Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இன்று இந்தியஎதிர்ப்புப் பேச சிங்கள மக்கள் மத்தியில் சின்னஞ் சிறிய சக்திகூட எதுவுமில்லை. இப்படியொரு பூரண சரணாகதி. ஜனாதிபதி இனப்பிரச்சினைத் தீர்விற்கு 13-வது திருத்தச்சட்டம் என்று எதற்கும் உதவாத ஒரு சரக்கைப்பற்றி பேசியபோது, முன்னர்; (1987-1989-ல்) தீவிர இந்திய எதிர்ப்புப் போராட்டங்களை நடாத்திய ஜே.வி.பி. ஒரு சுவரொட்டி இயக்கத்தை செய்துவிட்டு மௌனம் காத்தது. ”இந்தியாவின் ஆணைக்குப் பணிந்து 13-வது திருத்தத்தை அமுல்படுத்தாதே” என்ற வீரவசனம் மட்டும் சுவரொட்டியில் இருந்தது. மற்ற எல்லாவற்றிலும் இந்திய ஆணைக்கு இலங்கை கட்டுப்பட்டுக் கிடப்பதைத் தீவிர அரசியல் ஞானம் பெற்ற அவர்கள் காணவில்லiயாம். (இப்படி கண்டுகொள்ளாமல் இருந்தபடி அற்ப விடயமொன்றை பூதாகாரப்படுத்திப் பூச்சாண்டி காட்டி சிங்கள மக்களை ஏமாற்றுவதற்கு எவ்வளவு வாங்கியிருப்பார்களோ!) ஆக ஈழத்தமிழ்த் தேசியத்தை முறியடித்துக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு சிங்களப் பேரினவாதம் சிங்கள மக்களின் இறைமையைத் தாரைவார்த்துவிடவேண்டிய கையறு நிலை.

(3)

ஏன்ன நடந்து விட்டது? நாம் சிறிய அடையாளங்களுக்குமான கவன ஈர்ப்பை அக்கறையோடு விவாதித்துக்கொண்டிருக்க, பெருங் கதையாடலுக்கான அரங்கு உலக மேலாதிக்க—பிராந்திய மேலாதிக்க சக்திகளால் புரட்டிப் போடப்படுகின்றது, வைத்தால் கூந்தல், அடித்தால் மொட்டை என்று இருந்துவிட முடியாது. இருபக்கங்கள் மீதுமான அக்கறை அவசியம்.

பின்நவீனத்துவக் கேடு

ஏந்தவொரு போக்கிலும், விடயத்திலும், இரு அம்சங்கள் உள்ளன. ஒன்றைக் கவனித்து மற்றதைத் தவிர்ப்பின் நாம் காணவிரும்பிய பெறுபேறன்றித் தீமையே வந்தமையும். தலித் பிரச்சினையில், பின்நவீனத்துவ நிலைப்பாட்டுடன் கவனயீர்ப்பை மேற்கொண்டபோது சோஷலிசத்திற்கான பெருங்கதையாடல் வேண்டியதில்லை எனப்பட்டது. தலித்தியவாதத்தை உலகமயமாதல் பிளவுபடுத்தல் தந்திரோபாயப்படி மக்கள் விரோத நிலைப்பாட்டிலேயே கையாண்டுள்ளது. அவ்வாறே இலங்கையின் தேசிய இனப்பிரசிசினையும் மேலாதிக்க சக்திகள் உத்தரவின்றி உள்வரக் கையாளப்படும் அற்ப விவகாரம் ஆக்கப்பட்டுள்ளது.

மகத்தான அக்டோபர் 1917-புரட்சி வாயிலாக சோவியத் ருஷ்யா உருவானபோது, தேசியப் பிரச்சினை சோஷலிசத்தின் பகுதியாக ஆனது. இன்று அவ்வாறில்லை. மேலாதிக்க சக்திகள் விளையாடும் வேட்டைக்காடாக தேசிய இனப்பிரச்சினை மாறியுள்ளது.

இத்தகைய மாற்றச் சூழலில் பின் நவீனத்துவக் கேடுகெட்ட பெருங்கதையாடல் — அடையாள அரசியல் என்பனவல்ல பேசும் பொருட்கள். மக்கள் விடுதலையை நாடும் சக்திகள் சமூக மாற்றத்திற்கான வடிவங்களைத் தேடுகின்ற அதேவேளை ஒவ்வொரு பிரிவினரது சுயநிர்ணயத்தைப் பேண ஏற்ற வழிமுறைகளைக் கண்டறிவதும் அவசியம். மார்க்சிய உலக நோக்கு வழி–இயங்கியல் பொருள்முதல்வாத அணுகுமுறையில்–இவை குறித்த தேடலுக்கான அக்கறை வளர்க்கப்படாமல், இன்னமும் அற்ப விடயங்களையே பூதாகாரப்படுத்திக் கொண்டிருப்போமாயின், ஆதிக்கசக்திகளே ஆதாயங்களைப் பெருக்கிக் கொண்டு போவர்.

இயக்கப் போக்கொன்றில் சரியான இயங்கியல் அணுகுமுறையைக் கையாளும்போது தீய அம்சத்தையும் நல்ல அம்சமாக மாற்றமுடியும். பின்நவீனத்துவம் பல கேடுகளை இழைத்த போதிலும் சாதிமுறை குறித்த ஆழமான கற்றலுக்கு அதுவே வழிவகுத்துத் தந்தது.

ஐரோப்பிய வர்க்க முறையை அப்படியே பிரயோகிக்க முனைந்தது!

இதன் பேறாக நாம் வந்தடைந்துள்ள ஒரு முடிவு மிக மிக அடிப்படைப் பண்பு வேறுபாடு சார்ந்த ஒன்று. இதனைக் கவனத்திற் கொள்ளாமல் நமது சமூக மாற்றத்துக்கான மார்க்கத்தையோ, வழிமுறைக்கான தந்திரோபாயங்களையோ, கண்டடைய முடியாது. ஆம், நமது சமூக அடிப்படை வர்க்கப் பிளவடைந்த ஏற்றத்தாழ்வைப் பெற்றில்லை, இனக்குழு மேலாதிக்க ஒடுக்குமுறையுடைய சாதியச் சமூகம் எனும் அடிப்படைப் பண்பு வேறுபாட்டைக் கொணடுள்ளது.

ஜரோப்பிய வர்க்க முறையை அப்படியே பியோகிக்க முனைந்தது தோல்வியடைந்ததைப் போன்றே, சாதிச் சமூகம்  என்பதற்கான தலித்தியவாதத்தைப் பிரயோகித்தமையும் தோல்வியையே தழுவியுள்ளது. மார்க்ஸ், லெனின் ஆகியோரது எழுத்துக்களுள் முடங்கிவிடாமல், அவற்றினூடே மார்க்சிய—லெனினிய சிந்தனை முறையைக் கற்றுக்கொண்டு நமது சாதியச் சமூகத்திற்கு அமைவாகப் பிரயோகிப்பது அவசியம். அந்தவகையிலும், சாதியத் தகர்ப்பின் பொருட்டும், உழகை;கும் மக்களாகவே மிகப் பெரும்பான்மையியரான தலித் மக்கள் உள்ளமையினாலும், மார்க்சிய அடிப்படையில் தலித் பிரச்சினை அணுகப்படுவது அதிக முக்கியத்துவமுடைய ஒன்றாகியுள்ளது. அதேவேளை பல்வேறு சாதிப்பிரிவினரும் பாட்டாளிவர்க்கமாக உள்ள காரணத்தாலும், ஏற்றத்தாழ்வைத் தகர்த்து சமத்துவ சமூகம ;படைப்பதும், சாதிபேதங்களை ஒழிப்பதும் அதனூடாக மட்டுமே சாத்தியப்படும் என்பதாலும் மார்க்சிய—லெனனியக் கற்றலை புதிய நோக்கில் ஆழப்படுத்துவது அவசியமாகும்.

முதலாளித்துவம் அனைத்துச் சாதிகளுக்குள்ளும் பல்வேறு வர்க்கப்பிரிவைச் சாத்தியப்படுத்தி விட்டது என்பது முழு உண்மையில்லை என்பது இன்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. “இந்தியாவின் டாலர் பில்லியனர்களில் ஐந்து அல்லது ஆறுபேரைத் தவிர ஏனைய அனைவரும் பார்ப்பன, பனியா, தாக்கூர் சாதியினர். அதாவது மக்கட் தொகையில் 10-வீதத்திற்கும் குறைவாகவுள்ள பார்ப்பன, பனியா, தாக்கூர் இந்திய ஆளும் வர்க்கத்தின் 90-வீத மக்கட் தொகையில், 90-வீதமான தலித்துகளும் பிற்படுத்தப்பட்ட சாதியினரும், மதச் சிறுபான்மையினரும் 10-வீதத்திற்கும் குறைவு.” எனக் கூறும் ப.கு.ராஜன் தொடர்ந்து இப்படிச் சொல்வார்:- “இந்தப் புள்ளி விபரங்களைத் தொடரலாம். காவல்துறை, நீதிமன்றங்கள், ஊடகங்கள், உயர்கல்வி ஆசிரியர்கள் என எல்லாவற்றிலும் இதுதான் நிலை. இத்தோடு மதம் மற்றும் மதத் தலைமை என்பதையும் கணக்கில் கொண்டால் சித்திரம் முழுமையடையும். அது என்ன? இந்தியாவின் ஆளும் வர்க்கமும் ஆதிக்க சாதியும் ஒன்றுதான். வேறு வேறு அல்ல. ஒரே கட்டமைப்பில் இருவேறு பக்கவாட்டுத் தோற்றம்தான். ஓன்றுக்கெதிரான போராட்டம் தவிர்க்கவொண்ணாத வகையில் மற்றதற்கும் எதிரான போராட்டம்தான். உயர்சாதியைச் சேர்ந்தவர்களும் இந்தப் போராட்டத்தில் வருகின்றார்களே. அவர்களுக்கு என்ன பதில்? அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

பாட்டாளி வர்க்கச் சிந்தனைமுறை!

பாட்டாளி வர்க்க விடுதலைக்கு மார்க்சும், ஏங்கெல்சும், லெனினும் போராடியது அவர்கள் பால் கொண்ட அனுதாபத்தால் அல்ல. பாட்டாளிவர்க்க விடுதலையில்தான் சகல பிறவர்க்கங்களின் விடுதலையும் அடங்கியுள்ளது என்பதனால் தான! இதனைப் புரிந்துகொண்டு, நம்மோடு இருந்து பணி புரியும் பிறவர்க்கத்து தோழர்கள் இல்லையா? அதேபோல எல்லாச் சாதிகளையும் சேர்ந்த எல்லா மக்களின் விடுதலையும் சாதி அடுக்கின் அடிமட்டத்தில் உள்ள தலித்துக்களின் விடுதலையில்தான் தங்கியுள்ளது என்பதை அவர்களில் பெரும்பகுதி புரிந்துகொள்வார்கள். பிற்படுத்தப்பட்ட மக்கள் பகுதியிலும், பெரும்பகுதி புரிந்துகொள்வார்கள். புரியச் செய்யவேண்டியது பெரும்பணிதான். ஆனால் ஒரு சிறுபகுதி புரிந்துகொள்ளவில்லை என்றால் கவலைப்பட வேண்டியதில்லை. இவர்களை உத்தேசித்து சொல்ல வேண்டியதைச் சொல்லாது மென்று விழுங்கினால், பெரும்பகுதித் தலித், பிற்படுத்தப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெறவது இயலாது” (ப.கு. ராஜன், “சாதியும் வர்க்கமு;ம்” புதுவிசை இதழ் 2, ஜீலை-செப்டெம்பர் 2008. பக். 43 மற்றும் 49)

அந்தக் கட்டுரை முழுமையும் மிகுந்த முக்கியத்துவம் மிக்க விடயங்களைப் பேசுகின்ற வகையில் ஆழ்ந்த கற்றலுக்குரியது. ஆயினும், இங்கு காட்டப்பட்டுள்ள பகுதியில் வெளிப்படுமாறு உள்ள ஒரு விடயம் குறித்து எச்சரிக்கை உணர்வு அவசியமாகும். தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சமன் பாட்டாளி வர்க்கம் என்ற தொனி இங்கு மேலோங்குவதைக் காணலாம். இந்த மக்கள் பிரிவினரே பாட்டாளி வர்க்கத்தை மிகமிகப் பெரும்பான்மையினராய்க் கொண்டுள்ளனர் என்ற போதிலும், சாதித்தளம் சார்நத்தாகப் புரட்சிகர சக்தியை இனங் காண்பது சரியல்ல. மார்க்சிய வடிவிலான பாட்டாளி வர்க்கச் சிந்தனை முறை என்பது மனிதகுலம் ஏற்றத்தாழ்வைத் தகர்த்தெறியக் கண்டறிந்த உன்னதமான சிந்தனை முறையாகும். இன்று உலகமயமாதல் பாட்டாளி வர்க்கத்தை “இழப்பதற்கு எதுவுமற்ற வர்க்கம்” எனும் நிலையிலிருந்து சிதைத்துப் போர்க்குணத்தை மழுங்கடிக்க சதிகள் பல செய்திருக்கலாம். உழைக்கும் மக்களும் சமூக மாற்றத்தை விரும்புவோரும் பாட்டாளிவர்க்கச் சிந்தனை முறையை வரிப்பதனால் மட்டுமே சமத்துவ சமூகத்தை வென்றெடுக்க முடியும் என்பது கவனிப்புக்குரியது.

மாறாக சாதித்தளத்தை புரட்சிக்குயதாக கருதும்போது, சமூகமாற்றத்தை எட்டமுடியாத தடை அங்கே இருப்பதைக் காணலாம். வெற்றிபெறும் சாதி தனது நோக்கிலான மாற்றத்தை எட்டமுனையும் பட்சத்தில் பழிவாங்கலுக்கான வாய்ப்பும், தமது நலன்களைப் பெருக்க முனையும் என்பதும் நிராகரிக்க முடியாதது, பாட்டாளிவர்க்க நிலைப்பாடு என்பது, பாட்டாளிவர்க்கம் எந்தச் சொத்தும் அற்றது என்கின்ற வகையில், வர்க்க ஒழிப்பில் மட்டுமே தனது விமோசனத்தை எட்டக்கூடிய வாழ்முறை உடையது என்ற வகையிலே புரட்சிகரச் சக்தியாய்க் கணிக்கப்பட்டது. மாற்றத்தை விரும்பும் வாழ்முறையுடைய தலித்-பிற்படுத்தப்பட்ட சாதியினர் தமது சாதியுணர்வையும் களைந்தெறியும் பண்பாட்டுப் புரட்சியை முதலில் தமக்குள் நிகழ்த்தியாக வேண்டும்., எமக்கான சமூகமாற்ற வடிவமே சாதியம் காரணமாய்ப் பண்பாட்டுப் புரட்சிதான் என்பதும் கவனிப்புக்குரியது. அனைத்துச் சாதியினரதும் சாதியபிமானங்களை   விட்டொழிப்பதற்கான பண்பாட்டுப் புரட்சி வடிவம் கண்டடையப்படவேண்டு;ம்.

(4)

இனக்குழு வாழ்முறை தகர்வுறாமலே சுரண்டல் அமைப்பிற்குரிய வகையில் சாதிகளாக்கப்பட்டுள்ளது என்கிற வகையில் நமது சிந்தனைகள்–வழக்காறுகள்–பண்பாட்டுக் கோலங்களில் இனக்குழுப் பண்புகள் விரவிக் காணப்படுகின்றன. இதன் பேறாக புதிய வர்க்க உறவு சார்ந்த சமூக மாற்றத்தை எட்டுவதற்கு முன்தேவைவயாக பண்பாட்டுப் புரட்சியை முன்னெடுக்க வேண்டியுள்ளது. கிரேக்க-ரோம் அடிமைப் புரட்சி, பிரன்சிய முதலாளித்துவப் புரட்சி போல இங்கு ஏற்படவில்லை என்பதால் சமூக மாற்றங்களே இங்கு ஏற்படவில்லை என்பது பொருளல்ல. பௌத்தத்தினுர்டாக நிகழ்ந்தேறிய பண்பாட்டுப் புரட்சியின் பேறான வணிக எழுச்சி குறித்து எம்.என். ராய் பேசியுள்ளார். பக்திப் பேரியக்கம் நிலவுடமை அதிகாரத்திற்கு வழிகோலியதை கைலாசபதி காட்டியுள்ளார். சுதந்திரப் போராட்டத்தில் காந்தி அரசியல் அதனிலும் அறம் ஓங்கும் வகையில் ஆன்மீகப் புரட்சியை இணைத்தது குறித்தப் பலரும் பேசியுள்ளனர்;.

ஆக, நமது சமத்துவ சமூகத்தை வெற்றி கொள்ளும் புரட்சியின் வடிவத்தில் பண்பாட்டு இயக்க வேலைமுறையொன்றை வகுப்பது, இயங்காற்றல் மிக்க சக்திகளது தேடலுக்குரியதாகும். ஏற்கனவே சமூக மாற்றத்தில் நமக்கான பாதை பண்பாட்டுப் புரட்சி சார்ந்தது என்பது குறித்து நிறைய எழுதப்பட்டுள்ளது., தவிர நடைமுறைப் பிரயோகம் வாயிலாக கணடறியும் போது மட்டுமே எதுவும் முழுமைபெற முடியும். சும்மா பேசிப் பேசிப் பயனேதும் இல்லை. செய்தாக வேண்டும். இல்லையெனில் செத்தொழிந்து போவோம்.

“செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்”  (குறள்-466)

பிற்குறிப்பு:- இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்கும் போது அடிப்படையான சில விடயங்கள் போதியளவுக்கு விவாதிக்ப்படவில்லை என்ற குறைபாடு எழுவதற்கு இடமுண்டு. இன்றைய சூழலில் சுயநிர்ணயத்தை எவ்வாறு வரையறை செய்து? இலங்கையில் முப்பது வருடங்களாக ஆயுதமேந்திப் போராடிய ஈழத் தமிழினத் தேசியத்தின் தீர்வுடன் முஸ்லிம்–மலையக தமிழ் மக்களது தீர்வுக்கான வடிவம் எது? ஏவ்வாறு அதனை வென்றெடுப்பது? சாதித் தேசியம் தனது சுயநிர்ணயத்தை எவ்வகையில் வடிவப்படுத்தவும், வென்றெடுக்கவும் இயலும்? பண்பாட்டுப் புரட்சிக்கான வேலைத்திட்டம் எத்தகையது?

இவை விவாதிக்கப்பட வேண்டியன எனும் சுட்டுணர்வை ஏற்படுத்த முடிந்திருந்தாலே, இக்கட்டுரை தனது பணியைப் பெரும்பகுதி நிறைவு செய்துள்ளது என்ற நம்பிக்கை எனக்குண்டு. கட்டுரையை நீட்டி முழக்க வேண்டாம் என்ற உச்சர்க்கையுடன், இத்தகைய ஒரு களத்திலேயே எல்லாத் தீர்வுகளையும் கண்டடைந்து விட முடியாது என்ற எல்லைப்பாட்டையும் புரிந்துகொண்ட காரணத்தால், இவ்வகையாக அமைந்துள்ளது கட்டுரை. இயங்கும் பலதரப்பட்ட சக்திகளும், தலைமைப் பாத்திரத்தை வழங்வேண்டிய பாட்டாளி வர்க்கக்-கட்சிகளும் பரந்த மனப்பான்மையுடன கூட்டு விவாதங்களை நடாத்தி இவற்றை வடிவப்படுத்த வேண்டும்.

“தமிழ்Pழ மக்கள், தமக்கான நேசசக்திகளை தமிழகத்திலும் கொஸோவோவிலும் தேடுவதற்கு முன், சிங்கள—முஸ்லிம்–உழைக்கும் மக்களிடையே தேட முயலவேண்டும். ஒடுக்கப்படும் விடுதலைக்கான குறுக்கு வழி ஏதும் இல்லை. ‘பெரிய அண்ணன்களை’ நாடுவது புதிய அடிமைத்தனத்திற்கு கொண்டு சென்றுவிடும்” என்பார் எஸ்.வி. ராஜதுரை. (எஸ்.வி. ராஜதுரை “ஒரு மைய உவகமும் தேசிய இன விடுதலையும்” எதுவரை? செப்டெம்பர்—அக்டோபர் 2009 ப. 40) பெரிய அண்ணன்களுக்கு உதவியாக இருந்து ஐந்தாம்படை நிலைப்பாட்டிலே காட்டிக்கொடுப்பு வேலையை செய்வதனூடாக வெற்றி பெறலாம் எனும் நினைப்போடு, ஈழத்தமிழ்த் தேசியம் ஆரம்பம் முதல் முழுத் தோல்வியைக் கண்ட வரையில் இருந்தமையைக் காட்டியிருந்தோம். இன்றும் அதே வாய்ப்புகளை நாடியபடிதான்.

இந்த இருப்பினை சிங்கள மக்கள் புரிந்துகொண்டு தீர்வின் அவசியத்தை வலியுறுத்துவதாயும் இல்லை. அவ்வாறு மக்களைச் சிந்திக்கத் தூண்டவல்ல சக்திகள் சிங்களப் பேரினவாதத்தால் அழித்தொழிக்கப்படடு விட்டார்கள். அந்நியர்களாயும் நாட்டினில் வந்து குடியேறி, இன்றும் அந்நிய ஊடுருவல்களுக்கு வழிகோலுபவர்கள் என்று சிறு தேசிய இனங்கனைச் சிங்கள மக்கள் பார்க்கும் வகையில் ஊடகங்கள் செயற்படுகின்றன. உண்மையில் எதிர்நோக்கப்படும் தேசிய இனப்பிரசிசினை அவர்களுக்கு போதிய அளவு புரிய வைக்கப்படவில்லை. அந்தவகையில் இதுவரை வடிவப்படுத்தப்பட்ட தீர்வுத்திட்டங்களை விட அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கும் விரிந்த தளத்திலான விவாதங்கள் ஊடாகவே சரியான தீர்வுத்திட்டத்தை கண்டடையவும், செயற்படுத்தவும் முடியும்.

இலங்கையில் முஸ்லிம் மக்களும், மலையகத் தமிழ்மக்களும் சிங்கள–இலங்கைத்  தமிழ் மக்கள் மத்தியில் சிதறி வாழ்கின்றனர். இவ்வகையில் இவர்களுக்கான சுயநிர்ணயம் உள்-சுயாட்சி அமைப்பு முறையிலாக தீர்க்கப்படவேண்டும். இது பற்றிய விவாதங்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன. ஏற்கப்படும் வகையில் சரியான வரையறை எட்டப்படவில்லை.

பொதுப்பிரச்சினைகள், ஒத்த பண்பாட்டுக் கூறுகள், வரலாற்றுச் செல்நெறி, ஒடுக்குமுறைக்கு உள்ளாதல் எனும் அம்சங்களையுடையவை ‘தேசம்’ என வரையறுக்கப்பட்டு, அவை தமக்கான சுயநிர்ணயத்தை தாமே வரையறுப்பதற்கு உரிமையுடையவர்கள் என்பது இன்று சர்வதேச அளவில் ஏற்கப்படுகின்றது. அந்தவகையில் ஓரே நிலத்தொடர்பு இல்லாபோதிலும் உள்-சுயாட்சி வடிவில் தீர்வை அவர்கள் பெற இயலுமாகியுள்ளது. பல நாடுகளில் செயற்படுத்தப்பட்டு வெற்றிகரமாக இயங்குவதனையும் காணமுடிகிறது. சாதித் தேசம் என்பதும் இலங்கையின் முஸ்லிம்-மலையகத் தமிழர் அளவுக்கு இல்லையெனினும், தமக்கான சுயநிர்ணயத்தை வரையறுக்க அவசியமுள்ள மக்கள் பிரிவினர் என்பதை இனியும் மறுக்கமுடியாது. அம்பேத்கர் இரட்டை வாக்குரிமைக் கோரிக்கைக்காக போராடியது முத்ல், இன்று பல்வேறு சக்திகள் வரையும் சாதித் தேசத்தின் சுயநிர்ணயத்தைக் கண்டடையும் முயற்சிகளையே மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில் ஒடுக்கப்பட்ட மக்கள் மிகுந்த ஆளுமையுடன் புத்துலகத்திற்கு தலைமையேற்கும் வீறுடன் போராடியதால், சாதி சார்ந்த தனியான தீர்வுத்திட்டம் எதுவும் அன்று முன்வைக்கப்படட்தில்லை. அந்த மக்களது தலைமைப் பண்பு குறித்த புரிதல் இல்லாமல், உயர்சாதிச் சதியென அதனைக் கொச்சைப்படுத்துவது, புலம்பெயர் தலித்தியச் சிந்தனையாளர்களது அறியாமைதான். இன்று அவர்கள் விவாதத்திற்கு உள்ளாக்கும் அனைத்து விடயங்களையும் அதற்காக நிராகரித்துவிட முடியாது. இன்று யதார்த்தமாகியுள்ள மேலாதிக்க சக்திகளின் ஊடுருவல்களுக்குக் காட்டிகொடுப்பதாக அல்லாமல், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தீர்வுக்கான தேடல் எனும் அடிப்படையில் ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுப்போம்.

விவாதக் களங்களை கண்டடைவது, தீர்வு முயற்சிக்கு ஏற்றவகையில், மக்களை வீதிக்கு கொண்டு வருவது, தோல்விகளால் முடங்கிய உளச்சிக்கல்களை நிவர்த்திப்பதற்கான வெகுஜனப் பங்கேற்புக் களங்களை ஏற்படுத்துவது என்பவை வாயிலாக ப்ண்பாட்டு இயக்க களங்கள் சாத்தியமாகும். புண்பாட்டுப் புரட்சி வடிவம் அதன் செல்நெறி மூலமாகவே கண்டடையப்படும்.  இன்னமும் இவை குறித்து உரையாட் நிறையவே உண்டு. நீங்களும் பேசுங்கள்.!

சாதி, தேசம், பண்பாடு: ந. இரவீந்திரன் – பகுதி-1

சாதி, தேசம், பண்பாடு: ந. இரவீந்திரன் – பகுதி-2

அண்ணாதுரை தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்த் தேசியத்தை முன்னெடுத்தபோது  வெள்ளாளர், முதலியார், நாயக்கர் எனும் ஆளும் கூட்டணிச் சாதிகளது தேசியத்தின் தலைமையில் ஏனைய தமிழ்த்சாதிகள் ஐக்கியப்படுத்தப்பட்டனர். 70-ம் ஆண்டுகளிலும் அதன் பிற்பகுதிகளிலும், கள்ளர், மறவர், அகம்படியார் தலைமையில் முக்குலத்தோர் தேசியத் தலைமையை அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் பிரதிநிதித்துவப்படுத்தி தமிழகத்தை வெற்றி கொள்ள முடிந்த்து. இந்தப் பின்னணியிலேயே வன்னியர் தேசியத்தை பிதிநிதித்துவப்படுத்திய (சாதிக்கட்சியென இங்கே முதன் முதலில் வெளிப்படையாக இனங்காணப்பட்டது). பாட்டாளி மக்கள் கட்சி தோற்றம் பெற்றது. தொடர்ந்து தலித் கட்சிகளான புதிய தமிழகம் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளும் தோற்றம் பெற்றன.

பிராமணத் தேசியம்

முன்னதாக 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியா முழுமையையும், பிராமணத் தேசியத்தால் ஒன்றுபடுத்த  முடிந்தது என்பது கவனிப்புக்குரியது. கோகலே , திலகர் போன்றோர் தலைமையிலான காங்கிரஸ் பிராமணத் தேசியத்தை முன்னிலைப்படுத்த முடிந்தபோது, அந்தப் பிராமணச்சாதி மட்டும், முழு இந்தியாவிற்குமுரியது என்ற வகையில் இந்தியத் தேசியம் பிராமணத்தேசியமாக (பிராமணத் தேசிய தலைமையில்) ஓன்றுபடுத்தப்பட்டது. கோகலே, திலகர் போன்றோரது பிராமணத் தேசியமே தொடர்ந்திருப்பின் இந்திய சுதந்திரத்தை சாத்தியப்படுத்தும் வெகுஜன எழுச்சி சாத்தியப்பட்டிராது. ஏனைய சாதித் தேசிய நலன்களையும் உள்வாங்கிய தாராளவாத அரைப் பிராமணத் தேசியத்தை முன்னிலைப்படுத்திய காந்தி-நேரு தலைமையிலான காங்கிரஸ் கட்சியே அனைத்து மக்களையும் தலைமை தாங்கி வெகுஜனக் கிளர்ச்சிகளை முன்னெடுத்தது என்பது, கவனிப்புக்குரியது. (காந்தி-நேரு தலைமையில் காங்கிரஸில் தொடர்ந்ததும் பிராமணத் தேசியம் எனக் குறிப்பிட்டபோது, இதனை அவ்வாறன்றி தாராளவாத அரைப் பிராமணியத் தேசியமாக வேறுபடுத்திக் காணவேண்டும் என வலியறுத்தியவர் போத்தரெட்டி. அவர் முதலில் சாதித்தேசியம் என்ற கருத்தியலை ஏற்கவில்லை. தொடர் விவாதத்தில் அவர் ஏற்றுக்கொண்ட வகையில் இதனை வலியறுத்தினார். (அவருக்கு நன்றி)

காங்கிரஸின் பிராமணத் தேசியத்தை இனங்கண்டு, சாதிகளாய்ப் பிளவுபடுத்தித் தமது மேலாதிக்கத்தை நிலை நிறுத்துகின்ற பிராமணரால் இந்தியாவை ஒரு தேசமாக ஒன்றிணைக்க முடியாது என ஜோதிராவ் புலே, அம்பேத்கர் போன்றோர் குறிப்பிட்டிருநத்னர். ஜோதிராவ் புலே சொன்ன காலத்தில் அது சரியாக இருக்கத்தக்கவகையில் பிராமணத் தேசியம் தனது மேலாண்மைக் குணத்தை முனைப்பாகக் கொண்டிருந்தது. பின்னாலே அம்பேத்கார் காலத்தில் காந்தி-நேரு தலைமையில் தாராளவாத அரைப்பிராமணியம் ஏனைய சாதித் தேசங்களது நலன்களையும் ஓரளவிலாயினும் வெளிப்படுத்தி, பிராமணத் தேசத்தலைமையில் அனைத்துச் சாதிகளது தேசங்களையும் ஒன்றுபடுத்தியிருந்தது. சமகால இயக்கச் செல்நெறியின் மாற்றப்போக்கை உடனடியாக அம்பேத்கரால் இனங்காண முடியவில்லை, அக்காரணத்தாலேயே தலித் மக்களுக்கான வீர்pயம் மிக்க தலைமையை வழங்கிக் காத்திரமான பணிகளை அம்பேத்கர் முன்னெடுத்த போதிலும் பெரும்பாலான தலித்மக்கள் காங்கிரஸில் அணிதிரண்டு சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தலித் தேசியம்

அம்பேத்கர் காங்கிரஸின் பிராமணியத் தேசியத்திற்கு எதிராக தலித்மக்களின் எதிர்த்தேசியத்தை முன்னெடுத்து இயங்கினார். பொதுவாக இந்தியத் தேசியம் சாதிகளின் தேசமாகப் பிளவுண்ட தேசியங்களாயே உள்ளது. இவற்றில் பிராமணத் தேசியம் ஆதிக்க தேசப்பண்பைக் கொணடுள்ளபோது, அதிகார எதிர்புணர்வுடன் தலித்தேசியம் எதிர்த்தேசியமாக உள்ளது. “வெள்ளையனே வெயியேறு” இயக்கம் முனைப்படைந்தது போன்ற சில சந்தர்ப்பங்களில் ஆங்கில அரசுடன் அம்பேத்கர் இணங்கி இயங்க முன்வந்தது இந்த எதிர்த் தேசியப் பண்பினாலேயே, அடிப்படையில் தலித் விடுதலைக்கு ஏகாதிபத்தியம் வலுவான பங்களிப்பை நல்கவில்லையென வலியுறுத்திய அதேவேளை, பிராமணத் தேசியத்துடனான முரண்பாட்டின் பேறாக அவர் இவ்வகையிலான உடன்பாட்டை ஆங்கில அரசிற்கு வழங்கினார். முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டிருந்த ஒடுக்கப்பட்ட மக்களின் தலித்தேசியமே இவ்வாறு முழுமையான எதிர்த்தேசியமாக அமையமுடியும். ஏனைய பிற்படுத்தப்பட்ட சாதிகளது தேசிய உணர்வுகள் குறித்த சில அம்சங்களில் எதிர்த்தேசியமாக முடிந்தாலும், அவை ஆதிக்க சாதித் தேசியத்துடன் சமரசங் கொள்ள ஏற்ற பண்புகளையும் கொண்டுள்ளன. அவ்வகையில் இதை “ஒருவகை எதிர்த்தேசியப்” பண்புடையனவென்றே கூறமுடியும்.

சென்ற நூற்றாண்டின் 20-ம் ஆண்டுகளில் தமிழகத்தில் வீறுகொள்ளத் தொடங்கிய திராவிடத் தேசியம் இவ்வகையிலான ஒருவகை எதிர்த் தேசியமே. திராவிடர் இயக்கம் பிராமணத் தேசியத்துக்கு எதிரான மிகக் காத்திரமான எதிர்த் தேசியப் பண்பை கொணடிருந்த போதிலும், வெள்ளாளர், முதலியார், நாயக்கர், ஆகிய ஆளும் சாதிகளது கூட்டுத்தேசியம் தலைமை தாங்கிய வகையில் அது தலித்தேசியம் போல முழுமையான எதிர்த்தேசியமாக அமையவில்லை. திராவிடத் தேசியத்தின் ஆளும் சாதிகளது தேசியப் பண்பு அதன் உடன்பிறப்பான தமிழ்த் தேசியத்திலும் வெளிப்பட்டது. தமிழ்ததேசியம் ஆட்சியதிகாரத்தைப் பெற்ற 67-ன் பின்னர் கீழ்வெண்மணியில் தொடங்கிய தலித்மக்களுக்கு எதிரான ஆதிக்கவெறி இன்றுவரை நீடிப்பதில், எத்தகைய பங்களிப்பை வழங்கிற்று என்பது உலகறிந்த விடயம். அந்தவகையில் திராவிட இயக்க (தமிழ்த்தேசிய) பிராமண எதிர்ப்பானது “ஒருவகைத் தேசியமாகவே” அமைகின்றது, (‘மதமும் மார்க்சியமும்’ நூலுக்கு ‘மார்க்சிஸ்ட்’ இதழில் குணா காத்திரமான ஓர் விமர்சனம் எழுதியிருந்தார். அந்த விமர்சனத்தில் ஒருவகை எதிர்த்தேசியம் என்பது போதிய விளக்கமற்று இருப்பதாகக் குணா குறிப்பிட்டிருந்தார். இப்போது தெளிவுபடுத்தப்பட்டிருக்கும் எனக் கருதுகின்றேன்.)

ஆக “யாதும் ஊரே, யாவரும் கேளீர்” என விவசாய வாய்ப்பைப் பெற்ற இனக்குழு ஏனையவற்றை வென்றடக்கி ஆட்சிப்படுத்தி உறவு கொண்டாடியபோது, வர்க்கப் பிளவடைந்த தனிமனிதர்களாயல்லாமல் இனக்குழுக்களே உழைக்கும் தொகுதியாகும், சுரண்டல் முறை நமக்குரியதாக ஏற்பட்டுள்ளது, இத்தகையதான பித்தியேகச் சூழல் அதிக கவனிப்பிற்குரியதாகின்றது. இனக்குழுப்பண்பு இவ்வகையில் நீடீக்கும்போது தேசிய உணர்வைக் கிளர்த்தும் முதலாளித்துவத்தில் தமக்குள் வலுவான இரத்த உறவைப்பேணும் சாதிகளாக்கப்பட்ட இனக்குழு முறை வாழ்வுடையோர் தம்மை “தேசம்” போலக் கருதுதல் தவிர்க்கவியலாததாகியது. அந்தப் புறநிலை யதார்த்தம் நிலவுவதால் கிராம எல்லைகள் கடந்து ஒரே சாதியினர், சாதிச் சங்கங்களாக ஸ்தாபனமயப்பட்டு தமது (தேசிய) நலன்களை முன்னிறுத்திப் போராட வேண்டியவர்களாயினர். வாய்ப்புள்ள பெரும்பான்மைச் சாத்தியமுள்ளவர்கள் தமது சாதிக் கட்சிகளையும் கட்டியெழுப்பினர். இவ்வாறு பிளவுபட்ட தேசியங்கள் எது யதார்த்தமாயினும், ஒரு தேசத்தை வடிவப்படுத்தி தலைமையேற்க வாய்ப்புள்ள ஆதிக்க சாதித் சாதியம், ஒடுக்கப்பட்டு உரிமைகள் முழுமையாக மறுக்கப்பட்ட தலித்தேசியம் எனும் இரட்டைத்தேசியம் எதிரும் புதிருமாக இங்கு வலுவாயுள்ளமை கவனிப்புக்குரியது. இந்த இரட்டைத் தேசியத்தை  தெளிவுபடுத்திய இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையிலிருந்து இதனைப் புரிந்துகொள்ள முயறசிக்க முடியும்.

பிராமணத் தேசியத்தை நிராகரித்த எதிர்த்தேசியம்

அம்பேத்கரின் தலித் இலக்கியம், பெரியாரின் திராவிட இயக்கம் என்பன காங்கிரஸின் பிராமணத் ;தேசியத்தை நிராகரித்து முன்னெடுக்கப்பட்ட எதிர்த்தேசியங்களாகும். இந்த வரலாற்றுச் செல்நெறி இரட்டைத் தேசியக் கோட்பாடு அடிப்படையில் புரிந்து கொள்ளப்படவில்லை. சுதந்திரப் போராட்டத்தை அப்படியே ஆதரித்தவர்கள் ஏதோவொரு வகையில் பிராமணத் தேசியத்தை  ஏற்பவர்களாய் இருந்தனர். அவர்கள் அம்பேத்கரது தலித் தேசியத்தையோ, பெரியாரின் திராவிடத் தேசியத்தையோ விளங்கிக் கொள்ளாமல் அவர்களை வகுப்புவாதிகளாய்க் கணித்தனர். ஏகாதிபத்தியத்திலிருந்து விடுதலை பெறும் ஆதிக்க சாதித் தேசியத்திற்கு எந்தளவு நியாயப்பாடு உள்ளதோ, அதேயளவு பண்ணை அடிமைத்தனத்தை தகர்க்கும் சாதிய எதிர்ப்புச் சார்ந்த அம்பேத்கார், பெரியார் போன்றோரது எதிர்த்தேசியமும் அவசியமானது. அன்று சுதந்திரப ;போரட்டத்தின் பேரால் எதிhத்தேசியத்தை வகுப்புவாதமாயும், எகாதிபத்திய சார்புடையதாயும் பார்த்ததில் தவறுண்டு. அதேபோல எதிர்த்தேசிய நிலைப்பாட்டை தவறற்ற முழுச்சரியான ஒரே நிலைப்பாடெனக் கொண்டாடும் இன்றைய தலித் இயக்கங்கள் சுதநதிரப்போராட்ட முற்றிலும் பிராமண ஆதிகத்திற்கேயுர்pயது எனக்கூறி அதன் வரலாற்றுப் பங்களிப்பை மறுதலிப்பதும் தவறானதுமாகும்.

ஆயினும் இன்றுவரை இந்திய இயக்கங்களில் பல இரட்டைத் தேசியப் பிளவுடன் கூடிய இரண்டக நிலையுடையனவாயே உள்ளன. அம்போத்கரோ, பெரியாரோ ஏகாதிபத்திய சக்திகளிடம் விலை போனவர்களல்ல. தாம் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களுக்காக எதிர்த்தேசிய நிலைப்பாட்டில் உறுதியாக நின்று போராடியவர்கள். இன்று உலகமயமாதலின் கையூட்டில் தொண்டு நிறுவனமாக இயங்கித் தீவிர தலித்தியம் பேசும் சிலரோ மக்கள் விடுதலைக்கு விரோதமாக ஒடுக்கப்பட்ட மக்களைத் தனிமைப்படுத்தி என்றென்றும் இழிவுபடுத்தல்களுக்குள் உழல்வதற்கே வழிகோலுகிறார்;கள். தலித் மக்களின் விடுதலை இவர்களுக்கு அவசியமில்லை. ஆண்டாண்டுகால அவமதிப்புக்களைப் பேசியே இவர்கள் தம் பிழைப்புவாத அரசியலை முன்னெடுக்க முயல்கிறார்கள். புpராமணியம் மக்களை சாதிகளாக பிளவுபடுத்திச் சுரண்டலைப் பேண எந்தளவுக்கு முயல்கின்றதோ, அதேயளவிற்கு தலித்தியமும் எதீpர்த்தளத்தில் இயங்கியவாறு அதே சாதிவாதப் பிளவுபடுத்தல் தவறையே இழைக்கிறது. இது உலகமயமாதலுக்கு ஆட்படும் அமசமுமாகும்.

தலித்தியப் போராட்டங்களில் கம்யூனிஸ்ட்டுக்கள்


உண்மையில் மார்க்சிஸத்தால் மட்டுமே சாதிவாதப் பிளவுபடுத்தலுக்கு இடமற்ற வகையில் தலித் விடுதலைக்கு ஏற்றதாக அனைத்துச் சக்திகளையும் அணிதிரட்ட உதவமுடியும். மார்க்சியர்கள் ஏகாதிபத்தியத் தகர்ப்பை அவசியப்படுத்தும் அதேவேளை, பண்ணையடிமைத் தகர்ப்பையும் வலியுறுத்துபவர்களாயே இருப்பர். கம்யூனிஸக் கருத்துக்கள் இங்கு வேரூன்ற முன்னரே பாரதியிடம் இரட்டைத் தேசியப் பிளவின்றி இரண்டு விடுதலைக் கூறுகளையும் இணைத்துப் பார்க்க முடிந்தது. முதல் கம்யூனிஸ்ட்டாக விளங்கிய சிங்காரவேலர் தொடர்ந்தும் சாதியத் தகர்ப்பு, ஏகாதிபத்திய ஒழிப்பு, முதலாளித்தவ எதிர்ப்பு என்பனவற்றுக்காக குரல் கொடுத்திருக்கிறார்.

இந்தப் பண்பு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த இயக்கச் செல்நெறியில் ஆரம்பம் முதலாகவே இருந்து வந்தது. அதன் வெளிப்பாடாக தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத் தலைமையில் 60-களின் பிற்கூறில் சாதியத் தகர்ப்புப் போராட்டம் முனைப்படைந்தபோது, ஒடுக்கப்பட்ட மக்கள் தனிமைப்படவில்லை. அனைத்து சாதியினரையும் (பிராமணர் தவிர, எல்லா அதிகாரங்களையும் கையகப்படுத்தியிருந்த வெள்ளாளர்களில் முற்போக்கு ஜனநாயகப் பண்புடையோரையும்) ஜக்கியப்படுத்தி, முன்னெடுக்கப்பட்ட சாதிய இழிவுகளுக்கு எதிரான அந்தப்போராட்டம் கம்யூனிஸட் கட்சியால் வழிநடாத்தப்பட்ட காரணத்தால், இரட்டைத்தேசியம் பிளவற்ற வெற்றிகளையீட்ட முடிந்தது.

இத்தகைய பரந்துபட்ட ஜக்கியமுன்னணிப் போராட்டக் களமாகிய யாழ்ப்பாணத்தைக் கடந்து, முழுஇலங்கை சார்ந்த சாத்தியப்பாடுள்ள பல்வேறு சக்திகளையும் அணிதிரட்டுவதாக அமைந்தது. அதேவேளை சர்வதேசத் தளவிர்pவாக்கத்தடன், உலகளாவிய ஆதரவும் பலமும் வாய்த்திருந்தது. பீக்கிங் வானொலி வாயிலாக சீனப்பாட்டாளி வர்க்கம் வழங்கிய ஆத்மார்த்த ஆதரவு முதல் பல்வேறு ஊடகங்கள் ஊடாக சர்வதேச விடுதலைச் சக்திகளது ஆதரவும் பெறப்படட்து. அதேபோல சாதியத் தகர்ப்புப் போராட்ட முன்னெடுப்பானது, வியட்னாம் மக்களது விடுதலைப் போராட்டம் உட்பட பல்வேறு நாடுகளின் உழகை;கும் மக்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் பலதரப்பட்ட ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதாயும் அமைந்தது. வெறும் சாதிவாத முடக்கம் இல்லாத, இத்தகைய பரந்ததள விரிவாக்கமுடைய போர்க்குணாம்சம் பிளவுபடாத தேசிய மனப்பாங்கு சார்ந்ததாக அமைந்தது.

அப்படியிருக்க இரட்டைத் தேசியப் பண்பு எங்கே வெளிப்பட்டது.? இந்தியாவில் ஆளும் சாதித் தேசியம் பிரதான வரலாற்றுப் போக்காக அமைந்தபோது அம்பேத்கார், பெரியார் போன்றோரது எதிர்த்தேசியம் உடன் விளைவாக வெளிப்பட்டன. மாறாக இலங்கையில் ஆளும் சாதியத் தேசியமே பிரதான செல்நெறிக்கு எதிரான உடன் விளைவாக வெளிப்பட்டமை கவனிப்புக்குரியது. மேலே குறித்தவாறு யாழ்ப்பாணத்தில் சாதியத் தகர்ப்புப் போராட்டம் முனைப்படைந்தபோது முழு இலங்கை சார்ந்த பரந்துபட்ட ஐக்கியம் அவசியப்பட்ட வகையில் இலங்கைத் தேசியத்தின் பகுதியாகவே அது அமைவது இயல்பாயிருந்தது. (எதிர்த்தேசியத்தை முன்னெடுத்த அம்பேத்கர்; இந்தியா முழுமையிலுமுள்ள தலித் மக்களின் ஒன்றுபட்ட பலத்தை முன்னிட்டு இந்தியா பிளவுபடும் பிரிவினை வாதத்தை நிராகரித்தார். என்பது நினைவு கூரத்தக்கது.) அப்போது தீவிரம் பெறத்தொடங்கிய தமிழ்த்தேசியம் முற்போக்குக் குணாம்சமுடையதாயின், அந்த சாதிய்த் தகர்ப்பு போராட்டத்தை ஆதர்pத்திருக்க வேண்டும். மாறாக யாழ்ப்பாண வெள்ளாளத் தேசியத்தால் தமிழ்த் தேசியம் முடக்குவாதமுற்றிருந்தமையினால், அவ்வாறு ஆதரவு வழங்முடியாமல் போயிற்று. சாதியத் தகர்ப்பை உள்வாங்கி இலங்கை முழுமையிலுமான உழகை;கும் மக்களது முற்போக்கான போராட்டங்களுடன் கைகோர்;க்கும் பரந்துபட்ட சக்திகளுக்கான ஈழத்தமிழ் தேசியமாயின் இத்தனை பேரழிவுகளுடன் கழித்தல் பெறுபேறிலான அவல முடிவு நேர்ந்திராது. யாழ் வெள்ளாளத் தேசியம் பிராமணியத்தை விடவும் கேடான அகம்பாவங்களுடன், ஆண்டபரம்பரைத் திமிர் மேவியதாய் ஆரம்பம் முதலாகவே மக்கள் விடுதலைக்கு விரோதமான போக்குகளுடன் விளங்கியிருந்தது.

மக்களைப் பிளவுபடுத்தம் சாதிய வெறியுடனான, மக்கள் விடுதலைப் பண்பற்ற ஈழத்தமிழ் தேசியத்தை நிராகரித்து, இலங்கைத் தேசியம் பற்றியே தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுக்கள் பேசுவதற்கும் இது காரணமாயிற்று. பௌத்த-சிங்கள பேரினவாத அரசாங்கங்கள் தொடர்ச்சியாக மேற்கொண்ட தமிழ்மக்களுக்கு விரோதமான அரசியல்,-பொருளாதார நடவடிக்கைகளும் புறக்கணிப்புக்களும் ;இராணுவ அழித்தொழிப்புகளும் ஈழத்தமிழ் தேசியத்தை யாழ்-வெள்ளாள தேசியத் தலைமையில் அணிதிரட்டும் துர்ப்பாக்கியம் வீறுபெற்ற பின்னரே கம்யூனிஸ்ட்டுக்கள் தேசிய இனப்பிரச்சினை குறித்த அக்கறை கொள்ள நேர்ந்தது.

என்னதான் எதிரியால் ஓன்று குவிக்கப்பட்ட போதிலும், மிகப் பிரமாண்டமான வளர்ச்சிகள் எட்டப்பட்டபோதிலும் ஆதிக்க சாதித் தேசியம் என்கின்ற வகையில் ஐக்கியப்படுத்தும் சக்திகள் பற்றிய அக்கறையின்றி அகங்காரத்தோடு முன்னெடுக்கப்பட்ட முப்பது வருட யுத்தம் அவல முடிவை எய்தியுள்ளது. இப்போதும் கடந்தகால அனுபவங்களைக் கற்று முன்னேறும் அக்கறை ஈழத்ததமிழ்த் தேசியத்திடம் இல்லை என்பதே பெரும் துன்பியல். ஐரோப்பர், கனடா, ஆவுஸ்திரேலியா போன்ற புலம்பெயர்; தேசங்களில் இருந்தபடி அதே ஏகாதிபத்திய ஒட்டுறவும், ஆண்ட பரம்பரைக் கனவுகளும் மேவியபடி யாழ்-வெள்ளாளத் தேசியத் தவறுகளுடனேயே ஈழத்தமிழ்த் தேசியம்.

அதேவேளை ஒடுக்கப்பட்ட மக்களது சாதியத் தகர்ப்பு போராட்ட சக்திகளும், கமயூனிஸ்ட் கட்சியும் எதிர்த் தேசிய நிலைப்பாட்டை மேற்கொள்ளாது, தமிழினத் தேசியப் போராட்டத்தின் நியாயங்களை ஏற்க முன்வந்தமை கவனிப்புக்குரியது. தொடர்ந்து தேசிய இனப்பிரச்சினை குறித்த கற்றலை விரிவுபடுத்தி சுயநிர்ணய உரிமை குறித்த ஆழ்ந்த அக்கறையை கம்யூனிஸ்டுக்கள் முன்னெடுத்தனர். இலங்கையின் தேசிய இனப் பிரச்சினைத் தீர்;வுக்கு அதன் பன்மைப் பரிமாணத் தளங்கள் அனைத்தையும் கவனத்திலெடுத்து தீர்வுத்திட்டம் ஒன்றை பு.ஜ.கட்சியே முன்வைத்துள்ளது. இனியும் மாறிவரும் சர்வதேச-தேசிய நிலைமைகளை உள்வாங்கி சுயநிர்னய உரிமையைப் சர்pவரப் பிரயோகிப்பது அவசியமானது. அந்தவகையில் தலித்பிரச்சினை இன்று ஈழத்தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையில் வலுவான இடத்தைப் பெற்றுள்ளது. சாதியத் தகர்ப்புபு போராட்டத்தின் ஊடாக ஒடுக்கப்பட்ட மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியால் தலைமை தாங்கப்பட்ட காரணத்தால், இலங்கையில் தலித்தியவாதம் காலூன்ற முடியவில்லை.  முப்பது வருடங்கள் நீடித்த யுத்தம் மற்றும் புலம்பெயர் சூழல் காரணமாக தலித்திய வாதம் பேசும் பொருளாகி உள்ளது. அதன் பிளவுபடுத்தல் பண்பால் பாதிப்புற்று விடாதவகையில், ஒடுக்கப்பட்ட மக்களின் சுயநிர்னயத்திற்கான வடிவம் கண்டறியப்படுவது அவசியம்.

இன்று இலங்கையின் யுத்தவெறியுடன் ஏற்பட்டுள்ள சர்வதேச உறவுநிலை மாற்றம் கவனிப்புக்குரியது. “யுத்தத்தை இந்தியாவே வெற்றியீட்டித் தந்தது. அக்காரணத்தால் இந்தியா சொல்கிற எதையும் செய்யவேண்டிய நிலையில் உள்ளோம்” என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளமை கவனிப்புக்குரியது. இத்தகைய நிலைக்கு இலங்கையை ஆட்படுத்த இந்தியா மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. பல்வேறு தந்திரோபாயங்களை பொறுமையாக முன்னெடுக்க வேண்டியிருந்தது. பல்லாயிரம் உயிர்கள் பலியிடப்பட்டது குறித்துக் கவலை கொள்ளாமல், காந்தீயத்தை கடைவீதியில் விட்டுவைத்துக் கடைகோடி இராஜதந்திரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

ஆமெரிக்கா-ஜப்பான் ஆகிய ஏகாதிபத்திய சக்திகளின் வேட்டைக்காடாக இலங்கையை மாற்றுவதற்கு 1977-ல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனா முனைந்த போது, இந்தியாவின் எடுப்பார் கைப்பிள்ளையாக ஈழத்தமிழ்த் தேசியம் இருந்தது. ‘எங்கள் பையன்கள்’ வாயிலாக (இப்படியாக அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தி பாராளுமன்றத்தில் சொன்னபோது ஈழப்பத்திரிகைகள் எல்லாம் என்னமாய்ப் புளகாங்கிதமடைந்தன.) இலங்கை அரசு வழிக்கு கொண்டுவரப்பட்ட போது ஈழப் போராளிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையே எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இடம் வைக்கப்படவில்லை. இலங்கை-இந்திய (ராஜீவ்-ஜே.ஆர்.) ஒப்பந்த வாயிலாக இலங்கை பூரணமாக இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. ஆயினும் சிங்கள மக்களிடம் இந்திய ஆதிக்கத்திற்கான எதிரான உணர்வுகள் இருந்தன. இனி இரண்டாவது காண்டம்: பிந்திய 20வருட யுதத்த்தில் புலி மிக மிகப் பிரமாண்டமான சக்தியாக வளர்வதை இந்தியா கண்டுகொள்ளாமல் விட்டது. சிங்களக் கிராமங்களில் புகுந்து தாக்குவது, நகரங்களில்  குண்டுவெடிப்பு, தொடர் யுத்தத்தில் பலநூற்றுக்கணக்கில் மடிந்துகொண்டிருத்தல், இவை சார்ந்து நீடிக்கும் சிங்களப் பண்பாட்டுச் சிதைவுகள் எனத் தாங்கமுடியாத வேதனையின் உச்சத்தில் சிங்களப் பேரினவாதம் இந்தியாவிடம் தனது இறைமையைத் தாரைவார்த்து இன்று யுத்தத்தில் வெற்றியீட்டியுள்ளது.

(தொடரும்)

சாதி, தேசம், பண்பாடு: ந. இரவீந்திரன் – பகுதி-1

சாதியத்  தேசியம் சாத்தியமாவது குறித்துப் பேசும் போது அதன் சுயநிர்ணயம் எத்தகையது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது. இந்தியா-இலங்கை எனும் நாட்டுத் தேசியங்களினுள் (குறிப்பாக இங்கே இலங்கையை முன்நிறுத்தி) தமிழ் இனத் தேசியமும் அதனுள் இந்த சாதித் தேசியம் பெறத்தக்க இடம் பற்றியும் பேச வேண்டியுள்ளது. இன்றைய மாறிவரும் உறவுச் செல்நெறிகளில் இவை குறித்த வரையறைகள் செயற்படும் இயக்கங்களுக்கு அவசியமானதாகின்றது. வர்க்க சக்திகளிடையிலும், தேசங்களிடையேயும் இடம்பெறும் சமநிலை மாற்றங்கள் எவ்வளவு விரைவில் கணிப்பிட்டு  ஏற்ற தந்திரோபாயங்களை வகுத்து செயற்பட முடிகிறதோ, அதில்தான் பாட்டாளி வர்க்க இயக்கமொன்றின் முன்னேறித் தாக்குதலுடனான வெற்றிகள் சாத்தியமாக முடியும். அந்த வகையில் சாதியச் தேச இருப்பும் அதன்மீதான பணபாட்டின் தாக்கமும் குறித்து இக்கட்டுரை அலசும்.

இந்தியா, இலங்கை எனும் நாட்டுத் தேசியம் கட்டமைக்கப்பட்ட போது, கூடவே பாகிஸ்தான் உருவாகி ஏற்பட்ட பிரிவினையோடு இணைந்த இனங்களிடையே இடம் பெற்ற வன்முறைக் கொலைத்தாண்டவம் கேடான அனுபவமாய் அமைந்தது. அதன் பேறாக எமது மார்க்சிச அமைப்புகள் இனத் தேசியங்களின்  சுயநிர்ணயத்தையே ஏற்க விருப்பமற்ற சூழலைத் தோற்றுவித்தது. இலங்கையில் எழுபதுகளில் தமிழ் இனத் தேசிய எழுச்சியோடு சுயநிர்ணயம் குறித்த தேடல் தொடங்கிய போது, இங்கை கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் இனம் ஒரு தேசிய இனமே இல்லையென வாதிட்டு, சுயநிர்ணயத்தை மறுக்க முயன்றது. பிரிவினையானது ஆபத்தான விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்ற நிலைப்பாட்டிலிருந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. தொடர்ந்த வரலாற்றுப் போக்கு தமிழினத்தை தனியான தேசிய இனம் என்பதை வலுவாக  காட்டியதுடன், பிரிவினை மோகம் எத்தனை மோசமான கேடுகளை ஏற்படுத்தும் என்பதையும் காட்டிச் சென்றுள்ளது.

இத்தகைய வளர்ச்சியோடு சுயநிர்ணயம் என்பதைப் பிரிவினையிலிருந்து வேறுபடுத்தும் அதேவேளை மார்க்சிச அமைப்புக்கள்  முன்னர்பேர்ல் இறுக்கமாகவன்றி, பரந்த தளங்களில் விரிவுபடுத்தி பிரயோகிக்க முன்வந்துள்ளன. இது தொடர்பில் நேபாள அனுபவங்கள் கவனத்திற் கொள்ளத்தக்கது. சாதிக் கட்சிகள் யதார்த்தமாகியுள்ள சூழலில் சாதித் தேசத்துக்கான சுயநிர்ணயத்தை நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுக்கள் நடைமுறையாக்கும் முயற்சிக்கான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை கவனிப்புக்குரியவை. சாதியத் தேசியமும் அதன் சுயநிர்ணயமும் எனும் வகையில், அது இல்லாத போதிலும், அ. மார்க்ஸ் நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுக்கள் “புரட்சியில் இட  ஒதுக்கீட்டு” நடைமுறையைப் பிரயோகிப்பது பற்றிக் கூறுவது, உண்மையில் சாதித் தேசத்துக்கான சுயநிர்ணயத்தையே காட்டுகிறது. (அதன் பொருளில் இன்னமும் விரிவாக்கம் பெற இடமுண்டு)

“நேபாள அரசியல் இதற்கு இன்னொரு சான்று. அங்கே 12-ஆண்டுகளாக ஆயுதப் போராட்டத்தை நடாத்திக்கொண்டிருந்த மாவோயிஸ்ட்டுக்கள், அங்கு புதிதாக உருவாகியிருந்த அடையாள உறுதியாக்கங்களைப் புரிந்து, உள்வாங்கி ஏற்றுக்கொண்டனர். அதற்கு ஏற்ப தம் கட்சித் திட்டத்தையும் மாற்றியமைத்தனர். 20-ஆண்டுகளுக்கு முன் அங்கே மாதேசி, ஜனஜாதி தலித் முதலான அடையாள உருவாக்கங்கள் வலுவாகச் செயற்பட்தில்லை. ஜனஜாதி, தலித் முதலான சொற்கள் நேபாளி மொழியில் இல்லாதவை. முன்னது வங்க மொழிச் சொல். பின்னது மராத்தி. மாதேசி இந்திய வம்சாவழியினரைக் குறிப்பது. ஆயுதப் போராட்டத்தின் மூலம் சுமார் 9-மாவட்டங்களை மாவோயிஸ்ட்டுக்கள் விடுதலை பிரதேசங்களாக அறிவித்தபோது, ஒன்று தலித் தலைமையில் உருவாக்கப்பட்டது. மேலும் ஐந்து முற்குறிப்பிட்ட அடையாளங்களின் அடிப்படையில் தலைமைகள் உருவாக்கப்பட்டன. புரட்சியிலும் இட ஒதுக்கீடு என்கின்ற புதுமை அங்கே ஏற்றுக்கொள்ளப்பட்டது”. (அ. மார்க்ஸ் 2009 அரசு, இறையாண்மை, ஆயுதப்போராட்டங்கள்,– புலம், சென்னை. பக்.24-25) என்பார் அ. மார்க்ஸ். மாதேசி, ஜனஜாதி, தலித் போன்ற தேசியப் பிரச்சினையின் வடிவத்தை, அடையாளங்களாக குறுக்கிப் பார்ப்பதில் உள்ள தவறு, இங்கு நாம் தொடர்ந்து விவாதித்துச் செல்லும்போது, தீர்வுக்குள்ளாக்க வல்லது. அவ்வாறே சிறு அடையாளங்களையே  முழுதாகக் கவனங்கொண்டு, சமூக மாற்றத்திற்கான அக்கறையைப் பெருங் கதையாடல்களாக நிராகரிப்பது, (அல்லது குறைத்து மதிப்பிடுவது) எவ்வகைக் கேடு என்பதையும் பின்னாலே பேசிக்கொள்வோம்.

சாதித்தேசம் பற்றிய விவாதம் உடனடித் தேவை

ஏனைய தேச வடிவங்களை விடுத்து, இங்கே சாதித் தேசம் குறித்து விவாதிப்பது உடனடித் தேவையாக உள்ளது. சாதி எவ்வாறு தேசத்துக்கான பண்பைப் பெற முடிகின்றது. சாதிகளின் தோற்றம் வளர்ச்சி இன்றைய இயங்காற்றல் என்பனவற்றிலிருந்து இதனைப் புரிந்துகொள்ள முடியும். பல தளங்களில் இவை குறித்த ஆரோக்கியமான ஆய்வுகள் வெளிப்பட்டுள்ளன. அதிலும் தமிழகத்தில் மிகக் காத்திரமான பங்களிப்புக்கள் இது தொடர்பில் உண்டு. பிராமணியத்துக்கு எதிரான திராவிடரியக்க எழுச்சி,  அதற்கான களம் அமைத்துக் கொடுப்பதாக அமைந்தது. தவிர, திணைகளாக இயங்கிய தமிழக வரலாற்றுத் தொடக்கத்தில் மருதத்தினை ஏனைய திணைகளை வென்றடக்கி அரசுருவாக்கத்தை ஏற்படுத்தியதை அறிவோம். இது சாதித் தோற்றத்தை விளங்குவதற்கான கோட்பாட்டு உருவாக்கததை வழங்க ஏற்றதாக அமைந்துள்ளமையும் கவனிப்புக்குரியது. திணைக் கோட்பாடு சார்ந்து சிவத்தம்பி முன்வைத்த கருத்துக்கள் சாதி குறித்த ஆய்வில், ஏற்கனவே தாக்கம் செலுத்தியுள்ளன. ஆயினும் இலக்கிய-இலக்கண பயன்பாடுகள் சார்ந்து திணைக் கோட்பாடு கவனங் கொள்ளப்பட்ட அளவோடு ஒப்பிடுமபோது சமூக உருவாக்கத் தளம் சார்ந்து, அதன் பரிமாணங்கள் வெறும் ஆரம்ப மட்டத்திலேயே இருக்கிறது. இங்கும் தமது பேசு பொருள் சார்ந்து சில அடிப்படை அம்சங்களை கவனத்திலெடுத்து மேற்கொண்டு ஏனையவற்றையே பேச வேண்டியிருக்கும். (ஆழமான ஆய்வுக்கான அவசியத்தை ஏற்கும் பட்சத்தில் இனிவரும் காலம் அதனைத் தானே வெளிக்கொணரும்.)

சங்ககாலம் என அறியப்படும் வீரயுகத்தில் ஏற்பட்ட சமூக மாற்றச் செல்நெறியை ராஜ்கௌதமன் தனி நூலாகத் தந்துள்ளார். அது முற்றிலும் இலக்கிய ஆதாரங்களை மட்டும் கவனங் கொண்டு எழுதப்பட்டது. அந்த வகையில் அதன் போதாமை குறித்து விமர்சிக்கப்படடதுண்டு. ஏனைய வரலாற்று மூலங்களை கவனம் கொள்ளாத போதிலும், அவரது இலக்கிய வழி வெளிப்பாடு ஏனைய ஆதாரங்களால் நிராகரிக்கப்பட வல்லதான, பலவீனப்பட்ட நிலையில் இல்லை. என்பதே நிதர்சனம். ராஜ்கௌதமன் வெளிப்பாட்டிலுள்ள இடைவெளியை நிறைவு செய்வதாக இலங்கையில் தமழினத்துவ உருவாக்கம் சார்ந்த இந்திரபாலாவின் நூல் அமைந்துள்ளது. இந்திரபாலா தமிழக வரலாற்றுத் தொடக்கத்தை பல்வேறு வரலாற்று மூலங்களின் வழி வெளிப்படுதிதியுள்ளார்.

தமிழகத்தின் சாதிய வரலாற்றுத் தொடக்கம்

தமிழகத்தின் வரலாறற்றுத் தொடக்கம் உலகின் ஏனைய பகுதிகள் போல் விவசாய எழுச்சியைத் தொடர்ந்த – வணிக எழுச்சியைக் காட்டுவதில்லை. விவசாய எழுச்சிக்கு முன்னரே வணிகம் சாத்தியப்பட்ட வரலாற்றுத் தொடக்கம், தமிழின் பல தனித்துவங்களுக்கு வழி வகுத்துள்ளது. ஐந்து திணைகள் ஆளுமையோடு அடையாளங் காணப்படுவதற்கு அதுவே வாய்ப்பளித்ததாக அமைந்தது. விவசாயத்திற்கு முந்திய வணிக சாத்தியம், சுமேரிய வணிகக் குழுக்களின் குடியேற்றத்தினாலாக இருக்கும் வாய்ப்பை இந்திரபாலா காட்டியுள்ளார். அதேவேளை ஏனைய இடங்கள் போல விவசாய எழுச்சியுடன் வணிக எழுச்சி பற்றியும் பேசும்போது முந்திய வணிக எழுச்சி விவசாயம் சாராமல் இருக்க முடிந்ததன் வரலாற்று முக்கியத்துவத்தை போதியளவு புரிந்து கொள்ளாதவராகிறார். பிந்திய வணிக எழுச்சி சங்க மருவிய காலத்திற்குரியது. இதற்கு நெடுங்காலம் முன்னதாக சுமேரிய வணிகக் குழுக்களின் வருகைக்குக் காரணமான குறிஞ்சித் திணையின் ஏலம், கறுவா, கராம்பு, நீல மாணிக்கம் மற்றும் நெய்தலின் முத்து வணிகம் சார்ந்து அந்தத் திணைகள் பெற்ற ஆளுமை பிரத்தியேக கவனிபுக்குரியது. இவை விவசாய எழுச்சிக்கு முந்தியவை. இக் காரணத்தினாலேயே வீரயுக இலக்கியத்தில் வணிகக் கருத்தியலுக்கான  சமண, பௌத்த, ஆசீலக கவிதைகள் இடம்பெற முடிந்துள்ளன.

சேர அரசுருவாக்கத்தின் போது அதன் சின்னமாக உள்ள அம்பு வில் முல்லையைக் குறிப்பதாக சொல்வோருளர். அது முல்லைக்குரியதல்ல. குறிஞ்சிக்குரியது. சேர அரசுருவாக்க நகர்கள் குறிஞ்சித் திணையோடு தொடர்பு பட்டிருக்கக் காணலாம். பாண்டிய அரசுருவாக்கத்தில் மீன்கொடி நெய்தல் திணையை நினைவுபடுத்துவது, அதன் முத்து வணிகம் கவனிப்புக்குரியது. அது தொடர்பில் ஒரு யவன அரசர் தனது மகனை மணம் முடித்துக் கொடுத்ததுடன், சீதனமாக பாண்டிய அரசை விங்கியதான குறிப்பு கவனிப்புக்குரியது. இதுபற்றி கங்காதரன் தனது நூலில் கூறியுள்ளதை பார்ப்பது அவசியம்.

ஆயினும் குறிஞ்சி, நெய்தல் திணைகள் நேரடியாக அரசுருவாக்கத்தை சாதித்தன எனக் கொள்ள முடியாது. படை நடத்தவும், குடியோம்பவும் ஏற்ற  செல் உற்பத்தி சாத்தியமான மருதத்திணைப் பண்பு வாய்ந்த பின்னரே அரசுருவாக்கம் சாத்தியமாகியிருக்க முடியும். குறிஞ்சி, நெய்தல் ஆகிய திணைகளின் வணிக முன்னேற்ததுடன் ஆற்று நீர்ப்பாசன வாய்ப்புள்ள மருதத் திணைக்கு மாறி வளர்ந்த இனக் குழுக்களிடம் முந்திய தொன்மங்களின் நீடிப்பாக அம்பு வில், மீன் ஆகிய கொடிகள் தொடர்வதாகவே இதனை விளங்கிக் கொள்ள வேண்டும். படை நடத்த வல்லதாக மருதத்தினை ஏற்படுத்தித் தந்த வாய்ப்புடன் குறிஞ்சி, நெய்தல், முல்லை, பாலை ஆகிய திணைகள் வென்றடக்கப்பட்டு சாதிகளாக்கப்பட்டமை தொடர் வரலாறு. இந்தளவில் திணைக் கோட்பாட்டின் சமூக உருவாக்க – விரிவாக்க தேடல் இங்கு போதும்.

“யாதும் ஊரே யாவரும் கேளீர்;” எனும் வீரயுகப் பிரகடனத்தை அறிவோம்”.

தனித்திருந்த இனக் குழு வாழ்முறை பேரரசு எல்லைக்குள் வேறு இனக் குழுக்களுடன் உறவு கொள்ளும் நிர்ப்பந்தத்தின் வெளிப்பாடு இது. பல்வேறு தொழில்சார் கிராமிய வாழ்வின் உறவுக்கு ஏற்புடையதாக இவ்வகையில் மாற்றப்பட்ட இனக்குழுக்கள் சாதிகளாக்கப்பட்டன.

விவசாய உற்பத்திக்கு அமைவாக வென்றெடுக்கப்பட்டு இவ்வாறு சாதிகளாக்கப்பட்ட இனக்குழுக்கள் தாம் இருந்த இடத்துக்கு அமைவான தொழிலைப் பரம்பரை பரம்பரையாக தொடர நிர்ப்பந்திக்கப்பட்டதன் பேறுதான் சாதி. மேலாதிக்கம் பெற்ற இனக்குழு ஆளும் சாதியமாகவும், ஏனையவை இறங்குவரிசைப் படிநிலைக்குரிய சாதிகளாகவும் கட்ட்மைக்கப்பட்டன. இவ்வகையில் குறித்த தொழில் வம்சாவழியாக நீடிப்பதனை உறுதிப்படுத்தும் வகையில் அகமணமுறை கட்டாயமாக்கப்பட்டது. இனக்குழு வாழ்முறையில் இருந்த தீட்டு கோட்பாடு சாதிகள் சார்ந்த வகையில் படிவரிசை இறக்கங்யளுக்குரியதாக மாற்றிப் பிரயோகிக்கப்பட்டது.

இத்தகைய இனக்குழு மேலாதிக்கம் சார்ந்த சுரண்டல் அமைப்பு சாதி முறையாக ஆகியமை சில நூற்றாண்டுகள் முன்னதாக வட இந்தியாவில் எற்பட்டிருந்தது. அதற்கு அமைவாக சாதியக் கருதியலைப் பிராமணியம் வழங்கியிருந்தது. இத்தகைய இனக்குழு மேலாதிக்கம் ஆரியர் வருகைக்குப் முன்னரே சிந்துவெளிப் பண்பாட்டுக்குரியோரிடம் ஏற்பட்டதாக கூறுவோர் உளர். ஆரியரின் வர்ணாசிரமக் கருத்தியலே சாதியத்தை தோற்றுவித்தது என்பர் வேறு சிலர். இனக்குழு வாழ்முறையுடைய ஆரியர்களதும் முன்னேறிய சுரண்டல் சமூகத்துக்கான மேலாதிக்க இனக்குழு வாழ் முறை சாத்தியமான சிந்து வெளிப் பணபாட்டுச் சுதேசிகளதும் பண்பாட்டுக் கலப்பில் உருவான புதுவகைப் பிராமணர்கள், இரு வழி முறைகளதும் இணைப்பில் கண்டு வெளிப்படுத்திய கருத்தியலே சாதியம். ஆக ஏற்கனவே சாத்தியமான சாதி வாழ் முறையின் வெளிப்பாடே பிராமணியம் முன்வைத்த சாதியக் கருத்தியல்.

சாதியம் தொடர்பான பல்வேறு சிந்தனைப் போக்குகளைத் தொகுத்து வழங்கி இனக்குழு மேலாதிக்க வாழ்முறையின் வெளிப்பாடே சாதியம் என்பதை கோ. கேசவன் தனது “சாதியம்” எனும் நூலில் காட்டியுள்ளார். சரியாகவே அதனை இனங் கண்டபோதிலும் தீண்டாமையுடன் கூடிய நிலவுடமைக் கருத்தியலாக மட்டுமே சாதியத்தை அவர் காணும் தவறையும் அங்கே வெளிப்படுத்தினார். நிலவுடமைக்கு முந்திய சாதியத்தை உருவாகிவரும் முன்தேவைப்பாடாகவும், நவீன சமூகத்தில் அதன் நீடிப்பை அரை நிலபிரபுத்துவம் இன்னமும் இருப்பதன் பேறான கருத்தியல் எச்சமாகவும் கேசவன் காண்கின்றார்.

உண்மையில் மேலாதிக்க இனக் குழுச் சுரண்டலுக்கான அரசுருவாக்கத்தின் உடன் விளைவான பிராமணியத்தோடு வருணக் கருத்தியல் முன்வைக்கப்பட்ட போதே சாதியக் கருத்தியல் தோற்றம் பெற்றுவிட்டது. வர்க்கப் பிளவடைந்த அடிமைச் சமூகத்தை உடைய கிரேக்கம், ரோம் போலத் தனி மனிதர்களாயல்லாமல் ஒடுக்கப்படுகின்ற உழைக்கும் இனக்குழுக்கள் எனும் சமூகவகை அடிமைப்பாட்டிற்கு ஏற்ப புனிதம் மற்றும் இரத்தக் கலப்பற்ற இனக்குழுத் தூய்மை சார்பான கருத்தியலாக ஆரம்பகாலச் சாதியக் கருத்தியல் அமைந்தது. அதுவே நிலவுடமைச் சமுதாயத்தில் நிலத்துடன் பிணைக்கப்பட்ட உழைப்போர்  தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்படுவதான தீட்டுக் கோட்பாடாகியது. முன்னதாக படியிறக்கத்துடன் புனிதம் குறைவடைந்து செல்வதான கருத்தியல் தீட்டுக் கோட்பாட்டின் இன்னொரு முகமேயாயினும், தீண்டாமையானது நிலவுடமை வாழ் முறையுடன் பெற்ற பொருளியல் தேவைப் பரிணமிப்பும், அதற்கேற்புடைய தீண்டாமைக் கருத்தியலும் புதுவகையானது. இதன் காரணமாக தீண்டாமையே-அவ்வகையில் நிலவுடமைக்குரியதே-சாதியம் எனப் பலரும் மயங்க நேர்கிறது.

சாதிக் கட்சிகள்

நவீன முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஸ்தாபனபமயப்படல் பிரதான அம்சம். முதலாளித்துவ சமூகத்துக்கான அரசியல் தேவைகளுக்கு ஏற்ப வர்க்க சக்திகளுக்கானதாக கட்சிகள் அமையும். வர்க்கப் பிளவுபடாத சாதிய சமூகத்தில் ஒரே சாதியினர் கிராம எல்லைகள் கடந்து ஸ்தாபன மயப்படுவதும், சாதிக்கட்சிகள் சாத்தியிப்படுவதுமாக இங்கே சாதியக் கருத்தியல் பரந்த தளத்தில் ஸ்தாபனமயப்படுதல் என்பதாக மாற்றம் பெற்றுள்ளது. நிலவுடமைச் சமுதாயத்தில் ஒரு கிராமத்தின் விவசாய உற்பத்திக்கு அமைவாக பல்வேறு சாதிகளின் உறவு அமைந்தது. வெவ்வேறு கிராமங்களில் ஒரே சாதியினர் இன்று போல் அப்போது ஒன்றுபடுவதை விட, ஒரு கிராமத்திற்குரிய வெவ்வேறு சாதியினரது  தொடர்பாடல் அதிக வலுவுடையது. இன்றைய தேவை கிராம எல்லை கடந்து சாதி உறவை கட்டமைக்க வலியுறுத்துகிறது. இவ்வகையில் ஸ்தாபன மயப்பட்ட கட்சி அமைப்புக்குச் சாத்தியப்படும் முதலாளித்துவக் கருத்தியலை இன்று சாதியம் பெற்றதன் பேறுதான் சாதிக்கட்சிகள்.

ஏதோ சாதிக் கட்சிகள் என அண்மைக் காலங்களில் இனங்காணப்பட்ட சில கட்சிகள் தாம் சாதித் தேசியத்துக்குரியன என்றில்லை. எந்தவொரு கட்சியும் அடிப்படையில் ஏதோவொரு சாதி நலனை முதன்மைப்படுத்தி அதன் தலைமையில் ஏனைய சாதிகளை ஐக்கியப்படுத்துபனவாயே இருந்துள்ளன. “யாதும் ஊரே யாவரும் கேளீர்;” எனத் தமிழகம் முடிவேந்தர்கள் மூவரது பேரரசு என்ற எல்லைக்குள் கொண்டு வரப்பட்ட போது, வெள்ளாளர் ஆதிக்கத்துக்குள் அனைத்து சாதிகளும் கொண்டுவரப்பட்டனர். 2,000-வருடங்களின் முன்னர் வெறும் அரசு இயந்திர அடக்கு முறையால் மட்டும் இதனைச் சாதித்து விட முடியாது. (அதுவும் ஒரு பகுதியாக அமைய வேண்டியிருந்ததாலேயே வீரயுக யுத்தப் பேரிகை–அதற்கு உணர்வூட்டும் வீரயுகப் பாடல்கள்) மூவேந்தர்கள் இவ் வகையில் பேரரசுகளாக எழுச்சி பெற்ற போது வென்றெடுத்த நிலங்களைப் பிராமணர்களுக்கு வழங்கி ஏற்றத் தாழ்வை வலியுறுத்தும் சாதியக் கருத்தியலையுடைய  பிராமணியத்தை இந்த மண்ணுக்குரியதாக்கினர். இவ்வாறு கருத்தியல் ஏற்பை சாத்தியமாக்கியதன் வாயிலாகவே வெற்றி பெற்ற சாதி தனது அதிகாரத்தை நிலைநிறுத்த முடிந்தது.

(தொடரும்)

13-வது திருத்தத்திற்கு ‘அப்பால் — இப்பால்’ பற்றி பாராளுமன்றத் தெரிவுக்குழுவே தீர்மானம் எடுக்கும்!

தெற்கு மக்கள் அதிகாரப் பரவலை எதிர்க்கவில்லை!   கிழக்கு மாகாண அமைச்சர் விமலவீர திசநாயக்காவும் அவர்களுக்கு மேல் ஒருபடி சென்று கிழக்கு மாகாண முதல்வருக்கு கருணா எச்சரிக்கை விடுத்துள்ளதும் யாவரும் அறிந்ததே.

இந்த இழுபறிகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கம் வகித்தால், அந்தக் குழு எடுக்கும் தீர்மானத்திற்கு தாமும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்பதாலேயே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வர தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயக்கம் காட்டுகிறது. நீங்கள் தெரிவுக்குழுவில் என்ன பணியாரம், அப்பம் சுடப் போகின்றீர்கள் என்பதும், உது குரங்கு அப்பம் புறித்த கதையாகத்தான் முடியும் என்பதும், ஊர் உலகறிந்ததே!

இந்தப் பணியார அப்பப் பறிப்பு விளையாட்டில் தாமும் பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்பதாலேயே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வர தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயக்கம் காட்டுகிறது’ மறந்துபோய் சொல்லியுள்ள ‘இவ்வுண்மைக்கு’ ஏனிந்த விக்கிரமாதித்தன் கதை விளக்கங்கள்.

நண்பர்கள் வட்டம், வளையம், ஒன்றியம், மாவட்டம்  என்ற பெயர்களில் இறந்தவர்களின் நினைவுதினம் கொண்டாடப்படுவது    ஐரோப்பாவில தொண்ணுறுகளில இருந்து சீவிக்கிறவர்களுக்கு  தெரியும். பாரிஸ் இதற்கு பேர்போன நகரம். அதுக்கடுத்ததாக லண்டன்.


அந்த நினைவு தினங்களின் இலக்கியவாதிகள், பெண்ணியவாதிகள்  என்று தம்மை தாமேயும் (தனக்கு தானே      முதுகு சொறிதல் ) மாறி மாறியும் ( அதாவது  நீ எனக்கு முதுகு சொறிந்தால் நான் உனக்கு   முதுகு சொறிதல்)  பிரகடனப்படுதிக் கொண்டவர்கள் ஒன்று கூடி இறந்தவருக்கு முதுகு சொறிவதும், அவரை இந்திரன் சந்திரன், தமிழ் மக்களுக்காக போராடிய மாபெரும் போராளி, பெண் விடுதலைக்காக போராடிய பெண்ணியவாதி என அவரை  புகழ்வதுடன், தாம் எப்படி அவருடன் இணைந்து பிணைந்து கூடிக்கலவிக்குலவி வாழ்ந்ததாக உரை நிகழ்த்துவார்கள்.

இதை வாசிக்கும் தேசிய செம்மல்கள், மார்சிச குஞ்சுகள் மற்றும் வரும்கால தமிழினத்தின் தானைத்தலைவர்களான உங்களில் சிலர் பின்னால வரபோற என்னோட சில கருத்துகள வாசித்துபோட்டு, எனக்கு இலங்கை அரசின் கைக்கூலி, CIA, MI6, RAW, NIP, தமிழினத்துரோகி என பட்டம் தரலாம். அதற்குமுன் அதனால், இத்தால் அனைவருமறிய தெரிவிப்பது என்னவென்றால், யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர் தலைவரை தாக்கியதை வண்ணமாக கண்டிக்கிறேன். தாக்குதலுக்கு பின்னல் இருந்த தமிழ் இன துரோகிகள் அது EPDP யாக இருந்தாலென்ன, புலியுடன் நின்று மே 16 வரை போரிட்டு,  இன்று யாழ்ப்பாணத்தில் அரச உளவுத்துறையின் அதிகாரிகளாக செயற்படும் புலிகளாக இருந்தாலென்ன, பிரபாகரனின் மறைவுவரை அவரின் பாதுகாப்பு அதிகாரிகளாக செயற்பட்டு, இன்று இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாண தலைமைச் செயலக ஆலோசகர்களாக செயற்படுபவர்களாக இருந்தாலும் சரி, அனைவரையும் கார்த்திகேசு மகன் கலியுகவரதனான நான் வன்மையாக கண்டிக்கிறேன். அப்பா ….. முச்சு வாங்குது .

வரலாற்று முக்கியத்துவம் இனவழிப்பு யுத்தம் ஒன்றிற்கு தலைமை தாங்கிய இருவர், இரு துருவங்கள் ஆகியுள்ளனர். மகிந்த ராஐபக்ச தன் அண்மைக்கால அரசியலில் விட்ட மிகப்பெரிய தவறொன்று, சரத் பொன்சேகாவை ஓரம்கட்ட நினைத்தது. இதனால் அந்நிலைமை (எதிர்வரும் தேர்தலில்) தனக்கும் வந்துவிட்டதோ என தத்தளிக்கின்றார்.

செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்

தஞ்சையில் இரண்டு நாட்கள் நடைபெறும், ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து செல்வதற்காக சென்ற ஜனாதிபதி வேட்பாளர் (சுயேட்சை) சிவாஜிலிங்கம், திருச்சி விமான நிலையத்தில் வைத்து திருப்பி அனுப்ப்பபட்டுள்ளார்.

தங்களின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் சிவாஜிலிங்கம் வரவில்லையென்பதை இந்தியா நாடுகடத்தலின் மூலம் சொல்லாமல் சொல்லியுள்ளது. புலிகளுக்கே அந்நிலையென்றால் சிவாஜிலிங்கம் எம்மாத்திரம்!

2005-ல் ஜனாதிபதித் தேர்தலின் போது, புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் – இன்று தமிழ்மக்கள் எதிர்;கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், அழிவுகளுக்கும் காரணம் – இரா சம்பந்தன்

பெத்தலேகம்

பெற்றெடுத்த மைந்தனே!

இவ்வுலகம் -

தன்வரலாற்றை

உனக்குமுன்

உனக்குப்பின்னென

பதிவு செய்கின்றது

இருந்தும் – உன்

செய்தியும் செய்திக் கண்ணோட்டமும் 03.01.2010

ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக சரத் பொன்சேகா குழுவினர் யாழ் சென்றனர். அப்போது கடந்த வருடம் மே மாதம் நடைபெற்ற மாபெரும் மனிதப் படுகொலை யுத்தத்தின் போது, கைதுசெய்யப்பட்ட, காணமல் போன  தம் உறவுகளையும் மீட்டுத்தருமாறு, பிரச்சாரத்திற்குச் சென்ற காணாமற்போனோர் தொடர்பான கண்காணிப்புக் குழுவின் தலைவர் மனோ கணேசனிடம் மக்கள் கதறியழுதபடி வேண்டுகோள் விடுத்தனர்.

நாம் ஆட்சிக்கு வந்தால் இதுவல்ல, அவசரகாலச் சட்டத்தை, பாதுகாப்பு வலயத்தைக் கூட இல்லாதாக்குவோம்.  அதென்ன வடக்கின் வசந்தம்?  நாம் யாழை ஓர் “காவிரிப் பூம்பட்டினம்” ஆக்குவோம். என பேசியுள்ளார்கள்.  மக்களின் மன வலி இவர்களுக்கு தெரியுமா?  அவர்கள் அழுத கண்ணீர் கூரிய வாளிற்கு ஒப்பாகும். உங்களின் இக்கூரியவாள் புது வரலாறு படைக்கும். இவர்களின் வாக்குறுதிகள் வெறும் தேர்தல் பிரச்சாரமே.

செய்தியும் செய்திக் கண்ணோட்டமும்… 10.01.2010

தம்மை விடுவிக்கமாறு கோரி கொழும்பு மத்திய மகஸீன் சிறைச்சாலையில் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் மூன்றுபேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதில் திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ப் பணிப்பாளர் தேவதாசனும் ஒருவர். இவர்கள் கவலைக்கிடமான நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவாக யாழ்சிறைச்சாலையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருவோரில் நான்குபேர் கவலைக்கிடமான நிலையில் யாழ்-போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பில் உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் கைதிகளுக்கு சிறைச்சாலை அதிகாரிகள் அச்சுறுத்தல் விடுகின்றனர்.

செய்தியும் செய்திக் கண்ணோட்டமும் …

இவ்வருடத்திலாவது எம்மை நிம்மதியாக மனிதனாக வாழவிடு என புத்தாண்டை வேண்டுவோம். ஆனால் இப்புத்தாண்டு பிறந்ததிலிருந்து அரைமாதக் கலன்டர் கடதாசியைக் கூட கிழிப்பதற்கிடையில் இயற்கையின் சீற்றம் கெயிட்டியை  (ஒரு லடசத்திற்கு மேற்பட்ட மக்களையும் பல பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கட்டிடங்களையும்) காவு கொண்டுள்ளது. நான்கு லட்சம் மக்களை காயப்படுத்தியுள்ளது.

இவ்வுலகின் அதிகாரத திமிர் கொண்ட ஆளும் சுரண்டும் வர்க்கம் எம்பூமியின் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தி இயற்கையை அழிப்பது ஒருபுறம். பயங்கரவாதத்தை உற்பத்தி செய்து அதை போர்களாக்கி உலக மக்களை அழிப்பது இன்னொருபுறம். இயற்கை சீற்றம் கொண்டு மழையாய், வெள்ளப்; பெருக்காய், பெருங் காற்றாய்,  சூறாவளியாய், நிலநடுககமாய், சுனாமியாய், தொற்று நோய்களாய் எம்மானிடத்தை அழிப்பது  மற்றொர்புறம். இவவுலகின் மக்கள் அதிகாரச் செருக்கு, இயற்கைச் சீற்றததிற்கும் ஏதிராகப் போராடுகின்றார்கள். போராடியே தீரவும் வேணடு;ம்.

செய்தியும் செய்திக் கண்ணோட்டமும் 24/01/2010

நாளை மறுநாள் இலங்கை மக்கள் ஓர் ஜனாதிபதியைத் தேர்வு செய்ய வாக்களிப்பொன்றை நடாத்தவுள்ளார்கள். இருபதுபேர் வரையில் போட்டியிடுகின்றனர். இவர்களில் சரத் – மகிந்தா இருவருமே முன்னணியில் உள்ளார்கள்.

இலங்கையில் ஜனநா(ண)யமான ஜனாதிபதித் தேர்தல் ஒன்றிற்கு மக்கள் வாக்களித்ததாக வரலாறு இல்லை. லஞ்சம்  ஊழல் மோசடி தில்லுமுல்லுகளுக்கூடாகவே, ஜே. ஆர். முதல் மகிந்தாவரை வந்துள்ளார்கள். இம்முறைத் தேர்தல்கூட இதற்கு விதிவிலக்கல்ல. நீதியான, சுதந்திரமான தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கான சூழல் அற்றுப்போயுள்ளது. தான் பதவியில் நீடிப்பதில் பயனில்லை என்கின்றார் தேர்தல் ஆணையாளர். அத்துடன் கடந்த காலங்களைப் போலல்லாது, இத்தேர்தல் தேசிய சர்வதேச ரீதியில் பெரும் பொருளாக்கப்பட்டு, இரு முகாம்களாகியுள்ளது. இருமுகாமிலும் நிற்பவர்கள் கூட மக்கள் விரோத ஜனநாயக விரோத, சர்வாதிகாரப் போக்கிலான ஓர் நாணயத்தின் இருபக்கங்களே.

செய்தியும் செய்திக் கண்ணோட்டமும் – 31.01.2010

எங்கள் கள்ளன் எங்களுக்கு நல்லவன்தான்” இது ஓர் சிங்களப் பழமொழி. இப்பாங்கில்தான் சிங்கள மக்கள் மகிந்தாவிற்கு வாக்களித்துள்ளார்கள். என தேர்தல் முடிவுகள் வந்தபொழுது பலரை எண்ணவைத்தது.

மகிந்த ராஜபக்ச “யதார்த்தவாதி சிந்தனையாளன்”.  தன் கடந்தகால அரச சாதனைகளை மக்கள் முன் வைத்து, தன் பதவிக்காலம் முடிவிற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பாக தேர்தலை நடாத்தி, தன் குறித்த இலக்கை அடைந்துள்ளார் எனவும், ஜனாதிபதி முதன்மை வேட்பாளர்கள் இருவரும் சமநிலையில் வருவார்கள் சிறுபான்மை இன மக்களின் வாக்குகள் தான் யாராவது ஒருவரை வெல்லவைக்கும் என்ற வியூகமும் நடைமுறைச் சாத்தியமற்றதாக்கி விட்டது. இப்படித்தான் இன்னொரு சாராரும் கணித்தார்கள்.

செய்திக் கண்ணோட்டமும்

அலரிமாளிகையில் சிறைக்கைதிகளான தேர்தல் ஆணையாளர் குடும்பம்?

இலங்கை வரலாற்றில் அதிஸ்டமுள்ள ஜனாதிபதி நானே என சுதந்திரதின விழாவில் ஜனாதிபதி கூறியுள்ளார். ஆம் முற்றிலும் உண்மையே!

எதிர்க்கட்சிக்கு அளிக்கப்பட்ட வாக்குகளை குப்பையில் வீசி, தேர்தல் ஆணையாளரையும், மனைவியையும்சிறைக்கைதிகளாக்கி, அவர் சுதந்திரமாக சொன்ன எல்லாவற்றையும் பொய்யாக்கி, நான் இப்போது சொல்வதே மெய்யென சொல்லவைத்த “கணனி மாயாஜால மன்னராகிய” நீங்கள் இலங்கை வரலாற்றில் ஓர் அதிஸ்டசாலியான ஜனாதிபதிதான்.

செய்தியும் செய்திக் கண்ணோட்டமும் 14.02.2010

இப்படி உரத்த குரலில் “அரசு இயந்திர மிருகம்” ஒன்று கத்திட , அம்மிருகத்துடன் வந்ததுகளும் ஓர் காட்டுவிலங்கை இழுத்துச் செல்லும் பாங்கில் இழுத்துச் சென்றனர்!

முன்னாள் இராணுவத் தளபதி இப்படித்தான் கைது செய்து அடைக்கப்பட்டுள்ளார். பொன்சேகாவை கைது செய்தவர், முன்னர் பொன்சேகாவினால் தண்டனை வழங்கப்பட்ட- தற்போதைய கொழும்பு மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி. தேர்தல் தினத்தன்றும் பொன்சேகா தங்கியிருந்த விடுதியை சுற்றி வளைத்த போராட்டத்திற்கும் தலைமை தாங்கியவரும் இவரே!

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE