Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

ஒரு சிறுவன், மிகக் கொடுரமான போரைக் கண்ணால் கண்டவன்; அரச பயங்கரவாதமும், வன்முறையும், வறுமையும் தாண்டவம் ஆடும் நிலப்பரப்பில் வாழ்பவன்; பற்றுவதற்கு ஒரு கொழுகொம்பு கிடைக்காதா என்று பரிதவிக்கும் குடும்பச் சூழ்நிலையில் வளர்பவன். ஆனால் அதிகாரமும், அச்சுறுத்தலும் தனது தன்மானத்தையும் நெஞ்சத்துணிவையும் அடிமைப்படுத்த முடியாது என்று உலகு அதிரச் சொல்லி விட்டான்.

இலங்கை புதிய ஜனநாயக கட்சியின் அறிக்கையினைஇனியொரு இணையத்தளம்  அண்மையிலே பிரசுரித்திருந்தது. அதற்கு வந்த பின்னூட்டங்களை எழுதியவர்கள் அறிக்கையின் உள்ளடக்கத்தைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் கட்சி மீது சேறடிப்பதில் சுய இன்பம் காண்கிறார்கள்.

சரவணபாபா மடம் முரளிகிருஸ்ண சுவாமிகள் எனப்படும் ஜிலேபி (தேன்குழல்) சாமியார் மீது கேரளாவில் பொது மக்களாலும் மக்கள் பொது அமைப்புக்களாலும் பண மோசடி பாலியல் வன்முறை என்பன குறித்து பல புகார்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த சாமியார் தற்போது UK Head Office, Saravanababa Matham 269A, Preston Road, Preston Waye, Harrow, Middlesex. HA3 0PS என்னும் முகவரியில் தங்கி இருந்து கொண்டு தனது வழக்கமான மோசடிச் செயல்கள் மூலம் மத நம்பிக்கை கொண்ட அப்பாவி மக்களை ஏமாற்றுகின்றான்.

இலங்கை அரசின் போர்க்குற்றங்களிற்கு சுதந்திரமான, சுயாதீனமான  விசாரணையை வேண்டி புதிய ஜனநாயக மக்கள் முன்ணணி விடுத்த அறிக்கையை, லண்டனில் மக்களிற்கு கொடுத்துக் கொண்டிருந்த தோழர்களில் ஒருவர் புலிகளின் ஆதரவாளர்கள் எனப்படும் காடையர் கும்பலினால் அச்சுறுத்தப்பட்டார். “தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்துவதாக சொல்பவர்கள் மக்கள் அழிவிற்கு வழிவகுத்த புலிகளின் ஏகாதிபத்திய சார்பு, குறுந்தேசிய அரசியலையே பிரதிநிதிப்படுத்துகின்றனர்” என்கின்ற வரிகள் அறிக்கையின் ஓரிடத்தில் வருகின்றன. இதன் காரணமாகவே தோழர் மிரட்டப்பட்டார்.

கம்பர்மலையில் துரைசாமி – தங்கமுத்து என்ற விவசாய குடும்பத்தில் பிறந்த பஞ்சலிங்கம் என்ற மனோ மாஸ்டர் வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லுரியில் கல்வி பயின்ற காலங்களில் ஈழப் போராட்டத்தின் முன்னோடிகளான தங்கத்துரை, குட்டிமணி போன்றோருடன் தொடர்வுகளைக் கொண்டிருந்தார். அக் காலகட்டத்தில் வடமராட்சியில் கூலி விவசாயிகளிடமும், தாழ்த்தப்பட்ட மக்களிடமும் களப் பணிகளை செய்து வந்த சீன சார்பு  கம்யுனிஸ்ட் கட்சியினரின் தொடர்புகளால் மார்க்சிய சிந்தனைகளை கற்றுக் கொண்டார். கம்யுனிஸ்டு கட்சியின் தலைவரான சண்முகதாசனை அழைத்து வந்து வடமராட்சி எங்கும் கூட்டங்களை நடாத்தி வந்தார்.

உலகத்தமிழர் பேரவை,  நாடு கடந்த தமிழீழம், பிரித்தானிய தமிழர் பேரவை, புதிய திசைகள் என்பன இணைந்து கூட்டமொன்றினை நடத்தப் போகின்றார்கள் என்ற செய்தியைப் படித்தார் வாழ்விழந்தோர் சங்கத் தலைவர் கந்தையா கார்த்திகேசு மயிலேறும் பெருமாள். ஆகா! தமிழனைக் காப்பாற்ற இவ்வளவு அமைப்புக்கள் இருக்கின்றதா! என்று பிரமிச்சுப் போன காத்திகேசு,  தனது மனிசியிடம் கூட்டத்திற்கு போவதற்கு கெஞ்சிக் கொண்டு நின்றார். அவரின்ரை மனிசி எல்லாத்திற்கும் சாத்திரம் பார்க்கிற பொம்பிளை. இரண்டிலை ஒன்றைத் தொடுங்கோ என்று மனிசி சொல்ல,  கார்த்திகேசு சந்தோசமாக சிரிச்சுக் கொண்டு மேலே தொட்டார். விரலை தொடச் சொன்னால் எதைத் தொடுகிறீர்கள் எண்டு எரிஞ்சு விழுந்த மனிசியை பரிதாபமாகப் பார்த்த கார்த்திகேசர், ஒன்றையும் விளக்கமாக சொல்லமாட்டாள் என்று சலித்துக் கொண்டார்.

நாய் வாலை நிமிர்த்த முடியுமா” என்றொரு பழமொழியை தமிழன் வைத்திருக்கிறான். வளைத்தால் என்ன? எழுப்பினால் என்ன? (வாலை) தமிழனிற்கு என்ன நட்டம் வந்தது என்று நாய்கள் நினைக்கக் கூடும். மிருகங்கள் தேவையில்லாமல் எந்தவொரு அசைவையும் செய்வதில்லை. மனிதர்கள், குறிப்பாக தமிழர் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களிற்கு எல்லாமே வளைந்து சுருங்கிப் போய் இருக்கின்றது. இலண்டன் வந்த சோனியாவை உலகத் தமிழர் ஒன்றியம் என்ற அமைப்பு சந்தித்து இலங்கைத்  தமிழ் மக்களை காப்பாற்றுமாறு முறையிட்டதாம். இந்த ஒன்றியம் எதனது வால் என்று எழுதத் தேவையில்லை. இவர்களது அரசியலே அதை தெளிவாக காட்டி நிற்கின்றது.

கீற்று இணையத் தளத்தில் மினர்வா என்பவரால் எழுதப்பட்ட ஆதிக்க சாதியினரின் புலித் தீண்டாமை என்ற கட்டுரையை வாசித்த போது பெரியார் சொன்ன பின்பொறியால் சிரிக்க வேண்டிய விடயங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது. மிகவும் தவறான தகவல்களுடனும் திசை திருப்பல்களுடனும் இக் கட்டுரை எழுதப்பட்டு இருக்கிறது.

ஒரு கவிதை

 

தமிழ் மொழியின் மிக முக்கிய கவிஞரான சண்முகம் சிவலிங்கத்தின் நீள்வளையங்கள் தொகுப்பிலிருந்து எகிப்தின் தெருக்களிலே என்ற 1977ம் ஆண்டு எழுதப்பட்ட கவிதை இன்று துனிசியாவிலும் மீண்டும் எகிப்திலும் நடக்கும் போராட்டங்களை பார்க்கும் போது ஞாபகம் வந்தது.  அக் கவிதையில் இருந்து சில பகுதிகள்.

இலங்கையின் அதி உத்தம ஜனாதிபதி மகிந்தா அண்மையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது, தமிழ் பத்திரிக்கையாளர்கள் தான் இனவாதத்தினை தூண்டும் விதமாக எழுதி, நாட்டையே உருப்படவிடாமல் செய்துவிட்டார்கள் என்ற திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். கூட்டத்திற்கு போயிருந்தவர்கள் எல்லாம் தமிழ் பத்திரிக்கையாளர்களின் துரோகத்தையும், அதைக் கண்டு பிடித்த அதி உத்தமரின் துப்பறியும் ழூளையையும், யோசித்துப் பார்த்து வியப்படைந்தார்கள். இந்தச் சந்திப்பிற்கு எழுத்தாளர், எல்லாம் தெரிந்த ஏகாம்பரமும் போயிருந்தான். அதி உத்தமர் கூட்ட முடிவில் ஏகாம்பரத்தை பார்த்து தோளிலே கை போட்டு, கட்டிப்பிடித்து எல்லோரும் போகட்டும், நீர் மட்டும் நில்லும். உம்மோடு தனியே ஒரு வேலை இருக்கு என்று கண்ணடித்த படி சொன்னார். ஏகாம்பரத்திற்கு ஒரே பயமாகிவிட்டது. ஏன்ன செய்யப் போறாரோ இந்தாள்,  பிக்குகளோட தான் கூடுதலான சவகாசம் வைத்திருக்கு, அதனாலே எதற்கும் முன்னெச்சரிக்கையாக இருப்போம் என்று பின்பக்கமாக கைகளை கட்டிக் கொண்டான்.

பொதுவாகநாங்கள் கூட்டங்களில் பேசுவதில்லை. பேசத் தெரியாது என்பதற்காக இல்லை, நாங்கள் செயல் வீரர்கள். ஏதாவது பிரச்சனை என்றால் எங்களது துப்பாக்கிகள் தான் பேசும். எங்களது மேதகு தேசியத் தலைவரே தன்னிடம் யாராவது கேள்வி கேட்டால், பக்கத்தில் இருக்கும் தேசத்தின் குரலைத் தான் அண்ணே நீங்கள் இதற்கு பதில் சொல்லுங்கோ என்று கைகாட்டி விடுவார். புலம்பெயர் நாடுகளில் கூட்டமென்றால் தமிழ் நாட்டிலிருந்து யாரையாவது கூப்பிட்டால் கொடுத்த காசிற்கு மேலாக கூவி விட்டு போய் விடுவார்கள்.

1.பேரினவாத அரசு என்ற வகையில் தமிழ், முஸ்லீம் மக்களிற்கும்; உலகமயமாக்கலின் அடிமை நாய்கள் என்ற வகையில் முழு இலங்கை மக்களிற்கும் இலங்கை அரசு பொது எதிரியாகும்.

2.நிலவும் காலகட்டத்தில் மகிந்தா உலக மகாகொலைகாரனில் ஒருவன் மட்டுமின்றி,  அவனது கொள்ளைக்கார குடும்பத்தின் தலைவன்.

3.நான் விபரம் தெரிந்த நாள் முதல் இலங்கை அரசையும், இயக்கங்களின் வன்முறைகளையும் மற்றும் பிராந்திய, சர்வதேச மக்கள் விரோத அரசுகளையும் எதிர்த்து வருகின்றேன்.

சைவர்கள் காலையில் எழுந்ததும் எரித்த சாணியை அள்ளிப் பூசுவது போல், கிறிஸ்த்தவர்கள் சாப்பிடுவதற்கு முன்னும், படுக்கைக்கு போக முன்னும், பிறகு ஒரு முக்கியமான காரியத்திற்கு முன்னும் செபம் சொல்லுவது போல் ஒவ்வொரு கட்டுரை எழுதும் போதும்; மேலே குறிப்பிட்ட ழூன்று விடயங்களையும் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் வாழ்நாள் முழுவதும் மக்கள் விரோதிகளை எதிர்த்து வந்தாலும் இலங்கை, இந்திய அரசின் உளவாளிகள் என்று ரூம் போட்டு யோசித்து ஒரு கட்டுரை எழுதி விடுவார்கள். ஆனால் இப்படியான பொய்க் குற்றச்சாட்டுக்களை வைக்கும் இணையங்களில் தான் புலிகளின் ஆதரவாளர்களும் மகிந்தாவின் ஆதரவாளர்களும் ஈழவிடுதலை,  மனிதாபிமானம், புரட்சி  என்று கட்டுரைகள் எழுதி காமடி பண்ணுகின்றார்கள்.

ரொனிக்கு கண்ணீர் வருகிறது. ரோனியின் கண்களில் இருந்து கண்ணீரா என்று வியப்படைய வேண்டாம்.  எல்லோருக்கும் சுரப்பது போல் ரொனிக்கும் சுரக்கிறது……..கண்ணீர். ஆனால் அது பொய்யான குற்றச்சாட்டுக்களை சொல்லிக் கொண்டு ஈராக்கின் எண்ணெய் வயல்களை கொள்ளையடிக்கும் போது,  எதிர்த்து உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான ஈராக்கிய மக்களை நினைத்து வரவில்லை. ஈராக்கை கொள்ளை அடிக்க சென்ற போது கொல்லப்பட்ட பிரித்தானிய ராணுவத்தினை நினைத்து தாங்க முடியாமல் துக்கம் வந்து நெஞ்சை அடைக்கிறதாம். அதுவும் ஒவ்வொரு நாளும் ரொனி அழுகிறதாம். இந்த அழுகையை சன் தொலைக்காட்சிக்கு படமெடுத்துக் கொடுத்தால் உலக வரலாற்றில் முதல் தடவையாக வெள்ளை ஒன்று ஒவ்வொரு நாளும் அழும் புத்தம் புதிய தொடர் என்று இரண்டு பேரும் அதில் காசு பார்க்கலாம்.

எல்லோரும் தமிழர்கள் தான். ஆனால் நாங்கள் வெள்ளாளர்.  நீங்கள் கரையார். எங்கள் மகன் உங்களது மகளை காதலிக்கிறேன் என்று அடம் பிடிப்பதனால்,  தான் நாங்கள் வேறு வழியில்லாமல் உங்களது மகளை மணம் செய்ய எங்களது தராதரத்தை விட்டு இறங்கி வந்து சம்மதித்திருக்கிறோம். திருமணத்திற்கு நீங்களும் உங்கள் பிள்ளைகளும் மட்டும் தான் வரலாம். உங்களது உறவினர்கள் ஒருவரும் வரக் கூடாது. உங்கள் சாதிக்காரர்கள் திருமணத்திற்கு வந்தால் எமது சொந்த பந்தங்கள் எம்மைக் கேவலமாக பார்ப்பார்கள். இது நடந்தது இலங்கையிலோ அன்றி தமிழ் நாட்டின் தொலை தூரக் கிராமம் ஒன்றிலோ அல்ல. என்ன எங்கே என தலையை போட்டு குழப்புகின்றீர்களா?.  இப்படியான கேவலம் நடந்தது லண்டனில் தான். லண்டனில் பிறந்து கல்வி கற்று தொழில் புரியும் ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்ய முற்பட்ட போது குறுக்கே வந்து குரைத்த ஒரு சாதி வெறிக் கும்பலின் கூச்சல்கள் தான் இவை.

அரசியல்வாதிகள் கொலைக்காரர்களாகவும், கொள்ளையர்களாகவும் இருக்கின்ற அதே போது கோமாளிகளாகவும் இருக்கின்றார்கள். வறுமையினாலும், வன்முறையினாலும் இறுகிப் போயிருக்கின்ற மக்களது வாழ்விலே; இவர்களின் கோமாளித்தனம் தான் ஒரே ஒரு ஆறுதலாக மனம் விட்டு சிரிக்கக் கூடிய மாதிரி நகைச் சுவையாக இருக்கின்றது. நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழாவினை ஒட்டி யாழ்மாநகர அம்மா விடுத்த அறிக்கையில் கோயிலிற்கு வரும் பெண்கள் தமிழ் பண்பாட்டின் படி பாவாடை- தாவணி, சேலை அணிந்து வர வேண்டும் என்று குறிப்பிட்டது அரசியல்வாதிகளின் சின்னப் பிள்ளைத் தனத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பச் சேர்ந்த வவுனியா நகர சபைத் தலைவரினால் துப்புரவுத் தொழிலாளர்கள் “வெளியே போங்கடா சக்கிலிய நாயளே” என இழிவு படுத்தப் பட்டுள்ளனர். இது ஒரு சாதி வெறி பிடித்த மனிதனால் சொல்லப் பட்ட வார்த்தைகள் மட்டுமல்ல, தொழிலாளர்கள் தமது உரிமைகளிற்காக குரல் கொடுத்த போது அதை அடக்குவதற்காக சாதியைச் சொல்லி இழிவு படுத்தும் அதிகார வெறி கொண்ட ஒரு மனிதனின் குரல்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE