Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

மூலத்திற்குள் காணியதிகாரம் இருக்காவென பிள்ளையான் பூதக்கண்ணாடி கொண்டு தேடுகின்றார்!

நகர- நாடு  திருத்தச் சட்டமூலத்தை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கிறது!

கடந்த வருடத்தின் சில மாதங்களில், மகிந்த சுபமுகூர்த்தங்கள், கூடிய வேளைகளில், அரசிற்கும்-கூட்டமைப்பிற்கும் இடையில் சுமூகமான பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இது வட-கிழக்கிற்கான காணி-பொலிஸ் அதிகாரத்திற்கு கிட்டவர, அது பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு உரித்தானதென எட்டிப்போயிற்று.

எரிபொருள் விலையேற்றத்தால் மின்சாரம் பாவிக்காத குடும்பம் ஒன்று மண்ணெண்ணையை 5 லீற்றர் கொள்வனவு செய்யுமாயின் மாதாந்தச் செலவு ரூ 175 அதிகரித்துள்ளது, தற்போது நாடுமுழுவதும் அண்ணளவாக 300000 குடுப்பங்கள் மின்சாரம் பாவிக்காமல் மண்ணெண்ணை விளக்குகளை பாவிக்கின்றன. இவர்களுக்கு மானியமாக  ரூ 200 வழங்கவுள்ளது என்றும், இதனால் அரசிற்கு ஒரு பில்லியன் ரூபா செலவு என்றும் பசில் ராஜபக்சே அண்மையில் தெரிவித்துள்ளார்.

வடக்குக்கிழக்கில் இன்றைய நிலையில் மக்களின் வருமான மூலங்கள் பற்றிய ஆய்வுக் கலந்துரையாடல் இன்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள கடமைகளுக்கான நிலையத்தில் நடைபெற்றது. பல்துறை சார்ந்தவர்கள் பங்கேற்ற இக் கலந்துரையாடலிலே  வடக்கு கிழக்கு மக்கள் இன்று முகம் கொடுக்கும் பல வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

2009ம் ஆண்டின் யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்களை விசாரிப்பதற்காக இராணுவ உயரதிகாரிகள் கொண்ட நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக “இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிஹால் ஹப்பு ஆரச்சி” குறிப்பிட்டுள்ளார். போர்க்குற்றம் புரிந்தவர்களை விசாரிப்பதற்கு என்று நியமிக்கப்பட்டவர் போர்குற்றம் புரிந்த  படையணிகளின் கட்டளையதிகாரி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவே.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஜெனிவாவில் அனைவரும் ஆதரிப்போம், மண்டேலா தலைமையிலான அமைப்பு ஐ.நா. அங்கத்துவ நாடுகளுக்கு அவசர கடிதம்

ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா உட்பட்ட நாடுகள் கொண்டுவரவுள்ள தீர்மானத்தை ஆதரிக்குமாறு மனித உரிமைகள் மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்கான உலகப் புகழ்பெற்ற நிறுவனமான த எல்டர்ஸ் (the el-Ders) அமைப்பு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் அங்கத்துவ நாடுகளிடம் அவசர வேண்டுகோளொன்றை விடுத்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் நேற்று உதயனுக்குத் தெரிவித்தன.

கொல்லப்பட்ட மேரி கோல்வின், ரெமி ஓச்லிக்

மேற்குலக நாடுகளைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்கள் சிரியாவின் ஹோம்ஸ் நகரில் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அவர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது நடந்த ஷெல் தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டதாக அரச எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மீன்பிடி நடவடிக்கைகளில் இருந்து விலகி இன்றுடன் 10நாட்கள் கடந்துள்ள போதிலும், இதுவரையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்று வழங்கப்படவில்லை என மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

நிரந்தர தீர்வொன்று வழங்கப்படும் வ

மஹிந்த சிந்தனை மக்களின் மரண சிந்தனையாக மாறிவிட்டது. நாட்டின் பொருளாதாரம் படுபாதாளத்தை நோக்கிப் பயணிப்பதால் தமிழ், சிங்கள புத்தாண்டில் மக்களுக்கு பாற்சோற்றைக்கூட உண்ணமுடியாத நிலைமையே ஏற்படப்போகின்றது” என்று ஐக்கிய சோசலிஷக் கட்சியின் பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜயசூரிய குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தியாவிலிருந்து வெள்ளையர்களை விரட்டியடிப்பதற்கு மகாத்மா காந்தி கையாண்ட வழிமுறைகளை எமது நாட்டு மக்கள் பின்பற்றிக் கொடுங்கோல் ஆட்சி புரியும் இந்த அரசை வீட்டுக்கு விரட்டியடிக்கவேண்டும் என்றும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார்.

மன்னார் புறநகர்ப்புறத்தில் எழுத்தூர் மக்கள் குடியிருப்பு பிரதேசத்தில் புதிதாக இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்று அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்கள் அரசிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

இங்குள்ள பல மகளிர் அமைப்புக்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் கையெழுத்திட்டு எழுத்து மூலமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்கள்.

குடியேற்றக் கிராமமாகிய ஜீவன்புரம் உட்பட ஒன்பது மீள்குடியேற்ற கிராமங்களுக்கு நடுவே தரவன்கோட்டைக்குச் செல்லும் வீதியில் இந்த இராணுவ முகாமை அமைப்பதற்குரிய காணி ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர்.

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பைக் கண்டித்து நடைபெற்ற மீனவர் ஆர்ப்பாட்டத்தின்போது சிலாபத்தில் கடந்த புதன்கிழமை சுட்டுக்கொல்லப்பட்ட அந்தனி பெர்ணான்டோவின் உடல் சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது.

இந்த இறுதிச் சடங்குகள் நடக்கும்போது எந்தவிதமான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்படக்கூடாது என்று பொலிசாரின் கோரிக்கையின் பேரில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், சனிக்கிழமை இறுதி நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட எதிரணி அரசியல் தலைவர்களும் உள்ளூர் அரசியல் பிரமுகர்களும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தனர்.

 

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என்று தமிழக அரசால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு தெரிவித்துள்ளது.

ஞாயிறன்று திருநெல்வேலியில், அரசின் வல்லுநர் குழுவுக்கும், இந்த அணுமின் நிலையத்துக்கு எதிராக போராடி வருபவர்களுக்கும் இடையே நடைபெற்ற கூட்டத்தக்கு பிறகே அரச தரப்பினர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளனர்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (எல்.எல்.ஆர்.சி) அறிக்கை ஸ்ரீலங்காவாசிகளின் முதிர்ச்சியடைந்த சிந்தனையைப் பிரதிபலிக்கிறது.  -ஜெகான் பெரேரா

”தென்பகுதியின் இரண்டு பிரதான அரசியற் கட்சிகளினதும் அரசியல் தலைவர்கள், தேசிய நலனைக் கருத்திற்கொண்டு நடந்தும் மற்றும் தமிழ் மக்களுக்கு ஏற்றுக் கொள்ளத் தக்கதான ஒரு அரசியல் தீர்வை வழங்குவதில் தம்மிடையே போலியான கருத்தொற்றுமைகளை ஏற்படுத்திக் கொள்ளாமலும் இருந்திருந்தால் இந்த மோதல்களை தவிர்த்திருக்க முடியும்”.

16 நவம்பர் 2011 ல் கொழும்பில் உள்ள பிரிட்டிஸ் கவுன்சிலில் பிரித்தானிய அறிஞர்கள் சங்கத்தின் மேற்பார்வையின்கீழ் றோகான் குணரத்ன அவர்கள் மேற்கத்தைய மண்மீதுள்ள எல்.ரீ.ரீ.ஈ யினரை எதிர்கொள்வதற்கு வேண்டிய ஸ்ரீலங்காவின் எதிர்காலப் பாதுகாப்பு எனும் தலைப்பின் கீழ்  விரிவான வீச்சத்தில் ஒரு உரையை நிகழ்த்தியிருந்தார்.

ஒவ்வொரு ஆண்டினதும் நவம்பர் மாதம் யுத்தத்தில் ஈடுபட்ட வீரர்களின் நினைவுக் காலமாக பிரித்தானியா மற்றும் கொமன்வெல்த் நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நினைவுகூரப்படுகிறது. முதலாம் உலக யுத்தம் உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட நவம்பர் 11 1918 இன் ஞாபகார்த்தமாக, இந்த யுத்தத்தில் உயிரிழந்த வீரர்களின் நினைவாக இத்தினம் நினைவுகூரப்படுகிறது. ஆனால் அதன் பின் இன்று வரை நடைபெறும் யுத்தங்களில் கொல்லப்பட்ட இராணுவ வீரர்களும் நினைவுகூரப்படுகின்ற பொதுவான நினைவு நாளாக இந்நாள் மாறியுள்ளது.

ஒப்பீட்டளவில் மிகவும் உயர்ரகத் தாக்குதலான இவ்வகைத் தாக்குதல் பரிதிமீது மேற்கொள்ளப்படும் வரைக்கும் மற்றொரு எல்.ரீ.ரீ.ஈயின் சிரேட்ட தலைவராகிய தனம் என்பவர்மீது மட்டுமே லண்டனில் வைத்து நடத்தப்பட்டிருக்கிறது.யாழ்ப்பாணம் பாஷையூரைச் சொந்த இடமாகக் கொண்ட றூபேர்ட் சூசைப்பிள்ளை அல்லது தனம் என்கிற எல்.ரீ.ரீ.ஈயின் சிரேட்ட தலைவர் பிரித்தானியாவில்  எல்.ரீ.ரீ.ஈயின் நிதி அமைப்புக்கு பொறுப்பாகவிருந்தார். இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வினாயகம் பிரிவினரின் சில அங்கத்தவர்களால் அவர் தாக்குதலுக்கு உள்ளானார். வினாயகம் பிரிவினரின் லண்டன் தலைவராகிய சங்கீதன் என்பவரே இந்த தாக்குதலின் பின்னணியில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

(பரீசில் பரிதி மீதான தாக்குதல்: புலிகளின் உள்ளக அதிகாரப் போராட்டம் – என்பதன் தொடர்ச்சி)

பரீசில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரெஞ்சு நடவடிக்கைகள் ஏப்ரல் முட்டாள்கள் நாளன்று தொடங்கப்பட்டது. பிரெஞ்சு சட்ட அமலாக்க அதிகாரிகள் எல்.ரீ.ரீ.ஈ யினருக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளில் 2007 ஏப்ரல் முதலாம் திகதி ஈடுபட்டது, பிரான்சிலுள்ள புலிகளுக்கு ஒரு மோசமான ஏப்ரல் பூல்ஸ் நகைச்சுவை போலத் தோன்றியிருக்கலாம்

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE