Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 15

 

“திரிபுகள், மோசடிகள், இடதுசாரியாக வேடம் போடுவது, வலது சாரிகளுக்கு உதவுவது. இது தான் டிராட்ஸ்கி.!!” என்றார் லெனின்

சோவியத்தின் ஏற்றத் தாழ்வான சமூக முரண்பாடுகளைப் பயன்படுத்திக் கொண்டே, டிராட்ஸ்கி போல்ஸ்விக் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டான். கட்சியில் இணையும் படி லெனின் விடுத்த கோரிக்கையை முதலில் நிராகரித்தவன்தான் டிராட்ஸ்கி. போல்ஸ்சுவிக் அல்லாத வகையில் தனது அதிகாரத்தை நிறுவும் தன்னெழுச்சியான மாற்றங்களுக்காக காத்துக் கிடந்தான். இவை அனைத்தும் தோல்வியுற்ற நிலையில், போல்ஸ்சுவிக்களுடனான இணைவை டிராட்ஸ்கி நாடினான். அப்போதும் தனக்கு சாதகமாக இருக்க கூடிய வகையில், போல்ஸ்விக் அல்லாத ஒரு குழுவுடன் இனைந்த பின், ஒரு குழுவாகவே இணைந்தான். இந்த குழுவை அவன் கட்சியில் இணைந்த பின்பு கலைக்கவில்லை. மேலும் போல்ஸ்விக்குகளுடன் முரண்பட்ட பலரையும் உள்ளடக்கிய வகையில், தன்னை ஒரு தனிக் குழுவாக கட்சிக்குள் உருவாக்கியபடி செயல்படத் தொடங்கினான். அந்த குழுவை போல்ஸ்சுவிக்கு பதிலாக அதிகாரத்தில் கொண்டுவரவே, தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தினான். இது பகிரங்கமான சதிப் பாணியிலான ஒரு மோதலாக வளர்ச்சி பெற்றது. டிராட்ஸ்கி தனது குழுவை இடது குழுவாக அறிவித்துக் கொண்டான். இதன் போது வலது குழுக்களும் தனது சொந்த அரசியலுடன் செயல்படத் தொடங்கியது. லெனினின் மார்க்சிய பார்வைக்கு எதிராக வலது இடது எதிர்ப்புகள் அரங்கில் சுறுசுறுப்பாக செயல்பட்டன. ஒவ்வொரு விடையத்திலும் மூன்று விதமான பார்வை போல்ஸ்விக் கட்சியில் பிரதிபலித்தது. இதன் மூலம் வலது இடது பிரிவினர் முதலாளித்துவ மீட்சிக்கான அரசியல் விலகல்களை முன் தள்ளினர். தமது அதிகாரத்தை நிலைநாட்ட முனைப்புப் பெற்றனர். இது படிப்படியாக ஜனநாயக மத்தியத்துவத்தை துஸ்பிரயோகம் செய்து, சதிப்பாணியில் அதிகாரத்தைக் கைப்பற்றும் வகையில் இரகசிய குழுக்களை, இரகசிய சந்திப்புகளை நடத்தின.

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி 14

 

பல சதிக் குழுகளாக இயங்கியதை பெருமையாக ஓப்புக்கொள்ளும் டிராட்ஸ்கியம்

ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்க ஆட்சியை கவிழ்க்க, பல்வேறு சதிகளில் ஈடுபட்டனர். அதை எப்படி செய்தோம் என்பதை, 65 ஆண்டுகளுக்குப் பிறகு கூறுவதைப்பாருங்கள். “..இதே வேளை பல இடது எதிர்ப்பாளர்கள் இவர்களில் எற்கனவே பல பணிந்து போன பலருடன் தாமும் இனைந்து போராட்டத்தில் இருந்து விலகிக் கொண்டனர். இவர்களில் முக்கியமானவர்கள் இவோன் நசிக்விச், சிமிர்நொவ் வின் குழுவைச் சேர்ந்தவர்களாகும். நாங்கள் இவர்களில் இருந்து 5 தடவை கைது செய்யப்பட்ட பெண் ஒருவரின் மகளிடம் இருந்து இவை தொடர்பான தகவல்களை ரஷ்ய‌ வெளியீடான இரு தொகுதிகளைப் பெற்றோம். மியக்கோப் ன் மகள் எவ்வாறு இவ் இடது எதிர்ப்பாளர்களின் அங்கத்தவர்கள் தனது தாயின் வீட்டில் ஒன்று கூடினர் என்பது தொடர்பாகக் கூறினார். இக்கூட்டத்தில் சினோவியேவ், கமனேவ் தாங்கள் ஸ்டாலினை அகற்ற வேண்டியதுடன் உடன் படுவதாகவும், டிராட்ஸ்கியுடன் தொடர்பேற்படுத்த வேண்டியதையும் ஏற்றுக் கொண்டனர். அவ்வேளை அவர்கள் தாம் 1917ல் விட்ட தவறை விட பெரிய தவறு 1927இல் இடது எதிர்ப்பாளருடன் பிரிந்து போனது தான் என குறிப்பிட்டனர். 1932 முழுவதும் இவ் எதிர்ப்பாளர் மத்தியில் எவ்வாறு பொதுவான ஸ்டாலின் எதிர்ப்புக் குழு ஒன்றைக் கட்டுவதென்பது தொடர்பான கலந்துரையாடல்கள் நடந்தன. இதற்கு முன் 1931ம் ஆண்டு சிமிர்நொவ் பெர்லினுக்கு உத்தியோகபூர்வமாக வந்த போது டிராட்ஸ்கியின் மகனான லியோன் சடோவை சந்திக்கக் கூடியதாக இருந்தது. அவர்கள் டிராட்ஸ்கிக்கு சோவியத் யூனியனில் உள்ள எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் சேர்ந்து வேலை செய்வது தொடர்பாகவும், சிமிர்நொவ் விற்கும் டிராட்ஸ்கிக்கும் இடையில் விடயங்களைப் பரிமாறிக் கொள்வது தொடர்பாக கலந்துரையாடினர். இந்நிலையில் இருந்து டிராட்ஸ்கிக்கும் லியோன் சடோவை (டிராட்ஸ்கியின் மகன்) சோவியத் யூனியனில் இருந்த பல எதிர்ப்புக் குழுக்களுக்கும் இடையில் இறுக்கமான தொடர்பு ஏற்பட்டது.” இப்படி நான்காம் அகிலம் இன்று பெருமையாக இந்த சதியை பீற்றி எழுதுகின்றது. ஸ்டாலின் இந்த சதிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையை ஜனநாயக விரோதம் என்கிறது. மார்க்சியம் அல்லாத போக்கு என்கிறது. தனிநாட்டு சோசலிசம் என்கிறது. சதிகளை, ஆட்சிகவிழ்ப்புகளை வர்க்கப் போராட்டம் என்கிறது.

ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்?: பகுதி 13

1932 இல்ஸ்டாலினை பலாத்காரமாக தூக்கியெறியமுனைந்தாக 4ம் அகிலத்தின் வாக்குமூலம்

மார்க்சியத்துக்கு விரோதமான டிராட்ஸ்கியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள், லெனின் தலைமையிலான சோசலிச புரட்சி மீதே இருந்து வந்ததுதான். இதை லெனின் போதுமான அளவு பண்பாடு வளர்ந்திராத ஒரு நாட்டில் சோசலிசத்தை நிலைநாட்டுவதை மேற்கொள்வதில் நாம் மிகவும் அவசரப்பட்டு விட்டோம் என்று நமது எதிர்ப்பாளர்கள் திரும்பத் திரும்ப நம்மிடம் கூறியிருக்கிறார்கள். தத்துவத்தில்எல்லாவகைப் பண்டிதர்களின் தத்துவத்திலும்குறிப்பிடப்பட்டுள்ள முடிவுகளுக்கு நேர்மாறான முடிவிலிருந்து நாம் தொடங்கியதால் அவர்கள் இந்த தவறான கருத்துக்கு வருகிறார்கள். நமது நாட்டில் அரசியல் மற்றும் சமூகப்புரட்சி, பண்பாட்டுப் புரட்சியை முந்தி விட்டது. ஆயினும் அதே பண்பாட்டுப் புரட்சி இப்போது நம்மை எதிர்கொள்கின்றது என்றார். இதைத் தான் பின்னால் தனிநாட்டு சோசலிசம் என்று கூறி டிராட்ஸ்கியம் எதிர்த்தது. கோட்பாட்டு ரீதியாகவே டிராட்ஸ்கியம் சோசலிச கட்டுமானங்கள் அனைத்தையும் எதிர்த்தது. சோசலிச நிர்மாணம் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட தேசிய அரசின் கட்டுமானத்தினுள், எல்லாவற்றுக்கும் மேலாக பின்தாங்கிய ரஷ்யாவில் முடியாது என்று கூறி டிராட்ஸ்கி சோசலிச கட்டுமானங்களை எதிர்த்தான். இதை நான்காம் அகிலம் ஸ்டாலினுக்கு எதிராக முன்வைக்கின்றது. சோவியத்யூனியனில் நீடித்த முதலாளித்துவ உற்பத்தி சார்ந்த இடைகால பொருளாதாரத்தை முடிவுக்கு கொண்டு வருதல், தனியார் விவசாயம் என்பதற்கு பதில் கூட்டுடைமையாக்கலை உருவாக்கல் என்ற தொடர்ச்சியான இடைவிடாத வர்க்கப் போரட்டத்தினூடான சோசலிச கட்டுமானங்களை டிராட்ஸ்கி எதிர்த்தான். இதற்கு எதிராக பல சதிகளை தொடர்ச்சியாக செய்தான். தனிநாட்டில் சோசலிசம் சாத்தியமில்லை, எனவே ஸ்டாலின் சோசலிச கட்டுமானங்களை நடைமுறைப்படுத்துவது அனுமதிக்க முடியாது என்றான்.

 

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி 12


1932இல் டிராட்ஸ்கிய மற்றும் குழுக்கள் நடத்திய சதியையே வர்க்கப் போராட்டம் என்றனர்

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், புரட்சிக்கு பிந்தைய சமுதாயத்தின் வர்க்கப் புரட்சியை தொடர்வது எப்படி?, ஜனநாயகம் என்றால் என்ன?, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் எந்த வர்க்கத்துக்கு ஜனநாயகம்?, முதலாளித்துவ மீட்சி என்பது என்ன?, என எதிலும் கருத்து முன்வைக்க முடியாது உள்ளது. மாறாக அவதூறுகளை சார்ந்து அரசியல் நடத்தும் டிராட்ஸ்கியம் முதல் மார்க்சிய எதிர்ப்பை நடத்தும் அனைத்து வித கயவாளிகளும், எதையும் ஆழமாக அனுக முனைவதில்லை. இது பற்றி லெனின் கூறும் போது “ஆழமான பிரச்சனைகளை ஆழமாக அணுகாதவர்களை முக்கியமானவர்களாக நாம் கருத முடியமா? அவ்வாறு செய்வது கடினம் தோழர்களே, மிகவும் கடினம்! ஆனால், சிலரால் ஆழமாக அணுகப்படாத கேள்விகள் மிகவும் ஆழமானவை, ஆகவே அந்தக் கேள்விகளுக்கு அளிக்கப்படும் பலவீனமான பதில்கள் ஆய்வதில் எந்த தீங்கும் ஏற்பட்டவிடாது” என்றார். இந்த இடத்தில் தான் நாம் கடந்தகால நிகழ்ச்சிகள் மீதான அரசியலில் அநேமதேயமாக, அவதுறை உருவாக்குவதில் சதிகாரராகள் இருப்பதை நாம் காணமுடியும்.

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி 11

 

டிராட்ஸ்கியை “அவர் தன் இயல்பில் ஒரு சதிகாரர்” என்றார் லெனின்

ஸ்டாலின் காலத்தில் முதலாளித்துவ மீட்சியை சதிகள் மூலமாக டிராட்ஸ்கி நடத்த முயன்றான். இந்த முயற்சியில் டிராட்ஸ்கி தன்னை எதிர்க் குழுவின் “கதாநாயகனாக” காட்டிய போது, ஸ்டாலின் அது குறித்து அவர் ஒரு கதாநாயகன் என்பதை விட ஒரு நடிகரைத்தான் பிரதிபலிக்கிறார், ஒரு நடிகரை எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரு கதாநாயகரோடு ஒப்பிட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது” எனறார். இதைப் போன்றே இரண்டாம் அகில காலத்தில் பெர்ன்டைன் காவுஸ்கி ஒரு “காதநாயகராக” மார்க்ஸ்சை திரிந்தது மட்டுமின்றி “வெல்ல முடியாத அசகாய சூரராக” ஆட்டம் போட்டதை எடுத்துக் காட்டினர். டிராட்ஸ்கியோ ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஒழித்து, அதனிடத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அல்லாத முதலாளித்துவ ஜனநாயகத்தை மாற்றீடாக்கிய, ஒரு முதலாளித்துவ சர்வாதிகாரத்தையே நிறுவ விரும்பினர். இதற்காக சோவியத்யூனியனின் பாட்டாளி வர்க்கத்தை எதிர்த்து செயல்பட்ட அனைத்து எதிர்ப்பு குழுக்களுடன், ஒருங்கிணைந்த ஒரு கூட்டுச் சதிகளை உருவாக்கினான். இதை சிலர் அப்பாவிகள் மாதிரி மறுத்தபடி, ஸ்டாலினைத் தூற்றுகின்றனர். டிராட்ஸ்கிகளின் 1936-1937 வழக்கு தொடர்பாக கொப்பச்சேவ் 1988 இல் கூறும் போது, இவ் வழக்குக்கு முந்திய விசாரனை சோசலிச சட்ட வரம்புகளை முற்றிலும் மீறிய முறையில் உண்மைகளைத் திரித்தும் குற்றம் சாட்டப்பட்டவர்களைத் துன்புறுத்தி சட்டபூர்வமற்ற முறையில் குற்றத்தை ஒப்புக் கொள்ளச் செய்தும் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றது என்பது நிறுவப்பட்டுள்ளது” என்றான். இப்படிச் சொன்ன கோர்ப்பச்சேவ் யாருடன் நின்று, எதைச் செய்தான் என்பது உலகறிந்தது.

ஸ்டாலின் தூற்றப்படுவது ஏன்?: பகுதி 10

 

அமெரிக்க முதல் டிராட்ஸ்கிகள் வரை குருசேவ் வாழ்த்த, அவனோ கம்யூனிசத்தை தூற்றினான்

22வது காங்கிரஸ்சில் நடத்திய முதலாளித்துவ மீட்சியை மார்க்சிய-லெனினியக் கொள்கையை ஆக்கபூர்வமாக வளர்த்துச் செழுமைப்படுத்திய புத்திக் கூர்மையுள்ள முன்மாதிரி” என்று கூறி குருசேவை வாழ்த்தியது; ஏன், அமெரிக்கா உள்ளிட்ட டிராட்ஸ்கியவாதிகள் அனைவரும் குருசேவை வாழ்த்தி வரவேற்றனர். டைம்ஸ் என்ற அமெரிக்க இதழ் குருசேவ் பற்றிய குறிப்பில் மேற்கத்திய நாடுகளின் சிறந்த மாஸ்கோ நண்பர்” என்று புகழ்ந்தது.  ஏகாதிபத்தியவாதியான டபிள்யூ.ஏ.ஹாரிமன் சோவியத் பிரதமர் நிகடா குருச்சேவ் அமெரிக்கா அரசியல் வாதியைப் போல் நடந்துகொள்கிறார்” என்று புகழாரம் சூட்டினார். பிரிட்டிஸ் பத்திரிகையான டைம் அண்டு டைடு சுதந்திர உலகத்தைப் பொறுத்தவரை, இதுவரை ரசியர்கள் கொண்டிருந்த பிரதமர்களில் மிகச் சிறந்த பிரதமராக குருச்சேவ் கருதப்படுகிறார். சமாதான சகவாழ்வை அவர் உண்மையில் நம்புகின்றார்” என்றது.

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி 09

 

அதிகமாக தேசியவாதிகளாக மாறிவிடுவதும், குறைவான சர்வதேசிவாதிகளாக நாம் மாறி விடுவது தான் கம்யூனிசம் என்றான் குருசேவ்

ஸ்டாலினை மறுத்த குருச்சேவ் “எந்த ஒரு சிறு பகுதி யுத்தமும், ஒரு உலக யுத்தம் என்ற காட்டுத் தீயை மூட்டிவிடும்” என்றான்.  ”அணு ஆயுதமற்ற சாதாரணப் போராக உருவெடுக்கும் எந்த விதமான போரும் சர்வநாசம் விளைவிக்கும் பெரும் அணு ஆயுத எவுகணை யுத்தமாக வளர்ச்சி பெறும்” என்று கூறி வர்க்கப் போராட்டத்தையே உலகளவில் நிராகரித்தான். குருச்சேவ் ஸ்டாலினை மறுத்து கம்யூனிச அடிப்படைகளை கழுவில் எற்றிய நிகழ்வை வரவேற்ற அமெரிக்கா ஜனாதிபதி கென்னடி, “உலகம் முழுவதையும் கம்யூனிச மயப்படுத்தும் திட்டத்தை கைவிட்டு தன்னுடைய தேசிய நலன்களை மட்டுமே கவனிக்க வேண்டியிருக்கும், சமாதான சூழ்நிலைமைகளில் கீழ் தன் மக்களுக்கு ஒரு நல்ல வாழ்க்கையைத் தருவதை மட்டுமே அது கவனிக்க வேண்டியிருக்கும்” என்றார். ஸ்டாலின் தூற்றப்பட்ட, மார்க்சியம் மறுக்கப்பட்ட நிகழ்வையும் ஏகாதிபத்தியங்கள் கொண்டாடின. ஸ்டாலினிடம் இருந்து மாறுபட எதைச் செய்ய வேண்டும் என்பதை குருச்சேவுக்கு தெளிவாக அறிவுறுத்தினர். ஸ்டாலின் சர்வதேச கம்யூனிச இயக்கத்தை வழி நடத்தியபடி வர்க்கப் போராட்டத்தை நிகழ்ச்சி நிரலாக முன்வைத்து நடத்திய போராட்டங்களையும், உலகளவிய பல்வேறு தொடர்ச்சியான எழுச்சிகளையும் நிறுத்த வேண்டும் என்பதே ஏகாதிபத்தியத்தின் கொள்கை. இதையே குருச்சேவ் கம்யூனிசம் என்றான். டிராட்ஸ்கிகள் ஆசையாக ஸ்டாலின் அதிகாரம் தகர்கின்றது என்று கூறி மகிழ்ந்தனர். அமெரிக்கா ஜனதிபதியின் வேண்டு கோள்களை குருச்சேவ் சிரமேற்றான்.

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?: பகுதி 08


குருச்சேவ் முதலாளித்துவ மீட்சி நடத்தவே ஸ்டாலினை தூற்றினான்

முதலாளித்துவ மீட்சியை பலப்படுத்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தூற்றும் போது ஸ்டாலின் ஒரு கோடாரியைக் கொண்டு தனது அதிகாரத்தை நிலைநிறுத்தினார்” என்றான். அவன் பாட்டாளி வர்க்க ஆட்சியைப்பற்றி குறிப்பிடும் போது, “பயங்கர” ஆட்சி என்றான். மேலும் கூறும் போது அந்தக் காலத்தில் வேலைக்குச் செல்லும் ஒரு மனிதன் அடிக்கடி, மீண்டும் வீட்டுக்குத் திரும்புவோமா, தனது மனைவியையும் குழந்தையையும் மீண்டும் காண்போமா என்பதைப் பற்றி நிச்சயமற்றிருந்தான்” என்றான். இப்படி பாட்டாளி வர்க்க சர்வாதிகரத்தை தூற்றியவ அதே குருசேவ் தான், 1937 இல் நமது கட்சி, துரோகிகளையும் காட்டிக்கொடுக்கும் கும்பலையும் ஈவு இரக்கமின்றி நசுக்கும். டிராட்ஸ்கிய வலது கழிச்சடைகள் அனைத்தையும் துடைத்தெறியும்.. இதற்கான உத்தரவாதம் நமது மத்திய கமிட்டியின் அசைக்க முடியாத தலைமையாகும். நமது தலைவர் தோழர் ஸ்டாலின் அவர்களின் அசைக்க முடியாத தலைமையாகும்;. நாம் எதிரிகளை முழுவதுமாக கடைசி மனிதன் வரை அழித்தொழித்து அவர்களுடைய சாம்பலை காற்றில் தூவிவிடுவோம்” என்று பிரகடனம் செய்தான், ஆனால் ஸ்டாலின் மறைவுக்கு பின் தூற்றினான். அனைத்தையும் ஸ்டாலின் மேல் சுமத்தினான். டிராட்ஸ்கிகள் குருச்சேவை ஆதரித்தனர். ஸ்டாலின் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றி குறிப்பிடும் போது உட்புறத்திலிருந்து கோட்டையைக் கைப்பற்றவது மிகவும் எளிது” என்றார். அது தான் நடந்தது. உள்ளிருந்த மூடிமறைக்கப்பட்ட சந்தர்ப்பவாதம் தான், முதலாளித்துவ மீட்சியை உள்ளிருந்து நடத்தியது.

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி – 07

 

சோவியத்யூனியனில் குருச்சேவ் நடத்திய முதலாளித்துவ மீட்சி

ஸ்டாலின் அவதூறுகளை பொழிவோர் அனைவரும், குருச்சேவ் நடத்தியதை முதலாளித்துவ மீட்சியாக‌ ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக குருச்சேவ் சோசலித்தின் பாதையை ஸ்டாலினிடம் இருந்து மீட்டு எடுத்தார் என்பதே, அவர்களின் அடிப்படையான கோட்பாடாகும். இதையே ஏகாதிபத்தியம் முதல் டிராட்ஸ்கியவாதிகள் வரை கைக்கொள்ளும் அடிப்படையான அரசியல் வரையறையாகும். ஆனால் உள்ளிருந்து முதலாளித்துவ மீட்சிகான அபாயத்தை லெனின் தீர்க்க தரிசனமாக விளக்கும் போது, சிறு உடமையாளர்கள் நமது கட்சிக்குள் மேலாதிக்கம் பெறுவதற்கு, அதுவும் மிக விரைவாகப் பெறுவதற்கு எதிராக நமது கட்சிக்குள்ள பாட்டாளி வர்க்கத்தன்மை என்பது தன்னைச் சிறிதும் பாதுகாத்துக் கொள்ளாது என்று, சாதுர்யமுள்ள வெண்படையினர் அனைவரும் நிச்சயமாக நம்புகின்றனர்” என்றார். மீட்சிக்கான வர்க்க கூறுகள் தொடர்ச்சியாக உருவாவது, வர்க்க அமைப்பில் தவிர்க்க முடியாத அரசியல் நிகழ்ச்சி நிரலாகவே உள்ளது.

 

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி 5

 

மார்க்சியத்தை தூற்றிய யூகோஸ்லாவியா எகாதிபத்தியத்தைப் போற்றியது

யூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்சியை சோசலிசமாகவும், முதலாளித்துவமல்லாத புரட்சியாகவும் காட்டப்பட்டது. இதனடிப்படையில் ஸ்டாலின் தூற்றப்பட்டார். ஸ்டாலினால் முன்னெடுக்கப்பட்டு உருவாக்கபட்ட  சோசலிச சமூக கட்டுமானங்கள் அனைத்தும் சிதைக்கப்பட்டு நொருக்கப்பட்டன. இந்த முதலாளித்துவ மீட்சியை சர்வதேசிய டிராட்ஸ்கிகள் ஆதாரித்து நின்றனர். குருச்சேவ் பதவிக்கு வந்தவுடன் ஸ்டாலின் மறுக்கப்பட்ட நிலையில், சோவியத்யூனியனும், உலக கம்யூனிச இயக்கமும் படிப்படியாக யூகோஸ்லாவியா நிலைக்கு தம்மை மாற்றிக் கொண்டது. உலகம் எங்கும் புரட்சிகர போக்குகள் சிதைக்கப்பட்டன. எதிரியை நண்பனாக காட்டுவதும், போற்றுவதும் புதிய விடையமாகியது. குருச்சேவ், டிட்டோ இடையில் ஏகாதிபத்தியத்துடன் யார் அதிகம் கூடிக்கூலாவுவது என்பதில் கடுமையான போட்டி நிலவியது. அதேநேரம் தமது முதலாளித்துவ மீட்சிக்கான தங்கள் நோக்கத்தில், தமக்குள் ஒன்றுபட்டு கைகோர்த்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டனர். முதலாளித்துவத்தை மீட்பது எப்படி என்பதில், குருச்சேவ் டிட்டோவின் சீடனானான். டிட்டோ கும்பல் உலகம் தழுவிய வகையில், மக்களின் புரட்சிகர போராட்டங்ககளிலும், ஏகாதிபத்திய நாடுகளின் ஒடுக்குமுறைக்கு உள்ளான உலக நிகழ்ச்சிகளிலும், அமெரிக்காவின் சார்பாக அப்பட்டமாக செயல்பட்டது. இதன் போது ஏகாதிபத்திய தலைவர்களுக்கு வெண்சாமரம் வீசி, செங்கம்பளம் விரித்து வரவேற்று அவர்களைப் போற்றினர்.

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி – 2

 

ஸ்டாலின் ஏன் மறுக்கப்பட்டார்? ஏன் தூற்றப்பட்டார்? இன்னும் ஏன் தூற்றப்படுகின்றார்?

ரஷ்ய‌ ஆய்வுமையம் 2003ம் ஆண்டு லெனின் பற்றி ஆய்வு ஒன்றைச் செய்தது. அதன்போது,  65 சதவீதமான மக்கள் லெனின் அடிப்படை நோக்கத்தை அங்கிகரித்ததுடன்,  அவை சரியானவை என்று எற்றுக்கொண்டதை 17.4.2003 பாரிஸ் லிபரேசன் பத்திரிகை தன் செய்தியாக வெளியிட்டு இருந்தது.  5.3.2003 லிபரேசன் பத்திரிகை ருசியாவில் 42 சதவீதமானோர் ஸ்டாலினை ஏற்று ஆதாரிக்கின்றனர் என்ற செய்தியை வெளியிட்டது. மீதமுள்ள‌வர்களில் 36 சதவீதம் பேர் ஸ்டாலின் நன்மையே கூடுதலாக செய்தார் என்பதை அங்கிகரித்து ஆதாரவாக இருப்பதை வெளியிட்டபடியே தான், அவரைத் தூற்றியது. அதே பத்திரிகை 1937-1938 இல் 40 ஆயிரம் பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக புதிய புள்ளிவிபரத்தையும் வெளியிட்டது.

 

தன்னை இனந்தெரியாத நபர்கள் சிலர் இரகசியமாக பின் தொடர்வதாகவும், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டடால் அதற்கு அரசாங்கமும் கத்தோலிக்க சிருச்சபையும் பொறுப்பு கூற வேண்டும் என்று தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவரும் உலக மீனவ மக்கள் சம்மேளனத்தின் இலங்கைக்கான விசேட பிரதிநிதியுமான ஹேர்மன் குமார தெரிவித்தார் .

எல்லாரும் கொஞ்சம் சத்தம் போடாமை.., கொஞ்சம் அமைதியாய் இருங்கோ.., இப்ப வந்து பேசப்போறாங்கள். ஏதோ எங்களை நாகரீகம் தெரியாத பட்டிக்காட்டு சனங்கள் எண்டு நினைச்சுப் போடுவாங்கள். வெளிநாடென்று வந்து இன்னும் திருந்தேல்லை போலைக் கிடக்கு.., ஏதோ எங்கடை நல்ல காலத்துக்கு நிக்கிற டொக்ரரும் ஆரோ தமிழ்ப்பிள்ளை போல இருக்கு.., அவதான் பெரிய டொக்டர் போல தெரியுது.., என அங்கு நின்ற எல்லோரையும் சமாதானப்படுத்தி ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தார் சுவிஸ் மாமன்.

யுத்தம் தான் இனப் பிரச்சினையின் தீர்வுக்குத்தடை என்றவர்கள், இன்று இனப் பிரச்சனையே இல்லை என்கின்றனர். இப்படி தீர்வை மறுப்பவர்கள் தான், தமிழ் மக்களை இலங்கையில் இருந்து இன நீக்கம் செய்கின்றனர். பாலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் எதைச் செய்கின்றதோ, அதைத்தான் சிங்கள அரச பேரினவாதம் இன்றும் செய்கின்றது. ஆக, யுத்த அழிவின் பின்னான இனவாதம், இலங்கையில் இரண்டு இனங்கள் சேர்ந்து வாழக்கூடாது என்பதான அரசின் இன்றைய கொள்கையாகிவிட்டது.

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - (பகுதி 46)

தமிழீழ விடுதலை இயக்க (TELO) அழிப்பு: பாசிசப் போக்கின் வெளிப்பாடு

தளமாநாட்டினால் தோன்றிவிட்டிருந்த முரண்பாடுகளும், குழப்பநிலையும், அணிச் சேர்க்கைகளும், இந்தியாவில் புளொட்டின் தலைமைக்குள் தோன்றிவிட்டிருந்த முரண்பாடுகளும், புளொட்டின் பின்தள மாநாட்டைக் கூட்டுவதை நோக்கிய தயாரிப்புகளின் போது வெளிப்படத் தொடங்கின. உமாமகேஸ்வரன் தலைமையில் படைத்துறைச் செயலர் கண்ணன், அரசியல் செயலர் வாசுதேவா, மாணிக்கம் தாசன் போன்றோர் ஓரணியாகவும், பரந்தன் ராஜன் தலைமையில் ஆதவன் (ராமசாமி), ஈஸ்வரன், பாபுஜி, செந்தில் ஆகியோர் உட்பட ஒரு குழுவினர் மற்றொரு அணியாகவும் புளொட் பிளவுற்றது. சந்ததியார் தலைமையில் "தீப்பொறி" குழுவின் வெளியேற்றத்தின் பின்னராக புளொட்டுக்குள் ஏற்பட்ட பெரியதொரு பிளவாக அது காணப்பட்டது.

சுந்தரராமசாமி, ஜெயமோகன் முதலான இலக்கியவாதிகளின் உள்ளங்கவர்ந்த ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் ஸ்பெண்டர், ஆர்தர் கீஸ்லர் போன்ற மேலை எழுத்தாளர்கள் தமது கம்யூனிச எதிர்ப்பு இலக்கிய தரிசனங்களுக்காக பிரிட்டிஷ் உளவுத்துறை மற்றும் சி.ஐ.ஏ.விடம் சன்மானம் பெற்றவர்கள் என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE