Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இந்தக் குறிப்பிட்ட காலப்பகுதியில் றீகன் வடக்கு தீவுப்பகுதிகளில் எல்.ரீ.ரீ.ஈயின் இராணுவக் கட்டளையாளராக பணியாற்றிவந்தார். அவரது பிரதேசத்துக்கான அரசியல் ஆணையாளராக கஸ்ட்ரோ இருந்தார். 1990 ஆகஸ்ட் – செப்ரம்பர் காலப்பகுதியில் இராணுவ – கடற்படை கூட்டுத் தாக்குதலான “ஒப்பறேசன் மேஜர்” எனும் குறியீட்டுப் பெயரைக் கொண்ட தாக்குதல் காரணமாக எல்.ரீ.ரீ.ஈ தீவகத்திலிருந்து பின்வாங்க நேர்ந்தது. றீகன் திரும்பவும் காயமடைந்தார்.

இலங்கை அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வெளியே சென்றுவிடாமல் இருக்க மேற்குலகம் போர்க் குற்ற விசாரணை, மனித உரிமை மீறல் போன்ற விடயங்களைக் காட்டி இலங்கையை மிரட்டி வருகின்றது. ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்ட நிலையில் இந்த நிலைமையை பாவித்துத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சில ராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்.

பிரான்சிய புலிகளின் மூத்த தலைவரான பரிதியின் மீது ஒக்டோபர் 30ந் திகதி பாரீசில் வைத்து மேற்கொள்ளப்பட்ட இரவுநேரத் தாக்குதல், புலம்பெயர் ஸ்ரீலங்காத் தமிழர் அரசியலைத் தற்போது துன்புறுத்தும் ஒரு கொடிய நோயின் அறிகுறியாக உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கட்டமைப்பானது தற்சமயம் இயக்கத்தின் பலம் பொருந்திய முன்னணி தலைவர்களிடையே ஏற்பட்டிருக்கும் ஒரு அதிகாரப் போராட்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. பாரீசில் பரிதிமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலும் இந்த உடன்பிறப்பு கொலைகளைப் புரியத்தூண்டிய கோஷ்டி மோதல்களின் விளைவே.

நீண்ட இடைவெளியின் பின்னர் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறும் வேதாள மதி!

இனி விசயத்திற்கு வருவோம்!

தமிழ்த்தசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால அமெரிக்க சுற்றுலா தமிழ் மக்களுக்கு சார்பாக ‘வெட்டிச் சரிக்கும்’ என எதிர்பார்த்தவர்களுக்கு மிகுந்த  ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எமாற்றகளையும் கடந்து துரோகத்தனம் தாண்டவமாடுவதை காணக்கூடியதாக இருப்பது கவலைக்குரியதாகும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அமெரிக்காவிற்கு செல்வது தொடர்பான செய்திகள் ஏலவே வெளியாகியிருந்தாலும் அவர்களது அமெரிக்க நிகழ்சிநிரல் தொடர்பான செய்திகள் ஏதும் இதுவரை கசியவில்லை. அறியமுடிந்த தகவல்களின்படி, கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்மந்தன் மற்றும் தேசியப்பட்டியல் உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஹில்லறி கிளின்டனை சந்திப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் அமெரிக்க, கனடிய, ஐரோப்பிய விஜயம் குறித்து இன்று பல்வேறுபட்ட வாதப் பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன. இவைகளில் முக்கியமாக சில கட்டுரைகள், இவர்களுடைய விஜயத்தை எதிர்த்தும் மற்றும் சில ஆதரித்தும் ஊடகங்களில் விவாதிக்கப்படுகின்றன. ஆனால் எவரும் விசைய ஞானத்தோடு அணுகியதாகக் கருதமுடியவில்லை.

சிங்கள, முஸ்லிம்,  தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு கோரியும்; கிழக்கு மாகாணத்தில் சிங்கள,  தமிழ், முஸ்லிம் ஏழை மக்களுக்கு பொறுப்புடன் செயற்பட வேண்டிய அரசாங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படுகின்ற பழிவாங்கல் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஜனாதிபதியின் தலையீட்டை வலியுறுத்தியும், மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விஹாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் இன்று காலை முதல் மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டத்தை நிறைவுக்குகொண்டு வந்துள்ளார்!

சிங்கள, முஸ்லிம்,  தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு கோரியும்; கிழக்கு மாகாணத்தில் சிங்கள,  தமிழ், முஸ்லிம் ஏழை மக்களுக்கு பொறுப்புடன் செயற்பட வேண்டிய அரசாங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படுகின்ற பழிவாங்கல் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஜனாதிபதியின் தலையீட்டை வலியுறுத்தியும், மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விஹாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் இன்று காலை முதல் மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டத்தை நிறைவுக்குகொண்டு வந்துள்ளார்!

முழு இலங்கை மக்கள் மேலான யுத்தம் ஒன்றை அரசு தொடங்கி இருக்கின்றது. இந்த யுத்தத்துக்கு இன அடையாளம் கிடையாது. சாதி அடையாளம் கிடையாது. மத அடையாளம் கிடையாது. ஆண் பெண் பால் அடையாளம் கிடையாது. இப்படி எந்தக் குறுகிய அடையாளமும் கிடையாது. முழு மக்களையும் பாதிக்கும் இந்த யுத்தத்தின் விளைவுகளை அனுபவிப்பதில் மட்டும்தான், இந்த அடையாளங்களும் வேறுபாடு;களும் குறிப்பாக வேறுபடுகின்றது. இப்படி அரசு வர்க்கரீதியான யுத்தத்தை முழு மக்கள் மேலும் நடத்துகின்றது. இனவழிப்பு யுத்தத்தின் பின், அரசு முழு மக்கள் மேலான வர்க்க ரீதியான ஒரு யுத்தத்தை உலக வங்கியின் துணையுடன் தொடங்கி இருக்கின்றது. பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள் முதல் இது யாரையும் விட்டு வைக்கவில்லை.

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 44

 

தளம் திரும்பவிருந்த சந்ததியார் சென்னையில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்

உமாமகேஸ்வரனும் அவரால் தலைமை தாங்கி வழிநடத்தப்படும் புளொட்டின் செயற்பாடுகளிலும் உறுப்பினர்களிடையே தோன்றிவிட்டிருந்த அதிருப்தியும் உள்முரண்பாடுகளும் தளமாநாடு ஒன்றைக் கூட்டுவதை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. உமாமகேஸ்வரனின் உண்மையான சொரூபத்தையும் புளொட்டின் உண்மைநிலையையும் உணர்ந்து கொண்ட பலர் புளொட் செயற்பாடுகளிலிருந்து விலகிக் கொண்டிருந்தனர்.

அருள் நிறைந்த அம்மா வாழ்க
டெல்லி சர்க்காரும் சர்வலோகமும்
உம்முடனே இருக்கக் கடவதாக
பெண்களுக்குள் தமிழ்நாட்டில்
ஆசீர்வதிக்கப்பட்டவள் ஆனீர்
தமிழர்களின் திருவயிற்றின்
கனியாகிய கன்னித்தாயே
முள்ளிவாய்க்காலில் மரித்த எங்களுக்காக
எங்கள் மரணநேரத்திலும்
டெல்லி சர்க்காரை
சங்காரம் வேண்டாமென்று
வேண்டிக் கொண்ட தாயே
எங்கள் சந்ததியினருக்காக
நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்
எங்கள் சந்ததியினரை இரட்சித்தருளும்
அவர்களை அவர்கள் சித்தத்தில் வாழ அனுமதித்தருளும்.
முள்ளுக் கிரீடம் அணிந்து
சிலுவையில் அறையப்பட்டு
மரணித்தார் நாதர் இயேசு
நாங்கள் பிறருக்காய் மண்ணுக்குள்
மரணிக்கப்பட்டோம் தாயே.
உயிர்த்தெழுந்து நாங்கள் வருகிறபோது
தாயே உமக்கே தோத்திரம்
உண்டாகக் கடவது.

அருள் நிறைந்த அம்மா வாழ்க
டெல்லி சர்க்காரும் சர்வலோகமும்
உம்முடனே இருக்கக் கடவதாக
பெண்களுக்குள் தமிழ்நாட்டில்
ஆசீர்வதிக்கப்பட்டவள் ஆனீர்
தமிழர்களின் திருவயிற்றின்
கனியாகிய கன்னித்தாயே
முள்ளிவாய்க்காலில் மரித்த எங்களுக்காக
எங்கள் மரணநேரத்திலும்
டெல்லி சர்க்காரை
சங்காரம் வேண்டாமென்று
வேண்டிக் கொண்ட தாயே
எங்கள் சந்ததியினருக்காக
நாங்கள் வேண்டிக் கொள்கிறோம்
எங்கள் சந்ததியினரை இரட்சித்தருளும்
அவர்களை அவர்கள் சித்தத்தில் வாழ அனுமதித்தருளும்.
முள்ளுக் கிரீடம் அணிந்து
சிலுவையில் அறையப்பட்டு
மரணித்தார் நாதர் இயேசு
நாங்கள் பிறருக்காய் மண்ணுக்குள்
மரணிக்கப்பட்டோம் தாயே.
உயிர்த்தெழுந்து நாங்கள் வருகிறபோது
தாயே உமக்கே தோத்திரம்
உண்டாகக் கடவது.

ஒரு கணம் 

ஒரேயொரு கணம் 

கனவில் கூட 

வாழ முடியாது உன்னால்

வாழ்வின் கடைநிலை மாந்தராய்.

செக்கிழுப்பாயா

கல்லுடைப்பாயா

மண் சுமப்பாயா

நீரிறைப்பாயா

படகிழுப்பாயா

கனி பறிப்பாயா

மூட்டையாய்பாரம்

முதுகில் சுமந்து

வீடுகள் வனைய

வீதிகள் சமைக்க

வெய்யில் நின்று

வெந்திடுவாயா

உன் கொழுத்துப் பருத்த

தேகம் அசைத்து

சேற்றில் இறங்கி

களை நடுவாயா

ஏர் பிடிப்பாயா

அருவி வெட்டி

சூடடிப்பாயா

“பற்றுறுதியுள்ள ஒரு மனிதன் வெறும் ஆர்வத்தை மட்டுமே கொண்டுள்ள இலட்சக்கணக்கானவர்களுக்கு சமமானவன்.”

 இனவெறி நிறவெறி மதவெறி யாவற்றையும் ஒருங்கே கொண்ட ஒரு மனிதன் ஆவேசமாய் தன்னுடைய இனத்தின் முகத்தில் அறைந்து உலகுக்கு பறைசாற்றிய செய்தி என்ன?. தான் காப்பாற்றத் துடிக்கிற தன் சொந்த இன மக்களை கதறக்கதற துப்பாக்கியால் துளைத்து உயிர்ப்பலி எடுத்த கொடூரச் செயலுக்குப் பின்னாலும் தன்னிடத்தில் நியாயம் உண்டு என்கின்றான். இக் கொலைகள் குரூரமானமானவையாயினும் அத்தியாவசியமானவை என அவன் தன்மீதான குற்றவிசாரணைகளில் அறைந்து அழுத்தம் திருத்தமாக அறிவிக்கின்றான். மேலுள்ளது அவன் தனது முகப்புத்தகத்தில் பதிந்த வரிகள்.

உறவு உறவெண்டாலும்
பறியில கைவையாதையடா மேனே
எவனுக்கும் குழிபறிக்காம
சிவனுக்கும் அடிபணியாம
கருக்கல் பொழுதுகள்ள
கணுக்கால் கரையில
மெல்ல மெல்ல
சலசலக்காம
பதுங்கிப்பதுங்கி
வீசின வலையில
சிக்கின பாடொடு
இடுப்பில கட்டின
பறியில இன்னும்
உயிராய் துடிக்கிற
மீன்கள கரையில
கடற்கரை மணலில
பரப்பிப் போட்டு
வித்துப் பிழைக்கிற
விட்டுணு மாமா
கள்ள குடித்து
குலுங்கிக் கலங்கி
பாடின பாட்டு
நான் பெற்ற செல்வம்
நலமான செல்வம்.

உன்னை உதைப்பதும்
என்னை வதைப்பதும்
என்னுயிர் குடித்ததும்
உன்னுயிர் பறித்ததும்
சிங்களனல்ல
…தமிழனுமல்ல
உலகெலாம் நிறைந்து
இரத்தம் உறிஞ்சும்
மூலதனத்தின்
பிசாசுக்கரங்கள்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE