Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

தமிழ் மக்களிற்கான கருமம் ஆற்றுவதாக காலம் காலமாக வீரவசனம் பேசிய கூட்டமைப்பு, மக்கள் பேரழிவின் போது ராஜதந்திர நகர்வுக்கு அவலம் களம் திறக்கப்போவதாய்  வாய் மூடிக்கிடந்தவர்கள், புலிகளின் ஏகப்பிரதிநிதிகளாக மக்களின் அரச எதிர்ப்புணர்வை, பாராளுமன்ற இருப்புக்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டார்கள்.

அனைவருக்குமான ஓய்வூதியத்தை மறுத்தும், ஆயுள் பூராவுமான ஓய்வூதியத்தை மறுத்தும், இறந்தால் குடும்ப உறுப்பினர் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற முடியாதவாறு மறுத்தும் ஒரு ஓய்வூதியம். இப்படி தனியார் ஓய்வூதிய திட்டத்தின் பெயரில் அவர்கள் கொடுக்க முனைவது, பிச்சைக்காசுதான். இந்த பிச்சைக் காசைக் கொடுக்க, அரசு தன் நிதி எதையும் கொண்டு முன்னெடுக்கவில்லை. மாறாக ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள் சிறுகசிறுகச் சேர்த்த பணத்தை, அரசு தனதாக்கி அதைக்கொண்டு பிச்சை போடும் திட்டத்தைத்தான் ஓய்வூதியமாக அரசு அறிவிக்கின்றது. உலக வங்கியின் உத்தரவுக்கு அமைவாகத்தான், இதையும் கூட முன்னெடுக்கின்றது.

இலங்கையில் ஒரேயொரு தேசிய இனமே உண்டு என்று கூறி, ஒடுக்கும் பேரினவாதம் தான், தமிழினவாதத்தை தொடர்ந்து உருவாக்கின்றது. தமிழ் பாராளுமன்றவாதிகளோ, இதை குறுகிய தமிழினவாதமாக மாற்றிவிடுகின்றனர்.


அண்ணை கேக்கிறன் எண்டு குறை நினையாதையுங்கோ. ஏனண்ணை கொஞ்சம் முகம் வாட்டமாய் சோந்துபோய் வாறியள்.

எனக்கு வாற விசருக்கு நீயும் பத்தாக்குறைக்கு என்னிட்டை வாங்கிக் கட்டப்போறாய்.

அப்ப நான் கேட்டது சரியாப் போச்சு ஏதோ கொதிப்பில தான் வீட்டிலயிருந்து நடையண்ணை நடையைக் கட்டியிருக்கிறியள். என்ன ஏதும் விசயம் பாரதூரமே.

சோத்துக்கு வழியில்லாமப் பண்ணியிட்டாங்களடா என்னை, என்ரை மனிசியும் பிள்ளையளும்.அவங்கள் இண்டைக்கு சமைக்கேல்ல.

ஏன் என்ன? வீட்டில நீங்கள் ஏதாவது நெருப்பெடுத்திருப்பியள் மனுசி சமையல்ல ஸ்ரைக் அடிச்சிருப்பா. உங்களுக்கு இப்ப வயிறு பசியில காந்துது அதுதானே விசயம்.

நிப்பாட்டு. நீ அதுக்குள்ள உன்ர கற்பனையை கன்னா பின்னா எண்டு ஓடவிடாதை. அவங்கள் இண்டைக்கு வீட்டில ஏதோ பாபகியூ எண்ட கண்டறியாத ஒண்டை செய்து போட்டு வெந்ததும் வேகாததுமா இறைச்சியை வாட்டி எடுத்து திண்டாங்கள். நாசமாப் போக. எனக்கு ஒரு பருக்கை சோறில்லாமல் தலை சுத்துதடா தம்பி.

இலங்கை மக்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான புதிய இராணுவ முகாங்கள்...

மக்களைக் கண்டு அஞ்சும் மகிந்த அரசு, இராணுவத்தை பலப்படுத்தி நாட்டை இராணுவ மயமாக்குகின்றது. நாடு முழுக்க ஏற்கனவே இராணுவ மயமாக்கப்பட்டுள்ள நிலையில், புதியதாக நூற்றுக்கணக்கான புதிய இராணுவ முகாங்களை நிறுவவுள்ளதாக மகிந்தா குடும்பம் அறிவித்துள்ளது. வடக்கு கிழக்கிலோ கெடுபிடியான இராணுவ ஆட்சி தான் ஏற்கனவே நடக்கின்றது. இராணுவத் தலையீடு இல்லாத சிவில் சமூக நிகழ்வுகள் அங்கு கிடையாது. இதை மீறி நடந்தால் அதை சட்டவிரோத செயலாகவும், இராணுவத்துக்கு எதிரான சதியாகவும் கூறி, அதற்கு எதிராக இராணுவத்தைக் கொண்டு கெடுபிடிகளையும் ஒடுக்குமுறைகளையும் ஏவுகின்றது.

வடக்கு நோக்கி செல்லும் பெரும் வீதிகளில் உள்ள தேநீர் கடைகளைக் கூட மக்களிடம் விட்டுவைக்காது, அதை இராணுவம் தான் நடத்துகின்றது. வடக்குக்கிழக்கில் இராணுவம் தலையிடாத எதுவும் கிடையாது. புத்தர் சிலையை ஆங்காங்கே நிறுவுவது, வடக்கு கிழக்கு மக்களின் ஆதி வரலாற்றை மாற்றி எழுதுவது என்று, எங்கும் இராணுவம் தன் மூக்கை நுழைத்து வருகின்றது.

சுந்தரராமசாமி  அவரது அபிமானிகளின் கூற்றுப்படி, நவீனத் துவத்தின் இலட்சிய உருவமாய், பாதைகள் மயங்கும் அந்தி யில், நினைவின் நதியில், பின்னும் உயிர்வாழும் கானலாய், இறுதியில், காற்றில் கலந்த பேராசையாய் மறைந்து விட்டார். அவரைப்பற்றி நாங்கள் என்ன எழுத முடியும், ஏன் எழுதவேண்டும் என்பது ஒருபுறமிருக்க, அவர் உயிரோடு படைப்பின் முக்கி முனகும் அவஸ்தையோடு வார்த்தைகளை அச்சிட்டு சந்தைப்படுத்தி "சிற்றி லக்கிய உலகில் இங்கொருவன் இருக்கின்றேன்' என்று ஜாக்கி வைத்த பல்லக்கில் பிதாமகராய் உலா வந்த நேரத்தில் கூட அவரை நாங்கள் கண்டு கொண்டதில்லை. அதேசமயம் அப்படி முழுவதுமாய் அவரை ஒதுக்கி வைத்ததாகவும் சொல்லிவிட முடியாது.


மாணவர் - ஆசிரியருக்கான கட்டாய இராணுவப் பயிற்சி இராணுவ ஆட்சிக்கான முன் தயாரிப்பாகும்...

மகிந்தா குடும்பம் வடக்குக் கிழக்கில் திணித்துள்ள இராணுவ ஆட்சியை, இலங்கை முழுக்க நடைமுறையாக்கும் படிக்கல் தான் பல்கலைக்கழக மாணவர்களுக்கான கட்டாய இராணுவப் பயிற்சியாகும். வடக்கு கிழக்கு உற்பத்திப் பொருட்களை தன் இராணுவ ஆட்சி மூலம் மலிவு விலையில் வாங்கி, அதை மலிவாக சிங்கள மக்களுக்கு விற்றதன் மூலம், முதலில் இலங்கையில் இராணுவ ஆட்சியின் அவசியத்தை புரியவைக்க முனைந்த இந்த பேரினவாத அரசுதான், இன்று கட்டாய இராணுவப் பயிற்சியை மாணவர்களுக்கு திணித்த அரசு, அடுத்து அதை ஆசிரியர்களுக்கு திணிக்கவுள்ளது. மகிந்த முன்தள்ளும் பாசிச சிந்தனையின் மகத்துவம் இதுதான்.

நாட்டை இனி மகிந்த குடும்பம் தான் பரம்பரை பரம்பரையாக ஆளவேண்டும். இதுதான் மகிந்த குடும்பத்தின் சிந்தனையாகும். மன்னர்கள் போல் தாமும் பரம்பரை பரம்பரையாக ஆட்சி அதிகாரத்தில் வாழ வேண்டும், இதனால் மன்னர்கள் உயிர்ப்பிக்கப்படுகின்றனர். வரலாற்றுப் புரட்டுகள் திணிக்கப்படுகின்றது. மன்னர்களை பேரினவாதத்தின் அடையாளமாகக் காட்டி, தங்கள் பேரினவாத பாசிச ஆட்சியை அதன் தொடர்ச்சியாககாட்டி அதைத் திணிக்க முனைகின்றனர்.

 

 

 

2.யுத்தத்தின் பின் பௌத்தமூலம் தமிழினத்தை அழிக்கின்றது...

யுத்தத்தின் பெயரில் ஓர் இனத்தைக் கொன்று குவித்தவர்கள், யுத்தத்தின் பின் அதை நிறுத்திவிடவில்லை. ஆனால் அதன் வடிவத்தை மட்டும் மாற்றியுள்ளனர். 1940கள் முதல் எல்லையோரத்தில் திட்டமிட்டு நடாத்தி வந்த இன அழிப்புக் குடியேற்றம், யுத்தத்தின் பின் தமிழர் செறிந்து வாழும் பகுதிகளுக்குள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் பேரினவாதம் தன் இன அழிப்புக்கு, இன்று பௌத்த மதத்தை முதன்மைப்படுத்தி முன்நிறுத்துகின்றது. அரசு தன்னை மதத்தின் ஊடாக அடையாளப்படுத்தி, பேரினவாதத்தை முன்தள்ளுகின்றது. ஆயுத மூலமான இன அழிப்பில் புலிகள் மீதான படை நடவடிக்கை மூலம் அழிப்புகள் முடிந்த நிலையில், பௌத்த மதத்தைக் கொண்டும் அதனைச் செய்கின்றது. யுத்தத்தின் பின்னான இன அழிப்பில் இன்று மதம் பாவிக்கப்படுகின்றது.

1.உங்களை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம்...

'உங்களை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம்" என்ற மகிந்த ராஜபக்சாவின் குற்றவாக்கு மூலத்தில் எதற்காக, எதைக் காட்டிக் கொடுக்கமாட்டோம் என்கின்றனர்? யுத்தக் குற்றம் எதையும் நாங்கள் செய்யவில்லை என்று கூறிவருகின்ற அரசு, மறுபுறம் உங்களைக் காட்டிக்கொடுக்க மாட்டோம் என்கின்றது. எதை? குற்றம் இழைக்கவில்லை என்றால், காட்டிக்கொடுக்க எதுவுமில்லை. காட்டிக் கொடுக்க ஏதோ இருக்கின்றது என்றால், அங்கு குற்றம் இழைக்கப்பட்டிருக்கின்றது.

"காட்டிக் கொடுக்கமாட்டோம்" என்று கூறி, குற்றம் நடந்ததாக சுயவாக்கு மூலம் தருகின்றது அரசு. ஆக அரசு குற்றமிழைத்ததை ஒத்துக்கொள்ளும் அதேநேரம், யாரையும் காட்டிக் கொடுக்கமாட்டோம் என்கின்றனர்? சரி யாரை? இங்கு உங்களை என்று குற்றஞ்சாட்டி, அது நாங்களல்ல என்று தமது குற்றத்தை அப்பாவி இராணுவ வீரன் மீது சுமத்துகின்றது. இப்படி தங்களின் குற்றத்தை மூடிமறைக்க, பேரினவாத தேசிய வெறியை முன்னிறுத்தி குற்றத்தை மற்றவர்கள் மேல் அபாண்டமாக சுமத்துகின்றது அரசு. ஆக இங்கு காட்டிக் கொடுக்க ஏதோ இருக்கின்றது. யாரோ போர்க்குற்றத்தை இழைத்துள்ளனர் என்பதை, ஜனாதிபதி மகிந்தாவின் இந்தக் கூற்றும் உறுதி செய்கின்றது.

தற்போதுள்ள ஆட்சி முறையின் கீழ், ஆட்சியாளர்களை மாற்றுவது எமது எதிர்பார்ப்பு அல்ல எனவும் தற்போதைய ஜனாதிபதி, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோரிடைய பாரிய வித்தியாசங்களை காணவில்லை. என மக்கள் போராட்ட அமைப்பின் தேசிய அமைப்பாளர் சமீர கொஸ்வத்த தெரிவித்துள்ளார்.

முன்னுரை 

சந்தை இலக்கியம், சினிமா ஆகியவற்றுக்கு மாற்றான உன்னத மான இலக்கிய சொர்க்கம் ஒன்று நிலவுவதாகவும், அந்த  சொர்க்கத்தின் திறவுகோலைக் கையில் வைத்திருக்கும் தேவர்கள் தாங்கள்தான் என்றும் ஒரு கூட்டம் பீற்றித் திரிகிறது. இலக்கிய தரிசனத்தின் ஞானக்கண் தங்கள் முன் மண்டையிலிருந்து பின் மண்டை வரை பரவியிருப்பதாகவும், அதன் மூலம் 360 டிகிரியிலும் ஒரே சமயத்தில் தங்களால் வாழ்க்கையைப் பார்க்க முடியுமென்றும் சாதாரண வாசகர்களை இவர்கள் அச்சுறுத்துகிறார்கள். எவ்வித சித்தாந்தக் கறையும் படியாத காலி மூளைதான் இந்த அழகியல் ஞானக்கண்ணைப் பெறுவதற்கும் அவர்களுடைய இலக்கியத்தை ரசிப்பதற்கும் முன் நிபந்தனை என்றும் கூறுகிறார்கள்.

புலிகளின் தேசியத்தின் முன், நான் செய்த குற்றம் என்ன? தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளைக் கோரி போராடியது தான். இதனால் இந்த மக்களைக் கண்டு அஞ்சிய புலிக் கோழைகள், இனம் தெரியாத நபர்களாக மாறினர். இந்த கோழைகள் வேஷத்தில் தான், புலிகள் என்னைக் கடத்தினர். இரகசியமாக செய்த இந்த கடத்தலை உரிமை கோரததுடன், தாம் அதைச் செய்யவில்லை என்று உலகின் முன் சத்தியம் செய்தனர். தமக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்றனர். தாம் இது போன்ற நடவடிக்கைகளில், ஒரு நாளும் ஈடுபடுவதில்லை என்றனர்.


கிரிக்கெட் வெறும் விளையாட்டல்ல. வெறும் பொழுது போக்கும் அம்சமல்ல. கிரிக்கெட்டுக்கு குறுகிய மத இன சாதிய உணர்வு உண்டு. இப்படி அதற்கு ஒடுக்கும் பல உணர்வுகள் உண்டு. அப்படித் தான் அது விளையாட்டாகக் காட்டி வாழ்கின்றது. இதனால் தான் ஆளும் வர்க்கத்தால் அது போற்றப்படுகின்றது.

கிரிக்கெட் மக்களை அடிமை கொள்ளும் ஒரு போதைப் பொருள். ஆளும் வர்க்கத்துக்கு அடக்கியாளும் கருவி. மூலதனத்துக்கோ செல்வத்தை குவிக்கும் வியாபாரம். இதை சுற்றித்தான் தேசபக்திக் கூச்சல்கள். விளையாட்டு ரசனை பற்றி தர்க்கங்களும் வாதங்களும். தனிமனித சுதந்திரம் பற்றிய பிரமைகள், புலம்பல்கள் உருவாக்கப் படுகின்றன.

இலங்கை இந்தியாவை வென்றிருந்தால் இதை சிங்கள பெருமிதமாகக் காட்டி கொண்டாடும் வாய்ப்பை இலங்கை ஆளும் கூட்டம் இழந்து போனது. இந்த சிங்கள இனவாதத்துக்கு எதிரான தமிழ் உணர்வு, வடக்கில் இந்தியா வென்றதை கொண்டாடியது. சிங்கள இராணுவத்துடன் முறுகிக் கொண்டு கூச்சல் எழுப்பியது. மலையத்தில் தமிழ் சிங்கள மோதல். இலங்கை தோற்க வேண்டும் என்று கருதுமளவுக்கு, அடக்கு முறையின் கருவியாக உணருகின்ற எல்லையில் கிரிக்கெட் ஒரு தேசத்தின் இனம் சார்ந்த போதைப் பொருளாக உள்ளது. இங்கு அது விளையாட்டல்ல.

 

இன்றைய சுரண்டல் அமைப்பைப் பேணும் வகையில், அதற்கு எதிராக மக்கள் போராடும் உணர்வுக் கொள்ளலைத் தடுப்பது ஆளும் வர்க்கத்துக்கு அவசியமான ஒன்று. இந்த மோசமான சமூக முறைமை பற்றி அறிவதற்கு முயலும் முதல் முயற்சிகளையே தடுத்துத் தூக்க நிலையில் உணர்வை மரத்துப்போகச் செய்வதற்கு காலத்துக்குக் காலம் எதையாயினும் சிறப்பு மேளமாக உருவாக்கித் தாலாட்டுப்பாடுவர் (எப்போதும் நிரந்தர மயக்கத்தில் ஆழ்த்தும் தொடர்புசாதனங்கள் - சிறப்பு விருந்தாக முட்டாள் பெட்டியும் சினிமாவும் செய்யத் தவறும் பணியைக்கூட இவை சாத்தியமாக்கும்)


இது தமிழினத்தின் பொது வெட்டுமுகம். இலங்கை மக்கள் தொகையில், குறைந்தபட்சம் 5லட்சம் ஆண்கள் காணமல் போயுள்ளார்கள். கிழக்கிலோ 49ஆயிரம் விதவைகள். இதில் அரைவாசிப் பேர் 25வயதுக்கு உட்பட் டவர்கள். இதில் 12ஆயிரம் பேர் 3குழந்தைகளின் தாயாக இருக்கின்றனர். இது ஓர் அரச புள்ளி விபரம். போர் குற்றத்தின் முழு வெட்டுமுகத்தையும் இது எடுத்துக் காட்டுகின்றது. ஓர் இனத்தின் அழிவையும், சிதைவையும் தெளிவாகத் தோலுரித்துக் காட்டுகின்றது.

பேரினவாதம் ஒர் இனத்தின் உரிமையை மறுத்து, அவர் களை பிணக்காடாக்கியுள்ளது. புலிகள் தம் பங்குக்கு அதற்கு உதவினர். அரசின் இந்தப் போர்க் குற்றம், இன்று குரூரமான குற்றமாகக்கூட இனம் காணமுடியாத வண்ணம் போயுள்ளது. புலிப் பாசிசத்தின்பின் அரசு தன்னைத்தானே ஒளித்து வைத்துக்கொண்டே, பாரிய இனவழிப்பை நடத் தியது. இளம் தலைமுறையை திட்டமிட்டுக் கொன்று குவித்தது.

 

கடந்து போன எம் வரலாற்று இருட்டுக்கு எதிராக நடைமுறையில் தொடர்ந்து போராட முடியாது அரசியல் ரீதியாக வக்கற்றுப் போனவர்கள், புதிய வரலாற்றுக்கு எப்படித்தான் அரசியல் ரீதியாக ஒளிகொடுக்க முடியும்?! மக்களின் விடுதலையை வழிகாட்டும் பாட்டாளி வர்க்க அரசியலை முன்வைத்து அதற்காக எந்த ஒரு பாசிச சூழலையும் எதிர்கொண்டு எதிர்வினையாற்றுவது தான் நடைமுறை. இதை கடந்த எம் வரலாற்றில் யார் தான் செய்தார்கள்?!


இதை முன்வைத்தவர்களுடன் இணைந்து செல்வதுதான், இன்றைய புரட்சிகர நடைமுறை. இதைச் செய்யமுனையாத அனைத்தும், தன்னுடன் எதிர்ப்புரட்சிகர அரசியல் கூறை உள்ளடக்கியபடி தான் முன்நகர முனைகின்றது. இது இன்று வெளிப்படையான உண்மை.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE