Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

உலகின் ஐந்து பெரிய பணக்கார நாடுகளுள் ஒன்றான ஜெர்மனி நாட்டில் உள்ள அதே எண்ணிக்கையில் இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் (பில்லியனர்) இருக்கிறார்களாம். சமீபத்தில் இந்தியத் தொலைக் காட்சிகள் அறிவித்த இன்னுமொரு பெருமை. அப்பேர்ப்பட்ட பெருமை பெற்ற இந்தியத் திருநாட்டில் சுமார் எண்பது கோடிப் பேர் கால் பட்டினி கிடக்கிறார்கள், அதாவது நூற்றுக்கு எண்பது சதவீதம் பேர் அன்றாடம் இருபது ரூபாய் கூட சம்பாதிக்க வக்கின்றி காலம் தள்ளுகிறார்கள். இதுவும் இந்திய மக்களின் வறுமை பற்றி இந்தியத் திட்டக் கமிசன் வெளியிட்டுள்ள அதிகாரப் பூர்வமான புள்ளி விபரம்.


வெள்ளையர்கள்இல்லாது போனாலும், இன்றைய இந்திய அரசாங்கம் அதே அடிமைச் சட்டங்களை அதே வழியில் செயல்படுத்தி அதே போன்ற தண்டனைகளை வழங்கி வருகிறது. ஆனாலும், தந்திரமாக வெளிப்பார்வைக்கு இந்திய நீதிமன்றங்கள் ஏதோ நேர்மையானவை என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தையும் ஏற்படுத்தி மக்களையும் ஏமாற்றுகின்றன. இந்தக் கட்டுரையில் எப்படி இந்திய உச்ச நீதிமன்றம் இந்தத் தந்திரத்தை செயல் படுத்தி வருகிறது என்று பார்ப்போம்.

உலகாளும் நிதி மூலதனம்

நிதி மூலதனத்தின் ஆதிக்கம் உலக அரங்கில் பெருகியதன் காரணமாக பல மாற்றங்களை உலகம் கண்டு வருகிறது. வங்கிகளின் நிதி நெருக்கடிக்கு முதன்மையான் காரணமாக அமெரிக்க வீட்டுக் கடன் மோசடித் திட்டங்கள், யூக வாணிபத் திட்டங்களைக் காரணம் சொன்னாலும் இதர உள்நாட்டுக் காரணங்களும் இருக்கவே செய்கின்றன.  பல ஐரோப்பியத் தொழில் நிறுவனங்கள் குறிப்பாக இரும்பு, வாகன உற்பத்தி நிறுவனங்கள் போன்றவை தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. பணக்கார நாடுகள் என்று கருதப்படும் பிரிட்டன் உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் பெரும் தொழில் நிறுவனங்களின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. மிக உயர்ந்த வாழ்நிலைமையில் வசதியாக இருந்த அயர்லாந்து, பின்லாந்து போன்ற நாடுகள் திவால் நிலைமையை எட்டி ஐரோப்பிய ஒன்றியத்தால் மறுவாழ்வு அளிக்கப்பட்டு உள்ளன. இத்தாலி, போர்த்துக்கல், ஸ்பெயின், பிரிட்டன்,

இந்திய அரசின் போருக்கு எதிராக  லண்டன் பொதுக் கூட்டம்: 12 ஜூன் 2011

 

மன்மோகன் சிங் தலைமையிலான இந்திய அரசு நாட்டின் கனிம வளங்களை அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்திய நிறுவனங்கள் இந்தியப் பெரும் வணிக நிரறுவனங்களுடன் இணைந்து கொள்ளையிட்டுச் செல்ல அனுமதி வழங்கி உள்ளது. இப்படி பல ஆயிரக்கணக்கிலான ஒப்பந்தங்களைச் செய்து கொண்டுள்ள மாநிலங்களில் ஒரிசா, சத்திஸ்கார், ஜார்கண்ட், ஆந்திரம் போன்ற பழங்குடிகள் வாழும் பகுதிகள் முக்கியமானவை. தங்கள் வாழ்வும் வளமும் பறிபோவது கண்டு இந்த மாநிலங்களில் வாழும் மக்கள் குறிப்பாக பழங்குடிகள் போராடிவருகின்றனர். மலைகள, ஆறுகள், நிலம் போன்ற இயற்கை வளங்கள் அனைத்தையும் சுரங்கம் தோண்டவும், ஆலைகள் அமைக்கவும் இந்திய அரசு விற்று வருவது கண்டு சகிக்காத இந்தப் பகுதி மக்களின் போராட்டம் முன்னெப்போதும் காணாத பெரும் வீச்சைக் கண்டு வருகிறது. ஏற்கனவே வறுமையில் உழலும் இந்த மக்கள் கொடுரமான முறையில் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். போராடும் மக்கள் மீது போலீசைக் கொண்டு நடத்தும் அடக்குமுறைகள் இந்திய அரசுக்கு புதியவை அல்ல. அனால் தற்போதைய அடக்குமுறையில் காந்தியவாதிகள், ஜனநாயக இயக்கங்கள், அரசு சாராத நிறுவனங்கள், இன்ன பிற சில்லறை அரசியல் கட்சிகள் அனைவரும் கூண்டோடு விரட்டியடிக்கப்பட்டு வருவது கூடுதல் சிறப்பு.

மாவோயிஸ்டுகளுக்கு எதிராகப் போரிட ஆட்காட்டிகள், எட்டப்பர்கள், உள்ளூர் தரகர்கள்,  அடங்கிய கூலிப்படையை சட்டப் பூர்வமாக அமைத்து, இந்திய உள்துறை அமைச்சகத்தின் உதவியுடன் சத்தீஸ்கர் மாநில அரசு அமைத்து செயல்படுத்தி வந்தது தெரிந்ததே. உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் கண்டுபிடிப்புகளில் இதுவும் ஒன்று. இப்படி அமைக்கப்படும் கூலிப் படைகள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், அதை உடனடியாகக் கலைத்து விடும்படியும் உச்ச நீதிமன்றம் இந்த மாதம் ஆணையிட்டுள்ளது. தேசவிடுதலை இயக்கங்கள், புரட்சிகர இயக்கங்களின செயல்பாட்டில் ஆர்வம கொண்டோர் அனைவரும் அறிய வேண்டிய இந்தத் தீர்ப்பும் அதன் சுருக்கமும் இங்கே தரப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகளில் கிறித்தவ தீவிரவாதம் ஒன்றும் புதிதல்ல. சமீபத்தில் கிறித்தவ தீவிரவாத, வெள்ளை இளைஞன் ஒருவனால் நார்வேயில் நடத்தப்பட்ட ஒரு படுகொலைச் சம்பவம் “அமைதி மிக்க நாடாகத் தம்மை அடையாளம் காட்டிக் கொள்ளும் இந்த நாட்டில் வாழும் பிற இன, நிற, மத மக்களைப் பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கொலை நடந்து கொண்டிருந்த அதே வேளையிலும், செய்தி முழுமையாக வெளிவராதும் இருந்த நேரத்தில் இஸ்லாமிய இயக்கங்களைச் சந்தேகத்திற்குள்ளாக்கி பி.பி.சி, ஸ்கை உள்ளிட்ட டி.வி. நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன. கொலையில் ஈடுபட்டவர்கள் இஸ்லாமியத் தீவிரவாதிகள் தான் என்று விமர்சனம் செய்யப்பட்டது. ஆனால், அனைவரும் திகைப்படையும் வண்ணம் இந்தக் கொலைகளைச் செய்தது ஒரு வெள்ளையர், அதுவும் நார்வே நாட்டைச் சேர்ந்தவன் என்ற செய்தி வெளி வந்தவுடன் பொது விவாதங்கள் இறந்தவர்களுக்கு இரங்கற்பா பாடும் நோக்கில் திசை திரும்பியுள்ளது. இஸ்லாமியத் தீவிரவாதத்தைச் சாடும் ஒருவரும் ஐரோப்பியர்களின்  இந்த வெள்ளையின கிறித்தவத் தீவிரவாதத்தை சாடுவதாகக் காணோம்.

நீங்கள் ஆணியே புடுங்க வேண்டாம்.

இந்தியாவே எல்லாத்தையும் புடுங்கி விடும்!

எது தேவையான ஆணி, எது தேவையில்லாத ஆணி எண்டு எப்பிடி கண்டுபிடிக்கிறது?

நீ ஆணியே புடுங்க வேண்டாம், அப்பிடியே ஓடிப்போயிடு – வடிவேலு,  தத்துவாசிரியர்

அம்மன் கோயில் அய்யாமுத்து – பகுதி 2

அய்யாமுத்து ஒரு நாள் அறுவைதாசனைப் பார்த்து சைவசமயத்தைப் பற்றி தனக்கு விளங்கப்படுத்தச் சொன்னான். அறுவைதாசனிற்கு மனைவி ஊரில் இல்லாத நேரத்தில் நண்பர்கள் வீட்டுச் சாப்பாட்டை விருப்பமாக சாப்பிடுவதைப் போன்ற மகிழ்ச்சி உண்டானது. தான் சொல்வதைக் கேட்பதற்கும் ஒருவன் இருக்கின்றானே இவன் ரொம்ப நல்லவன் என்று அய்யாமுத்து மேல் இரக்கமும் உண்டாகி, சிறிது நேரம் மௌனமாக இருந்தான். பின்பு தனது வரலாற்றுக் கடமையை உணர்ந்து பேசத் தொடங்கினான்.


10.பாசிசம் குறித்து அடிப்படையான தரவுகள்

எனது மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை என்ற இந்தக் குறிப்பை 2001 இல் எழுதிய போது பின்வரும் குறிப்பை நான் எழுதியிருந்தேன். புலிகளின் பாசிசம் பற்றி எழுதியுள்ளது தொடர்பாக பலர் ஆச்சரியமடையலாம்.


8.இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது

தமிழ் மக்களின் மீதான தொடர்ச்சியான இனவாத ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் போராடிய மக்கள், போராடும் உரிமையை சொந்த வலதுசாரி குறுந் தேசியவாதிகளான பாசிச புலிகளிடம் இழந்த பரிதாபம், போராட்டத்தினையே

கணவனும், மனைவியும் காதலின்பத்தில் களிப்புடன் முத்தமழை பொழிகிறார்கள். உள்ளம் எங்கும் உவகையுடன் இருந்த கணவனின் கண்கள் திடீரென கோவத்தால் சிவக்கின்றன. எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டிருந்திச்சு, இப்ப என்ன வந்திச்சு என்று பார்க்கிறீங்களா? மன்மதபூசையிலே கரடியாக வாத்தியார், அவரு தான் நம்ம எம்ஜிஆர் நுழைஞ்சிட்டார். ஒண்ணுக்கடிக்க போனாக் கூட கறுப்புக்கண்ணாடியும், வழுக்கை விழுந்த மொட்டையை மறைக்க தொப்பியும் போட்டுக் கொண்டு தான் போவார் போலே இருப்பாரே அவரே தான். கவர்ச்சிக்கன்னி சொப்பனவல்லியின் காரை நாம வைச்சிருக்கிறோம், சொப்பனவல்லியை யாரு வைச்சிருக்கிறாங்க என்று ஒரு சந்தேகம் வந்தது போல எந்த ஒரு சந்தேகமும் தனது அதிமுக என்கிற அடிமுட்டாள், ரெளடி கூட்டத்திற்கு வரக்கூடாது என்பதற்காக, ஜெயலலிதாவையும், தமிழ்நாட்டையும் நான் வைச்சிருந்தேன் இனி தமிழ்நாட்டை ஜெயலலிதா வைச்சிருப்பா என்று சொல்லி விட்டு மண்டையை போட்டாரே அவரே தான்.

அய்யாமுத்து ஒரு தமிழன்.  ஆகவே தமிழர்களின் தமிழ் பண்பாடுகளை ஒழுங்காகப் பின்பற்றிக் கொண்டு வந்தான்.

வையாவன

1.    கோயிலிற்குப் போதல்

2. ஆண்கள் தமிழர் பாரம்பரியப்படி கோட் சுட்டும், பெண்கள் பட்டுச்சேலையும் கட்டிக்கொண்டு திருமணங்கள், பிறந்தநாள், புhப்புனித நீராட்டு விழாக்களிற்கு போதல்.(முதல் முறை மட்டும் அல்லாது ஒவ்வொரு மாதமும் பூப்புனித நீராட்டு விழாவை பெரிதாக கொண்டாடுவது நல்லது என தமிழ்க்கலாச்சார காவலர்கள் ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள்)

தோழர் நேசன் எழுதும் புளொட்டில் இருந்து தீப்பொறி வரையிலான எனது அனுபவங்கள் தொடரில் கீழ்வரும் வரிகள் வருகின்றன. “சிறிது நேர மெளனத்தின் பின்பு என்னையும், விபுலையும் ஒருவகை அனுதாபத்துடனும் அதேவேளை சிறிது அய்யத்துடனும் பார்த்தவாறு கிட்டுவும், திலீபனும் பேசத் தொடங்கினர்”. இது தோழர் நேசனின் அனுபவ வரிகள், அவருடைய பார்வை இது. ஆனால் கிட்டுவினதும், திலீபனினதும் அரசியலும் செயற்பாடுகளும் அவர்கள், மற்றவர்களை அனுதாபத்தோடு பார்க்கக்கூடிய மனிதர்களாக நமக்கு என்றுமே அடையாளம் காட்டியதில்லை.

அய்யாமுத்து பூசையிலே மனமுருகி நின்றான். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி பக்தி என்ற இன்ப வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்த போது, அவனிற்கு முன்னாலே நின்றவர்கள் ஏதோ பெரிதாக கதைத்து அவனது சிந்தனையை குழப்பி விட்டார்கள். வகுப்பறையிலே பெடியன்கள் சத்தம் போட்டால் தமிழ் படிப்பிக்கும் நாகலிங்கம் வாத்தியார் சொல்லும் “காவோலையிலே நாய் ஒண்ணுக்கு அடிக்கிற மாதிரி சளசளக்காதேயுங்கடா” என்பது ஞாபகம் வந்தது. முன்னிற்கு நிக்கிறவர்கள் பூசையையும் கவனிக்காமல் அப்படி என்ன கதைக்கிறான்கள் என்று காதைக் கொடுத்துக் கேட்டான். இப்ப எவ்வளவு போகுது என்று ஒருத்தன் மற்றவனை கேட்டுக் கொண்டு நின்றான். யாழ்ப்பாண முறைப்படி செய்யப்படும் காரம், குணம், மணம் நிறைந்த மிளகாய்த் தூள் போட்ட கறியை ஒவ்வொரு நாளும் போட்டுத் தாக்குவதால் மூலக்கொதி வந்து அல்லல்படும் அய்யாமுத்துவிற்கு இதைக் கேட்டதும் கொதி உச்சந்தலை வரைக்கும் ஏறியது. ஏண்டா இதையெல்லாமாடா அளக்கிறது. அதையும் கதைக்க இடமில்லாமல் கோயிலிலை வைச்சா கதைக்கிறது எண்டு அவங்களைப் பார்த்து கத்தினான். வங்கியிலே வட்டி வீதம் எவ்வளவு போகுது என்டதை கோயிலிலே வைச்சு கேக்கக் கூடாதோ என்று அவங்கள் அய்யாமுத்துவை பார்த்துக் கேட்டார்கள்.

 

அய்யாமுத்து பூசையிலே மனமுருகி நின்றான். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி பக்தி என்ற இன்ப வெள்ளத்தில் நீந்திக் கொண்டிருந்த போது, அவனிற்கு முன்னாலே நின்றவர்கள் ஏதோ பெரிதாக கதைத்து அவனது சிந்தனையை குழப்பி விட்டார்கள். வகுப்பறையிலே பெடியன்கள் சத்தம் போட்டால் தமிழ் படிப்பிக்கும் நாகலிங்கம் வாத்தியார் சொல்லும் “காவோலையிலே நாய் ஒண்ணுக்கு அடிக்கிற மாதிரி சளசளக்காதேயுங்கடா” என்பது ஞாபகம் வந்தது. முன்னிற்கு நிக்கிறவர்கள் பூசையையும் கவனிக்காமல் அப்படி என்ன கதைக்கிறான்கள் என்று காதைக் கொடுத்துக் கேட்டான். இப்ப எவ்வளவு போகுது என்று ஒருத்தன் மற்றவனை கேட்டுக் கொண்டு நின்றான். யாழ்ப்பாண முறைப்படி செய்யப்படும் காரம், குணம், மணம் நிறைந்த மிளகாய்த் தூள் போட்ட கறியை ஒவ்வொரு நாளும் போட்டுத் தாக்குவதால் மூலக்கொதி வந்து அல்லல்படும் அய்யாமுத்துவிற்கு இதைக் கேட்டதும் கொதி உச்சந்தலை வரைக்கும் ஏறியது. ஏண்டா இதையெல்லாமாடா அளக்கிறது. அதையும் கதைக்க இடமில்லாமல் கோயிலிலை வைச்சா கதைக்கிறது எண்டு அவங்களைப் பார்த்து கத்தினான். வங்கியிலே வட்டி வீதம் எவ்வளவு போகுது என்டதை கோயிலிலே வைச்சு கேக்கக் கூடாதோ என்று அவங்கள் அய்யாமுத்துவை பார்த்துக் கேட்டார்கள்.

 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE