Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

பத்திரிக்கை செய்தி: அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன விவகார தீர்வு தொடர்பாக பேசுவதில் பயனற்றுப்போயுள்ளது எனவும், அப் பேச்சுவார்த்தை எவ்வேளையிலும் முறிவடையலாம் எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருக்கின்றார். தமிழ் மக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் பொறுத்து சர்வதேச சமூகத்திடமும், ஐ.நா.விடமும் தமது நிலை குறித்து முறையிட்டு தீர்வு காண்பதற்கு இவர்கள் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை முன்னெடுப்பது குறித்தும், நியாயம் கோரவும் மக்களை அணி திரட்ட வேண்டிய தேவை தற்பொழுது தமக்கு எழுந்துள்ளதாகவும், இது குறித்து மக்களிடம் செல்வதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லையாம்.

உச்சி மீது குத்தி வீழ்ந்த சூரியன்
சடலமாய்க் கிடந்து தகிக்கின்றான்
எந்தன் காய்ந்த தலை முகட்டில்.

நேற்றுப் பெய்த அடைமழையால்
எங்கு பார்த்தாலும்
பச்சைப் பசேலென்ற பற்றைக் காடுகள்.
ஆனாலும்..,

உச்சி மீது குத்தி வீழ்ந்த சூரியன்
சடலமாய்க் கிடந்து தகிக்கின்றான்
எந்தன் காய்ந்த தலை முகட்டில்.

நேற்றுப் பெய்த அடைமழையால்
எங்கு பார்த்தாலும்
பச்சைப் பசேலென்ற பற்றைக் காடுகள்.
ஆனாலும்..,

 

இதைச் சும்மா ஒரு விளம்பரமா

ஒருபோதும் எடுக்கக் கூடாது பாருங்கோ.

மாபெரும் குற்றவாளிகள்

தங்களின் குற்றங்களை

மற்றவரில் சுமத்த..,

புதுக்கத் தார் மெழுகிய

அந்தத் தெருவை

டக்கிளசு போட்டாரென

அனுங்கினான் ஒரு தம்பி.

 

எனை நான் புலம் பெயர்த்திய

காலத்தின் முன்பாக

அந்தத் தெருக்கள்

நீண்டதாய் பரந்து கிடந்தன.

ஏன் தானோ இப்போது

ஒரு வழிப் பாதை போல

அவை குறுகிக் கிடக்கிறது.

வீட்டுக்கு அறிக்கையான வேலியும்

கறையானின் மண்ணை அப்பி

கட்டுகள் உக்கி அறுபட்டு


செய்தி குறித்த கண்ணோட்டம்

சரத் பொன்சேகாவை பொதுமக்கள் சிறைச்சாலை மதிலை உடைத்து விடுதலை செய்வார்கள்: சோமவன்ச அமரசிங்க!

அரசாங்கம் சரத் பொன்சேகாவை விரைவில் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்காது விட்டால் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு வெலிக்கடை சிறைச்சாலையின் மதில் சுவரை உடைத்து அவரை விடுதலை செய்வதற்கும் தயங்க மாட்டார்கள் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் விடுதலையை வேண்டி ஜனநாயகத்துக்கான மக்கள் இயக்கம் இன்று மாலை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த கண்டனப் பேரணியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்தார்.


இலங்கைத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இறுதியாக, பாரிய அளவில் நடந்து முடிந்த புலிகளின் போராட்ட அனுபவங்களே, இங்கு ஆரம்ப விமர்சனமாகின்றது. அந்த வகையில், கடந்த கால புலிகளின் தமிழீழ விடுதலை என்ற ஆயுத படைபலத்தின் வீழ்ச்சிக்கான சூட்சுமங்களைப் புரிந்தும் – புரியாமலும், அவர்களைத் தூக்கிப் பிடிக்கின்ற அனைவரும், உங்களின் நம்பிக்கை – தேடல் – சிந்தனை – கருத்து – காத்திருத்தல் மீதான சில கேள்விகளை, உங்கள் மனதுக்குள்ளேயே எழுப்புங்கள். அப்போது, இந்தப் போராட்ட வீழ்ச்சியின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ள முடியும்.

அது இரு போர்களை இணைக்கும்
ஒரு அமைதியென்ற காலம்..!

அந்த அமைதி நிலவும் மண்ணிலிருந்து
என்னுடைய அடிவேர் பிடுங்கி
ஊரையும் உறவுகளையும் மறுதலித்து
என்னை நான்

‘… மானுடச் சிறப்பெனும் வாழிட எல்லையில்

மடமைகள் சீண்டிப் போர் புகா மண்ணினை

நாடி நாம் காண்பதே நிலம் …”


ம்..!
வாருங்கள்..,
உங்கள் உண்மையின் உளந்திறந்து பாருங்கள்…!?

தன் தாயிலே ஏறிய கடாய்களுக்கு
தீவனம் தீத்தினர் ஆட்டுக்காரர் – எங்கள்
ஊரிலே ஏறிய படைகளுக்கு – பல
தகமைகள் சூட்டினர் நாட்டுத் தலைவர் – ஈழ(ப்)
போரிலே ஏறிய போராளியர்க்கு – பல
ஈனங்கள் சூட்டினர்
அவரேயான கூட்டுக்காரர்.

”இந்நாள் மஹிந்த பாசிசத்தின் அடிவருடியும், முன்னாள் புலிப்பாசிசத்தின் கிழக்குப் பிரதிநிதி தளபதியுமான கருணா இலங்கை ராணுவத்தினருக்காக, பெண்களை கட்டாயப்படுத்தி அனுப்பி விபச்சார தரகனாக செயற்பட்டான் என, அவனின் மற்றொரு இருண்ட பக்கத்தை அமெரிக்காவின் குறிப்புகள் மூலம் அம்பலப்படுத்தியுள்ளது விக்கிலீக்ஸ்.

விக்கிலீக்ஸ் இன் தகவலின்படி கிழக்கு மாகாணத்தில் நிலைகொண்டிருந்த ராணுவத்தினருக்காக விபச்சாரத்தில் ஈடுபடுமாறும் பல்வேறு பெண்களை அனுப்பி வைத்தார் கருணா. இதற்காக தனியாக ஒரு விபச்சாரக் குழுவையும் அவர் வைத்திருந்தார். கருணாவின் நிர்ப்பந்தம் மற்றும் உயிர்ப் பயம் காரணமாக இந்தப் பெண்கள் கருணாவின் உத்தரவுக்கு கட்டுப்பட நேரிட்டது.

புலிப் பினாமிகளும், அவர்களின்  இடது- திடீர் தேசியவாதிகளும் கொழும்பில் நடந்த இலைக்கிய சந்திப்பிற்கெதிராக கையெழுத்து போர் நடாத்தி, தோற்றுப் போய்,  ஓய்ந்துபோயுள்ள  நிலையில்; தற்போது சிறிலங்காவில் சனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பு; எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பின் வேஷ்டி தலைப்பில்  மறைந்தபடி  ஒன்றாக இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. இவ் அறிக்கையில்  காலியில் இடம்பெறவுள்ள இந்த இலக்கிய விழாவினைப் புறக்கணிக்குமாறு மேற்குறித்த இந்த அமைப்புக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.  மேலும் இவ்வறிக்கையில் புகழ்மிக்க எழுத்தாளர்கள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான Noam Chomsky, Arundathi Roy, Ken Loach, Antony Loewenstein, Tariq Ali, ஆகியோரும் உருத்திரமூர்த்தி சேரன் என்ற அன்டன் பாலசிங்கத்தின் வாரிசும் கையெழுத்திட்டுள்ளனர்.

இது சம்பந்தமாக கருத்து எழுதிய தமிழரங்க  எழுத்தாளர் ராஜாஹரன் கீழ் கண்டவாறு  கூறுகிறார் .


“மக்கள் திரள் அமைப்பை உருவாக்குவதன் மூலம் தான், இலங்கை பாசிச அரசின் ஒடுக்குமுறைகளையும், அடக்கு முறைகளையும் எதிர்கொள்ள முடியும். தமிழ் – சிங்கள ஒடுக்கப்பட்ட  மக்களின் ஒன்றுபட்ட செயற்பாட்டை முன்வைக்காத, அதைக் கோராத,  அதுவல்லாத குறுகிய எழுத்து சார்ந்து எழும் புறக்கணிப்புவாத அரசியல்,  பூர்சுவா வர்க்கத்தின் அற்ப நலன் சார்ந்த குறுகிய வக்கிரமாகும். இந்த அரசியல் நிராகரிக்கப்பட வேண்டும்.”

நோர்வேயில் உள்ள புலிகளின் அமைப்பான NCET இலங்கை அரச தலைமையை (மஹிந்த & கோ) மனித குலத்திற்கெதிரான குற்றம்   புரிந்தவர்கள் என  விசாரிக்க நோர்வேயில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இது சம்பந்தமாக நோர்வேகின் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த   NCET தலைவர் பஞ்சகுலசிங்கம் கந்தையா.  புலிகளும் அதே குற்றத்தை (அதாவது   மனித குலத்திற்கெதிரான குற்றம்கள்)  புரிந்தவர்கள் ஆனால் அவர்கள் மீது வழக்கு தொடுக்க முடியாதுஇ  காரணம் புலிகளின் தலைமை இறந்து விட்டது . ” எனக்  கூறுகிறார் .

இதுவரை புலத்தில் முதல் முறையாக புலிகளை   மனித குலத்திற்கெதிரான குற்றம்கள்  புரிந்தவர்கள் என பகிரங்கமாக புலிகளின் அமைப்பை சேர்ந்த எவரும் அறிகையிட முன்வரவில்லை.  அந்த அளவில் பஞ்சகுலசிங்கத்தின் முயற்சி பாராட்ட தக்கது.

இன்று இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லபப்படும் நிகழ்வு, பல மட்டங்களிலும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சட்டசபைக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் மூன்றாம்தர இந்திய நடிகனான விஜய் என்ற கோமாளியில் இருந்து இந்திய அரசியலில் இருப்பன, ஊர்வன, பறப்பன, குரைப்பன என அனைத்துத் தரப்பினரும் இந்திய மீனவர் கொலைக்கெதிராக கிளரந்தெழுந்துள்ளனர்.

இதேபோன்று ம.க.இ.க ஆதரவு பெற்ற வினவும், புலம்பெயர் சந்தர்ப்பவாத திடீர் குறுந்தேசியவாதிகளில் இருந்து, புலிகளின் எச்சசொச்ச பாசிச கட்டமைப்புகளும், முன்னாள் இலங்கை அரசின் அடிவருடிகளான புளட் முதல் ரீ.பீ.சீ வானொலி வரை அனைத்தும் இன்று இக்கொலைகளை அடிப்படையாக வைத்து தமது நலனில் நின்று அரசியல் செய்கின்றனர்.

இக் கொலைகளுக்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டுமென்பது மானிடதர்மம் என்ற சமூக கூட்டுப்பொறுப்பு என்பதற்கப்பால் ஒவ்வொருவரின் தனிமனித கடமையும் ஆகிறது. இதன் அடிப்படையில் எவரும் இக்கொலைகளுக்கு எதிராக குரல்கொடுக்கலாம்.

ஆனால் இவர்களின் இக்கொலைகளுக்கெதிரான குரல் இரு இனங்களுக்கிடையிலான ஏற்கனவே இருக்கும் பிளவை அதிகரிக்க வகை செய்வதாகவும், இலங்கை வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உலை வைப்பதாகவும் உள்ளது.

வடபகுதி மீன்பிடியின் இன்றைய நிலை

வடபிரதேச மீன்பிடி உச்சத்திலிருந்த 83 ஆம் ஆண்டில் மொத்தமான உள்ளக இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகள் 680 ஆகவும் வெளியிணைப்பு இயந்திரம் பொருத்தப்பட்ட கண்ணாடி இழைப்படகுகள் 2600 ஆகவும், மரவள்ளங்கள் 3865 ஆகவும் இருந்தது. இந்தக் காலத்தில் பிடிக்கப்பட்ட பெருந்தொகையான மீன்கள் பிரதானமாகக் கண்ணாடி இழைப்படகுகளாலும், கரையோர தொழிலாளர் பயன்படுத்தும் மரவள்ளங்கலாலேயே பிடிக்கப்பட்டது. ரோலர் பயன்பாடு இலங்கையில் 80 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அது பின்வந்த காலத்தில் தடைசெய்யப்பட்டதுடன், யுத்தத்தால் வடபகுதி றோலர்கள் ஆழ்கடல் செல்வது தடுக்கப்பட்டது. ஆனாலும் வடபகுதியில் இருந்த றோலர்களின் தொகை நூறுக்கும் குறைவானதே.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE