Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

மீன்பிடித்திறன் அதிகரிப்பும் கடல்வள அழிவும்

 

கடலில் உருவாகும் மீன்வளத்தின் அடிப்படையில் கிடைக்கவல்ல வருமானத்திற்கு மீறியதான மீன்பிடித்திறனை அதிகரிக்க முதலீடுசெய்வதும், அதைக் கட்டுப்படுத்தி மீன்வளத்திற்கேற்ப முதலீடு செய்ய வகைசெய்யாமல், மீன்பிடித்துறையில் தாராளமய முதலீட்டை ஒரு அரசு தனது கொள்கையாக கொண்டிருக்குமானால் அதனால் முதலில் பாதிப்படைவதும், அழிவுக்குள்ளாவதும் கடல்சார் வளங்களே.

இந்திய அத்துமீறல்களும், இயற்கைவள அழிவும் இலங்கை தமிழ் மீனவரின் வாழ்நிலையும்


இலங்கையின் வடபிரதேசக் கடலில் இந்திய நாசகார மீன்பிடி எவ்வகை அழிவை ஏற்படுத்துகிறதென பார்க்கமுன், பாதிக்கப்படும் பிரதேசங்களின் கடல்வளத்தை பற்றியும், அவற்றின் தன்மை பற்றியும் அறிந்து கொள்வது, அழிவு எவ்வாறு நிகழ்த்தப்படுகிறது, மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் விளங்கிக் கொள்வதற்கு இலகுவாக இருக்கும்.

இழுவைப் படகுகளின் பாதிப்புகள்

பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல இனவெறிப்போரின் கொடுமையிலிருந்து தப்பிய என் மாமன் குடும்பம் போல பல ஆயிரம் குடும்பங்கள் இன்று இந்திய இழுவைப்படகுகளின் கடற்கொள்ளையால் அன்றாடம் சோற்றுக்கு தவிக்கும் நிலையில் உள்ளனர்.

இழுவைப்படகு மீன்பிடி என்பது படத்தில் காண்பது போன்று இயந்திரப்படகின் கடையால் பகுதியில் பாரிய பை போன்ற வலையை இணைத்து இயந்திர உதவியுடன் கடல் அடித்தளத்தை வடிகட்டுவதாகும். இந்த வகை மீன்பிடி முறையானது பின்வரும் கடல்வள அழிவையும், இயற்கை மாசடைதலையும் ஏற்படுதுகிறது.

அவையாவன :

1. மீனின் வகை, தொகை, நிறை, அளவு போன்ற எதையும் கணக்கில் கொள்ளாமல் மீன்பிடித்தல்

2. கடலடித்தள தாவரங்களை அழிப்பதன் மூலம் தாவரவியலில் மாற்றமேற்படுத்துவது

3. கடலடித்தள பவளப்பாறைகள் – முருகைகளை அழித்தல்

4 மீன் இனத்தின் முட்டைகளையும் குஞ்சுகளையும் அழிப்பதன் மூலம் மீன் உற்பத்தியை தடைப்படுத்துதல்

5. இயற்கையின் சமநிலையைக் காக்கும் கடலடித்தள சிறு நுண்ணுயிர்களையும் உணவுக்கு உதவாத மீன்வகைகளையும் அழிப்பதன் மூலம் இயற்கை அழிவை ஏற்படுத்தல்.

6. பலமணி நேரம் தொடர்ச்சியாக இழுவைப்படகு இயங்குவதன் மூலம் பல நூறு லீட்டர் எரிபொருள் மூலம் சூழல் மாசடைதல்.

 

உதாரணம் 2 :

ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல சிறையா இன மீன்கள் கரையோரம் பிறந்து கடற்தாளைகளைக் கொண்ட ஒரு பாக ஆழத்திற்கு மேற்பட்ட பிரதேசத்தில் சீவிக்கும். இழுவைப்படகுகள் இதன் வாழ்விடமான கடற்தாளைகளை அழித்து அவற்றிடையே மீன் பிடிக்கின்ற போது, நீரின் மேல்தளத்தில் நீந்தக்கூடிய தன்மை கொண்ட சிறையாக்கள் இழுவை மடியில் இருந்து தப்பித்து விடும். ஆனால் அவற்றின் வாழ்விடம் அழிக்கப்படும் போது அவை வேறு பகுதிக்கு புலம் பெயரும் அல்லது கரையோரமாக ஒதுங்கி இறந்து விடும். செட்டிபுலம், துறையூர், கெட்டில், நாவாந்துறை, சாவற்கட்டு போன்ற கிராமத்து தொழிலாளர்கள் பல பரம்பரையாக வேலணைக்கும் புங்குடுதீவுக்கும் இடைப்பட்ட பகுதியில், அதாவது வேலணையையும் புங்குடுதீவையும் இணைக்கும் பாலத்திற்கு கிழக்காக உள்ள கடற்பரப்பில் விடுவலை, மற்றும் சிறையாவலை பாவித்து சிறையா மீன் பிடிப்பது வழக்கம். இந்திய இழுவைப்படகுகள் சிறையாக்களின் வாழ்விடமாமான வேலணைக்கும் புங்குடுதீவுக்கும் இடையிலுள்ள கடற்பரப்பில் நாசகார மீன்பிடியில் ஈடுபடுவதனால் தற்போது விடுவலை தொழில் முற்றாக அழிந்து விட்டது. சிறையாவலை சிலரால் பாவிக்கப்பட்டாலும் முன்னைய காலம் போல் பெரிய அளவில் உழைக்க முடியாதுள்ளது என அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர் .

மீன்பிடித்தொழிலும் தமிழ், சிங்கள தொழிலாளர்களுக்கிடையிலான உறவும்

சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சி செய்த 72 -77 வரையான காலத்தில் தென்னிலங்கையில் அரசியல்ரீதியாக அசாதாரண நிலை நிலவியது. பெரும்பான்மையான மீன்பிடி சார்ந்த கிராமத்தவர் பலர் ஜேவிபி யில் இணைந்திருந்தனர். இக்காரணங்களால் நீர்கொழும்பு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பாரிய மீன்பிடி அபிவிருத்தியொன்றும் அரசால் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் 1977 இல் ஆட்சிக்கு வந்த ஜெயவர்த்தன அரசால் உலக நாணயநிதியத்தின் உதவியுடனும், மேற்குநாடுகளின் உதவியுடனும் இப்பகுதிதியைச் சேர்ந்த 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட மீன்பிடிக் கிராமங்கள் உல்லாசப் பயணிகள் வந்து தங்கிச் செல்லும் விடுதிகளையும், கேளிக்கை அரங்குகளையும் கொண்ட தலங்களாக மாற்றப்பட்டது. இன்றும் கூட 70 சதவீதத்திற்கும் அதிகமான உல்லாசவிடுதிகள் இப்பகுதிகளிலேயே அமைந்துள்ளன. இந்த மாற்றமானது பாரிய கலாச்சார சீரழிவுகளையும், சமூக-பொருளாதார மாற்றங்களையும் ஏற்படுத்தியது. யுத்தத்தால் உல்லாசப் பயண வியாபாரம் படுத்த வேளையில் இப்பகுதி மக்கள் பாரிய பொருளாதார வறுமைக்குள் தள்ளப்பட்டார்கள். வளங்கள் நிறைந்த கடலிருந்தும் அவர்களால் தொழில் செய்யமுடியவில்லை. காரணம் இருபது வருடங்களாக கடல்சார் தொழில் செய்யாததனால் தொழில் அனுபவம் மறக்கப்பட்டதும், மீன்பிடித் தொழிலுக்கான உள்கட்டுமானம் அழிக்கப்பட்டிருந்ததுமாகும். வறுமையைப் போக்க பல குடும்பங்கள் கொழும்பு போன்ற பெருநகரங்களுக்கு புலம்பெயர்ந்தனர். ஆண்கள் தங்களை கடற்படையிலும், இராணுவத்திலும் இணைத்துக் கொண்டனர். பாணந்துற, பேருவள, ஹிக்கடுவ, காலி, மிசற, தங்கல போன்ற பிரதேசங்களை உல்லாசப் பயண அபிவிருத்தியால் பாதிக்கப்பட்ட முன்னாள் பெருமை மிகு மீன்பிடித்துறைகளுக்கு உதாரணமாகக் கூறலாம்.

தமிழக மீனவர் படுகொலை: எல்லை தாண்டுவது தான் பிரச்சினையா?” என்ற தலைப்புடன் ”புதிய ஜனநாயகம்” கட்டுரையொன்று வெளியிட்டுள்ளது. அதே வேளை ம.க.இ.க.வின் ஆதரவு இணையத் தளமான ”வினவு” ,  ”நாகபட்டின மீனவர் வாழ்க்கை! சிறப்பு  ரிப்போர்ட் ” என்ற தென்னிந்திய மீன்பிடிச்சமூகம் சார்ந்த கட்டுரையையும் வெளியிட்டுள்ளது. இந்த கட்டுரைகளின் உள்ளடக்கம் மீனவர் கொலையின் பின்னணியில் உள்ள பல பிரச்சனைகளை, முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைப்பது போல புதைத்து விட்டு, சந்தர்ப்பவாதத் தளத்தில் நின்று பிரச்சனையைக் கையாளுகிறது.

நான் உட்பட எமது தோழர்கள் பலரால் எழுதப்பட்ட பல கட்டுரைகள் மீனவர் கொலையின் பின்னணியில் உள்ள பல சிக்கலான அம்சங்களை ஆதாரங்களுடனும், அரசியல் ரீதியாகவும் சுட்டிக் காட்டியிருந்தன.  ம.க.இ.க சார்ந்த எந்த அமைப்புக்களும் இரு கரையிலும் வாழும் மீனவர்களின் பரந்துபட்ட பிரச்சனையாக இதை அணுகி ஒன்றிணைந்த போராட்டமொன்றை முன்னெடுக்கத் தயாராகவில்லை. இதன் அர்த்தம்; நாம் முன் வைத்த ஆதாரங்களும், அரசியல் ஆய்வுகளும், எமது அமைப்பான புதிய ஜனநாயக மக்கள் முன்னணினால் முன்வைக்கப்பட்ட அரசியல் கோசங்களும்,  ம.க.இ.க சார்ந்தவர்களால் புரிந்து கொள்ளப்படவில்லை அல்லது அவர்களை அது சென்றடையவில்லை,. அதனால் தான் அவர்கள் விபரம் அறியாது, சந்தர்ப்பவாத சாக்கடையில் அரசியல் நடத்துகின்றனர் என யாராவது நினைத்தால்,  அது தவறான புரிதல்.

சாமத்தியக் கொண்டாட்டம் முடிஞ்சவுடன் இரவுப் பார்ட்டிக்கு நீ கட்டாயம் நிற்க்க வேண்டும் என்ற சிவாண்னையின் வேண்டு கோளுக்கிணங்கத் தான் நான் இங்கு வரவேண்டிய நிலை. தவிர்க்கவும் முடியாது. மறுக்கவும் முடியாது.


எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை. குடிப்பதற்கல்ல இங்கே வருவதற்கு தான்.
போனால் குடிக்க வேண்டும்.
குடிச்சா கதைக்க வேண்டும்.
கதைச்சா அரசியலும் வரும்.
அரசியல் வந்தா சண்டை வரும்.
சண்டைவந்தா…

கலியாணம் முடிச்சு மனிசி இங்கே என்னிடம் வந்து இன்றையோடு மூன்றே மூன்று நாள் தான்.  என்ன வெளியிலே மட்டுமா குளிர், உள்ளேயும் குளிர் தானே என்று ஒரு இடமும் வெளிக்கிட விருப்பமில்லாமல் போர்த்துக் கொண்டு சோபாவில் இருந்த படியே ரீவியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மனிசி என்று குறிப்பிட்டு எழுதுவதால் பெண்ணியவாதிகள் கோவிச்சு கொள்ள வேண்டாம்.

ஏதோ ஒரு அவசர வேலையாக வெளியில் போட்டு வர கொஞ்ச நேரமாகி விட்டது.
மனுசி இப்ப தானே வந்தவள் தனித்திருக்கப் பயப்படுவாள் என நினைத்துக் கொண்டு ஓடோடி வீட்டுக்கு வந்தேன். கதவைத் திறந்து உள்ளே வரும் போது ரீவியின் சத்தமும் மனிசியின் சத்தமும் பலமாயக் கேட்டது.


இந்த பன்னிரண்டு வருட வெளிநாட்டு வாழ்க்கையில் இப்படி ஒரு நாளும் தினேஸ் சந்தோசமாக இருந்ததில்லை. இஞ்சை வந்த கொஞ்சக் காலம் அப்பிடி இப்படி என்று ஓடிவிட்டாலும் சினேகிதர்களுடன் சேர்ந்து முஸ்ப்பாத்தி சந்தோசம் என்று காலம் கழிந்தாலும் காசு விசையத்திலும் உழைப்பு விசையத்திலும் மிகக் கண்ணாகவே இருந்தான்.

ஒரு இருபத்தாறு வருசத்துக்குப் பின்னர் இன்று தான் என்ரை பெரியப்பாவைச் சந்திக்கப்  போகிறேன். ஜரோப்பிய நாடொன்றில் தம்பியிடம் ஒரு சில மாதங்கள் வந்து தங்கி விட்டுப்  போவதாக வந்திருக்கிறார்.

பெரியப்பா என்றதும் என் நினைவலைகள் பொங்கி நுரைத்து வழியத் தொடங்கியது  சரியாக எனக்கு ஞாபகம் இல்லை. அப்போ பதினாறோ அல்லது பதினேழோ வயதிருக்கலாம்.  ஆனந்தவிகடன் குமுதம் போன்ற புத்தகங்களில் வரும் பெண்களையும் விளம்பரப்  படங்களையும் வெட்டிச் சேகரித்து அந்த பெண்களையும் அந்தப் புகைப்படங்களையும் ரசித்து  ஏங்கிக் கொண்டிருந்த ஒரு கனாக் காலம்…

ஒரு இருபத்தாறு வருசத்துக்குப் பின்னர் இன்று தான் என்ரை பெரியப்பாவைச் சந்திக்கப்  போகிறேன். ஜரோப்பிய நாடொன்றில் தம்பியிடம் ஒரு சில மாதங்கள் வந்து தங்கி விட்டுப்  போவதாக வந்திருக்கிறார்.

பெரியப்பா என்றதும் என் நினைவலைகள் பொங்கி நுரைத்து வழியத் தொடங்கியது  சரியாக எனக்கு ஞாபகம் இல்லை. அப்போ பதினாறோ அல்லது பதினேழோ வயதிருக்கலாம்.  ஆனந்தவிகடன் குமுதம் போன்ற புத்தகங்களில் வரும் பெண்களையும் விளம்பரப்  படங்களையும் வெட்டிச் சேகரித்து அந்த பெண்களையும் அந்தப் புகைப்படங்களையும் ரசித்து  ஏங்கிக் கொண்டிருந்த ஒரு கனாக் காலம்…

இங்கே நான் இருக்கிற இடத்திலே ஒரு பொடியன் இருக்கிறான். கிட்டத்தட்ட பதின்மூன்றோ, பதின்னாலு வயசு தான் இருக்கும். ஆள் நல்லா மொட்டையும் அடிச்சு இரண்டு காதிலே தோடும் குத்தி பார்க்கிறதுக்கு ஒரு மாதிரித் தான் இருப்பான்.


அவனின் குடும்பத்தையும் ஓரளவு எனக்குத் தெரியும். ஆனால் போய் வந்து அளவிற்கு நட்பும் பழக்கமும் இல்லை.


ஒரு நாள் என்னுடைய கடைசி மகளுக்கு ஏதோ பல்லு வைத்தியரிடம் கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்பதற்காக  கார்தரிப்பில் நின்ற போது பள்ளிக்கூட வேலி ஒன்றுக்குப் பக்கத்தில் நின்று சிகரட் குடித்துக் கொண்டு நின்றான். இந்தப் பொடியன்.

”We Want… தமிழீழம்…We Want… தமிழீழம்…Our Leader… பிரபாகரன்…Our Leader… பிரபாகரன்… டம்… டம்… டம்… டம்” என்ற மேளத்தின் இசை ஒலியோடு மக்கள் கூட்டத்தின் கோசம் வானைப் பிளக்கிறது. ஒவ்வொருவரது கோசங்களில் இணைந்த உச்சரிப்புக்களிலும் இருந்த உணர்ச்சியின் வேகமும் அதனோடு ஊறிய உச்சாட்ட வெறியின் கொதிப்பும் ஆவேசமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. டம்… டம்… டம்… டம்… We want தமிழீழம், We want தமிழீழம், Our Leader பிரபாகரன், Our Leader பிரபாகரன். நூறல்ல.., ஆயிரமல்ல கிட்டத்தட்ட லட்சங்களைத் தாண்டிவிட்ட மக்கள் கூட்டம். குழந்தைகள் குட்டிகள், கிழடுகட்டைகள், இளைஞர்கள், குமருகள் எனச் சத்தம் போட்டபடி ஊர்வலம் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

சவப்பெட்டிகளைத் தூக்கியபடி ஒரு கூட்டமாகவும், தலையிலே துண்டுகளைக் கட்டியபடி தாளத்திற்கு ஏற்றது போல் பைலா ஆடிக்கொண்டு போகும் இன்னொரு இளைஞர் கூட்டமுமாக, இறுதி நேரத்தில் நிகழ்ந்த கோரச் சம்பவங்களைப் பிரதிபலிக்கும் பதாகைகளோடும், பொக்கற்றினுள் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு புன்னகைத்தபடி போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் தலைவனின் படத்தையும் தூக்கிக் கொண்டு போகும் கூட்டமுமாக ஊர்வலம் கம்பீரமாய் வீறுநடை போட்டு நகர்ந்து கொண்டிருக்கிறது. We Want தமிழீழம்; We Want தமிழீழம், Our Leader பிரபாகரன், Our Leader பிரபாகரன் எந்தத் தடைகளுமின்றி ஊர்வலம் நகர்ந்து செல்கின்றது. நகரமுடியாது மறிக்கப்பட்டிருந்த வாகனங்களில் இருந்த வெள்ளைச் சனங்களும், வெளிநாட்டுச் சனங்களும் எட்டிப் பார்த்தபடியே திகைத்துப் போயிருந்தார்கள்.

ஐயோ….ஐயோ.. ஏன் இந்த வாழ்க்கை…எனக்கு…     கடவுளே இந்த ஊரிலே வந்து வாழ்வதை விட நான் செத்துத் தொலைச்சிருக்கலாம். கேவலம்….  வெட்கம் விட்டு போய்ச் சரணடைந்தேனே..

அப்பவே களுத்திலிருந்த சயினற்றை அடிச்சு கதையை முடிச்சிருக்க வேணும், மாதினியைப் போல் மித்திரா போல் களத்திலேயே உடனே உயிரைத் துறந்திருக்க வேண்டும். மற்றவர்களைப் போல் வாழ வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் எனக்கு வந்திருக்கவே கூடாது. ஒரு முறையல்ல, இருமுறையல்ல, பலமுறைகள் தன் தலையில் அடித்தபடியே கதறிக் கதறிக்  அழுதழுது குளறிக் கொண்டிருக்கிறாள்.

ஐயோ….ஐயோ.. ஏன் இந்த வாழ்க்கை…எனக்கு…     கடவுளே இந்த ஊரிலே வந்து வாழ்வதை விட நான் செத்துத் தொலைச்சிருக்கலாம். கேவலம்….  வெட்கம் விட்டு போய்ச் சரணடைந்தேனே..

அப்பவே களுத்திலிருந்த சயினற்றை அடிச்சு கதையை முடிச்சிருக்க வேணும், மாதினியைப் போல் மித்திரா போல் களத்திலேயே உடனே உயிரைத் துறந்திருக்க வேண்டும். மற்றவர்களைப் போல் வாழ வேண்டும் என்ற எண்ணமும் ஆசையும் எனக்கு வந்திருக்கவே கூடாது. ஒரு முறையல்ல, இருமுறையல்ல, பலமுறைகள் தன் தலையில் அடித்தபடியே கதறிக் கதறிக்  அழுதழுது குளறிக் கொண்டிருக்கிறாள்.

செய்தி குறித்த கண்ணோட்டம்

சர்வதேச சமூகத்திடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தும் செயன்முறைக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் ‐

அபிவிருத்தி அடைந்த நாடுகள் மற்றும் கடன் வழங்கும் சர்வதேச அமைப்புக்களிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தும் செயன்முறை முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை தொடர்ந்தும் மூன்றாம் மண்டல நாடாக வகையீடு செய்யப்படக் கூடாது என்பதனை உலகத்திற்கு உணர்த்த வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்தை வெற்றிகரமாக முறியடித்த அஞ்சா நெஞ்சம் படைத்தவர்கள் இலங்கை என்பதனை மட்டுமன்றி பொருளாதார யுத்தத்தையும் வெற்றிகரமாக முறியடிக்கக் கூடிய வல்லவர்கள் என்பதனை நிரூபிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE