இலங்கையில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் எல்லையிலுள்ள நவகிரி குளத்தில் தற்போது தமக்கு மீன் பிடித் தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட எல்லைக் கிராம தமிழ் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
1990 ஆண்டிற்கு முற்பட்ட காலத்திலிருந்தே தாங்களே இந்த குளத்தில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறும் தமிழ் மீனவர்கள், இப்போது அம்பாறை மாவட்ட எல்லைக் கிராம சிங்கள மீனவர்கள் அங்கு தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.