரியில் இருந்து தேர்தல் முடிவுகளை அறிந்து கொண்டிருந்த) தமிழரசுக்கட்சித்தலைவர் செல்வநாயகம் கூறிய வாhத்தைகள் இது. தமிழ்ப் பகுதிகளில், இத் தேர்தலில் அமிர்தலிங்கம், நாகநாதன் போன்ற பெருந்தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டதோடு, தென்னிலங்கையில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூட்டணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வந்த காலம் இது. இதற்கு முந்திய இரு தேர்தல்களில் தமிழரசுக் கட்சியின் உதவியுடனேயே மாறி மாறி வந்த ஸ்ரீலங்கா, யூ.என்.பி. அரசுகள் ஆட்சியமைத்திருந்தன. இக்காலங்களில் தாங்களே தென்னிலங்கை அரசியலை தீர்மானிக்கும் பிரதான சக்திகள் எனக் கூறிவந்த தமிழரசுக்கட்சிக்கு இத்தேர்தல் முடிவுகள் பெரும் பேரிடியைக் கொடுத்து விட்டது.

 

“தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” என்று 70-ம் ஆண்டு பொதுத் தேர்தல் இறுதி முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த வேளையில் (யாழ் கச்சேரியில் இருந்து தேர்தல் முடிவுகளை அறிந்து கொண்டிருந்த) தமிழரசுக்கட்சித்தலைவர் செல்வநாயகம் கூறிய வாhத்தைகள் இது. தமிழ்ப் பகுதிகளில், இத் தேர்தலில் அமிர்தலிங்கம், நாகநாதன் போன்ற பெருந்தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டதோடு, தென்னிலங்கையில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கூட்டணி மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வந்த காலம் இது. இதற்கு முந்திய இரு தேர்தல்களில் தமிழரசுக் கட்சியின் உதவியுடனேயே மாறி மாறி வந்த ஸ்ரீலங்கா, யூ.என்.பி. அரசுகள் ஆட்சியமைத்திருந்தன. இக்காலங்களில் தாங்களே தென்னிலங்கை அரசியலை தீர்மானிக்கும் பிரதான சக்திகள் எனக் கூறிவந்த தமிழரசுக்கட்சிக்கு இத்தேர்தல் முடிவுகள் பெரும் பேரிடியைக் கொடுத்து விட்டது.

 

பேயாட்சியின் மகிந்தப் பூதங்களே மக்களை வெருட்டுகின்றன

கடந்த இருவாரங்களாக தமிழர் பிதேசங்கள் (கிழக்கு மாகாணம், மலையகம்) எங்கும் கிறீஸ் பூதமென்னும் வடிவில் மர்ம மனிதர்களின் கெடுபிடி சொல்லொனா தொல்லையாகியுள்ளது! மக்களின் அன்றாட வாழ்வு அவலமாகியுள்ளது. இரவு 10-மணி வரையிலான அவர்களின் இயல்பு வாழ்வு இல்லாததாகி, மாலை 6-மணிக்குள் ஊரடங்குச் சட்டம்போல் பயபீதியுடன் வீட்டிற்குள் முடங்குகின்றனர்.

சர்வதேச மனிதவுரிமைகள் தினத்தில் லலித் குமார, குகன் முருகன் ஆகிய இருவரும் அரச கூலிப் படைகளால் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென புதிய ஜனநாயக மக்கள் முன்னணி கோருகின்றது. அவர்கள் இருவரின் விடுதலைக்காக நடாத்தப்படும் நாடு தழுவிய ரீதியில் நடாத்தப்படும் அனைத்து போராட்டங்களுக்கும், தனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றது.

“சட்டத்தின் முன்பு ஆட்கள் எல்லோரும் சமமானவர்கள். அத்துடன் அவர்கள் சட்டத்தினால் பாதுகாக்கப்படுவற்கும் உரித்துடையவர்கள்.”
இவ்வாறாக இலங்கைச் சனநாயக சோசலிக் குடியரசு அரசியலைமப்பில் 12ம் சரத்தின் 1ம் உறுப்புரை கூறுகிறது.

நவகொலனியத்தின் கீழ்த் தேசியமும் தேசமாதலும்:
வரைவிலக்கணப் பிரச்சனைகள்

தேச அரசு என்பது முதலாளியத்தின் துணை விளைவு. ஓரு சமூகப் பொருளாதார அமைப்பாக உள்ள மக்கள்திரள்கட்குச் சுயாதீனமான இருப்பு தேவைப்பட்ட போதே தேசம் என்பதற்கான வரைவிலக்கணம் தேவைப்பட்டது. ஐரோப்பாவில் முதலாளியம் ஏகாதிபத்தியமாக விருத்திபெற்ற போது, தம்மினும் வலியதான ஒரு நாட்டின் ஆளும் வர்க்கத்தால், தேச நலனின் பேரில், ஒடுக்குமுறை ஆதிக்கத்துக்கு உட்பட்ட நாடுகளும் மக்களும் தமக்கெனச் சுதந்திரமான அரசுகளைக் கோரினர்.

இழுத்துச்செல்லப்பட்டு, கொடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கி, கண்களை பிடுங்கி எடுத்து, சுட்டுக்கொல்லப்பட்டார் தோழர் வர்கீஸ். இவர் செய்த குற்றமென்ன? சிபிஎம் கட்சியிலிருந்து விலகி புரட்சிகர நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்து கேரளத்தின் வயநாடு பகுதியில் தேயிலைத்தோட்ட முதலாளிகளின், நிலப்பிரபுக்களின் கொடுரச் சுரண்டல்களையும், கொத்தடைமைத்தனங்களையும் அந்தப்பகுதி மக்களிடம் விளக்கி, அவர்களை எழுச்சியுறச் செய்தார். பழங்குடி மக்களைப் பிடித்து, வள்ளியூர் கோவில் திருவிழாவில் ஆடுமாடுகளைப் போல விற்கும் நிலப்பிரபுக்களின் அடாவடியை எதிர்த்துப் போராடினார். இவைகளைத்தான் குற்றம் என்று கூறி இழுத்துச் சென்றது அதிரடிப்படை போலீஸ்.

1917 நவம்பர். பிரம்மாண்டமான ரசியா கரைந்து உருமாறிக் கொண்டிருந்தது. 1917 பிப்ரவரி முதலாளித்துவ புரட்சி பழைய ஆட்சியின் செல்லரித்துப் போன அமைப்பை நீடிக்க வைத்ததற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாமல் முடிவுற்றது. ஆனால் இப்போது போல்ஷ்விக்கு புரட்சியாளர்கள் இந்த அமைப்பைச் சிதறச் செய்து விட்டனர்.

வெகுஐனப்போராட்டங்களை பயங்கரவாதம் என்கின்றது அரசு!

சமகால உலகில் இனவாத அடக்குமுறைகள் நவீனமயப்படுத்தப்பட்டநிகழ்ச்சி நிரலாக உள்ள காலகட்டத்தில், மகிந்தப் பேரினவாதம் மூடநம்பிக்கையின்பாற்பட்ட (பூதம்) இனவாத நடவடிக்கைகளை தமிழர்தாயகத்தில் கட்டவிழ்த்துவிட்டுள்ளது!

முள்ளியவாய்க்காலின் மே 29-வரை தமிழ்மக்களை நவீனகருவிகள் கொணடே படுகொலைகள் செய்தது. இதனால் சர்வதேச போர்க்குற்றவாளியாகிய மகிந்த அரசு, தற்போது மூடத்தின் பார்ப்பட்ட மர்மமனித பூதத் தாக்குதல்களுக்கூடாக தன்கருமங்களையாற்ற முற்பட்டது. ஆனாலும் அதுவும் தோல்வியாகி தேசிய-சர்வதேசத்தின் பால் பேய்-பிசாசாக அம்பலப்பட்டு நிற்கினறது.

ஞாபகங்களை அழிக்கும் அரசியல் கொடியது – யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்

அண்மையில் நடைபெற்ற ஐ.நா.சபை கூட்டத்தில் இலங்கை ஐனாதிபதி பயங்கரவாதத்திற்கு எதிராக பெரும் கதாப்பிரசங்கம் செய்துள்ளார்! அத்தோடு உலகில் பயங்கரவாதத்தை எப்படி இல்லாதாக்குவது என்பதற்கு பேருபதேசம் செய்து தன் பேச்சின் பெரும் நேரத்தை செலவு செய்துள்ளார். அதே நேரம் இவருக்கு பதில் சொல்லும் வகையில்; இவரின் முன்னாள் இந்தியக் கூட்டாளி இவருக்கு எதிராக ஜெனீவாக் கூட்டத்தில் பெரும் தாக்குதல் நடாத்தியுள்ளார்.

பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை நாடுகள் உருவாக்குகின்றபோது அவை மனித உரிமைகளைப் பற்றி கவலையே படுவதில்லையென்று இலங்கையைச் சுட்டிக்காட்டி ஐநாவின் மனித உரிமைகளுக்கான ஆணையர் நவநீதம்பிள்ளை கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா என்னடா..!   ஐ.நா. என்னடா..!
நான் நினைக்கிறதை செய்பவன். எனக்கு யார்
பற்றியும் கவலை இல்லை..,
என கோத்தபாயாவும்..,
மக்களையும் வெள்ளைக்  கொடியோடு
வந்தவர்களைக் கொன்றொழித்தது யார்?
பிரபாகரனை நாமா இல்லாதாக்கினோம்?
இதை நேர்கொண்டு கண்டது யார்?
நிபுணர் குழுவிற்கு மாலைக்கண்ணா?
அல்லது மஞ்சள் காமாளையா?
என மகிந்தாவும் குமுறுகின்றார்கள்.

அமெரிக்கா என்னடா..!   ஐ.நா. என்னடா..!
நான் நினைக்கிறதை செய்பவன். எனக்கு யார்
பற்றியும் கவலை இல்லை..,
என கோத்தபாயாவும்..,
மக்களையும் வெள்ளைக்  கொடியோடு
வந்தவர்களைக் கொன்றொழித்தது யார்?
பிரபாகரனை நாமா இல்லாதாக்கினோம்?
இதை நேர்கொண்டு கண்டது யார்?
நிபுணர் குழுவிற்கு மாலைக்கண்ணா?
அல்லது மஞ்சள் காமாளையா?
என மகிந்தாவும் குமுறுகின்றார்கள்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE