Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

அறுவைதாசன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது, அவனின் மனைவி கண்ணீர் விட்டுக் கதறி அழுது கொண்டிருந்தாள். அவன் பயந்து போய் என்ன ஏது என எட்டிப் பார்த்தான். அவன் மனைவி, தமிழ் தொலைக்காட்சி தொடர் ஒன்றினை பார்த்து அழுது கொண்டிருந்தாள். தன்னுடன் வேறு எவராவது வீட்டிற்கு வந்திருந்தால் மனைவியை அறுவைதாசன் கொடுமைப்படுத்துவதால் தான் தனியே இருக்கும் போது அழுகின்றாள் என்றல்லவா நினைத்திருப்பார்கள், என்று மனைவி மேல் கோபம் கோபமாக வந்தது. அத்தோடு தொடரில் நடிப்பவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு அழுகின்றார்கள், இவளோ பணத்தை கொடுத்து விட்டு அழுகின்றாள் என நினைத்துக் கொண்டிருக்கும் போது, அய்யாமுத்து வந்து சேர்ந்தான்.

அய்யாமுத்து:
மற்றவர்கள் தமிழர்களை ஏமாற்றினார்கள் என்று சொல்கின்றாய். அப்படி ஏமாறுவதற்கு தமிழர்கள் என்ன ஏமாளிகளா?

சரிநிகரில்வெளிவந்த நேர்காணல் ஒன்றில் கிழக்கு திமோரின் சுதந்திரத்திற்காகப் போராடிய போராளி ஒருவர் ஈழப்போராட்டம் பற்றிக் குறிப்பிடுகையில் உலகிலேயே மிக மோசமான உட்படுகொலைகள் நடந்த போராட்டம் எனக் குறிப்பிட்டிருந்தார். ஈழத் தமிழ் சமுதாயத்தில் நிலவி வந்த வன்முறை, ஆயுதம் தாங்கிய போராட்டம் எழுச்சி பெற்ற போது அதன் உச்சக்கட்டத்தை அடைந்ததையே மேற்கூறிய கருத்து வெளிப்படுத்துகின்றது. இனியொரு இணையத்தில் வருகின்ற அய்யரினது போராட்ட வரலாறும், தமிழரங்கம் இணையத்தில் வருகின்ற சீலனது தொடரும்; ஈழப் போராட்டத்தின் கோர முகங்களை, அரசியலற்ற தன்மையை, மனிதநேயம் என்பதை அறியாத தலைமைகளால் போராளிகள் சித்திரவதைகளிற்கு உள்ளாக்கப் பட்டதையும், கொல்லப் பட்டதையும் வெளிப்படுத்துகின்றன.

நக்கீரன் இதழில் ஜெகத் கஸ்பர் எழுதும் மறக்க முடியுமா? என்ற தொடரில் அள்ள அள்ளக் குறையாத பொய்களை தொகுத்து தருகிறார். “உலகம் ஆறு நாட்களில் படைக்கப் பட்டது ஏழாவது நாளாகிய ஞாயிற்றுக்கிழமை இறைவன் ஓய்வெடுக்கின்றார” என்ற உலகப் பெரும் பொய்யை சொல்லிக் கொண்டிருப்பவருக்கு, ஈழத்தைப் பற்றிய பொய்களை அவித்து விடுவது ஒன்றும் பெரிய வேலையில்லை. ஆனால் பல மில்லியன் வருடங்களை கடந்த உலக வரலாற்றை ஆதாரங்கள் எதுவும் இல்லாத கிறிஸ்துவின் பிறப்பினை வைத்து முன் பின் என அளப்பது போல், எமது காலத்தில் எமது கண் முன் நடக்கின்ற ஈழப் போராட்டத்தினை வைத்து கதையளக்க முடியாது. இந்தப் பாதிரியார் பற்றி வினவு தளத் தோழர்கள் மிக விரிவாக அம்பலப்படுத்தி இருந்தார்கள். ஆனால் கத்தோலிக்க மதத்தினது கற்பனைகளை பரப்புவது போல் ஈழம் பற்றிய பொய்களை கூச்சமின்றி பரப்பி வருகின்றார்.

கஸ்பர் பிரபாகரனிடம் நீங்கள் மற்றைய இயக்கங்களை, மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை கொல்கிறீர்கள் என குற்றம் சாட்டுகிறார்கள் உங்களது விளக்கம் என்ன என்று கேட்டாராம். நாங்கள் ஈழப் போராட்டத்திற்கு எதிரானவர்களையே கொன்றோம். துரோகிகளை அழித்தோம். ஈழத்திற்காக போராடுபவர்களைக் கொல்வதில்லை என்று பிரபாகரன் சொன்னாராம். மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற கொள்கை கொண்டவர் எங்கள் தலைவர் என்று அவர் புல்லரித்துப் போகிறார்.

அண்மையில் இணையமொன்றில் தீர்க்கதரிசி ஒருவர் திருவாய் மலந்திருக்கின்றார். அவரின் முதலாவது தத்துவ முத்து வேலையை மதித்து உண்மையாக உழைத்தால்,  நீங்களும் அவரைப் போல் வாழ்க்கையில் முன்னிற்கு வரலாம். ஊலகெங்கும் உள்ள தொழிலாளர்களிற்கும் விவசாயிகளிற்கும் இந்த உண்மை தெரியாமல் போனதால் தான் ஏழ்மையில் உழன்று கொண்டிருக்கிறார்கள்.

இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் நாள் முழூவதும் உழைத்து விட்டு,  லயன் என்னும் புறாக் கூண்டுகளிற்குள் தலை முறை தலை முறையாக வாழ்ந்து வரும் தோட்டத் தொழிலாளர்களிடமோ அல்லது கடன் சுமை தாழ முடியாமல் தற்கொலை செய்து கொண்ட இந்திய விவசாயிகளின் குடும்பங்களிடமோ,  இந்த அறிஞரின் பொன் மொழியினை விளக்கி சொன்னால்,  அவர்கள் தங்களது துயர்மிகு வாழ்வினையும் மறந்து ஒரு கணமேனும் பெரியார் சொன்னதைப் போல் பின் உறுப்பால் சிரிப்பார்கள்.

தேசபக்தி என்பது அயோக்கியர்களினது கடைசிப் புகலிடம் என்ற பிரபலமான வரிகளை விளங்கிக் கொள்ள வேண்டிய ஒடுக்கப்படும் மக்கள், இந்த தேசபக்தி அயோக்கியர்களின் சர்வாதிகார சிந்தனை முறைகளிற்குள் சிக்கிக் கொள்கிறார்கள். இலங்கையில் ஜெயவர்த்தன, பிரேமதாச போன்ற கொலைகாரர்களின் மொத்த வடிவமாக மகிந்த கும்பல், பெளத்த தேசிய வெறியினைக் கிளறி மக்களை ஒடுக்கி வருகிறது.

இலங்கையின் தேசிய வளங்களையும் தொழிலாளர்களின் உழைப்பையும் வெளிநாட்டு முதலாளிகட்கு விற்பதில் எந்தவித தயக்கமும் கூச்சமும் காட்டாத இந்த தேசபக்தி கொள்ளையர்கள், மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடுவதன் மூலம் தமது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்கிறார்கள். தமது அதிகாரம் அதன் மூலம் சொந்த நாட்டு மக்களை கொள்ளையடித்துக் குவிக்கப் படும் சொத்துக்கள் என்பவை மட்டுமே இக்கொள்ளையர்களின் இலட்சியம். இதற்கு எதிராக எவர் வந்தாலும் அவர்களை அழிப்பது என்பதே இக்கயவர்களின் கட்சிக் கொள்கை.

மரணத்தைவிடக் கொடுமையான, கொடூரமான, வாழமுடியாத வாழ்க்கைதான். இதில் தன்னுயிரை விடுதலையின் பெயரால் தியாகம் செய்வதைவிட, தன்னை மக்களுக்காக அர்ப்பணித்துப் போராடுவதென்பது கடினமானது. இந்த நிலையை புரிந்துகொண்டு “சுதந்திரதினம்” யாருக்கு என்பதை புரிந்துகொள்ளுதல்  அவசியம்.

 

கெவிலியாமடுவில் முதலில் 40 குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருந்தன. தற்போது 210 குடும்பங்களாக சிங்கள இனவாத அரசு அதிகரித்துள்ளது. மேலும் இது அதிகரிக்கலாம்.

பத்திரிக்கை செய்திகள் பின்வருமாறு:
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பிரதி அமைச்சர் ஹிஸிபுல்லா ஆகியோரின் தலைமையில் இடம் பெற்றது. இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கும் தீர்மானம் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் முடிவு ஏடக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

கே.பி புதிய கட்சி ஒன்றினை ஆரம்பித்து தமிழ் மக்களின் 30 வருட துயர அரசியலிற்கு நிவாரணம் செய்யப் போகின்றாராம். அதாவது வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராகி மகிந்தா குடும்பத்தினருக்கு முதுகு சொறியப் போகின்றாராம்.

இலங்கை, இந்திய அரசுகளிற்கும், பாரிய அளவில் முதலிட திட்டமிட்டுள்ள அந்நிய கம்பனிகளிற்கும், தமிழர்களின் பிரதேசமெங்கும் அரசியல் ரீதியில் ஒரு ஸ்த்திரமான நிலை பல காரணங்களிற்காக தேவையாக உள்ளது.அதாவது தமிழ் மக்களும் ஏனைய மக்களும் தமது அரசியல் உரிமைகளிற்காக போராடாமல் இருக்க ஒரு புதிய வகையான அரசியலை திணிக்க முயல்கின்றனர். அது தான் அபிவிருத்தி நிவாரண அரசியல். இதன் ழூலம் தமிழ் மக்கள் தங்களது நியாயமான உரிமைகளிற்கு குரலெழுப்பி, ஒன்று திரண்டு அரசிற்கு எதிராக போராடும் அரசியல் போக்கு எழுவதினை தமிழ் மக்களிடையே காணப்படுகின்ற துரோகிகளை முன்னிறுத்தி முறியடிக்க முனைகின்றனர்.

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 42

 

உமாமகேஸ்வரனைக் கொலை செய்வதற்கான திட்டம்

"புதியதோர் உலகம்" நாவல் மட்டுமல்லாமல் "தீப்பொறி" பத்திரிகையும் கூட புளொட் உறுப்பினர்களையும் மக்களையும் சென்றடையத் தொடங்கியிருந்தது. உமாமகேஸ்வரனால் புளொட்டுக்குள் கட்டவிழ்த்து விடப்பட்ட அராஜகத்தையும் பயிற்சிமுகாம் சித்திரவதைகளையும் படுகொலைகளையும் பெரும்பாலான புளொட் உறுப்பினர்களும் மக்களும் தகவல்களாகவே அறிந்திருந்தனர். ஆனால் இப்பொழுது "தீப்பொறி" பத்திரிகை மூலம் பல சம்பவங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டிருந்தன.

நீர் கொழும்பின் கரையோரப் பகுதி. தென்னை மரங்களும், செம்மஞ்சள் மணலும், நீல கடலையும் கொண்ட, சர்வதேச புகழ் பெற்ற கடற்கரைகளில் ஒன்று. ஜே.ஆர்(J.R) ஆட்சியில் சர்வதேச நிதி மூலம் நீர்கொழும்பின் கரையோர பகுதி உல்லாசப்பயணிகளின் சொர்க்க புரியாக்கப்பட்டது.

வறுமை மிகுந்த மீன்பிடி கிராம மக்கள் தம் நிலங்களை, சர்வதேச உல்லாசப் பயண நிறுவனங்களுக்கு தாரை வார்த்ததுக் கொடுத்து விட்டு, நீர்கொழும்பின் உட் பிரதேசங்களில் குடி ஏறினர். கடற்தொழிலைத் தவிர வேறொன்றும் தெரியாத இம் மக்கள் பலர் உல்லாச விடுதிகளில் கூலித் தொழிளார்காளாக அமர்த்தப்பட்டனர். ஆசியா அபிவிருத்தி வங்கி மூலம், அந்நியமொழி கற்கைகள் ஆரம்பிக்கப்பட்டு இளம் பெண்களும், ஆண்களும் விடுதிகளில் நாளாந்த பணி செய்யும் சேவையாளர்களாக ஆக்கப்பட்டனர்.

சிறைச்சாலையில்அடைக்கப்பட்டுள்ள பெண் கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், அவர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான

‘மனிதர்” என்ற உயிர்களுக்கான ஜனநாயக உரிமை பற்றிச் சிந்திக்கவே தெரியாது, அடக்குமுறை அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் பாசிச அரசின் இரத்த வடுக்கள், எம்மீது என்றுமே அழியாத வரலாறாகிப் பதிகின்றது. இதில் ‘தமிழ் அரசியல் தரப்புகளின் இராஜ தந்திரிகள் – தூதர்” (Tamils Diplomat) என்போர், எமது மக்களின் அடிப்படை வாழ்வையே பறித்த வரலாறுகள் மீண்டுமோர் பார்வைக்காக மேலெழுந்து வருகின்றது.

 

இன்னுமொரு விசயமென எழுத வந்து இதுகளைப் பற்றி எத்தனையோ பல உண்மைகளை உங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டிய இருக்கிறது. எப்போதும் போலவே இதுகளின்ரை கொட்டமடிப்புகள் வேறுவேறு ரூபங்களிலை தற்போதும் வெளிக்கிடுது. இப்ப இந்த தேன்குழல்ச் சாமியோடை சேர்ந்து கூத்தடிக்கின்ற, புத்தகப் பூச்சிகளான டாக்டரும் – வழக்குரைஞர் – கணக்காளாரெண்டு ஒரு சிலதுகள், ஜிலேபிச்சாமி அன்ட் கொம்பனி மக்களை ஏமாற்றுகின்ற திருகுதாளங்களை இதில் மேலும் காணலாம்.

மரத்தாலை விழுந்தவனை மாடேறி மிதிச்சது போலை, கடன்பட்டு கஸ்ட்டப்பட்டு வெளிநாட்டுக்கு வந்த எங்கட மக்களை ஏமாற்றி, பண மோசடி செய்து, வீடு மேல வீடு வாங்கி, தனக்குச் சொத்து சேர்த்து, தன்னை நம்பி வந்த மக்களை நடுறோட்டில விட்டிட்டு..! கள்ள வழியால் தப்பிவந்த ஒரு வழக்குரைஞரின் மோசடிகள் அம்பலத்துக்கு வந்தது உங்களில் பலருக்கு தெரிஞ்ச விடயந்தானே பாருங்கோ..? அவரைச் சட்டம் சும்மா விடேல்லை, தண்டனை முடிஞ்சு அவர் வெளியாலை வந்தாலும் தன்ரை நிறுவனத்தை இழந்ததாலை, அவரிப்ப தனது துணைவியோட சரவணபாபாச் சாமிக்கு சாமரம் வீசுவதுடன், அந்த ஜிலேபிச் சாமியின் கால்களைக் கழுவி அந்த ஊத்தையைக் குடிக்கினம். அந்தச் சாமிக் கள்ளன் தனக்கான சொத்துக் குவிப்பதற்காக, இவர்களையும் சேர்த்துக்கொண்டதாலை ஆளாளுக்கு மாறிமாறி உதவியளைச் செய்து, அப்பாவி மக்களை பேக்காட்டி சொத்துச் சேர்க்கினம்.

மனிதர் தங்களின் எண்ணத்தை சொல்வதற்கு மொழி என்பதுதான் அடிப்படை. இது மனித வரலாற்றில் தேடப்பட்ட அறிவியல். இதனை சொல் – ஊடகம் எனச் சொல்லுவர். இந்தச் சொல்லியத்தால், நாம் ஒரு கருத்தை மற்றவருக்குச் சொல்லும்போது, அது பலருக்கு விளங்காமல் போவதுண்டு. இதில் சில சொல்லுக்கு பற்பல அர்த்தங்களும் இருக்கின்றது. இதனால் நாம் எமது கருத்துகளை சந்தர்ப்பத்துக்கு ஏற்றமாதிரி, அந்த மொழியினை எப்படியெல்லாம் வளைக்க முடியுமோ..! அப்படியெல்லாம் வளைத்துப் போடுகின்றோம். அத்துடன் நாம் விரும்பும் கருத்துகளை மற்றவரில் புகுத்தவும், திணிக்கவும் துணிகின்றோம்.

ஊர் உறவை அறுத்து

பணம் பொருள் சம்பாதிக்க..,

அக்கம் பக்கத்தாரின்

காணி நிலத்தைச் சுறண்டி

அதற்கும் மேலாய்

அரையடி வேலிக்குள்

கொலை வெறியாடி

தன் சொந்தங்களை வெறுத்த

எனது மாமனும்..!

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE