Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 05-09-2010

மூளையெல்லாம்,  முஸ்லிம்காங்கிரஸ் மூளை போலகுமா?

சிந்தனையெல்லாம், கக்கீம் சிந்தனை போலாகுமா?

மகிந்தமடி இப்போ உங்கள் மஞ்சமல்லவா?

மகிந்த ‘ஆசை’யில் வந்த அக்கறை மக்கள் அபிலாசையில் இல்லை!

மகிந்தாவிற்கு அண்மைக்காலமாக சில சின்னச் சின்னச் ஆசைகள்!. இப்போ அதை முஸ்லிம் காங்கிரஸ் தீர்த்து வைத்துள்ளது. கொஞ்ச நாளாக ரணிலும்–மகிந்தாவும் அடிக்கடி அவசரச—அவசரமாக சந்திப்பார்கள்.  கேட்டால் நிறை வேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவிக்காக என்பார்கள். கடைசிச் சந்திப்பில் மகிந்தா தன் உள்ளக்கிடக்கையை  ( 3-வது தடவையும் ஜனாதிபதியாக தொடர) சொல்லியதில் ரணில்–மகிந்த காதல் முறிந்தே போயிற்று.  இப்போ ஏற்பட்ட கக்கீம்–மகிந்தக் காதலில்,  மலர்ந்த தேன் நிலவில்–மகிந்தா தன் அரசியல் உச்சக்கட்ட ‘உச்சாடானத்தை’யே அடைந்து விட்டார். இதனால் முஸ்லிம் காங்கிரஸ் மகிந்தாவின் ‘சின்னவீடாகி’யுள்ளது!. அதற்கேற்ப அது தன் ‘அரசியல் விபச்சாரத்தை’ ஆரம்பித்தள்ளது. அதை ரவூப் கக்கீமே சொல்கின்றார்

முருகபூபதி கொழும்பில் நடாத்த திட்டமிட்ட எழுத்தாளர்கள் ஓன்றுகூடல் அரசின் தயவுடனானதா?

சுதந்திரத் தன்மை கொண்டதா?..

நிகழ்வு: 2011 ஜனவரியில் இலங்கையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றுகூடல்

முருகபூபதி – அவுஸ்திரேலியா

இக் குழப்பங்களுக்கு மத்தியில் முருகபூபதி அவர்கள் மாநாடு பற்றிய தற்போதைய நிலையை விளக்க வேண்டும், அதன்பின் எம் மதிப்பீட்டை முன்வைப்போம்!

அதற்கு முன்பாக  எஸ்.பொ.என்கின்ற (அறுபது ஆண்டு) பழம்பெரும் எழுத்தாளர் பற்றிய கடந்த கால செயற்பாடுகள் பற்றி கொஞ்சம் பார்ப்போம். இதை இவர் எழுதிய ‘வரலாற்றில் வாழ்தல்’ எனும் நூலுக்கு பெர்லின் தமிழரசன் அவர்கள் எழுதிய விமர்சனத்திற்கு ஊடாக பார்த்தால் போதுமென நினைக்கின்றேன். மிக நீண்டதுதான்!. ஆனால் இன்றைய இளம் சந்ததியினர், இவரின் அடியுண்ட—கலை-இலக்கிய அரசியலின் ஓட்டை—ஒடிசல்களை அறிய வேண்டும்!

அந் நோக்கில் இதை கூடியளவு சுருக்கிப் பிரசுரிக்கின்றோம்.

தமிழரசன் குறிப்புகள்!

தமிழ் எழுத்தாளர் மாநாட்டுக்கு கொழும்பில் விரிவான ஏற்பாடு

எதிர்வரும் ஜனவரி மாதம் 6, 7, 8, 9 ஆம் திகதிகளில், ஏற்கனவே திட்டமிட்டவாறு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடு கொழும்பில் நடைபெறும் என்று இம்மகாநாட்டின் பிரதம அமைப்பாளர் லெ. முருகபூபதியும் மகாநாட்டிற்கான இலங்கை இணைப்பாளரும் ‘ஞானம்’ ஆசிரியர் திருஞானசேகரனும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கலை, இலக்கிய ஊடகத்துறையில் அறிந்ததை பகிர்தல், அறியாததை அறிந்துகொள்ள முயல்தல் என்ற அடிப்படை நோக்கத்துடன் இந்த மாநாடு கடந்த சில வருடங்களாகவே ஆலோசிக்கப்பட்டது எனவும் இது தொடர்பான விரிவாக ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் திகதி கொழும்பில் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடந்தது எனவும் இக்கூட்டத்தில் தகைமைசார் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துக்கூறியதுடன் மகாநாடு எவ்வாறு அமையவேண்டும் எனவும் பல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார் எனவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேராசிரியர் சிவத்தம்பி, “அண்மைக்காலமாக தமிழ் எழுத்தாளர்களின் பரந்துபட்ட சந்திப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. இதனை ஒரு தேக்க நிலையாகவே நோக்கலாம். நீண்டதொரு இடைவெளிக்குப் பின்னர் சர்வதேச மட்டத்தில் தமிழ் எழுத்தாளர் மகாநாட்டை கொழும்பில் நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி வரவேற்கப்படவேண்டியதொன்றாகும்.

இந்த மகாநாடு வெறுமனே தமிழ் எழுத்தாளர்கள் கூடிக்கலையும் மகாநாடாக அமைந்துவிடாமல் தமிழின் பெருமையை மேலும் விரிவுபடுத்துவதாகவும் வளமடையச் செய்வதாகவும் அமையவேண்டும். அதற்குரிய விதத்தில் திட்டங்கள் தயாரிக்கப்படவேண்டும். ஆரோக்கியமான வேலைத் திட்டமொன்றை முன்வைத்து அதற்கான செயற்பாடுகளை முன்கொண்டு செல்லவேண்டும்.

சர்வதேச மட்டத்தில் பரந்துபட்டுபோயுள்ள புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்கள் அனைவரையும் இந்த மகாநாடு உள்வாங்கவேண்டும். அதற்கான கால அவகாசம் தாராளமாக இருப்பதாகவே நான் கருதுகிறேன். 2011 ஜனவரியில் மகாநாட்டை நடத்த திட்டமிட்டிருக்கின்றார்கள்.

ஒருவருட காலம் உள்ளது. காத்திரமாக மகாநாட்டை நடத்த முடியும். எனவே மிகவும் ஆழமாக காரியமாற்றி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது” என்று பேராசிரியர் இக்கூட்டத்தில் மிகவும தெளிவாகவும் உறுதியாகவும் உரையாற்றி மகாநாட்டு ஏற்பாட்டாளர்களை உற்சாகமூட்டினார்.

இந்த மகாநாட்டுக்கான செலவுகளுக்குத் தேவையான நிதியுதவி புலம்பெயர்ந்த தமிழ் எழுத்தாளர்களிடமிருந்தே பெற்றுக்கொள்ளப்படும் எனவும் வெளிநாடுகளில் வதியும் ஈழத்து எழுத்தாளர்கள் தலா நூறு டொலர்களை வழங்குவதன் மூலம் மகாநாட்டை திட்டமிட்டவாறு நடத்த முடியும் எனவும், மகாநாட்டில் ஒரு நம்பிக்கை நிதியத்தை உருவாக்கி போரினால், இயற்கை அனர்த்தத்தினால், விபத்தினால் மற்றும் வறுமையினால் பாதிக்கப்பட்ட எழுத்தாளர்களின் குடும்பங்களுக்கு உதவும் திட்டம் ஒன்றும் அறிவிக்கப்படும் என்று மகாநாட்டின் அமைப்பாளர் முருகபூபதி இக்கூட்டத்தில் தெளிவாகத் தெரிவித்துமிருந்தார்.

போரினால் பாதிக்கப்பட்ட பல படைப்பாளிகளுக்கு சீர்மிய  ஆதரவும் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்ட ஆலோசனையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அத்துடன் மகாநாட்டிற்காக இலங்கை, தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா, அவுஸ் திரேலியா, கனடா, அமெரிக்கா உட்பட சில ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் பல படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் வருவதற்கு விருப்பம் தெரிவித்து தமது விண்ணப்பங்களையும் அனுப்பியிருக்கிறார்கள். மகாநாட்டு செலவுகளுக்கு நிதி சேகரிப்பதற்காக கொழும்பில் பிரத்தியேகமான வங்கிக்கணக்கும் திறக்கப்பட்டு வெளிநாடுகளிலிருக்கும் இலக்கியவாதிகளுக்கு அறியத்தரப்பட்டுள்ளது.

இலங்கையில் இப்பொழுது நடைபெற ஏற்பாடாகியுள்ள இம்மகாநாடு இனிவரும் காலங்களில் வெவ்வேறு நாடுகளில் நடைபெறும். அதுபற்றிய தீர்க்கமான முடிவு நடக்கவுள்ள முதலாவது மகாநாட்டின் இறுதியில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளின் ஆலோசனைகளின் பிரகாரம் தீர்மானிக்கப்படும். இம்மகாநாடு இலக்கியவாதிகள் கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் புரிந்துணர்வுமிக்க ஒன்று கூடலாக அமையும்.

எனவே இதனை அரசியலாக்கி கொச்சைப்படுத்திவிட வேண்டாம் என்று பொறுப்புவாய்ந்த மூத்த தலைமுறை எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் உட்பட அனைவரையும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் படைப்பாளிகளிடம் புரிந்துணர்வை ஏற்படுத்துவதும் இறுக்கத்தை தளர்த்தி நெருக்கத்தை ஏற்படுத்துவதும் இம்மகாநாட்டின் அடிப்படைச் சிந்தனை எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘தமிழர்களைப் பிரிக்கும் அடுத்த சூழ்ச்சியாக கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடாத்துகிறது ராஜபக்ஸ அரசு. இம் மாநாட்டுக்காக கடும் முயற்சி எடுத்து வரும் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பிக்கு உலகத் தமிழ் மக்கள் தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்

ஈழம்ஈநியூஸ்.

ஜெயபாலனின் பேட்டியொன்றிலிருந்து…..;

எதிர்வரும் சனவரியில் கொழும்பில் நடத்தப்படவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர் மாநாடு குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளனவே, நீங்கள் அந்த மாநாட்டில் கலந்து கொள்கிறீர்களா?

இங்கு இரண்டு கேள்விகள் எழுகின்றன. முதலாவது கேள்வி களத்தில், மக்கள் மத்தியில் கலை – இலக்கிய, சமூக செயல்பாடுகள் தொடர்பான மாநாடுகள் இடம்பெறக் கூடாது என்று சொல்ல களத்திற்கு வெளியில் வாழும் யாருக்காவது உரிமையுண்டா என்பது. இரண்டாவது, குறிப்பிட்ட மாநாட்டின் அரசியல் தமிழ் பேசும் மக்களது நலன்களுக்கு விரோதமானதா?

இக்கேள்விகளில் முதற் கேள்விக்குக் களத்தில் வாழும் தமிழ் பேசும் மக்கள் தங்களுடைய நன்மை தீமைகளைத் தாங்களே தீர்மானிக்க உரிமை உள்ளவர்கள் அவர்களுக்கு வெளியிலிருந்து உத்தரவிட யாருக்கும் அதிகாரம் இல்லை, அவர்கள் மத்தியில் வாழ்வு அதன் முழுமையோடு உயிர் பெற வேண்டும். இதுதான் எனது நிலைபாடு.

குறிப்பிட்ட அந்த மாநாடு களத்தில் வாழும் தமிழ் மக்களினது நலனுக்கு எதிரானது என்பது ஐயம் திரிபற உறுதிப்பட்டால் மட்டுமே நாம் அந்த மாநாட்டை எதிர்க்கலாம்.

வ.ச.ஐ.ஜெயபாலன்

**************************************************************

  • Shiva

முருக பூபதிக்கு இலங்கை அரசு ஆதரவு முத்திரை குத்துவோர் முதலில் ஆதாரங்களை முன்வைக்கட்டும்.

——–

ஈழத்தின் மூத்த தமிழ்ப் படைப்பாளியும், உரிமை வேட்கைப் போராளியுமான திரு எஸ்.பொ வின் கருத்தும், ஆதங்கமும் கவனிக்கப் படவேண்டியவை என்பதில் எள்ளத்தனை ஐயமும் இல்லை.

கலை-இலக்கிய அரங்கம் –அகிலன்(பகுதி 2)

கலை-இலக்கிய அரங்கம் –அகிலன்(பகுதி 1)

சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு:

புலி ஊடகங்களும்–உணர்வாளர்களும் குழம்புகின்றார்கள்!  குழப்புகின்றார்கள்!

‘‘தமிழர்களைப் பிரிக்கும் அடுத்த சூழ்ச்சியாக கொழும்பில் தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடாத்துகிறது ராஜபக்ஸ அரசு. இம் மாநாட்டுக்காக கடும் முயற்சி எடுத்து வரும் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பிக்கு உலகத் தமிழ் மக்கள் தமது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்”

இந்திய விசா பிரச்சினையை தவிர்க்க செம்மொழி மகாநாட்டை எதிர்க்கவில்லை’

-இது எஸ்.பொ.வின் நழுவல்

இந்திய விசா பிரச்சினையை தவிர்க்க செம்மொழி மகாநாட்டை எதிர்க்கவில்லை -  இது எஸ்.பொ.வின் நழுவல்

சீதாபிராட்டிகளால் எரியும் இலங்காபுரி – இது இந்திய காங்கிரஸ் தலைவர் மீது மறைமுகமான தாக்குதல்.

எஸ்.பொ. என்ற எஸ்.பொன்னுத்துரை தான் வாழும்;  நாட்டுக்கோ தனது நண்பர்களுக்கோ தான் சார்ந்த எவருக்குமோ வாழ்வு முழுவதும் உண்மையாக இருக்கவில்லை என்பது அவரது வரலாறு.

அதுதான் அவரது தத்துவமான வரலாற்றில் வாழ்தல்.

தற்பொழுது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மகாநாடுக்கு எதிராக தமிழ் நாட்டில் பிரபலம் தேடும் அவரை விடுத்து, மகாநாடு ஏன் என்பதை தீராநதி வாசகர்களுக்கு தெரிவிக்கவிரும்புகின்றேன்.

ஏன் இந்த மகாநாடு?

முப்பதுவருடகாலப் போர்ச்சூழலினால் இலங்கையைவிட்டு புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் அநேகர். வன்முறை, அடக்குமுறை, போரின் பாதிப்பு…

கோவில்களிலும்     –சாதி பார்ப்பார் தேவியரே கேளும்!

தேனீர்க்கடைகளிலும்  –சாதி பார்ப்பார் தேவியரே கேளும்!

சுடலைகளிலும்      –சாதி பார்ப்பார் தேவியரே கேளும்!

சுடும் பிணங்களையும் பிரித்து வைப்பார் தேவியரே கேளும்!

சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு!

கழுதை மயிர் பிடுங்கி தீர்த்தமாடியவனாட்டம் சிற்சில எழுத்தாளர்கள்!

கும்பலில் கோவிந்தா எனும் நிலை மாறவேண்டும்!

ஊடக சுதந்திரத்தை மறுக்கும் ஒரு நாட்டில் எழுத்தாளர் மாநாட்டின் தேவைதான் என்ன?

கொழும்பில் நடைபெறவிருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை  இலங்கை இந்திய மற்றும் புலம்பெயர் பெண் எழுத்தாளர்கள் அனைவரும் நிராகரிக்க வேண்டும் என நாம் கேட்டுக் கொள்கின்றோம்.

“அரசியல் கைதுக்கு எதிராகவும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்வாழ்வுக்கு குரல் கொடுக்கவேண்டியதை விட்டுவிட்டு எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்த மாநாட்டாளர்கள் பேச்சு எழுத்து சுதந்திரம் என மறுக்கப்பட்டிருக்கும்  இலங்கையில் எழுத்தாளர்கள் மாநாடு நடாத்துகிறார்கள்? ஆகையால் “இம்  மாநாட்டில் கலந்துகொள்வோரும் நடத்துவோரும் சமூகபொறுப்பு அக்கறையற்றவர்கள் அரசியல் பண்பில்லாதவர்கள்”. என்பதே எங்கள் கருத்து.”

இன்னொரு எஸ்.பொ. ஆகியுள்ள — இனியொருவின் சபாநாவலன்

“யர்ரும் சொன்னதை சொல்வார், சொல்வதை செய்வார் வேறொன்றும் புரியாது!” விடிய விடிய ராமர் கதை விடிந்தால் ராமருக்கு சீதை என்ன முறை என்பதுபோல் உள்ளது. சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு பற்றிய புலிப் புரட்சியாளர்களின் தொடர் கேள்விகள். எழுத்தாளர் மாநாட்டிற்கு எதிராக எஸ்.பொ. பாடிய பல்லவியை இப்போ சபாநாவலன் பாடுகின்றார். இதைச் சொன்னால் சொல்பவர்களை அரச ஆதரவாளர்கள் ஆக்கி காட்டுகின்றார்.

பிரபாகரன் மாவீரர் இல்லையோ?

இப்போ புலிகள் எல்லாம் பலவிதம். அதன் செயல்கள் எல்லாம் ஒவ்வொரு விதம். கடந்த இரு வருடங்களுக்கு முன்பான புலிகளின் (பிரபாகரன் உயிரோடு இருந்த காலத்தில் கூட) நவம்பர் மாத நடைமுறை போராடி மரணித்தவர்களின் நிகழ்வுகளுக்கு முன்னுரிமை கொடுப்பதே.

சண்டித்தன அரசியல்!

சண்டியனுக்கு எதிராக லண்டனில் சிங்களவர்களும் புலிக்கொடி ஏந்தினார்கள்?

மந்திரியொன்று வெட்கமின்றி இதைப் பாராளுமன்றத்திலும் சொல்லுது!

மனித மரணம் தவிர்க்கமுடியாதது. அதையிட்டு கவலை கொள்ளவில்லை. ஆனால் நான் முடிக்க வேண்டிய பல வேலைகளை முடிக்காமல் செல்லப் போகின்றேன்” அதுவே எனக்குள்ள பெரும் கவலை. இது கைலாசபதி அவர்கள், கொழும்பு மருத்துவ மனையில் இரத்தப் புற்றுநோயுடன் மரணப் போர் நடாத்திக் கொண்டிருந்த வேளை, (82-டிசம்பரில் இயற்கை எய்வதற்கு இரு நாட்களுக்கு முன்)  தன்னைப் பார்வையிட வந்த அரசியல்-கலை-இலக்கிய நண்பர்களுக்கு கூறிய வார்த்தைகள்.

என்னிடம் கல்வி கற்ற மாணவர்களில் பெரும்பாலானோர் தம் கல்விச் செயற்பாட்டை சமுதாய முன்னேற்றம்-சமூக சேவையின் பாற்பட்டு செயலாற்றினர். ஆனால் கைலாசபதி தன் கல்விச்செயற்பாட்டை சமுதாயமாற்றம்-அடக்கி ஒடுக்கபபட்ட மக்களின் பாற்பட்டு செயலாற்றினார். நான் கல்லூரியில் கைலாசபதிக்கு கல்விப் பயிற்சிப் பட்டறை நடாத்தவில்லை. ஆர்வமான சிலவற்றை நெறிப்படுத்தினேன். அவ்வளவுதான்.  ஆனால் அவன், என்னை விட பலவற்றில் பல தடங்களை பதித்துள்ளான்.  அதன் ஓர் அங்கம் தான் யாழ்-பல்கலைக்கழகத்திற்கான உபவேந்தர் பதவி”. கைலாசபதிக்கு  இப்பதவி கிடைத்த போது, ஆசிரியர் கார்த்திகேசன் அவர்கள் கைலாசபதி தன் மாணவன் என்ற ஆதங்கத்திலருந்து கூறிய வார்த்தைகள் இது.

யாழ்நகர் அரச–கொலைஞர்களின் கூடாரமாகியுள்ளது!

தேசியகீதத்தை பலாத்காரமாக பாடவைத்ததை விரும்பாத கல்விப்பணிப்பாளர் படுகொலை!

கருணாவிற்கு வந்த “ஞானோதயம்” கூட டக்கிளஸிற்கு வரவில்லை.

“கைலாசபதி சாதி பார்த்தவரல்ல. ஆனால் நாவலர் பற்றிய ஆய்வின் பெரும்பகுதியை நாவலரின் சாதனை பற்றியதோடு சென்றும், பாதகமான விமர்சனங்களில் மென்மைப் போக்கோடும் செல்கின்றார். இப்படியான விமர்சனங்களை குறைத்து மதிப்பிடமுடியுமா?.  ஒவ்வோரினதும் எழுத்தின் பின்னால் அவர்களின் சமூக முத்திரை பதிந்திருக்கும்தானே?”


இது முன்னைய கட்டுரைக்கானதோர் பின்னோட்டம். அத்துடன் தாயகன் ரவி, தமிழகத்தின் அலெக்ஸ் போன்ற எழுத்தாளர் பலருக்கும் இந்த அபிப்பிராயங்கள் உண்டு. “இதில் என் நோக்கம் கைலாசதி வழிபாடு அல்ல. அவதூற்று விமர்சனங்கள்” பற்றியதில் இந் நோக்கோடு நான் அதை குறிப்பிடவில்லை. இதை  நீங்கள் சுட்டிக்காட்டியதிற்கு நன்றி.

இலங்கையில் யுத்தம் நடந்த வடபகுதிக்கான ரயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ஒப்பந்தக் கம்பனி தமக்கு போதுமான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதில்லை என இலங்கையைச் சேர்ந்த தொழிலாளர்கள் முறையிட்டுள்ளார்கள்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE